24-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையான குழந்தைகளே ! நீங்கள் அதிகாலையில் செல்வந்தர்களாக (பணக்காரராக) ஆகின்றீர்கள், மாலையில் ஏழையாக ஆகின்றீர்கள். ஏழையிலிருந்து செல்வந்தர்களாக, தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆவதற்கு இரண்டு வார்த்தைகளை நினைவில் வையுங்கள் - மன்மனாபவ, மத்தியாஜிபவ"

கேள்வி:
கர்மபந்தனத்திலிருந்து முக்தி அடைவதற்கான வழி (யுக்தி) என்ன?

பதில்:
1. நினைவு யாத்திரை மற்றும் ஞானத்தின் சிந்தனை, 2. ஒருவருடன் அனைத்து சம்மந்தங் களும் இருக்க வேண்டும், வேறு யாரிடத்திலும் புத்தி செல்லக் கூடாது, 3. பேட்டரியாக (சக்தி கடலாக) இருக்கும் சர்வ சக்திவானிடத்தில் யோகம் ஈடுபட்டிருக்க வேண்டும். தன் மீது முழு கவனமும் இருக்க வேண்டும், தெய்வீக குணங்கள் எனும் சிறகுகள் இருந்தது என்றால் கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டுக் கொண்டே செல்வீர்கள்.

ஓம் சாந்தி.
இது பாரதத்தின் கதை, என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். என்ன கதை? காலையில் (பணக்காரர்) செல்வந்தர், மாலையில் ஏழை. இதைப் பற்றி ஒரு கதை இருக்கிறது. காலையில் செல்வந்தனாக இருந்தார்.......... இந்த விஷயங்களை நீங்கள் செல்வந்தர்களாக இருக்கும்போது கேட்பதில்லை. ஏழை மற்றும் செல்வந்தர்களைப் பற்றிய விஷயங்களை குழந்தை களாகிய நீங்கள் சங்கமயுகத்தில் தான் கேட்கின்றீர்கள். இதை மனதில் தாரணை செய்ய வேண்டும். உண்மையில் பக்தி ஏழையாக மாற்றுகிறது, ஞானம் செல்வந்தர்களாக மாற்றுகிறது. எல்லையற்ற பகல் இரவாக இருக்கிறது. ஏழை மற்றும் செல்வந்தர் என்பதும் கூட எல்லையற்ற விஷயமாகும். மேலும் அப்படி ஆக்குபவரும் கூட எல்லையற்ற தந்தையாவார். அனைத்து தூய்மையற்ற ஆத்மாக்களையும் தூய்மை யாக்குவதற்கு ஒரு பேட்டரி தான் இருக்கிறது. இப்படி-இப்படியெல்லாம் குறிப்பாக நினைவில் வைத்தீர்கள் என்றாலும் கூட குஷி இருக்கும். பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, நீங்கள் காலையில் செல்வந்தர்களாக ஆகி விடுகிறீர்கள், பிறகு மாலையில் ஏழையாகி விடுகிறீர்கள். எப்படி ஆகின்றீர்கள் என்பதையும் பாபா புரிய வைக்கின்றார். பிறகு தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக, ஏழையிலிருந்து செல்வந்தர்களாக ஆவதற் கான யுக்தியையும் பாபா தான் கூறுகின்றார். மன்மனாபவ, மத்தியாஜிபவ - இது தான் இரண்டு யுக்திகளாகும். இது புருஷோத்தம சங்கமயுகம், என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். இங்கே யாரெல்லாம் அமர்ந்திருக்கின்றீர்களோ, நீங்கள் அனைவரும் சொர்க்கத்தில் கண்டிப்பாக வரிசைக்கிரமமான செல்வந்தர்களாக ஆவீர்கள். பள்ளியில் கூட அப்படி நடக்கிறது. வரிசைக் கிரமமாக வகுப்பு மாறுகிறார்கள். பரீட்சை முடிகிறதென்றால் பிறகு வரிசைக்கிரமமாக சென்று அமருகிறார்கள், அது எல்லைகுட்பட்ட விஷயமாகும், இது எல்லையற்ற விஷயமாகும். வரிசைக் கிரமமாக ருத்ர மாலையில் செல்கிறார்கள். மாலை அல்லது மரமாகும். விதை மரத்தினுடையது தான் ஆகும். பரமாத்மா மனித சிருஷ்டியின் விதையாக இருக்கிறார், மரம் எப்படி வளருகிறது, எப்படி பழையதாகிறது, என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். முன்னால் இதை நீங்கள் தெரிந்திருக்கவில்லை, பாபா வந்து புரிய வைத்திருக்கிறார். இப்போது இது புருஷோத்தம சங்கமயுகமாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தெய்வீக குணங்கள் எனும் சிறகுகளையும் தாரணை செய்ய வேண்டும். தங்கள் மீது முழு கவனம் வைக்க வேண்டும். நினைவு யாத்திரையின் மூலம் தான் நீங்கள் தூய்மை ஆவீர்கள்; வேறு எந்த உபாயமும் (வழி) இல்லை. சர்வ சக்திவான் பேட்டரியாக இருக்கும் பாபாவினிடத்தில் முழுமையான யோகம் ஈடுபடுத்த வேண்டும். அவருடைய பேட்டரி ஒரு போதும் தளர்ச்சி (குறைதல்) ஆவதில்லை. அவர் சதோ, ரஜோ, தமோவில் வருவதில்லை ஏனென்றால் அவருடையது எப்போதும் கர்மாதீத் நிலையாகும். குழந்தைகளாகிய நீங்கள் கர்மபந்தனத்தில் வருகின்றீர்கள். எவ்வளவு கடுமையான பந்தனமாக இருக்கிறது. கர்மபந்தனங்களிலிருந்து விடுபடுவதற்கு ஒரேயொரு உபாயம் தான் இருக்கிறது, நினைவின் யாத்திரையாகும். இதைத் தவிர வேறு எந்த உபாயமும் இல்லை. எப்படி இந்த ஞானம் இருக்கிறது அல்லவா, இது கூட மென்மை யாக்குகிறது. சொல்லப்போனால் பக்தியும் மென்மையாக்குகிறது. பாவம் இவர் பக்த மனிதர் என்று சொல்வார்கள், இவரிடத்தில் ஏமாற்றுதல் போன்ற எதுவும் இல்லை. ஆனால் பக்தர்களில் ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். பாபா (பிரம்மா) அனுபவம் வாய்ந்தவராக இருக்கின்றார். ஆத்மா சரீரத்தின் மூலம் தொழில் போன்றவற்றை செய்கிறது எனும்போது இந்த பிறவியின் அனைத்தும் நினைவில் வருகிறது. 