21.04.24    காலை முரளி            ஓம் சாந்தி  30.03.99      பாப்தாதா,   மதுபன்


தீவிர முயற்சியின் ஈடுபாட்டில் ஜுவாலா ரூபமாக்கி எல்லையற்ற வைராக்கியத்தின் அலையைப் பரப்புங்கள்

இன்று பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் மூன்று ரேகைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதில் முதல் ரேகை. - பரமாத்ம பாலனையினுடைய பாக்கியத்தின் ரேகை. பரமாத்ம பாலனையினுடைய பாக்கியம் முழு கல்பத்தில் இப்பொழுது ஒரு முறை தான் கிடைக் கிறது, இந்த பரமாத்ம பாலனையை இந்த சங்கமயுகத்தைத் தவிர ஒருபொழுதும் பெற முடியாது. இந்த பரமாத்ம பாலனையானது மிகவும் குறைவான குழந்தைகளுக்குக் கிடைக்கின்றது. இரண்டாவது ரேகை - பரமாத்ம படிப்பின் பாக்கிய ரேகை. பரமாத்ம படிப்பு சுயம் பரம ஆத்மா டீச்சராகிக் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார், பரமாத்ம படிப்பின் பாக்கியம் எப்பேற்பட்ட பாக்கியம்! மூன்றாவது ரேகை - பரமாத்ம பிராப்திகளின் ரேகை. எத்தனை பிராப்திகள் உள்ளன என்று சிந்தியுங்கள்.. பிராப்திகளின் பட்டியல் எவ்வளவு நீளமானதாக உள்ளது என்பது அனைவருக் கும் நினைவு இருக்கின்றது அல்லவா. ஒவ்வொருவருடைய நெற்றியில் இந்த மூன்று ரேகைகள் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. தங்களை அப்பேற்பட்ட பாக்கியவான் ஆத்மாக்களாகப் புரிந்திருக்கின்றீர்களா? பாலனை, படிப்பு மற்றும் பிராப்திகள். கூடவே, பாப்தாதா குழந்தை களினுடைய நம்பிக்கையின் ஆதாரத்தில் ஆன்மிக போதையையும் பார்த்துக் கொண்டு இருக் கின்றார்கள். ஒவ்வொரு பரமாத்ம குழந்தையும் எந்தளவு ஆன்மிக போதையில் திளைக்கும் ஆத்மாக்களாக இருக்கின்றார்கள் என்பதை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். முழு உலகத்தில் மற்றும் முழு கல்பத்தில் அனைவரையும் விட உயர்வானவர்களாகவும் இருக்கின்றார்கள், மகானா கவும் இருக்கின்றார்கள் மற்றும் புனிதமானவர்களாகவும் இருக்கின்றார்கள். உங்களைப் போன்ற தூய்மையான ஆத்மாக்களாக உடலாலும், மனதாலும் தேவதா ரூபத்தில் சர்வகுண சம்பன்னமாக, சம்பூரண நிர்விகாரியாக வேறு யாரும் ஆகுவதில்லை. மேலும், பிறகு உயர்வானவர்களாகவும் இருக்கின்றீர்கள், புனிதமானவர்களாகவும் இருக்கின்றீர்கள், கூடவே செல்வந்தர்களாகவும் இருக் கின்றீர்கள். பாப்தாதா ஸ்தாபனையிலும் கூட குழந்தைகளுக்கு நினைவை ஏற்படுத்தினார்கள், மேலும் பெருமையுடன் செய்தித்தாள்களிலும் ஓம் மண்டலி ரிச்சஸ்ட் இன் தி வேர்ல்டு (ஓம் மண்டலியில் இருப்பவர்கள் உலகிலேயே பணக்காரர்கள்) என்று போட வைத்தார்கள். உங்கள் அனைவருக்கும் இந்த ஸ்தாபனை காலத்திற்கான மகிமை உள்ளது. ஒரு நாளில் எந்தளவு பெரியதிலும் பெரிய மல்ட்டி - மல்ட்டி மில்லியனராக (பல கோடிகளுக்கு அதிபதியாக) இருக்கட்டும், ஆனால், உங்களைப் போன்ற செல்வந்தராக இருக்க முடியாது. இந்தளவு செல்வந்தர் ஆகுவதற்கான சாதனம் என்ன? மிகவும் சிறிய சாதனம் ஆகும். உலகத்தினர் செல்வந்தர் ஆவதற்காக எவ்வளவு உழைக்கின்றனர் மற்றும் நீங்கள் எவ்வளவு சகஜமாக செல்வந்தர் ஆகிவிடு கின்றீர்கள். சாதனத்தை அறிந்திருக்கின்றீர்கள் அல்லவா! சிறிய புள்ளி மட்டும் வைக்க வேண்டும், அவ்வளவு தான். புள்ளி வைக்கப்பட்டது, வருமானம் கிடைத்துவிட்டது. ஆத்மாவும் புள்ளி, தந்தையும் புள்ளி மேலும், நாடகம் என்ற முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதுவும் புள்ளி ஆகும். எனவே, புள்ளியான ஆத்மாவை நினைத்தீர்கள், வருமானம் அதிகமாகியது. எவ்வாறு லௌகீகத்தில் கூட பாருங்கள், புள்ளி (பூஜ்ஜியம்) மூலம் தான் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஒன்றுக்கு முன்னால் புள்ளி (பூஜ்ஜியம்) வைத்தீர்கள் என்றால் என்னவாக ஆகும்? 10, இரண்டு புள்ளி (பூஜ்ஜியம்) வைத்திடுங்கள், மூன்று புள்ளி (பூஜ்ஜியம்) வைத்திடுங்கள், நான்கு புள்ளி (பூஜ்ஜியம்) வைத்திடுங்கள், அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆகவே, உங்களுடைய சாதனம் எவ்வளவு சகஜமானதாக உள்ளது! நான் ஆத்மா - இந்த நினைவினுடைய புள்ளி வைப்பது என்றால் பொக்கிஷம் சேமிப்பு ஆகுவதாகும். பிறகு, தந்தை என்ற புள்ளி வைத்திடுங்கள் மற்றும் பொக்கிஷம் சேமிப்பு ஆகிவிடுகிறது. கர்மத்தில், சம்பந்தம் தொடர்பில் நாடகம் என்ற முற்றுப்புள்ளி வைத்திடுங்கள், கடந்தவைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றால் பொக்கிஷம் அதிகரித்து விடுகின்றது. ஆகவே, கூறுங்கள் முழு நாளில் எத்தனை முறை புள்ளி வைக்கின்றீர்கள்? மேலும், புள்ளி வைப்பது எவ்வளவு சுலபம்! கடினமானதா என்ன? புள்ளி நழுவி விடுகிறதா என்ன?

