07.04.24    காலை முரளி            ஓம் சாந்தி  01.03.99      பாப்தாதா,   மதுபன்


முழுமையான தூய்மையாகி, நல்ல பழக்க வழக்கங்களின் நல்லிணக்கத்தைக் கொண்டாட வேண்டும் - இது தான் உண்மையான ஹோலி

இன்று பாப்தாதா நாலாபுறத்தின் தங்களுடைய மிகவும் புனிதமான, மிக உயர்ந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உலகில் அனைவரிலும் உயர்ந்தவரிலும் உயர்ந்த சிரேஷ்ட ஆத்மாக் கள் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? ஏனென்றால் நீங்கள் அனைவரும் உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள். முழுக் கல்பத்திலும் சுற்றி வந்து பாருங்கள் -- அப்போது அனைவரிலும் உயர்ந்த பதவி வகிப்பவர்களாக, வேறு யாராவது காணப் படுகிறார்களா? இராஜ்ய அதிகாரி சொரூபத்திலும் கூட உங்களை விட உயர்ந்த பதவி, இராஜ்ய அதிகாரி ஆகியிருக்கிறார்களா? பிறகு பூஜை மற்றும் மகிமையில் பாருங்கள். எவ்வளவு பூஜை விதிபூர்வமாக ஆத்மாக்களாகிய உங்களுக்கு நடைபெறுகிறது! அதைவிட அதிகமாக வேறு யாருக்காவது இருக்கிறதா? டிராமாவின் அற்புத ரகசியம் எவ்வளவு சிரேஷ்டமானது! நீங்கள் சுயம் சைதன்ய சொரூபத்தில், இச்சமயம் தங்களின் பூஜைக்குரிய சொரூபத்தை ஞானத்தின் மூலம் அறிந்திருக்கவும் செய்கிறீர்கள். பார்க்கவும் செய்கிறீர்கள். ஒரு பக்கம் சைதன்ய ஆத்மாக்கள் நீங்கள், மற்றும் இன்னொரு பக்கம் உங்கள் ஜட சித்திரம் பூஜ்ய ரூபத்தில் உள்ளது. உங்களுடைய பூஜைக்குரிய ரூபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஜட ரூபத்தில் இருக்கிறீர்கள். மற்றும் சைதன்ய ரூபத்திலும் இருக்கிறீர்கள். ஆக, அற்புதமான விளையாட்டு இல்லையா? மேலும் இராஜ்யத்தின் கணக்குப்படியும் கூட முழுக் கல்பத்திலும் நிர்விக்ன, அகண்ட (இடைவிடாத) ஆடாத, அசையாத ராஜ்யம் என்பது குழந்தைகளாகிய உங்களுடையது தான் நடைபெறுகிறது. இராஜாவாகவோ அநேகர் ஆகின்றனர். ஆனால் உலகத்திற்கே இராஜாவகிய நீங்கள் அல்லது உலக ராஜவின் இராஜ குடும்பத்தினர் அனைவரிலும் சிரேஷ்டமானவர்கள். ஆக, இராஜ்யத்திலும் மிக உயர்ந்த, பூஜைக்குரிய ரூபத்திலும் கூட மிக உயர்ந்த மற்றும் இப்போது சங்கமயுகத்தில் பரமாத்ம ஆஸ்திக்கு அதிகாரி, பரமாத்ம சந்திப்புக்கு அதிகாரி, பரமாத்ம அன்புக்கு அதிகாரி, பரமாத்ம பரிவாரத்தின் ஆத்மாக்களாக வேறு யாராவது ஆகிறார்களா? நீங்கள் தான் ஆகிறீர்கள் இல்லையா? ஆகி விட்டிருக்கிறீர்களா அல்லது ஆகிக் கொண்டிருக் கிறீர்களா? ஆகியும் விட்டீர்கள். மேலும் இப்போதோ ஆஸ்தி பெற்று, சம்பன்னமாகி பாபாவுடன் தங்களின் வீட்டுக்குச் செல்லப் போகிறீர்கள். சங்கமயுகத்தின் சுகம், சங்கமயுகத்தின் பிராப்திகள், சங்கமயுகத்தின் சமயம் சுகமாக உள்ளது