09-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது நாலா
புறங்களிலிருந்தும் உங்களின் தொடர்புகள் (பற்று) துண்டிக்கப்
பட வேண்டும். ஏனென்றால் வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிராமண
குலத்தின் பெயர் கெடுமளவிற்ககு எந்த ஒரு பாவச் செயலும் செய்யக்
கூடாது.
கேள்வி:
தந்தை எந்த குழந்தைகளைப் பார்த்து
பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்? எப்படிப்பட்ட குழந்தைகள்
தந்தையின் கண்களில் நிறைந்துள்ளனர்?
பதில்:
எந்த குழந்தைகள் பலருக்கு சுகம்
நிறைந்தவர்களாக ஆக்குகிறார்களோ, சேவை செய்கிறார் களோ. அவர்களைப்
பார்த்து பார்த்து தந்தை கூட மகிழ்ச்சி அடைகிறார். எந்த
குழந்தைகளின் புத்தியில் ஒரு பாபாவிடம் தான் பேசுவேன்,
பாபாவிடம் தான் உரையாடுவேன் என்று இருக் கிறதோ........அப்படிப்பட்ட
குழந்தைகள் தந்தையின் கண்களில் அடங்கி இருப்பார்கள். பாபா
கூறுகிறார்: என்னுடைய சேவை செய்யக் கூடிய குழந்தைகள் எனக்கு
மிகவும் பிடித்தமானவர்கள். அப்படிப்பட்ட குழந்தைகளை நான் நினைவு
செய்கிறேன்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்குத் தெரியும் நாம்
தந்தை யின் முன்பாகவே அமர்ந்துள்ளோம், அந்த தந்தை பிறகு
ஆசிரியர் என்ற ரூபத்திலும் கற்பிப்பவர். அவர்தான்
தூய்மையாக்குபவர், சத்கதி தரக்கூடிய வள்ளலாகவும் இருக்கிறார்.
கூடவே அழைத்துச் செல்பவரும் அவர்தான் மற்றும் மிகவும் சகஜமான
வழியையும் கூறுகிறார். தூய்மையற்ற நிலை யிலிருந்து தூய்மையாக
ஆவதற்காக எந்த கடின முயற்சியும் கொடுப்பதில்லை. எங்கு
சென்றாலும், நடக்கும் போதும் சுற்றும் போதும், வெளிநாட்டிற்குச்
செல்லும் போதும் தன்னை ஆத்மா என்று நிச்சயப்படுத்துங்கள். தேக
அபிமானத்தை விட்டு விட்டு ஆத்மா அபிமானியாக ஆகுங்கள். நாம்
ஆத்மாக்கள், உடலை எடுக்கின்றோம் நடிப்பை நடிப்பதற்காக ஒரு
உடலிலிருந்து நடித்த பிறகு மற்றொன்றை எடுக்கிறோம். சிலருடைய
நடிப்பு 100 வருடங்கள், சிலரது 80, சிலரது 2 வருடம் சிலரது 6
மாதங்கள் நடக்கும். சிலர் பிறப்பதற்கு முன்பாகவே இறந்து
விடுகிறார்கள். இப்போது இங்குள்ள மறுபிறவி மற்றும் சத்யுகத்தின்
மறுபிறவியில் இரவு பகலுக்கான வித்தியாசம் இருக்கிறது இங்கு
கர்ப்பத்திலிருந்து பிறந்தால், கர்ப்ப ஜெயில் என்கிறார்கள்.
சத்யுகத்தில் கர்ப ஜெயில் இருக்காது. அங்கு பாவங்கள் இருக்காது.
இராவண இராஜ்யமும் இல்லை. தந்தை அனைத்து விஷயங்களையும் புரிய
வைக்கிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து இந்த உடலின்
மூலமாகப் புரிய வைக்கிறார். இந்த உடலின் ஆத்மாவும் கேட்கிறது.
