இனிமையான குழந்தைகளே! இது ஏற்கனவே
உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும், இந்த நாடகத்தில் இருந்து ஒரு
ஆத்மா கூட விடுபட முடியாது. மோட்சம் யாருக்கும் கிடையாது.
கேள்வி:
உயர்ந்ததிலும் உயர்ந்த பதீத
பாவனர் பாபா எந்த விதத்தில் கள்ளங்கபடமற்றவர் ?
பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் அவருக்கு
ஒரு பிடி அவல் கொடுத்து மாளிகையைப் பெற்று கொள்கிறீர்கள்.
அதனால் தான் பாபாவை கள்ளங்கபடமற்றவர் என்று சொல்கின்றோம்.
நீங்கள் சொல்கின்றீர்கள் சிவ பாபா என்னுடைய குழந்தை. அந்த
குழந்தை அப்பேர்பட்டவர் யாரிட மிருந்தும் ஒருபோதும் வாங்குவது
இல்லை. எப்போதும் கொடுக்கக் கூடியவர். யார் எப்படிப்பட்ட கர்மம்
செய்கின்றார்களோ அப்படிப்பட்ட பலனை அடைவார்கள் என்று பக்தியில்
சொல் கின்றார்கள். ஆனால் பக்தியில் அல்பகாலத்திற்கு தான்
கிடைக்கின்றது. ஞானத்தில் புரிந்து கொண்டு செய்கிறீர்கள் அதனால்
சதா காலத்திற்கும் கிடைக்கிறது.
ஓம் சாந்தி.
ஆன்மிகமான தந்தை ஆன்மிகக் குழந்தைகளோடு ஆன்மீக உரையாடல்
செய்துக் கொண்டு இருக்கின்றார் அல்லது ஆன்மீகத் தந்தை
குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார் என்றும்
கூறலாம். எல்லையற்ற அப்பாவிடமிருந்து இராஜயோகம் கற்றுக்
கொள்வதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள் அதனால் பாபாவிடம் புத்தி
செல்ல வேண்டும். ஆத்மாக் களுக்கான பரமாத்மாவின் ஞானம் இது சா-கிராமங்களுக்கான
பகவானுடைய வாக்கியம். நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள்.
இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் பாபா வந்துதான் குழந்தைகளாகிய
உங்களை ஆத்ம அபிமானியாக மாற்றுகிறார். ஆத்ம அபிமானி மற்றும்
தேக அபிமானி நிலையின் வித்தியாசத்தைப் பற்றி நீங்கள்
அறிந்துள்ளீர்கள். ஆத்மாதான் உட-ன் மூலமாக நடிப்பு நடிக்கின்றது
என்று பாபா தான் புரிய வைக்கின்றார். ஆத்மாதான் படிக்கின்றது,
உடல் அல்ல. ஆனால் உடல் அபிமானத்தில் இருக்கக்கூடிய காரணத்தால்
இன்னார் படிப்பிக் கின்றார் என்று புரிந்து கொள்கின்றனர்.
குழந்தைகளாகிய உங்களுக்கு படிப்பிக்கக்கூடியவர் நிராகார்.
அவருடைய பெயர்தான் சிவன். சிவ தந்தைக்கு தனக்கு என்று உடல்
இல்லை. மற்ற அனைவரும் என்னுடைய உடல் என்று கூறுகிறார்கள். இதைச்
சொல்வது யார்? இது என்னுடைய உடல் என்று ஆத்மா தான் சொல்கிறது.
மற்ற அனைத்தும் உலகீயப் படிப்பு. அநேக விதமான பாடங்கள் உள்ளன.
பி.ஏ என்று எத்தனையோ பெயர் உள்ளது. இதில் ஒரே பெயர் தான் உள்ளது.
படிப்பும் ஒன்று தான். கற்பிப்பவரும் ஒருவர் தான். ஒரே தந்தை
வந்து கற்பிக்கின்றார். எனவே ஒரு தந்தையை மட்டும் தான் நினைக்க
வேண்டும். நமக்கு எல்லையற்ற தந்தையே பாடம் கற்பிக்கின்றார்.
அவர் பெயர் என்ன? அவர் பெயர் தான் சிவன். அவர் பெயர் ரூபம்
இல்லாதவர் அல்ல. மனிதர்களுக்கு பெயர் தேகத்திற்காக
வைக்கப்படுகின்றது. இன்னாருடைய சரீரம் என்று சொல்வார்கள்.
அதுபோல சிவ பாபாவிற்கு என்று ஒரு பெயர் கிடையாது.
