02-05-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் வானம்பாடிகள் ஆகி தனக்குச் சமமாக மாற்றக்கூடிய சேவை செய்யுங்கள். எத்தனை பேரை தனக்குச் சமமாக மாற்றி இருக்கின்றேன், நினைவினுடைய சார்ட் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்யுங்கள்.

கேள்வி:
மனிதர்களால் கொடுக்க முடியாத எந்த ஒரு உறுதிமொழியை, பகவான் தன்னுடைய குழந்தைகளிடம் கொடுக்கின்றார்?

பதில்:
பகவான் உறுதிமொழி கொடுக்கின்றார் - குழந்தைகளே, நான் உங்களை நம்முடைய வீட்டுக்கு கண்டிப்பாக அழைத்துச் செல்வேன். நீங்கள் ஸ்ரீமத் படி நடந்து தூய்மையானால், முக்தி மற்றும் ஜீவன் முக்திக்கு செல்வீர்கள். அப்படி இல்லையென்றாலும் முக்திக்கு ஒவ்வொருவரும் போய் ஆக வேண்டும். யாரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வலுக்கட்டாயமாக கணக்கு வழக்கை முடிக்க வைத்து அழைத்துச் செல்வேன். நான் எப்போது வருகின்றேனோ, அப்போது உங்கள் அனைவருடைய வானபிரஸ்த நிலை ஏற்படுகிறது. நான் அனைவரையும் கூட்டிச் செல் கின்றேன் என்று பாபா சொல்கின்றார்.

ஓம் சாந்தி.
குழந்தைகள் இப்போது படிப்பின் மீது கவனம் தர வேண்டும். சர்வகுணங்கள் நிறைந்த வர்கள், 16 கலைகள் சம்பூர்ணமானவர்கள்.... என்று எப்படி பாடப்பட்டுள்ளதோ, அந்த அனைத்து குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். நமக்குள் இந்த குணம் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் யார் அப்படி ஆகின்றார்களோ, அவர்கள் மீது தான் குழந்தைகளாகிய உங்களின் கவனம் செல்லும். இப்போது இது தான் படிப்பது மற்றும் பிறருக்கு படிப்பிப்பதன் ஆதாரத்தில் உள்ளது. நாம் எத்தனை பேருக்கு படிப்பிக்கின்றோம் என்று நம்முடைய மனதிடம் கேட்க வேண்டும். சம்பூர்ண தேவதையாக யாரும் ஆகவில்லை. எப்போது நிலா (சந்திரன்) சம்பூர்ணம் அடைகிறதோ, அப்போது எவ்வளவு வெளிச்சம் தருகிறது! வரிசைக்கிரமமான முயற்சி யின் ஆதாரத்தில் இருக்கின்றார்களா? என்று இங்கே கூட பார்க்கப்படுகிறது. இதைக் குழந்தைகள் கூட புரிந்து கொள்ள முடியும். டீச்சர் கூட புரிந்து கொள்கின்றார். என்ன செய்து கொண்டிருக் கின்றார்கள்? என் பெயரில் என்ன சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்? என்று ஒவ்வொரு குழந்தை மீதும் பார்வை செல்கிறது. அனைத்துப் பூக்களையும் பார்க்கின்றார். அனைவரும் பூக்களாக இருக்கின்றீர்கள். இது தோட்டமல்லவா! ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையை தெரிந்திருக்கின்றனர். தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிந்திருக்கின்றனர். அதீந்திரிய சுக மயமான வாழ்க்கையை ஒவ்வொருவரும் தங்களுக்குள் அனுபவிக்கின்றார்கள். பாபாவை அதிகத்திலும் அதிகமாக நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்வதன் மூலமாகத் தான் பலன் கிடைக்கிறது. தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானமாக ஆவதற்காக குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் எளிய வழியைச் சொல்கின்றேன் - நினைவு யாத்திரை. நம்முடைய நினைவுக்கான சார்ட் சரியாக இருக்கிறதா? மற்றும் மற்றவர்களை எனக்குச் சமமாக ஆக்குகின்றேனா? என்று ஒவ்வொருவரும் தன்னுடைய மனசாட்சியிடம் கேட்க வேண்டும். ஏனெனில் ஞானத்தின் வானம்பாடிகள் அல்லவா! சிலர் கிளிகளாக இருக்கின்றனர், சிலர் வேறு பறவைகளாக இருக்கின்றனர். நீங்கள் புறாவாக அல்ல, கிளிகளாக ஆக வேண்டும். தனக்குத் தானே கேட்டுக் கொள்வது மிக எளிது. எந்தளவு நமக்கு பாபாவின் நினைவு இருக்கிறது? எந்தளவு அதீந்திரிய சுகத்தில் இருக்கின்றோம்? மனிதரிலி ருந்து தேவதை ஆக வேண்டுமல்லவா! மனிதர்களோ மனிதர்களாகத் தான் இருக்கின்றார்கள். ஆண் அல்லது பெண் இரண்டு பேரும் மனிதர்கள் தான். பிறகு நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்து தேவதை ஆகின்றீர்கள். உங்களைத் தவிர தேவதை ஆகக்கூடியவர் வேறு யாரும் கிடையாது. இங்கே வருவதே தெய்வீக குலத்தின் சம்மந்தி ஆவதற்காகத் தான் ஆகும். அங்கே கூட நீங்கள் தெய்வீக குலத்தின் சம்மந்தி ஆக இருப்பீர்கள். அங்கே உங்களுக்குள் எவ்வித மான கோபம்-வெறுப்பினுடைய விசயமே இருக்காது. அப்படிப்பட்ட தெய்வீகக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக ஆவதற்கு நன்றாக முயற்சி செய்ய வேண்டும். படிப்பு கூட சட்டப்படியாக இருக்க வேண்டும், ஒருபோதும் படிப்பைத் தவற விடக்கூடாது. நோய்வாய் பட்டாலும் கூட புத்தியில் சிவபாபாவின் நினைவு இருக்க வேண்டும். இதில் பேசுவதற்கான விசயமே கிடையாது. நாம் சிவபாபாவினுடைய குழந்தைகள் என்று ஆத்மா தெரிந்திருக்கிறது. பாபா நம்மை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். இதை நல்ல முறையில் பயிற்சி செய்ய வேண்டும். எங்கே இருந்தாலும், பாபாவின் நினைவில் இருங்கள். பாபா வந்திருப்பதே சாந்தி தாமம்-சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தான். எவ்வளவு எளிதானது! நிறைய பேருக்கு அதிகம் தாரணை செய்ய முடிவதில்லை. நல்லது, நினைவு செய்யுங்கள். இங்கே அனைத்துக் குழந்தைகளும் அமர்ந்திருக் கின்றார்கள், இவர்களில் கூட வரிசைக்கிரமமாக இருக்கின்றார்கள். ஆம், கண்டிப்பாக ஆக வேண்டும். கண்டிப்பாக சிவபாபாவை நினைவு செய்கின்றனர். மற்ற அனைத்து தொடர்பு களையும் துண்டித்து, ஒருவரோடு தொடர்பை இணைக்கக்கூடியவர்களாகத் தான் அனைவரும் இருக்கின்றார்கள். வேறு யாருடைய நினைவும் இருப்பதில்லை. ஆனால் இதில் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டியதிருக்கும், உழைக்க