இல்லையா? மிகவும் பிடித்துள்ளது. இராஜ்யத்தின் சமயத்தை விடவும் சங்கமயுகத்தின் சமயம் பிரியமானதாக உள்ளது இல்லையா? பிரியமானதாக உள்ளதா அல்லது சீக்கிரம் போக வேண்டும் என விரும்புகிறீர்களா? பிறகு ஏன் கேட்கிறீர்கள் - பாபா, விநாசம் எப்போது நடைபெறும் தெரிய வில்லையே? என்ன நடக்கும்? நாம் எங்கே இருப்போம்? பாப்தாதா சொல்கிறார் - நீங்கள் எங்கே இருந்தாலும் நினைவில் இருப்பீர்கள். பாபாவுடன் கூடவே இருப்பீர்கள். சாகாரத்தில் அல்லது ஆகாரத்தில் உடன் இருப்பீர்களானால் எதுவும் நடக்காது. சாகாரத்தில் கதை கேட்டிருக்கிறீர்கள் இல்லையா - பூனையின் குட்டிகள் அடுப்பில் இருந்தாலும் பத்திரமாக இருந்தது தானே? அல்லது எரிந்து விட்டனவா? அனைத்தும் பத்திரமாக இருந்தது. ஆக, பரமாத்ம குழந்தைகள் நீங்கள் அவரோடு கூடவே இருப்பீர்களானால் பாதுகாப்பாக இருப்பீர்கள். வேறு எங்காவது புத்தி இருக்கு மானால் ஏதாவது அலைந்திருக்கும் இல்லையா? ஏதேனும் தாக்கம் ஏற்படும். கூடவே இணைந்து இருப்பீர்கள். ஒரு விநாடி கூட தனியாக இருக்க மாட்டீர்கள் என்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். சில நேரம் வேலை-தொழில் அல்லது சேவையில் தனிமையை அனுபவம் செய்கிறீர்களா? என்ன செய்வேன், தனியாக இருக்கிறேன். அதிக வேலை உள்ளது. பிறகு களைத்துப் போகவும் செய்கிறீர்கள். அப்போது பாபாவை ஏன் துணைவராக ஆக்கிக் கொள்ளவில்லை? இரண்டு புஜங்கள் உள்ளவர்களைத் துணையாக்கிக் கொள்கிறீர்கள். ஆயிரம் புஜங்கள் கொண்ட வரை ஏன் துணை யாக ஆக்கிக் கொள்வதில்லை. யார் அதிக சகயோகம் கொடுப்பார்கள்? ஆயிரம் புஜங்கள் உள்ளவரா, இரண்டு புஜங்கள் உள்ளவரா?

சங்கமயுகத்தில் பிரம்மாகுமார்-குமாரிகள் தனியாக இருக்க முடியாது. சேவையில், கர்ம யோகத் தில் அதிக பிஸி ஆகி விடுகிறீர்கள் இல்லையா? அப்போது துணையையும் மறந்து போகிறீர்கள். பிறகு களைத்துப் போகிறீர்கள். பிறகு சொல்கிறீர்கள் - களைத்து விட்டேன் என்ன செய்வேன்? களைத்துப் போகாதீர்கள். பாப்தாதா தமது துணையை சதா தருவதற்கு வந்துள்ளார் எனும் போது பரந்தாமத்தை விட்டு அவர் ஏன் வந்திருக்கிறார்? உறங்கும் போது, விழிக்கும் போது, கர்மம் செய்யும் போது துணையாக இருப்பதற்காகத் தான் வந்திருக்கிறார். பிரம்மா பாபாவும் உங்கள் அனைவருக்கும் சகயோகம் கொடுப்பதற்காக அவ்யக்தமானார். வ்யக்த ரூபத்தை விட அவ்யக்த ரூபத்தில் சகயோகம் கொடுப்பதற்கான வேகம் மிகத் தீவிரமாக உள்ளது. எனவே பிரம்மா பாபாவும் கூட தமது வதனத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஆக, சிவதந்தை மற்றும் பிரம்மா தந்தை இருவரும் ஒவ்வொரு சமயம் உங்கள் அனைவருக்கும் சகயோகம் தருவதற்கு சதா ஆஜராகி யுள்ளனர். நீங்கள் பாபா