06-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


''இனிமையான குழந்தைகளே - ஸ்ரீமத்படி நன்கு சேவை செய்பவர்களுக்குத் தான் இராஜ பதவியின் பரிசு கிடைக்கிறது, குழந்தைகள் நீங்கள் இப்பொழுது தந்தையின் உதவியாளராக ஆகியிருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கிறது.''

கேள்வி:
தந்தையின் ஞான நடனம் எந்தக் குழந்தைகளின் எதிரில் மிக நன்றாக இருக்கிறது?

பதில்:
யார் ஞானத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கு யோகாவின் போதை இருக்கிறதோ அவர்கள் எதிரில் தந்தையின் ஞான நடனம் மிக நன்றாக இருக்கிறது. மாணவர்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள், ஆனால் இது அதிசயமான பள்ளிக்கூடம். அனேகரிடம் ஞானம் கொஞ்சம் கூட இல்லை, பாவனை மட்டும் இருக்கிறது. அந்த பாவனையின் ஆதாரத்தில் கூட ஆஸ்தியின் அதிகாரி ஆகிவிடுகிறார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார், இதை ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. ஆன்மீக ஞானம் ஒரு தந்தையிடம் மட்டும் தான் இருக்கிறது. மேலும் மனிதன் யாரிடமும் ஆன்மீக ஞானம் இருப்ப தில்லை. ஆன்மீக ஞானம் கொடுப்பவரே ஒருவர் தான், அவரை ஞானக்கடல் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு மனிதரிடமும் அவரவர்களின் சிறப்பு இருக்கிறது. வக்கீல், வக்கீல் தான். டாக்டர், டாக்டர் தான். ஒவ்வொருவரின் வேலை, பங்கு வேறு வேறானது. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவர்களுக்கு பங்கு கிடைத்திருக்கிறது. மேலும் அது அழியாத பங்கு ஆகும். எவ்வளவு சிறிய ஆத்மா, அதிசயம் தான் இல்லையா? இருபுருவ மத்தியில் மின்னும் நட்சத்திரம் என்று ஆத்மாவைப் பற்றி கூறுகிறார்கள். நிராகார ஆத்மாவிற்கு இந்த உடல் ஆசனமாக இருக்கிறது என்றும் வர்ணித் திருக்கிறார்கள். ஆனால் ஆத்மாவோ மிகச் சிறியது. மேலும் அனைத்து ஆத்மாக்களும் நடிகர்கள். ஒரு பிறவியின் முகலட்சணங்கள் இன்னொரு பிறவியில் இருக்காது, ஒரு பிறவியின் பங்கு இன்னொரு பிறவியில் இருக்காது. நான் கடந்த காலத்தில் என்னவாக இருந்தேன், மேலும் எதிர் காலத்தில் என்னவாக இருப்பேன் என்று யாருக்கும் தெரியாது. சங்கமயுகத்தில் இந்த தந்தை வந்து தான் புரிய வைக்கிறார். காலையில் குழந்தைகள் நீங்கள் நினைவு யாத்திரையில் அமருகிறீர்கள் என்றால் மங்கியிருந்த ஆத்ம ஒளி பிரகாசமாகிக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் ஆத்மாவில் அதிகமாக துரு படிந்திருக்கிறது. தந்தை பொற்கொல்லரின் காரியமும் செய்கிறார். தூய்மையற்ற ஆத்மாக்கள், எவரிடம் அழுக்கு இருக்கிறதோ அவர்களைத் தூய்மையாக்குகிறார். அழுக்கு படிகிறது தான் இல்லையா? வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய பெயர்களும் அப்படித் தான் இருக்கிறது. பொற் காலம், வெள்ளிகாலம் . . . . சதோபிரதானம், சதோ, தமோ . . . . இந்த விஷயங்களை வேறு எந்த மனிதனும், குருவும் புரிய வைப்பதில்லை. ஒரே ஒரு சத்குரு தான் புரிய வைக்கிறார். சத்குருவின் அழியாத ஆசனம் என்று கூறுகிறார்கள் இல்லையா? அந்த சத்குருவிற்கும் ஆசனம் தேவை இல்லையா? எப்படி ஆத்மாக்கள் உங்களுக்கு அவரவர்களின் ஆசனம் இருக்கிறது, அவருக்கும் ஆசனம் எடுக்க வேண்டியதாக இருக்கிறது. நான் எந்த