வேண்டும். உள்ளுக்குள் எப்போதும் ஒரு சிவபாபா வின் நினைவு தான் இருக்க வேண்டும். எங்கேனும் வெளியே சுற்றச் சென்றாலும் கூட உள்ளுக்குள் பாபாவின் நினைவு தான் இருக்க வேண்டும். இதில் பேச வேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை. இது எளிமையான படிப்பாகும். உங்களுக்கு படிப்பித்து, உங்களை தனக்குச் சமமாக ஆக்குகின்றார். அப்படிப்பட்ட சமமான நிலையில் தான் குழந்தைகளாகிய நீங்கள் செல்ல வேண்டும். எப்படி சதோபிரதான நிலையில் வந்தீர்களோ, அதே நிலையில் பிறகு செல்ல வேண்டும். இதைப் புரிய வைப்பது எவ்வளவு எளிது. வீட்டின் வேலைகள் செய்து கொண்டே, போகும்போதும், வரும்போதும் தன்னைத் தான் மலராக ஆக்க வேண்டும். நமக்குள் எந்த ஒழுங்கீனம் (தவறுகள்) இல்லை தானே என்று சோதனை செய்ய வேண்டும். தன்னைத் தான் சோதனை செய்வதில் வைரத்தின் உதாரணம் கூட மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு நீங்கள் பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடியாக (மேக்னிஃபை க்ளாஸ்) இருக்கின்றீர்கள். ஆக எனக்குள் தேக அபிமானம் கொஞ்சம் கூட இல்லை தானே என்று தன்னை சோதிக்க வேண்டும். ஆனால் இந்த நேரம் அனைவரும் முயற்சியாளர்கள் தான், ஆனால் கூட இதில் குறிக்கோள் இருக்கிறதல்லவா! நீங்கள் அனைவருக்கும் செய்தி கொடுக்க வெண்டும். செய்தித்தாள்களில் செலவானாலும் பரவாயில்லை, இந்த செய்தி அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று பாபா சொல்லி இருக்கின்றார். ஒரு பாபாவை நினைவு செய்வதன் மூலம் பாவ கர்மங்கள் வினாசம் ஆகிவிடும் மற்றும் தூய்மையாகி விடுவீர்கள் என்று சொல்லுங்கள்.இப்போது யாரும் தூய்மையாக இல்லை. தூய்மையான ஆத்மாக்கள் புதிய உலகத்தில் இருப்பார்கள் என்று பாபா புரிய வைத்திருக் கின்றார். இந்தப் பழைய உலகம் தூய்மையற்றதாக இருக்கிறது. ஒருவர் கூட தூய்மையாக இருக்க முடியாது. ஆத்மா எப்போது தூய்மை ஆகிறதோ, அப்போது பழைய சரீரத்தை விட்டு விடுகிறது. பழைய சரீரத்தை விட்டுத் தான் ஆக வேண்டும். நினைவு செய்து செய்து உங்கள் ஆத்மா ஒரேயடியாக தூய்மை ஆகிவிடும். சாந்திதாமத்திலிருந்து நாம் தூய்மையான ஆத்மாக்களாக வந்தோம், பிறகு கர்ப்ப மாளிகையில் அமர்ந்தோம். பிறகு இத்தனை பாகங்களை நடித்தோம். இப்போது சக்கரத்தை முடித்து விட்டீர்கள், பிறகு ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களுடைய வீட்டிற்கு செல்வீர்கள். அங்கிருந்து பிறகு சுகதாமத்திற்கு வருவீர்கள். அங்கே கர்ப்ப மாளிகை இருக்கும். ஆனால் கூட உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும், இது படிப்பாகும். இப்போது நரகம் விஷ உலகம் (வைஷ்யாலயம்) அழிந்து, சிவாலயம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும்.