என்று நினைத்தால் உடனே அனுபவம் செய்வீர்கள். சேவை-சேவை-சேவை இது மட்டுமே நினைவிருந்தால் பாபாவை அருகில் இருந்து பார்ப்பதற்காக தனியாக ஆக்கி விடுகிறீர்கள் என்றால் பாபாவும் சாட்சியாகிப் பார்க்கிறார் - பார்க்கலாம் எது வரை தனியாக ஆக்குகிறார்கள் என்று பிறகும் இங்கே தான் வந்தாக வேண்டும். எனவே துணையை விட்டு விடாதீர்கள். தனது அதிகாரம் மற்றும் அன்பு என்ற சூட்சும கயிற்றால் கட்டி வைத்திருங்கள். தளர்வாக விட்டு விடுகிறீர்கள். அன்பைத் தளர்வாக விட்டு விடுகிறீர்கள். அதிகாரத்தைக் கொஞ்சம் ஸ்மிருதியின் மூலம் ஒதுக்கி வைத்து விடுகிறீர்கள். எனவே அது போல் செய்யக் கூடாது. எப்போது சர்வசக்திவான் துணையைத் தருவதற்கு முன்வருகிறாரோ, இது போன்ற ஆஃபர் கல்ப முழுவதிலும் கிடைக்குமா? கிடைக்காது இல்லையா? ஆக, பாப்தாதாவும் சாட்சியாகிப் பார்க்கிறார். நல்லது. பார்க்கலாம் -- எது வரை தனியாக ஆக்குகிறார்கள்.

ஆக, சங்கமயுகத்தின் சுகம் மற்றும் பெருமைகளை வெளிப்படுத்துங்கள். புத்தி பிஸியாக உள்ளது என்றால் ஸ்மிருதி மர்ஜ் ஆகி விடுகிறது. நீங்கள் யோசியுங்கள் -- முழு நாளிலும் யாரிடமாவது கேளுங்கள் -- பாபா நினைவு இருக்கிறதா? அல்லது பாபா நினைவு மறந்து போகிறதா? அப்போது என்ன சொல்வார்கள்? இங்கே இதுவோ சரி தான். நினைவு இருக்கிறது. ஆனால் இமர்ஜ் ரூபத்தில் இருக்கிறதா அல்லது மர்ஜ் ஆகி இருக்கிறதா? ஸ்திதி என்னவாக உள்ளது? இமர்ஜ் ரூப ஸ்திதியா அல்லது மர்ஜ் ரூபத்தின் ஸ்திதியா? இதில் என்ன வேறுபாடு உள்ளது? இமர்ஜ் ரூபத்தில் நினைவை ஏன் வைப்பதில்லை? இமர்ஜ் ரூபத்தின் நஷா, சக்தி, சகயோகம், வெற்றி மிகப்பெரியது! நினைவோ மறக்க முடியாதது. ஏனென்றால் ஒரு பிறவியின் உறவன்று. சிவபாபா சத்யுகத்தில் உடன் இருக்க மாட்டார் என்றாலும் உறவு இதே தான் இருக்கும் இல்லையா? அதை மறக்க முடியாது - இது சரியானது தான். ஆம், ஏதேனும் விக்ன வசமாக ஆகி விட்டீர்கள் என்றால் மறந்தும் போகிறது. ஆனால் எப்போது இயற்கையான ரூபத்தில் இருப்பீர்களோ, அப்போது மறப்பதில்லை. ஆனால் மர்ஜ் ஆகி உள்ளது. எனவே பாப்தாதா சொல்கிறார் - அடிக்கடி சோதித்துப் பாருங்கள் - கூடவே இருக்கும் அனுபவம் மர்ஜ் ரூபத்தில் உள்ளதா, அல்லது இமர்ஜ் ரூபத்தில் உள்ளதா? அன்பு இருக்கிறது. அன்பு உடைந்து விட முடியுமா? ஆக, அன்பு என்பது எப்படி துண்டிக்கப் படாதோ, எனவே அன்பின் பலனை எடுத்துக் கொள்ளுங்கள். நன்மையை எடுத்துக் கொள்வதற்கான வழிவகையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

