12-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபாவிற்கு அனைத்து குழந்தைகளிடமும் அன்பு உள்ளது. இருப்பினும் யார் தந்தையின் ஆலோசனையை உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களின்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது. குணங்கள் நிரம்பிய குழந்தைகள் அன்பை ஈர்த்துக் கொள்கிறார்கள்.

கேள்வி:
பாபா எந்த ஒரு ஒப்பந்தத்தை (காண்ட்ராக்ட்) எடுத்திருக்கிறார்?

பதில்:
அனைவரையும் மலர்களாக்கி திரும்பி அழைத்து செல்வதற்கான ஒப்பந்தம் ஒரு பாபாவினுடைய தாகும். பாபாவைப் போன்ற ஒப்பந்தக்காரர் உலகத்தில் வேறு யாருமே இல்லை. அவர் அனைவருக்கும் சத்கதி செய்விப்பதற்காக வருகின்றார். பாபாவால் சேவை புரியாமல் இருக்க முடியாது. ஆகவே குழந்தைகளும் கூட சேவைக்கான நிரூபணத்தை கொடுக்க வேண்டும். கேட்டும் - கேட்காதவர்களாக இருக்கக் கூடாது. ஓம் சாந்தி

ஓம் சாந்தி.
தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். குழந்தைகளே, தன்னை ஆத்மா எனப் புரிந்து கொண்டு அமருங்கள். இதனை ஒரு தந்தை தான் புரிய வைக்கின்றார். இதனை எந்த மனிதனும் யாருக்கும் புரிய வைக்க முடியாது. தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். - இதனை 5000 வருடங் களுக்குப் பின்பு பாபா வந்து தான் கற்பிக்கின்றார். இதனைக் கூட குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். இது புருஷோத்தம சங்கமயுகம் என்பது வேறு யாருக்கும் தெரியாது. குழந்தைகளான உங்களுக்கு இந்த நினைவு இருக்க வேண்டும். நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றோம் என்ற நினைவு கூட மன்மனாபவ வாகும். பாபா கூறுகிறார் - என்னை நினைவு செய்யுங்கள், ஏனென்றால் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். 84 ஜென்மம் இப்பொழுது முடிவடைந்து விட்டது. இப்போது சதோபிரதானமாகி வீடு திரும்ப வேண்டும். சிலர் முற்றிலுமே நினைவு செய்வதில்லை. பாபா ஒவ்வொருவரின் முயற்சியை நன்றாகத் தெரிந்துள்ளார். அதிலும் கூட குறிப்பாக இங்கே உள்ளவர்களையும் மேலும் வெளியில் இருப்பவர்களையும் கூட பாபா தெரிந்திருக்கிறார். நான் இங்கு அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பினும் கூட இனிமையிலும் இனிமையான, சேவாதாரி குழந்தைகளாக யார் யார் உள்ளனரோ அவர்களை நினைவு செய்கின்றேன். இவர்கள் எவ்விதமான மலராக இருக்கிறார்கள், இவர்களுக்குள் என்னென்ன குணங்கள் உள்ளது? என அவர்களைத் தான் பார்க்கின்றேன். சிலர் அவ்வாறு இருக்கிறார்கள் அவர்களிடம் எந்த ஒரு குணமும் இருப்பதில்லை. இப்போது அப்படிப் பட்டவர்களை பாபா பார்த்து என்ன செய்வார்? பாபாவோ தூய்மையான காந்தம் போல ஆத்மாவாக உள்ளார், ஆகவே அவசியம் கவர்ந்து ஈர்ப்பார் அல்லவா? ஆனால் பாபா தனக்குள் அறிந்திருக்கிறார் அல்லவா? பாபா தனது முழு செய்தியையும் கூறுகிறார். ஏனெனில் குழந்தைகளும் கூட கூற வேண்டும் என்பதற்காக. பாபா கூறுகிறார் நான் உங்களை உலகத்திற்கு எஜமானராக ஆக்குவ தற்காக வந்துள்ளேன். பிறகு யார் எந்தளவு முயற்சி செய்கிறார்களோ அந்தளவு தான் அடைவார்கள். என்ன முயற்சி செய்கின்றீர்கள் என்பது கூட தெரியப்படுத்த வேண்டும். பாபா எழுதுகிறார் - அனைவருடைய தொழிலைப்பற்றி எழுதி அனுப்பவும். அதாவது அவர்களிடமே எழுதி வாங்கி அனுப்பவும். யார் புத்திசா-யான பிராமணிகள் (சகோதரிகள்) இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரிடமும் எழுதி வாங்கி அனுப்பு கிறார்கள் - என்ன தொழில் செய்கிறார்கள், எவ்வளவு வருவாய் கிடைக்கிறது? பாபா தனது அனைத்தையும் கூறுகின்றார் மேலும் சிருஷ்டியின் முதல்-இடை-கடைசி பற்றிய ஞானத்தைக் கூறுகிறார். அனைவருடைய நிலையைப் பற்றியும் தெரிந்திருக்கின்றார். விதவிதமான மலர்கள் உள்ளன அல்லவா? (ஒவ்வொரு மலர் களையும் காண்பித்து) பாருங்கள், எத்தனை முதல் தரமான மலராக உள்ளது, இப்போது இப்படிப் பட்ட நறுமணத்துடன் உள்ளது, பிறகு எப்போதும் முழுவதுமாக மலருமோ அப்போது முதல் தரமான அழகுடையதாக ஆகிவிடும். நீங்கள் கூட இந்த இலட்சுமி-நாராயணன் போன்று தகுதி யுடைவர்களாக ஆகிவிடுவீர்கள். ஆகவே பாபா பார்த்துக் கொண்டேயிருக்கின்றார், மேலும் அனைவருக்கும் சக்தி கொடுக்கிறார் என்பதும் அல்ல. யார் எவ்வாறு இருக்கிறார்களோ அவ்வாறு ஈர்ப்பு ஏற்படுகிறது, யாரிடம் எந்த குணமும் இல்லையோ அவர்கள் என்ன கவர்ந்திழுக்க முடியும்? அப்படிப்பட்டவர்கள் அங்கே சென்று பைசாவிற்கும் பெறாத (மதிப்பற்ற) பதவியை அடைவார்கள். பாபா ஒவ்வொருவருடைய குணத்தையும் பார்க்கின்றார். மேலும் அன்பும் செலுத்துகின்றார். அன்பினால், கண்களும் ஈரமாகி விடுகின்றது. இந்த சேவாதாரி எவ்வளவு சேவை செய்கின்றார், இன்னாருக்கு சேவை இல்லாமல் ஓய்வு ஏற்படுவதில்லை. சிலருக்கோ சேவை செய்யவே தெரிவ தில்லை. யோகத்தில் அமர்வதும் இல்லை. ஞானத்தின் தாரணையும் இருப்பதில்லை. பாபா புரிந்து கொள்கிறார் - இவர் என்ன பதவி அடைவார். யாரும் மறைந்திருக்க முடியாது. குழந்தைகள் யார் புத்திசா-யாக, நல்ல குழந்தையாக உள்ளனரோ, சென்டரை கவனித்துக் கொள்கிறார்களோ. அவர்கள் ஒவ்வொருவருடைய கணக்கை யும் அனுப்ப வேண்டும். அப்போது பாபா புரிந்து கொள்வார் இவர்கள் எந்தளவு முயற்சியாளர்களாக இருக்கிறார்கள். பாபா ஞானத்தின் கடலாக உள்ளார். குழந்தைகளுக்கு ஞானத்தைத்தருகின்றார். யார் எந்தளவிற்கு ஞானத்தை எடுத்துக் கொள்கிறார் கள், குணவானாக ஆகிறார்கள் - அது உடனடியாகத் தெரிந்துவிடுகிறது. பாபாவின் அன்பு அனைவர் மீதும் உள்ளது. இதன்படி ஒரு பாடல் கூட உண்டு - உனக்கு முட்களின் மீதும் அன்பு உண்டு, மலர் களின் மீதும் அன்பு உண்டு. வரிசைப்படி என்பது இருக்கவே இருக்கிறது ஆகவே பாபாவிடம் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். பாபா என்ன கூறுகிறாரோ அதனை உடனடியாக செய்து காட்ட வேண்டும். அப்போது இன்னாருக்கு பாபாவிடம் எவ்வளவு அன்பு உள்ளது என்று பாபா கூட தெரிந்துக் கொள்வார். அவர்களுடைய கவர்ச்சி ஏற்படும். பாபாவிடம் முற்றிலும் சரணடைந்து விடுவது போன்ற ஈர்ப்பு உள்ளது. ஆனால் எதுவரை துரு நீங்கவில்லையோ அதுவரை கவர்ந்திழுக்கவும் முடியாது. ஒவ்வொரு வரையும் பார்க்கின்றேன்.

