19-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! முழு உலகத்தின் ஐயோ,
ஐயோ என்ற அலறலிருந்து வெற்றி வெற்றி என்ற முரசை ஒலிக்கச்
செய்வதற்காக பாபா வந்திருக்கின்றார். பழைய உலகத்தின் ஐயோ, ஐயோ
என்ற கூக்குரல், புது உலகத்தின் வெற்றி முழக்கம் ஆகும்.
கேள்வி:
எந்தவொரு ஈஸ்வரிய விதியின்படி
ஏழைகள் தான் பாபாவிடமிருந்து முழுமையான ஆஸ்தியை அடைய முடியும்,
பணக்காரர்கள் அடைய முடியாது?
பதில்:
ஈஸ்வரிய விதியானது - முழுமையான
பிச்சைக்காரன் ஆகுங்கள், எதுவெல்லாம் இருக் கின்றதோ அவை
அனைத்தையும் மறந்து விடுங்கள். இதை ஏழைக் குழந்தைகள் சுலபமாக
மறந்து விடமுடியும். ஆனால் பணக்காரர்கள், தாங்கள் சொர்க்கத்தில்
இருப்பதாக நினைக்கின்றனர். அவர் களுடைய புத்தி எதுவும்
மறப்பதில்லை. அதனால் யாரொருவர் பணம், சொத்து, சொந்த பந்தத்
தினுடைய நினைவில் இருக்கின்றார்களோ அவர்கள் உண்மையான யோகியாக
மாற முடியாது. அவர்களுக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவி
கிடைக்காது. ஓம் சாந்தி.
ஓம் சாந்தி.
இனிமையான நிச்சய புத்தியுடைய குழந்தைகள் நன்றாக
அறிந்துள்ளீர்கள், முழு உலகத்தினுடைய சண்டையை தீர்ப்பதற்காக
பாபா வந்திருக்கின்றார் என்பதில் அவர்களுக்கு உறுதியான
நம்பிக்கை உள்ளது. இந்த உடலில் பாபா வந்திருக்கின்றார்,
அவருடைய பெயர் தான் சிவபாபா என்று நல்ல புத்திசாலியான
குழந்தைகள் அறிந்துள்ளனர். ஏன் வந்திருக்கின்றார்? ஐயோ, ஐயோ
என்ற கூக்குரலை நீக்கி வெற்றி முழக்கத்தை ஏற்படுத்துவதற்காக.
மரண உலகத்தில் அதிகமான சண்டைகள் நடக்கின்றது. அனைவரும் கணக்கு
வழக்கை முடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அமரலோகத்தில்
சண்டையின் விசயமேயில்லை. இங்கு எத்தனை குழப்பங்கள்
ஏற்படுகின்றன! எத்தனை நீதிமன்றங்கள், நீதிபதிகள் இருக்கின்றனர்!
கொலைகள் கூட நடக் கின்றது. வெளிநாடுகளிலும் கூட பிரச்சனைகளைப்
பார்க்க முடிகிறது. முழு உலகத்திலும் அதிக மான தொல்லைகள் உள்ளது.
இதைத்தான் கூறப்படுகின்றது பழைய தமோபிரதான மான உலகம் குப்பையோ
குப்பை தான். காட்டிலும் காடாக உள்ளது. எல்லையற்ற தந்தை இவை
அனைத் தையும் நீக்குவதற்காகத் தான் வந்திருக் கின்றார். இப்போது
குழந்தைகள் மிகுந்த அறிவாளிகளாக, புரிந்து கொள்ளக்
கூடியவர்களாக மாற வேண்டும். ஒருவேளை குழந்தை களுக்குள்ளேயே
சண்டை சச்சரவுகள் இருந்தால் பாபாவிற்கு எப்படி உதவியாளராக மாற
முடியும்? பாபாவிற்கு அதிக மான உதவி செய்யும் குழந்தைகள்
தேவைப்படுகின்றனர். அதாவது இடையூறுகள் செய்யாத நல்ல பண்பாடு
உள்ள புத்திசாலியான குழந்தைகள் தேவைப்படுகின்றனர். இது பழைய
உலகம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அதிகமான தர்மங்கள் உள்ளது.