மனிதர்களுக்குத்தான் உடலுக்காக பெயர் வைக்கப்படுகின்றது.
நிராகாரமான தந்தை ஒருவர் தான். சிவன் என்பது அவருடைய பெயர்.
பாடம் கற்பிக்க வரும்பொழுதும் அவருடைய பெயர் சிவன் தான் இந்த
சரீரம் அவருடையது அல்ல. பகவான் ஒருவர் தான், 10-12 கிடையாது.
அவர் ஒருவர் தான் ஆனால் மனிதர்கள் அவரை 24 அவதாரமாக
சொல்-விட்டார்கள். பாபா சொல்கின்றார் என்னை மிகவும் அலையவைத்து
விட்டார்கள். பரமாத்மாவை கல், முள் அனைத்திலும் இருப்பதாக
சொல்-விட்டார் கள். பக்தி மார்கத்தில், தான் எப்படி
அலைகின்றார்களோ அப்படியே என்னையும் அலைய வைத்து விட்டார்கள்.
நாடகத்தின் படி அவர்கள் பேசும் விதம் கூட எவ்வளவு இனிமையாக
உள்ளது. பாபா சொல்கின்றார் என் மீது எல்லோரும் எவ்வளவு அபகாரம்
செய்கின்றார்கள். என்னை எவ்வளவு அவதூறு சொல்கின்றார்கள்!.
நாங்கள் கைமாறு கருதாமல் சேவை செய்கின்றோம், பாபா சொல்கின்றார்
என்னை தவிர யாருமே கைமாறு கருதாமல் சேவை செய்ய முடியாது. யார்
என்ன செய்வார்களோ அதற்குரிய பலன் அவசியம் கிடைக்கின்றது.
இப்போது உங்களுக்கு பலன் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
பக்தியினுடைய பலன் பகவான் தருவார் என்று சொல்கின்றார் கள்.
ஏனென்றால் பகவான் தான் ஞானக் கடல். பக்தியில் அரை கல்பமாக
நீங்கள் கர்ம காண்டம் (செயல் வடிவில்) செய்து வந்தீர்கள்
இப்போது இது ஞானம் என்ற படிப்பு, இந்த படிப்பு ஒரே ஒரு முறை ஒரு
தந்தையிடமிருந்து மட்டுமே கிடைக்கின்றது. பாபா புருஷோத்தம
சங்கம யுகத்தில் ஒரே ஒரு முறை வந்து உங்களை புருஷோத்தமர்களாக
மாற்றிச் செல்கின்றார். இது ஞானம். அது பக்தி அரை கல்பமாக
நீங்கள் பக்தி செய்தீர்கள் இப்போது பக்தி யார் செய்யவில்லையோ
அவர்களுக்கு மனதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது. பக்தி செய்யவில்லை
எனவே தான் அவர் இறந்து விட்டார், நோய் வந்துவிட்டது. ஆனால்
அப்படியெல்லாம் கிடையாது.
பாபா சொல்கின்றார் : குழந்தைகளே! பதீதமான எங்களை தூய்மை
செய்து அனைவருக்கும் சத்கதி வழங்குங்கள் என்று என்னை
அழைத்தீர்கள். இப்போது நான் வந்துள்ளேன். பக்தி வேறு ஞானம் வேறு.
பக்தியால் அரைப் கல்பம் இரவு ஏற்படுகிறது, ஞானத்தால் அரை கல்பம்
பகல் வருகிறது. இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் இரண்டுமே
எல்லைக்கு அப்பாற்பட்டது. இரண்டுக்குமே சமயம் மிக சரியானதே.
