01-05-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையான குழந்தைகளே! நீங்கள் நிரூபித்துச் சொல்லுங்கள் - எல்லையற்ற தந்தை நமக்குத் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார். அவர் சர்வ வியாபியாக இருக்க முடியாது.

கேள்வி:
இச்சமயம் உலகத்தில் அதிகமான துக்கம் ஏன் உள்ளது? துக்கத்திற்கான காரணம் கூறவும்?

பதில்:
முழு உலகத்தின் மீதும் ராகு தசா உள்ளது. இந்தக் காரணத்தால் தான் துக்கம் உள்ளது. விருட்சபதி பாபா எப்போது வருகிறாரோ அப்போது அனைவர் மீதும் பிரகஸ்பதி தசா அமர்கின்றது. சத்யுக-திரேதாவில் பிரகஸ்பதி தசா உள்ளது. இராவணனின் பெயர் அடையாளம் இருக்காது. அதனால் அங்கே துக்கம் இருக்காது. பாபா வந்திருக்கிறார் சுகதாமத்தை ஸ்தாபனை செய்வதற் காக. அதில் துக்கம் இருக்க முடியாது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை அமர்ந்து சொல்லிப் புரிய வைக்கின்றார். ஏனெனில் குழந்தைகள் அனைவரும் இதை அறிவார்கள் - நாம் ஆத்மாக்கள், நம்முடைய வீட்டிலிருந்து நாம் மிகவும் தூரத்திலிருந்து இங்கே வருகிறோம், வந்து இந்த சரீரத்தில் பிரவேசமாகிறோம் நமது பாகத்தை நடிப்பதற்காக. பாகத்தை ஆத்மா தான் நடிக்கின்றது. இங்கே குழந்தைகள் தங்களை ஆத்மா என உணர்ந்து பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கிறார்கள். ஏனெனில் பாபா சொல்லியிருக்கிறார், நினைவினால் குழந்தை களாகிய உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் எரிந்து சாம்பலாகும். இதை யோகம் என சொல்லக் கூடாது. யோகத்தை சந்நியாசிகளும் கற்பிக்கின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர் மீது யோகம் (தொடர்பு) உள்ளது. குழந்தை களுக்குத் தந்தை மீது யோகம் உள்ளது. இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா அதாவது குழந்தைகள் மற்றும் தந்தையின் திருவிழா. இது கல்யாண்காரி (நன்மை யான) சந்திப்பு. மற்ற எல்லாமே தீமை செய்பவை (அகல்யாண்காரி). தூய்மையில்லாத உலகம் இல்லையா? நீங்கள் கண்காட்சி அல்லது மியூசியத்தில் சொல்லிப் புரிய வைக்கும் போது ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றிய அறிமுகம் கொடுப்பது சரியானது. ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகள்; அவர் பரமபிதா பரம ஆத்மா பரந்தாமத்தில் வசிப்பவர். எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய லௌகீகத் தந்தையைப் பரமபிதா எனச் சொல்வதில்லை. பரமபிதாவை துக்கத்தில் தான் நினைவு செய்கிறார்கள் - ஹே, பரமபிதா பரமாத்மா! பரம ஆத்மா வசிப்பது பரந்தாமத்தில். இப்போது நீங்கள் ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றிய ஞானம் சொல்லிப் புரிய வைக்கிறீர்கள் என்றால் இரண்டு தந்தையர் உள்ளனர் என்று சொன்னால் மட்டும் போதாது. அவர் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார் என்பதையும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதர-சகோதரர்கள், அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தையாவார். பக்தி மார்க்கத்தில் அனைவரும் பகவானாகிய தந்தையை நினைவு செய்கிறார்கள். ஏனெனில் பகவானி டமிருந்து பக்திக்கான பலன் கிடைக்கிறது, அதாவது தந்தையிடமிருந்து குழந்தைகள் ஆஸ்தி பெறுகிறார்கள். பகவான் பக்தியின் பலனைக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். என்ன