புள்ளி வைத்துக் கொண்டே செல்லுங்கள், வருமானத்திற்கான சாதனமாக இதையே பாப்தாதா கற்பித்துள்ளார்கள். ஆகவே, அனைவருக்கும் புள்ளி வைக்க வருகின்றதா? ஒருவேளை, வருகிறது என்றால் ஒரு கை தட்டுங்கள். பக்கா தானே! அல்லது சில நேரங்களில் நழுவி விடுகின்றது, சில நேரம் வைக்க வருகின்றது, இவ்வாறு உள்ளதா? அனைத்தையும் விட சகஜமானது புள்ளி வைப்பது. யாராவது இந்த கண்களில் பார்வையற்றவராக இருக்கலாம், அவர் கூட ஒருவேளை தாளின் மீது பென்சிலை வைத்தார் என்றால் அது புள்ளியாகிவிடுகின்றது மற்றும் நீங்களோ திரிநேத்ரி (மூன்று கண்களை உடையவர்கள்) ஆவீர்கள், ஆகையினால், இந்த மூன்று புள்ளிகளை சதா பயன்படுத்துங் கள். கேள்விக்குறி எவ்வளவு வளைவாக உள்ளது, எழுதிப் பாருங்கள், வளைவாக உள்ளது அல்லவா? மேலும், புள்ளி வைப்பது எவ்வளவு எளிதாக உள்ளது, ஆகையினால், பாப்தாதா வித விதமான ரூபத்தில் குழந்தைகளை சமமாக ஆக்குவதற்கான விதியைக் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள். புள்ளி வைப்பது தான் விதியாகும். வேறு எந்த விதியும் இல்லை. ஒருவேளை, விதேகி ஆகின்றீர்கள் என்றாலும் கூட விதி இருக்கின்றது - புள்ளி ஆகவேண்டும். அசரீரி ஆகின்றீர்கள், கர்மாதீத் ஆகின்றீர்கள், அனைத்திற்கும் விதி புள்ளி ஆகும். ஆகையினால், பாப்தாதா முன்பே கூறியிருக்கின்றார்கள் - அமிர்தவேளை பாப்தாதாவுடன் சந்திப்பைக் கொண்டாடு கின்றீர்கள், ஆன்மிக உரையாடல் செய்கின்றீர்கள், எப்பொழுது காரியத்தில் வருகின்றீர்களோ, அப்பொழுது முதலில் மூன்று புள்ளிகளின் திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள், அந்த சிகப்பு புள்ளிகளின் திலகம் வைப்பதை ஆரம்பிக்க வேண்டாம், ஆனால், நினைவினுடைய திலகம் வைத்திடுங்கள். மேலும், ஏதாவது காரணத்தினால் இந்த நினைவினுடைய திலகம் அழியவில்லை தானே என்பதை சோதனை செய்திடுங்கள். அழிவற்றதாக, நிலையாக திலகம் உள்ளதா?