இந்த சமயத்தில் போகியாக இருக்கும் காரணத்தால் இன விருத்தி
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆயுளும் குறைந்து கொண்டே
செல்கின்றது எனவே இன விருத்தி அதிகரிக்காமல் இருப்பதற்காக
ஏற்பாடுகள் செய்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குத்
தெரியும், இவ்வளவு பெரிய உலகத்தை குறைப்பது என்பது பாபாவுடைய
வேலை மட்டும்தான். பாபா வருவதே குறைப்பதற்காகத்தான். பாபா வந்து
அதர்மத்தை அழித்து சிருஷ்டியை குறைந்து விடுங்கள் என்று
அழைக்கவும் செய்கின்றார்கள். பாபா எத்தனை பேரை குறைக்கின்றார்
என்று உலகத்திற்குத் தெரியாது. குறைந்த மனிதர்களே மீதம்
இருப்பார்கள். மீதம் உள்ள அனைத்து ஆத்மாக்களும் தன்னுடைய
வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். பிறகு வரிசைக் கிரமமாக நடிக்க
வருவார்கள். நாடகத்தில் எவ்வளவு தாமதமாக நடிக்க வரவேண்டுமோ
அவ்வாறே வீட்டி-ருந்தும் தாமதமாகத்தான் வருவார்கள். தன்
தொழில்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வருவார்கள். நாடக
நடிகர்களும் கூட தன்னுடைய தொழிலை செய்கிறார்கள், தன்
நேரத்திற்கு ஏற்ப நடிக்க வருகிறார்கள். நீங்களும் அப்படித்தான்,
யாருக்கு கடைசியில் நடிப்பு இருக்குமோ அவர்கள் கடைசியில் தான்
வருவார்கள். முதன் முத-ல் ஆரம்பத்தில் நடிப்பவர்கள்
சத்யுகத்தில் வந்து விடுவார்கள். கடைசியில் வருபவர்களைப்
பாருங்கள் இப்போது கூட வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்படியாக
பல்வேறு கிளைகள் கடைசி வரை வந்து கொண்டே இருக்கிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஞான விஷயங்கள் புரிய
வைக்கப்படுகின்றது. காலையில் நினைவில் அமர்கின்றீர்கள் அது
பயிற்சி! ஆத்மா தன்னுடைய தந்தையை நினைக்க வேண்டும். யோகம் என்ற
வார்த்தையை விட்டுவிடுங்கள் இதில் குழப்பம் வந்துவிடுகின்றது.
எங்களுக்கு யோகம் வரவில்லை என்று சொல்கின்றார்கள். பாபா, அட
குழந்தாய்! நீ தந்தையை நினைக்க முடியாதா? இப்படி சொல்வது நல்ல
விஷயமா? நினைக்கவில்லை என்றால் எப்படி தூய்மையாவீர்கள்.
பாபாதான் தூய்மையாக்கக் கூடியவர். பாபா வந்து நாடகத்தின் முதல்
- இடை-கடைசியின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். இது பல்வேறு
தர்மங்களையும், பல்வேறு மனிதர்களையும் கொண்ட மரம். இந்த
சிருஷ்டியில் உள்ள அனைத்து மனிதர்களும் நடிகர்கள் தான். எத்தனை
கோடி மனிதர்கள் இருக்கின்றார்கள், கணக்கெடுக்கின்றார்கள். ஒரு
வருடத்தில் இத்தனை கோடி பிறக்கும் என்று சொல்கின்றார்கள். பிறகு
அவ்வளவு இடம் எங்கே இருக்கின்றது. அப்போதுதான் பாபா
சொல்கின்றார் நான் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த
வந்திருக்கின்றேன் எப்போது அனைத்து ஆத்மாக்களும் மே-ருந்து
வந்துவிடுகிறார்களோ, அப்போது நமது வீடே கா-யாகிவிடுகின்றது.
மீதமுள்ள சிலரும் வந்துவிடுகின்றனர். மரம் ஒருபோதும் காய்ந்து
போவது இல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. இறுதியில் அங்கு யாரும்
இல்லாதபோது இங்கிருந்து அனைவரும் மேலே செல்வார்கள். புதிய
உலகில் எவ்வளவு குறைவாக இருந்தார்கள்! இப்போது எவ்வளவு அதிகம்
இருக்கிறார்கள்! சரீரம் அனைவருக்கும் மாறிக் கொண்டே
இருக்கின்றது. அதுவும் ஒவ்வொரு கல்பமும் எத்தனை பிறவி
எடுத்தார்களோ அப்படியே எடுப்பார்கள். இந்த உலக நாடகம் எப்படி
இயங்குகின்றது, இதைப்பற்றி தந்தையைத்தவிர வேறு யாரும் சொல்ல
முடியாது. குழந்தைகளில் கூட வரிசைக்கிரமமாக அவரவர் முயற்சிக்
கேற்ப புரிய வைக்கின்றார் கள். இந்த எல்லையில்லாத நாடகம்
எவ்வளவு பெரியது! புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனை!
எல்லையில்லாத தந்தை ஞானக் கடல் ஆனவர். மற்ற எல்லாம்
எல்லைக்குட்பட்டது தான். வேத சாஸ்திரங்கள் எல்லாம்
உருவாக்குகின்றார்கள், அதை விட அதிகமாக எதுவும் செய்ய முடியாது.
