02-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பிற சேர்க்கையிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரு சேர்க்கையில் இணையுங்கள், சகோதர - சகோதரன் என்ற பார்வையில் பார்த்தால் தேகத்தைப் பார்க்க மாட்டீர்கள், பார்வை தடுமாறாது, சொல்லில் சக்தி இருக்கும்.

கேள்வி:
தந்தை சிவபாபா குழந்தைகளுக்கு கடனாளியா? அல்லது குழந்தைகள் தந்தைக்கு கடனாளியா?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் அதிகாரிகள், தந்தை உங்களுக்கு கடனாளி. குழந்தைகளாகிய நீங்கள் தானம் செய்கிறீர்கள், எனவே உங்களுக்கு ஒன்றுக்கு நுôறு மடங்காக தந்தை தர வேண்டியுள்ளது. ஈஸ்வரன் பெயரில் நீங்கள் என்ன கொடுப்பீர்களோ அதற்காக அடுத்த பிறவியில் கைமாறு கிடைக்கின்றது. நீங்கள் பிடி அவல் கொடுத்து உலகிற்கே எஜமான் ஆகின்றீர்கள், எனவே நீங்கள் எந்தளவிற்கு பரந்தமனமுடையவராக இருக்க வேண்டும். நான் பாபாவிற்குக் கொடுத்தேன், என்ற இந்த எண்ணம் சிறிதும் சிந்தனையில் ஒருபோதும் வரக்கூடாது.

ஓம் சாந்தி.
இது புருஷோத்தம சங்கம யுகம் என்பதை படவிளக்கக் கண்காட்சியிலும், மியூசியத் திலும் புரிய வையுங்கள். நீங்கள் மட்டுமே தான் புத்திசாலிகள். எனவே எல்லோருக்கும் இது புருஷோத்தம சங்கம யுகம் என்பதைப் பற்றி எவ்வளவு புரிய வைக்க வேண்டியுள்ளது! மியூசியம் தான் அனைத்து இடங்களையும் விட அதிகமான சேவை செய்யும் இடமாகும். அங்கே அனேகர் வருகின்றனர். நன்றாக சேவை செய்யும் குழந்தைகள் குறைவாக உள்ளனர். அனைத்து சென்டரும் சேவா நிலையம் ஆகும். தில்லியில் ஆன்மீக கண்காட்சி (மியூசியம்) என்று எழுதப் பட்டுள்ளது. இதில் கூட சரியான பொருள் விளங்கவில்லை, அனேக மக்கள் கேள்வி கேட்கின்றனர், நீங்கள் பாரதத்திற்கு என்ன சேவை செய்து கொண்டிருக்கின்றீர்கள்? பகவான் வாக்கு அல்லவா! இந்த உலகம் ஒரு காடு, நீங்கள் இந்த சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் காட்டைச் சார்ந்தவரும் அல்ல, பூங்காவனத்தைச் சார்ந்தவரும் அல்ல. இப்பொழுது பூங்காவனத்திற்குச் செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இந்த இராவண இராஜ்யத்தை இராம இராஜ்யமாக மாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களிடம் கேள்வி கேட்கின்றார்கள். இவ்வளவு செலவிற்கு பணம் எங்கிருந்து வருகின்றது? சொல்லுங்கள், நாங்கள் பிரம்மா குமாரி களும், பிரம்மா குமாரர்களும் சேர்ந்து செய்கிறோம். இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றோம், எங்களது குறிக்கோள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் நீங்களும் சிறிது நாட்கள் வந்து தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இராஜாங்கத்தை ஏற்றுக் கொள்வதில்லை, எனவே