05-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே, பாபாவை அன்போடு நினைவு செய்தால் நீங்கள் மேன்மையடைந்து விடுவீர்கள், பார்வையால் மேன்மையடைவது என்பது உலகத்தின் எஜமானர் ஆவதாகும்.

கேள்வி:
சத்குருவான சுவாமி பார்வையாலேயே மேன்மையாக்குகின்றார்...இதனுடைய உண்மையான அர்த்தம் என்ன?

பதில்:
ஆத்மாவுக்கு பாபா மூலமாக எப்போது மூன்றாம் கண் கிடைக்கிறதோ, எப்போது அந்தக் கண் மூலமாக பாபாவைத் தெரிந்து கொள்கிறதோ, அப்போது தூய்மையாக்கப்படுகிறது, அதாவது சத்கதி கிடைத்து விடுகிறது. பாபா சொல்கிறார்: குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகி நீங்கள் என்மீது பார்வையை செலுத்துங்கள், அதாவது என்னை நினைவு செய்யுங்கள், மற்ற தொடர்புகளை துண்டித்து என் ஒருவனோடு தொடர்பை இணையுங்கள், அப்போது அமைதி இழந்தவர் அதாவது ஒன்றுமில்லாதவரிலிருந்து மேன்மையானவர் அதாவது செல்வந்தர் ஆகி விடுவீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் யாரிடம் வந்திருக் கின்றீர்கள்? ஆன்மீகத் தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள். நாம் சிவபாபாவிடம் செல்கின்றோம் என்று புரிந்து கொள்கின்றீர்கள். சிவபாபா அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்றும் தெரிந்திருக்கின்றீர்கள். அவர் உயர்ந்த ஆசிரியராகவும் இருக்கின்றார், உயர்ந்த குருவாகவும் (சத்குரு) இருக்கின்றார் என்ற நிச்சயம் கூட குழந்தைகளிடம் இருக்க வேண்டும். உயர்ந்த என்பதற்கு 'பரம' என்று சொல்லப்படுகிறது. அந்த ஒருவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். பார்வையோடு பார்வை சேர்கின்றது. சத்குரு பார்வையாலேயே மேன்மையாக்குகின்றார்...என்ற பாடல் இருக்கிறது. அந்தப் பாடலுக்கு அர்த்தம் இருக்க வேண்டும். பார்வையால் யாரை மேன்மை யாக்குகின்றார்? கண்டிப்பாக முழு உலகத்திற்காக சொல்கின்றார்கள், ஏனெனில் அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடிய வள்ளல் ஆவார். அனைவரையும் இந்த தூய்மையற்ற உலகத்திலிருந்து கொண்டு செல்பவர் ஆவார். இப்போது யாருடைய பார்வை படுகிறது? இந்த (ஸ்தூல) கண்களா என்ன? இல்லை. ஞானத்தின் மூன்றாம் கண் கிடைக்கிறது. இதன் மூலம், இவர் நம் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்று ஆத்மா தெரிந்து கொள்கிறது. என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா ஆத்மாக்களுக்கு வழி கொடுக்கின்றார். பாபா ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார், ஆத்மாக்கள் தான் தூய்மையற்ற தமோபிரதானம் ஆகின்றது. இது உங்களின் 84வது பிறவி ஆகும், இந்த நாடகம் முழுமையடைகின்றது. கண்டிப்பாக முழுமை அடைய வேண்டும். ஒவ்வொரு கல்பமும் பழைய உலகம் புதியதாக ஆகின்றது, புதியதிலிருந்து பிறகு பழையதாக ஆகின்றது. அதன் பெயர் கூட தனித்தனியாக இருக்கிறது. புதிய உலகத்தின் பெயர் சத்யுகம் ஆகும். முதலில் நீங்கள் சத்யுகத்தில் இருந்தீர்கள், பிறகு மறுபிறவி எடுத்து 84 பிறவிகளைக் கடந்தீர்கள் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். இப்போது உங்கள் ஆத்மா தமோபிரதானம் ஆகி விட்டது. பாபாவை நினைவு செய்தால் தூய்மையாகிவிடும். பாபா நேரடி