14.04.24 காலை முரளி
ஓம் சாந்தி 15.03.99 பாப்தாதா,
மதுபன்
கர்மாதீத் நிலை அடைவதற்கு கட்டுபடுத்தும் சக்தி (கண்ட்ரோலிங்
பவர்) அதிகப்படுத்துங்கள், சுய இராஜ்ய அதிகாரி ஆகுங்கள்.
இன்று பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள தனது இராஜகுமாரன்,
அன்பான குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார். பரமாத்மாவின்
வளர்ப்பு அல்லது பரமாத்மாவின் இந்த அன்பு மிகக் குறைந்த
குழந்தைகளுக்குத் தான் பிராப்தியாக கிடைக்கிறது. மிகச் சிலர்
மட்டுமே இந்த பாக்கியத் திற்கு அதிகாரியாக ஆகின்றனர்.
இப்படிப்பட்ட பாக்கியசாலி குழந்தைகளைப் பார்த்து பாப்தாதாவும்
மகிழ்ச்சி அடைகின்றார். இராஜகுமாரன் என்றால் இராஜா குழந்தை. ஆக
தன்னை இராஜா என்று புரிந்து கொள்கிறீர்களா? பெயரே இராஜயோகி.
இராஜயோகி என்றால் இராஜா குழந்தை. நிகழ் காலத்திலும் இராஜாவாக
இருக்கிறீர்கள், எதிர்காலத்திலும் இராஜாவாக ஆவீர்கள். தனது
இரட்டை இராஜ்ய பதவியை அனுபவம் செய்கிறீர்கள் தானே? நான்
இராஜாவாக இருக்கிறேனா? என்று தன்னைப் பாருங்கள். சுய இராஜ்ய
அதிகாரியாக இருக்கிறேனா? ஒவ்வொரு இராஜ்ய வேலைக் காரர்கள்
உங்களது கட்டளைப்படி காரியம் செய்து கொண்டிருக்கிறதா? இராஜாவின்
சிறப்பம்சம் என்ன என்பதை அறிவீர்கள் தானே? ஆளுமை சக்தி (ரூலிங்
பவர்) மற்றும் கட்டுப்படுத்தும் சக்தி (கண்ட்ரோலிங் பவர்)
இரண்டு சக்திகளும் உங்களிடம் இருக்கிறதா? இராஜ்ய வேலைக்காரர்கள்
சதா கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருக்கிறதா? என்று தன்னை
கேளுங்கள்.
இன்று பாப்தாதா குழந்தைகளின் கட்டுப்படுத்தும் சக்தி மற்றும்
ஆளுமை சக்தியை சோதித்துக் கொண்டிருந் தார். என்ன
பார்த்திருப்பார்? என்று கூறுங்கள். ஒவ்வொருவரும் அறிவீர்கள்.
இன்னமும் கூட அகண்ட இராஜ்ய அதிகாரிகளாக அனைவரும் ஆகவில்லை
என்பதை பாப்தாதா பார்த்தார். அகண்ட, இடையிடையில் கண்டமாகி
விடுகிறது. ஏன்? சதா சுயஇராஜ்யம் என்பது மாறி பிற இராஜ்யம்
கண்டம் செய்து விடுகிறது. பிற இராஜ்யத்தின் அடையாளம் - இந்த
கர்மேந்திரி யங்களுக்கு அடிமையாகி விடுகிறீர்கள். மாயா
இராஜ்யத்தின் பிரபாவம் என்றால் மற்றவர்களை அடிமையாக்குவதாகும்.