பாபாவிற்கு சேவாதாரியான குழந்தைகள் இருக்க வேண்டும். பாபா சேவைக்காகத்தான் வருகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குகின்றார். இதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள், உலகத்தினர் அறிருந்திருக்க வில்லை. ஏனென்றால் இப்போது நீங்கள் மிகவும் குறைவானவர் களாகவே இருக்கிறீர்கள். எதுவரை யோகம் இல்லையோ அதுவரை ஈர்ப்பு என்பது இருக்காது. அவர்கள் முயற்சியும் கூட மிகக் குறைவாகவே செய்கின்றார்கள். ஏதாவது ஒரு விசயத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். இது உலகீய சத்சங்கம் போன்று அல்ல, என்ன கேட்கிறார்களோ சத்தியம் சத்தியம் என்கின்றனர்அங்கே. அனைத்து சாஸ்திரங்களின் மணி மகுடம் என்பது ஒரு கீதையாகும். கீதையில் தான் இராஜயோகம் உள்ளது. முழு உலகத்திற்கும் எஜமான் ஒரு பாபா மட்டுமே. குழந்தைகளுக்குக் கூறிக்கொணடேயிருக்கின்றேன். கீதையினால் பிரபாவம் ஏற்படும். ஆனால் அவ்வளவு சக்தியும் கூடவே இருக்க வேண்டும் அல்லவா! யோக பலத்தின் கூர்மை நன்றாக இருக்க வேண்டும், அதில் மிகவும் பலவீனமாக உள்ளனர். இப்போது குறைவாகவே நேரம் உள்ளது. கூறுகிறார்கள் என்மீது அன்பு செலுத்தினால் நானும் கூட அன்பு செலுத்துவேன். இது தான் ஆத்மாவின் அன்பாகும். ஒரு பாபாவின் நினைவில் இருக்க வேண்டும், இந்த அன்பினால் தான் விகர்மம் வினாசமாகும். சிலர் முற்றிலும் நினைவு செய்வதில்லை. பாபா புரிய வைக்கிறார் - இங்கு பக்தியின் விசயம் இருப்பதில்லை. இவர் பாபாவினுடைய இரதமாகும். இவர் மூலமாக சிவபாபா கற்பிக்கின்றார். சிவபாபா என்னுடைய பாதங்களை கழுவி அந்த தண்ணீரைக் குடியுங்கள் என்றெல்லாம் கூறுவதில்லை. பாபா கைபிடிக்கக் கூட அனுமதிப் பதில்லை. இது படிப்பாகும். கையை பிடிப்பதால் என்ன ஆகப்போகிறது. பாபாவே அனைவருக்கும் சத்கதி அளிப்பவராக உள்ளார். கோடியில் வெகு சிலர் தான் இந்த விசயத்தைப் புரிந்துக் கொள்கிறார்கள். யார் கல்பத்திற்கு முன்பு இருந்தார்களோ அவர்களே புரிந்து கொள்வார்கள். கள்ளம் கபடமற்ற பாபா வந்து கள்ளமில்லாத கபடமில்லாத தாய்மார்களுக்கு ஞானத்தைக் கொடுத்து எழுப்புகின்றார். பாபா முற்றிலுமாக முக்தி மேலு:ம் ஜீவன் முக்தியில் கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றார். பாபா