25-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
"இனிமையான குழந்தைகளே! இந்த புருஷோத்தம
யுகம் தான் கீதையின் தொடர்கதை நடைபெறும் காலம் ஆகும். இதில்
மட்டும் தான் நீங்கள் முயற்சி செய்து உத்தம புருஷர் அதாவது
தேவதை ஆக வேண்டும்.
கேள்வி:
எந்த ஒரு விஷயத்தின் கவனம்
எப்பொழுதும் இருந்தால் படகு கரையேறி விடும்?
பதில்:
நாம் ஈஸ்வரிய சகவாசத்தில் (இறைவனின்
தொடர்பு) இருக்க வேண்டும் என்ற கவனம் எப்பொழுதும் இருந்தால்
படகு கரையேறி விடும். கெட்ட சங்கத்தில் மாட்டி விடுவர் சந்தேகம்
வந்து விட்டது என்றால் படகு விஷக் (விகாரம் என்ற) கடலில் மூழ்கி
போய் விடுவர். தந்தை என்ன புரிய வைக்கிறாரோ அதில்
குழந்தைகளுக்கு சிறிதளவும் சந்தேகம் வரக்கூடாது. தந்தை
குழந்தைகளாகிய உங்களை தனக்குச் சமமாக தூய்மையாக மற்றும் ஞானம்
நிறைந்தவராக்க வந்துள்ளார். தந்தையின் தொடர்பில் தான் இருக்க
வேண்டும்.
ஓம் சாந்தி.
இறைவனின் மகா வாக்கியம்: தந்தை 5000 வருடங்களுக்கு முன்னதாக
புரிய வைத்திருந்த அதே இராஜயோகத்தைக் கற்பித்துக்
கொண்டிருக்கிறார் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்.
குழந்தை களுக்குத் தெரியும் இறைவன் எப்பொழுது வந்தார்? என்று.
நான் இராஜயோகத்தை கற்பித்து இராஜாக்களுக் கெல்லாம் இராஜாவாக
ஆக்குகிறேன் என்று இறைவன் கூறிய அந்த கீதையின் சரித்திரம்
எப்பொழுது நிகழ்ந்திருந்தது? இதை கேட்க வேண்டும். இந்த விஷயம்
யாருக்குமே தெரியாது. நீங்கள் இப்பொழுது நேரடியாகக் கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள். கீதையின் சரித்திரம் கலியுக முடிவு
மற்றும் சத்யுக ஆரம்பத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் தான் ஏற்பட
வேண்டும். சிவபாபா ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினை ஸ்தாபனை
செய்கிறார் என்றால் அவசியம் சங்கமயுகத்தில் தான் வருவார்.
நிச்சயமாக புருஷோத்தம சங்கமயுகம் உள்ளது. புருஷோத்தம வருடம் என
மகிமை செய்கிறார்கள். ஆனால் பாவம், அவர்களுக்கு அது பற்றித்
தெரியாது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத்
தெரியும், மிக உயர்ந்த புருஷராக ஆவதற்கு மனிதனை மிக உயர்ந்த
புருஷராக ஆவதற்காக தந்தை வந்து கற்பிக்கிறார். மனிதர்கள் மிக
உயர்ந்த உத்தம புருஷர்கள் உத்தம புருஷர்கள் இந்த தேவதைகள் (லட்சுமி-நாராயணர்)
ஆவார்கள். மனிதர்களை தேவதையாக சங்கமயுகத்தில் ஆக்கினார். தேவதை
கள் அவசியம் சத்யுகத்தில் தான் இருப்பார்கள். மற்ற எல்லோரும்
கலியுகத்தில் இருக்கிறார்கள். நாம் சங்கமயுக பிராமணர்கள் ஆவோம்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதை மிக