தமோபிரதானமான விகாரமான உலகம் ஆகும். பதீதமான பழைய உலகத்தில்
சண்டையோ சண்டைதான் நடக்கின்றது. அனைத் திற்கும் தீர்வு காண்ப
தற்காக, வெற்றி முரசை ஒலிப்பதற்காக பாபா வந்திருக்கின்றார்.
ஒவ்வொரு வரும் அறிந்துள்ளனர் இந்த உலகில் எவ்வளவு துக்கம்
மற்றும் அசாந்தி உள்ளது, அதனால் உலகத்தில் அமைதி நிலவ வேண்டும்
என்று விரும்பு கின்றனர். இப்பொழுது முழு உலகத்திலும் எந்த
மனிதன் அமைதியை ஏற்படுத்த முடியும்? எல்லையற்ற தந்தையை
கல்லாகவும், முள்ளாக வும் காட்டி விட்டனர். இதுவும் ஒரு
விளையாட்டு தான்.
பாபா குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார், இப்பொழுது
எழுந்திருங்கள், பாபாவுடைய உதவி யாளராக ஆகுங்கள்.
பாபாவிடமிருந்து தன்னுடைய இராஜ்ய பாக்கியத்தினை அடைய வேண்டும்.
அளவிடமுடியாத சுகத்தை அடைய வேண்டும், குறைவாக அல்ல. பாபா
சொல்கின்றார் இனிமை யான குழந்தைகளே! நாடகப்படி உங்களை பத்மாபதம்
பாக்கியசாலியாக மாற்றுவதற்காக எல்லை யற்ற தந்தை
வந்திருக்கின்றார். பாரதத்தில் இந்த இலட்சுமி-நாராயணர்கள் தான்
இராஜ்யம் செய்தனர். பாரதம் சொர்க்கமாக இருந்தது. சொர்க்கத்தைத்
தான் அதிசய உலகம் என்று சொல்லப் படுகின்றது. திரேதாயுகத்தை
அவ்வாறு கூறுவதில்லை. அப்பேற்பட்ட சொர்க்கத் திற்கு வருவதற்
காக குழந்தைகள் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். சொர்க்கத்தின்
ஆரம்பத்திலேயே வர வேண்டும். நாம் சொர்க்கத்திற்கு வரவேண்டும்,
இலட்சுமி நாராயணர் ஆக வேண்டும் என்று குழந்தைகள்
விரும்புகின்றனர். இப்பொழுது பழைய உலகில் ஐயோ, ஐயோ என்ற அலறல்
ஏற்பட வேண்டும், இரத்த ஆறு ஓட வேண்டும். இரத்த ஆற்றிற்கு பிறகு
நெய்யாறு ஓடும். அந்த உலகைத் தான் பாற்கடல் என்று சொல்லப்
படுகின்றது. இங்கே கூட பெரிய குளம் கட்டுகின்றார்கள், பிறகு ஒரு
நாளைத் தேர்ந்தெடுத்து, அந்த குளத்தில் பாலை ஊற்றுவார்கள்.
அதில் பிறகு குளிப்பார்கள். சிவலிங்கத்தின் மீது பாலாபிஷேகம்
செய்கின்றனர். சத்யுகத்திற்கு மகிமை உண்டு. அங்கு நெய்யாறு,
பாலாறு ஓடும்,. அந்த மாதிரியெல்லாம் இல்லை. ஒவ்வொரு 5000
வருடத்திற்கு பிறகு நீங்கள் உலகத்திற்கு எஜமானராக ஆகின்றீர்கள்.
