17-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இது அதிசயமான பாடம், எல்யைற்ற தந்தை கற்று தருகிறார். பாபா மற்றும் அவரது படிப்பின் மீது எந்த சந்தேகமும் வரக்கூடாது, நமக்கு கற்று தருபவர் யார், என்பதில் முதல் நம்பிக்கை வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு நிரந்தர நினைவில் இருப்பதற்கான ஸ்ரீமத் ஏன் கிடைத்துள்ளது?

பதில்:
ஏனெனில் மாயையெனும் எதிரி இப்பொழுது உங்களின் பின்னாலேயே இருக்கிறது, அது தான் உங்களை விழ வைத்தது, அது இப்போது உங்களை பின் தொடர்வதை விடாது. எனவே தவறு செய்ய வேண்டாம். நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கலாம். ஆனால் அரைக் கல்பமாக அதனுடையவராக இருந்தீர்கள் எனவே விரைவில் விடாது. நினைவை மறந்தீர்கள் எனவே, மாயை தவறு செய்ய வைத்தது. கவனமாக இருங்கள். அசுர வழியில் செல்ல வேண்டாம்.

ஓம் சாந்தி.
இப்பொழுது குழந்தைகளும் உள்ளனர், பாபாவும் இருக்கின்றார். பாபா அனைத்து குழந்தைகளையும் பார்த்து, ஓ! குழந்தைகளே என்று சொல்கிறார், அனைத்து குழந்தைகளும் அதற்குப் பதிலாக ஓ! பாபா என்று சொல்கின்றனர். குழந்தைகள் அதிகமாக உள்ளனர். இந்த ஞானம் ஆத்மாக்களாகிய நமக்குத்தான் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஒரு தந்தைக்கு எவ்வளவு குழந்தைகள். தந்தை கற்பிக்க வந்துள்ளார் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். அவர் முதன் முத-ல் தந்தையாக உள்ளார், பிறகு ஆசிரியர், பிறகு குருவாக இருக்கின்றார்.இப்போது தந்தை தந்தைத்தான். பிறகு தூய்மையடைவதற்காக நினைவு யாத்திரையை கற்பிக்கின்றார். மேலும் இது அதிசயமான படிப்பு என்பதையும் குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். நாடகத்தின் முதல்-இடை-கடையின் ரகசியத்தினை தந்தையைத் தவிர வேறு எவரும் புரிய வைக்க முடியாது, எனவே அவரை எல்லையற்ற தந்தை என்று சொல்லப் படுகின்றது. இந்த நம்பிக்கை குழந்தைகளுக்கு அவசியம் உள்ளது, இதில் சந்தேகம் எதுவும் எழ முடியாது. இவ்வளவு உயர்ந்த படிப்பை எல்லையற்ற தந்தையைத் தவிர வேறு யாரும் கற்பிக்க முடியாது. பதீத பாவனா வாருங்கள், எங்களை தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்லுங் கள் என்று அழைக்கின்றார்கள், ஏனென்றால் இது பதீதமான, தூய்மையில்லாத உலகம். தூய்மை யான உலகிற்கு அழைத்துச் செல்பவர் தந்தை, அங்கே யாராவது பாபா வாருங்கள், பாவன உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்வார்களா? குழந்தைகளுக்குத் தெரியும் அவர் ஆத்மாக்களாகிய நம் அனைவருக்கும் தந்தை. இப்படி நினைக்கும் பொழுது தேக உணர்வு விடுபட்டுப் போகிறது. அவர் எனது தந்தை என்று ஆத்மா தான் சொல்கிறது. இப்போது இந்த நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும். உண்மையில் தந்தையைத் தவிர வேறு எவரும் இவ்வளவு ஞானம் தரமுடியாது. முத-ல் இந்த நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையும் ஆத்மா விற்குத் தான் புத்தியில் ஏற்படுகிறது. இவர் எனது தந்தை என்ற ஞானம் ஆத்மாவிற்கு கிடைக் கின்றது. இதில் உறுதியான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். வாயால் எதுவும் சொல்ல வேண்டாம், நான் ஆத்மா, ஒரு தேகம் விடுத்து மறு தேகம் எடுக்கின்றேன். ஆத்மாவில் தான் சம்ஸ்காரம் அனைத்தும் உள்ளது.

இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள், தந்தை வந்துள்ளார், நமக்கு மிக உயர்ந்த பாடம் கற்பிக்கின்றார், உயர்ந்த கர்மமும் கற்பிக்கின்றார், இதனால் நாம் இந்த உலகில் இப்பொழுது வரவே மாட்டோம். அந்த மனிதர்கள் இந்த உலகில் வரவேண்டும் என நினைக்கிறார்கள். நீங்கள் அப்படி நினைப் பதில்லை. நீங்கள் இந்த அமரக் கதையைக் கேட்டு அமரபுரிக்குச் செல்கிறீர்கள். அமரபுரி என்றால், அங்கே சதா அமரராக இருப்பீர்கள். சத்யுகம்-திரேதாயுகம் அமரபுரியாகும். குழந்தைகளுக்கு எவ்வளவு குஷியிருக்க வேண்டும். இந்த கல்வியை தந்தை சிவனைத் தவிர வேறு எவரும் கற்பிக்க முடியாது. தந்தை நமக்கு கற்பிக்கின்றார். மற்ற ஆசிரியரெல்லாம் சாதாரண மனிதர்களே, இங்கு நீங்கள் யாரை பதீத பாவனர், துக்கத்தை நீக்கி சுகம் தருபவர் என்று சொல்கிறீர்களோ அந்த தந்தையே இப்போது நேருக்கு நேராக வந்து கற்பிக்கின்றார். நேரடியாக வராமல் இராஜயோகக் கல்வி எப்படி கற்பிக்க முடியும்? பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே உங்களுக்காக இங்கே வந்து கற்பிக் கின்றேன். கற்பிப்பதற்காகவே இவருக்குள் பிரவேசமாகின்றேன். உண்மை யில் பகவான் வாக்கும் இது தான், எனவே அவருக்கு அவசியம் உடல் வேண்டும். வாய் மட்டு மல்ல, முழு உடலும் தேவை. அவரே சொல்கிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நான் கல்ப கல்பமும் புருஷோத்தம சங்கமயுகத்தில் சாதாரண உட-ல் வருகின்றேன். அவர் மிக ஏழையுமல்ல, மிகப்பெரிய செல்வந்தருமல்ல, சாதாரணமானவர். குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை வேண்டும், அவர் நமது தந்தை, நாம் ஆத்மா. அவர் ஆத்மாக் களாகிய நமக்கு தந்தை. உலகில் மனிதர்களாக உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் அவர் தந்தை, அதனால் தான் எல்லையில்லா தந்தை என அவரைக் கூறுகின்றனர். சிவஜெயந்தியும் கொண்டாடப்படுகின்றது, அதைப் பற்றியும் யாருக்கும் தெரியாது. யாரிடமாவது கேட்டுப்பாருங்கள், சிவஜெயந்தி எப்போதி-ருந்து கொண்டாடப் படுகின்றது? உடனேயே பரம்பரையாக என்று சொல்வார்கள், அதுவும் எப்போதிருந்து? ஏதாவது தேதி இருக்க வேண்டுமல்லவா! டிராமா ஆதியும், அந்தமும் இல்லாதது? ஆனால் நாடகத்தில் நடைபெறுகின்ற செயல்களுக்கு நாள், கிழமை வேண்டு மல்லவா? இது யாருக்குமே தெரிவதில்லை. நமது சிவதந்தை வருகின்றார் என்று அன்போடு யாரும் இந்த ஜெயந்தியை கொண்டாடுவதில்லை. நேருவின் ஜெயந்தியைக் கூட அவ்வளவு அன்புடன் கொண்டாடுகின்றார்கள். கண்ணீரே வந்துவிடும். சிவஜெயந்தியைப் பற்றி யாருக்குமே தெரிவ தில்லை. இப்போது நீங்கள் அனுபவியாக உள்ளீர்கள். அனேக மனிதர்கள் உள்ளனர். யாருக்குமே