பாப்தாதா குழந்தைகளுடைய அன்பையும் பார்க்கின்றார்கள், எவ்வளவு அன்போடு ஓடோடி வந்து சந்திப்பைக் கொண்டாட வருகின்றார்கள், மேலும், பிறகு இன்று ஹாலிலும் கூட சந்திப்பைக் கொண்டாடுவதற்காக எவ்வளவு அதிகமாக உழைத்து, எவ்வளவு அன்போடு தூக்கம், தாகத்தை மறந்து முதல் நம்பரில் அருகாமையில் அமர்வதற்காக முயற்சி செய்கின்றார்கள். பாப்தாதா அனைத்தையும் பார்க்கின்றார்கள், என்னென்ன செய்கின்றார்கள், அந்த முழு நாடகத்தைப் பார்க்கின்றார்கள். பாப்தாதா குழந்தைகளுடைய அன்பில் பலியாகிவிடுகின்றார்கள், மேலும், எவ்வாறு சாகாரத்தில் சந்திப்பதற்காக ஓடி, ஓடி வருகின்றீர்களோ, அவ்வாறே தந்தைக்கு சமமாக ஆகுவதற்காகவும் தீவிர முயற்சி செய்யுங்கள் என்பதையும் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்கள். அதில் அனைவரையும் விட முதலிலும் முதலாவதான நம்பர் கிடைக்க வேண்டும் என்றும் நினைக்கின்றீர்கள் அல்லவா. அனைவருக்கும் கிடைப்பதில்லை, இது சாகார உலகம் அல்லவா! ஆகவே, சாகார உலகத்தின் விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அனைவரும் முன்னால் அமர வேண்டும் என்று பாப்தாதா அந்த நேரம் நினைக்கின்றார்கள், ஆனால் இது முடியுமா? இது நடந்து கொண்டும் இருக்கின்றது, எவ்வாறு? பின்னால் அமர்ந்திருப்பவர்களை பாப்தாதா சதா கண்களில் நிறைந்திருப்பதாகப் பார்க்கின்றார்கள். அனைத்தையும் விட கண்கள் அருகாமையில் உள்ளன. எனவே, பின்னால் அமர்ந்திருக்கவில்லை, ஆனால், பாப்தாதாவின் கண்களில் அமர்ந்துள்ளீர்கள். கண்ணின் மணி ஆவீர்கள். பின்னால் இருப்பவர்கள் கேட்டீர்களா? தொலைவில் இல்லை, அருகாமையில் உள்ளீர்கள். சரீரத்தினால் பின்னால் அமர்ந்துள்ளீர்கள், ஆனால், ஆத்மா அனைவரையும் விட சமீபமாக உள்ளது. மேலும், பாப்தாதாவோ அனைவரையும் விட அதிகமாக பின்னால் அமர்ந்திருப்பவர்களைத் தான் பார்க்கின்றார்கள். பாருங்கள், அருகாமையில் உள்ளவர் களை இந்த ஸ்தூல கண்களால் பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது மற்றும் பின்னால் இருப்பவர் களை இந்தக் கண்களால் அருகாமையில் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை, ஆகவே, பாப்தாதா கண்களில் நிறைத்துக் கொள்கின்றார்கள்.