தருகிறார்? உலகின் எஜமானராக ஆக்குகின்றார். நீங்கள் தந்தை என்பதை மட்டும் உறுதிப்படுத்தினால் போதாது, அவர் தந்தையாகவும் இருக்கிறார் என்றால் கல்வி கற்றுத் தரும் ஆசிரியராகவும் உள்ளார், சத்குருவாகவும் உள்ளார். இதுபோல் சொல்லிப் புரிய வைப்பீர்களானால் சர்வவியாபி என்ற சிந்தனை விட்டுப் போய்விடும். இதனைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பாபா ஞானக் கடல். அவர் வந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். சொல்லுங்கள், அவர் கல்வி கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருக்கிறார் எனும் போது அவர் எப்படி சர்வ வியாபியாக இருக்க முடியும்? ஆசிரியர் நிச்சயமாகத் தனியானவர், மாணவர் தனி. எப்படி தந்தை தனியாக, குழந்தை தனியாக இருக் கிறார்களோ அதுபோல். ஆத்மாக்கள் பரமாத்மாவாகிய தந்தையை நினைவு செய்கின்றனர். அவருக்கு மகிமையும் செய்கின்றனர். பாபா தான் மனித சிருஷ்டியின் விதை வடிவம். அவர் வந்து நமக்கு மனித சிருஷ்டியின் முதல்- இடை-கடை பற்றிய ஞானத்தைச் சொல்கிறார். பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். நாம் சொர்க்கவாசி ஆகிறோம். அத்துடன் இதையும் புரிய வைக்கிறார், அதாவது ஒவ்வொரு வருக்கும் இரண்டு தந்தையர் உள்ளனர். லௌகீகத் தந்தை பாலனை (வளர்ப்பு) செய்தார், பிறகு படிப்பதற்காக ஆசிரியரிடம் செல்ல வேண்டியுள்ளது. பிறகு 60 ஆண்டுகளுக்குப் பின் வானப்பிரஸ்த நிலைக்குப் (முற்றிலும் பற்றற்ற வைராக்கிய நிலை) போவதற்காக குருவிடம் செல்ல வேண்டியுள்ளது. தந்தை, ஆசிரியர், குரு தனித்தனியாக உள்ளனர். இந்த எல்லையற்ற தந்தையோ அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக உள்ளார், ஞானக்கடலாக உள்ளார். மனித சிருஷ்டியின் விதை வடிவமாக, சத்-சித்-ஆனந்த சொரூபமாக இருக்கிறார். சுகத்தின் கடலாக, சாந்தியின் கடலாக இருக்கிறார். அவருடைய மகிமையை ஆரம்பித்து வையுங் கள். ஏனெனில் உலகத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன இல்லையா? சர்வவியாபியாக இருந்தால் பிறகு ஆசிரியராகிக் கற்றுத் தருவது எவ்வாறு? பிறகு சத்குருவாகவும் இருக்கிறார், அனைவருக்கும் வழிகாட்டியாகி, அழைத்துச் செல்கிறார். போதனையளிக்கிறார், அதாவது நினைவு செய்யக் கற்றுத் தருகின்றார். பாரதத்தின் புராதன இராஜயோகமும் பாடப் பெற்றுள்ளது. பழைய திலும் மிகப் பழைமையானது சங்கமயுகம். புதிய மற்றும் பழைய உலகத்திற்கு இடைப்பட்டது. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் பாபா வந்து தம்முடையவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டிருந்தார். மேலும் நம்முடைய ஆசிரியர்- சத்குரு வாகவும் ஆனார். அவர் நம்முடைய தந்தையாக மட்டுமின்றி ஞானக்கடலாக அதாவது ஆசிரியராகவும் உள்ளார், நமக்குக் கல்வி கற்றுத் தருகின்றார். சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். ஏனெனில் விதை வடிவமாகவும் விருட்சபதியாகவும் இருக்கின்றார். அவர் எப்போது பாரதத்தில் வருகிறாரோ அப்போது பாரதத்தில் பிரகஸ்பதி தசா அமர்கின்றது. சத்யுகத்தில் அனைவரும் சதா சுகமான தேவி- தேவதைகளாக உள்ளனர். பிறகு எப்போது உலகம் தமோபிரதானம் ஆகிறதோ அப்போது அனைவர் மீதும் ராகுவின் தசா அமர்கின்றது. விருட்சபதியை (கல்ப மரத்தின் விதையானவரை) யாரும் அறிந்திருக்கவில்லை. அறிந்துக் கொள்ளவில்லையெனில் பிறகு ஆஸ்தி எப்படிக் கிடைக்கும்?