தான் இராஜாக்களின் இராஜ்யத்தையே அழித்து விட்டார்கள். இந்த சமயத்தில் அதுவும் கூட தமோபிரதானம் அடைந்துவிட்டது, எனவே நன்றாக இல்லை. நாடகப் படி அவர்கள் மீதும் குற்றம் இல்லை. என்னவெல்லாம் நாடகத்தில் உள்ளதோ, அந்த நடிப்பையே நாம் நடிக்கின்றோம். ஒவ்வொரு கல்பமும் பாபா மூலமாக ஸ்தாபனைக்கான இந்த நடிப்பு நடைபெறுகின்றது. செலவும் கூட குழந்தைகளாகிய நீங்களே தான் செய்கின்றீர்கள், அதுவும் தனக்காகத் தான் ஸ்ரீமத்படி தானே செலவு செய்து தனக்காக சத்யுக இராஜ்யத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இது வேறு யாருக்குமே தெரியவும் தெரியாது. வெளியில் தெரியாத போர் வீரர்கள் (மய்ந்ய்ர்ஜ்ய் ரஹழ்ழ்ண்ர்ழ்ள்) உங்களுடைய இந்த பெயர் பிரசித்தமானது. உண்மையில் அநேக சேனையில் (ஙண்ப்ண்ற்ஹழ்ஹ்) வெளியில் தெரியாத வீரர்கள் என்று யாருமே இல்லை. சிப்பாய்களுக்கான பெயர்ப் பதிவேடு உள்ளது. அந்த பதிவேட்டில் நம்பர், பெயர் இல்லாதவர் யாரும் இருக்க முடியாது. உண்மையில் வெளியில் தெரியாத போர் வீரர்கள் நீங்கள் தான். எந்த பெயர்ப் பதிவேட்டிலும் உங்கள் பெயர் கிடையாது. உங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. இதில் உடலை கொலை செய்வதுமில்லை. யோக பலத்தால் நீங்கள் உலகையே வெற்றி யடைகின்றீர்கள். ஈஸ்வர் சர்வ சக்திவானல்லவா! நினைவால் நீங்கள் சக்தி பெறுகின்றீர்கள். சதோபிரதானமடைவதற்காக நீங்கள் பாபாவிடம் நினைவை செலுத்துகின்றீர்கள். நீங்கள் சதோபிரதானம் அடைந்துவிட்டால் இராஜ்யமும் சதோபிரதானமாக இருக்க வேண்டும். அதைத் தான் நீங்கள் ஸ்ரீமத் படி ஸ்தாபனை செய்கின்றீர்கள். கண்ணில் பார்க்க முடியாது, ஆனால் இருக் கின்றது; அதைத் தான் புலப்படாதது என்று சொல்லப்படுகின்றது. நீங்கள் சிவ பாபாவைக் கூட இந்த கண்களால் காண முடியாது. நீங்களும் ரகசியமானவர்கள், சக்தியும் ரகசியமாக பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் புரிந்துள்ளீர்கள்; நாம் பதீத்தத்திலிருந்து பாவனமாகிக் கொண்டிருக் கின்றோம். மேலும் துôய்மையில் (பாவனம்) தான் சக்தி உள்ளது. சத்யுகத்தில் நீங்கள் அனைவருமே (பாவனமாக) துôய்மையாக இருப்பீர்கள். அவர்களுடைய 84 பிறவிகளின் கதையைத் தான் பாபா கூறுகின்றார். நீங்கள் பாபாவிடமிருந்து சக்தி பெற்று துôய்மையடைந்து பிறகு துôய உலகில் இராஜ்யம் செய்வீர்கள். தேக பலத்தால் ஒருபோதும் எவருமே உலகை வெற்றியடைய முடியாது. இது யோக பலத்தின் விசயமாகும். அவர்கள் (அமெரிக்கா, ரஷியா) சண்டையிடு கின்றனர். இராஜ்யம் உங்கள் கையில் வரப்போகின்றது. பாபா சர்வ சக்திவான், எனவே அவரிட மிருந்து சக்தி கிடைக்க வேண்டும். நீங்கள் தந்தையைப் பற்றியும் அவரது படைப்பின் ஆதி-மத்யம்-கடைசி மூன்று காலத்தையும் தெரிந்து கொண்டீர்கள்.