பாப்தாதா புன்னகைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், இரண்டு மணி ஆகிறது, மேலும், வரிசை ஆரம்பம் ஆகிவிடுகிறது. குழந்தைகள் நின்று, நின்று களைத்தும்விடுகின்றார்கள் என்பதை பாப்தாதா புரிந்திருக்கின்றார்கள். ஆனால், பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் அன்பின் மசாஜ் செய்துவிடுகின்றார்கள். கால்களுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. பாப்தாதாவின் மசாஜைப் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா - அது மிகவும் தனிப்பட்டதும், அன்பானதும் ஆகும். இன்று அனைவரும் இந்த சீசனுடைய கடைசி வாய்ப்பைப் பெறுவதற்காக நாலாபுறங்களில் இருந்தும் ஓடோடி வந்து சேர்ந்துவிட்டீர்கள். நன்றாக உள்ளது. தந்தையுடன் சந்திப்பதற்கான ஊக்கம், உற்சாகம் சதா முன்னேற்றுகின்றது. பாப்தாதாவோ குழந்தைகளை ஒரு நொடி கூட மறப்ப தில்லை. தந்தை ஒருவர் மற்றும் குழந்தைகள் அனேகர் உள்ளனர், அனேகக் குழந்தைகளையும் ஒரு நொடி கூட மறப்பதில்லை, ஏனெனில், வெகுகாலம் கழித்து காணாமல் போய் கண்டெடுக்கப் பட்டவர்கள் ஆவீர்கள். பாருங்கள், எங்கெங்கிருந்தோ உள்நாடு, வெளிநாட்டினுடைய மூலை முடுக்கிலிருந்து தந்தை தான் உங்களைத் தேடிக் கண்டெடுத்துள்ளார். நீங்கள் தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? அலைந்துகொண்டே இருந்தீர்கள், ஆனால், சந்திக்க முடியவில்லை. மேலும், தந்தை வெவ்வேறு நாடு, கிராமம், நகரம் எங்கெங்கெல்லாம் தந்தையின் குழந்தைகள் உள்ளனரோ, அங்கிருந்து தேடிக் கண்டெடுத்தார். தன்னுடையவர் ஆக்கிவிட்டார். நான் பாபா வினுடையவர் மற்றும் பாபா என்னுடையவர் என்ற பாடல் பாடுகின்றீர்கள் அல்லவா. ஜாதியைப் பார்க்கவில்லை, தேசத்தைப் பார்க்கவில்லை, நிறத்தைப் பார்க்கவில்லை, அனைவருடைய நெற்றியில் ஒரே ஒரு ஆன்மிக ஜோதி பிந்து நிறத்தைத் தான் பார்த்தார். இரட்டை அயல்நாட்டினர் என்ன புரிந்திருக்கின்றீர்கள்? தந்தை ஜாதியைப் பார்த்தாரா? கருப்பாக இருக்கின்றாரா, வெண்மை யாக இருக்கின்றாரா, கருமையாக இருக்கின்றாரா, அழகாக இருக்கின்றாரா? போன்ற எதையும் பார்க்கவில்லை. என்னுடையவர் - இதைப் பார்த்தார். எனவே, சொல்லுங்கள், தந்தைக்கு அன்பு உள்ளதா அல்லது உங்களுக்கு அன்பு உள்ளதா? யாருக்கு உள்ளது? (இருவருக்கும் உள்ளது) குழந்தைகளும் பதில் கூறுவதில் புத்திசாலிகளாக உள்ளனர். அன்பினால் அன்பு ஈர்க்கப்படுகிறது என்று நீங்கள் தான் கூறுகின்றீர்கள் பாபா. எனவே, உங்களுக்கு அன்பு உள்ளது, அதுபோல் எங்களுக்கும் உள்ளது, ஆகையினாலேயே ஈர்க்கப்படுகிறது என்று கூறுகின்றார்கள். குழந்தைகளும் புத்திசாலிகளாக உள்ளனர். மேலும், இந்தளவு தைரியம், ஊக்கம், உற்சாகம் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்து தந்தைக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

பாப்தாதாவிடம் நிறைய குழந்தைகளுடைய 15 தினங்களுக்கான சார்ட்டின் முடிவு வந்துள்ளது. பெரும்பான்மையான குழந்தைகள் கவனம் வைத்துள்ளார்கள் என்ற ஒரு விசயத்தை பாப்தாதா நாலாபுறங்களினுடைய முடிவில் (ரிசல்ட்டில்) பார்த்தார்கள். சுயம் எவ்வளவு சதவிகிதத்தை விரும்புகின்றீர்களோ, அவ்வளவு இல்லை, ஆனால், கவனம் உள்ளது மற்றும் யார் தீவிர முயற்சி யாளர் குழந்தைகளாக இருக்கின்றார்களோ, அவர்கள் மனதார தங்களுடைய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான இலட்சியத்தினால் முன்னேறிக் கொண்டும் இருக்கின்றார்கள். மேலும், முன்னேறிச் சென்று, சென்று இலக்கை சென்றடைந்தும் விடுவார்கள். சிலர் இப்பொழுதும் கூட சில நேரம் கவனக்குறைவு மற்றும் சில நேரம் அலட்சியத்திற்கு வசமாகி குறைவான கவனம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கான ஒரு விசேஷமான சுலோகன் உள்ளது - அது ஆகிவிடுவேன், சென்றுவிடுவேன்…. சென்றே ஆகவேண்டும் என்பது அல்ல, சென்றுவிடுவேன். நடந்துவிடும் - இது கவனக்குறைவு ஆகும். சென்றே ஆகவேண்டும், இது தீவிர முயற்சி ஆகும். பாப்தாதா வாக்குறுதிகளை அதிகமாகக் கேட்கின்றார்கள், அடிக்கடி மிகவும் நல்ல வாக்குறுதி களைக் கொடுக்கின்றார்கள். குழந்தைகள் வாக்குறுதிகளை நன்றாக தைரியத்துடன் செய்கின்றார் கள், அந்த சமயம் பாப்தாதாவிற்கும் குழந்தைகள் தில்குஷ் மிட்டாய் கொடுக்கின்றார்கள். தந்தையும் சாப்பிடுவிடுகின்றார். ஆனால், வாக்குறுதி அளிப்பது என்றால் முயற்சியில் அதிகத்திலும் அதிகமான இலாபம் பெறுவதாகும். ஒருவேளை, இலாபம் இல்லையென்றால் வாக்குறுதி சக்திசாலியானதாக இல்லை. எனவே, வாக்குறுதி கொடுங்கள் பரவாயில்லை, அது தில்குஷ் மிட்டாயாகக் கொடுக்கின்றீர்கள் அல்லவா! கூடவே, தீவிர முயற்சியினுடைய ஈடுபாட்டை அக்னி ரூபமாக ஆக்குங்கள். ஜுவாலாமுகி ஆகுங்கள். சமயத்தின் அனுசாரம் மனதினுடைய, சம்பந்தம் தொடர்பினுடைய கணக்கு வழக்குகள் என்னவெல்லாம் உள்ளனவோ, அவற்றை ஜுவாலா சொரூபத்தின் மூலம் எரித்து சாம்பலாக்கிவிடுங்கள். ஈடுபாடு இருக்கின்றது, இதில் பாப்தாதாவும் பாஸ் போட்டுவிடுகின்றார்கள், ஆனால், இப்பொழுது ஈடுபாட்டை அக்னி ரூபமாக ஆக்குங்கள்.