இவ்வளவு தான் கூறுகிறார் - விகாரங் களை விட்டுவிடுங்கள். இதன் மீது தான் கொடுமைகள் ஏற்படுகின்றன. பாபா புரிய வைக்கின்றார் - தன்னைத்தான் பாருங்கள், எனக்குள் என்னென்ன அவகுணம் உள்ளது? வியாபாரிகள் தினமும் தமது கணக்கு வழக்கு, இலாப நஷ்டத்தைப் பார்க்கின்றார்கள். நீங்கள் கூட கணக்கு வையுங்கள். மிக அன்பான பாபா, யார் நம்மை உலகத்திற்கு எஜமான் ஆக்குகிறாரோ அவரை எவ்வளவு நேரம் நினைவு செய்தேன்? பாருங்கள், குறைவாக நினைவு செய்தீர்கள் எனில் தானாகவே வெட்கம் வரும் அதாவது இப்படிப்பட்ட தந்தையை நான் நினைவு செய்ய வில்லையே என்று, நம்முடைய தந்தை முற்றிலும் அனைவரிலும் அதிசய மானவராக உள்ளார். சொர்க்கம் தான் முழு உலகத்திலுமே அனைவற்றிலும் அதிசயமானது. அவர்கள் சொர்க்கத்தை இலட்சக்கணக்கான வருடம் என்று கூறிவிட்டனர். மேலும் நீங்கள் 5 ஆயிரம் வருடம் என்கிறீர்கள். எவ்வளவு இரவு பகலுக்கும் உள்ள வேறுபாடாக உள்ளது? யார் மிகவும் பழைய பக்தர்களாக உள்ளனரோ அவர்களிடம் பாபா அர்ப்பணமாகிவிடுகின்றார். நிறைய பக்தி செய்திருக்கிறார்கள் அல்லவா? பாபா (பிரம்மா) இந்த பிறவியில் கூட கீதையைப் படித்திருந்தார் அல்லவா! மேலும் நாராயணரின் சித்திரத்தையும் கூட வைத்திருந்தார் அல்லவா? இலட்சுமியை அடிமைத்தனத்தி-ருந்து முக்தி செய்து விட்டதால் எவ்வளவு குஷி உள்ளது! எப்படி நாம் இந்த சரீரத்தை விட்டுவிட்டு சத்யுகத்தில் சென்று வேறு ஒன்றை எடுத்துக் கொள்வோம். பாபாவிற்குக் கூட மகிழ்ச்சியாக உள்ளது. நாம் சென்று அழகான இளவரசனாக ஆவோம்; முயற்சியும் கூட செய்வித்துக் கொண்டேயிருக்கிறார். எளிதாக எப்படி ஆக முடியும்? நீங்கள் கூட நல்ல விதமாக பாபாவை நினைவு செய்தீர்கள் எனில் சொர்க்கத்தின் ஆஸ்தி (சொத்தை) பெறுவீர்கள். சிலர் படிப்பதும் இல்லை, தெய்வீக குணத்தை தாரணை செய்வதும் இல்லை. கணக்கு வழக்கும் வைப்பது இல்லை. யார் உயர்வாக ஆகக்கூடியவர்களாக இருப்பார்களோ அவர்களே கணக்கு வழக்கை எப்பொழுதும் வைப்பார்கள். இல்லையெனில் வெறும் பகட்டு செய்வார்கள். 