20-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையான குழந்தைகளே! யோக பலத்தினால் இந்த உப்புக் கால்வாயை கடந்து வீட்டிற்கு செல்ல வேண்டும். அதனால் எங்கே செல்ல வேண்டுமோ அதை நினைவு செய்யுங்கள். இதே மகிழ்ச்சியில் இருங்கள் -- நாம் இப்போது ஏழையிலிருந்து பணக்காரராக ஆகிறோம்.

கேள்வி:
தெய்வீக குணங்களின் பாடத்தில் (சப்ஜெக்ட்டில்) எந்தக் குழந்தைகளுக்கு கவனம் உள்ளதோ, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:
அவர்களின் புத்தியில் உள்ளது - நாம் எப்படிப்பட்ட கர்மத்தைச் செய்கிறோமோ, நம்மைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள். ஒருபோதும் யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள். அவர்களின் வாயிலிருந்து ஒருபோதும் தவறான சொற்கள் வெளிவராது. மனம், சொல், செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டார்கள். பாபாவுக்கு சமமாக சுகம் கொடுப்பதற்கான இலட்சியம் உள்ளது என்றால் தெய்வீக குணங்களின் பாடத்தின் மீது கவனம் உள்ளது என்று அப்போது தான் சொல்லப்படும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நினைவு யாத்திரையும் கற்றுத் தந்து கொண்டிருக் கிறார். நினைவு யாத்திரை என்பதன் பொருளையும் குழந்தைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். பக்தி மார்க்கத்திலும் கூட அனைவருமே தேவதைகளை, சிவபாபாவை நினைவு செய்கிறார்கள். ஆனால் நினைவினால் மட்டுமே விகர்மங்கள் வினாசமாகும் என்பது தெரியாதிருந்தது. குழந்தைகளுக்குத் தெரியும், பாபா பதீத பாவனர் (தூய்மைப்படுத்துபவர்). அவர் தான் பாவனமாவதற்கான யுக்தி சொல்கிறார். ஆத்மா தான் பாவனமாக வேண்டும். ஆத்மா தான் பதீத்தம் ஆகின்றது. குழந்தைகள் அறிவார்கள், பாரதத்தில் தான் பாபா வந்து நினைவு யாத்திரை கற்றுத் தருகின்றார். வேறு எங்குமே கற்றுத்தர முடியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய வைத்துள்ளார், மாயா வின் காரணத்தால் அனைவருடைய புத்திக்கும் மூடமதி என்ற பூட்டுப் போடப் பட்டுள்ளது. இப்போது பாபா மூலம் உங்களுக்குத் தெரிய வந்துள்ளது, நாம் எவ்வளவு புத்திசாலி, தனவான் மற்றும் பவித்திரமாக இருந்தோம் என்று. நாம் முழு உலகத்துக்கும் எஜமானராக இருந்தோம். இப்போது மீண்டும் ஆகிக் கொண்டிருக்கிறோம். பாபா எவ்வளவு பெரிய எல்லையற்ற இராஜ்யத்தைத் தருகிறார்! லௌகீகத் தந்தை அதிக பட்சம் இலட்சமோ, கோடியோ தருவார். இங்கோ இனிமையான எல்லையற்ற தந்தை எல்லையற்ற இராஜ்யத்தைத் தர வந்துள்ளார். அதனால் நீங்கள் இங்கே படிக்க வந்திருக்கிறீர்கள். யாரிடம்? எல்லையற்ற தந்தையிடம். பாபா என்ற சொல் மம்மாவை விடவும் இனிமையானதாகும். மம்மா பாலனை அளிக்கின்றார். பிறகும் கூட தந்தை, தந்தை தான். அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது. நீங்கள் சதா சுகமானவர்களாகவும் சதா சுமங்கலியாகவும் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா நம்மை மீண்டும் என்னவாக ஆக்குகின்றார்! இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. பாடலும் உள்ளது - காலையில் செல்வந்தராக இருந்தார், இரவில் ஏழையாக