உலகத்தில் ஒரு புறம் கீழான நிலை, கொடுமையின் நெருப்பு இருக்கும், மற்றொருபுறம் குழந்தைகளாகிய உங்களுடைய சக்திசாலியான நினைவு அதாவது அன்பின் நெருப்பு ஜுவாலா ரூபத்தில் அவசியமாக உள்ளது. இந்த ஜுவாலா ரூபம் கீழான நிலை, கொடுமையின் நெருப்பை முடிவடையச் செய்யும் மற்றும் அனைத்து ஆத்மாக்களுக்கும் சகயோகம் கொடுக்கும். உங்களுடைய அன்பு ஜுவாலா ரூபமாக இருக்க வேண்டும் அதாவது சக்திசாலியான நினைவு இருக்க வேண்டும். இந்த நினைவினுடைய நெருப்பு, அந்த நெருப்பை முடித்து விடும் மற்றும் மற்றொருபுறம் ஆத்மாக்களுக்கு பரமாத்ம செய்தியின் குளிர்ந்த சொரூபத்தினுடைய அனுபவத்தை செய்விக்கும். எல்லையற்ற வைராக்கிய விருத்தியை அதிகரிக்கச் செய்யும். ஒருபுறம் எரித்து சாம்பலாக்கும் மற்றொருபுறம் குளிர்விக்கவும் செய்யும். எல்லையற்ற வைராக்கியத்தின் அலையைப் பரவச் செய்யும். எனக்கு நினைவு இருக்கின்றது, பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்று குழந்தைகள் கூறுகின்றனர். இது மிகவும் நல்லது. ஆனால், நேரத்தின் அனுசாரம் இப்பொழுது ஜுவாலா (எரிமலை) ரூபம் ஆகுங்கள். இதை நினைவுச் சின்னத்தில் சக்திகளினுடைய சக்தி ரூபத்தை, மகாசக்தி ரூபமாக, அனைத்து ஆயுதங்களையும் தரித்தவராக காண்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அந்த மகா சக்தி ரூபத்தை வெளிப்படுத்துங்கள். பாண்டவர்களாக இருந்தாலும், சக்திகளாக இருந்தாலும், அனைவரும் கடலில் இருந்து வெளிப்பட்டுள்ள ஞான நதிகள் ஆவீர்கள், கடல் அல்ல, நதி ஆவீர்கள். ஞான கங்கைகள் ஆவீர்கள். எனவே, ஞான கங்கைகளே, இப்பொழுது ஆத்மாக்களை தங்களுடைய ஞானத்தினுடைய குளிர்ச்சி யின் மூலம் பாவங்களின் நெருப்பில் இருந்து விடுதலை செய்யுங்கள். இதுவே நிகழ்கால சமயத்தில் பிராமணர்களுடைய காரியம் ஆகும்.