கூறக் கூடியவர் ஞானக் கடல் தந்தையாவர். அவருக்கு தன்னுடைய உடல்
கிடையாது. அவரை சதா சிவன் என்று தான் கூறுகிறோம். எப்படி அவர்
மறுபிறவி எடுப்பதில்லையோ, அவ்வாறு பெயர் ரூபத்தை
எடுப்பதிலிருந்தும் விடுபட்டவர் சதா சிவனுக்குத்தான் உடலுக்கான
எந்த பெயரும் ஏற்படுவதில்லை. இவருக்குள் பிரவேசம்
செய்யும்போதும் இவருடைய உடலின் பெயர் அவருக்கு வராது.
உங்களுடைய இது எல்லைக்கப் பாற்பட்ட சந்நியாசம், அவர்கள்
எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள் ஆவர். அவர்களுடைய பெயரும்
மாறுகிறது. உங்களுடைய பெயரையும் பாபா எவ்வளவு நல்ல, நல்லதாக
வைத்தார். நாடகப்படி யாருக்கு பெயர் கொடுத்தாரோ, அவர்கள்
காணாமல் போய் விட்டார்கள். நம்முடையவராக ஆகியிருந்தால்
நிச்சயமாக நிலைத்திருப்பார்கள். விலகிச் செல்ல மாட்டார்கள்
என்று பாபா புரிந்து கொண்டார். ஆனால் விலகிச் சென்ற பிறகு பெயர்
வைப்பதில் லாபம் தான் என்ன? சந்நியாசிகள் கூட பிறகு
வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டால் பிறகு பழைய பெயர்தான்
இருக்கும். வீட்டிற்குத் திரும்புகிறார்கள் அல்லவா! இவ்வாறு
சந்நியாசம் செய்துவிட்டால் அவர்களுக்கு நண்பர்கள் - உறவினர்கள்
நினைவில் இருக்காது என்று கிடையாது. சிலருக்கு நண்பர்கள்
உறவினர்களின் நினைவு வந்து கொண்டே இருக்கும். மோகத்தில் சிக்கி
இருக்கின்றனர். தொடர்பு இணைந்தே இருக்கின்றது. சிலருக்கு உடனேயே
தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. துண்டிக்கப்பட வேண்டியதுதான்.
இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்று பாபா புரிய
வைத்துள்ளார். தந்தை தானே அமர்ந்து கூறுகின்றார், காலையில் கூட
பாபா கூறினார் அல்லவா! பார்த்து பார்த்து மனம் சுகம் அடைகிறது............
ஏன்? கண்களில் குழந்தைகள் அடங்கியுள்ளனர். ஆத்மாக்கள்
கண்மணியாக இருக்கிறார்கள். பாபாவும் கூட குழந்தைகளைப்
பார்த்துப் பார்த்து சந்தோஷ மடைகிறார் அல்லவா! சிலருக்கு நிறைய
குழந்தை கள் இருப்பார்கள், சென்டரையும் பார்த்துக் கொள்வார்கள்,
மற்றும் சிலர் பிராமணனாகி பிறகு விகாரத்தில் சென்று
விடுகிறார்கள், அப்போது அவர்கள் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவராக
ஆகி விடுகிறார்கள். எனவே இந்த தந்தையும் சேவை செய்யக் கூடிய
குழந்தைகளைப் பார்த்துப், பார்த்து மகிழ்ச்சியடைகிறார். இவர்
குலத்திற்கு களங்கம் விளைவிப்பவராக உள்ளார் என்று
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கூறுகிறார். பிராமண குலத்தின் பெயரையே
கெடுக்கிறார்கள். யாருடைய பெயர், உருவத்திலும் மாட்டிக் கொள்ளக்
கூடாது, அவரையும் பாதி குலத்திற்கு களங்கம் விளைவிப்பவர் என்று
கூறுவார்கள் என்று குழந்தைகளுக்குப் புரியவைத்துக் கொண்டே
இருக்கிறார். பாதியிலிருந்து பிறகு கடைசியாகவும்
ஆகிவிடுகிறார்கள். தானே எழுது கிறார்கள், பாபா நான் விழுந்து
விட்டேன், நான் கருப்பு முகமுடையவனாக ஆகிவிட்டேன். மாயை ஏமாற்றி
விட்டது. மாயையின் புயல்கள் நிறைய வருகின்றன. பாபா கூறுகிறார்.