நிகழ்காலத்தில் மைனாரிட்டி சரியாக இருக்கிறீர்கள். ஆனால்
மெஜாரிட்டி நிகழ்காலத்தில் மாயாவின் விசேஷ பிரபாவத்தில் வந்து
விடுகிறீர்கள். எது ஆதி, அநாதி சன்ஸ் காரமோ, அதன் இடையிடையில்
மத்தியத்தின் அதாவது துவாபரத்தி-ருந்து இன்று வரைக்குமான
சன்ஸ்காரத்தின் பிரபாவத்தில் வந்து விடுகிறீர்கள். தனது
சன்ஸ்காரமே சுவ இராஜ்யத்தை கண்டம் செய்து விடுகிறது. அதிலும்
விசேஷ சன்ஸ்காரம் எதுவென்றால் வீண் சிந்தனை, நேரத்தை
வீணாக்குவது மற்றும் வீண் பேச்சுக்களில் வருவது,, வீணானவைகளை
கேட்பது மற்றும் கூறுவதாகும். ஒருபுறம் வீண் சன்ஸ்காரம்,
மற்றொரு புறம் சோம்பலுக்கான சன்ஸ்காரம் விதவிதமான ரூபத்தில்
சுய இராஜ்யத்தை கண்டம் செய்து விடுகிறது. நேரம் நெருக்கத்தில்
வந்து கொண்டிருக்கிறது, ஆனால் எந்த சன்ஸ்காரம் ஆரம்பத்தில்
இல்லையோ, அது இப்பொழுது எங்கிருந்தோ வெளிப்பட்டுக்
கொண்டிருக்கிறது என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். வாயு
மண்டலத்தில் சன்ஸ்காரம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது,
இதற்குக் காரணம் என்ன? இது மாயையின் யுத்தத்திற்கான ஒரு
சாதனமாகும். மாயை இதன் மூலம் தன்னுடையவர்களாக ஆக்கி பரமாத்ம
வழியில் மனம் உடைந்தவர்களாக ஆக்கி விடுகிறது. இன்று வரை இவ்வாறே
இருந்தேன் எனில் சமமான நிலைக்கான வெற்றி அடைய முடியுமா?
முடியாதா? என்பது தெரிய வில்லை என்று யோசிக்கின்றனர். ஏதாவது
பலவீனம் இருந்தால், அந்த பலவீனத்தின் ரூபத்தில் மாயை மனம்
உடைந்தவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்கிறது. மிகவும் நன்றாக
இருப்பவர்களும் நாட்கள் செல்ல செல்ல ஏதாவது ஒரு விசத்தில் மாயை
சன்ஸ்காரத்தை தாக்கி, பழைய சன்ஸ்காரத்தை வெளிப்படுத்தி மனம்
உடையச் செய்ய முயற்சி செய்கிறது. கடைசியில் அனைத்து
சன்ஸ்காரங்களும் அழியப் போகிறது. ஆகையால் மீதமிருக்கும்
சன்ஸ்காரம் அவ்வப் பொழுது வெளிப்பட்டு விடுகிறது. ஆனால்
பாப்தாதா பாக்கியவான் குழந்தைகளாகிய உங்களுக்கு சைகை
கொடுக்கின்றார் - பயப்படாதீர்கள், மாயாவின் வலையை புரிந்து
கொள்ளுங்கள். சோம்பல் மற்றும் வீணானவை - இதில் எதிர்மறையும்
வந்து விடுகிறது - இந்த இரண்டு விசயங்களின் மீது விசேஷ கவனம்
செலுத்துங்கள். மாயை யுத்தம் செய்வதற்கான தற்போதைய சாதனம் இது
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தந்தையின் துணையின் அனுபவம், இணைந்த ரூபத்தின் அனுபவத்தை
வெளிப்படுத்துங்கள். தந்தை என்னுடையவர் தான், என் கூடவே தான்
இருக்கின்றார் என்று இருந்து விடாதீர்கள். துணையின் அனுபவத்தை
நடைமுறையில் வெளிப்படுத்துங்கள். ஆக இது மாயாவின் யுத்தம்,
யுத்தம் செய்யாது, தோல்வியடைந்து விடும். இது மாயாவின்
தோல்வியாகும், யுத்தம் அல்ல. பயப்படாமல் இருந்தால் போதும், ஏன்
நடந்தது, எதற்காக நடந்தது. தைரியமாக இருங்கள், தந்தையின் துணையை
நினைவில் வையுங்கள். தந்தையின் துணை இருக்கிறதா? என்று
சோதியுங்கள். துணையின் அனுவம் மெர்ஜ் ரூபத்தில் கிடையாது தானே?
தந்தை துணையாக இருக்கிறார் என்ற ஞானம் இருக்கிறது, ஞானத்தின்
கூடவே தந்தையின் சக்தி என்ன? சர்வ சக்திவானின் சக்தியை
வெளிப்படையான ரூபத்தில் அனுபவம் செய்யுங்கள். இதைத் தான்
தந்தையின் துணையின் அனுபவம் செய்வது என்று கூறப்படுகிறது.