பாப்தாதா பார்க்கிறார் -- அன்பு தான் உங்களை பாபாவுடையவராக ஆக்கியிருக்கிறது. உங்கள் இருப்பிடத்தில் எப்படி வேண்டுமானாலும் இருநதிருக்கலாம். எவ்வளவோ முயற்சி செய்திருக் கலாம். ஆனால் பிறகும் கூட மதுபனில் வந்து சேர்ந்து விடுகிறீர்கள். பாப்தாதாவுக்குத் தெரியும். பார்க்கிறார் - அநேக குழந்தைகளுக்கு கலியுக சூழ்நிலை இருப்பதால் டிக்கெட் எடுப்பதும் கூட கஷ்டமாக உள்ளது. அன்பு சேர்த்து விடுகிறது. அப்படித் தான் இல்லையா? அன்பில் வந்து சேர்ந்து விடுகிறீர்கள். ஆனால் சூழ்நிலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உண்மை யான மனதில் பிரபு திருப்தி அடையவே செய்கிறார். ஆனால் ஸ்தூல சகயோகம் கூட எங்காவது எப்படியாவது கிடைத்து விடுகிறது. இரட்டை வெளிநாட்டினர் என்றாலும், பாரதவாசி என்றாலும் அனைவருக்கும் பாபாவின் அன்பு, சூழ்நிலை என்ற சுவரைக் கடந்து செல்ல வைத்து விடும். அப்படித் தான் இல்லையா? அவரவர் சென்டர்களில் பாருங்கள். அப்போது அத்தகைய குழந்தை களும் இருக்கிறார்கள் -- இங்கிருந்து போகிறார்கள், யோசிக்கிறார்கள் - அடுத்த வருடம் வர முடியுமோ இல்லையா தெரியவில்லையே! ஆனாலும் கூட வந்து சேர்ந்து விடுகிறார்கள். இது தான் அன்பின் நிரூபணம். நல்லது.

இன்று ஹோலி கொண்டாடினீர்களா? கொண்டாடி விட்டீர்களா ஹோலியை? பாப்தாதாவோ ஹோலி கொண்டாடும் ஹோலி (புனித அன்னப் பறவைகளை) குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் அனைவருக்கும் இது தான் டைட்டில் -- ஹோலியஸ்ட்! துவாபர யுகத்திலிருந்து எந்த ஒரு தர்மாத்மா அல்லது மகாத்மாவும் அனைவரையும் ஹோலியஸ்ட் ஆக்க வில்லை. சுயம் ஆகிறார்கள். ஆனால் தங்களைப் பின் பற்றுவோரை, உடனிருப்போரை ஹோலி யஸ்ட்டாக, பவித்திரமாக ஆக்குவதில்லை. மேலும் இங்கே பவித்திரதா என்பது பிராமண வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாகும். படிப்பும் கூட என்ன? உங்களது ஸ்லோகனும் கூட -- பவித்திரமாகுங்கள், யோகி ஆகுங்கள் -- ஸ்லோகன் உள்ளது இல்லையா? பவித்திரதா தான் மகான் தன்மை. பவித்திரதா தான் யோகி வாழ்க்கைக்கு ஆதாரம். சில நேரம் குழந்தைகள் அனுபவம் செய்கிறார்கள் -- போகப்போக மனதிலும் கூட அபவித்திரதா, அதாவது வீணான அல்லது எதிர் மறையான எண்ணங்கள், பரசிந்தனையின் சங்கல்பங்கள் நடைபெறுகின்றன என்றால் சக்திசாலி யோகாவை விரும்பினாலும், அது நடப்பதில்லை. ஏனென்றால் கொஞ்சம் கூட, சங்கல்பத்திலும் கூட எந்த விதமான அபவித்திரதாவும் உள்ளது என்றால், எங்கே அபவித்திரதாவின் அம்சம் உள்ளதோ, அங்கே பவித்திர பாபாவின் நினைவு, யாராக இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ, அப்படி வர முடியாது. எப்படி இரவு-பகல் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல் வருவதில்லை. எனவே பாப்தாதா நிகழ்காலத்தில் பவித்திரதா மீது அடிக்கடி கவனம் வைக்குமாறு செய்கிறார். சில