யாகக் கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள், நான் யார்? பரமபிதா பரமாத்மா ஆவேன். பாபா சொல் கின்றார் - குழந்தைகளே ஆத்ம அபிமானி ஆகுங்கள், தேக அபிமானி ஆகாதீர்கள். ஆத்ம அபிமானி ஆகி நீங்கள் என்மீது பார்வையை செலுத்தினால், நீங்கள் தூய்மையாகிவிடுவீர்கள். பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள், இதில் எந்தக் கஷ்டமும் கிடையாது. ஆத்மா தான் படிக்கின்றது, நடிப்பு நடிக்கின்றது. ஆத்மா எவ்வளவு சிறியது. எப்போது இங்கே வருகின்றதோ, அப்போது 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கின்றது. பிறகு அதே நடிப்பை மீண்டும் நடிக்க வேண்டும். 84 பிறவி களின் நடிப்பை நடித்து, ஆத்மா தூய்மையற்றதாக ஆகிவிட்டது. இப்போது ஆத்மாவில் கொஞ்சம் கூட சக்தி இல்லை. இப்போது ஆத்மா தூய்மையாக இல்லை, அமைதி இழந்து அதாவது ஒன்று மில்லாததாக இருக்கிறது. பிறகு எப்படித் தூய்மையாக முடியும்? இந்த வார்த்தை பக்தி மார்க்கத் தினுடையது, இதை வைத்து பாபா புரிய வைக்கின்றார். வேத சாஸ்திரங்கள், சித்திரங்கள் போன்றவற்றை வைத்தும் பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் இந்த சித்திரத்தை ஸ்ரீமத் படி உருவாக்கி இருக்கின்றீர்கள். அசுர வழிப்படி நிறைய சித்திரங்கள் உள்ளன. அந்த சித்திரங்கள் கல், மண் போன்றதாகும். அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. இங்கே பாபா வந்து குழந்தைகளுக்குப் படிப்பிக்கின்றார். பகவானுடைய மகாவாக்கியம் என்றால், அவருடைய ஞானம் என்றாகி விடு கிறது. இவர் இந்த டீச்சர் என்று மாணவர்கள் தெரிந்திருக்கின்றார்கள். எல்லையற்ற தந்தை ஒரே ஒருமுறை வந்து இப்படிப்பட்ட அதிசயமான படிப்பைப் படிப்பிக்கின்றார் என்று குழந்தைகளாகிய நீங்கள் இங்கே தெரிந்திருக்கின்றீர்கள். இந்தப் படிப்பிற்கும் அந்தப் படிப்பிற்கும் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. அந்தப் படிப்பைப் படித்து படித்து இரவாகி விடுகிறது. இந்தப் படிப்பின் மூலம் (அறியாமை) இரவிலிருந்து பகலுக்குச் செல்கின்றீர்கள். அந்த படிப்புகளை பல பிறவி களாகப் படித்து வந்தீர்கள். ஆத்மா எப்போது தூய்மையாகுமோ, அப்போது தாரணை ஏற்படும் என்று இந்தப் படிப்பில் பாபா தெளிவாகச் சொல்கின்றார். சிங்கத்தின் பால் தங்கக் கிண்ணத்தில் தான் தங்கும் என்று சொல்கிறார்கள். நாம் இப்போது தங்கப் பாத்திரமாக ஆகிக் கொண்டிருக் கின்றோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். மனிதர்கள் தான் அப்படி ஆவார்கள், ஆனால் ஆத்மா சம்பூர்ண தூய்மையாக வேண்டும். 24 கேரட்டாக இருந்தது, இப்போது 9 கேரட் ஆகி விட்டது. பிரகாசித்துக் கொண்டிருந்த ஆத்ம ஜோதி இப்போது அணைந்து விட்டது. ஆத்ம ஜோதிபிரகாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், ஆத்ம ஜோதி அணைந்து விட்டவர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஆத்ம ஜோதி எப்படி பிரகாசமடைந்தது மற்றும் எப்படி பதவி அடைந்தார்கள் என்பதை பாபா தான் புரிய வைக்கின்றார். என்னை நினைவு செய்யுங்கள், யார் என்னை நன்றாக நினைவு செய்வார்களோ, அவர்களை நானும் நன்றாக நினைவு செய்வேன் என்று பாபா சொல்கின்றார். பார்வை மூலமாக மேன்மையாக்கக்கூடிய ஒரு பாபா தான் சுவாமி