04-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இல்லற வாழ்க்கையில் வாழ்ந்தபடி பரலோகத் தந்தையிடம் முழு ஆஸ்தியையும் வாங்க வேண்டுமானால் தன்னிடமுள்ள அனைத்தையும் பண்டமாற்று செய்து கொள்ளுங்கள், இது பெரிய வியாபாரமாகும்.

கேள்வி:
டிராமாவில் ஞானம் எந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு மிக உதவியாக இருக்கிறது?

பதில்:
எப்பொழுது சரீரத்தில் வியாதி வருகிறதோ, அப்பொழுது டிராமாவின் ஞானம் மிகவும் உதவி செய்கிறது, ஏனென்றால் நீங்கள், இந்த டிராமா அப்படியே திரும்பவும் நடக்கிறது என்பதை அறிவீர்கள். இதில் அழுவது, அலட்டுவது போன்ற எந்த விஷயமும் கிடையாது. கர்மத்தின் கணக்கு வழக்கு தீர்வு பெற வேண்டும். 21 பிறவிக்கு கிடைக்கும் சுகத்துடன் ஒப்பிடும்பொழுது இந்த துக்கம் சிறிது கூட துக்கமாக அனுபவமாகாது. ஞானம் முழுவதும் புரியவில்லை என்றால் துடிப்பார்கள்.

ஓம் சாந்தி.
பகவான் கூறுகின்றார்: யாருக்கு தன்னுடைய சரீரம் இல்லையோ, அவர் பகவான் என்று கூறப்படுகின்றார். பகவானுக்கு பெயர், ரூபம், (வடிவம்), தேசம், நேரம் என்று எதுவும் கிடையாது என்பது சரியில்லை. பகவானக்குச் சரீரம் என்பது இல்லை. மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் தங்களுக்கென்று சரீரம் இருக்கிறது. இப்பொழுது பாபா கூறுகிறார், இனிமை யிலும் இனிமையான குழந்தைகளே! தன்னை ஆத்மா என்று புரிந்து அமர்ந்திருங்கள், எப்பொழுதும் ஆத்மா தான் கேட்கிறது, பங்கை நடிக்கிறது, சரீரம் மூலம் செயலையும் செய்கிறது. சம்ஸ்காரத்தை ஆத்மா எடுத்துச் செல்கிறது. நன்மை, தீமை என்ற கர்மத்தின் பலனையும் ஆத்மா தான் சரீரத்துடன் அனுபவிக்கிறது. சரீரம் இல்லாமல் யாரும் கர்மத்தின் பயனை அனுபவிக்க இயலாது. ஆகையால் பாபா கூறுகிறார்: தன்னை ஆத்மா என்று புரிந்து அமர்ந்திருங்கள். பாபா நமக்குப் கற்பிக்கின்றார். நாம் ஆத்மா, இந்த சரீரம் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பகவான் கூறு கிறார், மன்மனாபவ. தேகம், தேக சம்பந்தமான அனைத்து தர்மங்களையும் தியாகம் செய்து தன்னை ஆத்மா என்று புரிந்து என்னை நினையுங்கள். கீதையை கூறிய பகவான், அதே பாபா தான் இதைக் கூறுகிறார். பகவான் என்றாலே, பிறப்பு-இறப்பு இல்லாதவர். பாபா புரிய வைக்கிறார்: என் பிறவி அலௌகீகமானது (தெய்வீகமான). நான் இவர் சரீரத்தில் பிரவேசிப்பதைப் போல வேறு யாரும் இப்படி பிறவி எடுப்பதில்லை, இதை நன்றாக நினைவில் வைக்க வேண்டும். இப்படியும் அதாவது எல்லாம் பரமாத்மா செய்கிறார், பூஜிக்கத்தக்கவர், பூஜாரி எல்லாம் அவர் தான். கல்லிலும், சிறிய பொருளிலும் பரமாத்மா இருக்கிறார் என்பதில்லை. 