இருந்தார் என்று. நீங்களும் காலையில் செல்வந்தர், பிறகு எல்லையற்ற இரவில் ஏழையாகி விடுகிறீர்கள். பாபா நாள்தோறும் நினைவுப்படுத்துகிறார் -- குழந்தைகளே! நேற்றோ நீங்கள் செல்வந்தராக இருந்தீர்கள், இன்று நீங்கள் ஏழையாகி விட்டிருக்கிறீர்கள். இப்போது மீண்டும் காலை வருகின்றது என்றால் நீங்கள் செல்வந்தராகி விடுகிறீர்கள். எவ்வளவு சுலபமான விஷயம்! குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும் - செல்வந்தர் ஆவதில். பிராமணர்களின் பகல் மற்றும் பிராமணர்களின் இரவு. இப்போது பகலில் நீங்கள் செல்வந்தராகிக் கொண்டிருக்கிறீர்கள் மேலும் நிச்சயமாக ஆகவும் செய்வீர்கள், ஆனால் நம்பர்வார் புருஷார்த்தத்தின் படி. பாபா சொல்கிறார், இது அந்த உப்புக்கடல். இதை நீங்கள் தான் கடந்து செல்கிறீர்கள் - யோக பலத்தின் மூலம். எங்கே போகவேண்டுமோ அதன் நினைவு இருக்க வேண்டும். நாம் இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும். பாபா தாமே வந்துள்ளார், நம்மை அழைத்துச் செல்வதற்காக. மிகுந்த அன்போடு புரிய வைக்கிறார் - இனிமையான குழந்தைகளே! நீங்கள் தான் பாவனமாக இருந்தீர்கள். 84 பிறவிகள் எடுத்து-எடுத்துப் பதீத்தம் (தூய்மையை இழந்து) ஆகிவிட்டிருக்கிறீர்கள். மீண்டும் பாவனமாக வேண்டும். பாவனமாவதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை. நீங்கள் அறிவீர்கள், பதீத பாவனர் வருகிறார், நீங்கள் அவர் வழிப்படி நடந்து பாவனமாகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி உள்ளது - நாம் இந்தப் பதவி அடையப்போகிறோம். பாபா சொல்கிறார், நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சுகமுள்ளவர்களாக ஆவீர்கள். பாபா சுகதாமத்தின் ஆஸ்தி தருகிறார், இராவணன் துக்கதாமத்தின் ஆஸ்தியைத் தரு கிறான். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிந்து விட்டீர்கள், இராவணன் உங்களது பழைய விரோதி. அவன் தான் உங்களை 5 விகாரங்கள் என்ற கூண்டிற்குள் போட்டு விட்டான். பாபா வந்து வெளியில் கொண்டு வருகிறார். எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறார்களோ அவ்வளவு மற்றவர்களுக்கும் அறிமுகம் கொடுக்கிறார்கள். நினைவு செய்யாதவர்கள் தேக அபிமானத்தில் இருப்பார்கள். அவர்களால் பாபாவை நினைவு செய்யவும் முடியாது, பாபாவின் அறிமுகமும் கொடுக்க முடியாது. நாம் ஆத்மா சகோதர-சகோதரர்கள், வீட்டிலிருந்து இங்கே வந்திருக்கிறோம் -- வெவ்வேறு பாகங்களை நடிப்பதற்காக. முழு பாகமும் எப்படி நடிக்கப் படுகிறது -- இதுவும் உங்கள் புத்தியில் உள்ளது. யாருக்குப் உறுதியான நிச்சயம் உள்ளதோ அவர்கள் இங்கே வந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள். நீங்கள் ஆசிரியரோடு கூடவே இருக்க வேண்டும் என்பது போன்ற படிப்பல்ல. உங்கள் வீட்டில் இருந்து கொண்டு படிக்க முடியும். ஒரு வாரம் மட்டும் நல்லபடியாகப் புரிந்து கொள்ளுங்கள், பிறகு பிராமணிகள் (கற்றுத் தரும் சகோதரிகள்) சிலரை ஒரு மாதத்தில், சிலரை 6 மாதங்களில், இன்னும் சிலரை 12 மாதங்களுக்குப் பின் அழைத்து வருகின்றனர். பாபா சொல்கிறார், நிச்சயம் ஏற்பட்டது மேலும் உடனே ஓடினார்கள் (பாபாவிடம்).