ஆவார் என்பதையும் குழந்தைகள் தெரிந்திருக்கின்றார்கள். இவருடைய(பிரம்மா) ஆத்மா கூட தூய்மை யாக்கப் படுகிறது. நீங்கள் அனைவரும் விட்டில் பூச்சிகள் ஆவீர்கள், அவரை (சிவபாபாவை) தீபம் என்று சொல்லப் படுகிறது. சில விட்டில் பூச்சிகள் சுற்றுவதற்காக மட்டும் வருகின்றன. சிலர் நல்லவிதமாக (பாபாவை) அறிந்து கொள்கின்றனர், ஆக வாழ்ந்து கொண்டே இறந்து போகின்றனர். சிலர் சுற்றி விட்டுச் சென்று விடுகின்றனர், பிறகு எப்போதாவது வருகின்றனர், பிறகு சென்று விடுகின்றனர். முழுப் பாடலும் இந்த சங்கம யுகத்தைப் பற்றியதே ஆகும். இந்த நேரம் என்ன வெல்லாம் நடைபெறுகின்றதோ, அவை தான் சாஸ்திரமாக உருவாக்கப் படுகிறது. பாபா ஒரே ஒரு முறை வந்து ஆஸ்தியைக் கொடுத்து விட்டு சென்று விடுகின்றார். எல்லையற்ற தந்தை கண்டிப் பாக எல்லையற்ற ஆஸ்தி கொடுப்பார். 21 தலைமுறைக்கு கிடைக்கிறது என்று பாடல் கூட இருக்கிறது. சத்யுகத்தில் யார் ஆஸ்தி கொடுக்கின்றார்? படைப்பவராகிய பகவான் தான் படைப்புக்கு அரை கல்பத்திற்கான ஆஸ்தி கொடுக்கின்றார். அவரைத் தான் அனைவரும் நினைவும் செய்கின்றார்கள். இவர் தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், சுவாமி, சத்குருவாகவும் இருக்கிறார். நீங்கள் மற்றவர்களை சுவாமி, சத்குரு என்று சொல்கின்றீர் கள். ஆனால் சத்தியமானவர் ஒரே ஒரு பாபா மட்டும் தான். சத்தியம் என்று பாபாவைத் தான் சொல்லப் படுகிறது. அவர் வந்து சத்தியமான காரியம் என்ன செய்கின்றார்? அவர் தான் பழைய உலகத்தை சத்தியமான கண்டமாக ஆக்குகின்றார். சத்தியமான கண்டத்திற்கு நாம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். எப்போது சத்தியமான கண்டமாக இருந்ததோ, அப்போது மற்ற எந்த கண்டங்களும் இல்லை. மற்ற அனைத்து கண்டங்களும் பின்னால் வருகின்றன. சத்தியமான கண்டத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. மற்றபடி இப்போது என்னென்ன கண்டங்கள் இருக் கின்றனவோ, அவற்றைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரவர் தர்ம ஸ்தாபகர்களைப் பற்றித் தெரிந்திருக்கின்றார்கள். மற்றபடி சூரியவம்சம், சந்திர வம்சம் மற்றும் இந்த சங்கமயுக பிராமண குலத்தினரை யாருக்கும் தெரியாது. பிரஜாபிதா பிரம்மாவை ஏற்றுக் கொள்கின்றனர், நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள் என்று சொல்கின்றனர், ஆனால் அவர்கள் குக வம்சா வழியினர் ஆவர், நீங்கள் முக வம்சாவழி யினர் ஆவீர்கள். அந்த பிராமணர்கள் தூய்மை யற்றவர்கள், நீங்கள் முக வம்சாவழியினர் தூய்மையானவர் ஆவீர்கள். நீங்கள் முக வம்சா வழியினர் ஆகி, பிறகு மோசமான உலகம் இராவண இராஜ்யத்தில் இருந்து சென்று விடு கின்றீர்கள். அங்கே இராவண இராஜ்யம் இருக்காது. இப்போது நீங்கள் புதிய உலகம் செல்கின்றீர்கள். அதைத் தான் விகாரமற்ற உலகம் என்று சொல்லப்படுகிறது. உலகம் தான் புதியதாகவும், பழைய தாகவும் ஆகிறது. அது எப்படி ஆகிறது என்பதைக் கூட நீங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்கள். வேறு யாருடைய புத்தியிலும் இது கிடையாது. இலட்சம் வருடங்களுக் கான விசயங்களை யாரும் தெரிந்திருக்கக் கூட முடியாது. இதுவோ கொஞ்ச காலத்திற்கான விசயம் ஆகும். இதை பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்.