இந்த சமயத்தில் நீங்கள் அடிமையாகயுள்ளீர்கள். பிறகு நீங்கள்
தான் எஜமானன் ஆகின்றீர்கள். இயற்கை உட்பட அனைத்தும் உங்களுடைய
அடிமையாகிவிடும். அங்கே ஒருபோதும் விதியை மீறி மழை பொழியாது,
நதிகள் கொந்தளிக்காது, அங்கே எந்தவொரு தொல்லைகளும் நடக்காது.
இங்கே பாருங்கள் எத்தனை தொல்லைகள். அங்கே உண்மையான வைஷ்ணவர்கள்
இருந்தார்கள். விகாரியான வைஷ்ணவர்கள் இருக்க மாட்டார்கள். இங்கே
யாராவது சைவர்களாக (வெஜிடேரியன்) மாறினால் அவர்களை வைஷ்ண வர்கள்
என்றழைக்கின்றனர். ஆனால் அவர்கள் வைஷ்ணவர்கள் இல்லை,
விகாரத்தின் மூலமாக ஒருவருக்கொருவர் மிகவும் துக்கம் கொடுத்துக்
கொள்கின்றனர். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார்!
கிராமத்து சிறுவன் என்றெல்லாம் சொல்கின்றனர். கிருஷ்ணர்
கிராமத்திலெல்லாம் இருந்திருக்க முடியாது. அவர் வைகுண்டத்தின்
எஜமானர். பிறகு 84 பிறவிகள் எடுக்கின்றார்.
நாம் பக்தியில் எவ்வளவு நஷ்டங்கள் அடைந்தோம், எவ்வளவு பணம்
செலவு செய்தோம் என்பதை இப்பொழுது தான் நீங்கள் அறிவீர்கள். பாபா
கேட்கின்றார்: உங்களுக்கு எவ்வளவு செல்வங்கள் கொடுத்தேன்,
இராஜ்யத்தினுடைய பாக்கியம் கொடுத்தேன், இவை அனைத்தையும் எங்கே
இழந்தீர்கள்? உங்களை உலகத்திற்கு எஜமானனாக மாற்றினேன். பிறகு
நீங்கள் என்ன ஆனீர்கள்? பாபா நாடகத்தைப் பற்றி தெரிந்துள்ளார்.
புதிய உலகம் பழைய உலகமாகின்றது, பழைய உலகம் புது உலகமாகின்றது.
இந்த சக்கரத்தில் எது நடந்து முடிந்ததோ அது மீண்டும் திரும்ப
நடக்கும். பாபா சொல்கின்றார், இப்போது சமயம் குறைவாக உள்ளது.
முயற்சி செய்து எதிர்காலத்திற்காக சேமியுங்கள். பழைய
உலகத்தினுடைய அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போய்விடும். பணக்
காரர்கள் இந்த ஞானத்தை ஏற்றுக் கொள்வதில்லை. பாபா ஏழைப்பங்காளன்.
ஏழைகள் தான் அங்கே பணக்காரர்கள் ஆகின்றனர். செல்வந்தர்கள் அங்கே
ஏழையாகின்றனர். இப்போது கோடிஸ்வரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
அவர்களும் வருவார்கள், ஆனால் ஏழைகளாக இருப்பர். அவர்கள் தங்களை
சொர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றனர், அதை புத்தியிலிருந்து
வெளியேற்ற முடியாது. இங்கு பாபா சொல்கின்றார் அனைத்தையும்
மறந்து விடுங்கள். ஒன்று மில்லாத பிச்சைக்காரனாகி விடுங்கள்.
இன்றைய சூழலில் கிலோ கிராம், கிலோ மீட்டர் என்றெல்லாம் வந்து
விட்டது. யார் இராஜா பதவியில் உள்ளனரோ அவர்கள் தங்களுடைய
பாணியில் (விருப்பப்படி) இராஜ்யம் செய்கின்றனர். வெளிநாடுகளை
பின்பற்றுகின்றனர். தனக்கென்று புத்தியிருப் பதில்லை.