24 அவதாரம், ஆமை, மீன் அவதாரம், பரசுராம் அவதாரம் எல்லாம் காட்டுகிறார்கள். இப்பொழுது புரிய முடிகிறது, என்ன, பரமாத்மா வந்து பரசுராம் அவதாரம் எடுப்பாரா? ஆயுதம் ஏந்தி துன்பம் கொடுப்பாரா? இது தவறாகும். மேலும் பரமாத்மாவை சர்வவியாபி என்று சொல்லி விட்டதைப்போல கல்பத்தின் ஆயுளையும் லட்சக் கணக்கான வருடம் என்ற எழுதி விட்டார்கள். இது பெரிய இருட்டு அதாவது ஞானம் இல்லை என்று கூறப்படுகின்றது. ஞானத்தின் மூலம் வெளிச்சம் ஏற்படுகிறது. இப்பொழுது அஞ்ஞானம் என்ற இருள் சூழ்ந்திருக்கிறது. இப்பொழுது குழந்தைகள் பெரிய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. யாருக்குத் தெரியவில்லையோ அவர் பூஜை முதலியவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டீர்கள். ஆகையால் உங்களுக்கு பூஜை செய்வதற்கு அவசியமில்லை. இப்பொழுது நீங்கள் பூஜாரி நிலையிலிருந்து விடுதலை பெற்றீர்கள். பூஜிக்கத்தக்க தேவி, தேவதை ஆவதற்கு நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பூஜிக்கத்தக்க தேவி தேவதையாக இருந்தீர்கள், பிறகு பூஜாரியான மனிதன் ஆனீர்கள், மனிதனிடம் இருப்பது அசுர குணம் ஆகையால் இப்படி பாட்டு இருக்கிறது. மனிதனை தேவதை ஆக்கினாய்? மனிதனை ஒரு நொடியில் தேவதையாக்கினாய்... அதாவது பாபாவைப் புரிந்து கொண்டு சிவபாபா என்று கூற ஆரம்பித்து விட்டீர்கள். பாபா (தந்தையே) என்று சொல்லும் பொழுது உள்ளத்தில் இப்படி வருகிறது, நாம் உலகத்திற்கும் சொர்க்கத்திற்கும் எஜமான் ஆகிறோம். இவர் எல்லையில்லா தந்தை. இப்பொழுது நீங்கள் வந்து சட்டென்று பரலோகத் தந்தைக்குச் சொந்தமாகி விட்டீர்கள். பாபா மீண்டும் கூறுகிறார் இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு பரலோகத் தந்தையிடம் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உலகியல் ஆஸ்தியை நீங்கள் வாங்கிக் கொண்டே வந்தீர்கள். இப்பொழுது லௌகீக ஆஸ்தியை, தெய்வீக உலகத்தின் ஆஸ்தியுடன் பண்டமாற்று செய்து கொள்ளுங்கள். எவ்வளவு நல்ல வியாபாரம்? உலகியல் ஆஸ்தி எவ்வளவு இருக்கும்? இது எல்லையில்லாத ஆஸ்தி, அதையும் ஏழைகள் சட்டென்று எடுத்துக் கொள்கிறார்கள். ஏழைகளை பாபா தத்து எடுக்கிறார், பாபாவும் ஏழைப்பங்காளன் இல்லையா? புகழும் இப்படி இருக்கிறது, நான் ஏழைப்பங்காளனாக இருக்கிறேன். பாரத தேசம் அனைத்து தேசங்களிலும் ஏழை தேசம். நான் வருவதும் பாரதத்தில் தான். நான் வந்து பாரதத்தை செல்வந் தனாக்குகிறேன். பாரதத்தின் புகழ் ஏராளம். இது எல்லாவற்றிலும், பெரிய தீர்த்த ஸ்தானம். ஆனால் கல்பத்தின் ஆயுளை அதிகமாக்கியதால், முற்றிலும் மறந்து விட்டார்கள். பாரதம் பெரிய செல்வ மிக்க நாடாக இருந்தது? இப்பொழுது ஏழையாகி விட்டது என்பதை இப்பொழுது புரிகிறார்கள். ஆகையால் உதவி செய்கிறார்கள். இப்படியும் நடக்கிறது, அதாவது யாரேனும் பெரிய மனிதர் நஷ்டமடைந்தால், மற்றவர் தமக்குள் முடிவு எடுத்து அவருக்கு உதவி செய்கிறார்கள். இந்த பாரதம் எல்லோரையும விட பழமையானது. பாரதம் சொர்க்கமாக இருந்தது, முதன் முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. காலத்தை மட்டும் நீட்டிவிட்டார்கள், ஆகையால் குழம்பு கிறார்கள். பாரதத்திற்கு எவ்வளவு உதவி செய்கிறார்கள். பாபாவும் பாரதத்தில் தான் வரவேண்டி யிருக்கிறது.

நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தியை வாங்கிக் கொண்டிருக்கிறோம். உலகியல் தந்தையின் ஆஸ்தியை பரலோகத் தந்தையின் ஆஸ்திக்கு பண்டமாற்று செய்கிறோம். எப்படி இவர் (பிரம்மா) செய்தாரோ அப்படி! பரலோகத் தந்தையிடமிருந்து மகுடமும், சிம்மாசனமும் கிடைப்பதைப் பார்த்தார் - எங்கே அரசாட்சி - எங்கே இந்த கழுதைக்குச்சமமான ஆஸ்தி! ஆகவே தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் பசியினால் இறக்க நேரிடும் என்ற விஷயமே கிடையாது. பாபா கூறுகிறார்: உன்னிடம் உள்ளதை டிரஸ்டியாகி (நிமித்தம்) பரிபாலனை செய்து வாருங்கள், பாபா வந்து உங்களுக்கு சுலபமான வழியைக் கூறுகிறார். நிறைய கஷ்டம் வரும் பொழுது, பாபாவை ஓ, பரம்பிதா பரமாத்மாவே, இரக்கம் காட்டுங்கள் என்று அழைக்கிறார்கள். சுகத்தில் யாரும் பாபாவை நினைவு செய்வதில்லை. துக்கத்தில் எல்லோரும் நினைவு செய்கிறார்கள். எப்படி நினைக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். உங்களுக்கு எப்படி நினைப்பது என்பது தெரியவில்லை. ஆகையால் நானே வந்து கூறுகிறேன். குழந்தாய், உன்னை ஆத்மா என்று புரிந்து, பரலோக தந்தை பாபாவை நினைத்தால் உன் பாவம் நீங்கவிடும். என்னை நினைத்து நினைத்து சுகம் பெறுவாய். உடலில் வரும் வருத்தம் மற்றும் வலி எல்லாம் தீர்ந்துவிடும். சரீரத்தில் எந்தவிதமான துன்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். உங்களுடைய ஆத்மாவும் சரீரமும் பவித்திரமாகி விடும். நீங்கள் அப்படி தூய்மையாக இருந்தீர்கள். பிறகு மறுபிறவி எடுத்து, எடுத்து ஆத்மாவில் அழுக்கு ஏறிவிடுகிறது. பிறகு சரீரமும் பழையதாகக் கிடைக்கிறது. தங்கத்தில் செம்பை சேர்ப்பதைப்போல ஆகிறது. தூய்மையான தங்கத்தின் ஆபரணமும் தூய்மையாக இருக்கும். அதில் பிரகாசம் ஏற்படும். செம்பு சேர்த்த ஆபரணம் கருப்பாகி விடுகிறது. பாபா கூறுகிறார், உங்கள் மீதும் அழுக்கு சேர்ந்திருக்கிறது. அதை இப்பொழுது நீக்கிவிட வேண்டும். எப்படி நீங்கும்? பாபாவுடன் யோகா செய்யுங்கள். படிப்பை கற்றுத் தருபவருடன் யோகம் செய்ய வேண்டும் இல்லையா? இவர் தந்தை, டீச்சர், சத்குரு எல்லாமாக இருக்கிறார். அவரை நினைவு செய்தால் உங்களுடைய பாவம் அழியும். அவர் உங்களுக்குப் போதனையும் செய்கிறார். தூய்மை செய்பவர், சர்வ சக்திவான் என்று என்னைத்தான் அழைக்கின்றீர்கள். கல்ப கல்பமாக பாபா அப்படியே புரிய வைக்கின்றார். இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளே, 5000 