எப்போது பாரதத்தில் தர்மம் நிந்தனைக்குள்ளாகிறதோ, அப்போது தான் நான் வருகின்றேன் என்று பாபா சொல்கின்றார். மற்ற இடங்களில், நிராகார் பரமாத்மா யார் என்று கூட யாருக்கும் தெரியாது. பெரிய பெரிய லிங்கங்களை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது - ஆத்மாவினுடைய அளவு ஒருபோதும் சிறியது-பெரியதாக ஆவ தில்லை. எப்படி ஆத்மா அழிவற்றதோ, அதுபோல பாபாவும் அழிவற்றவர் ஆவார். அவர் மிகவும் உயர்ந்த ஆத்மா ஆவார். சுப்ரீம் என்றால், அவர் எப்போதும் தூய்மையானவர், நிர்விகாரி ஆவார். ஆத்மாக்களாகிய நீங்கள் கூட நிர்விகாரியாக இருந்தீர்கள், உலகம் கூட நிர்விகாரியாக இருந்தது. அவர்களைத் தான் சம்பூர்ண நிர்விகாரி என்று சொல்லப்படுகிறது, புதிய உலகம் கண்டிப்பாக பழையதாகிறது. கலைகள் குறைந்து கொண்டே போகிறது. சந்திர வம்ச இராஜ்ஜியத்தில் 2 கலைகள் குறைந்து விடுகிறது, பிறகு உலகம் பழையதாகிக் கொண்டே போகிறது. பிறகு மற்ற கண்டங்கள் வந்து விடுகின்றன. அவற்றை கிளைகள் என்று சொல்லப்படுகிறது, ஆனால் அவை கலந்து விடுகின்றன. நாடகத் திட்டப்படி என்னவெல்லாம் நடைபெறுகிறதோ, அவை மீண்டும் நடைபெறும். எப்படி புத்த மதத்தில் ஒரு பெரிய மனிதர் வந்தார், நிறைய பேரை புத்த தர்மத்திற்கு கொண்டு சென்றார். அவர் தர்மத்தை மாற்றி விட்டார். ஹிந்துக்கள் தன்னுடைய தர்மத்தை தானே மாற்றி விட்டனர், ஏனெனில் செயல்கள் கீழான நிலைக்குச் சென்று விட்ட காரணத்தினால் தர்மம் கூட கீழான நிலைக்கு சென்று விடுகிறது. வாம மார்க்கத்தில் சென்று விட்டனர். ஜெகந்நாதர் கோயிலுக்குக் கூட சென்றுள்ளனர், ஆனால் யாருக்கும் எந்த சிந்தனையும் ஓடுவதில்லை. தானே விகாரி என்பதனால், அவர்களை யும் (இலக்ஷ்மி நாராயணர்) விகாரியாக காட்டி விட்டனர். தேவதைகள் எப்போது வாம மார்க்கத்தில் சென்றனரோ, அப்போது இப்படி விகாரி ஆகின்றனர் என்பதை புரிந்து கொள்வ தில்லை. இவையனைத்தும் அந்த சமயத்தினுடைய சித்திரங்கள் ஆகும். தேவதை என்ற பெயரே மிகச் சிறந்ததாகும். ஹிந்து என்பது ஹிந்துஸ்தானுடைய பெயர் ஆகும். பிறகு தன்னை ஹிந்து என்று சொல்லிவிட்டனர். எவ்வளவு தவறுகள் ஏற்பட்டு விட்டன, ஆகையால் தான் பாபா சொல்கின்றார் - யதா யதாகி தர்மஸ்ய........பாபா பாரதத்தில் வருகின்றார். நான் ஹிந்துஸ்தானுக்கு வருகின்றேன் என்று பாபா சொல்வதில்லை. இது பாரதம், ஹிந்துஸ்தான் அல்லது ஹிந்து தர்மம் என்பது கிடையாது. இஸ்லாமியர்கள் ஹிந்துஸ்தான் என்ற பெயர் வைத்திருக்கின்றனர். இது கூட நாடகத்தில் பதிவாகி இருக்கிறது. நல்லமுறையில் புரிந்து கொள்ள வேண்டும், இது கூட ஞானமாகும். மறுபிறவி