4-5 வயதிலிருந்து தன்னுடைய வாழ்க்கை கதை நினைவிருக்க வேண்டும். சிலர் 10-20 ஆண்டுகளின் விஷயத்தை கூட மறந்து விடுகிறார்கள். பலபிறவிகளுக்கான பெயர் ரூபம் நினைவிருக்க முடியாது. ஒரு பிறவியினுடையதை எதையும் சொல்ல முடியாது. புகைப்படம் போன்றவற்றை வைக்கிறார்கள். முற்பிறவியினுடையது எதுவுமே தெரிந்திருக்க முடியாது. ஒவ்வொரு ஆத்மாவும் வெவ்வேறு பெயர், ரூபம், தேசம், அந்தந்த காலத்தில் நடிப்பை நடிக்கிறது. பெயர், ரூபம் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. எப்படி ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறது, என்பது புத்தியில் இருக்கிறது. கண்டிப்பாக 84 பிறவிகளில், 84 பெயர்கள், 84 தந்தைகள் இருந்திருப்பார்கள். கடைசியில் தமோபிரதான சம்மந்தமாகி விடுகிறது. எத்தனை சம்மந்தங்கள் இருக்கிறதோ, அத்தனை சம்மந்தங்கள் ஒரு போதும் இருப்பதில்லை. கலியுக சம்மந்தங்களை பந்தனம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள், பிறகு திருமணம் செய்கிறார்கள், குழந்தைகளைப் பெறுகிறார்கள். இந்த சமயத்தில் அதிகத்திலும் அதிக பந்தனம் - சித்தப்பா, மாமா, தாத்தா.............. என்ற உறவுகளால் தான். எவ்வளவு அதிக சம்மந்தமோ அவ்வளவு அதிக பந்தனமாகும். ஐந்து குழந்தைகள் ஒன்றாக பிறந்தன, ஐந்தும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று செய்தித் தாள்களில் வருகிறது. எவ்வளவு அதிக சம்மந்தங்கள் உருவாகி விடுகிறது என்று கணக்கிட்டுப் பாருங்கள். இந்த சமயத்தில் உங்களுடைய சம்மந்தம் அனைத்திலும் குறைவானதாகும். ஒரு தந்தையிடம் மட்டும் அனைத்து சம்மந்தங்களும் இருக் கிறது. ஒரு பாபாவைத் தவிர, வேறு யாருடனும் உங்களுடைய புத்தியோகம் இல்லை. சத்யுகத் தில் அதை விட அதிகமாகும். உங்களுடையது வைரத்திற்குச் சமமான பிறவியாகும். உயர்ந்த தந்தை குழந்தைகளை தத்தெடுக்கின்றார். வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மடியில் செல்வது, ஆஸ்தியை அடைவதற்கு, அது இப்போது தான் நடக்கிறது. உங்களுக்கு யாரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறதோ, அப்படிப்பட்ட தந்தையின் மடியில் வந்திருக்கிறீர்கள். பிராமணர்களாகிய உங்களை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அனைவருடைய யோகமும் ஒருவரோடு இருக்கிறது. உங்களுக்கு தங்களுக்குள் எந்த சம்மந்தமும் இல்லை. சகோதரன்-சகோதரி என்னும் சம்பந்தம் கூட விழ வைத்து விடுகிறது. சம்மந்தம் ஒருவருடன் இருக்க வேண்டும். இது புதிய விஷய மாகும். தூய்மையாக ஆகி திரும்பிச் செல்ல வேண்டும். இப்படியெல்லாம் விச்சார் சாகர் மந்தன் (ஞான சிந்தனை) செய்வதின் மூலம் நீங்கள் மிகவும் ஆனந்தத்தில் வருவீர்கள். சத்யுக ஆனந்தம் மற்றும் கலியுக ஆனந்தத்திற்கும் இரவு- பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. பக்திமார்க்க நேரத்தில் இராவண இராஜ்யமாகும். கடைசியில் அறிவியலின் கர்வம் எவ்வளவு இருக்கிறது. சத்யுகத்தோடு ஒப்பிடுகிறார்கள்.