நீங்கள் எழுதிக் கொண்டே சென்றால் ஆரம்பத்தி-ருந்து இதுவரை
எவ்வளவு பெரிய கீதையாகிவிடும்! அனைத்தும் அச்சிடப்பட்டால் ஒரு
வீட்டை விட பெரிய கீதை உருவாகிவிடும். எனவேதான்
புகழப்படுகின்றது காட்டு மரங்களை எழுதுகோல் ஆக்கினாலும் கடல்
நீரையே மையாக்கினாலும் எழுதி முடிக்க முடியாது. இருப்பினும்
சிட்டுக் குருவியானது கடலையே விழுங்கிவிட்டது என்று இப்படியும்
சொல்லப் படுகின்றது. நீங்கள் தான் அந்த சிட்டுக் குருவிகள்.
ஞானக் கட-ல் உள்ள ஞானம் முழுவதுமே விழுங்கிக்
கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் பிராமணன் ஆகிவிட்டீர்கள்.
உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்துள்ளது. ஞானத்தால் நீங்கள்
அனைத்தையும் தெரிந்து கொண்டீர்கள். கல்ப கல்பமும் நீங்கள் இங்கே
பாடம் படிக்கின்றீர்கள். இதில் எதுவுமே அதிகமாகவோ, குறைவாகவோ
இருக்க முடியாது. ஒருவர் எவ்வளவு முயற்சி செய்கிறாரோ,
அதற்குரிய பலனை அடைகின்றார். ஒவ்வொருவரும் நாம் எவ்வளவு முயற்சி
செய்து எந்தளவிற்கு பதவி அடையத் தகுதியாளர் ஆகின்றோம் என்பதை
புரிந்துக் கொள்ளலாம். பள்ளியில் கூட வரிசைக்கிரமமாகத்தான்
தேர்வில் தேர்ச்சி அடைகின்றார்கள். சூரிய வம்சியாக வும்,
சந்திர வம்சியாகவும் மாறுகின்றனர். தோல்வி அடைபவர்கள் சந்திர
வம்சி ஆகின்றனர். இராமர் கையில் அம்பு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் பயங்கரமாக (ஆயுதமாக) காண்பித்து விட்டார்கள். அவை
எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. எப்படிப்பட்ட கர்மம்
செய்கின்றோமோ அதற்கான பலனும் அப்படியே கிடைக்கும் என்பதை
நீங்கள் அறிவீர்கள் ஒருவர் மருத்துவமனை கட்டினால் அவருக்கு
அடுத்த பிறவியில் நீண்ட ஆயுளுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை
கிடைக்கும். யாராவது தர்ம சாலை, பள்ளிகள் கட்டினால் அவர்களுக்கு
அல்ப கால சுகம் கிடைக்கும். இங்கு குழந்தைகள் வரும்போது
அவர்களைப் பார்த்து பாபா உங்களுக்கு எத்தனை குழந்தை என்று
கேட்கின்றார், அப்போது சொல்கின்றனர் லௌகீக குழந்தை கள் மூவர்,
சிவபாபாவும் ஒரு குழந்தை ஏனென்றால் அவர் ஆஸ்தி தரவும்
செய்கின்றார், பெறவும் செய்கின்றார். கணக்கு வைக்கின்றார்
அவருக்கென பெறுவது எதுவும் கிடையாது. அவரோ வள்ளலாக
இருக்கின்றார் நீங்கள் தான் பிடி அவலைக் கொடுத்து விட்டு
மாளிகையை அடைகின்றீர்கள், எனவே அவர் கள்ளம் இல்லாதவர் பதீத
பாவனன், ஞ:ôனக் கடல். இப்போது பாபா சொல்கின்றார் இந்த பக்தியின்
அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றேன்.
பக்தியின் பலன் அற்பகாலத்திற்கானது. சந்நியாசிகளும் இந்த
சுகத்தை காக்கையின் எச்சிலுக்கு சமம் என்று சொல்கின்றனர் எனவே
வீடு வாசலை துறந்து காட்டிற்கு செல்கின்றனர். எங்களுக்கு
சொர்க்க சுகமே வேண்டாம் அங்கே சென்றால் மீண்டும் நரகத்திற்கு
வர வேண்டும் எங்களுக்கு மோட்சம் வேண்டும். ஆனால் இது
எல்லையில்லா நாடகம். இந்த நாடகத்தி-ருந்து ஒரு ஆத்மா கூட
விடுபட முடியாது என்பதை நினைவில் வையுங்கள். இது முன்பே
அமைக்கப்பட்டுவிட்ட நாடகம் எனவேதான் சொல்லப்படுகின்றது எல்லாம்
நடந்துவிட்டது இனி நடக்கப் போவது ஒன்றுமேயில்லை.............