எடுத்து-எடுத்து வாம மார்க்கத்தில் சென்று-சென்று நிலை தாழ்ந்துவிட்டனர். பிறகு தேவதைகளின் முன்பு சென்று, ' நீங்கள் சம்பூர்ண நிர்விகாரியாக இருக்கின்றீர்கள், நாங்கள் விகாரிகள் பாவிகளாக இருக்கின்றோம்' என்று சொல்கின்றனர். வேறு எந்த கண்டத்தினரும் இப்படிச் சொல்ல மாட்டார்கள். நாங்கள் கீழானவர்கள் அதாவது எமக்குள் எந்த குணமும் இல்லை என்று வேறு கண்டத்தினர் சொல்வதை ஒருபோதும் கேட்டிருக்க மாட்டீர்கள். சீக்கியமக்கள் கூட கிரந்தத்தின் முன்பு அமர்கின்றார்கள். ஆனால் இப்படி ஒருபோதும் சொல்வதில்லை - நானக், நீங்கள் விகாரமற்று இருக்கின்றீர்கள், நாங்கள் விகாரிகளாக இருக்கின்றோம். நானக் சம்பிரதாயப்படி கையில் காப்பு அணிந்து கொள்கின்றனர், அது விகார மற்ற தன்மைக்கு அடையாளம் ஆகும். ஆனால் விகார மில்லாமல் அவர்களால் வாழ முடிவ தில்லை. பொய்யான அடையாளங்களை வைத்திருக்கினர். எப்படி ஹிந்துக்கள் தூய்மையின் அடையாளமாக பூணூல் அணிகின்றனரோ, அது போலத் தான் இதுவும். இன்றைய காலத்தில் தர்மத்தைக் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நேரம் பக்தி மார்க்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தான் பக்தி சம்பிரதாயம் என்று சொல்லப்படுகிறது, ஞான சம்பிரதாயம் சத்யுகத்தில் இருக் கிறது. சத்யுகத்தில் தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரி ஆவர், கலியுகத்தில் சம்பூர்ண நிர்விகாரி யாரும் இருக்க முடியாது. இல்லற மார்க்கத்தினருடைய ஸ்தாபனையும் பாபா தான் செய் கின்றார். மற்ற அனைவரும் துறவற மார்க்கத்தைச் சேர்ந்த குருக்களாவர், அதன் மூலம் அவர்களுடைய வலிமை அதிகமாகி இருக்கிறது. இப்படி நீங்கள் என்னவெல்லாம் படிக்கின்றீர் களோ, அவற்றின் மூலம் நான் கிடைக்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். நான் எப்போது வருகின்றேனோ, அப்போது அனைவரையும் பார்வை மூலமாக தூய்மையாக்குகின்றேன் என்று பாடல் கூட இருக்கிறது. இங்கே நீங்கள் ஏன் வந்திருக்கின்றீர்கள்? தூய்மையாவதற்கு அதாவது உலகத்தின் எஜமானர் ஆவதற்கு வந்திருக்கின்றீர்கள். பாபாவை நினைவு செய்தால், தூய்மை யாகிவிடுவீர்கள். இப்படி செய்வதால், நீங்கள் இவ்வாறு ஆவீர்கள் என்று ஒருபோதும் யாரும் சொல்ல மாட்டார்கள். நீங்கள் இவ்வாறு ஆக வேண்டும் என்று பாபா தான் சொல்கின்றார். இவர்கள் இலக்ஷ்மி நாராயணராக எப்படி ஆனார்கள்? யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா அனைத்தையும் சொல்கின்றார், இவர்கள் தான் 84 பிறவிகள் எடுத்து தூய்மை யற்றவர் ஆனார்கள், பிறகு உங்களை இவ்வாறு ஆக்க நான் வந்திருக்கின்றேன்.