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து என்னை சந்திக்கிறீர்கள், ஆகையால் நீங்கள் செல்லமானவர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். இப்பொழுது இந்த தேக அகங்காரத்தை நீக்கி, ஆத்ம அபிமானி ஆகுங்கள். ஆத்மா பற்றிய ஞானமும் தந்திருக்கிறது, அதை பாபாவைத் தவிர எவரும் தர முடியாது. ஆத்மா பற்றிய ஞானம் அறிந்த மனிதர் எவருமில்லை. சன்னியாசி, தனிமையில் இருப்பவர், குரு, முனிவர் எவரும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது அந்த சக்தி எவரிடமும் இல்லை. அனைவருடைய சக்தியும் குறைந்து விட்டது. மரம் முழுவதும் இற்றுப்போய், விழும் நிலையை அடைந்து விட்டது. இனி திரும்பவும் புதியது ஸ்தாபனை ஆகிறது. பாபா வந்து பலவிதங்கள் நிறைந்த மரத்தின் ரகசியத்தைப் புரிய வைக்கின்றார். பாபா கூறுகிறார், முதலில் நீங்கள் இராம ராஜ்யத்தில் இருந்தீர்கள். பிறகு வாம மார்க்கத்தில் சென்றதால் இராவண ராஜ்யம் ஆரம்பமாகிறது. பிறகு ùவ்வேறு தர்மங்கள் (மதங்கள்) வருகின்றன. பக்தி மார்க்கம் ஆரம்பிக்கிறது. முதலில் இதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. யாரை வேண்டுமானாலும், நீங்கள் படைத்தவர் படைப்பின் முதல்-இடை-இறுதியை அறிவீர்களா என்று கேளுங்கள். எவரும் கூறமாட்டார்கள். பாபா பக்தர்களிடம் கூறுகிறார், இப்பொழுது நீங்கள் தீர்மானியுங்கள், போர்டில் கூட இப்படி எழுதுங் கள், நடிகருக்கு நாடகத்தின் இயக்குநர் மற்றும் படைப்பவர், முக்கிய நடிகர் ஆகியோரைப் பற்றித் தெரியவில்லை என்றால், அப்படிப்பட்ட நடிகரை என்ன சொல்வது? நாம் ஆத்மா, இங்கே விதவித மான சரீரத்தை எடுத்து நடிக்க வந்திருக்கிறோம், என்றால் கண்டிப்பாக இது நாடகம் தான் இல்லையா?

கீதை என்றால் தாய், மற்ற அனைத்தும் படைப்பு. கீதை புதிய உலகத்தைப் படைக்கிறது. இதுவும் அதாவது புதிய உலகத்தைப் பகவான் எப்படி படைக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. புதிய உலகத்தில் முதன் முதலில் நீங்கள் தான் இருப்பீர்கள். இப்பொழுது இது புருஷோத்தம சங்கமயுக உலகம். இது பழைய உலகமும் இல்லை, புது உலகமும் இல்லை. இது இருப்பதே சங்கமயுகம். பிராமணர்களுக்கு குடுமி இருப்பதை போல. விராட ரூபத்தில் சிவ பாபாவையும், காட்டுவதில்லை, பிராமணரின் குடுமியையும் (சங்கமயுகத்தை) காட்டுவதில்லை. நீங்கள் குடுமியை (சங்கம யுகத்தை) மேலே காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் அமர்ந்திருக் கின்றீர்கள். தேவதை