தமோபிரதானமாக உள்ளனர். அமெரிக்கா போன்றவற்றில் வினாசத்திற்காக
நிறைய பணத்தை செலவிடு கின்றனர். விமானத்திலிருந்து
அணுகுண்டுகளைப் போடுகின்றனர், தீப்பற்ற வைக்கின்றனர். பாபா
வந்திருக்கின்றார் வினாசம் மற்றும் ஸ்தாபனை செய்வதற்காக என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். உங்களிலும் கூட புரிய
வைக்கக்கூடியவர்கள் வரிசைக்கிரமமாகத்தான் உள்ளனர். அனைவரும் ஒரே
மாதிரியான நம்பிக்கை புத்தியுடைய வரில்லை. பாபா எப்படி செய்தாரோ
அதை அப்படியே பின்பற்ற வேண்டும். பழைய உலகத்தில் இந்த பணம்,
செல்வத்தையெல்லாம் என்ன செய்வீர்கள்? இன்று காகிதத்தைத் தான்
பணமாக்கு கின்றார்கள். அங்கு தங்க நாணயங்கள் இருக்கும்.
தங்கத்தினாலேயே மாளிகைகள் கட்டப்படும் என்றால் தங்க
நாணயங்களுக்கு என்ன மதிப்பு இருக்கும்? அனைத்தும் இலவசமானது,
சதோபிர தானமான பூமியல்லவா! இப்போது பழமையாகி விட்டது. அது
சதோபிரதானமான புது உலகம் ஆகும். முற்றிலும் புதிய இடம். நீங்கள்
சூட்சும வதனத்திற்கு செல்கின்றீர்கள், பழச்சாறு கள்
குடிக்கின்றீர்கள். ஆனால் அங்கே மரங்கள் எதுவும் இருப்பதில்லை.
மூலவதனத்திலும் இருக்காது. எப்போது நீங்கள் வைகுண்டத்திற்கு
செல்கின்றீர்களோ அப்போது உங்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றது.
புத்தியின் மூலம் சிந்தனை செய்து பாருங்கள். சூட்சும வதனத்தில்
மரங்கள் இருப்பதில்லை. மரமானது பூமியில் தான் வளர்கின்றது.
ஆகாயத்தில் அல்ல. பிரம்மத் தத்துவம் என்ற பெயருண்டு. ஆனால்
அதுவும் ஆகாயம் தான். எப்படி நட்சத்திரங்கள் ஆகாயத்தில்
இருக்கின்றதோ, அவ்வாறே நீங்களும் சின்னசிறிய ஆத்மாக்களாக அங்கே
இருப்பீர்கள். நட்சத்திரங்களை நேரே பார்க்கும்போது பெரியதாகத்
தென்படும். அதுபோல் பிரம்ம தத்துவத்தில் பெரிய பெரிய ஆத்மாக்கள்
இருக்கும் என்பதெல்லாம் கிடையாது. இதையெல்லாம் புத்தி மூலமாக
சிந்தனை செய்ய வேண்டும். ஞானக்கடலை கடைய வேண்டும். ஆத்மாக்கள்
மேலே தான் இருக்கின்றன. சிறுபுள்ளியாக உள்ளது. இந்த அனைத்து
விசயங்களையும் நீங்கள் தாரணை செய்ய வேண்டும். அப்போது தான்
மற்றவர்களை தாரணை செய்ய வைக்க முடியும். ஆசிரியர் தான்
அறிந்திருப்பதால் தான் மற்றவர்களுக்கு படிப்பிக்கின்றனர்.
இல்லையென்றால் எதற்கு ஆசிரியர் என்று சொல்ல வேண்டும். ஆனால்
இங்கு ஆசிரியர்கள் கூட வரிசைப்படியாகத்தான் உள்ளனர்.
குழந்தைகளாகிய நீங்கள் வைகுண்டத்தைப்பற்றி தெரிந்துள்ளீர்கள்.
நீங்கள் வைகுண்டத்தை பார்த்ததில்லை என்பது கிடையாது., நிறைய
குழந்தைகள் காட்சிகள் பார்த்துள்ளனர். அங்கே சுயவரம் எப்படி
நடக்கும், என்ன மொழி பேசுவார்கள் போன்ற அனைத்தையும்
பார்த்துள்ளீர்கள். கடைசியாக நீங்களும் காட்சிகள் காண்பீர்கள்.