ஆசனத்தை எடுக்கிறேன் என்று இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாது என்று அவர் கூறுகிறார். அவர்களோ தெரியாது, தெரியாது என்று கூறி வந்திருக்கிறார்கள். எங்களுக்குத் தெரியாது. குழந்தைகள் நீங்கள் இதற்கு முன்பு நாங்களும் எதையும் தெரிந்திருக்கவில்லை என்று புரிந்து கொண்டீர்கள். யார் எதையும் தெரிந்திருக்க வில்லையோ அவரை முட்டாள் என்று கூறப்படுகிறது. நாம் மிகுந்த புத்திசாலிகளாக இருந்தோம் என்று பாரதவாசிகள் நினைக்கிறார்கள். உலக இராஜ்ய பாக்கியம் நம்முடையதாக இருந்தது. இப்பொழுது ஒன்றும் அறியாதவர்களாகி விட்டோம். நீங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளைப் படித்திருந்தாலும் கூட இப்பொழுது அவை அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையிலும் நன்றாக இருங்கள், சன்னியாசிகளைப் பின்பற்றி நடப்பவர்களும் அவரவர்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். உண்மையான பின்பற்றுவோராக இருக்கும் ஒருசிலர் அவர்களுடன் இருப்பார்கள். மற்றபடி மற்ற அனைவரும் அவரவர்களின் இடங்களில் இருக்கிறார்கள். அப்படி இவை அனைத்து விஷயங் களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். இதைத் தான் ஞான நடனம் என்று கூறப்படுகிறது. யோகத்திலோ முற்றிலும் அமைதியாக இருக்க வேண்டும். டெட் சைலன்ஸ் என்று கூறுகின்றனர் அல்லவா! 3 நிமிடம் டெட் சைலனஸ். ஆனால் அதன் அர்த்தத்தைக் கூட யாரும் தெரிந்திருக்க வில்லை. சன்னியாசிகள் அமைதிக்காக காட்டுக்கு செல்கிறார்கள், ஆனால் அங்கு எப்படி அமைதி கிடைக்கும். இராணியின் வைர மாலை தொலைந்து விட்டது என்ற கதை இருக்கிறது. . . . இந்த உதாரணம் அமைதிக்கானது. தந்தை இந்த நேரம் என்னென்ன விஷயங்களைப் புரிய வைக்கிறாரோ அவைகளின் நினைவுச் சின்னங்கள் பக்தி மார்க்கத்தில் வருகின்றன. தந்தை இந்த நேரம் பழைய உலகை மாற்றி புது உலகம் ஆக்குகிறார். தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானம் ஆக்குகிறார். இதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், மற்றபடி இந்த உலகமே தமோபிர தான பதீதமானது. ஏனென்றால் அனைவரும் விகாரத்தின் மூலம் பிறக்கிறார்கள். தேவதைகளோ விகாரத்தின் மூலம் பிறப்பதில்லை. அதை சம்பூர்ண விகாரமற்ற உலகம் என்று கூறப்படுகிறது. என்ற வார்த்தையைக் கூறுகிறார்கள், ஆனால் அதன் அர்தத்தைத் தெரிந்திருக்கவில்லை. நீங்கள் தான் பூஜைக்குரியவர்களாக இருந்து பூஜாரிகளாக ஆகியிருக்கிறீர்கள். பாபாவைப் பொருத்தவரை அந்த மாதிரி கூற முடியாது. தந்தை ஒருபொழுதும் பூஜாரியாக ஆவதில்லை. மனிதர்களோ பரமாத்மாவை அணு அணுவில் இருக்கிறார் என்று கூறிவிட்டார்கள். அதனால் தான் தந்தை பாரதத்தில் எப்பொழுதெல்லாம் அந்த மாதிரி தர்ம நிந்தனை ஏற்படுகிறதோ. . . . என்று கூறுகிறார். அந்த மனிதர்களோ இந்த சுலோகங்களை அர்த்தம் புரிந்து கொள்ளாமல் அப்படியே படித்து விடுகிறார்கள். அவர்கள் ஆத்மா தூய்மையிழந்து போவதில்லை உடல் தான் ஆகிறது என்று நினைக்கிறார்கள். முதலில் ஆத்மா தூய்மையின்றி போகிறது. பிறகு உடலும் தூய்மையின்றி போகிறது என்று தந்தை கூறுகிறார். தங்கத்தில் கலப்படம் ஆகும்பொழுது நகையும் அந்த மாதிரி தான் உருவாகிறது. ஆனால் இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. தந்தை