03-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தையின் நினைவில் சதா மகிழ்ச்சியாக இருங்கள்; பழைய தேகத்தின் உணர்வை விடுத்து கொண்டே செல்லுங்கள். ஏனெனில் நீங்கள் யோக பலத்தினாலே வாயுமண்டலத்தை தூய்மைப்படுத்தும் சேவை செய்ய வேண்டும்.

கேள்வி:
ஸ்காலர்ஷிப் (உதவித்தொகை) பெறுவதற்கு அல்லது தனக்குத் தாமே ராஜ்யத்தின் திலகம் அளிப்பதற்காக என்ன முயற்சி செய்ய வேண்டும்?

பதில்:
நினைவு யாத்திரையின் முயற்சி செய்யும் பொழுதே ராஜ திலகம் கிடைக்கும். தங்களுக்குள் சகோதர சகோதரர் என்று உணரும் அப்பியாசம் செய்யுங்கள். அப்பொழுது பெயர் ரூபத்தின் உணர்வு நீங்கிப் போய் விடும். வீண் விஷயங்களை ஒரு போதும் கேட்காதீர்கள். தந்தை என்ன கூறுகிறாரோ அதை மட்டுமே கேளுங்கள். மற்றவர்களுடைய விஷயங்களுக்கு காதை மூடிக் கொள்ளுங்கள். படிப்பின் மீது முழு கவனம் செலுத்துங்கள் அப்பொழுது உதவித்தொகை கிடைக்க முடியும்.

ஓம் சாந்தி.
நாம் ஸ்ரீமத்படி நமக்காக ராஜதானி ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். யார் எவ்வளவு சேவை செய்கிறார்களோ மனம், சொல் செயல் மூலமாக, தங்களுக்கே நன்மை செய்கிறார்கள். இதில் குழப்பம் போன்ற எந்த விஷயமும் இல்லை. இந்த பழைய தேகத்தின் உணர்வை விட்டபடியே நீங்கள் அங்கு வந்து சேர்ந்து விடுகிறீர்கள். அவ்வளவே! பாபாவை நினைவு செய்வதால் மகிழ்ச்சியும் அதிகமாக ஏற்படுகிறது. எப்பொழுதும் நினைவு இருந்தால் மகிழ்ச்சியாகவே இருக்கும். தந்தையை மறந்து விடுவதால் வாடிப்போய் விடுகிறார்கள். குழந்தைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். நாம் ஆத்மாக்கள் ஆவோம். ஆத்மாக்களாகிய நமது தந்தை இந்த வாய் (பிரம்மாவின்) மூலமாக பேசுகிறார். நாம் ஆத்மா இந்த காதுகள் மூலமாகக் கேட்கிறோம். இதுபோல நமது பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வ தற்கு முயற்சி செய்ய வேண்டி உள்ளது. தந்தையை நினைவு செய்து செய்து வீடு திரும்பிச் செல்ல வேண்டும். இந்த நினைவு யாத்திரைதான் அதிக சக்தி அளிக்கிறது. உங்களுக்கு எவ்வளவு சக்தி கிடைக்கிறது என்றால், நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகி விடுகிறீர்கள். நீங்கள் என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகும் என்று தந்தை கூறுகிறார். இந்த விஷயத்தை உறுதிப்படுத்த வேண்டும். கடைசியாக இதே வசீகர மந்திரம் தான் பயன்படும். தங்களை ஆத்மா என்று உணருங்கள். இந்த சரீரம் அழியக் கூடியது என்ற இதே செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனம் ஆகிவிடுவீர்கள் என்பது தந்தையின் கட்டளை ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்து இருக்கிறீர்கள். கூடவே ஞானமும் இருக்கிறது. ஏனெனில், நீங்கள் படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல் இடை கடையை அறிந்துள்ளீர்கள். சுயம் ஆத்மாவில் முழு ஞானம் உள்ளது. நீங்கள் சுய தரிசன சக்கரதாரி ஆவீர்கள் அல்லவா! உங்களுக்கு இங்கு அமர்ந்த படியே நிறைய சம்பாத்தியம் ஆகிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு இரவு பகலாக சம்பாத்தியமே சம்பாத்தியம் ஆகும். நீங்கள் உண்மையான சம்பாத்தியம் செய்வதற்காக இங்கு வருகிறீர்கள். கூடவே வரக்கூடிய உண்மையான சம்பாத்தியம் வேறு