உறுதியாக நினைவு செய்ய வேண்டும். இல்லையென்றால் தங்களது குலம்
ஒருபோதும் யாருக்கும் மறப்பதேயில்லை. ஆனால் இங்கு மாயை மறக்கச்
செய்து விடுகிறது. நாம் பிராமண குலத்தினர் ஆவோம். பின் தேவதா
குலத்தினர் ஆகிறோம். இது நினûவில் இருந்தது என்றால் அதிகமான
மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் இராஜயோகம் கற்றுக்
கொள்கின்றீர்கள். இப்பொழுது மீண்டும் இறைவன் கீதா ஞானம் கூறிக்
கொண்டிருக்கிறார் மற்றும் பாரதத்தின் பழமையான யோகமும் கற்பித்து
கொண்டிருக்கிறார் என்று புரிய வைக்கிறீர்கள். நாம்
மனிதனிலிருந்து தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம். காமம் மகா எதிரி
ஆகும். இதன் மீது வெற்றி அடைவதால் நீங்கள் உலகை வென்றவர்
ஆகிறீர்கள் என்று தந்தை கூறியுள்ளார். தூய்மை பற்றி (வேண்டாம்
என) எவ்வளவு வாதாடுகிறார்கள், மனிதர்களுக்கோ விகாரம் என்பது ஒரு
கஜானா போல் உள்ளது. லௌகீக தந்தையிடமிருந்து இந்த சொத்து
கிடைத்துள்ளது. பாலகன் ஆன உடனேயே முதன் முதலில் தந்தையின் இந்த
ஆஸ்தி கிடைக்கிறது. திருமணம் என்ற சீரழிவை செய்வித்து
விடுகிறார்கள்; ஆனால் எல்லையில்லாத தந்தை காமம் மகா எதிரி ஆகும்
என்று கூறுகிறார். எனவே அவசியம் காமத்தை வெல்வதால் தான் உலகத்தை
வென்றவர் ஆவீர்கள். தந்தை அவசியம் சங்கமத்தில் தான்
வந்திருக்கக் கூடும். மிகப்பெரிய மகாபாரத யுத்தம் கூட உள்ளது.
நாமும் அவசியம் இங்கு இருக்கிறோம். எல்லோரும் சட்டென்று உடனே
காமத்தின் மீது வெற்றி அடைந்து விடுகிறார்கள் என்பதும் அல்ல.
ஒவ்வொரு விசயத்திலும் நேரம் பிடிக்கிறது. முக்கியமான விஷயம்
குழந்தைகள், பாபா நாங்கள் விகாரக்கடலில் விழுந்து விட்டோம்
என்பதையே எழுதுகிறார்கள். எனவே அவசியம் ஏதோ சட்டம் உள்ளது.
தந்தையின் கட்டளையாவது: காமத்தை வெல்வதால் நீங்கள் உலகத்தை
வென்றவர் ஆவீர்கள் அப்படியின்றி உலகத்தை வென்றவர் பின்
விகாரத்தில் சென்று கொண்டிருப்பார்கள் என்பதல்ல. இந்த லட்சுமி
நாராயணரே உலகத்தை வென்றவர்கள் (ஜகத் ஜீத்) ஆவார்கள். இவர்கள்
தான் சம்பூர்ண நிர்விகாரி (முழுமையாக விகாரம் அற்றவர்கள்) என்று
கூறுகிறார்கள். அவர்களது உலகத்தை நீங்கள் இராம ராஜ்யம் என்று
கூறுகிறீர்கள். அது விகாரமற்ற உலகம் ஆகும். இது விகாரம்
நிறைந்த உலகம், தூய்மையற்ற குடும்ப ஆசிரமம் (அபவித்திர
கிருஹஸ்த ஆசிரமம்) ஆகும். நீங்கள் தூய்மையான குடும்பத்தில்
இருந்து கொண்டு ஆசிரமத்தில் இருப்பவர்கள் போல் வாழ்ந்தீர்கள்
என்று பாபா புரிய வைக்கின்றார். இப்பொழுது 84 பிறவிகள் எடுத்து
எடுத்து தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். இது 84
பிறவிகளினுடைய கதை ஆகும். புது உலகம் நிச்சயமாக விகாரமற்ற