நாம் இந்த உடலை விட்டு புதிய உலகத்தில் இளவரசன்-இளவரசி ஆவோம் என்று நீங்கள் கூட புரிந்திருக்கின்றீர்கள். சிலர், நாம் பிரஜையாக சென்று விடுவோம் என்று புரிந்து கொள்வார்கள், இதில் புத்தியின் லைன் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு பாபாவின் நினைவு தான் இருக்க வேண்டும், மற்ற எந்த நினைவும் இருக்கக் கூடாது. இதைத் தான் தூய்மையான பிச்சைக் காரன் என்று சொல்லப்படுகிறது. சரீரம் கூட நினைவு இருக்கக் கூடாது. இது பழைய அழுக்கான சரீரம் அல்லவா! இங்கே வாழ்ந்து கொண்டே இறக்க வேண்டும், இது புத்தியில் இருக்க வேண்டும். இப்போது நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். நம்முடைய வீட்டை மறந்து விட்டோம். இப்போது மீண்டும் பாபா ஞாபகப்படுத்தி யிருக்கிறார். இப்போது இந்த நாடகம் முழுமை அடைகிறது. நீங்கள் அனைவரும் வானபிரஸ்திகள் என்று பாபா புரியவைக்கின்றார். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இந்த நேரம் வானபிரஸ்த நிலை (முற்றிலும் வைராக்கியத்துடன் வாழ்வது) ஆகும். நான் வருகின்றேன், அனைத்து ஆத்மாக்களையும் சப்தத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்கின்றேன். இப்போது சிறியவர்கள்-பெரியவர் கள் என உங்கள் அனைவருக்கும் வானபிரஸ்த நிலை ஆகும் என்று பாபா சொல்கின்றார். வான பிரஸ்தம் என்று எதை சொல்கிறோம், இதைக் கூட நீங்கள் தெரிந்திருக்கவில்லை. குருக்களிடம் மனிதர்கள் செல்கிறார்கள். நீங்கள் லௌகீக குருக்கள் மூலமாக அரைகல்பமாக முயற்சி செய்து வந்தீர்கள், ஆனால் ஞானம் எதுவுமில்லை. சிறியவர்கள்-பெரியவர்கள் என உங்கள் அனைவரின் வானபிரஸ்த நிலை என்று இப்போது பாபா அவரே சொல்கின்றார். முக்தியோ அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சிறியவர்கள்-பெரியவர்கள் அனைவருமே முடிந்து போய்விடுவார்கள். அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல பாபா வந்திருக்கிறார். இதில் குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும். இங்கே துக்கமடைகின்றனர், ஆகையால் தன்னுடைய இனிமையான வீட்டை (ஸ்வீட் ஹோம்) நினைவு செய்கின்றனர். வீடு செல்ல விரும்பு கின்றனர், ஆனால் புத்தியே இல்லை. ஆத்மாக்களாகிய எங்களுக்கு இப்போது அமைதி வேண்டும் என்று சொல்கின்றனர். எவ்வளவு நேரத்திற்காக அமைதி வேண்டும் என்று பாபா கேட்கின்றார். இங்கே ஒவ்வொருவரும் தன்னுடைய பாகத்தை நடிக்க வேண்டும். இங்கே யாரேனும் அமைதியாக இருக்க முடியுமா என்ன! அரைகல்பமாக இந்த குருக்கள் போன்றோர் உங்களை நிறைய முயற்சி செய்ய வைத்தனர். முயற்சி செய்து, அலைந்து திரிந்து இன்னும் அதிகமாக அசாந்தி ஆகி விட்டீர்கள். இப்போது யார் சாந்திதாமத்திற்கு எஜமானரோ, அவரே வந்து திரும்ப அழைத்துச் செல்கிறார். படிப்பித்துக் கொண்டும் இருக்கிறார். நிர்வாணதாமம் செல்வதற்காக, முக்திக்காக பக்தியும் செய்கின்றனர். நாம் சுகதாமத்திற்குச் செல்வோம் என்று ஒருபோதும் யாருடைய