எங்குமே ஆவதில்லை. இங்கு உங்களுக்கு வேறு எந்த தொழில் முதலியன கிடையாது. வாயு மண்டலம் கூட அதுபோல உள்ளது. நீங்கள் யோக பலத்தினாலே வாயு மண்டலத்தையும் துôய்மைப்படுத்துகிறீர்கள். நீங்கள் நிறைய சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் தங்களது சேவை செய்கிறார்களோ, அவர்களே பாரதத்தின் சேவை செய்கிறார்கள். பிறகு இந்த உலகம் கூட இருக்காது. நீங்களும் இருக்க மாட்டீர்கள். உலகமே புதியதாக ஆகி விடும். குழந்தைகளாகிய உங்களது புத்தியில் முழு ஞானம் உள்ளது. முந்தைய கல்பத்தில் யார் சேவை செய்தார்களோ அவர்களே இப்பொழுதும் செய்து கொண்டிருக் கிறார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். நாளுக்கு நாள் அநேகரை தங்களுக்குச் சமானமாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஞானத்தை கேட்டு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மயிர்க்கூச்செரிகிறது. கூறுகிறார்கள், இந்த ஞானம் இதுவரையிலும் யாரிடமிருந்தும் கேட்கவே இல்லை. பிராமணர்களாகிய உங்களிடம் தான் கேட்கிறார்கள். பக்தி மார்க்கத்திலோ முயற்சி ஒன்றும் இல்லை இதில் பழைய உலகம் முழுவதையும் மறக்க வேண்டி உள்ளது. இந்த எல்லை யில்லாத சந்நியாசத்தை தந்தை தான் செய்விக்கிறார். குழந்தைகளாகிய நீங்களும் கூட வரிசைக் கிரமமாகத்தான் உள்ளீர்கள். மகிழ்ச்சியும் கூட நம்பர் பிரகாரம் உள்ளது. ஒன்று போல இல்லை ஞானம் கூட ஒன்று போல இல்லை. மற்ற அனைத்து மனிதர்களும் தேகதாரிகளிடம் செல்கிறார் கள். இங்கு நீங்கள் தனக்கென்று தேகம் எவருக்கு இல்லையோ அவரிடம் வருகிறீர்கள்.

எந்த அளவு நினைவினுடைய முயற்சி செய்து கொண்டே இருப்பீர்களோ அந்த அளவு சதோபிர தானமாக (மிக உயர்ந்த நிலை) ஆகிக் கொண்டே செல்வீர்கள். மகிழ்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கும். இது ஆத்மா மற்றும் பரமாத்மாவின் துôய்மையான அன்பு ஆகும். அவர் இருப்பதும் நிராகாரமாக! உங்களுடைய துரு எந்த அளவு நீங்கிக் கொண்டு போகுமோ அந்த அளவு ஈர்ப்பு ஏற்படும். நாம் எவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று உங்களது அளவை நீங்கள் பார்க்க முடியும். இதில் ஆசனம் ஆகியவை செய்ய வேண்டிய விஷயம் இல்லை. ஹடயோகம் அல்ல; ஓய்வாக அமர்ந்து பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். படுத்தபடியே கூட நினைவு செய்ய முடியும். எல்லையில்லாத தந்தை கூறுகிறார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள் மற்றும் பாவங்கள் நீங்கிவிடும். ஆசிரியராகவும், சத்குருவாகவும் இருக்கும் உங்களது எல்லையில்லாத தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும். இதில் தான் மாயை தடை ஏற்படுத்துகிறது, நான் தந்தையின் நினைவில் இருந்து மகிழ்ச்சியுடன் உணவை உட்கொண்டேனா என்று பார்க்க வேண்டும். பிரியதரிசினிக்கு பிரிய தரிசன் கிடைத்துள்ளார் என்றால் நிச்சயமாக மகிழ்ச்சி ஏற்படும் அல்லவா? நினைவில் இருப்பதால் உங்களுக்கு நிறைய சேமிப்பு ஆகிக் கொண்டே போகும். குறிக்கோள் மிகவும் உயர்ந்தது, எப்படி இருந்த நீங்கள் எப்படி ஆகிறீர்கள்? முதலிலோ அறிவிலிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மிகவும் அறிவாளிகளாக ஆகி உள்ளீர்கள். உங்களது லட்சியம் எவ்வளவு முதல் தரமானதாக