காம விகாரத்தில் சென்றால் இது கூட ஒருவர் மற்றவருக்கு துக்கம்
தருவதாகும். அதனால் உறுதிமொழி எடுக்க வைக்கிறார்.
இரத்தத்தினாலும் பெரிய கடிதத்தை எழுதுகிறார்கள். இன்று அவர்கள்
இல்லவே இல்லை. பாபா கூறுகிறார், ஆஹா மாயை! நீ எவ்வளவு
பலசாலியாய் இருக்கிறாய்! இப்படிப்பட்ட குழந்தைகள்
இரத்தத்தினாலும் எழுதிக் கொடுத்தவர்கள், நீ அவர்களையும்
சாப்பிட்டு விட்டாய். எவ்வாறு பாபா சக்திசாலியாக இருக்கிறாரோ
மாயையும் சக்திசாலியாக இருக்கிறது. அரைக் கல்பத்திற்கு
தந்தையின் சக்திசாலியான ஆஸ்தி கிடைக்கிறது, பிறகு அரைக்
கல்பத்திற்கு அந்த சக்தியை மாயை இழக்க வைக்கிறது. இது
பாரதத்தின் விஷயமாகும். தேவி-தேவதை தர்மத்தைச் சார்ந்தவர்கள்
தான் எல்லாம் நிறைந்தவர்களாயிருந்து ஒன்றுமே இல்லாதவராக ஆகிவிடு
கின்றனர். இப்போது நீங்கள் இலஷ்மி- நாராயணனின் கோயிலுக்குச்
செல்கிறீர்கள். நீங்கள் அதிசயப்படுகிறீர்கள். இந்த வீட்டைச்
சார்ந்தவராக நாம் இருந்தோம், இப்போது நாம் படித்துக்
கொண்டிருக்கிறோம். இவருடைய ஆத்மாவும் பாபாவிடமிருந்து படித்துக்
கொண்டிருக்கிறது. முன்னால் நீங்கள் இங்கும்-அங்கும் தலை
குனிந்து கொண்டே இருந்தீர்கள் (வணங்குவது). இப்போது ஞானம்
உள்ளது, ஒவ்வொருவரின் முழு 84 பிறவிகளின் கதையை நீங்கள்
தெரிந்து கொண்டிருக் கிறீர்கள். ஒவ்வொருவரும் தன்னுடைய நடிப்பை
நடிக்கிறார்கள்.
பாபா கூறுகிறார்! குழந்தைகளே, சதா மகிழ்ச்சியாக இருங்கள். இங்கு
இருக்கும் மகிழ்ச்சியான சம்ஸ்காரத்தை பிறகு கூடவே எடுத்துச்
செல்வோம். உங்களுக்குத் தெரியும் நாம் என்னவாக ஆகிறோம்?
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமக்கு இந்த ஆஸ்தியை தருகிறார்
மற்றும் வேறு யாரும் இதைத் தர முடியாது. இந்த லஷ்மி-நாராயணன்
எங்கு சென்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட மனிதர்கள் ஒருவர்
கூட இல்லை. எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே சென்று விட்டார்கள்
என்று புரிந்து கொள்கிறார்கள். இப்போது தந்தை கூறுகிறார்
புத்தியால் தீர்மானம் செய்யுங்கள், பக்தியிலும் நீங்கள் வேத
சாஸ்திரங்களை படிக்கிறீர்கள், இப்போது நான் உங்களுக்கு ஞானத்தை
கூறுகிறேன். நீங்கள் தீர்மானம் செய்யுங்கள் - பக்தி சரியானதா?