களுக்குப் பிறகு வருகிறவர்கள் சத்திரியர். துவாபர யுகத்தில் வயிற்றுக்காகப் பூஜாரி, பிறகு சூத்திரர் ஆகின்றனர். இது குட்டிக்கரணம் செய்வதாகும். நீங்கள் கரணம் போடுவதை மட்டும் நினையுங்கள். இது தான் உங்களுடைய 84 பிறவி என்ற பயணமாகும். ஒரு நொடியில் எல்லாம் நினைவுக்கு வந்துவிடுகிறது. நாம் இப்படி சுற்றிவருவது புரிகிறது. இது சரியான படம், அது தவறான படம். பாபா இல்லாமல் சரியான படத்தை யாராலும் உருவாக்க முடியாது. இவர் (பிரம்மா) மூலம் பாபா புரிய வைக்கின்றார். எப்படி? நீங்கள் இப்படி கரணம் அடிக்கிறீர்கள், ஒரு நொடியில் உங்கள் பயணம் பூர்த்தியாகிவிடுகிறது. எந்தக் கஷ்டமும் கிடையாது. ஆன்மீகக் குழந்தைகள் அறிந்துள்ளீர் கள், தந்தை நமக்கு கற்றுத் தருகின்றார். இது சத்தியமான சங்கம், பாபாவுடன். அது பொய்யான சங்கம் (கூட்டம்). சத்தியமான கண்டத்தைப் பாபா ஸ்தாபனை செய்கின்றார். மனிதர்களிடம் சக்தி கிடையாது. பகவான் தான் அதை செய்ய முடியும். பகவான் தான் ஞானக்கடல் என்று கூறப்படு கின்றார். இது பரமாத்மாவின் மகிமை என்பது சாது, சன்னியாசிகளுக்குத் தெரியாது. அந்த சாந்திக் கடலான தந்தை, உங்களுக்கு சாந்தியைத் தந்து கொண்டிருக்கின்றார். அதிகாலையிலும் நீங்கள் டிரில் செய்கிறீர்கள். சரீரத்திலிருந்து விலகி பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். இங்கே நீங்கள் வந்திருப்பது, உயிருடன் வாழ்ந்து கொண்டு இறப்பதற்காக. அதாவது பாபாவிடம் பலியாகின்றீர்கள். இது பழைய உலகம், பழைய அங்கி (பழைய உடல்). இதை விட்டுப்போகலாம் என்று வெறுப்பு வருகிறது. வேறு எந்த நினைவும் வரக்கூடாது. எல்லாம் மறந்திருக்க வேண்டும். நீங்களே, எல்லாம் பகவான் தந்தது என்கிறீர்கள். அப்படியென்றால் இப்பொழுது அவருக்கு கொடுத்துவிடுங்கள். பகவான் பிறகு உங்களுக்குக் கூறுகிறார், நீங்கள் நிமித்தம் ஆகிவிடுங்கள். பகவான் டிரஸ்டி ஆக மாட்டார். டிரஸ்டி நீங்கள் தான் ஆகிறீர்கள். பிறகு பாவம் செய்யமாட்டீர்கள். முதலில் பாவ ஆத்மாக்களுக்குப் பாவ ஆத்மாக்களுடன் கொடுக்கல் வாங்கல் நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது சங்கமயுகத்தில் உங்களுக்கு பாவ ஆத்மாக்களுடன் கொடுக்கல் வாங்கல் கிடையாது. பாவ ஆத்மாக்களுக்கு தானம் கொடுத்தால் பாவம் தலைமீது ஏறிவிடும். செய்வது ஈஸ்வரனுக் காக, ஆனால் கொடுப்பதோ பாவ ஆத்மாக்களுக்கு. பாபா கொஞ்சமாவது எடுக்கிறாரா? பாபா கூறுகிறார், நீங்கள் சென்டர் திறந்தால் நிறைய பேருக்கு நன்மை ஏற்படும்.