உள்ளது. நாம் பாபாவை நினைவு செய்து செய்து இந்த பழைய தோலை (சட்டையை) விடுத்து புதியதைப் பெறுவோம். கர்மாதீத் நிலை (கர்மங்களின் பிரபாவத்திலிருந்து விடுபட்ட நிலை) ஏற்படும் பொழுது பின் இந்த சட்டையை விட்டு விடுவோம். பக்கத்தில் வரவர வீடு நினைவிற்கு வருகிறது அல்லவா? பாபாவின் ஞானம் மிகவும் இனிமையானது. குழந்தை களுக்கு எவ்வளவு போதை ஏறி இருக்க வேண்டும். பகவான் இந்த ரதத்தில் வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். இப்பொழுது உங்களுக்கு முன்னேறும் கலை ஆகும். முன்னேறும் கலை ஆகும் பொழுது உங்கள் காரணமாக அனைவருக்கும் நன்மை ஏற்படுகிறது. நீங்கள் ஒன்றும் புது விஷயங்களைக் கேட்டுகொண்டிருக்கவில்லை.அநேக முறை கேட்டிருக்கிறீர்கள். அதையே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துள்ளீர்கள். கேட்பதாலேயே உள்ளுக்குள் மெய் மறந்தவராக ஆகிக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் யாருக்கும் தெரியாத படை வீரர்கள் ஆவீர்கள் மற்றும் மிகவும் பெயர் பெற்றவர்களாகவும் ஆவீர்கள்; நீங்கள் முழு உலகத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். அதனால் தான் தேவிகளுக்கு இவ்வளவு பூஜை நடக்கிறது. செய்பவர் கள் மற்றும் செய்விப்பவர்கள் இருவருக்கும் பூஜை ஆகிறது. தேவி தேவதா தர்மத்தினரின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். இந்த வழக்கம் இப்பொழுது வந்துள்ளது. நீங்கள் உங்களுக்கே திலகம் இட்டுக் கொள்கிறீர்கள். யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ அவர்கள் உதவி தொகையைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக ஆக்கு கிறார்கள். குழந்தைகள் நினைவு யாத்திரையில் நிறைய முயற்சி செய்ய வேண்டும். தங்களை சகோதர சகோதரர் என்று உணருங்கள். அப்பொழுது பெயர் ரூபத்தின் உணர்வு நீங்கி விட வேண்டும். இதில் தான் உழைப்பு உள்ளது. மிகவும் கவனம் கொடுக்க வேண்டும். வீண் விஷயங் களை ஒரு பொழுதும் கேட்கக் கூடாது. நான் என்ன கூறுகிறேனோ அதையே கேளுங்கள் என்று தந்தை கூறுகிறார். வீண் விஷயங்களைக் கேட்காதீர்கள். காதுகளை மூடிக் கொண்டு விடுங்கள். அனைவருக்கும் சாந்தி தாமம் மற்றும் சுக தாமத்தின் வழியைக் கூறிக் கொண்டே இருங்கள். எந்த அளவிற்கு யார் அநேகருக்கு வழி கூறுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு நன்மை ஏற்படுகிறது. சம்பாத்தியம் ஆகிறது. தந்தை வந்திருப்பதே அனைவருக்கும் அலங்காரம் செய்வ தற்கு மற்றும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குத் தான். தந்தை குழந்தைகளுக்கு எப்பொழுதும் உதவி செய்பவராக ஆகிறார். யார் தந்தைக்கு உதவியாளர் ஆகி இருக்கிறார்களோ அவர்களை தந்தையும் அன்புடன் பார்க்கிறார். யார் அநேகருக்கு வழி கூறுகிறார்களோ பின் பாபா கூட அவர்களை அதிகமாக நினைவு செய்கிறார். அவர்களுக்கு தந்தையின் நினைவின் ஈர்ப்பு ஏற்படு கிறது. நினைவின் மூலமாகவே துரு நீங்கிக் கொண்டே போகும். தந்தையை நினைவு செய்வது என்றாலே வீட்டை நினைவு செய்வது. எப்பொழுதும் பாபா, பாபா என்று கூறிக் கொண்டே இருங்கள்; இது பிராமணர்களின் ஆன்மீக யாத்திரை ஆகும். பரலோகத் தந்தையை நினைவு செய்து செய்து வீடுபோய் சேர்ந்து விடுவீர்கள். எந்த அளவிற்கு ஆத்ம உணர்வுடையவர் ஆவதற் கான