அல்லது நான் கூறுவது சரியா? தந்தை, இராமர் சரியானவர், இராவணன்
தவறானவர் ஒவ்வொரு விஷயத்திலும் பொய் கூறுகிறார்கள். இவை
ஞானத்தின் விஷயங்களுக்காக கூறப்படுகிறது. முதலில் நாம் அனைவரும்
பொய் பேசிக் கொண்டிருந்தோம் என்பதை நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். தானம்-புண்ணியம் செய்தும் கூட ஏணிப்படியில்
கீழேயே இறங்குகிறோம். நீங்கள் கொடுப்பதும்
ஆத்மாக்களுக்காகத்தான். பாவாத்மா, பாவாத்மாவுக்கு தரும்போது
பிறகு புண்ணிய ஆத்மாவாக எப்படி ஆக முடியும்? அங்கு ஆத்மாக்களின்
கொடுக்கல் - வாங்கல் இருக்காது. இங்கு லட்சக் கணக்கான ரூபாய்
கடன் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இராவண இராஜ்யத்தில்
ஒவ்வொரு அடியிலும் மனிதர்களுக்கு துக்கம் இருக்கிறது. இப்போது
நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு
அடியிலும் பல மடங்கு பலன் உள்ளது. தேவதைகள் பல மடங்கு
செல்வத்திற்கு அதிபதியாக எப்படி ஆனார்கள்? இது யாருக்கும்
தெரியாது. சொர்க்கம் அவசியம் இருந்தது. அடையாளங்கள் இருக்கிறது
மற்றபடி அவர்களுக்கு எப்படிப்பட்ட செயல் முன் பிறவியில்
செய்ததால் இந்த இராஜ்யம் கிடைத்தது என்று தெரியாது. அது புது
உலகம். எனவே வீணான எண்ணங்கள் இருக்கவே இருக்காது அதற்கு
சுகதாமம் என்று சொல்கிறோம். 5 ஆயிரம் வருடத்தின் விஷயமாகும்.
நீங்கள் சுகத்திற்காக, தூய்மையாகுவதற்காக படிக்கிறீர்கள்.
அளவற்ற வழிகள் உருவாகின்றன. தந்தை எவ்வளவு நன்றாகப் புரிய
வைக்கிறார். சாந்தி தாமம் ஆத்மாக்களின் வசிப்பிடமாகும். அது
இனிமையான வீடு என்று கூறப்படுகிறது. எப்படி வெளி நாட்டிலிருந்து
வருபவர்கள் இப்போது நாம் எங்களுடைய இனிமையான வீட்டிற்குச்
செல்கிறோம் என்று புரிந்து கொள்கிறார்கள். உங்களுடைய இனிமையான
வீடு சாந்தி தாமம் ஆகும். தந்தை கூட அமைதியின் கடல் அல்லவா!
யாருடைய நடிப்பு கடைசியில் இருக்கிறதோ, அவர்கள் எவ்வளவு நேரம்
அமைதியில் இருப்பார்கள். பாபாவின் நடிப்பு மிகவும் சிறியதாகும்.
இந்த நாடகத்தில் உங்களுடையதுதான் ஹீரோ-ஹீரோயின் நடிப்பாகும்.
நீங்கள் உலகிற்கு எஜமானன் ஆகிறீர்கள். இந்த போதை ஒருபோதும்
யாருக்குள்ளும் இருக்க முடியாது. வேறு யாருடைய அதிர்ஷ்டத்திலும்
சொர்க்கத்தின் சுகம் இல்லை. இது குழந்தைகளாகிய உங்களுக்கே
கிடைக்கிறது. எந்தக் குழந்தைகளை பாபா பார்க்கிறாரோ, அந்தக்
குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா உன்னுடன் தான் பேசுவேன்,
உன்னிடமே உரையாடுவேன்..... தந்தையும் கூறுகிறார் நான்
குழந்தைகளாகிய உங்களைப் பார்த்துப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி
அடைகிறேன். நான் 5 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு வந்துள்ளேன்.
குழந்தைகளை துக்க உலகிலிருந்து சுக தாமத்திற்கு அழைத்துச்
செல்கிறேன். ஏனென்றால் காமச் சிதையில் ஏறி, ஏறி எரிந்து
சாம்பலாகி விட்டனர் இப்போது சென்று அவ ர்களை சுடுகாட்டிலிருந்து
வெளியேற்ற வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் ஆஜராகியுள்ளனர் அல்லவா?