சோம்பலானவர்களாக ஆகிவிடாதீர்கள்- தந்தையைத் தவிர வேறு யாரும்
இல்லை, தந்தை மட்டும் தான் இருக்கின்றார். தந்தை தான்
இருக்கின்றார் எனில் அவரது சக்தி இருக்கிறதா? பரமாத்மா எங்கும்
நிறைந்திருக் கிறார் எனில் பரமாத்ம குணங்கள் அனுபவம் ஆக
வேண்டும், தென்பட வேண்டும் என்று நீங்கள் உலகத்தினருக்கு
கூறுகிறீர்கள். பாப்தாதாவும் உங்களிடம் கேட்கின்றார் -
உங்களுடன் தந்தை இருக்கின்றார், இணைந்த ரூபத்தில் இருக்கின்றார்
எனில் ஒவ்வொரு காரியத்திலும் சக்தியின் அனுபவம் ஏற்படுகிறதா?
மற்றவர்களுக்கும் அனுபவம் ஆகிறதா? என்ன நினைக்கிறீர்கள்? இரட்டை
அயல்நாட்டினர் என்ன நினைக்கிறீர்கள்? சக்தி இருக்கிறதா? சதா
இருக்கிறதா? முதலில் கேள்விக்கு அனைவரும் ஆம் என்று கூறி
விடுகிறீர்கள். சதா இருக்கிறதா? என்று இரண்டாவது கேள்வி
கேட்கும் போது யோசிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். ஆக அகண்ட
ஆகவில்லை அல்லவா! நீங்கள் என்ன சவால் செய்கிறீர்கள்? அகண்ட
இராஜ்யம் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது கண்டம் ஆகக்
கூடிய இராஜ்யம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்களா? என்ன
செய்து கொண்டிருக் கிறீர்கள்? அகண்ட இராஜ்யம் அல்லவா!
ஆசிரியர்கள் கூறுங்கள் - அகண்ட இராஜ்யம் தானே? எனவே இப்போது
சோதனை செய்யுங்கள் - அகண்ட சுவ இராஜ்யம் இருக்கிறதா? இராஜ்யம்
என்றால் சதா கால பிராப்தியா? அல்லது இடையிடையே
துண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லையா? இதை விரும்புகிறீர்களா?
பெறுவதில் சதா வேண்டும், ஆனால் முயற்சி செய்வதில் அவ்வபொழுது
என்று இருக்கிறது. அப்படித் தானே? தனது வாழ்க்கை என்ற
அகராதியிலிருந்து சில சமயம் (சம் டைம்) மற்றும் சில விசயங்கள்
(சம்திங்) என்ற வார்த்தையை நீக்கி விடுங்கள் என்று அயல்
நாட்டினர்களுக்கு கூறியிருந்தார். இப்போது சில சமயம் என்பது
அழிந்து விட்டதா? ஜெயந்தி பதில் கூறு. ரிசல்ட் கொடுப்பாய்
அல்லவா! சில சமயம் என்பது அழிந்து விட்டதா? சில சமயம் என்ற
வார்த்தை சதா காலத்திற்கும் சமாப்தி ஆகிவிட்டது என்று
நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். அழிந்து விட்டதா அல்லது
அழியுமா? உயர்வாக கை உயர்த்துங்கள். வதனத்தின் டீ.வி யில்
உங்களது கைகள் வந்து விட்டன. இங்கிருக்கும் டீ.வி யில்
அனைவருடையதும் வராது. இது கலியுக டீ.வி அல்லவா! அங்கு மந்திர
டீ.வி இருக்கிறது. ஆகையால் வந்து விடுகிறது. மிக்க நல்லது,
அதிகமானவர்கள் கை உயர்த்தியிருக்கிறீர்கள். அவர்களுக்கு சதா
காலத்திற்கான வாழ்த்துக்கள். நல்லது. இப்பொழுது பாரதவாசிகள் -
யார் நடைமுறையில் சதா காலத்திற்கு சுவ இராஜ்யம் இருக்கிறது,
அனைத்து கர்மேந்திரியங்களும் சட்டம் மற்றும் ஒழுங்கு படி
இருக்கிறது, அவர்கள் கை உயர்த்துங்கள். உறுதியாக கை
உயர்த்துங்கள், கச்சாவாக அல்ல. சபையில் கை உயர்த்தி இருக்கிறேன்
என்பதை சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பாப்தாதாவிடம்
மிக இனிமையிலும் இனிமையான விசயங்களை கூறுகிறீர்கள். பாபா,
நீங்கள் அறிவீர்கள் அல்லவா, அவ்வப்பொழுது மாயை வந்து விடுகிறது
அல்லவா! எனவே கை உயர்த்தியதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றாக இருக்கிறது. இருந்தாலும் தைரியம் வைத்தீர்கள். தைரியத்தை
இழக்கக் கூடாது. தைரியம் இருக்குமிடத்தில் பாப்தாதாவின் உதவி
இருக்கவே செய்கிறது.