ஒன்றுமே தெரிவில்லை. எவ்வளவு விழாக்கள் கொண்டாடுகின்றார்கள். அங்கே சென்றால் உண்மையிலும் உண்மை என்னவென்று சொல்லலாம். பாபா, அமர்நாத் பற்றியும் உதாரணத் திற்காக சொல்-யிருந்தார். அங்கு சென்று உண்மையில் என்ன நடைபெறுகிறது என்று பார்த்தார். மற்றவர்கள் எல்லாம் பிறர் மூலமாக கேட்டதைச் சொல்வார்கள். யாரோ ஒருவர் சொன்னாராம், பனி -ங்கம் உள்ளது என்று, அதுவே சத்தியம் ஆயிற்று. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சரி எது, தவறு எது என்பதைப்பற்றிய அனுபவம் கிடைத்துள்ளது. இதுவரையில் படித்து, கேட்டு வந்த அனைத்தும் தவறுகளே! காயமே (உடல்) பொய்யடா, காற்றடைத்த பையடா.... என்று சொல்லப்படுகிறது. இது பொய்யான கண்டம், அது உண்மையான கண்டம். சத்யுகம், திரேதாயுகம், துவாபரயுகம் முடிந்து விட்டது. இப்போது க-யுகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதையும் வெகு சிலரே தெரிந்துள்ளனர். உங்களது புத்தியில் அனைத்து சிந்தனைகளும் உள்ளது. தந்தையிடம் அனைத்து ஞானமும் உள்ளது, அவரைத்தான் ஞானக்கடல் என்று சொல்லப்படு கின்றது. எப்படி ஆசிரியரும் தன்னைப் போல மாற்றுகின்றாரோ அதுபோல அவர் தன்னிடம் உள்ள ஞானத்தை இவர் உடல் மூலமாக வழங்கி நம்மையும் தனக்கு நிகராக மாற்றிக் கொண்டிருக் கின்றார். இப்போது நீங்கள் எதிரில் அமர்ந்துள்ளீர்கள், பாபா பேசிக் கொண்டிருக்கின்றார். நன்றாக உறுதி செய்கின்றீர்கள் - இவர் நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை, நமக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இவர் ஒரு மனித ஆசிரியர் அல்ல. இந்த தேகத்திற்குள், கற்பிப்பவராகிய அந்த நிராகார சிவதந்தை வீற்றிருக்கின்றார். அவர் நிராகாரராக இருந்தபோதும், ஞானக்கடலாக இருக்கின்றார். மனிதர்களோ அவருக்கென்று எந்த வடிவமும் இல்லை என்று சொல்- விட்டார்கள். மகிமையும் செய்கிறார்கள்: ஞானக்கடல், சுகக்கடல்... ஆனால் புரிந்து கொள்ளவில்லை. நாடகப்படி வெகு தூரம் சென்று விட்டனர். பாபா மிக அருகில் அழைத்து வருகின்றார். 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்கு கற்பிக்க தந்தை வருகின்றார். இந்த ஞானம் வேறு யாரிடமும் கிடைக்க முடியாது. இந்த ஞானமே புதிய உலகிற்கானது. எந்த மனிதரும் தரமுடியாது, ஏனெனில் தமோபிரதானமாக உள்ளனர். அவர்கள் யாரை சதோபிரதானமாக்க முடியும். அவர்களே மேலும் மேலும் தமோபிர தானமாகவே ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் இப்போது புரிந்துள்ளீர்கள், பாபா இவருக்குள் பிரவேசித்து நமக்கு கற்று தருகின்றார். பாபா சொல்கிறார்: குழந்தைகளே, தவறு செய்யாதீர்கள், எதிரி, இப்பொழுதும் உங்கள் பின்னாலேயே