அவர்களை தூய்மையாக ஆக்க வேண்டும்.
பாபா கூறுகிறார் - குழந்தைகளே, புத்தியினால் ஒரு சத்குருவை
நினைவு செய்யுங்கள் மற்றும் அனைவரையும் மறந்துவிடுங்கள்.
உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள்.
உங்களுடைய வழிப்படிதான் நடப்போம். சிரேஷ்டமாக ஆவோம்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் இறைவன் என்றும் பாடுகிறார்கள்.
அவருடைய வழியும் உயர்ந்ததிலும் உயர்ந்த தாகும். தந்தையும் தானே
கூறுகிறார் இந்த ஞானத்தை இப்போது உங்களுக்குத் தருகிறேன். இது
பிறகு மறைந்துவிடும். பக்தி மார்க்கத்தின் சாஸ்திரம்
பரம்பரையாக நடந்து வருகிறது. இராவணனும் வருகிறார் என்று
கூறுகிறார்கள். இராவணனை எப்போதிலிருந்து எரிக்கிறார்கள், ஏன்
எரிக்கிறார்கள் என்று நீங்கள் கேளுங்கள். எதுவுமே தெரியாது.
அர்த்தம் புரிந்து கொள்ளாத காரணத்தினால் எவ்வளவு சடங்குகள்..........
செய்கிறார்கள். பல பார்வையாளர் களையும் கூப்பிடு கிறார்கள்.
இராவணனை எரிக்கும் விழாவாக செய்கிறார்கள். இராவணனை
எப்போதிலிருந்து உருவாக்கி வருகிறார்கள் என்பதை நீங்கள்
புரிந்து கொள்ள முடியாது. நாளுக்கு நாள் பெரியதாக உருவாக்கிக்
கொண்டே செல்கிறார்கள். இது பரம்பரையாக நடந்து வருகிறது என்று
கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு இருக்க முடியாது. கடைசியில்
இராவணனை எதுவரை - எரித்துக் கொண்டே இருப்பார்கள்? உங்களுக்குத்
தெரியும். இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கிறது. பிறகு இவனுடைய
இராஜ்யம் இருக்காது. பாபா கூறுகிறார் இந்த இராவணன் அனைவரையும்
விட மிகப் பெரிய எதிரி. இவன் மீது வெற்றி பெற வேண்டும்.
மனிதர்களின் புத்தியில் நிறைய விஷயங்கள் உள்ளன. உங்களுக்குத்
தெரியும் இதே நாடகத்தில் ஒவ்வொரு நொடியிலும் நடக்கும் அனைத்தும்
அடங்கியுள்ளது. நீங்கள் தேதி, நேரம் அனைத்து கணக்கையும் சொல்ல
முடியும் - எவ்வளவு மணி நேரம், எத்தனை வருடம், எவ்வளவு மாதம்
நம்முடைய நடிப்பு நடக்கிறது. இந்த முழு ஞானமும் புத்தியில்
இருக்க வேண்டும். இதை பாபா நமக்குப் புரிய வைக்கிறார். நான்
தூய்மையாக்கக் கூடியவன் என்று பாபா கூறுகிறார். நீங்கள் வந்து
தூய்மை யாக்குங்கள் என்று என்னை அழைக் கிறீர்கள். சாந்தி தாமம்
மற்றும் சுக தாமம் தூய்மையான உலகமாகும். இப்போது அனைவரும்
தூய்மையற்று உள்ளனர். எப்போதும் பாபா - பாபா என்று கூறிக்
கொண்டே இருங்கள். இதை மறக்கக் கூடாது. அப்போது சதா சிவ பாபா
நினைவுக்கு வருவார். இவர் நம்முடைய பாபா முதன் முதலில் இவர்
எல்லைக்கப்பாற்பட்ட பாபா. பாபா என்று கூறும்போதே ஆஸ்தியின் குஷி
வருகிறது. வெறும் கடவுள் (அல்லது) ஈஸ்வரன் என்று கூறுவதனால்
ஒருபோதும் இப்படிப்பட்ட சிந்தனை வராது. அனைவருக்கும் கூறுங்கள்.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை பிரம்மா மூலமாக புரிய வைக்கிறார்.