நிகழ்கால நேரத்தின் அநுசாரமாக தன் மீது, ஒவ்வொரு
கர்மேந்திரியத்தின் மீது அதாவது சுயம் தன் மீது
கட்டுப்படுத்தும் சக்தி எவ்வளவு இருக்க வேண்டுமோ அது குறைவாக
இருக்கிறது என்பதை பாப்தாதா பார்க்கின்றார். அதை இன்னும்
அதிகரிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளின் உரையாடல்களைக் கேட்டு
பாப்தாதா புன்முறுவல் செய்தார், சக்திசாலியான நினைவு நான்கு மணி
நேரம் இருப்பதில்லை என்று குழந்தைகள் கூறுகின்றனர். எட்டு மணி
நேரத்திலிருந்து 4 மணி நேரமாக பாப்தாதா ஆகியிருந்தார், ஆனால்
குழந்தைகள் இரண்டு மணி நேரம் நன்றாக இருக்கிறது என்று
கூறுகின்றனர். ஆக கட்டுப்படுத்தும் சக்தி வந்திருக்கிறதா? என்று
கூறுங்கள். இப்பொழு திலிருந்தே இந்த பயிற்சி இல்லையெனில்
தகுந்த நேரத்தில் நேர்மையுடம் தேர்ச்சி, இராஜ்ய அதிகாரி எப்படி
ஆக முடியும்? ஆக வேண்டும் அல்லவா? குழந்தைகள் சிரிக்கிறீர்கள்.
இன்று பாப்தாதா குழந்தைகளின் விசயங்களை அதிகம் கேட்டார்.
பாப்தாதாவை மகிழ்விக்கவும் செய் கிறீர்கள், டிராபிக் கண்ட்ரோல்
3 நிமிடம் கூட செய்ய முடிவது கிடையாது என்று கூறுகிறீர்கள்.
சரீரம் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது, ஆனால் மனம் சில நேரம்
கட்டுபடுகிறது சில நேரம் கட்டுப்படுவது கிடையாது. காரணம் என்ன?
கட்டுப்படுத்தும் சக்தியில் குறை இருக்கிறது. இப்பொழுது இதை
இன்னும் அதிகப்படுத்த வேண்டும். கட்டளை இடுங்கள். கைகளை மேலே
தூக்க வேண்டுமெனில் உயர்த்தி விடுகிறீர்கள். அதே போன்று மனம்,
இந்த சூட்சும சக்தி கட்டுப்பாட்டில் வர வேண்டும். கொண்டு வந்தே
ஆக வேண்டும். நில் (ஸ்டாப்) என்று கட்டளை யிட்டதும் அது நின்று
விட வேண்டும். சேவை பற்றி யோசிக்க வேண்டும் என்றதும் சேவையில்
ஈடுபட வேண்டும். பரந்தாமத்திற்கு செல் என்றதும் பரந்தாமத்திற்கு
சென்று விட வேண்டும். சூட்சுமவதனத்திற்கு செல் என்றதும்
விநாடியில் சென்று விட வேண்டும். என்ன யோசிக் கிறீர்களோ அது
கட்டளைப்படி இருக்க வேண்டும். இப்பொழுது இந்த சக்தியை
அதிகப்படுத்துங்கள். சிறிய சிறிய சன்ஸ்காரங்களில், யுத்தத்தில்
நேரத்தை வீணாக்காதீர்கள். இன்று இந்த சன்ஸ்காரத்தை விரட்டினேன்,
நாளை அதை விரட்டினேன். கட்டுப்படுத்தும் சக்தியை தாரணை
செய்தீர்கள் எனில் தனித்தனி சன்ஸ்காரங்களில் நேரம் பயன்படுத்த
வேண்டியிருக்காது. யோசிக்கக் கூடாது, செய்யக் கூடாது, பேசக்
கூடாது - நிறுத்து என்றதும் நிறுத்தி விட வேண்டும். இது
கர்மாதீத நிலை அடைவதற்கான விதி. கர்மாதீத நிலை அடைய வேண்டும்
அல்லவா! நீங்கள் தான் ஆக வேண்டும் என்று பாப்தாதாவும்
கூறுகின்றார். வேறு யாரும் வரமாட்டார்கள், நீங்கள் தான் ஆக
வேண்டும். உங்களைத் தான் கூடவே அழைத்துச் செல்வேன். ஆனால்
கர்மாதீத நிலை அடைந்தவர்களை அழைத்துச் செல்வேன் அல்லவா! கூடவே
வருவீர்களா? அல்லது பின்னால் வருவீர்களா? (கூடவே வருவோம்).