முயற்சி செய்வீர்களோ பின் கர்ம இந்திரியங்கள் வசப்படுத்தப்பட்டுக் கொண்டே போகும். கர்ம இந்திரியங்களை வசப்படுத்துவதற்கான ஒரே ஒரு உபாயம் நினைவு செய்வதாகும். நீங்கள் ஆன்மீக சுயதரிசன சக்கரதாரி பிராமண குல பூஷணர்கள் ஆவீர்கள். இது உங்களுடைய சர்வோத்தம சிரேஷ்ட குலம் ஆகும். பிராமண குலம் தேவதைகளின் குலத்தை விட உயர்ந்த தாகும். ஏனெனில் உங்களுக்கு தந்தை கற்பிக்கிறார். நீங்கள் உலக அரசாட்சியின் ஆஸ்தியை பாபாவிடமிருந்து பெறுவதற்காக தந்தையினுடையவர் ஆகி உள்ளீர்கள். பாபா என்று கூறும் பொழுதே ஆஸ்தியின் நறுமணம் வருகிறது. சிவனை எப்பொழுதும் பாபா, பாபா என்று கூறுகிறார்கள். சிவபாபா தான் சத்கதி வள்ளல் ஆவார். வேறு யாரும் சத்கதி அளிக்க முடியாது. அரை கல்பத்திற்கு ராஜ்யம் அளித்து விட்டு செல்லும் உண்மையான சத்குரு ஒரே ஒரு நிராகார் ஆவார். எனவே நினைவு செய்வது தான் அடிப்படை விஷயம் ஆகும். கடைசி நேரத்தில் எந்த ஒரு சரீர உணர்வு அல்லது பணம் செல்வம் ஆகியவை நினைவிற்கு வரக்கூடாது. இல்லா விட்டால் புனர் ஜென்மம் (மறுபிறவி) எடுக்க வேண்டி வரும். பக்தியில் காசி கல்வெட்டில் பலி ஆகிறார்கள். நீங்களும் பலி ஆகியுள்ளீர்கள். அதாவது தந்தையினுடையவர் ஆகி உள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் கூட பலி ஆகும் பொழுது எல்லா பாவங்களும் நீங்கி விட்டன என்று கருதுகிறார்கள். ஆனால் யாருமே திரும்பிப் போக முடியாது. எல்லாரும் மேலிருந்து வந்து விட்ட பிறகு விநாசம் ஆகும். தந்தையும் செல்வார். நீங்களும் செல்வீர்கள். மற்றபடி பாண்டவர்கள் மலைகளில் சென்று உருகிவிட்டார்கள் என்பது தற்கொலை செய்து கொண்டது போல ஆகிவிட்டது. தந்தை நல்ல முறையில் புரிய வைக்கிறார். குழந்தைகளே!, அனைவரின் சத்கதி தாதா (வள்ளல்) நான் ஒருவன் ஆவேன். எந்த ஒரு தேகதாரியும் உங்களுக்கு சத்கதி செய்ய முடியாது. பக்தியில் படி இறங்கிக் கொண்டே வந்துள்ளீர்கள். கடைசியில் தந்தை வந்து வலு ஏற்றுகிறார் இதற்கு திடீரென்று, எல்லையில்லாத சுகத்தின் லாட்டரி கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. அது குதிரை பந்தயம் இது ஆத்மாக்களின் பந்தயம். ஆனால் மாயையின் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுவிடுகின்றன அல்லது கைவிட்டு போய் விடுகிறார்கள். மாயை புத்தி யோகத்தைத் துண்டித்து விடுகிறது. காமத்திடம் தோற்று விட்டார்கள் என்றால் செய்த சம்பாத்தியம் இல்லாமல் போய் விடுகிறது. காமம் பெரிய பூதம் ஆகும். காமத்தின் மீது வெற்றி அடையும் பொழுது உலகத்தை வென்றவர் ஆவீர்கள். லட்சுமி நாராயணர் உலகத்தை வென்றவர்களாக இருந்தார்கள். இந்த கடைசி பிறவியில் அவசியம் தூய்மையாக ஆக வேண்டும். அப்பொழுது வெற்றி ஆகும் என்று தந்தை கூறுகிறார். இல்லாவிட்டால் தோற்றுப் போய் விடுவீர்கள். இது மரண உலகத்தின் கடைசி பிறவி. அமர லோகத்தில் 21 பிறவிகள் மற்றும் மரண லோகத்தில் 63 பிறவிகளின் ரகசியத்தை தந்தை தான் புரிய வைக்கிறார். நாம் லட்சுமி நாராயணர் ஆவதற்கான தகுதி உடையவராக உள்ளோமா என்று இப்பொழுது உங்கள் இதயத்தைக் கேளுங்கள். எந்த அளவிற்கு தாரணை ஆகிக் கொண்டே இருக்குமோ அந்த அளவு குஷியும் இருக்கும். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் மாயை நிலைக்க விடுவதில்லை.