15-20 நாட்களுக்கு பின்பு எழுதுவதை விட்டுவிடுகிறார்கள். இங்கே பரீட்சைகள் அனைத்தும் இரகசியமானது. ஒவ்வொருவருடைய தகுதியையும் பாபா தெரிந்திருக்கிறார். பாபா சொல்வதை உடனடியாக கேட்டு ஏற்றுக் கொண்டால் கட்டளைக்கு கீழ்படிந்தவர்கள், நம்பகமானவர்கள் என சொல்லப்படும். பாபா கூறுகிறார், இப்போது குழந்தைகள் நிறைய காரியம் செய்ய வேண்டும். எத்தனை நல்ல நல்ல குழந்தைகள் கூட கைவிட்டுச் சென்று விடுகிறார்கள். இவர் (சிவபாபா) ஒருபொழுதும் யாருக்கும் விவாகரத்து அல்லது கைவிட்டு விடுவதில்லை. இவர் நாடகத்தின் அனுசாரமாக மிகப்பெரிய ஒப்பந்தம் செய்வதற்காக வந்துள்ளார். நான் பெரிய ஒப்பந்தக்காரன்; அவைரையும் மலர்கள் போலாக்கி வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் சென்று விடுவேன். குழந்தை களாகிய தூய்மையற்றவர்களை தூய்மையக்கக்க்கூடிய ஒப்பந்தக்காரர் ஒரே ஒருவர் மட்டும் தான் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுக்கு எதிரில் அமர்ந்திருக்கின்றார். சிலருக்கு எவ்வளவு நிச்சயம் உள்ளது! சிலருக்கு முற்றிலும் இருப்பதில்லை. இன்று இங்கு இருக்கிறார்கள், நாளை சென்று விடுகிறீர்கள், நடத்தை அவ்வாறாக உள்ளது. நாம் பாபாவிடம் இருந்து கொண்டு பாபாவினுடையவராக ஆகிவிட்டு என்ன செய்கின்றேன் என உள்ளுக்குள் உறுத்தல் ஏற்படும். சேவை எதுவும் செய்யவில்லை எனில் என்ன கிடைக்கும். ரொட்டி தயாரிப்பது, காய்கறி சமைப்பது இவையெல்லாம் முன்பு கூட செய்து கொண்டு தான் இருந்தீர்கள். புதிய விசயம் என்ன செய்தீர்கள்? இவ்வளவு பேருக்கு வழிகாட்டினேன் என்று சேவையின் விளைவைத் தரவேண்டும்.

இந்த நாடகம் மிகவும் அதிசயமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. என்னவெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை நீங்கள் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சாஸ்திரங் களில் கிருஷ்ணரின் சரித்திரத்தை எழுதி விட்டனர், ஆனால் சரித்திரம் ஒரு பாபாவினுடைய தாகும். அவர் அனைவருக்கும் சத்கதி அளிக்கின்றார். இவரைப் போன்ற சரித்திரம் வேறு யாருக்கும் இருக்க முடியாது. சரித்திரம் கூட அனைவருக்கும் நன்றாக இருக்க வேண்டும். மற்றபடி கோபியர்களை துரத்தினார், இதைச் செய்தார் என்பதெல்லாம் சரித்திரம் இல்லை. அனைவருக்கும் சத்கதி செய்விப்பவர் ஒரு பாபா மட்டுமே. அவர் கல்ப கல்பமாக வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். இலட்சக்கணக்கான வருடங்கள் என்ற விசயம் எல்லாம் இல்லை.

