03-05-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த துக்கதாமத்தை உயிருடன் இருந்து கொண்டே விவாகரத்து செய்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளை தந்தை எந்த ஒரு சிறிய முயற்சியை செய்யச் சொல்கிறார்?

பதில்:
பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! காமம் மிகப் பெரிய எதிரியாகும். இதன் மீது வெற்றி அடையுங்கள். இந்த சிறிய முயற்சியை மட்டுமே செய்யச் சொல்கிறேன். நீங்கள் சம்பூர்ண பாவனமாக ஆக வேண்டும். பதீதத்திலிருந்து பாவனம் என்றால் பாரஸ் (இரும்பைத் தங்கமாக்கும் விசேட கல்) ஆவதாகும். பாரஸ் ஆகக் கூடியவர்கள் கற்களாக ஆக முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மலர்களாக ஆகின்ற பொழுது தந்தை உங்களை கண்களில் உட்கார வைத்து கூடவே அழைத்துச் செல்வார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நாம் பிராமணர்கள் தான் தேவதைகளாக ஆவோம் என்பதை குழந்தைகள் கண்டிப்பாக புரிந்திருக்கின்றனர். இந்த நம்பிக்கை உறுதியாக இருக்கின்றதல்லவா! ஆசிரியர் யாருக்கு படிப்பு கற்பிக்கின்றாரோ அவர் கண்டிப்பாக தனக்குச் சமமாக ஆக்கி விடுவார். இது நம்பிக்கைக்கான விசயமாகும். கல்ப கல்பத் திற்கும் தந்தை வந்து புரிய வைக்கின்றார். நரகவாசிகளாகிய நம்மை சொர்க்கவாசிகளாக ஆக்கு கின்றார். முழு உலகில் உள்ளவர்களையும் உருவாக்கக் கூடியவர் யாராவது ஒருவர் இருப்பார் அல்லவா! தந்தை சொர்க்கவாசிகளாக ஆக்குகின்றார். இராவணன் நரகவாசிகளாக ஆக்குகின்றான். இந்த நேரத்தில் இராவண இராஜ்யமாக இருக்கின்றது. சத்யுகத்தில் இராம இராஜ்யமாகும். இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் இருக்கின்றாரெனில், இராவண இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவரும் நிச்சயமாக இருப்பார். இராமர் என்று பகவானை கூறப்படு கின்றது. பகவான் புது உலகை ஸ்தாபனை செய்கின்றார். ஞானம் என்பது மிகவும் எளிது, எதுவும் பெரிய விசயமல்ல. ஆனால் கல்புத்தியாக இருக்கின்ற காரணத்தினால் தங்கப்புத்தியாக ஆவது அசம்பவம் என்று நினைக்கின்றனர். நரகவாசியிலிருந்து சொர்க்கவாசிகளாக ஆவதில் அதிக முயற்சி தேவைப்படுகின்றது. ஏனெனில் மாயையின் பிரபாவம் இருக்கின்றது. எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள் 50 மாடி, 100 மாடிகளை உருவாக்குகின்றனர். சொர்க்கத்தில் இவ்வளவு மாடிகள் இருக்காது. இன்றைய நாட்களில் இங்கு தான் இவ்வாறு உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். சத்யுகத்தில் இங்கு உருவாக்கும் கட்டிடங்கள் போன்று அங்கு இருக்காது என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். தந்தை சுயம் புரிய வைக்கின்றார் - முழு உலகிலேயே மிகப் பெரிய மரம் இருப்பதால் அங்கு மாடிகள் போன்றவை உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிகமான நிலங்கள் இருக்கும். இங்கு நிலங்களே கிடையாது. ஆகையால் நிலத்தின் விலை மிகவும் அதிகரித்து விட்டது. அங்கு நிலத்திற்கு விலையே கிடையாது, நகராட்சி வரிகளும் இருக்காது. யாருக்கு எவ்வளவு நிலங்கள் தேவையே எடுத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு தந்தையின் ஞானத்தின் மூலம் அங்கு உங்களுக்கு அனைத்து சுகங்களும் கிடைத்து விடுகின்றது. மனிதர்கள் 100 மாடி கட்டிடங்கள் கட்டுகின்றார்கள் எனில், அதற்கு பணம் செலவாகின்றதல்லவா! அங்கு செலவே ஆகாது. அளவற்ற செல்வங்கள் இருக்கும். பணத்திற்கு மதிப்பு இருக்காது. அதிகமான செல்வம் இருந்தால் என்ன செய்வது! தங்கம், வைரம், முத்துக்களினால் மாளிகைகளை கட்டி விடுகின்றனர். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு அறிவு கிடைத்திருக்கின்றது! அறிவு மற்றும் அறிவற்றிருப்பதற்கான விசயமாகும். சதோ புத்தி மற்றும் தமோ புத்தியாகும். சதோ பிரதானமானவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாகவும், தமோ குண புத்தியடையவர்கள் நரகத்திற்கு எஜமானர்களாகவும் இருக்கின்றனர். இது சொர்க்கம் கிடையாது. இது கொடூரமான நரகமாகும். மிகவும் துக்கமானவர்களாக இருப்பதால் தான் பகவானை அழைக்கின்றனர். பிறகு மறந்து விடுகின்றனர். ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று கருத்தரங்கம் போன்றவைகள் செய்து எவ்வளவோ தலையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது! இவர்கள் தங்களுக்குள் ஒன்று சேர முடியாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இந்த முழு மரமும் இற்றுப் போய் விட்டது. பிறகு மீண்டும் புதியது உருவாகின்றது. கலியுகத்திலிருந்து சத்யுகமாக எப்படி உருவாகின்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இந்த ஞானத்தை தந்தை இப்பொழுது தான் உங்களுக்கு புரிய வைக்கின்றார். சத்யுகவாசியிலிருந்து பிறகு கலியுக வாசிகளாக ஆகின்றீர்கள், பிறகு நீங்கள் சங்கமயுகவாசி ஆகி சத்யுகவாசிகளாக ஆகின்றீர்கள். இத்தனை பேரும் சத்யுகத்திற்குச் செல்வீர்களா? என்று கேட்கின்றனர். இல்லை, யார் சத்தியமான சத்திய நாராயணன் கதையை கேட்கின்றார்களோ, அவர்களே சொர்க்கத்திற்குச் செல்வார்கள். மற்ற அனைவரும் சாந்திதாமத்திற்கு சென்று விடுவார்கள். துக்கதாமமானது இருக்கவே இருக்காது. ஆக இந்த துக்கதாமத்தை உயிருடன் இருக்கின்ற பொழுதே விவாகரத்து செய்து விட வேண்டும். எவ்வாறு விவாகரத்து செய்வது என்ற யுக்தியை தந்தை கூறுகின்றார். இந்த முழு உலகில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். நாம் அந்த தந்தையிடமிருந்து உலக இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக் கின்றோம். நாடகப்படி மாற்றம் என்பது கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இது பழைய உலகமாகும். இதனை சத்யுகம் என்று எப்படிக் கூற முடியும்? சத்யுகம் எப்படி இருக்கும்? என்று மனிதர்களுக்கு முற்றிலும் தெரியாது. யார் அதிகமாக பக்தி செய்திருக்கின்றார்களோ அவர்களே இந்த ஞானம் அடைவதற்குத் தகுதியானவர்கள் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். அவர்களுக்கே புரிய வைக்க வேண்டும். மற்றபடி யார் இந்த குலத்தைச் சார்ந்தவர்களாக இல்லையோ அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். பிறகு ஏன் நேரத்தை வீண் ஆக்க வேண்டும்? நமது வம்சத்தைச் சார்ந்தவர்களாக இல்லையெனில் எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா யார்? என்பதை நான் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி விடுகின்றனர். ஆக அப்படிப்பட்டவர்களிடத்தில் ஏன் முயற்சி செய்ய வேண்டும்? பாபா புரிய வைத்திருக்கின்றார் - மேலே பகவானின் மகாவாக்கியம் என்று எழுதப்பட்டிருக்கின்றது. நான் வருவதே கல்ப கல்பத்தின் புருஷோத்தம சங்கமயுகத்தில், சாதாரண மனித உடலில் வருகின்றேன். யார் தனது பிறப்புகளைப் பற்றி அறிந்திருக்கவில்லையோ நான் கூறுகின்றேன். முழு 5 ஆயிரம் ஆண்டிற்கான நடிப்பு யாருக்கு இருக்கின்றது என்று