உங்களுக்குத் தெரியும் நாம் தான் சுய தரிசன சக்ரதாரி. இந்த நினைவு அனைவருக்கும் இருப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு இருக்க வேண்டும், ஏனெனில் குழந்தை களாகிய உங்களுக்குத்தான் இந்த ஞானம் கிடைத்துள்ளது. வெளி மக்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது. எனவே சபையில் அமர வைப்பதில்லை. பதீத பாவனன் (தூய்மை ஆக்கக்கூடியவர்) பாபாவை அனைவரும் அழைக்கின்றார்கள், ஆனால் தன்னை பதீதம் (தூய்மையற்றவர்) என்று யாரும் நினைப்பதில்லை. பதீத பாவன் சீதாராம் என்று பாடல் மட்டும் பாடிக் கொண்டிருக் கின்றார்கள். நீங்கள் அனைவரும் பிரியதரிசினிகள். பாபா பிரியதரிசன். அவர் அனைவருக்கும் (சத்கதி) நற்கதி செய்யத்தான் வருகின்றார். குழந்தைகளாகிய உங்களை பாபா அலங்கரிக்கின்றார், உங்களுக்கு இரு எஞ்சின் கிடைத்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸின் எஞ்சின் (உயர்ந்த கார்) மிக நன்றாக இருக்கும். பாபாவும் அப்படித்தான் பதீத பாவன் வாருங்கள், எங்களை துôய்மை செய்து தன்னோடு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்துள்ளீர் கள். எந்த தாளமும் நீங்கள் வாசிப்பதில்லை. கடினமான விசயமே இல்லை. நடமாடும் பொழுதெல்லாம் பாபாவை நினைவு செய்து கொண்டேயிருங்கள், சந்திப்பவர்களுக்கெல்லாம் வழியைச் சொல்லிக் கொண்டேயிருங்கள். பாபா சொல்கின்றார், எனது மற்றும் லட்சுமி-நாராயணன், இராதா - கிருஷ்ணன் இவர்களின் பக்தர்களுக்கெல்லாம் இதனை தானம் வழங்குங் கள். வீணாக இழக்கக் கூடாது. பாத்திரமறிந்து தான் தானம் செய்யப்படுகின்றது. தூய்மையற்ற மனிதர்கள், தூய்மை யற்றவர்களுக்குத்தான் தானம் செய்து கொண்டிருக்கின்றனர். பாபா சர்வ சக்திவான் அவரிடமிருந்து நீங்கள் சக்தி பெற்று உத்தமராகின்றீர்கள். இராவணன் வரும் பொழுது கூட சங்கமம் தான்! அது திரேதா யுகத்திற்கும் துவாபர யுகத்திற்கும் இடையில் உள்ளது. இந்த சங்கமம் கலியுகத்திற்கும் சத்யுகத்திற்கும் இடையில் உள்ளது. ஞானம் எவ்வளவு காலம் நடைபெறுகின்றது இந்த விசயங்களையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டும். முக்கிய விசயம் என்னவென்றால் எல்லையில்லாத தந்தையை நினைவு செய்யுங்கள். எல்லையில்லாத தந்தை எப்போது வருகின்றாரோ அப்போது வினாசமும் நடைபெறும். மகாபாரதப் போர் எப்போது நடைபெற்றது? பகவான் இராஜ யோகம் கற்பிக்கும் பொழுதுதான் புதிய உலகின் ஆரம்பம், பழைய உலகின் முடிவு என்றாலே வினாசம் நடைபெறும் என்பது புரிய வந்தது. உலகம் காரிருளில் உள்ளது, அதனை இப்பொழுது (எழுப்ப வேண்டும்) விழிக்கச் செய்ய வேண்டும். அரை கல்பமாக உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பாபா புரிய வைக்கின்றார், தன்னைத் தான் ஆத்மா என புரிந்து சகோதரர் - சகோதரர் என்ற பார்வையில் பாருங்கள். அப்பொழுது நீங்கள் எவருக்காவது ஞானம் வழங்கினாலும் உங்களது சொல்லில் சக்தி வரும். ஆத்மா தான் பாவனம் மற்றும் பதீதம் ஆகின்றது. ஆத்மா தூய்மையடைந்தால் சரீரமும் துôய்மையாக