இராக்கியும் கட்டிக் கொள்ள வேண்டும் -- நாங்கள் விகாரத்தில் போக மாட்டோம். சிவபாபாவே கூறுகின்றார் - குழந்தைகளே, நீங்கள் நிர்விகாரியாக அவசியம் ஆகவேண்டும். விகாரத்தில் போவீர் களானால் சம்பாதித்த வருமானம் நஷ்டமாகி விடும், நூறு மடங்கு தண்டனை ஆகிவிடும். 63 பிறவிகளாக நீங்கள் மூழ்கி வந்திருக் கிறீர்கள். இப்போது சொல்கிறார், பவித்திரமாகுங்கள். என்னை நினைவு செய்வீர்களாயின் உங்களுடைய பாவங்கள் பஸ்பமாகி விடும். ஆத்மா சகோதர-சகோதரர். யாருடைய பெயர் வடிவத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. யாராவது சரியாகப் படிப்பதில்லை (வகுப்பிற்கு சரியாக வராதவர்கள்) என்றால் சீக்கிரமாக அழைத்து வரக்கூடாது. ஒரு நாளிலும் கூட அவர்களது புத்தியில் பதிய முடியும் என்று பாபா சொல்கிறார். என்றாலும் கூட புத்தி மூலமாகப் புரிந்து கொண்டாலும் கூட தாரணையில் கொண்டு வேண்டும். பிராமணர் களாகிய நீங்கள் அனைவரை யும் விட உயர்ந்தவர்கள். இது உங்களது மிக உயர்ந்த குலமாகும். அங்கே சத்சங்கம் முதலிய எதுவும் நடை பெறாது. சத்சங்கம் பக்தி மார்க்கத்தில் நடைபெறும். நீங்கள் அறிவீர்கள், சத்தியமான சங்கம் அக்கரை கொண்டு சேர்க்கும், சத்தியத்தின் சங்கம் கிடைப்பது சத்யுக ஸ்தாபனையின் போது தான். இது யாருடைய புத்தியிலும் வருவதில்லை, ஏனெனில் புத்திக்குப் பூட்டுப் போடப்பட்டு விட்டது. இப்போது சத்யுகத்திற்குச் செல்ல வேண்டும். சத்தியத்தின் சங்கம் கிடைப்பதே புருஷோத்தம சங்கமயுகத்தில். அந்த குருமார்களோ சங்கம யுகத்தவர்களல்ல. பாபா எப்போது வருகிறாரோ, குழந்தாய், குழந்தாய் என்று சொல்லி அழைக் கின்றார். அந்த குருமார்களை நீங்கள் பாபா என்று அழைக்க மாட்டீர்கள். புத்திக்கு முற்றிலும் காட்ரெஜ் பூட்டு போட்டுப் பூட்டப்பட்டுள்ளது. பாபா வந்து பூட்டைத் திறக்கின்றார். பாபாவைப் பாருங்கள், எவ்வளவு யுக்திகளை உருவாக்குகின்றார், மனிதர்கள் வந்து வைரம் போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டுமென்று. பத்திரிக்கைகள், புத்தகம் முதலியவற்றை அச்சிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அநேகருக்கு நன்மை ஏற்படுமானால் அநேகரின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். பிரஜைகளை உருவாக்கக் கூடிய புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். தன்னை பந்தனங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். சரீர நிர்வாகத்திற்காக வேலை அவசியம் செய்ய வேண்டும். ஈஸ்வரிய சேவை இருப்பது காலை