நான் கூறுகின்றேன். யார் முதல் நம்பரில் வந்தனரோ அவர்களது நடிப்பு தான் இருக்குமல்லவா! சத்யுகத்தின் முதல் இளவரசர் என்ற மகிமையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாடுகின்றனர். அவரே 84 பிறப்புகள் எடுத்த பின்பு என்ன ஆகின்றார்? முதல் பிச்சைக்காரர். பிச்சைக்கார நிலையிலிருந்து இளவரசர். பிறகு மீண்டும் இளவரசர் நிலை யிலிருந்து பிச்சைக்காரர். இளவரசரிலிருந்து பிச்சைக்காரராக எப்படி ஆகின்றார்? என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். பிறகு தந்தை வந்து சோழியிலிருந்து வைரம் போன்று ஆக்குகின்றார். வைரம் போன்று இருக்கக் கூடியவரே பிறகு சோழி போன்று ஆகின்றார். மறு பிறப்பு எடுக்கின்றனர் அல்லவா! மிக அதிகமான பிறப்புகள் எடுப்பது யார்? என்பதை நீங்கள் அறிந்திருக் கின்றீர்கள். முதன் முதலில் ஸ்ரீ கிருஷ்ணரைத் தான் ஏற்றுக் கொள்வர். அவரது இராஜ்ஜியமும் இருக்கின்றது. மிக அதிக பிறப்பும் அவருடையதாக இருக்கும். இது மிகவும் எளிமையான விசயமாகும். ஆனால் மனிதர்கள் இந்த விசயங்களில் கவனம் கொடுப்பதில்லை. தந்தை புரிய வைக்கின்ற பொழுது அதிசயப்படுகின்றனர். முதலிலிருந்து கடைசி வரைக்கும் தந்தை மிகச் சரியாக புரிய வைக்கின்றார். முதலில் வைரம் போன்று, கடைசியில் சோழி போன்று. மீண்டும் வைரம் போன்று ஆக வேண்டும், பாவனம் ஆக வேண்டும். இதில் என்ன கஷ்டம் இருக்கின்றது? பரலௌகீக தந்தை சட்டம் உருவாக்குகின்றார் - காமம் மிகப் பெரிய எதிரி. நீங்கள் பதீதமாக எப்படி ஆனீர்கள்? விகாரத்தில் செல்வதன் மூலம். ஆகையால் தான் பதீத பாவனனே வாருங்கள் என்று அழைக்கின்றனர். ஏனெனில் தந்தை எப்பொழுதும் தங்கப்புத்தியுடன் இருக்கின்றார். அவர் ஒருபொழுதும் கல்புத்தியுடையவராக ஆவது கிடையாது. அவரது தொடர்பானது முதல் நம்பர் பிறப்பில் வரக்கூடியவரிடத்தில் ஏற்பட்டது. அதிக தேவதைகள் உள்ளனர், ஆனால் மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது.

கிறிஸ்துவிற்கு 3 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு சொர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அது பின் நாட்களில் வந்ததால் அதற்கு சக்தி இருக்கின்றது. அனைவரும் கற்றுக் கொள்வதற்காக அவர்களிடத்தில் செல்கின்றனர். ஏனெனில் அவர்களிடத்தில் புத்துணர்வான (ச்ழ்ங்ள்ட்) புத்தியிருக் கின்றது. அவர்களுக்கு முன்னேற்றமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சதோ, ரஜோ, தமோவில் வருகின்றனர் அல்லவா! அனைத்தையும் அயல்நாட்டிலிருந்து தான் கற்றுக் கொள்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். சத்யுகத்தில் மாளிகைகள் உருவாக்குவதில் நேரம் அதிகம் தேவைப்படாது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஒருவரது புத்தியில் வந்தது, பிறகு விருத்தி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருவர் உருவாக்கி விட்டால் பிறகு பலர் உருவாக்கி விடுகின்றனர். புத்தியில் வந்து விடுகின்றதல்லவா! உங்களிடத்தில் உயர்ந்த விஞ்ஞானத்தின் புத்தியிருக்கும். உடனடியாக மாளிகையை கட்டிவிடுவீர்கள். இங்கு கட்டிடம் அல்லது கோயில் கட்டுவதற்கு 12 மாதம் ஏற்படுகின்றது. அங்கு பொறியாளர் (என்ஜினியர்) மிகவும் புத்திசாலியாக இருப்பார். அது தான் தங்கயுகமாகும். கல் போன்றவைகள் இருக்கவே இருக்காது. இப்பொழுது நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள், நினைத்துக் கொண்டிருப்பீர்கள், நான் இந்த சரீரத்தை விட்டு