உலகமாக இருக்க வேண்டும். இதை தூய்மையின் கடலான பகவானே ஸ்தாபனை
செய்கின்றார். பின் இராவண இராஜ்யமும் அவசியம் வரவேண்டும். பெயரே
இராம இராஜ்மயம் மற்றும் இராவண இராஜ்யம் ஆகும். இராவண இராஜ்யம்
என்றாலே அசுர இராஜ்யம். இப்பொழுது நீங்கள் அசுர இராஜ்யத்தில்
அமர்ந்து:ள்ளீர்கள். லட்சுமி-நாராயணர் தெய்வீக இராஜ்யத்தின்
அடையாளம் ஆவார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலை சுற்றிவருகிறீர்கள். அதிகாலை
என்று விடியல்காலைக்கு சொல்லப்படுகிறது, ஆனால் அதிகாலையில்
மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே சற்று தாமதமாக
துவங்குகிறீர்கள். கண்காட்சியுடன் அருகில் சென்டர் இருந்தால்
தான் நன்றாக இருக்கும். அங்கு வந்து அவர்கள் காமம் மகா எதிரி
என்று புரிந்து கொள்ள வேண்டும். இதன் மீது வெற்றி அடைவதால் உலகை
வென்றவர் ஆவீர்கள். லட்சுமி நாராயணரின் படமும் அவசியம் இருக்க
வேண்டும். அது டிரான்ஸ் லைட்டில் செய்திருக்க வேண்டும். இவற்றை
ஒருபொழுதும் மறக்கக்கூடாது. ஒன்று இந்தப்படம், மற்றொன்று
ஏணிப்படியின் படம். எப்படி டிரக் வண்டியில் தேவிகளினுடைய உருவச்
சிலையை எடுத்து செல்கிறார்கள், அதேபோல் நீங்கள் 2-3 டிரக்
வண்டிகளை அலங்கரித்து அதில் முக்கிய படங்களை எடுத்துச்
சென்றீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நாளுக்கு நாள் படங்களின்
எண்ணிக்கை கூட அதிகமாகிக் கொண்டேயிருக்கும். உங்களுடைய ஞானம்
விரிவு அடைந்து கொண்டே இருக்கும். குழந்தைகளினுடைய எண்ணிக்கை
யும் அதிகமாகிக் கொண்டே போகும். அதில் ஏழை, பணக்காரர்கள்
எல்லோரும் வந்து விடு கிறார்கள். சிவபாபாவின் களஞ்சியம் (பண்டாரா)
நிரம்பிக் கொண்டே போகும். யார் கஜானாவை நிரப்புகிறார்களோ
அவர்களுக்கு அங்கு அதற்குப் பதிலாக பல மடங்கு கிடைத்துவிடும்.
அதனால் தான் தந்தை கூறுகிறார் - இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே! நீங்கள் கோடானா கோடீஸ்வரர் ஆகப்போகிறீர்கள்.
அதுவும் 21 பிறவிகளுக்கு நீங்கள் 21 பரம்பரைக்கு உலகின் எஜமானர்
ஆகிவிடுவீர்கள் என்று சுயம் பாபா கூறுகிறார். நானே நேரிடையாக
வந்துள்ளேன். எப்படி குழந்தை பிறந்த உடனேயே தந்தையின் ஆஸ்தி
அவரது உள்ளங்கையிலேயே இருக்கிறது. இந்த வீடு வாசல் ஆகிய எல்லாமே
உன்னுடையது என்று தந்தை கூறுவார். எல்லையில்லாத தந்தையும்
கூறுகிறார் - நீங்கள் என்னுடையவர் ஆகும்பொழுது 21 பிறவிகளுக்கு
சொர்க்கத்தின் அரசாட்சி உங்களுக்காக உள்ளது. ஏனெனில் நீங்கள்
காலன் மீது வெற்றி அடைந்து விடுகிறீர்கள். எனவே தந்தையை
மகாகாலன் என்று கூறுகிறார்கள். மகாகாலன் என்பவர் கொல்பவர் அல்ல.