புரிய வைக்கிறார் ஒவ்வொருவரிலும் ஆத்மா அமர்ந்திருக்கிறது, ஜீவ ஆத்மா என்று கூறப்படுகிறது. ஜீவ பரமாத்மா என்று கூறப்படுவதில்லை. மஹான் ஆத்மா என்று கூறப்படுகிறது, மஹான் பரமாத்மா என்று கூறப்படுவதில்லை. ஆத்மா தான் விதவிதமான உடலை எடுத்து வாழ்க்கை என்ற தனது பங்கைச் செய்கிறது. அப்படி யோகா என்றால் முற்றிலும் அமைதி. இது ஞான நடனம். தந்தையின் ஞான நடனம் கூட யார் ஆர்வமானவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் முன்பு தான் நடக்கும். யாரிடம் எவ்வளவு ஞானம் இருக்கிறது, எவ்வளவு அவரில் யோகாவின் போதை இருக்கிறது என்று தந்தை தெரிந்திருக்கிறார். ஆசிரியரோ தெரிந்திருப்பார் தான் இல்லையா? தந்தையும் யார் யார் நல்ல குணமுடைய குழந்தைகள் என்று தெரிந்திருக்கிறார். நல்ல நல்ல குழந்தைகளுக்குத் தான் பல இடங்களிருந்து அழைப்பு வருகிறது. குழந்தைகளிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. பிரஜைகளும் வரிசைக்கிரமமான முயற்சியின் ஆதாரத்தில் உருவாகுகிறார்கள். இது ஸ்கூல் மற்றும் பள்ளிக்கூடம் இல்லையா? பள்ளிக்கூடத்தில் எப்பொழுதும் வரிசைக் கிரமமாக அமர் வார்கள். இன்னார் புத்திசாலியானவர், இவர் நடுத்தரமானவர் என்று புரிந்து கொள்ள முடியும். இங்கோ இது எல்லைக்கப்பாற்பட்ட வகுப்பு, இதில் யாரையும் வரிசைக்கிரமமாக அமர வைக்க முடியாது. தனது எதிரில் அமர்ந்திருக்கும் இவரில் கொஞ்சமும் ஞானம் இல்லை என்று தந்தை தெரிந்திருக்கிறார். பாவனை மட்டும் இருக்கிறது. மற்றபடி ஞானமும் இல்லை, நினைவும் இல்லை. இவர் தந்தை, இவரிடமிருந்து நமக்கு ஆஸ்தி அடைய வேண்டும் என்ற இந்தளவிற்கான நிச்சயம் இருக்கிறது. ஆஸ்தியோ அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் இராஜ பதவியிலோ வரிசைக்கிரமமான பதவி இருக்கிறது. யார் மிக நன்றாக சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு மிக நல்ல பரிசு கிடைக்கிறது. இவ்வுலகிலோ அனைவருக்கும் பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள், யார் கருத்துக்கள் கூறுகிறார்களோ, யார் மூளையை உபயோகிக் கிறார்களோ அவர்களுக்கு பரிசு கிடைத்து விடுகிறது. உலகத்தில் உண்மையான அமைதி எப்படி ஏற்படும் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். உலகத்தில் அமைதி எப்பொழுது இருந்தது என்று அவர்களிடம் கேட்கவாவது செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். எப்பொழுதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பார்த்திருக்கிறீர்களா? எந்த விதமான அமைதியை கேட்கிறீர்கள்? எப்பொழுது இருந்தது? நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் அதனால் நீங்கள் கேட்கலாம். மேலும் அவரே தெரிந்திருக்க வில்லை என்றால் அவரை என்ன என்று கூறுவது? எந்த விதமான அமைதியை கேட்கிறீர்கள் என்று நீங்கள் செய்தித் தாள்கள் மூலம் கேளுங்கள். சாந்திதாமம் இருக்கவே இருக்கிறது அங்கு அனைத்து ஆத்மாக்களும் வசிக்கின்றன. ஒன்று சாந்திதாமத்தை நினைவு செய்யுங்கள், இரண்டாவது, சுகதாமத்தை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். படைப்புச் சக்கரத்தின் முழு ஞானம் இல்லாத காரணத்தினால் எவ்வளவு பொய்யான விஷயங்களை எழுதி விட்டார்கள்.