மனதிலும் வருவதில்லை. அனைவரும் வானபிரஸ்த நிலைக்குச் செல்ல முயற்சி செய்கின்றனர். நீங்களோ சுகதாமம் செல்ல முயற்சி செய்கின்றீர்கள். முதலில் சப்தத்தை கடந்த நிலை கண்டிப் பாக தேவை என்று தெரிந்திருக்கின்றீர்கள். பகவான் கூட குழந்தைகளிடம் உறுதிமொழி கொடுக் கின்றார் - நான் குழந்தைகளாகிய உங்களை நம்முடைய வீட்டுக்கு கண்டிப்பாக அழைத்துச் செல்வேன், இதற்காகத் தான் நீங்கள் அரைகல்பம் பக்தி செய்தீர்கள். இப்போது ஸ்ரீமத் படி நடந்தீர்களானால், முக்தி-ஜீவன் முக்தியில் செல்வீர்கள். இல்லை யென்றாலும் அனைவரும் சாந்திதாமத்திற்குச் செல்லத் தான் வேண்டும். சிலர் போக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாடகப்படி அனைவரும் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். விரும்புங்கள், விரும்பாமல் இருங்கள், நான் வந்திருப்பதே அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வதற்காகத் தான். வலுக்கட்டாய மாக கணக்கு வழக்கை முடிக்க வைத்து அழைத்துச் செல்வேன். நீங்கள் சத்யுகத்திற்கு செல்கின்றீர்கள், மற்ற அனைவரும் சப்தத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் சாந்திதாமத்தில் இருக்கின்றனர். யாரையும் விட்டு வைப்பதில்லை. செல்லாவிட்டாலும் கூட, தண்டனை கொடுத்து அடித்து-உதைத்தும் கூட அழைத்துச் செல்வேன். நாடகத்தில் பாகம் கூட அப்படித் தான் இருக்கிறது. ஆகையால் தன்னுடைய வருமானத்தை ஏற்படுத்திச் செல்ல வேண்டும். அப்போது பதவி கூட நல்லதாகக் கிடைக்கும். பின்னால் வருபவர்கள் என்ன சுகத்தை அடைவார்கள்! கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்று பாபா அனைவருக்கும் சொல்கின்றார். உடல்களுக்கு நெருப்பு வைக்கப்படும், மற்றபடி அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வேன். ஆத்மாக்கள் தான் என் கூட வர வேண்டும். என்னுடைய வழிப்படி சர்வகுணங்கள் நிறைந்தவர்களாக, 16 கலைகள் சம்பூர்ணமானவர்களாக ஆகின்றீர்கள் என்றால் பதவியும் நன்றாகக் கிடைக்கும். தாங்கள் வந்து எங்கள் அனைவருக்கும் மரணத்தைக் கொடுங்கள் (அழைத்துச் செல்லுங்கள்) என்று நீங்கள் அழைத்தீர்கள் அல்லவா! இப்போது மரணம் வந்தேவிட்டது. யாரும் தப்பித்துப் போக முடியாது. இந்த அழுக்கான உடலில் இருக்கக் கூடாது. திரும்ப அழைத்துச் செல்லுங்கள் என்று நீங்கள் தான் அழைத்துள்ளீர்கள். ஆக இப்போது பாபா சொல்கின்றார் - குழந்தைகளே! இந்த அழுக்கான உலகத்திலிருந்து உங்களை திரும்ப அழைத்துச் செல்வேன். உங்களுடைய நினைவுச் சின்னம் கூட இருகிறது. தில்வாடா கோயில் கூட இருக்கிறதல்லவா - மனதில் வீற்றிருப்பவரின் கோயில், ஆதி தேவன் அமர்ந்திருக்கிறார். சிவபாபா கூட இருகின்றார், பாப்தாதா இருவருமே இருக்கின்றார் கள், இவருடைய (பிரம்மாவுடைய) உடலில் பாபா வீற்றிருக்கின்றார். நீங்கள் அங்கே செல்லும் போது ஆதிதேவனைப் பார்க்கின்றீர்கள். இங்கே பாப்தாதா அமர்ந்திருக்கிறார் என்று உங்களுடைய ஆத்மா தெரிந்திருக்கிறது.