கிடைக்கும். இப்பொழுது கிடைக்க முடியாது. அனைவரும் தூய்மையாக மாற வேண்டும். சிலர் யோக பலத்தால், சிலர் தண்டனைகளால் தூய்மையடைவர். நினைவு யாத்திரைதான் முயற்சி செய்ய வேண்டியது. பாபாவும் பயிற்சி செய்ய வைத்துக் கொண்டே இருக்கின்றார். எங்கு சென்றாலும் பாபாவின் நினைவிலேயே செல்லுங்கள். கிறிஸ்தவ தந்தையர்களும் அமைதியாக கிறிஸ்துவின் நினைவிலேயே நடந்து செல்வார்கள்; கிறிஸ்துவை நினைவு செய்கின்றார்கள். பாரத வாசிகள் அனேகரை நினைவு செய்கின்றனர். பாபா சொல்கின்றார் ஒருவரைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள். எல்லையில்லாத தந்தையிடமிருந்து நாம் முக்தி மற்றும் ஜீவன் முக்திக்கு உரிமையாளர் ஆகின்றோம். வினாடியில் ஜீவன் முக்தி கிடைக்கிறது. சத்யுகத்தில் அனைவரும் ஜீவன் முக்தியில் இருந்தனர். கலியுகத்தில் அனைவரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளனர்; இவை யெல்லாம் யாருக்குமே தெரியாது, இந்த விசயங்களையெல்லாம் பாபா குழந்தை களுக்குப் புரிய வைக்கின்றார். பிறகு குழந்தைகள் தந்தையின் பெயரைக் காப்பாற்று கின்றனர். அனைத்து இடங்களுக்கும் செல்கின்றனர். இப்பொழுது நடைபெறுவது புருஷோத்தம சங்கமயுகம் என்பதை அனைத்து மனிதர்களுக்கும் புரிய வைக்க வேண்டியது உங்கள் கடமை. எல்லையில்லா தந்தை எல்லையில்லாத ஆஸ்தி தர வந்துள்ளார். பாபா கூறுகின்றார், மனதார என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகும். பாவம் துண்டிக்கப்படும். இது தான் உண்மையான கீதை. அதை தந்தை கற்பிக்கின்றார். மனிதர்கள் காட்டிய வழியால் வீழ்ந்து கிடந்தீர்கள், இப்போது பகவான் வழியால் நீங்கள் ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். முக்கிய விசயம் - இருந்தாலும், எழுந்தாலும், நடமாடும் பொழுதெல்லாம் பாபாவை நினைவு செய்து கொண்டே யிருங்கள், அறிமுகம் வழங்கிக் கொண்டேயிருங்கள். உங்களிடம் அடையாள வில்லை (பேட்ஜ்) உள்ளது. இலவசமாக கொடுப்பதில் தவறில்லை. ஆனால் பாத்திரம் பார்த்து தரவேண்டும்

பாபா குழந்தைகளை புகார் செய்கிறார், நீங்கள் லௌகீக தந்தையை நினைத்துக் கொண்டே யிருக்கின்றீர்கள், பரலௌகீக தந்தையாகிய என்னை மட்டும் மறந்து போகிறீர்கள், வெட்கமாக இல்லையா? நீங்கள் தான் தூய இல்லறமார்க்கத்தில் குடும்ப விவகாரத்தில் இருந்தீர்கள், மீண்டும் இப்பொழுது மாற வேண்டும். நீங்கள் பகவானுடைய வியாபாரிகள். தன்னைத்தானே பாருங்கள் புத்தி எங்கும் அலையாமல் இருக்கின்றதா என்று? பாபா சொல்கின்றார், பிற சேர்க்கையை விடுத்து ஒரு சேர்க்கையில் இணையுங்கள். தவறு செய்ய வேண்டாம். ஆத்மா ஒருவரையொருவர் சகோதர பார்வையில் பார்த்தால் தேகத்தைப் பார்க்க மாட்டீர்கள். பார்வை தடுமாறாது. குறிக்கோள் அல்லவா? இந்த ஞானம் இப்பொழுது தான் உங்களுக்கு கிடைக்கின்றது. சகோதர-சகோதரர் என்று அனைவரும் சொல்கின்றனர். மனிதர்களும் சகோதரத்துவம் என்று சொல்கிறார்கள். அது சரி தான். பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் நாம்! பிறகு இங்கு