ஆனால் யார் யோகயுக்த் ஆக உள்ளனரோ அவர்களே காட்சிகள் பார்ப்பர்.
அவ்வாறல்லாமல் யாருக்கு சொந்தம், பந்தம், பணம், சொத்து
நினைவிற்கு வருகின்றதோ அவர்கள் என்ன பார்ப்பார்கள். உண்மையான
யோகிகள் தான் இறுதி வரையில் இருப்பார்கள், அவர்கள் தான்
பாபாவைப் பார்த்து குஷியடைவர். மலர்த்தோட்டமானது
உருவாக்கப்படுகின்றது. நிறைய பேர் 10-15 வருடம் இருந்து
போய்விடுகின்றனர். அவர்களை எருக்கம்பூ எனலாம். நல்ல நல்ல பெரிய
குழந்தைகள் மம்மா பாபா விற்காக வழிக்காட்டுதல்களை எடுத்து
வந்தனர், பயிற்சி செய்ய வைத்தனர். அவர்கள் இன்று இல்லை. மாயா
மிகவும் சக்திசாலியானது என்பதை குழந்தைகளும் அறிவார்கள்,
பாபாவும் அறிவார். மாயாவிடம் இரகசிய மான யுத்தம் இதுவாகும்.
இரகசியமான புயல். மாயா உங்களுக்கு நிறைய தொல்லைகளை ஏற்படுத்தும்
என்று பாபா கூறுகின்றார். இது வெற்றி தோல்விகள் அடங்கியுள்ள
நாடகம் ஆகும். உங்களுக்கு ஆயுதங்கள் மூலம் போடக் கூடிய
சண்டையில்லை. பாரதத்தினுடைய பழமையான யோகம் என்ற புகழுண்டு. யோக
பலத்தின் மூலமாகத்தான் மாறுகின்றீர்கள். உடல் சக்தியின் மூலமாக
உலக இராஜ்யத்தை யாரும் அடைய முடியாது. இந்த விளையாட்டே
அதிசயமானது. இரண்டு பூனைகள் வெண்ணெய்க்காக சண்டைப்போட்டது..
என்ற கதையுண்டு. வினாடியில் உலக இராஜ்யம் என்று
சொல்லப்படுகின்றது. குழந்தைகள் காட்சிகள் பார்த்துள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளனர் கிருஷ்ணருடைய வாயில் வெண்ணெயிருந்தது.
உண்மையில் கிருஷ்ணருடைய வாயில் புது உலகத்தைத்தான் பார்த்தனர்.
யோக சக்தியின் மூலமாக நீங்கள் உலக இராஜ்யம் என்ற வெண்ணெயை அடை
கின்றீர்கள். இராஜ்யத்திற்காக எத்தனை சண்டைகள்! அந்த சண்டை யில்
எத்தனை இழப்புகள்! இந்த பழைய உலகத்தின் கணக்கு வழக்கு முடிய
வேண்டும். இந்த உலகத்தினுடைய எந்தவொரு பொருளும் இருக்காது.
பாபாவுடைய ஸ்ரீமத்தானது - குழந்தைகளே! கெட்டதைக் கேட்காதீர்கள்,
கெட்டதைப் பார்க்காதீர்கள்... அவர்கள் குரங்கை வைத்து சித்திரம்
உருவாக்கி விட்டனர். இன்றைய நிலையில் மனிதர்களுக்குக் கூட
உருவாக்கு கின்றனர். முன்பெல்லாம் சீனாவிலிருந்து யானை
தந்தங்கள் போன்ற பொருட்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கும்.
சுடியா என்ற ஆபரணமானது அணியப்பட்டது. இங்கு அணிகலன்கள் அணிவதற்
காக காது, மூக்குகளில் துளைகள் போட்டுக் கொள்கின்றனர்.