இந்த நேரம் நீங்கள் என்ன நடிப்பு நடித்துக் கொண்டிருக்கின்றீர்களோ, அதனுடைய அடையாளம் நினைவுச் சின்னமாக நிற்கின்றது. மஹாரதி, குதிரைப்படை, காலாட்படைகள் கூட இருக்கின்றன. அவை ஜட சித்திரங்கள், இங்கே சைதன்யமாக (உயிரோட்டமுடையதாக) இருக்கின்றீர்கள். மேலே வைகுண்டம் கூட இருக்கிறது. தில்வாடா கோயில் எப்படி இருக்கிறது என்று நீங்கள் மாடல் (மாதிரி) பார்த்துவிட்டு வருகின்றீர்கள், கல்ப கல்பத்திற்கும் இந்தக் கோயில் இப்படித் தான் உருவாகிறது என்று நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள், அதை நீங்கள் சென்று பார்க்கின்றீர்கள். சிலர் குழப்பமடைகின்றனர். இந்த மலைகள் போன்ற அனைத்தும் உடைந்து நொறுங்கிப் போனது, மீண்டும் உருவாகும்! எப்படி? இதை சிந்தனை செய்யக் கூடாது. இப்போது சொர்க்கம் கிடையாது, பிறகு மற்றவை எப்படி வரும்! முயற்சி மூலம் அனைத்தும் உருவாகிறதல்லவா! இப்போது சொர்க்கம் செல்வதற்காக நீங்கள் தயார் செய்து கொண்டிருக்கின்றீர்கள். சிலர் பிரச்சினையில் வந்து படிப்பையே விட்டு விடுகின்றார்கள். இதில் குழப்பமடைவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று பாபா சொல்கின்றார். அங்கே அனைத்தையும் நாம் நமக்காக உருவாக்குவோம். அந்த உலகமே சதோபிரதானமாக இருக்கும். அங்கே உள்ள பழங்கள்-பூக்கள் போன்ற அனைத்தையும் பார்த்து வருகின்றார்கள், அமிர்தம் (சூபிரசம்) குடிக்கின்றார்கள். சூட்சும வதனம், மூலவதனத்திலோ இவையெல்லாம் கிடையாது. மற்றபடி இவையனைத்தும் வைகுண்டத்தில் இருக்கின்றன. உலகத்தின் வரலாறு-புவியியல் மீண்டும் நடக்கிறது. இந்த நிச்சயம் உறுதியாக இருக்க வேண்டும். மற்றபடி யார் அதிர்ஷ்டத்தில் இல்லையோ, அவர்கள் 'இது எப்படி நடக்க முடியும்? இப்போதே பார்க்க முடியாத வைர வைடூரியங்கள் பிறகு எப்படி உருவாகும்? பூஜைக்குரியவர்களாக எப்படி ஆவோம்?' என்று சொல்வார்கள். பூஜைக்குரியவர் மற்றும் பூஜாரியினுடைய இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாபா சொல்கின்றார். நாம் தான் பிராமணர்கள், தேவதைகள், க்ஷத்திரியர்கள்.... இந்த உலகச் சக்கரத்தை தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி இராஜா ஆகின்றீர்கள். நீங்கள் புரிந்து கொண்டவுடன் சொல்கின்றீர்கள் - பாபா, கல்பத்திற்கு முன்பு கூட உங்களை சந்தித்திருந்தோம். நம்முடைய நினைவுச் சின்னமாகத் தான் (தில்வாடா) கோயில் இருக்கிறது. இதற்குப் பிறகு தான் சொர்க்கம் ஸ்தாபனை ஆகும். உங்களுடைய இந்த சித்திரங்கள் அதிசயமானது, எவ்வளவு ஆர்வத்தோடு வந்து பார்க்கின்றார்கள். முழு உலகத்திலும் யாரும் எங்கேயும் இப்படிப் பார்த்திருக்கவில்லை. யாரும் இப்படி சித்திரத்தை உருவாக்கி ஞானம் கொடுக்க முடியாது. இதை யாரும் காப்பியடிக்க முடியாது. இந்த சித்திரங்கள் பொக்கிஷங் களாகும். இதன் மூலம் நீங்கள் பத்மாபதம் பாக்கியசாலி ஆகின்றீர்கள். நம்முடைய ஒவ்வொரு அடியிலும் பன்மடங்கு பாக்கியம் இருக்கிறது. ஒவ்வொரு அடி என்பது படிப்பு ஆகும். எந்தளவு யோகம் செய்வீர்களோ, எந்தளவு படிப்பீர்களோ அந்தளவு பன்மடங்கு பாக்கியம் ஆகும். ஒருபக்கம் மாயை கூட முழு வேகத்தில் வரும். நீங்கள் இந்த நேரம் தான் ஷியாம்-சுந்தர் ஆகின்றீர்கள். சத்யுகத்தில் நீங்கள் அழகாக இருந்தீர்கள்,அதாவது தங்க யுகம், கலியுகத்தில் ஷியாம் (கறுப்பு) ஆகின்றீர்கள், அதாவது இரும்பு யுகம். ஒவ்வொரு பொருளும் இப்படி (ஷியாம்-சுந்தர்) ஆகிறது. இங்கேயோ நிலம் கூட கரடு முரடாக இருக்கிறது. அங்கே நிலம் கூட முதல்தரமானதாக இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக இருக்கும். அப்படிப்பட்ட இராஜ்யத்திற்கு நீங்கள் எஜமானர் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். பலமுறை அப்படி ஆகி இருக்கின்றீர்கள். மீண்டும் அப்படிப்பட்ட இராஜ்யத்தின் எஜமானர் ஆவதற்கான முழுமையான முயற்சி செய்ய வேண்டும். முயற்சி இல்லாமல் பலனை எப்படி அடைவீர்கள்? இதில் எந்த கஷ்டமும் கிடையாது.