மற்றும் மாலையில் மட்டுமே. அச்சமயம் அனைவருக்கும் நேரம் கிடைக்கின்றது. யாருடன் நீங்கள் லௌகீக் வேலை செய்கிறீர்களோ, அவர்களுக்கும் அறிமுகம் கொடுத்துக் கொண்டே இருங்கள் - உங்களுக்கு இரண்டு தந்தையர் உள்ளனர். லௌகீகத் தந்தை அனைவருக்கும் தனித்தனியாக உள்ளனர். பரலௌகீகத் தந்தை அனைவருக்கும் ஒருவரே. அவர் மிக உயர்ந்தவர் (சுப்ரீம்). பாபா சொல்கிறார், எனக்கும் கூட இந்நாடகத்தில் பங்கு உள்ளது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் எனது அறிமுகத்தை அறிந்து கொண்டு விட்டீர்கள். ஆத்மாவையும் கூட நீங்கள் அறிந்து விட்டீர்கள். ஆத்மாவைப் பற்றிச் சொல்கிறார்கள், புருவமத்தியில் ஜொலிக்கிறது விசித்திர நட்சத்திரம், அது அழியாத ஆசனமும் கூட. ஆத்மாவை ஒருபோதும் காலன் விழுங்குவதில்லை. அது அழுக்காகவும் தூய்மை யாகவும் மட்டுமே ஆகின்றது. ஆத்மாவின் ஆசனம் அழகாயிருப்பதும் புருவமத்தியில் தான். திலகத்தின் அடையாளமும் இங்கே தருகின்றார். பாபா சொல்கிறார், உங்களுக்கு நீங்களே இராஜ திலகம் அணிவித்துக் கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாக ஆகுங்கள். நான் அனைவருக்கும் இராஜ திலகம் அணிவிப்பேன் என்பதில்லை. நீங்கள் உங்களுக்கு அணிவித்துக் கொள்ளுங்கள். பாபா அறிவார், யார் அதிகம் சேவை செய்கிறார்கள் என்று. பத்திரிகையிலும் கூட படைப்புகள் மிக நன்கு வருகின்றன. அதோடுகூட யோகத்தின் முயற்சியும் செய்ய வேண்டும். அதன் மூலம் விகர்மங்கள் வினாசமாகும். நாளுக்கு நாள் நீங்கள் நல்ல இராஜயோகி ஆகி விடுவீர்கள். இப்போது சரீரம் விட்டுப் போவது போல் உணர்வீர்கள். நாம் போய் விடுகின்றோம். சூட்சும வதனம் வரை குழந்தைகள் செல்கின்றனர். மூலவதனத்தையும் நன்கு அறிந்து கொண்டுள்ளனர் - அது ஆத்மாக் களாகிய நமது வீடு. மனிதர்கள் சாந்திதாமத்திற் காகவே பக்தி செய்கின்றனர். சுகதாமத்தைப் பற்றியோ அவர்களுக்குத் தெரியவே செய்யாது. சொர்க்கத்திற்குச் செல்வதற்கான படிப்பை பாபாவைத் தவிர வேறு யாராலும் கற்றுத் தர இயலாது. இது இல்லற மார்க்கம். இல்லறத்திலுள்ள இருவருமே முக்திதாம் செல்ல வேண்டும். அவர்கள் தலைகீழான வழியைச் சொல்கிறார்கள். யாரும் செல்வதில்லை. அனைவரையுமே கடைசியில் பாபா அழைத்துச் செல்வார். இது அவரது கடமையாகும். சிலர் நன்றாகப் படித்து இராஜ்ய-பாக்கியத்தை அடைகின்றனர். மற்ற அனைவரும் எப்படிப் படிப்பார்கள்? அவர்கள் எப்படி நம்பர்வார் வருகிறார்களோ அதுபோல் நம்பர்வார் போவார்கள். இவ்விஷயங்களில் அதிகமாக நேரத்தை வீணாக்காதீர்கள்.