மிகவும் நன்றாக கூறினீர்கள். கூடவே வருவீர்களா? கணக்கு
வழக்குகளை முடிப்பீர்களா? இதில் ஆம் என்று கூறவில்லை. கர்மாதீத
நிலை அடைந்து கூடவே வருவீர்கள் அல்லவா! கூடவே செல்வது என்றால்
துணையாகச் செல்வதாகும். ஜோடிப் பொருத்தம் நன்றாக இருக்க
வேண்டுமா? அல்லது குட்டை, நெட்டையாக இருக்க வேண்டுமா? சமமாக
இருக்க வேண்டும் அல்லவா! எனவே கர்மாதீத நிலை அடைந்தே தீர
வேண்டும். ஆக என்ன செய்யப் போகிறீர்கள்? இப்பொழுது தனது
இராஜ்யத்தை நல்ல முறையில் கவனியுங்கள். தினமும் தனது சபை
கூட்டுங்கள். இராஜ்ய அதிகாரி அல்லவா! எனவே தனது தர்பார்
கூட்டுங்கள், வேலைக்காரர்களிடம் விசயங்களைக் கேளுங்கள்.
கட்டளைப்படி இருக்கிறதா? என்று சோதியுங் கள். பிரம்மா பாபாவும்
தினமும் தர்பார் கூட்டினார். இவரிடம் கூற வேண்டும், காண்பிக்க
வேண்டும். பிரம்மா பாபாவும் முயற்சி செய்தார், தினமும் தர்பார்
கூட்டினார், இதன் காரணத்தினால் கர்மாதீத நிலை அடைந்தார். ஆக
இப்பொழுது எவ்வளவு காலம் தேவை? அல்லது எவரெடியாக இருக்கிறீர்களா?
இந்த நிலையின் மூலம் சேவையும் வேகமாக நடைபெறும். ஏன்? ஒரே
நேரத்தில் மனம் சக்திசாலி, வார்த்தை சக்திசாலி,
சம்பந்தம்-தொடர்பு, நடத்தை மற்றும் முகம் சக்திசாலி. ஒரே
நேரத்தில் மூன்று சேவையும் மிக வேகமான ரிசல்ட் வெளிப்படுத்தும்.
இந்த சாதனையின் மூலம் சேவை குறைந்து விடும் என்று
நினைக்காதீர்கள். கிடையாது. எளிதாக வெற்றியின் அனுபவம் ஏற்படும்.
மேலும் சேவைக்கு யாரெல்லாம் நிமித்தமாக இருக்கிறார்களோ,
குழுவாக இப்படிப்பட்ட நிலை உருவாக்கும் போது உழைப்பு குறைவு,
ஆனால் வெற்றி அதிகம் ஏற்படும். ஆகையால் கட்டுப்படுத்தும்
சக்தியை விசேஷமாக அதிகப்படுத்துங்கள். சங்கல்பம், நேரம்,
சன்ஸ்காரம் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
பாப்தாதா பல முறை கூறியிருக்கின்றார் - நீங்கள் அனைவரும்
இராஜாக்கள். எப்போது வேண்டுமோ, எப்படி வேண்டுமோ, எங்கு வேண்டுமோ,
எவ்வளவு காலம் வேண்டுமோ அவ்வாறு மனம், புத்தியை சட்டம் மற்றும்
ஒழுங்கில் வைத்திருக்க வேண்டும். செய்யக் கூடாது என்று நீங்கள்
கூறுகிறீர்கள், ஆனாலும் நடந்து கொண்டிருக்கிறது, நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது எனில் இது சட்டம் மற்றும் ஒழுங்கில் இல்லை.