நாம் இரட்டை கிரீடம் அணிந்தவர்களாக ஆகிறோம் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். நாம் தேவதையாக இருந்தோம், இப்பொழுது மீண்டும் மனிதனாகி விட்டோம். தேவதைகளுக்கு தேவதை என்று கூறப்படுகிறது, மனிதன் என்று கூறப்படுவதில்லை ஏனென்றால் தெய்வீக குணங்கள் நிறைந்தவர்கள் இல்லையா!. யாரிடம் அவகுணம் இருக்கிறதோ அவர் குணமற்ற என்னிடம் எந்த குணமும் இல்லை என்று கூறுகிறார். சாஸ்திரங்களில் கேள்விப்பட்ட அச்சுதம் கேசவம், ஆகியவைகளை பாடிக்கொண்டு மட்டும் இருக்கிறார்கள். எப்படி கிளிக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது இல்லையா, அதே போல்.! தந்தையே வந்து எங்கள் அனைவரையும் தூய்மை யாக்குங்கள் என்று கூறுகிறார்கள். பிரம்மலோகத்தை உண்மையில் உலகம் என்று கூற முடியாது. அங்கே ஆத்மாக்கள் நீங்கள் வசிக்கிறீர்கள். உண்மையில் பங்கேற்று செய்வது இந்த உலகத்தில் தான். அது சாந்திதாமம். நான் அமர்ந்து குழந்தைகள் உங்களுக்கு என்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கிறேன் என்று தந்தை புரிய வைக்கிறார். நான் வருவதோ யார் தன்னுடைய பிறவிகளைப் பற்றி தெரிந்திருக்க வில்லையோ அவருடைய உடலில் தான் வருகிறேன். இவரும் இப்பொழுது கேட்கிறார் நான் இவர் உடலில் பிரவேசம் செய்கிறேன். பழைய தூய்மையற்ற உலகம் இராவணனின் உலகம் ஆகும். யார் நம்பர் ஒன் தூய்மையாக இருந்தாரோ அவரே பின்பு கடைசி நம்பரில் தூய்மையற்றவராக ஆகியிருக்கிறார். அவரை என்னுடைய இரதமாக ஆக்குகிறேன். முதலிலிருந்து கடைசியில் வந்திருக்கிறார். பிறகு முதலில் செல்ல வேண்டும். பிரம்மா மூலமாக ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன் என்று படங்களிலும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. தேவி தேவதா தர்மத்தில் நான் வருகிறேன் என்று அப்படி கூறுவதில்லை. யார் உடலில் வந்து நான் அமர்ந்திருக்கிறேனோ அவரே பின்பு நாராயணன் ஆகிறார். விஷ்ணு வேறு யாரும் இல்லை. இலட்சுமி நாராயணன் அல்லது இராதா கிருஷ்ணனின் ஜோடி என்று கூறலாம். விஷ்ணு யார் என்று இதையும் யாரும் தெரிந்திருக்கவில்லை. நான் உங்களுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள், அனைத்து படங்கள் ஆகியவற்றின் இரகசியத்தைப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். நான் யாரில் பிரவேசம் ஆகியிருக்கிறேனோ அவர் இதுவாக (விஷ்ணு) ஆகிறார். இல்லற மார்க்கம் இல்லையா. இந்த பிரம்மா, சரஸ்வதி பின்பு அதுவாக (இலட்சுமி நாராயணன்) ஆகிறார்கள். இவரில் (பிரம்மாவில்) நான் பிரவேசமாகி பிராமணர்களுக்கு ஞானம் கொடுக்கிறேன். அப்பொழுது இந்த பிரம்மாவும் கேட்கிறார். இவர் முதல் நம்பரில் கேட்கிறார். இவர் தான் பிரம்மபுத்திரா என்ற பெரிய நதி. மேளாவும் கடல் மற்றும் பிரம்மபுத்திரா நதி சங்கம மாகும் இடத்தில் நடக்கிறது. எங்கு கடலும் நதியும் சங்கமிக்கிறதோ அங்கு பெரிய மேளாக்கள் (திருவிழா) நடக்கும். நான் இவரில் பிரவேசம் ஆகிறேன், இவர் அவராக ஆகிறார். இவருக்கு