முரளி அச்சடிக்கப்படுகிறது, போகப் போக இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படும். எவ்வளவு பணம் உள்ளதோ, அதை யக்ஞத்திற்கு கொடுத்து விடுவோம் என்று குழந்தைகள் சொல்வார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? என்னவெல்லாம் நடக்கிறது என்று போகப்போக பாருங்கள். வினாசத்துக்கான ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். ஒத்திகை நடந்து கொண்டே இருக்கும். பிறகு அமைதி ஏற்பட்டுவிடும். குழந்தை களின் புத்தியில் முழு ஞானமும் இருக்கிறது. ஆயினும் மிக எளிதாகும். பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த சரீரத்தைக் கூட மறந்து முழுமையாக தூய்மையான பிச்சைக்காரன் ஆக வேண்டும். புத்தியின் லைனை தெளிவாக வைக்க வேண்டும். இப்போது நாடகம் முடிந்து விட்டது, நாம் நம்முடைய இனிமையான வீட்டிற்குச் செல்கின்றோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

2. படிப்பின் ஒவ்வொரு அடியிலும் பன்மடங்கு வருமானம் இருக்கிறது, ஆகையால் நல்ல முறையில் தினமும் படிக்க வேண்டும். தெய்வீக குலத்தின் சம்மந்தி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். நமக்கு எந்தளவு அதீந்திரிய சுகம் அனுபவமாகிறது? மகிழ்ச்சி இருக்கிறதா? என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
புத்தியின் சேர்க்கை மற்றும் சகயோகத்தின் கை மூலமாக ஆனந்தத்தின் அனுபவம் செய்யக்கூடிய அதிர்ஷ்டசாலி ஆத்மா ஆகுங்கள்.

சகயோகத்தின் அடையாளமாக கையோடு கை சேர்ந்திருப்பதாக காட்டப்படுகிறது, அதே போன்று தந்தைக்கு சதா சகயோகியாக ஆவதே கையோடு கை சேர்ப்பது மற்றும் புத்தியால் சேர்ந்து இருப்பதாகும் . அதாவது மனதின் ஈடுபாடு ஒருவரோடு மட்டும் இருப்பதாகும். இறைவனின் தோட்டத்தில் கையோடு கை சேர்த்து சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஸ்மிருதியில் இருக்க வேண்டும். இதனால், மனநிலையில் சுவாரஸ்யமாக, சதா மகிழ்ச்சியாக மற்றும் சம்பன்னமாக இருப்பீர்கள். இவ்வாறான அதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் எப்போதும் ஆனந்தத்தின் அனுபவத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.

சுலோகன்:
ஆசிர்வாதங்களின் கணக்கை சேமிப்பதற்கான சாதனம் - திருப்தியாக இருப்பது மற்றும் திருப்தியாக ஆக்குவதாகும்.