நீங்கள் சொல்கிறீர்கள், பாபாவை நினைவு செய்வதற்கும் கூட நேரம் கிடைப்பதில்லை என்று, பிறகு இதில் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? இதுவோ நிச்சயம் -- எல்லையற்ற தந்தை, ஆசிரியர் குருவாகவும் இருக்கிறார். பிறகு வேறு யாரையும் நினைவு செய்யத் தேவையில்லை. நீங்கள் அறிவீர்கள், கல்பத்திற்கு முன்பும் கூட ஸ்ரீமத் படி சென்று பாவனமாகியிருந்தோம் (தூய்மை). அடிக்கடி சக்கரத்தையும் சுற்றிக் கொண்டே இருங்கள். உங்களுடைய பெயர் சுவதர்சன சக்கரதாரி (நீர் இறைப்பதற்காகக் கயிற்றில் கட்டப்பட்ட கமலைச்சக்கரம் போல) ஞானக்கடலில் இருந்து உங்களை நிறைத்துக் கொள்வதில் தாமதமாகாது. காலியாவதில் தாமதமாகும். நீங்கள் இனிமை யான, தேடிக்கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள். ஏனென்றால் கல்பத்திற்குப் பின் வந்து சந்தித்திருக் கிறீர்கள். இந்தப் பக்கா (உறுதியான) நிச்சயம் இருக்க வேண்டும். நாம் 84 பிறவிகளுக்குப் பின் மீண்டும் வந்து பாபாவுடன் சந்தித்திருக்கிறோம். பாபா சொல்கிறார், யார் முதலில் பக்தி செய்திருக் கிறார்களோ அவர்கள் தாம் முதலில் ஞானத்தைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுள்ளவர்களாக ஆகியிருக்கிறார்கள். ஏனென்றால் பக்தியின் பலன் வேண்டும். ஆகவே சதா தன்னுடைய பலன் அல்லது ஆஸ்தியை நினைவு செய்து கொண்டே இருங்கள். பலன் என்ற சொல் பக்தி மார்க்கத்தினுடையது. ஆஸ்தி என்பது சரியானதாகும். எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆஸ்தி கிடைக்கிறது. வேற எந்த ஒரு உபாயமும் இல்லை. பாரதத்தின் பழைய (புராதன) யோகம் புகழ் பெற்றதாகும். அவர்கள் நினைக்கிறார்கள், நாம் பாரதத்தின் பழைய யோகம் கற்றுக் கொள்கிறோம். பாபா சொல்கிறார், அவர்கள் டிராமாவின் படி ஹடயோகி ஆகிவிடு கிறார்கள். இராஜயோகத்தை இப்போது நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள் ஏனென்றால் இப்போது சங்கமயுகம். அவர்களின் தர்மம் வேறு. அவர்கள் குரு வைத்துக் கொள்ளக் கூடாது .ஆனால் டிராமாவின் படி இதுபோல் மறுபடியும் நிச்சயமாகச் செய்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நேர்மையானவர்களாக ஆகவேண்டும். தர்மத்தில் தான் சக்தி உள்ளது. உங்களை நான் தேவி-தேவதை ஆக்குகிறேன். இந்த தர்மம் மிகுந்த சுகம் தரக்கூடியதாகும். எனது சக்தியும் என்னிடம் யோகம் வைப்பவர்களுக்கே கிடைக்கின்றது. ஆக, பாபா தானே ஸ்தாபனை செய்கிற இந்த தர்மத்தில் மிகுந்த சக்தி உள்ளது. நீங்கள் முழு உலகத்திற்கும் எஜமான் ஆகிவிடுகிறீர்கள். பாபா இந்த தர்மத்திற்கு மகிமை செய்கின்றார் -- இதில் மிகுந்த சக்தி உள்ளது. சர்வசக்திவான் பாபாவிடமிருந்து சக்தி அநேகருக்குக் கிடைக்கின்றது. உண்மையில் சக்தி அனைவருக்குமே கிடைக்கின்றது, ஆனால் நம்பர்வார். உங்களுக்கு எவ்வளவு சக்தி வேண்டுமோ பாபாவிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு தெய்வீக குணங்களின் பாடமும் கூட வேண்டும். யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது. துக்கம் கொடுக்காதீர்கள். இவர் ஒருபோதும் யாரிடமும் தவறான சொற் களைப் பேசுவதில்லை. நான் எத்தகைய கர்மம் செய்கிறேனோ அதைப்பார்த்து மற்றவர்களும் செய்வார்கள் என்பதை அறிந்திருக்கிறார். அசுர குணங்களில் இருந்து தெய்வீக குணங்களுக்கு வர வேண்டும். நாம் யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்காதவர்கள் என்று யாரும் இல்லை. ஏதாவது தவறுகள் அவசியம் நடக்கத் தான் செய்கின்றன. மனம்-சொல்-செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்காத அந்த நிலை