நீங்கள் இங்கே அமரும் போது அசரீரியாகி அமர்ந்திருங்கள். இந்த ஞானம் கிடைத்துள்ளது - ஆத்மா தனி, வீடு தனி. 5 தத்துவங்களின் உருவம் (சரீரம்) உருவாகின்றது, அதில் ஆத்மா பிரவேசமாகின்றது. அனைவருடைய பாகமும் நாடகத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. முதல்-முதலில் முக்கிய விஷயம் இதைப் புரிய வைக்க வேண்டும் -- பாபா மிகமேலான (சுப்ரீம்) தந்தை, மிகமேலான ஆசிரியர். லௌகீகத் தந்தை, ஆசிரியர், குருவின் ஒப்பீடு பற்றிச் சொல்வதன் மூலம் உடனே புரிந்து கொள்வார்கள், வாக்குவாதம் செய்ய மாட்டார்கள். ஆத்மாக்களின் தந்தையிடம் முழு ஞானமும் உள்ளது. இது சிறப்பாகும். அவரே நமக்கு சிருஷ்டியின் முதல்-இடை- கடைப் பற்றிய இரகசியத்தைச் சொல்லிப் புரிய வைக்கின்றார். முன்பு ரிஷி-முனி முதலானோர் சொல்லி வந்தார்கள் - படைப்பவர் மற்றும் படைப் பினுடைய முதல்-இடை-கடைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் அச்சமயம் அவர்கள் சதோ நிலையில் இருந்தார்கள். ஒவ்வொரு பொருளும் சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோவில் வரத்தான் செய்கின்றன. புதியதிலிருந்து நிச்சயம் பழையதாக ஆகத்தான் செய்கின்றன. உங்களுக்கு இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஆயுள் பற்றித் தெரியும். இதன் ஆயுள் எவ்வளவு என்பதை மனிதர்கள் மறந்து விட்டுள்ளனர். மற்றப்படி இந்த சாஸ்திரங்கள் முதலியவற்றை யெல்லாம் பக்தி மார்க்கத்திற்காக உருவாக்குகின்றனர். அநேகப் பொய்களை எழுதி விட்டிருக்கிறார்கள். அனைவருடைய தந்தையோ ஒருவர் தான். சத்கதியளிப் பவர் ஒருவர் தான். குருக்கள் அநேகர் உள்ளனர். சத்கதியளிக்கும் சத்குரு ஒருவர் தான் உள்ளார். சத்கதி எப்படி ஏற்படுகின்றது என்பதும் உங்களது புத்தியில் உள்ளது. ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் தான் சத்கதி எனப்படுகின்றது. அங்கே கொஞ்சம் மனிதர்களே உள்ளனர். இப்போதோ எவ்வளவு ஏராளமான மனிதர்கள் உள்ளனர்! அங்கோ தேவதைகளின் இராஜ்யம் மட்டுமே இருக்கும். பிறகு அரச பரம்பரை விரிவடைகின்றது. இலட்சுமி-நாராயணர் - முதலாமவர், இரண்டாமவர், மூன்றாமவர் - இப்படியே போகும். எப்போது முதலாமவர் இருப்பாரோ அப்போது எவ்வளவு குறைவான மனிதர்கள் இருப்பார்கள்! இந்தச் சிந்தனையும் கூட உங்களுக்கு மட்டுமே நடைபெறுகின்றது. இதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் - பகவான் குழந்தை களாகிய உங்களனைவருக்கும் ஒருவரே! அவர் எல்லையற்ற தந்தை. எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கின்றது. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது - 21 பிறவிகளுக்கான சொர்க்கத்தின் ராஜபதவி. 21 தலைமுறை என்றால் முதுமை வரும் போது சரீரத்தை விடுகின்றனர். அங்கே தங்களை ஆத்மாக்களாக உணர்ந்துள்ளனர். இங்கே தேக அபிமானியாக இருக்கும் காரணத்தால் ஆத்மா தான் ஒரு சரீரம் விட்டு வேறு சரீரம் எடுக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள். இப்போது தேக அபிமானிகளை ஆத்ம அபிமானியாக ஆக்குவது யார்? இச்சமயம் ஒருவர் கூட ஆத்ம அபிமானியாக இல்லை. பாபா தான் வந்து ஆத்ம அபிமானி ஆக்குகின்றார். அங்கே இதை அறிந்திருக்கிறார்கள், ஆத்மா ஒரு பெரிய சரீரத்தை விட்டுப் போய்ச் சிறிய குழந்தையாக பிறக்கின்றது. பாம்பின் உதாரணமும் உள்ளது. இந்தப் பாம்பு, குளவி முதலியவற்றின் உதாரணங்களெல்லாம் இங்கே உள்ளவை, இச்சமயத்தினுடையவை. அது பிறகு பக்தி மார்க்கத்திலும் பயன்படுகின்றது. கெட்ட புழுக்களை பூம்-பூம் செய்து மனிதரிலிருந்து தேவதைகளாக ஆக்குகின்ற பிராமணிகள் உண்மையில் நீங்கள் தான். பாபாவிடம் ஞானம் உள்ளது இல்லையா? அவர் தான் ஞானக்கடல், சாந்தியின் கடல். அனைவரும் சாந்தி வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சாந்தி தேவா! யாரை அழைக்கிறார்கள்? யார் சாந்தி யளிப்பவர் அல்லது சாந்திக் கடலாக இருக்கிறாரோ அவரது மகிமையைப் பாடுகிறார்கள், ஆனால் அர்த்த மில்லாமல். சொல்லி விடுகிறார்கள், எதையும் புரிந்து கொள்வதில்லை. பாபா சொல்கிறார், இந்த வேத-சாஸ்திரங்கள் முதலிய எல்லாமே பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. 63 பிறவிகள் பக்தி செய்தாக வேண்டும். எவ்வளவு ஏராளமான சாஸ்திரங்கள் உள்ளன! நான் எந்த ஒரு சாஸ்திரத்தைப் படிப்பதாலும் கிடைப்பதில்லை. என்னை அழைக்கவும் செய்கிறார்கள், வந்து தூய்மையாக்குங்கள் என்று. இது தமோபிரதான குப்பைகளின் உலகம். இது எந்த வேலைக்கும் ஆகாது. எவ்வளவு துக்கம்! துக்கம் எங்கிருந்து வந்தது? பாபாவோ உங்களுக்கு மிகுந்த சுகத்தைக் கொடுத்தார். பிறகு நீங்கள் ஏணிப்படியில் எப்படி இறங்கி வந்தீர்கள்? ஞானம் மற்றும் பக்தி என்று பாடவும் படுகின்றது. ஞானத்தை பாபா சொல்கிறார், பக்தியை இராவணன் கற்றுத் தருகிறான். பாபாவையும் பார்க்க முடிவதில்லை, இராவணனையும் பார்க்க முடியாது. இருவரையுமே இந்தக் கண்களால் பார்க்க முடியாது. ஆத்மாவை உணர்ந்து கொள்ளப்படுவதாகும். நாம் ஆத்மா என்றால் ஆத்மாவின் தந்தையும் நிச்சயமாக இருக்கவே செய்கிறார். தந்தை பிறகு ஆசிரியராகவும் ஆகிறார். வேறு யாரும் இதுபோல் ஆவதில்லை.