இந்த வருடம் என்ன சேவை செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் கேட்கின்றனர்? இப்பொழுது சமயத்தின் அனுசாரம் அனைத்து குழந்தைகளும் வானப்பிரஸ்த நிலையில் உள்ளனர். வானப்பிரஸ்திகள் தன்னுடைய சமயம், சாதனம் ஆகிய அனைத்தையும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு சுயம் வானப்பிரஸ்தத்திற்கு சென்றுவிடுவார்கள். அதுபோல் நீங்கள் அனைவரும் தன்னுடைய நேரம் என்ற பொக்கிஷம், சிரேஷ்ட சங்கல்பம் என்ற பொக்கிஷத்தை இப்பொழுது மற்றவர்களுக்காக பயன்படுத்துங்கள். தனக்காக சமயம், சங்கல்பத்தை குறைவாகப் பயன்படுத்துங் கள். மற்றவர்களுக்கு பயன்படுத்துவதனால் சுயம் தானும் அந்த சேவையின் பிரத்யட்ச பலனை அனுபவிப்பதற்கு நிமித்தம் ஆகிவிடுவீர்கள். மனதின் சேவை, வார்த்தையின் சேவை போன்ற அனைத்தையும் விட அதிகமாக - பிராமணராக இருந்தாலும் மற்றும் சம்பந்தம் தொடர்பில் வேறு யார் வந்தாலும், அவர்களுக்கு மாஸ்டர் வள்ளலாகி ஏதாவது கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். சுயநலமற்றவராகிக் குஷியைக் கொடுங்கள், சாந்தியை வழங்குங்கள், ஆனந்தத்தின் அனுபவத்தை செய்வித்திடுங்கள், அன்பின் அனுபவத்தை ஏற்படுத்துங்கள். கொடுக்க வேண்டும் மற்றும் கொடுப்பது என்றால் தானாகவே பெறுவது என்பதாகும். யார் வேண்டுமானாலும், எந்த நேரம், எந்த ரூபத்தில் சம்பந்தம் தொடர்பில் வந்தாலும் எதையாவது பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும். மாஸ்டர் வள்ளலாகிய உங்களிடம் வந்துவிட்டு வெறுங்கையுடன் செல்லக் கூடாது. எவ்வாறு பிரம்மா பாபாவைப் பார்த்துள்ளீர்கள் - போகும்போதும், வரும்போதும் ஒருவேளை யாராவது ஒரு குழந்தை முன்னால் வந்தால் ஏதாவது அனுபவத்தை அடையாமல் காலியாகச் செல்ல மாட்டார்கள். யார் வந்தாலும், சந்தித்தாலும், ஏதாவது வழங்கினேனா அல்லது காலியாகச் சென்றார்களா? என்பதை சோதனை செய்திடுங்கள். யாரெல்லாம் பொக்கிஷங்களினால் நிறைந்திருக்கின்றார்களோ, அவர்களால் கொடுக்காமல் இருக்க முடியாது. அளவிட முடியாத, இடைவிடாத வள்ளல் ஆகுங்கள். யாராவது கேட்கட்டும் என்பது வள்ளலிடம் இருக்காது. வள்ளல் ஒருபொழுதும் இவர்கள் கேட்டால் வழங்குவேன் என்று பார்க்கமாட்டார்கள். அளவிட முடியாத மகாதானி, மகா வள்ளலாக இருப்பவர்கள் சுயம் தானாகவே வழங்குவார்கள். எனவே, மகான் வள்ளலாகிக் கொடுங்கள் என்பதே இந்த வருடத்தின் முதல் சேவையாகும். நீங்கள் வள்ளல் மூலம் கிடைத்தவற்றை கொடுக்கின்றீர்கள். பிராமணர் எவரும் யாசிக்கக் கூடியவர் அல்ல, ஆனால், சகயோகி ஆவீர்கள். எனவே, பிராமணர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தானம் கொடுக்க வேண்டாம், சகயோகம் கொடுக்க வேண்டும். இது முதல் நம்பர் சேவை ஆகும். மேலும், கூடவே பாப்தாதா வெளிநாட்டு குழந்தைகளின் மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டார்கள். இந்த சிருஷ்டியில் சப்தத்தைப் பரவச் செய்வதற்கு நிமித்தமானவராக எந்த மைக்கின் பெயரை பாப்தாதா கூறினார்களோ, வெளிநாட்டு குழந்தைகள் தங்களுக்குள் இந்தக் காரியத்தை செய்துவிட்டார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். மேலும், எப்பொழுது திட்டம் என்பது போடப்பட்டிருக்கிறதோ, அப்பொழுது அது நடைமுறையில் நடந்தே தீரவேண்டும். ஆனால், பாரதத்தில் கூட 13 மண்டலங்கள் (ஜோன்கள்) உள்ளன. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து குறைந்ததிலும் குறைந்தது அப்பேற்பட்ட விசேஷமான ஒரு சேவாதாரி நிமித்தமாக உருவாக வேண்டும், அவரை மைக் என்றும் கூறலாம் அல்லது எப்படி வேண்டுமானாலும் கூறலாம், சப்தத்தை பரவச் செய்யும் ஒருவரை நிமித்தமாக ஆக்குங்கள், இதை பாப்தாதா குறைந்ததிலும் குறைந்த எண்ணிக்கையாகக் கூறியிருக்கின்றார்கள், ஆனால், ஒருவேளை பெரிய, பெரிய நாடுகளில் நிமித்தமாகக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால், மண்டலத்தைச் சேர்ந்தவர் மட்டும் அல்ல, பெரிய நாடுகளில் இருந்தும் கூட அப்பேற்பட்டவர்களை தயார் செய்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும். பாப்தாதா வெளிநாட்டு குழந்தைகளுக்கு உளமார வாழ்த்துக்கள் கொடுத்தார்கள், நடைமுறையில் அழைத்து வருவதற்கான திட்டத்தை பாப்தாதாவிற்கு முன்னால் முதலில் கொண்டு வந்ததற்காக இப்பொழுது வாயின் மூலமாகவும் வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பாரதத்தில் இன்னும் சுலபமாகும் என்பதை பாப்தாதா அறிந்திருக்கின்றார்கள். இப்பொழுது கொஞ்சம் தரமான சேவை செய்து சகயோகியை சமீபத்தில் கொண்டு வாருங்கள். நிறைய சகயோகிகள் உள்ளனர், ஆனால், குழுவில் அவர்களை மேலும் சமீபத்தில் கொண்டு வாருங்கள்.