ஒரு குழந்தை எழுதியிருந்தார், நீங்கள் சொர்க்கத்தில் இருக்கின்றீர்களா? அல்லது நரகத்தில் இருக்கின்றீர்களா? என்று நாங்கள் கேள்வி கேட்டோம். 4-5 பேர்கள், நாங்கள் சொர்க்கத்தில் இருக்கின்றோம், என்று சொன்னார்கள். புத்தியில் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. சிலர், நாம் நரகத்திலிருக்கிறோம் என்று புரிந்து கொள்கிறார்கள், சொர்க்கவாசியாக ஆக விரும்புகிறீர்களா, என்று அவர்களுக்கு புரிய வைக்கப் படுகிறது. சொர்க்கத்தை யார் படைப்பது? இது மிகவும் இனிமையிலும் இனிமையான விஷயங்களாகும். நீங்கள் குறிப்பெடுக்கிறீர்கள், ஆனால் அந்த குறிப்பேட்டில் அந்த குறிப்புகள் இருந்து விடுகிறது, சமயத்திற்கு நினைவு வருவ தில்லை. தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குபவர் பரமபிதா பரமாத்மா சிவன் ஆவார். அவர் என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் நீங்கிவிடும், என்று கூறுகின்றார். நினைவில் ஏதாவது வருமானம் இருக்கும் அல்லவா? நினைவின் வழக்கம் இப்போது வந்திருக்கிறது. நினைவின் மூலம் தான் நீங்கள் எவ்வளவு உயர்ந்த தூய்மையானவர்களாக ஆகின்றீர்கள். யார் எவ்வளவு முயற்சி செய்வார்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி அடைவார்கள். பாபாவிடம் கூட கேட்கலாம். உலகத்தில் சம்மந்தம் மற்றும் சொத்திற்காக சண்டைகள் ஏற்படுகிறது. இங்கே எந்த சம்மந்தமும் இல்லை. ஒரு பாபா, வேறு யாரும் இல்லை. பாபா எல்லையற்ற எஜமானர் ஆவார். விஷயம் மிகவும் சகஜமாகும். அந்த பக்கம் சொர்க்கம் மற்றும் இந்த பக்கம் நரகமாகும். நரகவாசியாவது நல்லதா அல்லது சொர்க்கவாசியாவது நல்லதா? யார் புத்திசாலிகளாக இருப்பார்களோ, அவர்கள் சொர்க்கவாசியாவது நல்லது என்பார்கள். சிலரோ சொர்க்கவாசியானால் என்ன? நரகவாசியானல் என்ன? எங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் ஒன்றும் இல்லை, என்று சொல்லி விடுவார்கள், ஏனென்றால் பாபாவைத் தெரிந்திருக்கவில்லை. இன்னும் சிலர் பாபாவின் மடியை விட்டுவிட்டு மாயையின் மடிக்குச் சென்று விடுகிறார்கள். அதிசய மல்லவா? பாபாவும் அதிசயமானவர், ஞானமும் அதிசயமானது, அனைத்துமே அதிசயமானதாகும். அவர்களுடைய புத்தி இந்த அதிசயங்களிலேயே ஈடுபட்டு இருக்க அதிசயங்களை புரிந்து கொள்பவர்கள் கூட அதுபோல் வேண்டும் அல்லவா? இராவணனும் அதிசயம் இல்லை, அவனுடைய படைப்பும் அதிசயம் இல்லை. இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. காலிங்கர் ஏரிக்கு சென்றார், பாம்பு கடித்தது, கருப்பாகி விட்டார், என்று சாஸ்திரங்களில் எழுதி விட்டார்கள். இப்போது நீங்கள் நல்ல விதத்தில் இவையனைத்தையும் புரிய வைக்கலாம். கிருஷ்ணருடைய சித்திரத்தை யாராவது எடுத்து படித்தால் புத்துணர்ச்சி பெற்று விடுவார்கள். 84 பிறவிகளின் கதையாகும். எப்படி கிருஷ்ணருடையதோ அப்படி உங்களுடையதுமாகும். சொர்க்கத் தில் நீங்கள் வருகிறீர்கள் அல்லவா. பிறகு திரேதாவிலும் கூட வந்து கொண்டே இருக்கின்றீர்கள். வளர்ந்து கொண்டே இருக்கிறது. திரேதாவில் யார் இராஜாவாக இருக்கிறார்களோ, அவர்கள் திரேதாவில் தான் வருவார், என்பது கிடையாது. படித்தவர்களுக்கு முன்னால் படிக்காதவர்கள் தலை வணங்க வேண்டி வரும். இந்த நாடகத்தின் இரகசியத்தை பாபா தான் தெரிந்து கொள்ள முடியும். உங்களுடைய நண்பர்கள்- உறவினர்கள் அனைவரும் நரகவாசிகள், என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாம் புருஷோத்தம சங்கமயுக வாசிகளாவோம். இப்போது புருஷோத் தமர்களாக ஆகிக்கொண்டிருக்கிறோம். வெளியில் இருப்பதற்கும் இங்கே 7 நாட்கள் வந்து இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அன்னங்களின் கூட்டத்திலிருந்து விடுபட்டு கொக்குகளின் கூட்டத்தில் செல்கிறார்கள். கெடுப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். நிறைய குழந்தைகள் முரளியைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாபா புரிய வைக்கின்றார் - அலட்சியம் செய்யாதீர்கள். நீங்கள் மணமுள்ள மலர்களாக ஆக வேண்டும். ஒரு விஷயம் மட்டும் உங்களுக்கு போதும் - நினைவு யாத்திரை. இங்கே உங்களுக்கு பிராமணர்களின் சேர்க்கை மட்டுமே ஆகும். எங்கே உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள், எங்கே கீழானவர்கள். பாபா கொக்குகளின் கூட்டத்தில் நாங்கள் ஒரு அன்னப் பறவை என்ன செய்ய முடியும்? என்று குழந்தைகள் எழுதுகிறார்கள். கொக்குகள் முள்ளாக குத்துகிறார்கள். எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது. பாபாவின் ஸ்ரீமத் படி நடப்பதின் மூலம் பதவி உயர்ந்ததாக கிடைக்கும். எப்போதும் அன்னப் பறவையாக இருங்கள். கொக்கோடு சேர்ந்து கொக்காக ஆகி விடாதீர்கள். ஆச்சரியமாக கேட்பார்கள், சொல்வார்கள், ஓடிவிடுவார்கள்.......... என்று பாடப்பட்டுள்ளது. கொஞ்சம் ஞானம் இருந்தாலும் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள். ஆனால் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் வந்து விடுகிறது. கடுமையான தண்டனை அனுபவிப்பார்கள். பாபா கூறுகின்றார், என்னுடைய வழிப்படி நடக்காமல், தூய்மையற்றவர்களாக ஆனீர்கள் என்றால் 100 மடங்கு தண்டனை ஏற்படும். பிறகு பதவியும் குறைந்து விடுகிறது. இராஜ்யமானது ஸ்தாபனை ஆகிக் கொண்டி ருக்கிறது. இந்த விஷயங்கள் மறந்து விடுகிறது. நினைவு இருந்தால் உயர்ந்த பதவி அடைவதற்கான முயற்சி கண்டிப்பாக செய்வார்கள். செய்யவில்லை என்றால் ஒரு காதில் கேட்டு மற்றொன்றின் மூலம் விட்டு விடுகிறார்கள், என்று புரிந்து கொள்ளப்படுகிறது. பாபாவிடம் யோகம் இல்லை. இங்கே இருந்து கொண்டு கூட புத்தியின் தொடர்பு குழந்தை குட்டிகளின் பக்கம் இருக்கிறது. அனைத்தையும் மறந்து விட வேண்டும் என்று பாபா கூறுகின்றார் - இதைத் தான் வைராக்கியம் என்று சொல்லப்படுகிறது. இதில் கூட சதவீதம் இருக்கிறது. எங்கேயாவது சிந்தனை சென்று விடுகிறது. ஒருவர்-மற்றவரோடு அன்பு ஏற்பட்டு விடுகிறது என்றாலும் புத்தி மாட்டிக் கொள்கிறது.