அவருக்கோ மகிமை செய்யப் படுகிறது. பகவான் எமதூதரை அனுப்பி
அழைத்துக் கொண்டார் என்று நினைக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட
விஷயம் ஒன்றும் இல்லை. இவை எல்லாமே பக்தி மார்க்கத்தின்
விஷயங்கள் ஆகும். நான் காலனுக்கெல்லாம் காலன் ஆவேன் என்று தந்தை
கூறுகிறார். மலை பிரதேசத்தினர் மாகாலனைக் கூட அதிகமாக ஏற்றுக்
கொள்கிறார்கள். மகா காலனின் கோவில் கூட உள்ளது. இது போன்ற
கொடிகைள பறக்க விடுகிறார்கள். எனவே தந்தை வந்து
குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இது சரியான விஷயம்
என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தையை நினைவு
செய்வதால் தான் பலபிறவிகளுக்காக விகர்மங்கள் சாம்பலாகி விடும்.
எனவே இதை பிரச்சாரம் செய்ய வேண்டும். கும்பமேளாக்கள் ஆகியவை
நிறைய நடக்கின்றன. அங்கே குளிப்பதையும் அதிகமாக மகிமை
செய்துள்ளார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞான
அமிர்தம் 5000 வருடங்களுக்குப் பின்னர் கிடைக்கிறது. உண்மையில்
இதற்கு அமிர்தம் என்ற பெயர் கிடையாது. இதுவோ படிப்பு ஆகும். இவை
எல்லாமே பக்தி மார்க்கத்தின் பெயர்கள். அமிர்தம் என்ற பெயர்
கேட்டு படங்களில் தண்ணீர் காண்பித் துள்ளார்கள். நான்
உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.
படிப்பினால் தான் உயர்ந்த பதவி கிடைக்கிறது. அதுவும் நான்
கற்பிக்கிறேன். இறைவனுடையது இதுபோன்ற அலங்கரிக்கப்பட்ட ரூபம்
ஒன்றும் இல்லை. இதுவோ தந்தை இவருக்குள் வந்து கற்பிக்கிறார்.
கற்றுக்கொடுத்து ஆத்மாக்களை தனக்குச் சமானமாக ஆக்குகிறார்.
சுயம் லட்சுமி நாராயணர் தனக்குச் சமமாக ஆக்குவார்களா என்ன?
ஆத்மா படிக்கிறது. ஆத்மாக்களை தனக்குச் சமமாக ஞானம்
நிறைந்தவராக ஆக்குகிறார். அப்படியின்றி பகவான் பகவதி
ஆக்குகிறார் என்பதல்ல. அவர்கள் கிருஷ்ணரை காண்பித்துள்ளார்கள்.
அவர் எப்படி கற்பிப்பார்? சத்யுகத்தில் தூய்மை யற்றவர்களாக
இருப்பார்களா என்ன? கிருஷ்ணர் இருப்பதே சத்யுகத்தில். பிறகு ஒரு
பொழுதும் கிருஷ்ணரை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். நாடகத்தில்
ஒவ்வொருவருடைய மறுபிறவியின் படம் முற்றிலும் தனிப்பட்டதாக (மாற்றம்)
இருக்கும். இயற்கையின் நாடகம் ஆகும். ஏற்கனவே அமைக்கப்பட்டது....
தந்தையும் கூறுகிறார்: நீங்கள் இதே தோற்றத்தில் இதே ஆடையில்
இதேபோல கல்ப கல்பமாக நீங்களே தான் படித்துக் கொண்டே வருவீர்கள்.
மிகச் சரியாக மறுபடியும் நடக்கிறது அல்லவா! ஆத்மா ஒரு சரீரம்
விட்டு பின் முந்தைய கல்பத்தில் எடுத்த அதே சரீரத்தை எடுக்கும்.