காலத்துக்கு முன்பு பாப்தாதா கர்மத்தில் மட்டும் அபவித்திரதா பற்றி சமிக்ஞை கொடுத்தார். ஆனால் இப்போது சமயம் சம்பூர்ண நிலைக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறது. எனவே மனதிலும் கூட அபவித்திரதாவின் அம்சம் ஏமாற்றி விடும். ஆக, மனம்-சொல்-செயல்-சம்பந்தம்-தொடர்பில், அனைத்திலும் பவித்திரதா மிக அவசியமானதாகும். மனதை லேசாக்கக் கூடாது. ஏனென்றால் மனம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இது தான் மனதை அதிகமாக ஏமாற்றி விடுகிறது. பிராமண வாழ்க்கையின் உள்ளார்ந்த ஆஸ்தி என்ன உள்ளதோ -- சதா சுக சொரூபம், சாந்த சொரூபம் மனதின் திருப்தி உள்ளது. அதை அனுபவம் செய்வதற்கு மனதின் பவித்திரதா வேண்டும். வெளிப்பற சாதனங்கள் மூலம் அல்லது சேவை மூலம் தன்னைத் தான் குஷிப் படுத்துவது -- இதுவும் கூட தன்னை ஏமாற்றுவதாகும்.

பாப்தாதா பார்க்கிறார் -- சில நேரம் குழந்தைகள் தங்களை இதே ஆதாரத்தில் நல்லவர் எனப் புரிந்து, குஷியாக இருப்பதாகப் புரிந்து கொண்டு தன்னைத் தான் ஏமாற்றிக் கொள்கிறார்கள். இப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஓர் ஆழமான ரகசியமாகும். என்ன நடக்கிறது என்றால், பாபா வள்ளல் ஆவார். நீங்கள் வள்ளலின் குழந்தைகள் எனும் போது சேவையை யுக்தியுடன் செய்வதில்லை. கலப்படமாக உள்ளது. கொஞ்சம் நினைவு, கொஞ்சம் வெளிப்புற சாதனங்கள் அல்லது குஷியின் ஆதாரத்தில் உள்ளது. மனதின் ஆதாரத்தில் இல்லை. ஆனால் புத்தியின் ஆதாரத்தில் சேவை செய்கின்றனர் என்றால் சேவையின் பிரத்தியட்ச பலன் அவர்களுக்கும் கூடக் கிடைக்கிறது. ஏனென்றால் பாபா வள்ளல் மற்றும் அவர்கள் அதிலேயே குஷியாக இருந்து விடுகின்றனர் - ஆஹா! நமக்கோ பலன் கிடைத்து விட்டது. நாம் செய்வது நல்ல சேவை. ஆனால் அந்த மனதின் திருப்தி சதா காலமும் இருப்பதில்லை. மற்றும் ஆத்மா யோகயுக்த், சக்திசாலி நினைவின் அனுபவத்தைச் செய்ய முடிவதில்லை. அதிலிருந்து வஞ்சிக்கப் பட்டு இருந்து விடுகிறார்கள். மற்றப்படி எதுவுமே கிடைப்பதில்லை என்று அப்படி இல்லை. ஏதேனும் கிடைக்கிறது. ஆனால் சேமிப்பாவதில்லை. சம்பாதித்தோம், சாப்பிட்டோம், முடிந்தது. எனவே இதையும் கவனத்தில் வைக்க வேண்டும். சேவை மிக நன்றாகச் செய்து கொண்டி ருக்கிறோம். பலனும் நல்லதாகக் கிடைத்து விட்டது. ஆக, சாப்பிட்டோம், முடிந்தது. சேமிப்பு என்ன ஆனது? நன்கு சேவை செய்தோம், நல்ல ரிசல்ட் வந்தது. ஆனால் அந்த சேவையின் பலன் கிடைத்தது. சேமிப்பாகவில்லை. எனவே சேமிப்பதற்கான விதி -- மனம்-சொல்-செயலில் தூய்மை. அஸ்திவாரம் பவித்திரதா. சேவையில் கூட அஸ்திவாரம் பவித்திரதா தான். சுத்தமாக, தூய்மை யாக இருங்கள். வேறு எந்த