எனவே சுவ இராஜ்ய அதிகாரிகள் தனது இராஜ்யத்தை சதா பிரத்யட்ச
சொரூபத்தில் கொண்டு வாருங்கள். கொண்டு வர வேண்டும் அல்லவா?
கொண்டு வருகிறீர்கள், ஆனால் பாப்தாதா கூறியிருக்கிறார் அல்லவா
- சதா என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள். பாப்தாதா
இப்போது கடைசியாக வருவார், இப்போது ஒரே ஒரு முறை பாக்கி
இருக்கிறது. அடுத்த முறையின் போது ரிசல்ட் கேட்பார். 15 நாட்கள்
இருக்கும் அல்லவா! 15 நாட்களில் ஏதாவது செய்து காட்டுவீர்களா
இல்லையா? ஆசிரியர்கள் கூறுங்கள், 15 நாட்களில் ரிசல்ட்
கிடைக்குமா?
நல்லது, மதுவனத்தில் இருப்பவர்கள் 15 நாட்களில் ரிசல்ட்
காண்பிப்பீர்களா? ஆம் என்று இப்பொழுது கூறுங்கள். இப்பொழுது கை
உயர்த்துங்கள். (அனைவரும் கை உயர்த்தினர்). தான் கை உயர்த்தியதை
நினைவில் வையுங்கள். முயற்சி செய்கிறேன் என்று கூறுபவர்கள் கை
உயர்த்துங்கள். ஞான சரோவர், சாந்திவனத்தைச் சார்ந்தவர்கள்
எழுந்து நில்லுங்கள். (பாப்தாதா மதுவனம், ஞான சரோவர்,
சாந்திவனத்தின் முக்கிய நிமித்த சகோதர, சகோதரிகளை எதிரில்
அழைத்தார்).
உங்களை அனைவரையும் சாட்சாத்காரம் செய்விப்பதற்காக பாப்தாதா
அழைத்தார். உங்கள் அனைவரையும் பார்த்து அனைவரும் குஷி
அடைகின்றனர். இப்பொழுது பாப்தாதா விரும்புவது என்ன? என்பதை
கூறிக் கொண்டிருக்கின்றார். பாண்டவ பவன், சாந்திவனம், ஞான
சரோவர், ஹாஸ்பிடல் என்று நான்கு தாமங்கள் இருக்கிறது அல்லவா!
ஐந்தாவது சிறியதாக இருக்கிறது. நான்கிலும் பாப்தாதாவிற்கு ஒரே
ஒரு ஆசை இருக்கிறது - மூன்று மாதங்களுக்காக நான்கு தாமங்களிலும்
அகண்ட, நிர்விக்ன, உறுதியான சுவ இராஜ்யதாரி இராஜாக்களின்
ரிசல்ட் பார்க்க விரும்புகின்றார். மூன்று மாதங்களுக்கு இங்கு
அங்கு என்று எந்த ஒரு விசயமும் கேட்கவே கூடாது. அனைவரும் சுவ
இராஜ்ய அதிகாரி, நம்பர் ஒன். மூன்று மாதங்களுக்கு இந்த ரிசல்ட்
கொடுக்க முடியுமா? (நிர்வயர் சகோதரரிடம்) பாண்டவர்களின்
சார்பாக நீங்கள் இருக்கிறீர்கள். கொடுக்க முடியுமா? தாதி
இருக்கவே இருக்கின்றார். ஆனால் கூடவே எதிரில் அனைவரும்
அமர்ந்திருக்கிறீர்கள். கொடுக்க முடியுமா? (முடியும் என்று தாதி
கூறுகின்றார்). பாண்டவ பவனத்தைச் சார்ந்தவர்கள் கை
உயர்த்துங்கள், கொடுக்க முடியுமா? ஒருவர் பலவீனமாக
இருக்கின்றார், அவருக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்து விட்டது எனில்
நீங்கள் என்ன செய்வீர்கள்? கூட இருப்பவர்களுக்கும் துணையாக
இருந்து ரிசல்ட் கொடுப்போம் என்று கூறுமளவிற்கு தைரியம்
இருக்கிறதா? முடியுமா? அல்லது தனக்கான தைரியம் இருக்கிறதா?
மற்றவர்களது விசயங்களையும் தன்னுள் கரைத்துக் கொள்ள முடியுமா?