அதுவாக (பிரம்மாவிலிருந்து விஷ்ணு) ஆவதில் ஒரு விநாடி ஆகிறது. சாட்சாத்காரம் ஏற்படுகிறது. உடனே நான் இதுவாக ஆகப்போகிறேன் என்று நிச்சயம் ஏற்பட்டு விடுகிறது. உலகத்தின் அதிபதியாக ஆகுபவன். அப்படியானால் இந்த கழுதை போன்று பொதி சுமப்பதை ஏன் செய்ய வேண்டும்? அனைத்தையும் விட்டு விட்டார். உங்களுக்கும் தந்தை வந்திருக்கிறார் இந்த உலகம் அழியப்போகிறது என்று முதலில் தெரிந்தவுடன் ஓடி வந்து விட்டீர்கள். பாபா உங்களை அழைக்கவில்லை. ஆம் பட்டி உருவாக வேண்டியதாக இருந்தது. கிருஷ்ணன் அனைவரையும் கூட்டிச் சென்று விட்டார் என்று கூறுகிறார்கள். நல்லது. கிருஷ்ணன் கூட்டிச் சென்றார் என்றாலும் பட்டத்து இராணி ஆக்கினார் இல்லையா. அப்படி இந்த ஞானத்தினால் உலகத்தின் மகாராஜா, மகாராணி ஆகிறீர்கள். இதுவோ நல்லது தான். இதில் தீய வார்த்தைகள் கேட்பதற்கு அவசியம் இல்லை. பிறகு களங்கம் எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுது தான் களங்கீதர் ஆகிறார் என்றும் கூறுகிறார்கள். சிவபாபா மேல் தான் களங்கம் ஏற்படுகிறது. எவ்வளவு நிந்தனை செய் கிறார்கள். ஆத்மாவாகிய நாம் பரமாத்மா ஆகிறோம், பரமாத்மாவிலிருந்து நாம் ஆத்மா வருகிறோம் என்று கூறுகிறார்கள். அந்த மாதிரி இல்லை என்று தந்தை இப்பொழுது புரிய வைக்கிறார். நாம் ஆத்மா இப்பொழுதோ பிராமணன். பிராமணன் அனைவரையும் விட உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர். இதை தலைமுறையினர் என்று கூற முடியாது. எதில் இராஜ்யம் இருக்கிறதோ அதைத் தான் தலைமுறை என்று கூறலாம். இது உங்களுடைய குலம் ஆகும். மிகவும் சுலபம் தான், நாம் பிராமணனிலிருந்து தேவதையாக ஆகுபவர்கள் எனவே தெய்வீக குணங்களை அவசியம் தாரணை செய்ய வேண்டும். சிகரெட், பீடி ஆகியவைகளை தேவதை களுக்கு பிரசாதமாக படைக்கிறார்களா என்ன? ஸ்ரீநாத் கோவிலில் நெய்யினால் ஆன பிரசாதம் தயாரிக்கிறார்கள். அதிகமாக படைக்கிறார்கள், பிறகு கடைகள் மூலமாக விற்க வேண்டிய தாகிவிடுகிறது. யாத்திரீகர்கள் சென்று வாங்குகிறார்கள். மனிதர்களுக்கு அதிக பாவனை இருக்கிறது. சத்யுகத்திலோ இந்த மாதிரி விஷயங்கள் இருப்பதில்லை. இந்த மாதிரி ஏதாவது ஒரு பொருளை அசுத்தப்படுத்தும் ஈக்களும் இருப்பதில்லை. அந்த மாதிரி வியாதி ஆகியவையும் அங்கிருப்பதில்லை. பெரிய மனிதர்களின் இடங்களில் சுத்தமும் மிக நன்றாக இருக்கும். அங்கோ அந்த மாதிரி விஷயங்களே இருப்பதில்லை, நோய் ஆகியவையும் இருப்பதில்லை. இந்த அனைத்து வியாதிகளும் துவாபரயுகத்திலிருந்து உருவாயின. தந்தை வந்து உங்களை நிரந்தர ஆரோக்கிய மானவராக ஆக்குகிறார். தந்தையை நினைவு செய்வதற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அதன் மூலம் நிரந்தர ஆரோக்கியமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். ஆயுளும் நீண்டதாக ஆகிவிடு கிறது. நேற்றைய விஷயங்கள் தான். 150 வருட ஆயுள் இருந்தது இல்லையா! இப்பொழுது சராசரி 40-45 வருடங்கள். ஏனென்றால் அவர்கள் யோகிகளாக இருந்தார்கள், இவர்கள் போகிகள்.