இந்த மதுபனின் பிரபாவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். முக்கிய பேட்டரி இங்குள்ளது. சேவை செய்யும் குழந்தைகள் தான் தந்தைக்கு மிகவும் பிரியமானவர்களாக உள்ளார்கள். நல்ல சேவை செய்யும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து பாபா அவர்களுக்கு சக்தி அளிக்கிறார். அவர்களும் அவசியம் பாபாவை நினைவு செய்கிறார்கள். சேவை செய்யும் குழந்தைகளை பாப்தாதா இருவருமே நினைவு செய்கிறார்கள். சக்தி அளிக்கிறார்கள். நினைவு செய்தீர்கள் என்றால் நினைவிற்குப் பதில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு புறம் முழு உலகம் உள்ளது மறு பக்கம் உண்மையான பிராமணர்களாகிய நீங்கள் உள்ளீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையான அனைவரின் சத்கதி தாதாவிற்கு நீங்கள் குழந்தைகள் ஆவீர்கள். உங்களது இந்த திவ்யமான பிறவி வைரத்திற்குச் சமானமானது. நம்மை சோழியிலிருந்து வைரமாகவும் அவரே ஆக்குகிறார். அரை கல்பத்திற்கு எவ்வளவு சுகம் அளித்து விடுகிறார் என்றால் பின் அவரை நினைவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பாபா கூறுகிறார் குழந்தைகளே! குவியல் குவியலாக உங்களுக்கு செல்வம் அளிக்கிறேன் நீங்கள் எல்லா வற்றையும் இழந்து விட்டு அமர்ந்துள்ளீர்கள். எனது கோவிலில் மட்டுமே எவ்வளவு வைரம் வைடூரியங்களை பதித்தீர்கள். இப்பொழுது பாருங்கள், வைரத்திற்கு எவ்வளவு விலை உள்ளது. முந்தைய காலத்தில் வைரங்கள் மீது கூட உபரி கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுதோ காய்கறிகள் மீது கூட கிடைப்பதில்லை. எப்படி இராஜ்யம் பெற்றோம் எப்படி இழந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் அடைந்து கொண்டிருக்கிறோம். இந்த ஞானம் மிகவும் அதிசயமானது. ஒருவருடைய புத்தியில் பதிவது கடினமாக உள்ளது. இராஜ்யம் பெற வேண்டும் என்றால், ஸ்ரீமத் படி முழுமையாக நடக்க வேண்டும். தங்களுடைய வழி பயன்படாது. உயிருடனிருந்தே வான பிரஸ்தத்தில் (சரீரத்திலிருந்து விலகி) செல்ல வேண்டும் என்றால் எல்லாவற்றையும் இவருக்கு அளிக்க வேண்டி இருக்கும். வாரிசாக ஆக்க வேண்டி இருக்கும். பக்தி மார்க்கத்தில் கூட வாரிசாக ஆக்குகிறார்கள். தானம் செய்கிறார்கள். ஆனால் சொற்ப காலத்திற்கு இங்கோ பல பிறவிகளுக்கு இவரை வாரிசாக ஆக்க வேண்டி உள்ளது. தந்தையைப் பின் பற்றுங்கள் (பாலோ பாதர்) என்ற பாடலும் உள்ளது. யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைகிறார்கள். எல்லையில்லாத தந்தையினுடையவர் ஆகும் பொழுதே எல்லையில்லாத ஆஸ்தி பெறுவீர்கள். சிவபாபா வள்ளல் ஆவார். இந்த பண்டகசாலை அவருடையது. பகவானின் பெயரில் தானம் செய்பவர்களுக்கு