பாபா தினமும் புரிய வைக்கின்றார் - இந்த கண்களின் மூலம் என்னவெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவையனைத்தும் முடிந்து போகப்போகிறது. உங்களுடைய புத்தியோகம் புதிய உலகத்தில் இருக்க வேண்டும். மேலும் எல்லையற்ற உறவினர்களிடம் புத்தியின் தொடர்பை வைக்க வேண்டும். இவர் அதிசயமான பிரியதர்ஷன் ஆவார். நீங்கள் வந்தால் உங்களைத் தவிர நாங்கள் வேறு யாரையும் நினைவு செய்ய மாட்டோம், என்று பக்தியில் பாடுகிறார்கள். இப்போது நான் வந்துள்ளேன், எனவே இப்போது நீங்கள் அனைத்து பக்கங் களிலிருந்தும் புத்தியின் தொடர்பை துண்டிக்க வேண்டும் அல்லவா? இவை அனைத்தும் மண்ணோடு மண்ணாக ஆகப் போகிறது. உங்களுடைய புத்தியின் தொடர்பு மண்ணோடு இருப்பது போலாகும். என்னுடன் புத்தியின் தொடர்பு இருந்தது என்றால் எஜமானர்களாக ஆகி விடுவீர்கள். பாபா எவ்வளவு புத்திசாலிகளாக மாற்றுகின்றார். பக்தி என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? என்பதை மனிதர்கள் தெரிந்திருக்க வில்லை. இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது; ஆகையினால் தான் நீங்கள் பக்தியைக் கூட புரிந்து கொள்கிறீர்கள். பக்தியில் எவ்வளவு துக்கம் இருக்கிறது, என்ற உணர்வு இப்போது உங்களுக்கு வருகிறது. மனிதர்கள் பக்தி செய்கிறார்கள், தங்களை மிகவும் சுக மானவர்கள், என்று புரிந்து கொள்கிறார்கள். இருந்தாலும் கூட பகவான் வந்து பலனை தருவார், என்று கூறுகிறார்கள். யாருக்கு எப்படி பலன் கொடுப்பார் - அதை எதுவும் புரிந்து கொள்வதில்லை. இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள் - பாபா பக்தியின் பலனை கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். உலக இராஜ்யத்தின் பலன் எந்த தந்தையிடமிருந்து கிடைக்கிறதோ, அந்த தந்தை என்ன வழி காட்டுகிறாரோ, அதன்படி நடக்க வேண்டும். அதைத் தான் உயர்ந்ததிலும் உயர்ந்த வழி, என்று சொல்லப்படுகிறது. வழி அனைவருக்கும் கிடைக்கிறது. பிறகு சிலர் அதன்படி நடக்க முடிகிறது, சிலரால் நடக்க முடிவதில்லை. எல்லையற்ற இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். நாம் எப்படியிருந்தோம், இப்போது நம்முடைய நிலை என்ன, என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மாயை முற்றிலும் முடித்து விடுகிறது. இது பிணங்களின் உலகம் போன்றதாகும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னவெல்லாம் கேட்டீர்களோ, அவையனைத்தையும் சத்தியம்-சத்தியம், என்று சொல்லி வந்தீர்கள். ஆனால் சத்தியத்தை ஒரு பாபா தான் கூறுகின்றார், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அப்படிப் பட்ட தந்தையை நினைவு செய்ய வேண்டும். இங்கே யாராவது வெளியிலுள்ளவர்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு எதுவுமே புரிய வராது. இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை, என்பார்கள். முழு உலகமும் பரமாத்மா சர்வவியாபி என்று சொல்கிறது, இவர்கள் அவர் எங்களுடைய தந்தை என்று சொல்கிறார்கள். இல்லை-இல்லை என்று தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள். உங்களுக்குள் இருந்து ஆமாம்-ஆமாம், என்று வந்து கொண்டே இருக்கும். ஆகையினால் புதியவர்கள் யாரையும் அனுமதிக்கப் படுவதில்லை. நல்லது!

"இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்-தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்."

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) மணமுள்ள மலர்களாக ஆவதற்கு தொடர்பில் இருப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அன்னப்பறவையாகி, அன்னப்பறவைகளின் தொடர்பில் இருக்க வேண்டும். அன்னமாக ஆகி இருக்க வேண்டும். முரளியில் ஒருபோதும் கவனக்குறை வானவர்களாக ஆகக் கூடாது தவறு செய்யக்கூடாது.

(2) கர்மபந்தனத்திலிருந்து விடுபடுவதற்கு சங்கமயுகத்தில் தன்னுடைய அனைத்து சம்மந்தங்களையும் பாபாவுடன் வைக்க வேண்டும். தங்களுக்குள் எந்த சம்மந்தமும் வைக்கக் கூடாது. எந்த எல்லைக்குட்பட்ட சம்மந்தத்திலும் அன்பு வைத்து புத்தியின் தொடர்பு மாட்டக் கூடாது. ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.

வரதானம்:
பரமாத்ம அன்பில் மூழ்கி இருந்து அல்லது சந்திப்பில் ஒன்றிணைந்து இருக்கும் உண்மையான சினேகி ஆவீர்களாக!

அன்பின் அடையாளம் பாடப்படுகிறது -- இருவர் இருந்தாலும், இருவராக இல்லாமல் சேர்ந்து ஒருவராகி விட வேண்டும். இதைத் தான் நிறைந்து விடுவது எனச் சொல்கிறார்கள். பக்தர்கள் இந்த அன்பின் ஸ்திதியை நிறைந்து விடுதல் அல்லது ஐக்கியமாதல் என்று சொல்லியிருக் கிறார்கள். அனபில் மூழ்குதல் என்பது ஸ்திதி. ஆனால் ஸ்திதிக்கு பதிலாக அவர்கள் ஆத்மாவின் இருத்தல் என்ற நிலையை சதா காலத்திற்கும் முடிந்து விடுகிற ஒன்று எனப் புரிந்து கொண்டுள்ளனர். குழந்தைகள் நீங்கள் எப்போது பாபாவின் அல்லது ஆன்மிக நாயகனின் சந்திப்பில் மூழ்கி விடுகிறீர்களோ அப்போது சமமாகி விடுவீர்கள்.

சுலோகன்:
ஸ்லோகன் : வீணான எண்ணத்தின் மீது யார் மனதில் மௌனமாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் உள்முக நோக்கில் இருப்பவர்கள்.