ஆகவே குழந்தைகள் மோசமான பழக்கத்தை விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் என்ன பதவி கிடைக்கும்? பிரியதரிசன் கூட பிரிய தரிசினியை தேர்ந்தெடுப்பார் அல்லவா? யார் சேவை செய்வார்களோ அவர்களே இவரின் பிரியதரிசினிகளாக இருப்பார்கள். யார் சேவை செய்வ தில்லையோ அவர்கள் எதற்கு? இந்த விசயங்கள் மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டியவையாகும். பாபா புரிய வைக்கின்றார்; நீங்கள் மகான் பாக்கியசா-யாக உள்ளீர்கள், உங்களைப் போன்ற பாக்கியசா- வேறு யாரும் இல்லை. நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்கள். ஆனால் பிராப்தியை உயர்வாக ஆக்க வேண்டும். கல்ப கல்பத்திற்கான விசயமாகும். பதவி குறைவானதாக ஆகிவிடுகின்றது. என்ன கிடைக்குமோ அதுவே நன்று என்று மகிழ்ச்சி அடைந்து விடவேண்டாம். புருஷார்த்தம் மிகவும் நன்றாக செய்ய வேண்டும். சேவையின் நிரூபணம் வேண்டும் - எத்தனைப் பேரை தனக்குச் சமமாக ஆக்கினேன்? உங்களுடைய பிரஜை எங்கு உள்ளார்? தந்தை-டீச்சர் அனைவரையும் முயற்சி செய்ய வைக்கின்றார்கள். ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்திலும் இருக்க வேண்டும் அல்லவா? பாபா தனது சாந்தி தாமத்தை விட்டுவிட்டு தூய்மையற்ற உலகத்திற்கு, மேலும் தூய்மையற்ற சரீரத்தில் வருகின்றார், இது தான் அனைத்திலும் பெரிய ஆசீர்வாதமாகும். இல்லையெனில் உங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை யார் சொல்வார்கள்? சத்யுகத்தில் இராம இராஜ்யம் மற்றும் க-யுகத்தில் இராவண இராஜ்யமும் உள்ளது என்று இது கூட யாருடைய புத்தியிலும் அமர்வ தில்லை. இராம இராஜ்யத்தில் ஒரே ஒரு இராஜ்யம் தான் இருந்தது. இராவண இராஜ்யத்தில் அநேக இராஜயம் உள்ளது. ஆகவே தான் கேட்கிறீர்கள் நீங்கள் நரகவாசியா? அல்லது சொர்க்கவாசியாக இருக்கிறீர்களா? ஆனால் நாம் எங்கே உள்ளோம்? என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. இது தான் முட்களின் காடாகும், அது மலர்களின் தோட்டம். ஆகவே இப்போது மம்மா, பாபாவையும் மேலும் முன்னோடியான குழந்தைகளையும் பின்பற்றுங்கள். அப்போது தான் உயர்வாக ஆவீர்கள். பாபா நிறைய புரிய வைக்கிறார். ஆனால் யார் புரிந்து கொள்ளக் கூடியவர்களோ அவர்களே புரிந்துக் கொள்வார்கள். சிலர் கேட்டு நன்றாக ஞான சிந்தனை செய்கின்றார்கள். சிலரோ கேட்டும் கேட்காதவர்களாகி விடுகிறார்கள். சிவபாபா நினைவு உள்ளதா? என்று ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளது. அப்போது ஆஸ்தியும் கூட அவசியம் நினைவிற்கு வரும். தெய்வீக குணம் இருக்குமானால் தேவதையாக ஆவீர்கள். ஒருவேளை கோபம் ஏற்பட்டால், அசுர அவகுணம் இருக்குமானால், உயர்ந்த பதவியைப் பெற முடியாது. அங்கே பூதம் எதுவும் இருப்பதில்லை. இராவணனே இருப்பதில்லை என்றால் இராவணனின் உருவச் சின்னம் எங்கிருந்து வரும்.? தேக அபிமானம், காமம், கோபம்.... இது தான் பெரிய பூதமாகும். இதனை வெளியேற்றுவதற்கான ஒரே ஒரு வழி - பாபாவை நினைவு செய்வதாகும். பாபாவின் நினைவினால் தான் அனைத்து பூதங்களும் ஓடிபோய் விடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