அடுத்த பிறவியில் அற்பகால சுகம் கிடைக்கிறது. அது மறைமுகமானது. இது நேரிடையானது. சிவ பாபா 21 பிறவிகளுக்கு அளிக்கிறார். ஒரு சிலரது புத்தியில் நாம் சிவபாபாவிற்குக் கொடுக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. இது அவமதிப்பது போல. கொடுப்பதே பெறுவதற்காகத்தான். இது பாபாவின் களஞ்சியம் ஆகும். காலன் (மரணம்) விலகிப் போய் விடுகிறது. குழந்தைகள் அமரலோகத்திற்காக படிக்கிறார்கள். இது முட்களின் காடு ஆகும். பாபா மலர்களின் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே குழந்தைகளுக்கு அதிகமான மகிழ்ச்சி இருக்க வேண்டும். தெய்வீக குணங் களையும் தாரணை செய்ய வேண்டும். தந்தை எவ்வளவு அன்புடன் குழந்தைகளை மலர் போல மென்மையாக ஆக்குகிறார். பாபா மிகவும் அன்புடன் புரிய வைக்கிறார். உங்களுக்கு நண்மை செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் தெய்வீக குணங்களையும் தாரணை செய்யுங்கள் மற்றும் யாருடைய அவகுணத்தையும் பார்க்காதீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் குட்மார்னிங். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எல்லையில்லாத தந்தையிடமிருந்து சக்தி பெறுவதற்கு அவரது உதவியாளர் ஆக வேண்டும். முக்கிய பேட்டரியுடன் தங்கள் தொடர்பை இணைத்து வைக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் நேரத்தை வீணடிக்கக் கூடாது.

2. உண்மையான சம்பாத்தியம் செய்ய மற்றும் பாரதத்திற்கு உண்மையான சேவை செய்ய ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். ஏனெனில் நினைவினால் வாயு மண்டலம் சுத்தமாகிறது. ஆத்மா சதோ பிரதானமாக ஆகிறது. அளவற்ற மகிழ்ச்சியின் அனுபவம் ஆகிறது. கர்ம இந்திரியங்கள் வசத்திற்குள் வந்து விடுகின்றன.

வரதானம்:
சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றத்தின் காரியத்தில் மனதுக்குப் பிடித்த வெற்றி பெறக்கூடிய சித்தி சொரூபம் ஆகுக.

ஒவ்வொருவரும் சுய மாற்றத்தின் மூலம் உலகை மாற்றுவதற்கான சேவையில் ஈடுபட்டிருக் கிறீர்கள். அனைவரின் மனதிலும் இதே ஊக்கம்-உற்சாகம் உள்ளது -- இந்த உலகத்தை மாற்றியே தீர வேண்டும். மேலும் நிச்சயமும் உள்ளது -- மாற்றம் நிகழ்ந்தே தீரும். எங்கே தைரியம் உள்ளதோ, அங்கே ஊக்கம்-உற்சாகம் உள்ளது. சுய மாற்றத்தின் மூலம் தான் உலக மாற்றத்தின் காரியத்தில் மனதுக்குப் பிடித்த வெற்றி கிடைக்கிறது. ஆனால் எப்போது ஒரே சமயத்தில் விருத்தி, வைப்ரேசன் மற்றும் வாய்மொழி மூன்றும் சக்திசாலியாக இருக்கிறதோ, அப்போது தான் இந்த வெற்றி ஏற்படும்.

சுலோகன்:
எப்போது வார்த்தையில் அன்பும் கட்டுப்பாடும் (ஒழுங்குமுறை) இருக்குமோ, அப்போது சக்தி சேமிப்பாகும்.