கூடவே பிராமண ஆத்மாக்களில் இன்னும் நெருக்கத்தில் கொண்டு வருவதற்காக, ஒவ்வொரு பக்கமும் மற்றும் மதுபனில் நாலாபுறங்களிலும் ஜுவாலா சொரூபத்தினுடைய வாயு மண்டலத்தை உருவாக்குவதற்காக, எதை பட்டி என்று கூறுகின்றீர்களோ, அதைச் செய்யுங்கள், தங்களுக்குள் குழுவில் ஆலோசனை செய்து ஜுவாலா சொரூபத்தினுடைய அனுபவத்தை செய்ய வைத்திடுங்கள் மேலும் முன்னேறச் செய்திடுங்கள். எப்பொழுது இந்த சேவையில் ஈடுபடுவீர்களோ, சின்ன சின்ன விசயங்கள் உள்ளன அல்லவா - அவற்றில் நேரம் செலவாகிறது, உழைக்க வேண்டியதாக இருக்கிறது, மனமுடைந்தவர் ஆகின்றீர்கள். ஜுவாலாமுகி உயர்ந்த நிலைக்கு முன்னால் இந்த நேரத்தை செலவழிப்பது, உழைப்பது ஆகிய அனைத்தும் பொம்மை களின் விளையாட்டாக அனுபவம் ஆகும். தானாகவே, சகஜமாகவே பாதுகாப்பானவர்களாக ஆகிவிடுவீர்கள். மாஸ்டர் சர்வசக்திவான் குழந்தைகள் ஆனால், சின்னச் சின்ன விசயங்களுக்காக உழைக்கின்றார்கள் என்பதை எப்பொழுது பாப்தாதா பார்க்கின்றார்களோ, அப்பொழுது அனைவரையும் விட அதிகமாக பாப்தாதாவிற்கு கருணை ஏற்படுகிறது என்று பாப்தாதா கூறினார்கள் அல்லவா. அன்பான ஜுவாலாமுகி ரூபத்தின் குறைவு ஏற்படும்பொழுதே உழைக்க வேண்டியதாக உள்ளது. எனவே, இப்பொழுது உழைப்பிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள், சோம்பேறித்தனம் உடையவராக ஆகக்கூடாது, ஆனால், உழைப்பில் இருந்து விடுபட்டவராக ஆகவேண்டும். உழைக்க வேண்டியதில்லை என்பதால் ஓய்வாகத் தூங்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம். ஆனால், அன்பினால் உழைப்பை அழித்துவிடுங்கள், சோம்பேறித்தனத்தால் அல்ல. புரிந்ததா! என்ன செய்ய வேண்டும்?

இப்பொழுது பாப்தாதாவோ வந்து தான் ஆகவேண்டும். அடுத்து என்ன ஆகும்? பாப்தாதா வருவார்களா அல்லது வரமாட்டார்களா? என்று கேட்கின்றார்கள். பாப்தாதா இல்லை என்பதை சொல்வது இல்லை, சரி, சரி என்று சொல்கின்றார்கள். அப்பா என்று குழந்தைகள் சொல்கின்றனர், ஆஜராகிவிட்டேன் என்று தந்தை சொல்கின்றார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது புரிந்ததா? உழைப்பை அன்பினால் அழித்துவிடுங்கள். இப்பொழுது அன்பினால் உழைப்பில் இருந்து விடுபட்ட வருடமாகக் கொண்டாடுங்கள் - சோம்பேறித்தனத்தால் அல்ல. சோம்பேறித் தனம் கூடாது - இதை பக்காவாக நினைவு வைக்க வேண்டும்.

சரி தானே, அனைத்து எண்ணங்களும் பூர்த்தி அடைந்துவிட்டதா? ஏதாவது மீதி உள்ளதா? ஏதாவது மீதி உள்ளதா என்று ஜனக்கிடம் (தாதி ஜானகி அவர்களிடம்) கேட்கின்றார். தாதியோ புன்னகைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். விளையாட்டு முடிவடைந்துவிட்டதா? இந்த அறுவை சிகிச்சை கூட என்ன? விளையாட்டிலும் விளையாட்டு ஆகும். விளையாட்டு நன்றாக இருந்தது அல்லவா!