எது எது நடக்கிறதோ, அது டிராமாபடி அப்படியே மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இதில் அழுவது, அடித்துக் கொள்வது, துக்கமடைவது என்ற விஷயமேயில்லை. செயல் களின் கணக்கு வழக்கு தீர்வது நல்லது தான். வைத்தியர்கள் கூறுவார்கள், வியாதி முழுவதும் மேலும் கீழும் போய், தீர்ந்துவிடும் என்று. பாபாவும் கூறுகிறார், மீதி இருக்கும் கணக்கு வழக்கை தீர்த்துவிட வேண்டும். தண்டனை மிகக் கடினமாக இருக்கும். அதைவிட (தண்டனையை விட) வியாதி முதலியன மூலமாக தீர்ப்பது, ஒப்பிட்டுப் பார்த்தால், பெரியதாகத் தோன்றாது. ஞானம் முழுமையாக இல்லை என்றால் வியாதியில் துடிப்பார்கள். வியாதியில் விழுந்தால் பகவானை அதிகமாக நினைக்கிறார்கள். அதுவும் நல்லதே! ஒருவரை மட்டும் நினைக்க வேண்டும். அதையும் பாபா புரிய வைக்கிறார். அந்த மக்கள் குருவை நினைக்கிறார்கள். அனேக குருக்கள் இருக் கிறார்கள், ஒரு சத்குருவை நீங்கள் மட்டும் அறிவீர்கள். அவர் சர்வ சக்திவான். பாபா கூறுகிறார், நான் இந்த வேதங்கள், கிரந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கிறேன். இது பக்தியின் சாமான்கள் (பொருட்கள்). இதன் மூலம் எவரும் என்னை அடைய முடியாது. பாபா வருவதே, பாவ ஆத்மாக் களுடைய உலகத்தில். இங்கே புண்ணிய ஆத்மாக்கள் எங்கிருந்து வந்தார்கள்? யார் 84 பிறவி முழுவது:ம் எடுத்திருக்கிறாரோ அவருடைய சரீரத்தில் நான் வருகிறேன். எல்லோரையும் விட இவர் முதலில் கேட்கிறார். இங்கே மதுபனில் உங்கள் நினைவுப் பயணம் நன்றாக இருக்கிறது. இங்கே புயலும் வீசலாம், ஆனால் பாபா புரிய வைக்கின்றார், தன்னை ஆத்மா என்று புரிந்து, பாபாவை நினைவு செய்யுங்கள். கல்பத்திற்கு முன்பும் நீங்கள் இப்படித்தான் ஞானத்தைக் கேட்டிருந்தீர்கள். ஒவ்வொருநாளும் கேட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள். பழைய உலகத்தின் வினாசம் ஏற்பட்டே தீரும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அதிகாலையில் எழுந்து உடல் நினைவிலிருந்து விலகியிருக்கும் டிரில் செய்யவும். பழைய உலகம், பழைய உடல் எதுவும் நினைவுக்கு வரக்கூடாது. அனைத்தும் மறந்திருக்க வேண்டும்.

2. சங்கமயுகத்தில் பாவ ஆத்மாக்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடாது. கர்மக்கணக்கு வழக்கை மிகவும் மகிழ்ச்சியாகத் தீர்க்க வேண்டும். அழுவது, அடிப்பது கூடாது. அனைத்தையும் பாபாவிடம் அர்ப்பணம் செய்து நிமித்தமாகி கவனித்து வரவும்..

வரதானம்:
உணரக்கூடிய சக்தி மூலமாக சுய பரிவர்த்தனை செய்யக்கூடிய தீவிர புருஷார்த்தி ஆகுங்கள்.

எந்தவொரு விசயத்திலும் பரிவர்த்தனைக்கான ஆதாரம், உணரக்கூடிய சக்தியாகும். உணரக் கூடிய சக்தி வராதவரை அனுபவம் ஏற்படாது, மேலும் எதுவரை அனுபவம் ஏற்படவில்லையோ அதுவரை பிராமண வாழ்க்கையின் விசேசதன்மையின் அஸ்திவாரம் உறுதியாக இல்லாமலும் கூடவே ஊக்கம், உற்சாகத்தின் நடைமுறையும் இருக்காது. ஒவ்வொரு விசயத்திலும் உணரக் கூடிய சக்தி அனுபவ ரீதியாக இருந்தால் தீவிர புருஷார்த்தமாக ஆக்கி விடும். உணரக்கூடிய சக்தி சதா காலத்திற்கும் சகஜமாக பரிவர்த்தனையை ஏற்படுத்தும்.

சுலோகன்:
அன்பு சொரூபத்தை சாகரத்தில் வெளிப்படுத்தி பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆகுங்கள்.