இரவு வகுப்பு: பிறரை தனக்குச் சமமாக ஆக்ககூடிய சேவை செய்ய வேண்டும் என நிறைய குழந்தைகளின் உள்ளத்தில் தோன்றுகிறது. தன்னுடைய பிரஜையை உருவாக்க வேண்டும். எவ்வாறு நம்முடைய பிற சகோதரர் சேவை செய்கின்றார் அதுபோல நானும் செய்ய வேண்டும். தாய்மார்கள் அதிகம் உள்ளனர். கலசம் கூட தாய்மார்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இது இல்லறமார்க்கம். இருவரும் வேண்டும் அல்லவா? பாபா கேட்கின்றார், எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? சரியான பதில் தருகிறார்களா என பார்க்கின்றார். 5 பேர் தன்னுடையவர்கள் ஒருவர் மட்டுமே சிவபாபா. சிலர் சொன்ன பின்பு தான் கூறுகின்றார்கள். சிலர் உண்மையாகவே ஆக்கிக் கொள்கிறார்கள். யார் வாரிசு ஆக்கிக் கொள்கிறார்களோ, அவர்கள் வெற்றி மாலையில் வந்துவிடுவார்கள். யார் உண்மையாகவே வாரிசாக ஆக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் தானும் கூட வாரிசாக ஆகின்றார்கள். உண்மையான உள்ளத்திற்கு முன்பு எஜமானன் முழு திருப்தி ஆகிவிடுகிறார்... மற்றபடி அனைவரும் பெயரளவிற்குத் தான் கூறுகிறார்கள். இந்த சமயம் பரலௌகீக தந்தை தான் அனைவருக்கும் ஆஸ்தியைத் தருகின்றார். ஆகவே யாரிடமிருந்து 21 பிறவிக்கான ஆஸ்தி கிடைக்கின்றதோ அவரை நினைவு செய்ய வேண்டும். புத்தியில் ஞானம் உள்ளது, இவை அனைத்தும் இருக்கப்போவதில்லை. பாபா ஒவ்வொருவருடைய நிலையைப் பார்க்கின்றார். உண்மையிலும்

உண்மையான வாரிசை உருவாக்கியிருக்கிறார்களா? அல்லது உருவாக்குவதற்கான எண்ணத்தை செய்கின்றார்களா? வாரிசு ஆக்குவதின் அர்த்தத்தை புரிந்துக் கொள்கிறார்களா? நிறைய பேருக்கு புரிந்திருந்த போதிலும் கூட உருவாக்க முடிவதில்லை. ஏனென்றால் மாயாவிற்கு வசமாகி இருக்கிறார்கள். இந்த சமயம் ஒன்று ஈஸவரனுக்கு வசமாகியிருக்கிறார்கள். அல்லது மாயாவிற்கு வசமாகியிருக்கிறார்கள். ஈஸ்வரனுக்கு யார் வசமாகி இருக்கிறார்களோ அவர்கள் வாரிசாக ஆகிவிடுவார்கள். மாலை 8, எண்ணிக்கையுடையதும் உள்ளது, 108 எண்ணிக்கையும் உள்ளது. 8ல் இருப்பவர்கள் அவசியம் அதிசயம் செய்பவர்களாக இருப்பார்கள். உண்மையாகவே வாரிசுகளாக ஆக்கிய பின்பே விடுவார்கள். வாரிசுகளை உருவாக்கிய போதும் கூட ஆஸ்தியை எடுத்துக் கொண்டேயிருப்பார்கள். இவ்வாறு உயர்ந்த ஆஸ்தியை உருவாக்குபவர்களும் கூட உயர்ந்த கர்மத்தைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். எந்த விகர்மும் ஏற்படாது. என்னவெல்லாம் விகாரம் உள்ளதோ அவை அனைத்தும் விகர்மம் அல்லவா? பாபாவை விட்டுவிட்டு பிற எவரையும் நினைவு செய்வது இது கூட விகர்மம் தான். பாபா என்றாலே பாபா தான். பாபா வாயினால் கூறுகிறார் என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். கட்டளை கிடைத்துள்ளது அல்லவா? ஆகையால் முற்றிலும் நினைவு செய்ய வேண்டும் - இதில் தான் அதிக முயற்சி