இவர் அவருடைய ரதமாவார். இவர் மூலமாக கூறுகிறார் நான் குழந்தை
களாகிய உங்களை இவ்வாறு ஆக்குகிறேன், இந்த பதக்கத்தில் (பேட்ஜ்)
அனைத்து ஞானமும் அடங்கியுள்ளது. இறுதியில் உங்களுக்கு இதேதான்
நினைவில் இருக்கும் - சாந்தி தாமம், சுக தாமம், துக்கதாமத்தை
மறக்க வேண்டும். இதையும் தெரிந்துள்ளார்கள். பிறகு வரிசைக்
கிரமமாக அனைவரும் அவரவருடைய நேரத்தில் வருவார்கள். இஸ்லாமியர்,
புத்த மதத்தவர், கிறிஸ்தவர் கள் எவ்வளவு அதிகமாக உள்ளனர். பல
மொழிகள் உள்ளன. முதலில் ஒரு தர்மம் இருந்தது, பிறகு அதன்
மூலமாக எத்தனை வெளிவந்துள்ளது. எவ்வளவு சண்டைகள் ஏற்படு கின்றது.
அனைவரும் சண்டையிடுகின்றனர், ஏனென்றால் அனாதையாக ஆகிவிட்டனர்.
இப்போது பாபா கூறுகிறார் நான் உங்களுக்குத் தரும் இராஜ்யத்தை
ஒருபோதும் உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. தந்தை
சொர்க்கத்தின் ஆஸ்தியை தருகிறார். அதை யாராலும் பறிக்க முடியாது.
இதில் உறுதியாக, இடைவிடாது, ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும்.
மாயையின் புயல்கள் அவசியம் வரும். முதலில் யார் முன்னால்
இருக்கிறாரோ அவர் அனைத்தையும் அனுபவம் செய்வார் இல்லையா?
நோய்கள் அனைத்தும் சதா காலத்துக்காக அழித்துவிட வேண்டும். எனவே
செயல்களின் கணக்கு-வழக்கு, நோய்கள் அனைத்தும் அதிகமாக வந்தால்
அதில் பயப்படக்கூடாது. இவை அனைத்தும் இறுதி நேரத்தினுடையது,
பிறகு இருக்காது. இப்போது அனைத்தும் பொங்கி வரும்.
முதியவர்களையும் மாயை இளைஞராக ஆக்கிவிடுகிறது. மனிதர்கள்
வானப்பிரஸ்தத்தில் செல்லும் போது அங்கு பெண்கள் இருக்க
மாட்டார்கள். சந்நியாசிகளும் காட்டிற்குச் சென்று விடுகிறார்கள்.
அங்கும் பெண்கள் இருப்பதில்லை. யாரையும் பார்ப்பது கூட கிடையாது.
பிச்சை எடுத்து விட்டு சென்று விடுவார்கள். முன்பு முற்றிலும்
பெண்களை பார்க்கவே மாட்டார்கள். அவசியமாக புத்தி செல்லும் என்று
புரிந்து கொள்கிறார்கள். சகோதரி - சகோதரன் என்ற சம்மந்தத்தில்
புத்தி செல்கிறது. எனவே பாபா கூறுகிறார். சகோதர - சகோதரரை
பாருங்கள். உடலின் பெயரும் கிடையாது. இது பெரிய உயர்ந்த
குறிக்கோளாகும். ஒரே அடியாக உச்சியை (இலக்கை) அடைய வேண்டும்.
இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகின்றது. இதில் அதிக முயற்சி உள்ளது.