விடுவேன், பிறகு வீட்டிற்குச் செல்வேன், அங்கிருந்து பிறகு சத்யுகத்தில் யோக பலத்தினால் பிறப்பு எடுப்பேன். குழந்தைகளுக்கு ஏன் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை? ஏன் சிந்திப்பதில்லை? யார் மிகவும் சேவாதாரிக் குழந்தைகளாக இருக்கின்றார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். சட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்து விட்டால் நான் இது செய்வேன், இது செய்வேன் என்ற சிந்தனை புத்தியில் ஓடுமல்லவா! நான் இந்த சரீரத்தை விட்டு விட்டு இவ்வாறு ஆகுவேன் என்பதை நீங்களும் புரிந்திருக்கின்றீர்கள். நினைவின் மூலமாகவே உங்களது ஆயுள் அதிகரிக்கும். இப்பொழுது எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாக இருக்கின்றீர்கள். இந்த கிரேட் மிகவும் உயர்ந்ததாகும். நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு வேறு எந்த சம்பந்தமும் கிடையாது. சகோதரன், சகோதரி என்பதிலிருந்தும் உயர்வாக ஆக்கி விட்டார். சகோதரன் சகோதரன் என்று நினையுங்கள். இந்த பயிற்சி அதிகமாக செய்ய வேண்டும். சகோதரன் வசிக்கக் கூடிய இடம் எது? இந்த சிம்மாசனத்தில் அழிவற்ற ஆத்மா இருக்கின்றது. அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்த சிம்மாசனம் மிகப் பெரியதாகும். அனைவரை யும் விட உங்களது சிம்மாசனம் மிகப் பெரியதாக இருக்கின்றது. ஆத்மா இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றது. பிருகுட்டியின் (புருவ மத்தி) நடுவில் என்ன இருக்கின்றது? இது புத்தியினால் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். ஆத்மா முற்றிலும் சூட்சுமமானதாகும், நட்சத்திரம் போன்று இருக்கின்றது. நானும் பிந்துவாக இருக்கின்றேன் என்று தந்தையும் கூறுகின்றார். நான் உங்களை விட பெரிதாகவா இருக்கிறேன்! கிடையாது. நாம் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். ஆகையால் தங்களை பாயி பாயி (சகோதரன்-சகோதரன்) ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். தந்தை உங்களுக்கு எதிரில் அமர்ந்து படிப்பிக்கின்றார். நாள் போகப் போக மேலும் கவர்ச்சி ஏற்படும். இந்த விக்னங்களும் கூட நாடகப்படி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இப்பொழுது தந்தை கூறுகின்றார் - நீங்கள் பதீதமாக ஆகக் கூடாது. இது சட்டமாகும். இப்பொழுது அதிக தமோ பிரதானமாக ஆகியிருக்கின்றனர். விகாரம் இல்லாமல் இருக்க முடியாது.. சாராயம் குடிக்காதீர்கள் என்று அரசாங்கம் கூறினாலும் சாராயம் குடிக்காமல் இருக்க முடிவதில்லை. பிறகு அவர்களுக்கே சாராயம் குடிக்கச் செய்து இந்த இடத்தில் அணுகுண்டுடன் விழு என்று கட்டளை கொடுக்கப்படுகின்றது. எவ்வளவு நஷ்டம் ஏற்படுகின்றது! நீங்கள் இங்கு அமர்ந்து அமர்ந்து உலகிற்கே எஜமானர்களாக ஆகின்றீர்கள். அவர்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து முழு உலகையும் விநாசம் செய்வதற்காக அணுகுண்டை விடுகின்றனர். (எப்படியெல்லாம் இலஞ்சம் கொடுக் கின்றனர்!) நீங்கள் இங்கு அமர்ந்து கொண்டே பாபாவை நினைவு செய்வதால் உலகிற்கு எஜமானர் களாக ஆகி விடுகின்றீர்கள். ஆகையால் எப்படியாவது தந்தையை கண்டிப்பாக நினைவு செய்ய வேண்டும். இதில் ஹடயோகம் செய்ய அல்லது ஆசனம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. பாபா எந்த கஷ்டமும் கொடுப்பது கிடையாது. எப்படி வேண்டுமென்றாலும் அமருங்கள், ஆனால் நான் மிகவும் பிரியமான குழந்தை