ஓர் உணர்வும் கலப்படமாகி இருக்கக் கூடாது. உணர்விலும் கூட பவித்திரதா, பாவனையிலும் பவித்திரதா. ஹோலி என்பதன் அர்த்தமே பவித்திரதா தான். அபவித்திராவை எரிக்க வேண்டும். எனவே முதலில் எரிக்கின்றனர். பிறகு கொண்டாடுகின்றனர். பிறகு பவித்திரமாகி சம்ஸ்கார நல்லிணக்கத்தைக் கொண்டாடுகின்றனர். ஆக, ஹோலி என்பதன் அர்த்தம் - எரிப்பது, கொண்டாடுவது. வெளியில் உள்ளவர்களோ, ஆரத்தழுவி சந்திக்கின்றனர். ஆனால் இங்கே சம்ஸ்கார நல்லிணக்கம் - இது தான் மங்களமான சந்திப்பாகும். ஆக, அத்தகைய ஹோலி கொண்டாடினீர்களா? அல்லது வெறுமனே நடனம் ஆடினீர்களா? அதுவும் நல்லது தான் - நன்றாகக் கொண்டாடுங்கள். பாப்தாதா குஷியடைகிறார் -- பன்னீர் தெளியுங்கள், நடனமாடுங்கள். ஆனால் சதா நடனமாடுங்கள். வெறுமனே 5-10 நிமிடங்களின் நடனம் இல்லை. ஒருவர் மற்றவருக்குள் குணங்களின் வைப்ரேஷனைப் பரப்ப வேண்டும். இது தான் பன்னீர் தெளிப்பதாகும். மேலும் எரிப்பது பற்றியோ நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். எதை எரிக்க வேண்டும்? இது வரையிலும் கூட எரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வோர் ஆண்டும் கை உயர்த்தி விட்டுச் செல்கிறீர்கள். அவ்வளவு தான். திட சங்கல்பம் ஆகி விட்டது. பாப்தாதா குஷி அடைகிறார். தைரியமோ வைக்கிறீர்கள். ஆக, தைரியம் வைத்ததற்காக பாப்தாதா வாழ்த்துகளைத் தெரிவிக் கிறார். தைரியம் வைப்பதும் முதல் அடி எடுத்து வைப்பதாகும். ஆனால் பாப்தாதாவின் சுப ஆசை என்ன? சமயத்தின் தேதியைப் பார்க்காதீர்கள். 2001-இல் நடக்குமா, 2005-ல் நடக்குமா என இதை யோசிக்காதீர்கள். எவர்-ரெடி ஆகவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. இதையும் பாப்தாதா விட்டுவிடுகிறார். ஆனால் யோசியுங்கள் -- நீண்ட கால சம்ஸ்காரம் வேண்டும் இல்லையா? நீங்கள் தாம் சொல்கிறீர்கள் - நீண்ட கால புருஷார்த்தம், நீண்ட கால ராஜ்ய அதிகாரி ஆக்குகிறது. சமயம் வந்ததால் திட சங்கல்பம் வைத்தீர்கள் என்றால், அது நீண்ட காலம் ஆகிறதா? எதில் சேரும்? அல்ப காலத்தில் என்று ஆகும் இல்லையா? ஆக, அவிநாசி தந்தையிடம் என்ன ஆஸ்தி பெற்றீர்கள்? அல்ப காலத்திற்கானது. இது நன்றாக இருக்கிறதா? நன்றாக இல்லை தானே? எனவே நீண்ட கால அப்பியாசம் தேவை. எவ்வளவு காலம் என்பதை யோசிக்காதீர்கள். எவ்வளவு நீண்ட கால அப்பியாசம் இருக்குமோ, அவ்வளவு கடைசி காலத்திலும் ஏமாற மாட்டீர்கள். நீண்ட கால அப்பியாசம் இல்லை என்றால் இப்போதைய நீண்ட கால சுகம், நீண்ட கால சிரேஷ்ட ஸ்திதியின் அனுபவத்தில் இருந்தும் கூட வஞ்சிக்கப்பட்டவராக ஆகி விடுவீர்கள். அதனால் என்ன செய்ய வேண்டும்? யாருடைய புத்தியிலாவது தேதிக்கான எதிர்பார்ப்பு