நாங்கள் இலஷ்மி-நாராயணனாக ஆவோம் என்று சொல்கிறார்கள். பாபா
கூறுகிறார் ஆகுங்கள். ஸ்ரீமத்படி செல்லுங்கள். மாயையின்
புயல்கள் வரும், கர்மேந்திரியங்கள் மூலமாக எதையும் செய்யக்
கூடாது. ஏமாற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஞானத்தில் வந்ததால் தான் நஷ்டம் அடைந்தோம் என்பது கிடையாது. (ஏமாற்றம்)
இது நடந்து கொண்டே தான் இருக்கிறது. பாபா கூறுகிறார் நான்
உங்களை தூய்மையற்ற நிலையிலிருந்து துôய்மையாக மாற்றுவதற்காகவே
வந்துள்ளேன். எப்போது மிகவும் நன்றாக சேவை செய்கிறார்கள்,
பிறருக்கும் புரிய வைக்கிறார்கள், பிறகு தோற்றுப்போய் (அனைத்தையும்
இழந்து) ஓடிவிடுகிறார்கள். மாயை மிகவும் சக்திசாலியானது மிகவும்
நல்லவர்கள் கூட விழுந்து விடுகிறார்கள். பாபா அமர்ந்து புரிய
வைக்கிறார், என்னுடைய சேவை செய்யக்கூடிய குழந்தைகள் எனக்கு
மிகவும் பிரியமானவர்கள். பலருக்கு சுகம் தருகின்றனர்,
இப்படிப்பட்ட குழந்தைகளை நினைவு செய்து கொண்டே இருக்கிறேன்.
நல்லது !
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யாருடைய பெயர், உருவத்திலும் சிக்கிக்கொண்டு,
குலத்திற்கு களங்கம் விளைவிப்பவர் ஆகக் கூடாது. மாயையின்
ஏமாற்றத்தில் வந்து ஒருவர் மற்றவருக்கு துக்கம் தரக்கூடாது.
தந்தையிடமிருந்து சக்திசாலியான ஆஸ்தியை பெற்றுவிட வேண்டும்.
2. சதா மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய சம்ஸ்காரத்தை
இங்கிருந்துதான் நிரப்பிக்கொள்ள வேண்டும். இப்போது பாவ
ஆத்மாக்களிடம் எந்த ஒரு கொடுக்கல் - வாங்கல் செய்யக் கூடாது.
நோய்களைப் பார்த்து பயப்படக் கூடாது. அனைத்து கணக்கு
வழக்குகளையும் இப்போதே முடிக்க வேண்டும்.
வரதானம்:
வில் பவர் - மன திடத்துடன் ஒரு நொடியில் வீணானவற்றிற்கு ஃபுல்
ஸ்டாப் - முற்றுப் புள்ளி வைத்து விடக் கூடிய அசரீரி ஆவீர்களாக.
ஒரு நொடியில் அசரீரி ஆவதற்கான ஃபவுண்டேஷன் - அஸ்திவாரமானது
இந்த எல்லையில்லாத வைராக்கிய உள்ளுணர்வு ஆகும். இந்த
வைராக்கியம் என்பது எப்பேர்ப்பட்ட தகுதியுடய பூமி என்றால்,
அதில் என்ன விதைத்தாலும் அதன் (பலன்) பழம் உடனே வெளிப்படுகிறது.
எனவே இப்பொழுது எப்பேர்ப்ட்ட வில் பவர் வேண்டும் என்றால்,
வீணானது முடிந்து விட வேண்டும் என்ற சங்கல்பம் செய்த உடனேயே,
அதுவொரு நொடியில் முடிந்து போய் விட வேண்டும். எப்பொழுது
வேண்டுமோ, எங்கு வேண்டுமோ, எந்த ஸ்திதியில் வேண்டுமோ அங்கு ஒரு
நொடியில் (செட் செய்து) நிலைநிறுத்திக் கொண்டு விடுங்கள். சேவை
ஈர்க்கக் கூடாது. ஒரு நொடியில் ஃபுல்ஸ்டாப் - முற்றுப் புள்ளி
இடப்பட்டு விட வேண்டும். அப்பொழுது சுலபமாகவே அசரீரி ஆகி
விடுவீர்கள்.
சுலோகன்:
தந்தைக்கு சமானமாக ஆக வேண்டும் என்றால், கெட்டுப் போனதை சரி
செய்பவராக ஆகுங்கள்.
|
|
|