நாடகத்தில் சிறிதளவு கூட வித்தியாசம் ஏற்பட முடியாது. அவை
எல்லைக்குட்பட்ட விஷயங்கள் ஆகும். இது எல்லைக்கப்பாற்பட்ட
விஷயங்கள் ஆகும். இவற்றை எல்லையில்லாத தந்தையைத் தவிர வேறு
யாரும் புரிய வைக்க முடியாது. இதில் எந்த ஒரு சந்தேகமும் வர
முடியாது. நிச்சயபுத்தி உடையவராக ஆகி, பின் ஏதாவதொரு
சந்தேகத்தில் வந்து விடுகிறார்கள். கெட்ட தொடர்பு
வந்துவிடுகிறது. ஈஸ்வரிய தொடர்பில் இருந்து கொண்டே இருந்தால்
கடந்து சென்று விடலாம். தொடர்பை விட்டீர்கள் என்றால்
விகாரக்கடலில் மூழ்கிப் போய்விடுவீர்கள். ஒரு புறம் பாற்கடல்
உள்ளது மறு புறம் இருப்பது விகாரக்கடல். ஞான அமிர்தம் என்றும்
கூறுகிறார்கள். தந்தை ஞானக்கடல் ஆவார். அவருக்கு மகிமையும்
உள்ளது. அவருக்கு என்ன மகிமை உள்ளதோ அதை லட்சுமி-நாராயணருக்கு
கொடுக்க முடியாது. கிருஷ்ணர் ஒன்றும் ஞானக்கடல் அல்ல. தந்தை
தூய்மையின் கடல் ஆவார். அந்த தேவதைகள் சத்யுக திரேதாவில்
தூய்மையாக இருக்கிறார்கள் தான் என்றாலும் கூட அவர்கள் சதா
காலத்திற்காக அப்படி ஒன்றும் இருப்பதில்லை. அரைக்கல்பத்திற்குப்
பின் விழுந்து விடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் வந்து
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன். சத்கதி தாதா (வள்ளல்) நான்
ஒருவன் ஆவேன். நீங்கள் சத்கதியில் சென்ற பின் இந்த விஷயங்களே
இருக்காது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முன்னால்
அமர்ந்துள்ளீர்கள். நீங்களும் சிவபாபாவிடம் படித்து டீச்சர் ஆகி
உள்ளீர்கள். முக்கிய பிரின்சிபால் (கல்லூரி முதல்வர்) அவர்
ஆவார். நீங்கள் வருவதும் அவரிடம் தான். நாங்கள் சிவபாபா விடம்
வருகிறோம் என்று கூறுகிறீர்கள். அடே! அவரோ நிராகார் ஆவார்! ஆம்
அவர் இவரது சரீரத்தில் வருகிறார். எனவே பாப்தாதாவிடம்
செல்கிறோம் என்று கூறுகிறீர்கள். இந்த பாபா அவரது ரதம் ஆகும்.
அதன் மீது அவரது சவாரி உள்ளது. அதை ரதம், குதிரை, அஷ்வ என்றும்
கூறுகிறார்கள். இது பற்றியும் ஒரு கதை உள்ளது - தட்ச பிரஜாபிதா
வேள்வி ஏற்படுத்தினார் என்று. கதை எழுதி வைத்துள்ளார்கள். ஆனால்
அப்படி ஒன்றும் இல்லை.
சிவபகவானின் மகாவாக்கியம்: பாரதத்தில் தர்மத்திற்கு களங்கம்
என்பது அளவுக்கு மீறி ஏற்படும் சமயத்தில் நான் வருகிறேன். கீதா
வாதிகள் (கீதா படிப்பவர்கள்) யதா யதாஹி... என்று கூறுகிறார்கள்
தான். ஆனால் அவர்களுக்கு அதன் பொருள் தெரியவில்லை. இது
உங்களுடைய மிகச் சிறிய செடி அல்லவா! பின் இது அஸ்திவாரம் கூட
ஆகும். இத்தனை அநேக தர்மங்களுக் கிடையில் ஒரு ஆதிசனாதன தேவி
தேவதா தர்மத்தின் நாற்று நடுகிறார். எவ்வளவு முயற்சி செய்ய
வேண்டியுள்ளது. மற்றவர்களுக்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை.