இருக்கிறான். அவன் தான் உங்களை விழ வைத்தவன், அவன் இப்போது உங்களைப் பின் தொடர்வதை நிறுத்த மாட்டான். நீங்கள் சங்மகயுகத்தில் இருக்கலாம். இருந்தாலும் அரைக் கல்பமாக அவனுடன் இருந்தீர்கள் அல்லவா, எனவே அவ்வளவு சுலபமாக விட்டுவிடமாட்டான். கவனமாகயில்லையென்றால், நினைவு செய்யவில்லையென்றால் மேலும் தவறுகள் செய்ய வைப்பான். பிறகு ஏதேனும் அடி விழுந்து கொண்டேயிருக்கும். இப்போதெல்லாம் பாருங்கள், மனிதர்கள் தன்னைத்தானே அடித்துக் கொள்கிறார்கள். என்னென்ன சொல்-விடுகிறார்கள். சிவன் மற்றும் சங்கர் இருவரையும் ஒன்றாக இணைத்து சொல்- விட்டார்கள். அவருடைய தொழில் என்ன?, இவருடைய தொழில் என்ன? எவ்வளவு வித்தியாசம் உள்ளது! சிவனோ உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான், சங்கர் தேவதை. பிறகு சிவசங்கர் என்று இணைத்து சொல்வது எப்படி? நடிப்பே இருவருக்கும் தனிப்பட்டது இங்கு கூட அனேகருக்கு இப்படியெல்லாம் (சிவசங்கர்) பெயர் வைத்துள்ளார்கள், இராதா கிருஷ்ணன், இலட்சுமி நாராயணன், சிவசங்கர், இருவர் பெயரையும் தனக்கே வைத்துக் கொண்டார்கள். குழந்தைகள், புரிந்துள்ளீர்கள், இதுவரையில் பாபா புரிய வைத்த அனைத்தும் மீண்டும் திரும்ப நடைபெறும். இன்னும் சிறிது நாட்களே உள்ளன. பாபா இங்கேயே அமர்ந்து விடுவாரா என்ன? குழந்தைகள் வரிசைக்கிரமமாக படித்து கர்மாதீத் நிலையடைந்து விடுவார்கள். நாடகப்படி மாலையும் உருவாகிவிடும். எந்த மாலை? அனைத்து ஆத்மாக்களின் மாலை உருவாகிவிடும், பிறகு வீடு திரும்பிச் செல்வார்கள். முதல் நம்பர் மாலை உங்களுடையது தான். சிவபாபாவின் மாலை மிகப் பெரியது. அங்கிருந்து மீண்டும் வரிசைக்கிரமமாக நடிப்பதற்கு வருவார்கள். நீங்கள் அனைவரும் பாபா பாபா என்று சொல்கிறீர்கள். அனைவரும் ஒரு மாலை யின் மணிகள். அனைவரையும் விஷ்ணு மாலையின் மணி என சொல்ல முடியாது. இங்கே பாபா வந்து கற்பிக்கின்றார். சூரிய வம்சத்தினர் ஆக வேண்டும். கடந்து முடிந்த சூரிய வம்சம், சந்திர வம்சம் மீண்டும் நடைபெறும். இந்த பதவி கிடைப்பதே படிப்பில் தான். தந்தையின் படிப்பில்லா மல் இந்த பதவி கிடைக்க முடியாது. சித்திரமும் உள்ளது, ஆனால் யாவரும் நாம் அப்படி ஆக வேண்டும் என்று நடந்து கொள்வதில்லை. சத்ய நாராயணன் கதை சொல்கிறார்கள், கருட புரûôணத்திலும் இதுபோன்ற விசயங்களெல்லாம் மனிதர்களுக்குச் சொல்கிறார்கள். பாபா சொல்கிறார்: விஷக்கடல் என்பது இந்த கொடிய நரகம் தான். அதிலும் குறிப்பாக பாரதத்தைத்தான் சொல்லப்படும். குருதசையும பாரதத்திற்கே உள்ளது. விருட்சபதியும் பாரதவாசிகளுக்குதான் கற்பிக்கிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை எல்லைக்கப்பாற்பட்ட விசயங்களைப் புரிய வைக் கின்றார். குரு தசை உருவாகிறது. ராகு தசையும் உள்ளது, எனவே சொல்கிறார்கள், கொடுங்கள் தானம், விடுபடும் கிரகணம். பாபாவும் சொல்கிறார், இந்த க-யுகம் கடைசியில் அனைவருக்கும் ராகு திசை நடைபெறுகிறது. பாரதத்திற்கு குருதசை உருவாக்குவதற்காக இப்போது நான் விருட்சபதி வந்துள்ளேன். சத்யுகத்தில் பாரதத்திற்கு குருதசை இருந்தது. இப்பொழுது ராகு தசை உள்ளது. இது எல்லைக்கப்பாற்பட்ட விசயம். இது எந்த சாஸ்திரங்களிலும் இல்லை, இங்குள்ள பத்திரிக்கைகளும் முன்பு ஏதாவது புரிந்தவர்களுக்கே புரிய வரும். பத்திரிக்கை படித்தவுடன் மேலும் புரிந்து கொள்வதற்காக ஓடி வருவார்கள். மீதமுள்ளவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். சிறிதளவாவது படித்து விட்டு பிறகு விட்டுச் சென்றிருந்தால் சிறிதளவாயினும் அவர்களுக்குள் ஞானம் என்னும் நெய் பட்டவுடன் மீண்டும் விழித்தெழுவார்கள். ஞானத்தை நெய் என்றும் சொல்லப்படுகிறது. அணைந்திருந்த தீபத்தில் தந்தை வந்து ஞானம் என்ற நெய்யை ஊற்றிக் கொண்டிருக்கின்றார். தந்தை சொல்கிறார்: குழந்தைகளே! மாயையின் புயல் வீசும், தீபத்தை அணைக்க முற்படும், தீப ஒளியில் விட்டில் பூச்சிகள் சில மடிந்து போகின்றது, சில வட்டமிட்டுச் சென்றுவிடுகின்றது. அதே விசயம் தான் இப்போது திரும்பவும் நடைபெறுகின்றது. அனைவரும் விரிசைக்கிரமமான விட்டில் பூச்சிகள். முதன் முதலில் முற்றிலும் வீடு வாசலை துறந்து மடிந்துவிட்டனர். லாட்டரி கிடைத்ததுபோல உணர்ந்தனர், கடந்து முடிந்த அனைத்தையும் நீங்கள் மீண்டும் செய்வீர்கள். விட்டுச் சென்றிருக்கலாம், அதற்காக சொர்க்கத்திற்கு வரமாட்டார்கள் என்று கருத வேண்டாம். விட்டில் பூச்சிகளாக அன்பில் மடிந்தவர்களை தான், பிறகு மாயை வீழ்ச்சி யடைய வைத்தது, எனவே பதவி குறைவு ஏற்படும். வரிசைக்கிரமமாகத்தான் இருப்பார்கள். பிறகு சத்சங்கங்களில் கூட மற்றவர்கள் புத்தியிலும் இருக்காது. உங்கள் புத்தியில் உள்ளது. பாபா விடமிருந்து புதிய உலகிற்காக வரிசைக்கிரமமாக நாம் அனைவரும் முயற்சியின் அடிப்படையில் படித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் எல்லையில்லா தந்தை முன்பு அமர்ந்துள்ளோம் இதுவும் உங்களுக்குத் தெரியும். ஆத்மாவை கண்களால் பார்க்க முடியாது. ஒரு சூட்சுமமான பொருள். அதனை தெய்வீக கண்ணால் தான் பார்க்க முடியும். நாம் ஆத்மாவும் ஒரு சிறுபுள்ளி ஆனால் தேகபிமானத்தை விட்டு தன்னை ஆத்மா என புரிந்து கொள்வது தான் மிக உயர்ந்த படிப்பு. அந்த படிப்பிலும் கடினமான பாடத்தில் தோல்வி அடைகிறார்கள். இது மிக சுலபமான பாடம் தான், ஆனால் சிலருக்கு கடினமாக தெரிகிறது.

இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள், சிவபாபா முன்னால் அமர்ந்துள்ளார். நீங்களும் நிராகாரமான ஆத்மாக்கள் தான், ஆனால் உடலுடன் உள்ளீர்கள். இந்த விசயமெல்லாம் எல்லையில்லாத தந்தை தான் சொல்கிறார். வேறு யாரும் சொல்ல முடியாது. பிறகு என்ன செய்வார்கள், அவருக்கு நன்றி செலுத்தலாமா? வேண்டாம் பாபா கூறுகிறார், இது முடிவில்லை. நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. நான் ஒன்றும் புதிய விசயம் சொல்லவில்லை. நாடகப்படி உங்களுக்கு கற்பிக்கிறேன். பக்தி மார்க்கத்தில் நன்றி சொல்கிறீர்கள். ஆசிரியர்கள் சொல்வார்கள், மாணவர்கள் நன்றாக படித்தால் நமது பெயர் காப்பாற்றப்படும். மாணவருக்கு நன்றி சொல்லப்படும். யார் நன்றாகப் படித்து, கற்பிப்பார்களோ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படும். மாணவர் பிறகு ஆசிரியருக்கு நன்றி செலுத்துவார். பாபா கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே! நீடுழி வாழுங்கள், இப்படியெல்லாம் சேவை செய்யுங்கள். கல்பத்திற்கு முன்னால் செய்தீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) நமக்கு கற்பிப்பவர் எந்த ஒரு மனித ஆசிரியர் அல்ல என்ற நம்பிக்கையும், பெருமிதம் (நஷா) சதா இருக்கட்டும். சுயம் ஞானக்கடலான நிராகாரர் தந்தையே ஆசிரியராக நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த படிப்பில் தான் நாம் சதோபிரதானமாக வேண்டும்.

(2) ஆத்மா என்னும் தீபத்தில் தினமும் ஞானம் என்னும் நெய் ஊற்ற வேண்டும். ஞானமெனும் நெய் மூலம் மாயையின் எந்தவிதமான புயலாலும் அசைந்துவிடாத வண்ணம் சதா சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருங்கள். முழுமையான விட்டில் பூச்சியாகி தீப ஒளியில் மடிந்து விடவும்.

வரதானம்:
சதா ஒரு தந்தையின் அன்பில் மூழ்கி சகயோகியில் இருந்து சகஜயோகி ஆத்மா ஆகுக.

எந்தக் குழந்தைகளுக்கு பாபாவிடம் அதிக அன்பு உள்ளதோ, அந்த அன்பான ஆத்மா சதா பாபாவின் சிரேஷ்ட காரியத்தில் சகயோகி ஆகிறார் மற்றும் எவ்வளவு சகயோகியோ அவ்வளவு சகஜயோகி ஆகி விடுகிறார். பாபாவின் அன்பில் மூழ்கிய சகயோகி ஆத்மா ஒரு போதும் மாயாவின் சகயோகி ஆக முடியாது. அவரது ஒவ்வொரு சங்கல்பத்திலும் பாபா மற்றும் சேவை இருக்கும். எனவே தூங்குவார்கள் என்றாலும் அதில் மிகுந்த ஓய்வு கிடைக்கும். சாந்தி மற்றும் சக்தி கிடைக்கும். தூக்கம், தூக்கமாக இருக்காது. எப்படி வருமானம் சம்பாதித்த பிறகு குஷியில் படுத்திருக் கிறார்களோ, அவ்வளவு மாற்றம் ஏற்பட்டு விடும்.

சுலோகன்:
அன்பின் கண்ணீர், மனம் என்ற பெட்டகத்தில் முத்தாகி விடும்.