இப்போது நீங்கள் 21 பிறவிகளுக்கு சத்கதி அடைகிறீர்கள். பிறகு குருவுக்கு அவசியமே இருக்காது. பாபா அனைவருக்கும் தந்தையாகவும் இருக்கிறார் என்றால் ஆசிரியராகவும் இருக்கிறார், படிப்பு சொல்லிக் கொடுப்பவர். அனைவருக்கும் சத்கதி அளிப்பவராகிய சத்குரு சுப்ரீம் குருவாகவும் உள்ளார். மூவரையும் சர்வவியாபி எனச் சொல்ல முடியாது. அவரோ சிருஷ்டியின் முதல்-இடை-கடையின் இரகசியத்தைச் சொல்கிறார். மனிதர்கள் நினைவும் செய்கிறார்கள் - ஹே, பதீத பாவனரே வாருங்கள், அனைவருக்கும் சத்கதி அளிப்பவரே வாருங்கள், அனைவருடைய துக்கத்தைப் போக்குங்கள், சுகம் கொடுங்கள். ஹே, காட் ஃபாதர்! ஹே லிபரேட்டர்! மீண்டும் எங்களுக்கு வழிகாட்டி யாகவும் ஆகுங்கள் - அழைத்துச் செல்வதற்காக. இந்த இராவண இராஜ்யத்திலிருந்து விடுவியுங்கள். இராவண இராஜ்யம் இலங்கையில் இல்லை. இந்த பூமி முழுவதிலுமே இச்சமயம் இராவண இராஜ்யம் உள்ளது. இராம இராஜ்யம் சத்யுகத்தில் தான் உள்ளது. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு குழம்பிப் போயிருக்கிறார்கள்!