அவர்கள் மேலிருந்து வந்துகொண்டேயிருப்பார்கள். அங்கே யாரெல்லாம்
சத்யுக, திரேதாவில் வரப்போகிற வர்களோ அந்த ஆத்மாக்கள்
படிக்கிறார்கள். யாரெல்லாம் தூய்மையற்றவர்களோ அவர்களை
தூய்மையான தேவதையாக ஆக்குவதற்காக தந்தை வந்து படிப்பிக்கிறார்.
கீதையோ இவரும் (பிரம்மா பாபா) படித்துக் கொண்டிருந்தார். எப்படி
இப்பொழுது ஆத்மாக்களுக்கு பாவங்கள் நீங்கி விடும் வகையில்
நினைவு செய்து திருஷ்டி அளிக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில்
கீதைக்கு முன்னால் தண்ணீர் வைத்து அமர்ந்து படிக்கிறார்கள்.
பித்ருக்களுக்கு (குடும்பத்தில் இறந்து போன முன்னோர்)
முன்னேற்றம் ஆகும் என்று நினைக்கிறார்கள். எனவே பித்ருக்களை
நினைவு செய்கிறார்கள். பக்தியில் கீதைக்கு அதிகமான மதிப்பு
வைத்திருந்தார். அடே, பாபா என்ன குறைந்த பக்தராக இருந்தாரா
என்ன? இராமாயணம் எல்லாமே படித்துக் கொண்டிருந்தார். அதிகமாக
மகிழ்ச்சியில் இருந்தார். அது எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
இப்பொழுது தந்தை கூறுகிறார்: நடந்து முடிந்து விட்டதை மனதில்
இருத்தி வைக்காதீர்கள். புத்தியிலிருந்து எல்லாவற்றையும் நீக்கி
விடுங்கள். பாபா ஸ்தாபனை விநாசம் மற்றும் இராஜதானி போன்றவற்றை
காட்சியாகக் காண்பித்தார். எனவே அது உறுதிப்பட்டுவிட்டது. இவை
எல்லாமே அழியப்போகின்றன என்பது தெரியாமல் இருந்தது. மீண்டும்
இவை எல்லாம் நடக்கும். தாமதம் உள்ளதா என்ன? நான் போய் இராஜா
ஆகிவிடுவேன் என்று பாபா (பிரம்மா) நினைத்தார். பாபா
என்னெவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார் என்றே தெரியாது.
பாபாவின் பிரவேசம் எப்படி ஆனது என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இந்த விஷயங்கள் மனிதர் களுக்குத் தெரியாது.
பிரம்மா-விஷ்ணு-சங்கர் என்ற பெயர் களையோ கூறுகிறார்கள். ஆனால்
இந்த மூவர்களில் பகவான் யாருக்குள் பிரவேசம் செய்கிறார் -
அர்த்தம் தெரியாமல் உள்ளார்கள். அந்த மனிதர்கள் விஷ்ணுவின்
பெயரை சொல்கிறார்கள். இப்பொழுது அவரோ தேவதை ஆவார். அவர் எப்படி
கற்பிப்பார், பாபா அவரே வந்து கூறுகிறார், நான் இவருக்குள்
பிரவேசம் செய்கிறேன். எனவே பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்று
காண்பித்துள்ளார்கள். அது பாலனை மற்றும் அது விநாசம். இது
மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பகவான்
கூறுகிறார் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். அந்த
பகவான் எப்பொழுது வந்து இராஜயோகம் கற்பித்தார் மற்றும் இராஜ்ய
பதவியை அளித்தார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
84 பிறவிகளின் ரகசியத்தைக் கூட புரிய வைத்துள்ளார். முழு உலகம்
விரும்புகிறது உலகில் சாந்தியின் இராஜ்யம் தேவை. இந்த இலட்சுமி
நாரயாணருடையதாக இருந்தது அல்லவா! லட்சுமி-நாரயாணரின் இராஜ்யம்
இருக்கும் பொழுது மற்ற எல்லோரும் சாந்தி தாமத்தில் இருந்தார்கள்.