உள்ளது. ஒரு பாபாவை நினைவு செய்தால் மாயா அந்தளவிற்கு துன்பம் கொடுக்காது. மற்றபடி மாயாவும் கூட மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது. மாயா மிகவும் விகர்மத்தைச் செய்விக்கின்றது என்பது அறிவிற்கு எட்டுகிறது. பெரிய பெரிய மகாரதிகளையும் கூட கீழே விழ வைத்துவிடுகிறது. கீதா பாடசாலை மேலும் மியூசியம் திறக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். முழு உலகத்திலுமுள்ள மனிதர்கள் பாபாவையும் ஏற்றுக் கொள்வார்கள், பிரம்மாவையும் ஏற்றுக் கொள்வார்கள். பிரம்மா வைத்தான் பிரஜாபிதா என்றழைக்கப்படுகிறது. ஆத்மாக்கள் பிரஜை என சொல்லப்படுவதில்லை. மனித சிருஷ்டியை படைப்பது யார்? பிரஜா பிதா பிரம்மாவின் பெயர் சொல்லப்படுகிறது. அனாதியாக உள்ளனர். இவரையும் கூட (பிரம்மா) அனாதி என சொல்லப்படுகிறது. இருவரின் பெயரும் உயர்வாக சொல்லப்படுகிறது. அவர் ஆன்மீகத் தந்தை. இவர் பிரஜாபிதா பிரம்மா. இருவரும் வந்து உங்களுக்கு கற்பிக்கிறார்கள். எவ்வளவு உயர்வானதாக ஆகிவிட்டது. குழந்தை களுக்கு எவ்வளவு போதை ஏறவேண்டும். எவ்வளவு மகழ்ச்சியிருக்க வேணடும். ஆனால் மாயை குஷி மற்றும் போதையில் இருக்கவிடுவதில்லை. இவ்வாறு மாணவர்கள் ஒருவேளை விசார்சாகர் மந்தன் செய்துக் கொண்டேயிருந்தால், சேவையும் கூட செய்ய முடியும். மகி:ழ்ச்சியாகவும் இருக்க முடியம், ஆனால் இப்பொழுது நேரம் உள்ளது. எப்பொழுது கர்மாதீத் நிலை ஏற்படுமோ அப்பொழுது மகிழ்ச்சியாகவும் கூட இருக்க முடியும். நல்லது. ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் குட் நைட்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) தினமும் இரவில் கணக்கு வழக்கைப் பார்க்க வேண்டும். மிக இனிமையான பாபாவை முழு நாளிலும் எவ்வளவு நினைவு செய்தேன்? தன்னுடைய பகட்டிற்காக கணக்கு வழக்கு வைக்க வேண்டாம், இரகசியமான முயற்சி செய்ய வேண்டும்.

(2) பாபா என்ன கூறுகின்றார், அதன்மீது ஞான சிந்தனை செய்ய வேண்டும், சேவையின் கைமாறு தர வேண்டும். கேட்டும் கேட்காதவர்களாக இருக்க வேண்டாம். உள்ளுக்குள் ஏதாவது அசுர அவகுணம் இருக்கிறது என்றால் அவற்றை சோதனை செய்து வெளியேற்றி விடவேண்டும்.

வரதானம்:
வைராக்கிய விருக்தியின் மூலம் இந்த சாரமற்ற உலகில் பற்றற்றவர் ஆகக் கூடிய உண்மையான இராஜரிஷி ஆகுக.

இராஜரிஷி என்றால் இராஜ்யம் இருந்தாலும் கூட எல்லையற்ற வைராக்கியம். தேகம் மற்றும் தேகத்தின் பழைய உலகில் துளியளவும் பற்றுதல் இருக்கக் கூடாது. ஏனெனில் இந்த பழைய உலகம் சாரமற்றது, இதில் எந்த சாரமும் கிடையாது என்பதை அறிவீர்கள். சாரமற்ற உலகில் பிராமணர்களின் சிரேஷ்ட உலகம் கிடைத்து விட்டது. ஆகையால் இந்த உலகில் எல்லையற்ற வைராக்கியம் அதாவது எந்த பற்றுதலும் இருக்கக் கூடாது. எந்த பற்றுதல் அல்லது அடிமைத்தனம் இல்லையெனும் போது தான் இராஜரிஷி அல்லது தபஸ்வி என்று கூற முடியும்.

சுலோகன்:
யுக்தியுக்த் வார்த்தை என்றால் அதில் இனிமை மற்றும் சுப பாவனை நிறைந்திருக்க வேண்டும்.