இப்போது உங்களுக்கு ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டிருக்கிறது சிரேஷ்டமானவர்களாக ஆவதற்காக. சத்யுகத்தில் பாரதம் சிரேஷ்டாச்சாரியாக (மிக உயர்ந்ததாக) இருந்தது. இதுவரையிலும் கூட அவர்களைப் பூஜித்துக் கொண்டே இருக்கிறார்கள். பாரதத்தில் பிரகஸ்பதியின் தசா இருந்தது என்றால் சத்யுகம் இருந்தது. இப்போது ராகுவின் தசாவில் பாருங்கள், பாரதத்தின் நிலை என்னவாக ஆகிவிட்டது! அனைவரும் நேர்மையற்றவர்களாக ஆகிவிட்டார்கள். பாபா நேர்மை யானவர்களாக ஆக்குகின்றார். இராமராஜ்யம் வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆக, இராவண இராஜ்யத்தில் தான் உள்ளனர் இல்லையா? நரகவாசிகளாக உள்ளனர். இராவண இராஜ்யம் நரகம் எனப்படுகின்றது. சொர்க்கமும் நரகமும் பாதிப் பாதியாக உள்ளன. இதையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்திருக்கிறீர்கள் - இராமராஜ்யம் என்பது எது, இராவண இராஜ்யம் என்பது எதை சொல்லப்படுகின்றது. ஆக, முதல்-முதலில் இந்த நிச்சயபுத்தியை உருவாக்க வேண்டும். அவர் நம்முடைய தந்தை, ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் சகோதரர்கள். தந்தையிடமிருந்து அனைவருக்கும் ஆஸ்தி கிடைப்பதற்கு உரிமை உள்ளது. கிடைத்திருந்தது. பாபா இராஜயோகம் கற்பித்து சுகதாமத்தின் எஜமானர்களாக ஆக்கியிருந்தார். மற்ற அனைவரும் சாந்திதாமம் சென்று விட்டனர். இதையும் குழந்தைகள் அறிவார்கள், விருட்சபதி சைதன்யமானவர். சத்-சித்-ஆனந்த சொரூபமானவர். ஆத்மா சத்தியமானது, சைத்தன்யமானது ஆகும். பாபாவும் கூட சத்தியமான வராக, சைதன்யமானவராக, விருட்சபதியாக உள்ளார். இது தலைகீழான மரம் இல்லையா? இதன் விதை மேலே உள்ளது. பாபா தான் வந்து சொல்லிப் புரிய வைக்கிறார், எப்போது நீங்கள் தமோபிரதானம் ஆகிவிடுகிறீர்களோ அப்போது பாபா சதோபிரதானமாக ஆக்குவதற்காக வருகிறார். சரித்திரம்-பூகோளம் திரும்பவும் நடைபெறுகின்றது. இப்போது உங்களுக்குச் சொல் கிறார்கள், ஹிஸ்ட்ரி-ஜியாக்ரஃபி (வரலாறு-புவியியல்) ஆங்கிலச் சொல்லைச் சொல்லாதீர்கள் என்று. இதிகாசம்-பூகோளம் என்று இந்தியில் சொல்வார்கள். ஆங்கிலத்தை அனைத்துத் தரப்பு மக்களும் படிக்கிறார்கள். பகவான் கீதையை சம்ஸ்கிருதத்தில் சொன்னார் என்று நினைக்கிறார் கள். இப்போது ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர். அங்கே இந்த மொழி இருந்தது என்று எழுதப்படவில்லை. நிச்சயமாக மொழி இருக்கிறது.