சத்யுகத்தில் மூக்கு காதுகளில் துளைபோட வேண்டிய அவசியம் இல்லை.
இங்கு மாயா அப்பேற்பட்டது அனைவருடைய மூக்கு, காதுகளை அறுத்து
விட்டது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தூய்மையாக மாறிக்
கொண்டே இருக்கிறீர்கள். அங்கே இயற்கையான அழகு இருக்கும். எந்தப்
பொருளையும பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இங்கே உடலானது
தமோபிரதானமான தத்துவத்தால் உருவாக்கப்பட்டுள்ளது, அதனால்
வியாதிகள் ஏற்படுகின்றது. அங்கே இந்த மாதிரியெல்லாம்
ஏற்படுவதில்லை. நமக்கு எல்லையற்ற தந்தை கற்பித்து நரனி-ருந்து
நாராயணனாக, அமரபுரிக்கு எஜமானராக மாற்றுகின்றார் என உங்களுடைய
ஆத்மாவிற்கு மிகுந்த குஷியுள்ளது. அதீந்திரிய சுகத்தைப்பற்றி
கேட்க வேண்டும் என்றால் கோப கோபியரைக் கேளுங்கள் என்று
புகழ்பாடப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த விசயங்களைப் பற்றி
அறிந்திருக்கவில்லை. உங்களிலும் கூட மிக குறைவான குழந்தைகள்
தான் குஷியாகயுள்ளனர். மேலும் இந்த விசயங்களைப் பற்றியெல்லாம்
சிந்தனை செய்கின்றனர். அபலைகளுக்கு எத்தனை கொடுமைகள்
நடக்கின்றது! திரௌபதியினுடைய மகிமையானது தற்போது நடைமுறையில்
நடந்துக் கொண்டிருக்கின்றது. திரௌபதி ஏன் கூப்பிட்டார்? என்று
மனிதர்களுக்குத் தெரியாது. நீங்கள் அனைவரும் திரௌபதிகள் என்று
பாபா புரிய வைக்கின்றார். பெண்கள், பெண்களாகவே பிறவி
எடுப்பார்கள் என்பதில்லை. இரண்டு முறை பெண்ணாகப் பிறவி
எடுக்கலாம், அதற்கு அதிகமாக எடுக்க முடியாது. தாய்மார்கள்
கூக்குரலிடுகின்றனர் - பாபா காப்பாற்றுங்கள், எங்களை துச்சாதனன்
விகாரத்திற்காக தொல்லைப் படுத்துகின்றனர் இதைத்தான்
சொல்லப்படுகின்றது. விஷம் நிறைந்த உலகம். சொர்க்கத்தை சிவாலயம்
என்று சொல்லப்படுகின்றது. விஷம் நிறைந்த உலகம் இராவணனால்
ஏற்படுத்தப் பட்டது, சிவாலயமானது சிவபாபாவால் ஸ்தாபிக்கப்பட்டது.
மேலும் உங்களுக்கு ஞானமும் கொடுக்கின்றார். பாபாவை ஞானக்கடல்
என்று கூறலாம். ஞானக்கடல் என்றால் அனைவருடைய மனதை அறிந்தவர்
என்று அர்த்தமில்லை. இதனால் என்ன பலனிருக்கிறது. பாபா
சொல்கின்றார், இந்த சிருஷ்டியினுடைய முதல்-இடை-கடையினுடைய
ஞானமானது என்னைத்தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. நான் தான்
உங்களுக்கு கற்றுத் தருகின்றேன். ஞானக்கடல் ஒரே ஒரு தந்தைத்தான்.