அவர்களது தவறுகளை கரைக்க முடியுமா? வாயுமண்டலத்தில்
பரப்பாதீர்கள், கரைத்து விடுங்கள், இது செய்ய முடியுமா? ஆம்
என்று சப்தமாகக் கூறுங்கள். வாழ்த்துங்கள். 3 மாதங்களுக்குப்
பிறகு ரிப்போர்ட் பார்ப்பேன். எந்த ஒரு இடத்திலிருந்தும் எந்த
ரிப்போர்ட்டும் வரக் கூடாது. ஒருவருக்கொருவர் வைபிரேசன்
கொடுத்து கரைத்து விட வேண்டும் மற்றும் அன்பாக வைபிரேசன்
கொடுக்க வேண்டும். சண்டை இருக்கக் கூடாது.
இவ்வாறு அயல்நாட்டினரும் ரிசல்ட் கொடுப்பீர்கள் அல்லவா!
அனைவரும் ஆக வேண்டும் அல்லவா! தனது சேவை நிலையத்தில், தன் கூட
இருப்பவர்களது 3 மாதத்திற்கான ரிசல்ட் கொடுப்போம் என்று கூறும்
இரட்டை அயல்நாட்டினர் கை உயர்த்துங்கள். முயற்சிக்கிறேன்,
சொல்ல முடியாது என்று கூறுபவர்கள் யாராவது இருக்கிறீர்கள் எனில்
கை உயர்த்துங்கள். சுத்தமான உள்ளமுடையவர்களாக இருக்கிறீர்கள்.
சுத்தமான உள்ளமுடையவர்களுக்கு உதவி கிடைக்கும். நல்லது. (பிறகு
பாப்தாதா அனைத்து மண்டலத்தில் உள்ள சகோதர, சகோதரிகளையும் கை
உயர்த்த செய்தார், தங்களது இருப்பிடத்தில் எழுந்து நிற்கச்
செய்தார். முதலில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடக சகோதர,
சகோதரிகளை எழுந்து நிற்கக் கூறினார், உறுதிமொழி செய்ய வைத்தார்.
பிறகு உ.பி யில் உள்ளவர்களுக்கு சேவைக்கான வாழ்த்துக்கள்
கொடுத்தார்.) நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள சுவ இராஜ்ய அதிகாரி ஆத்மாக்களுக்கு, சதா
அகண்ட இராஜ்யத்திற்கு தகுதியான ஆத்மாக்களுக்கு, சதா தந்தைக்குச்
சமம் கர்மாதீத நிலை அடையக் கூடியவர்களுக்கு, தந்தையை பின்பற்றக்
கூடிய தீவிர முயற்சியாளர் ஆத்மாக்களுக்கு, சதா ஒருவருக்கொருவர்
சுப பாவனை, சுப விருப்பம் என்ற சகயோகம் கொடுக்கக் கூடிய சுப
சிந்தனையாளர் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
வரதானம்:
தடை செய்பவர்களை ஆசிரியர் என்று புரிந்து கொண்டு
அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய அனுபவி மூர்த்தி
ஆகுக.
எந்த ஆத்மாக்கள் தடை உருவாக்குவதற்கு நிமித்தம் ஆகிறார்களோ
அவர்களை தடை செய்பவர்களாக பார்க்காதீர்கள், அவர்களை சதா பாடம்
கற்றுக் கொடுக்கும், முன்னேற்றுவதற்கு நிமித்த ஆத்மா என்று
புரிந்து கொள்ளுங்கள். அனுபவி ஆக்கக் கூடிய ஆசிரியர் என்று
நினையுங்கள். நிந்தனை செய்பவர் நண்பன் என்று கூறுகிறீர்கள்
எனில் தடைகளை வெல்ல வைத்து அனுபவியாக ஆக்கக் கூடியவர் ஆசிரியர்
ஆகிவிடுகிறார். ஆகையால் தடையாக இருக்கும் ஆத்மாவை அந்த
பார்வையில் பார்ப்பதற்குப் பதிலாக சதா காலத்திற்கும் தடைகளை
கடந்து செல்ல வைப்பதற்கு நிமித்த ஆத்மா, உறுதியான ஆத்மா
ஆக்குவதற்கு நிமித்த ஆத்மா என்று நினைக்கும் போது அனுபவத்தின்
அதாரிட்டி இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
சுலோகன்:
புகார்களின் கோப்பு (பைல்) அழித்து நல்லவர்களாக (பைன்) மற்றும்
செம்மையானவர்களாக (ரீபைன்) ஆகுங்கள்.