இராஜாக்கள் யார்-யார் இருக்கிறார்களோ அவர்களுக்கென்று மொழி இருக்கிறது. சத்யுக இராஜாக்களின் மொழி தனியாக இருக்கும். சம்ஸ்கிருதம் அங்கே இல்லை. சத்யுகத்தின் பழக்கங்களே தனி. கலியுக மனிதர்களின் பழக்கங்கள் வேறு. நீங்கள் அனைவரும் மீராக்கள்.... கலியுக மனிதர்களின் பழக்க வழக்கங்கள் உங்களுக்குப் பிடிக்காது. நீங்கள் கலியுக பழக்கங்களை விட்டு விடுகிறீர்கள் என்றால் எத்தனை சண்டைகள்! உங்களுக்கு பாபா ஸ்ரீமத் தந்துள்ளார் -- காமம் மகா சத்ரு, இதன் மீது வெற்றி கொள்ளுங்கள். உலகை வென்றவர்களாக ஆகக்கூடியவர் களின் சித்திரங்களும் முன்னால் உள்ளன. உங்களுக்கோ எல்லையற்ற தந்தையிடமிருந்து அறிவுரை கிடைக்கின்றது - உலகத்தில் சாந்தி எப்படி ஏற்படும் என்பது பற்றி. சாந்தி தேவா என்று சொல்லும் போது பாபா தான் நினைவுக்கு வருகிறார். பாபா வந்து கல்ப-கல்பமாக உலகத்தில் சாந்தி ஸ்தாபனை செய்கிறார். கல்பத்தின் ஆயுளை நீண்டதாக ஆக்கியதன் மூலம் மனிதர்கள் கும்பகர்ணனைப் போன்ற உறக்கத்தில் உறங்கி விட்டுள்ளனர்.

முதல்-முதலிலோ மனிதர்களுக்கு இதை உறுதியான நிச்சயமாக்குங்கள் -- அவர் நம்முடைய தந்தை யாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார். ஆசிரியரை சர்வவியாபி என்று எப்படிச் சொல்வார்கள்? குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், பாபா எப்படி வந்து நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார் என்பதை. நீங்கள் அவரது வாழ்க்கை வரலாறு பற்றி அறிவீர்கள். பாபா வருவதே நரகத்தை சொர்க்கமாக்குவதற்காக. ஆசிரியராகவும் இருக்கிறார், உடன் அழைத்துச் செல்லவும் செய்கிறார். ஆத்மாக்கள் அழியாதவர்கள். தங்களுடைய பாகம் முழுவதையும் நடித்து விட்டு வீடு திரும்புகின்றனர். அழைத்துச் செல்லக் கூடிய வழி காட்டியும் வேண்டும் இல்லையா? துக்கத் திலிருந்து விடுவிக்கிறார். பிறகு வழிகாட்டியாகி அனைவரையும் அழைத்துச் செல்கின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கலியுக மனிதர்களின் குல வழக்கங்களை விட்டு, ஈஸ்வரிய குலத்தின் மரியாதைகளை (சட்டத் திட்டங்கள்) கடைபிடிக்க வேண்டும். அசரீரியாகிய தந்தை என்ன சொல்கிறாரோ அதை அசரீரியாக இருந்து கேட்கின்ற பயிற்சியை உறுதி ஆக்கிக் கொள்ள வேண்டும்.

2. எல்லையற்ற தந்தை தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாக வும் இருக்கிறார். இந்த வேறுபாட்டை அனைவருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். எல்லையற்ற தந்தை சர்வியாபி அல்ல என்பதை நிரூபித்துக் கூற வேண்டும்.

வரதானம்:
எல்லைக்குட்பட்ட குறும்புகளில் இருந்து விடுபட்டு, ஆன்மிகப் பெருமிதத்தில் இருக்க கூடிய அன்பான புத்தி உள்ளவர் ஆகுக.

குழந்தைகள் பலர் எல்லைக்குட்பட்ட சுபாவ, சம்ஸ்காரத்தின் குறும்புகள் அதிகம் செய்கின்றனர். எங்கே எனது சுபாவம், எனது சம்ஸ்காரம் என்ற சொல் வருகிறதோ, அங்கே அது போன்ற குறும்புத் தனங்கள் ஆரம்பமாகி விடுகின்றன. இந்த எனது என்ற சொல் தான் சுற்றலில் கொண்டு வருகிறது. ஆனால் எது பாபாவிடமிருந்து வேறுபட்டதாக உள்ளதோ, அது என்னுடையது கிடையாது. எனது சுபாவம், பாபாவின் சுபாவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க முடியாது. எனவே எல்லைக்குட்பட்ட குறும்புத் தனங்களில் இருந்து விடுபட்டு, ஆன்மிகப் பெருமிதத்தில் இருங்கள். அன்பான புத்தி உள்ளவராகி அன்பின் குறும்பை வேண்டுமானால் செய்யுங்கள்.

சுலோகன்:
பாபா மீது, சேவையின் மீது மற்றும் பரிவாரத்தின் மீது அன்பு இருக்குமானால் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.