ஏன் அமர்ந்துள்ளீர்கள்? பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறபொழுது இப்படியெல்லாம் புரிய வைத்து முன்னேற்றத்தை அடைந்து கொண்டேயிருங்கள். பாபாவிற்கு சேவாதாரி குழந்தைகள் மிகவும் பிரியமானவர்கள். சென்டர்கள் திறந்து கொண்டே செல்கின்றனர். குழந்தைகளுக்கு ஆர்வம் உள்ளது. அநேகருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று குழந்தைகளும் புரிந்து கொள்கின்றனர்., ஆயினும் நடத்திச் செல்லும் சகோதரிகளும் நல்ல மகாரதிகளாக இருக்க வேண்டும், ஆசிரியர் களும் வரிசைக் கிரமமாகவே உள்ளனர். பாபா கூறுகின்றார், எங்கெல்லாம் லட்சுமி-நாராயணர் கோவில், சிவன் கோவில், கங்கைக் கரை போன்று கூட்டமுள்ள இடங்களிலெல்லாம் சென்று சேவை செய்ய வேண்டும். புரிய வையுங்கள், காமம் மகா எதிரி என்று பகவான் கூறுகிறார். நீங்கள் ஸ்ரீமத்படி சேவை செய்து கொண்டேயிருங்கள். இது உங்களுடைய ஈஸ்வரிய குடும்பம். இங்கே நீங்கள் 7 நாள் பட்டிக்கு வந்து குடும்பத்துடன் இருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகமான மகிழ்ச்சி இருக்க வேண்டும். எல்லையில்லா தந்தை மூலம் நீங்கள் பத்மாபதம் பாக்கியசாலி ஆகின்றீர்கள். பகவான் கூட பாடம் கற்பிப்பார் என்பது உலகத்தாருக்குத் தெரியாது, இங்கே நீங்கள் படிக்கின்றீர்கள், ஆகவே உங்களுக்கு மகிழ்ச்சி அதிகம் இருக்க வேண்டும். நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த நிலை அடைய படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு பரந்த மனம் வேண்டும். பாபாவுக்கு நீங்கள் கடனையேற்றுகிறீர்கள். ஈஸ்வர் பெயரில் என்ன தருவீர்களோ, அதற்கான கைமாறு அடுத்த பிறவியில் பெறுகிறீர்கள். பாபாவிற்கு நீங்கள் அனைத்தையும் கொடுப்பதால் பாபாவும் அனைத்தையும் திருப்பித் தர வேண்டும். பாபாவிற்கு நான் கொடுத்தேன், இந்த எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது. அனேகருக்கு மனதில் வருகிறது. நாம் இவ்வளவு கொடுத்தோம், நம்மை இவர்கள் கவனிப்பதேயில்லையே ஏன்? நீங்கள் பிடி அவல் கொடுத்து உலக இராஜ்யத்தைப் பெறுகின்றீர்கள், இராஜாக்கள் கௌரவமாக இருப்பார்கள். முதன் முதலில் பார்க்கும் பொழுது நாம் பார்த்திருக்கின்றோம், அவர்கள் பார்வையிலேயே சொல்லிச் சென்று விடுவார்கள், அவர்கள் ஒருபோதும் கையால் எடுக்க மாட்டார்கள். செயலாளருக்கு சைகை காண்பிப்பார்கள். அப்படி யானால் வள்ளல் ஆன சிவபாபா எப்படி வாங்குவார்? இவர் எல்லையில்லாத தந்தை. இவருக்கு முன்னால் நீங்கள் பார்வை வைக்கின்றீர்கள், ஆனால் பாபா பிரதிபலனாக 100 மடங்கு தருவார். எனவே நான் கொடுத்தேன் என்ற இந்த எண்ணம் வரக்கூடாது. எப்போதுமே நாம் பெறுகின்றோம் என்று நினையுங்கள். அங்கே நீங்கள் பத்மாபதம் பதி ஆவீர்கள். நீங்கள் உண்மையில் பத்மாபதம் பாக்கியசாலி ஆகின்றீர்கள். அனேக குழந்தைகள் பரந்த மனதுடையவராக இருக்கின்றார்கள். சிலர் கருமியாகவும் (கஞ்சத்தனம்) இருக்கின்றனர், நாம் பத்மாபதம் பாக்கியசாலி ஆகின்றோம், நாம் அதிக சுகத்தை அடைகின்றோம் என்று புரிந்து கொள்வதில்லை. பரமாத்மா