இப்பொழுது நாம் ஸ்ரீமத்படி இந்த காரியம் செய்து
கொண்டிருக்கிறோம். அநேக முறை செய்திருந்தோம் மற்றும் செய்து
கொண்டே இருப்போம். கோடியில் ஒருவர் தான் வெளிப்படுவார்
என்பதையும் அறிந்துள்ளீர்கள். தேவி தேவதா தர்மத்தினருக்குத்தான்
மனதை தொடும். பாரதத்தின் விஷயம் தான் ஆகும். இந்த குலத்தைச்
சேர்ந்தவர்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மற்றும்
வெளிப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். எப்படி நீங்கள்
வெளிப்பட்டீர் களோ அதேபோல வேறு பிரஜைகளும் உருவாகிக் கொண்டே
செல்வார்கள். நன்றாக படிப்பவர்கள் நல்ல பதவி அடைவார்கள். ஞான
யோகமே முக்கியமானது. யோகத்திற்கும் ஞானம் வேண்டும். பின் பவர்
ஹவுஸ் (கலங்கரை விளக்கம்) உடன் யோகம் வேண்டும். யோகத்தினால்
விகர்மங்கள் விநாசம் ஆகும் மற்றும் ஆரோக்கியம் மற்றும் செல்வம்
றிறைந்தவர் ஆவீர்கள். பாஸ் வித் ஹானர் (மதிப்புடன் தேர்ச்சி)
கூட ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நடந்து முடிந்து விட்டவை பற்றி சிந்தனை
செய்யக்கூடாது. இதுவரையும் படித்ததை மறக்க வேண்டும். ஒரு தந்தை
கூறுவதை கேட்க வேண்டும் மற்றும் தங்களது பிராமண குலத்தை
எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
2. முழுமையாக நிச்சயபுத்தி உடையவராக ஆக வேண்டும். எந்த
விஷயத்திலும் சந்தேகம் வரக்கூடாது. ஈஸ்வரிய தொடர்பு மற்றும்
படிப்பை ஒருபோதும் விடக்கூடாது.
வரதானம்:
ஆன்மீக நாயகனின் ஈர்ப்பினால் ஈர்க்கப்பட்டு கடின உழைப்பில்
இருந்து விடுபடக்கூடிய ஆன்மீகமான நாயகிகள் ஆகுங்கள்.
நாயகன் தனது தொலைந்து போன நாயகிகளை பார்த்து மகிழ்ச்சி
அடைகின்றார். ஆன்மீக ஈர்ப்பினால் ஈர்க்கப்பட்டு தனது உண்மையான
நாயகனை புரிந்து கொண்டு, அவரை அடைந்து, சரியான இடத்திற்கு வந்து
விட்டீர்கள். இவ்வாறான அன்பான தோழிகள் இந்த அன்பான எல்லைக்குள்
வந்ததனால், அனேக விதமான கடின உழைப்பில் இருந்து
விடுபடுகின்றார்கள். ஏனெனில், இங்கு ஞானக்கடலின் அன்பின் அலைகள்..
சக்தியின் அலைகளானது, சதா காலத்திற்கும் புத்துணர்வு தருகின்றது.
இது மனோரஞ்சிதமான, சந்திப்பிற்கான விசேச இடமாகும். இதனை
நாயகிகளாக உங்களுக்காக நாயகன் உருவாக்கியுள்ளார்.
சுலோகன்:
ஏகாந்தவாசியாக ஆவதன் கூடவே, ஏக்னாமி (ஒருவரை சார்ந்தவராக)
மற்றும் எகனாமி (சிக்கனமானவராக) ஆகுங்கள்.