சத்யுகமானது பக்தியினுடைய பலமானகும். சத்யுகம், திரேதாயுகத்தில்
பக்தியிருப்ப தில்லை. படிப்பின் மூலமாகத்தான் இராஜ்யம் ஸ்தாபனை
ஆகின்றது. ஜனாதிபதி போன்றவர் களைப் பாருங்கள், எவ்வளவு
மந்திரிகள் இருக்கின்றனர். அறிவுரைகள் கூறுவதற்காகத்தான்
மந்திரிகள் இருக்கின்றனர். சத்யுகத்தில் மந்திரிகள்
இருப்பதற்கான அவசியம் இல்லை. இப்போது பாபா உங்களை அறிவாளிகளாக
மாற்றுகின்றார். இந்த இலட்சுமி-நாராயணரைப் பாருங்கள் எவ்வளவு
புத்திசாலிகள்! எல்லையற்ற இராஜ்யமானது பாபாவிடமிருந்து
கிடைக்கின்றது. சிவஜெயந்தியானது பாபாவிற்காகக்
கொண்டாடப்படுகின்றது. நிச்சயம் சிவபாபா பாரதத்தில் வந்து
உலகத்தினுடைய எஜமானராக மாற்றித்தான் சென்றிருக்கின்றார்.
இலட்சக்கணக்கான வருடத்தினுடைய விசயம் இல்லை. நேற்றைய விசயம்
ஆகும். நல்லது. இதற்கு மேல் அதிகமாக எதைப் புரிய வைப்பது? பாபா
சொல்கின்றார், மனதால் என்னை நினையுங்கள். உண்மையில் இந்தப்
படிப்பானது இஷாராவிற்காகத் (சமிக்ஞை) தான். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) பாபாவுடைய முழுமையான உதவியாளராக மாறுவதற்காக
நாகரீகம் உள்ள புத்திசாலியானவராக மாற வேண்டும். உள்ளுக்குள்
எந்தத் தொல்லையும் இருக்கக்கூடாது.
(2) ஸ்தாபனை மற்றும் வினாசத்தினுடைய செயலைப் பார்த்துக்
கொண்டே முழுமையான நிச்சயபுத்தி உடையவராகி பாபாவைப் பின்பற்ற
வேண்டும். பழைய உலகத்தினுடைய செல்வத்தின் மீது புத்தியை நீக்கி
முழுமையான பிச்சைக்காரனாக மாற வேண்டும். உறவினர்கள், பணம்,
சொத்து போன்ற அனைத்தையும் மறந்துவிட வேண்டும்.
வரதானம்:
குழுவில் இருந்தாலும், அனைவருக்கும் பிரியமானவர்களாக
இருந்தாலும் புத்திக்கு உதவியாளராக ஒரு தந்தையை ஆக்கக் கூடிய
கர்மயோகி ஆகுக.
சில குழந்தைகள் குழுவில் அன்பானவர்களாக ஆவதற்குப் பதிலாக
விடுபட்டவர்களாக ஆகிவிடு கின்றனர். மாட்டி விடக் கூடாது என்று
பயப்படுகின்றனர், இதற்குப் பதிலாக தூர விலகி விடுவது நல்லது
என்று நினைக்கின்றனர். ஆனால் கிடையாது, 21 பிறவிகள்
குடும்பத்துடன் இருக்க வேண்டும். ஒருவேளை பயத்தினால் தூர
விலக்கினீர்கள் எனில் இதுவும் கர்ம சந்நியாசத்தின்
சன்ஸ்காரமாகும். கர்மயோகி ஆக வேண்டுமே தவிர கர்ம சந்நியாசி
அல்ல. குழுவுடன் சேர்ந்திருங்கள், அனைவருக்கும்
பிரியமானவர்களாக ஆகுங்கள். ஆனால் புத்தியின் உதவியாளராக ஒரு
தந்தை இருக்க வேண்டும், வேறு யாரும் அல்ல. புத்தியில் எந்த ஒரு
ஆத்மாவின் துணை, குணம் அல்லது எந்த விசேˆதா ஈர்க்கக் கூடாது.
அப்போது தான் கர்மயோகி பவித்திர ஆத்மா என்று கூற முடியும்.
சுலோகன்:
பாப்தாதாவிற்கு வலது கரமாக ஆகுங்கள், இடது கரமாக அல்ல.
|
|
|