ஆனால் பக்தி மார்க்கத்தில் கவலைப்படவேண்டி உள்ளது. என்ன
வெல்லாம் கடந்து சென்றதோ அது மீண்டும் நடைபெறும். நீங்கள் 84
பிறவி சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் இது ஒருபோதும் நிற்காது
மீண்டும் நடைபெறும். இதில் நீங்கள் முயற்சியே செய்யாமல் எப்படி
இருக்க முடியும்? நீங்கள் சொல்வதால் நீங்கள் விலகிச் செல்ல
முடியாது. மோட்சத்தை அடைவதும், ஜோதியில் ஜோதி கலப்பதும்,
பிரம்மத்தில் ஒன்றி கலந்துவிடுவதும் இவையெல்லாம் ஒரே விஷயம்
தான். அநேகக் கருத்துக்கள், அநேக தர்மங்கள் பிறகு உன் வழியை
நீயே அறிவாய் என்றும் சொல்கின்றார்கள். உனது ஸ்ரீமத்தால் சத்கதி
கிடைக்கின்றது. அதையும் நீங்கள்தான் தெரிந்துள்ளீர்கள். நீங்கள்
வரும்போது நாங்களும் தெரிந்துக் கொள்வோம். தூய்மை அடைவோம்.
பாடம் படித்தால் சத்கதி அடைவோம். சத்கதி அடைந்துவிட்டால் யாருமே
அழைப்பதில்லை. இந்த சமயத்தில் அனைவரின் மீதும் துக்கத்தின்
மலையே விழப்போகிறது. இரத்தக் களமான விளையாட்டைக்
காண்பிக்கிறார்கள், கோவர்த்தன மலையும் காண்பிக்கப்படு கின்றது.
விரலால் மலைத் தூக்கப்படுகின்றது. இதன் அர்த்தம் நீங்கள்
புரிந்துள்ளீர்கள். நீங்கள் சில குழந்தைகளே இந்த துக்கம் எனும்
மலையை அகற்றுகின்றீர்கள் துக்கத்தையும் பொறுத்துக்
கொள்கின்றீர்கள்.
நீங்கள் மனதை வசீகரிக்கும் மந்திரத்தை அனைவருக்கும் தர
வேண்டும். துளசி தாஸ் சந்தனம் அரைத்ததாக சொல்கின்றார்கள்...
இராஜ திலகம் அவரவர் முயற்சிக் கேற்ப கிடைக்கின்றது. நீங்கள்
இராஜ்யத்திற்காக படிக்கின்றீர்கள். நீங்கள் இராஜாங்கத்தை
அடைவதற்காக படிக்கின்ற இராஜ யோகத்தை கற்பிப்பவர் ஒரே பாபாதான்
இப்போது நீங்கள் வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். தர்பார் அல்ல.
இராஜாக்களும், மகா ராஜாக்களும் சந்திக்கும் இடம் தான் தர்பார்
என சொல்லப்படும். இது பாட சாலை. யாரேனும் பிராமணி ஒருவர்
விகாரிகள் யாரையும் அழைத்து வரக்கூடாது என்று புரிய
வைக்கப்படுகிறது. பதீதமானவர்கள் வாயு மண்டலத்தையே கெடுத்து
விடுவார்கள். எனவே அனுமதி கிடையாது. தூய்மையானால்
அனுமதிக்கப்படுவார்கள். இப்போது ஒரு சிலரை
அனுமதிக்கப்படுகின்றது. இங்கிருந்து சென்ற பிறகு தூய்மையை
இழப்பார்களானால், தாரணை செய்யவில்லையென்றால், இது தனக்குத்தானே
சாபத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும். விகார மானவர்கள் இராவணன்
வழியில்தான் நடக்கின்றார்கள். இராமனின் வழியை விட்டு விட்டு
இராவணனின் வழியில் சென்று விகாரியாகி கல்லாகி விடுகின்றனர்.
இப்படி கருட புராணத்தில் நிறைய பயங்கரமான விசயங்களை எழுதி
இருக்கிறார்கள். பாபா சொல்கிறார். மனிதர்கள் மனிதர்களாகத்தான்
பிறப்பார்கள், விலங்காக மாறுவதில்லை. படிப்பில் கண்மூடித்தனமான
விசயம் எதுவுமில்லை. இது உங்களுடைய படிப்பு. மாணவர்கள் படித்து
தேர்ச்சியடைந்து சம்பாதிக்கின்றார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.