இருக்குமானால், காத்திருக்காதீர்கள். ஏற்பாடு செய்யுங்கள். நீண்ட காலத்திற்கான ஏற்பாடு செய்யுங்கள். தேதியையும் நீங்கள் கொண்டுவர வேண்டும். சமயமோ இப்போதும் கூட எவர்-ரெடியாக உள்ளது. நாளை கூட நடக்க முடியும். ஆனால் சமயம் உங்களுக்காக நின்று கொண்டுள்ளது. நீங்கள் சம்பன்னமாவீர் களானால் சமயத்தின் திரை அவசியம் விலகிப் போய் விடும். நீங்கள் நின்றதால் அது நின்று விட்டுள்ளது. இராஜ்ய அதிகாரிகளோ தயாராக இருக்கிறீர்கள் இல்லையா? சிம்மாசனமோ காலியாக இருக்கக் கூடாது இல்லையா? தனியாக உலகத்தின் இராஜா அமர்ந்து கொள்வாரா என்ன? இதனால் அழகு இருக்குமா என்ன? இராயல் குடும்பம் வேண்டும், பிரஜைகள் வேண்டும். அனைவரும் வேண்டும். உலக இராஜா மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டால், பார்த்துக் கொண்டே இருப்பார் - என்னுடைய ராயல் குடும்பம் எங்கே போய் விட்டது? எனவே பாப்தாதாவுக்கு ஒரே சுப ஆசை -- குழந்தைகள் அனைவரும், புதியவராயினும் பழையவராயினும், யாரெல்லாம் தங்களை பிரம்மா குமாரி அல்லது பிரம்மாகுமார் எனச் சொல்லிக் கொள்கிறார்களோ, மதுபன் நிவாசியாக இருந்தாலும் வெளிநாட்டு நிவாசியாக இருந்தாலும், பாரதவாசியாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் நீண்ட கால பயிற்சி செய்து நீண்ட காலத்தின் அதிகாரி ஆக வேண்டும். சில நேரத்துக்கு மட்டும் இல்லை. பிடித்திருக்கிறதா? ஒரு கையின் ஓசை எழுப்புங்கள். பின்னால் இருப்பவர்கள் சாமர்த்தியசாலிகள். கவனத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதா பின்னால் இருப்பவர்களைத் தமக்கு முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறார். முன்னால் இருப்பவர் களோ, முன்னாலேயே இருக்கிறார்கள். (மெடிட்டேஷன் ஹாலில் அமர்ந்து முரளி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்) கீழே இருப்பவர்கள் பாப்தாதாவின் தலைக்கிரீடம் ஆகி அமர்ந்திருக் கின்றனர். அவர்களும் கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். கீழே இருப்பவர்களுக்குத் தியாகத்தின் பாக்கியமோ கிடைக்கவே செய்கிறது. உங்களுக்கு முன்னால் அமர்வதற்கான பாக்கியம் உள்ளது மற்றும் அவர்களுக்குத் தியாகத்தின் பாக்கியம் சேமிப்பாகிக் கொண்டிருக்கிறது. நல்லது. பாப்தாதாவின் ஓர் ஆசையைக் கேட்டீர்கள். பிடித்திருக்கிறது இல்லையா? இப்போது அடுத்த வருடம் என்ன பார்ப்பீர்கள்? இது போலத் தான் மீண்டும் கை உயர்த்துவீர்கள். கை உயர்த்துங்கள், இரண்டிரண்டு கை உயர்த்துங்கள். ஆனால் மனதின் கையையும் உயர்த்துங்கள். திட சங்கல்பத்தின் கையை சதா உயர்த்துங்கள்.