(டிரில்) ஒரு நொடியில் புள்ளி சொரூபமாகி மனம், புத்தியை ஒருமுகப்படுத்துவதற்கான பயிற்சியை அடிக்கடி செய்யுங்கள். நில் என்று சொன்னதும் நொடியில் வீணான தேக உணர்விலிருந்து விடுபட்டு, மனம், புத்தி ஒருமுகப்பட வேண்டும். அப்படிப்பட்ட கட்டுப்படுத்தும் சக்தியை முழு நாளில் பயன்படுத்திப் பாருங்கள். கட்டுப்படு என்று கட்டளை பிறப்பிக்கின்றீர்கள் ஆனால், இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கட்டுப்படுகிறது, 5 நிமிடங்களுக்குப் பிறகு கட்டுப்படுகிறது என்பது கூடாது. ஆகையினால், இடை இடையில் கட்டுப்படுத்தும் சக்தியை பயன்படுத்திப் பாருங்கள். நொடியில் நடக்கிறதா, நிமிடத்தில் நடக்கிறதா, நிமிடத்திற்கும் அதிகமாக சமயம் ஆகிறதா, இவை அனைத்தையும் சோதனை செய்து கொண்டே செல்லுங்கள். இப்பொழுது அனைவரும் மூன்று மாதங்களுக்கான சார்ட்டை மேலும் பக்காவாக (உறுதியாக) ஆக்க வேண்டும். சான்றிதழ் பெற வேண்டும். முதலில் சுயம், தனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டும் பிறகு, பாப்தாதா கொடுப்பார்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள பரமாத்ம பாலனைக்கு அதிகாரியான ஆத்மாக்களுக்கு, பரமாத்ம படிப்பிற்கு அதிகாரியான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, பரமாத்ம பிராப்திகளினால் சம்பன்னமாக இருக்கும் ஆத்மாக்களுக்கு, சதா புள்ளியினுடைய விதியினால் தீவிர முயற்சியாளர்களான ஆத்மாக்களுக்கு, சதா உழைப்பிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடிய அன்பில் மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கு, ஜுவாலா சொரூப விசேஷ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:
சுத்தமான மற்றும் சக்திசாலியான எண்ணங்களின் சக்தியினால் வீணான அதிர்வலையை முடிக்க (சமாப்தி செய்ய) கூடிய உண்மையான சேவாதாரி ஆகுவீர்களாக.

எண்ணம் கூட சிருஷ்டியை உருவாக்கிவிடுகிறது என்று கூறப்படுகிறது. எப்பொழுது பலவீனமான மற்றும் வீணான எண்ணத்தை செய்கின்றீர்களோ, அப்பொழுது வீணான வாயு மண்டலத்தின் சிருஷ்டி உருவாகிவிடுகிறது. யார் தன்னுடைய சுத்தமான, சக்திசாலியான எண்ணங்களினால் பழைய அதிர்வலைகளைக் கூட சமாப்தி செய்துவிடுவார்களோ, அவர்கள் தான் உண்மையான சேவாதாரி ஆவார்கள். எவ்வாறு விஞ்ஞானிகள் ஆயுதங்களின் மூலம் ஆயுதங் களை அழித்து விடுகின்றார்களோ, ஒரு விமானத்தின் மூலம் மற்றொரு விமானத்தை வீழ்த்து கின்றார்களோ, அவ்வாறு உங்களுடைய சுத்தமான, சக்திசாலியான எண்ணத்தின் அதிர்வலைகள், வீணான அதிர்வலைகளை முடிவடையச் செய்ய வேண்டும், இ.ப்பொழுது அப்பேற்பட்ட சேவை செய்யுங்கள்.

சுலோகன்:
தடை என்ற மெல்லிய தங்க இழைகளிலிருந்து விடுபடுங்கள், முக்தி வருடத்தைக் கொண்டாடுங்கள்.

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய யோக தினம் ஆகும். பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் குழுவாக மாலை 6.30 முதல் 7.30 மணி வரை விசேஷமாக தங்களுடைய பூஜைக்குரிய சொரூபத்தில் நிலைத்திருங்கள், தன்னை இஷ்ட தேவன், இஷ்ட தேவி எனப் புரிந்து கொண்டு, தன்னுடைய பக்தர்களின் மன விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும், பார்வையாலேயே விடுவிக்கக் கூடிய, காட்சி கொடுக்கக் கூடிய மூர்த்தி ஆகி, அனைவருக்கும் காட்சியளித்து மகிழ்விக்கக் கூடிய சேவை செய்யுங்கள்.