நீங்கள் இராஜ யோகிகள், இராஜ ரிஷிகள் எனவே நீங்கள் தூய்மையானவர்கள். ஆனால் இது புருஷோத்தம சங்கமயுகம், மாதம் அல்லது வருடமில்லை. நான் ஒவ்வொரு கல்பத்திலும் புருஷோத்தம சங்கமயுகத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். தந்தை தினந்தோறும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் தூய்மை ஆக வேண்டும் என்றால் என்னை நினைவு செய்யுங்கள் என்ற ஒரு விஷயத்தை ஒருபொழுதும் மறக்காதீர்கள் என்று கூறுகிறார். உங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். உடல் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் மறந்து விடுங்கள். இப்பொழுது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். உங்கள் ஆத்மாவைத் தூய்மைப் படுத்துவதற்காக நான் வந்திருக்கிறேன். அதன் மூலம் உடலும் தூய்மையானதாகக் கிடைத்து விடும். இங்கோ விகாரம் மூலமாகப் பிறக்கிறார்கள். ஆத்மா எப்பொழுது சம்பூர்ண தூய்மையாகி விடுகிறதோ அப்பொழுது நீங்கள் இந்த பழைய செருப்பை (உடலை) விட்டு விடுகிறீர்கள். பின்பு புதியது கிடைத்துவிடும். வந்தே மாதரம் என்பது உங்களுடைய மஹிமை. நீங்கள் நிலத்தையும் தூய்மையாக்குகிறீர்கள். மாதர்கள் நீங்கள் சொர்க்கத்தின் வாசலைத் திறக்கிறீர்கள். ஆனால் இதை யாரும் தெரிந்திருக்கவில்லை. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் குட்மார்னிங். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஆத்மா என்ற ஜோதியை பிரகாசம் ஆக்குவதற்காக அதிகாலையில் நினைவு யாத்திரையில் அமருங்கள். நினைவின் மூலம் தான் துரு விலகும். ஆத்மாவில் படிந்த அழுக்கு நினைவின் மூலம் விலகி சுத்தமான தங்கம் ஆக வேண்டும்.

2) தந்தையிடமிருந்து உயர்ந்த பதவியின் பரிசு வாங்குவதற்காக பாவனையின் கூடவே ஞானம் நிறைந்தவர் மற்றும் குணம் நிறைந்தவராகவும் ஆக வேண்டும். சேவை செய்து காண்பிக்க வேண்டும்.

வரதானம்:
நடத்தை மற்றும் முகத்தினால் தூய்மையினுடைய அலங்காரத்தின் ஜொலிப்பைக் காட்டக்கூடிய அலங்கார மூர்த்தி ஆகுவீர்களாக.

தூய்மை பிராமண வாழ்க்கையின் அலங்காரம் ஆகும். ஒவ்வொரு நேரமும் முகம் மற்றும் நடத்தை மூலம் தூய்மையினுடைய அலங்காரத்தின் அனுபவம் பிறருக்கு ஏற்பட வேண்டும். பார்வையில், முகத்தில், கைகளில், கால்களில் சதா தூய்மையின் அலங்காரம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். இவர்களின் தோற்றத்தில் தூய்மை தென்படுகிறது, கண்களில் தூய்மையின் ஜொலிப்பு உள்ளது, வாயில் தூய்மையின் புன்னகை உள்ளது என்று ஒவ்வொருவரும் வர்ணிக்க வேண்டும். வேறு எந்த விசயமும் அவர்களுடைய பார்வைக்குத் தெரியக் கூடாது. இதையே தூய்மையின் அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மூர்த்தி என்று கூறுகின்றார்கள்.

சுலோகன்:
வீணான சம்பந்தம், தொடர்பு கூட அக்கவுண்ட்டை (கணக்கை) காலி செய்துவிடுகின்றது, ஆகையினால், வீணானதை முடிவடையச் செய்யுங்கள்