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் சம்பூர்ண பவித்திரதாவின் ஜொலிக்கின்ற மணியைப் பார்க்க விரும்புகின்றார். கண்களில் பவித்திரதாவின் ஜொலிப்பு, பவித்திரதாவின் இரண்டு கண்களின் மணிகள், ஆன்மிகத்தினால் ஜொலிப்பதைப் பார்க்க விரும்புகின்றார். வார்த்தை யில் இனிமை, விசேஷத்தன்மை, விலைமதிப்பிட முடியாத வார்த்தை பேசுவதை விரும்புகிறார். கர்மத்தில் திருப்தியாகவும், பணிவாகவும் இருப்பதை எப்போதும் பார்க்க விரும்புகிறார். பாவனை யில் சதா சுப பாவனை மற்றும் உணர்வில் சதா ஆத்மிக உணர்வு, சகோதர-சகோதரன் என்ற உணர்வு. சதா உங்கள் நெற்றியில் இருந்து ஒளியின், ஃபரிஸ்தா தன்மையின் கிரீடம் காணப்பட வேண்டும். காணப்படுவதற்கான பொருள், அனுபவமாக வேண்டும். அத்தகைய அலங்கரிக்கப் பட்ட மூர்ததியாகப் பார்க்க விரும்புகின்றார். மேலும் அத்தகைய மூர்த்தி தான் சிரேஷ்ட பூஜைக்குரியவராக ஆவார். அவர்களோ உங்களுடைய ஜட சித்திரங்களை உருவாக்குவார்கள். பாபா சைதன்ய சித்திரத்தைப் பார்க்க விரும்புகின்றார். நல்லது.

நாலாபுறத்தின் சதா பாப்தாதாவுடன் கூடவே இருக்கக் கூடிய சமீபத்தின் சதா துணைவர்களுக்கு, சதா நீண்ட கால புருஷார்த்தத்தின் மூலம் நீண்ட கால சங்கமயுக அதிகாரம் மற்றும் வருங்கால ராஜ்ய அதிகாரத்தை அடையக்கூடிய மிகவும் புத்திசாலி ஆத்மாக்களுக்கு, சதா தங்களை சக்திகள், குணங்களால் அலங்கரித்துக் கொண்டு இருக்கக் கூடிய பாபாவின் நம்பிக்கை தீபங்களாகிய ஆத்மாக்களுக்கு, சதா தன்னை ஹோலியஸ்ட் (மிகவும் புனிதமானவர்) ஹையஸ்ட் (மிக உயர்ந்தவர்) ஸ்திதியில் நிலைத்திருக்கச் செய்கிற, பாபாவுக்கு சமமான அதி சிநேகி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே. அனைத்து வெளிநாடு மற்றும் இந்நாட்டின், தூரத்தில் அமர்ந்திருந்தாலும் பாபாவிற்கு முன்னால் அனுபவம் செய்பவர்களுக்கு பாப்தாதாவின் மிக-மிக-மிக அன்பு நினைவுகள்.

வரதானம்:
சமயத்தை ஆசிரியர் ஆக்குவதற்கு பதிலாக தந்தையை ஆசிரியர் ஆக்கக்கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.

குழந்தைகள் அநேகருக்கு சேவையின் ஊக்கம் உள்ளது. ஆனால் வைராக்கிய உள்ளுணர்வின் கவனம் இல்லை. இதில் கவனக்குறைவு உள்ளது. செல்கிறது நடக்கிறது ஆகி விடும் சமயம் வந்தால் சரியாகி விடும் இது போல் யோசிப்பது என்றால் சமயத்தைத் தன்னுடைய ஆசிரியர் ஆக்குவதாகும். குழந்தைகள் தந்தைக்கும் கூட ஆறுதல் சொல்கின்றனர் -- கவலைப் படாதீர்கள், சமயத்தில் சரியாகி விடும். செய்து விடுவோம். முன்னேறிச் சென்று விடுவோம். ஆனால் நீங்கள் மாஸ்டர் படைப்பவர். சமயம் உங்களுடைய படைப்பு. படைப்பே மாஸ்டர் படைப்வரின் ஆசிரியர் ஆவதென்பது அழகாக இருக்காது.

சுலோகன்:
தந்தையின் பாலனைக்கான பிரதிபலன் -- தன்னையும் அனைவரையும் மாற்றுவதில் சகயோகி ஆவதாகும்.