பாபா தன்னுடைய அறிமுகத்தையும் கொடுக்கின்றார், ஆக பார்வை மூலமாக மேன்மை யாகவும் செய்கின்றார். இப்படி யாரை சொல்கின்றார்கள்? ஒரு சத்குருவைத் தான் சொல்கின்றார் கள். உலகத்தில் குருக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் மற்றும் மாதர்கள், அபலைகள் கள்ளங் கபடமற்றவர்களாக இருக்கின்றார்கள். நீங்கள் அனைவரும் கூட கள்ளங்கபடமற்ற தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். கண்கள் திறந்ததும் வினாசம் ஆனது என்று சங்கருக்காக சொல்கின்றார் கள். இது கூட பாவம் ஆகிவிடுகின்றது. பாபா ஒருபோதும், அப்படிப்பட்ட காரியத்திற்கு வழி கூறுவதில்லை. விநாசம் மற்ற ஏதாவது பொருட்கள் மூலமாகத் தான் ஏற்படு மல்லவா! பாபா அப்படி கட்டளை கொடுப்பதில்லை. இவையனைத்தும் அறிவியலில் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள், நமது குலத்தை நாமே அழிக்கின்றோம் என்று புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் கூட அதன் பந்தனத்தில் இருக்கின்றார்கள், அதை விட்டு விட முடிவதில்லை. இதனால் எவ்வளவு பெயர் (பிரபலம்) ஏற்படுகிறது. நிலவுக்குச் செல்கின்றார்கள் ஆனால் கூட எந்த பலனும் கிடையாது.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் கூட பாபாவின் மீது உங்கள் பார்வையை செலுத்துங்கள், அதாவது ஹே! ஆத்மாக்களே, தன்னுடைய தந்தையை நினைவு செய்யுங்கள், அப்போது தூய்மையாகி விடுவீர்கள். பாபா சொல்கின்றார் - யார் என்னை நினைவு செய்கின்றார்களோ, அவர்களை நானும் நினைவு செய்கின்றேன். யார் எனக்காக சேவை செய் கின்றார்களோ, அவர்களை நானும் நினைவு செய்கின்றேன், ஆக அவர்களுக்கு பலம் கிடைக்கிறது. இங்கே அமர்ந்துள்ள நீங்கள் அனைவருமே தூய்மை ஆகிவிடுவீர்கள், அவர்களே இராஜாவாகவும் ஆவார்கள். அனைத்து தொடர்புகளையும் துண்டித்து ஒருவரோடு தொடர்பை இணையுங்கள் என்று பாடல் கூட இருக்கிறது. அந்த ஒருவர் நிராகாரமானவர் ஆவார், ஆத்மா கூட நிராகார் ஆகும். என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கின்றார். ஹே பதீத பாவனா என்று யாரைச் சொல்கிறார்கள்? பிரம்மாவையா? விஷ்ணுவையா? சங்கரையா? இல்லை. பதீத பாவனர் ஒரே ஒருவர் தான், அவர் எப்போதும் தூய்மையாகத் தான் இருக்கின்றார். அவரை சர்வ சக்திவான் என்று சொல்லப்படுகிறது. பாபா தான் படைப்பின் முதல்-இடை-கடையின் ஞானத்தைச் சொல் கின்றார், மேலும் அனைத்து சாஸ்திரங்களையும் தெரிந்திருக்கின்றார். சந்நியாசிகள் சாஸ்திரங்கள் போன்றவற்றைப் படித்து அந்தத் தலைப்புகளில் பேசுகின்றனர். பாபாவுக்கு முதலிலேயே தலைப்பு கிடைத்து விட்டது. சாஸ்திரங்களைப் படித்து தான் தலைப்பை எடுக்க வேண்டுமா என்ன! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்புநினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. வாழ்ந்து கொண்டே விளக்கில் இறந்து போகக்கூடிய விட்டில் பூச்சிகளாக ஆக வேண்டும். வெறும் விளக்கைச் சுற்றக்கூடிய விட்டில் பூச்சிகளாக இருக்கக் கூடாது. ஈஸ்வரிய படிப்பை தாரணை செய்வதற்கு புத்தியை சம்பூர்ண தூய்மை ஆக்க வேண்டும்.

2. மற்ற அனைத்து தொடர்புகளையும் விடுத்து, ஒரு பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். ஒருவரின் நினைவின் மூலமாக தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
மனதார உணருவதன் மூலம் திலாராம் பாபாவின் ஆசிர்வாதம் பலனாக அடையக் கூடிய தன்னை மாற்றுபவர் ஆகுக.

தன்னை மாற்றிக் கொள்வதற்கு இரண்டு விசயங்களை மனதார உணர வேண்டும். 1) தனது பலவீனங்களை உணர வேண்டும், 2) எந்த பிரச்சனை அல்லது மனிதன் நிமித்தமாக இருக்கிறாரோ அவரது ஆசை மற்றும் அவரது மன பாவனைகளை உணர வேண்டும். பிரச்சனைகள் என்ற பேப்பரின் காரணத்தை அறிந்து நான் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சிரேஷ்ட சொரூபத்தை உணர வேண்டும். சுய ஸ்திதி சிரேஷ்டமானது, பிரச்சனை என்பது டெஸ்ட் பேப்பர் ஆகும் - இந்த உணர்ந்தால் எளிதாக மாற்றம் வந்து விடும். மேலும் உண்மையான உள்ளத்துடன் உணர்கிறீர்கள் எனில் திலாராம் பாபாவின் ஆசிர்வாதம் பலனாக கிடைக்கும்.

சுலோகன்:
எவரொருவர் எவரெடியாகி ஒவ்வொரு காரியத்திலும் சரி என்று கூறி ஆஜராகிறார் களோ அவர்களே வாரிசுகள்.