கடைசியில் தான் வரும். இச்சமயம் நாம் முயற்சி செய்கிற நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு விஷயமும் நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் நடைபெறுகின்றது. அனைவருமே சுகத்திற் காகத் தான் புருஷார்த்தம் செய்கிறார்கள். ஆனால் பாபாவைத் தவிர வேறு யாரும் சுகம் கொடுக்க முடியாது. சோமநாதர் ஆலயத்தில் எவ்வளவு வைரம் வைடூரியங்கள் இருந்தன என்று பார்க்கப்படுகின்றது. அவை அனைத்தும் எங்கிருந்து வந்தன, எப்படி செல்வந்தர்களாக ஆனார்கள்? நாள் முழுவதும் இந்தப் படிப்பின் சிந்தனையில் இருக்க வேண்டும். இல்லறத்தில் இருந்து கொண்டு தாமரை மலருக்கு சமமாகப் பவித்திரமாக வேண்டும். நீங்கள் இந்த முயற்சி செய்திருக்கிறீர்கள், அதனால் தான் மாலை உருவாகியுள்ளது. கல்ப-கல்பமாக உருவாகிக் கொண்டே இருக்கிறது. மாலை யாருடைய ஞாபகார்த்தம் - இதையும் நீங்கள் அறிவீர்கள். அவர்களோ மாலையை உருட்டி சிந்தனை செய்து மிகுந்த போதையாகி விடுகிறார்கள். பக்தியில் என்ன நடைபெறுகிறது, மேலும் ஞானத்தில் என்ன நடைபெறுகிறது -- இதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சொல்லிப் புரிய வைக்க முடியும். முயற்சி செய்து-செய்து கடைசியில் இறுதி முடிவு கல்பத்திற்கு முன் போலவே வெளியாகி விடும். ஒவ்வொருவரும் தங்களை சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் அறிவீர்கள் நாம் இதுபோல் ஆகவேண்டும். முயற்சி செய்வதற்காக சிறிது நேரம் கிடைத்துள்ளது. வரிசைக்கிரமமாக முயற்சிப்படி பாபாவும் உங்களை வரவேற்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் வரவேற்பதையும் விட அதிகமாக பாபா உங்களை வரவேற்கிறார். பாபாவின் வேலையே - உங்களை வரவேற்பது. வரவேற்பு (ஸ்வாகத்) என்றால் சத்கதி. இது அனைத்தையும் விட உயர்ந்த வரவேற்பு. உங்கள் அனைவரையும் வரவேற்பதற்காக பாபா வருகின்றார். நல்லது

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்துக் காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்குத் தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அநேகரின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகக் கல்யாணகாரி (நன்மை செய்யக்கூடியவர்) ஆக வேண்டும். சரீர நிர்வாகத்திற்காகக் காரியங்கள் செய்து கொண்டும் பந்தனத்திலிருந்து விடுபட்டு காலை-மாலை ஈஸ்வரிய சேவை அவசியம் செய்ய வேண்டும்.

2. மற்ற விஷயங்களில் தனது நேரத்தை வீணாக்காமல் பாபாவை நினைவு செய்து சக்தி பெற வேண்டும். சத்தியமான சங்கத்திலேயே இருக்க வேண்டும். மனம்-சொல்-செயல் மூலம் அனைவருக்கும் சுகம் கொடுப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
தூய்மையின் வரதானத்தை உண்மையான சமஸ்காரம் ஆக்கி தூய்மையான வாழ்க்கையை உருவாக்கி உழைப்பிலிருந்து விடுபட்டவர் ஆகுவீர்களாக.

சில குழந்தைகளுக்குத் தூய்மையைக் கடைபிடிப்பதற்கு உழைக்க வேண்டியதாக உள்ளது, இதன் மூலம் வரங்களை வழங்கும் வள்ளல் தந்தையிடம் இருந்து பிறவியின் வரதானத்தைப் பெறவில்லை என்பது நிரூபணம் ஆகிறது. வரதானத்தில் உழைப்பு இருக்காது. ஒவ்வொரு பிராமண ஆத்மாவினுடைய பிறவியின் முதல் வரதானம் தூய்மையாக ஆகுக, யோகியாக ஆகுக என்பதாகும். எவ்வாறு ஜென்ம சமஸ்காரம் மிகவும் உறுதியாக இருக்குமோ, அதுபோல் தூய்மை என்பது பிராமண பிறவியின் ஆதி சமஸ்காரம், உண்மையான சமஸ்காரம் ஆகும். இந்த நினைவினால் தூய்மையான வாழ்க்கையை உருவாக்குங்கள். உழைப்பிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

சுலோகன்:
யாரிடம் சேவையின் சுத்தமான பாவனை உள்ளதோ, அவர்கள் தான் டிரஸ்டி ஆவார்கள்.