தந்தை மறைமுக மாக இருக்கும்பொழுது (பக்தியில்) மறைமுகமாக அல்பகால பலனைத்தருகின்றார். இப்போது நேருக்கு நேராக வந்திருக்கும் பொழுது 21 பிறவிகளுக்கு பலன் தருகின்றார். சிவபாபாவின் பண்டாரா நிரம்பி இருக்கும் என சொல்லப்படுகிறது. பாருங்கள், எவ்வளவு குழந்தைகள் இங்கு யார் என்ன தருகிறார்கள்? என்பது கூட தெரியவில்லை. பாபாவிற்குத் தெரியும்; பாபா யாரிடம் குடிகொண்டுள்ளாரோ (பிரம்மா) அவருக்குத் தெரியும்! முற்றிலும் சாதாரணமாக இருக்கின்றார். இந்த காரணத்தால் குழந்தைகள் இங்கிருந்து வெளியில் சென்றவுடன் அந்த மகிழ்ச்சி மறைந்து போகின்றது. ஞானம், யோகம் இல்லாததால் சச்சரவு நடந்து கொண்டேயிருக்கின்றது. நல்ல நல்ல குழந்தைகளைக் கூட மாயை வீழ்த்தி விடுகின்றது. மாயை முகத்தைத் திருப்பி விடுகின்றது. சிவபாபா, இவரை சந்திக்க நீங்கள் வந்துள்ளீர்கள் என்றால், அவரை நீங்கள் நினைவு செய்ய முடியாதா? உள்ளூர மகழ்ச்சியின் அளவில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் வந்து விட்டால் நாங்கள் உங்களுக்கே குழந்தையாகி விடுவோம் என்று யாரிடம் சொல்லி வந்தீர்களோ, அந்த நாள் வந்தது இன்று, பகவானே வந்து தத்தெடுக்கும் பொழுது எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்வது. மகிழ்ச்சியில் இருக்க வேண்டும். ஆனால், மாயை மகிழ்ச்சியை இழக்க வைத்து வடுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) பகவான் நம்மை தத்தெடுத்துள்ளார், அவரே நமக்கு ஆசிரியராகவும் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார், தனது பத்மாபதம் பாக்கியத்தை நினைவு செய்து மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.

(2) நாம் ஆத்மா சகோதர சகோதரர்கள், இந்த பார்வை உறுதியாக்க வேண்டும். தேகத்தினைப் பார்க்கக்கூடாது. பகவானுடன் வியாபாரம் செய்த பிறகு புத்தியை அலைய விடக்கூடாது.

வரதானம்:
இந்த அலௌகீக வாழ்க்கையில் சம்பந்தத்தின் சக்தி மூலமாக அழியாத சிநேகம் மற்றும் சகயோகத்தை (ஒத்துழைப்பு) பெற்று விடும் சிறந்த ஆத்மா ஆவீர்களாக.

இந்த அலௌகீக வாழ்க்கையில் சம்பந்தங்களின் சக்தி குழந்தைகளாகிய உங்களுக்கு டபிள் . இரட்டை ரூபத்தில் பிராப்தியாகி இருக்கிறது. ஒன்று தந்தை மூலமாக சர்வ சம்பந்தங்கள், இரண்டாவது தெய்வீக பரிவாரத்தின் மூலமாக சம்பந்தம். இந்த சம்பந்தங்களினால் எப்பொழுதும் சுயநலமற்ற சிநேகம், அழியாத சிநேகம் மற்றும் சகயோகம் எப்பொழுதும் பிராப்தி ஆகிக் கொண்டே இருக்கிறது. எனவே உங்களிடம் சம்பந்தத்தினுடையதும் சக்தி இருக்கிறது. அப்பேர்ப் பட்ட சிறந்த அலௌகீக வாழ்க்கையுடைய சக்திகளில் நிறைந்த வரதானி ஆத்மாக்கள் ஆவீர்கள். எனவே அர்ஜீ - வேண்டுகோள் விடுப்பவர்கள் அல்ல, ஆனால் எப்பொழுதும் ராஜீ - திருப்தியாக இருப்பவர்கள் ஆவீர்கள்.

சுலோகன்:
எந்தவொரு பிளான் - திட்டத்தையும் விதேஹி - தேக உணர்விலிருந்து விடுபட்டு, சாட்சி - பார்வையாளராக ஆகி சிந்தியுங்கள் மற்றும் ஒரு நொடியில் ப்ளெயின் - தெளிவான நிலையை அமைத்துக் கொண்டே செல்லுங்கள்