என்பதை மட்டும் நினைவு செய்யுங்கள். வெண்ணெயிலிருந்து முடிவு எடுப்பது போன்று உங்களுக்கு இராஜ்யம் கிடைக்கின்றது. விநாடியில் ஜீவன் முக்தி என்று பாடப் பட்டிருக்கின்றது. எங்கு வேண்டுமென்றாலும் அமருங்கள், சுற்றுங்கள், ஆனால் தந்தையை நினைவு செய்யுங்கள். தூய்மையாகாமல் எப்படிச் செல்வீர்கள்? இல்லையெனில் தண்டனைகளை அடைய வேண்டியிருக்கும். தர்மராஜரிடத்தில் செல்லும் பொழுதுதான் அனைவரின் கணக்கு வழக்குகளும் முடிவடையும். எந்த அளவிற்கு தூய்மையாகின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியடைவீர்கள். அசுத்தமாக இருந்தீர்கள் எனில் காய்ந்த ரொட்டி சாப்பிடுவீர்கள். எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்கின்றீர்களோ பாவங்கள் அழியும். இதில் செலவிற்கான விசயம் ஏதுமில்லை. வீட்டிலேயே இருங்கள், தந்தையிடமிருந்தும் மந்திரத்தை அடையுங்கள். இது மாயாவை வசப்படுத்துவதற்கான மந்திரம் - மன்மனாபவ. இந்த மந்திரம் அடைந்து விட்டீர் களா, பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள். வாயால் எதுவும் கூற வேண்டாம். பாபா மற்றும் ஆஸ்தி, இராஜ்ஜியத்தை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நாம் சதோ பிரதானம் ஆகிவிடுவோம், பாவங்கள் அழிந்து விடும் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். பாபா தனது அனுபவத்தையும் கூறுகின்றார் - சாப்பிடுவதற்காக அமருகின்றேன், நான் பாபாவை நினைவு செய்து சாப்பிடுகின்றேன், பிறகு உடனே மறந்து விடுகின்றேன். ஏனெனில் யாருடைய தலையில்....... என்று பாடப்பட்டிருக்கின்றது. இந்த ஆத்மா அதிகமாக சேவை செய்கின்றது, அவரை நினைவு செய்ய வேண்டும் போன்ற எத்தனை எண்ணங்களை உருவாக்க வேண்டியிருக்கின்றது! சேவாதாரி குழந்தைகள் மீது மிகவும் அன்பு செலுத்துகின்றார். இந்த சரீரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய ஆத்மாவை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்கும் கூறப்படுகின்றது. இங்கு நீங்கள் வருவதே சிவபாபாவிடத்தில். தந்தை அங்கிருந்து கீழே வந்திருக்கின்றார். பகவான் வந்திருக் கின்றார் என்று நீங்கள் அனைவருக்கும் கூறுகின்றீர்கள். ஆனால் புரிந்து கொள்வது கிடையாது. யுக்தியுடன் கூற வேண்டியிருக்கின்றது. எல்லைக்குட்பட்டவர் மற்றும் எல்லையற்றவர் என இரு தந்தைகள் உள்ளனர். இப்பொழுது எல்லையற்ற தந்தை இராஜ்யத்தை கொடுத்துக் கொண்டிருக் கின்றார். பழைய உலகின் விநாசமும் எதிரில் இருக்கின்றது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனை, பல தர்மத்தின் விநாசம் ஏற்படுகின்றது. தந்தை கூறுகின்றார் - என் ஒருவரை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். இது யோக அக்னியாகும். இதன் மூலம் நீங்கள் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். இந்த முறையை தந்தை தான் கூறியிருக்கின்றார். தந்தை மலர்களாக ஆக்கி, கண்களில் அமர வைத்து அழைத்துச் செல்வார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். எந்தக் கண்கள்? ஞானக் கண்கள். ஆத்மாக்களை அழைத்துச் செல்கின்றார். கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும் என்று நினைக் கின்றனர், ஆனால் அதற்கு முன்பு ஏன் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடையக் கூடாது? மிக உயர்ந்த வருமானம் ஆகும். தந்தையை மறப்பதன் மூலம் பிறகு நஷ்டமும் அதிகமாக இருக்கும். உறுதியான வியாபாரிகளாக ஆகுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் மட்டுமே ஆத்மா தூய்மையாக ஆகும். பிறகு ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுத்துக் கொள்ளும். ஆக தந்தை கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! ஆத்ம அபிமானிகளாக ஆகுங்கள். இந்தப் பழக்கத்தை உறுதியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையிடத்தில் படித்துக் கொண்டே இருந்தால் கஷ்டங்கள் நீங்கி விடும், சிவாலயத்திற்கு சென்று விடுவீர்கள். சந்திரகாந்த வேதாந்தத்திலும் இந்தக் கதை இருக்கின்றது. படகு எப்படி செல்கின்றது? இடையில் இறங்குகின்றனர், எந்த பொருளிலாவது உள்ளம் ஈடுபட்டு விடுகின்றது. பிறகு படகு சென்று விடுகின்றது. இந்த பக்திமார்கத்தின் சாஸ்திரம் மீண்டும் உருவாகும், நீங்கள் படிப்பீர்கள். பாபா வருகின்ற பொழுது பிறகு இவையனைத்தையும் விட்டு விடுவீர்கள். அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். பாரதத்தின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சி எப்படி ஏற்படுகின்றது? என்பது மிகத் தெளிவாக இருக்கின்றது. இவர் கருப்பாக மற்றும் வெள்ளையாக ஆகின்றார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. இவர் ஒருவர் மட்டுமே ஆவதில்லை. இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். கருப்பு மற்றும் வெள்ளை கிருஷ்ணரையும் புரிந்து கொள்ள வேண்டும். சொர்க்கத்திற்குச் செல்கின்றார் எனில் நரகத்தை எட்டி உதைக்கின்றார். இது சித்திரத்தில் தெளிவாக இருக்கின்றதல்லவா! உங்களது இராஜ்ஜியத்திற்கான சித்திரமும் உருவாக்கப் பட்டிருக்கின்றது. நல்லது.

இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவின் கட்டளைகளை பாலனை செய்வதற்காக நான் ஆத்மா சகோதரன்-சகோதரன் என்ற நினைவில் இருக்கின்றேன், பிருகுட்டியின் (புருவ மத்தியில்) நடுவில் நான் வாசம் செய்கின்றேன், நான் எல்லையற்ற தந்தையின் குழந்தை, இது என்னுடைய ஈஸ்வரிய குடும்பம் என்ற நினைவுகளில் இருக்க வேண்டும். ஆத்ம அபிமானியாக ஆகக் கூடிய பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

2. தர்மராஜரின் தண்டனையிலிருந்து விடுபடுவதற்காக தனது அனைத்து கணக்கு வழக்கு களையும் முடிக்க வேண்டும். மாயாவை வசப்படுத்துவதற்கான எந்த மந்திரம் கிடைத்திருக் கின்றது, அதனை நினைவு செய்து சதோ பிரதானமாக ஆக வேண்டும்.

வரதானம்:
பிந்து ரூபத்தில் நிலைத்திருந்து மற்றவர்களுக்கும் நாடகம் என்ற பிந்துவின் நினைவு ஏற்படுத்தக் கூடிய தடைகளை வென்றவர் (விக்ன விநாசக்) ஆகுக.

எந்தக் குழந்தைகள் எந்த ஒரு விசயத்திலும் கேள்வி எழுப்பவில்லையோ, சதா பிந்து ரூபத்தில் நிலைத்திருந்து ஒவ்வொரு காரியத்தில் மற்றவர்களுக்கும் நாடகத்தின் பிந்துவை நினைவுபடுத்துகிறார்களோ அவர்கள் தான் விக்ன விநாசக் என்று கூறப்படுகின்றனர். அவர்கள் மற்றவர்களையும் சக்திசா-யாக்கி வெற்றி என்ற இலட்சியத்தின் நெருக்கத்தில் அழைத்து வருவார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட வெற்றியின் பிராப்தியைப் பார்த்து குஷியடைந்து விடமாட்டார்கள். ஆனால் எல்லையற்ற வெற்றி மூர்த்தியாக இருப்பார்கள். சதா ஏக்ரஸ். ஒரு சிரேஷ்ட ஸ்திதியில் நிலைத்திருப்பார்கள். அவர்கள் தனது வெற்றியின் சுய ஸ்திதியின் மூலம் தோல்வியையும் மாற்றியமைத்து விடுவார்கள்.

சுலோகன்:
ஆசிர்வாதம் அடைவது மற்றும் ஆசிர்வாதம் கொடுக்கும் போது மிக விரைவாக மாயாஜீத் ஆகிவிடுவீர்கள்.