26-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே - சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்து கொண்டே எல்லையற்ற முன்னேற்றம் அடையுங்கள். எவ்வளவு நன்றாக எல்லையற்ற படிப்பை படிக்கின்றீர்களோ அவ்வளவு முன்னேற்றம் அடையலாம்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற படிப்பை படித்துக்கொண்டிருக்கிறீர்கள். இதில் எல்லாவற்றையும் விட உயர்ந்த கடினமான பாடம் எது?

பதில்:
இந்த படிப்பில், சகோதரன் - சகோதரன் என்ற பார்வையை உறுதியாக்கி கொள்வதே எல்லா வற்றையும் விட உயர்ந்த பாடம். பாபா ஞானத்தின் மூன்றாவது கண் கொடுத்துள்ளார். அந்த கண்ணினால் ஆத்மா சகோதரன் - சகோதரன் எனப் பாருங்கள். கண்கள் சிறிது கூட ஏமாற்றக்கூடாது. எந்த தேகதாரியின் பெயர் உருவத்திலும் புத்தி போகக்கூடாது. புத்தியில் சிறிது கூட விகாரங்களின் சீ சீ எண்ணங்கள் வரக்கூடாது. இது தான் கடினமான முயற்சி உழைப்பு. இந்தப் பாடத்தில் தேர்ச்சியடையக்கூடியவர்களே உலகத்திற்கு அதிபதி ஆவார்கள்.

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை எல்லையற்ற குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஒவ்வொரு விஷயமும், எல்லைக்குட்பட்டதாகவும் எல்லைக்கப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. எவ்வளவு காலம் நீங்கள் எல்லைக்குள் இருந்தீர்கள். இப்போது எல்லைக்கப்பால் இருக்கிறீர்கள். உங்களுடைய படிப்பு எல்லையற்றது. எல்லையற்ற இராஜ்யத்தை அடைவதற்கான படிப்பு. இதை விட பெரிய படிப்பு வேறு எதுவுமில்லை. யார் படிப்பு கற்றுத்தருகிறார்? எல்லையற்ற தந்தை பகவான். சரீர நிர்வாகத்திற்காக அனைத்தையும் செய்ய வேண்டும். பிறகு தனது முன்னேற்றத் திற்காகவும் கொஞ்சம் செய்ய வேண்டும். நிறைய பேர் வேலை செய்தாலும் முன்னேறுவதற்காக படித்துக்கொண்டே இருக்கிறார்கள். அங்கே எல்லைக்குட்பட்ட முன்னேற்றம் இருக்கிறது. இங்கே எல்லையற்ற தந்தையிடம் எல்லையற்ற முன்னேற்றம் இருக்கிறது. எல்லைக்குட்பட்ட மற்றும் எல்லையற்ற இரண்டிலும் முன்னேறுங்கள் என பாபா கூறுகின்றார். இப்போது நாம் எல்லை யற்ற உண்மையான வருமானத்தை அடைய வேண்டும் என புத்தியால் புரிந்து கொள்கிறீர்கள். இங்கே அனைத்தும் மண்ணோடு மண்ணாகப்போகிறது. எவ்வளவு நீங்கள் எல்லையற்ற வருமானத்தில் தீவிரம் செலுத்துகின்றீர்களோ அவ்வளவு எல்லைக்குட்பட்ட வருமானத்தின் விஷயங்கள் மறந்து போகும். இப்போது அழியப்போகிறது என அனைவரும் புரிந்து கொள்வார்கள். வினாசம் அருகாமையில் வர வர பாகவானைத் தேடுவார்கள். வினாசம் நடக்கிறது என்றால் நிச்சயம் ஸ்தாபனை செய்பவர்களும் இருப்பார்கள். உலகத்தில் இருப்பவர்கள் எதையும் அறியவில்லை. பிரஜா பிதா பிரம்மாகுமார் - பிரம்மாகுமாரிகளாகிய நீங்கள் கூட வரிசைக் கிரமத்தில் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். படிக்கக்கூடிய மாணவர்கள் விடுதியில் வசிக் கிறார்கள். ஆனால் இந்த விடுதியோ தனிப்பட்டது. இந்த (ஹாஸ்ட-ல்) விடுதியில் சிலர் அது போலவே இருக்கிறார்கள், யாரெல்லாம் ஆரம்பத்திலேயே வந்தார்களோ அவர்கள் இருக் கின்றார்கள் அப்படியே வந்து விட்டனர். பலவிதமானவர் வந்திருக்கின்றனர்; அனைவரும் நல்லவர்களாகவே வந்தனர் என்பது இல்லை. சிறிய சிறிய குழந்தைகளை அழைத்து வந்தீர்கள். நீங்கள் குழந்தைகளை பார்த்துக் கொண்டீர்கள். பிறகு அவர்களில் எத்தனை பேர் சென்று விட்டனர். தோட்டத்தில் மலர்களைப் பாருங்கள்;, பறவைகளையும் பாருங்கள் எப்படி ஊட்டுகிறது. மனித சிருஷ்டியே இந்த நேரத்தில் இவ்வாறு இருக்கிறது. நமக்குள் எந்த பண்பாடும் இல்லாமல் இருந்தது. பண்பாடு உடையவர்களின் (தேவதைகள்) மகிமையைப் பாடினர். நாங்கள் நிர்குணமானவர்கள், எங்களுக்குள் எந்த குணமும் இல்லை. எனக்கூறினர். எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்தாலும் நாம் படைக்கக்கூடிய தந்தை மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடையை அறியவில்லை என உணருகிறார்கள். பிறகு அவர்களால் என்ன பயன்? நீங்கள் கூட எதற்கும் பயனில்லாமல் இருந்தீர்கள். இப்போது நீங்கள் பாபாவின் அதிசயம் என புரிந்து கொள் கிறீர்கள். பாபா விஷ்வத்திற்கே அதிபதியாக்குகிறார். அந்த இராஜ்யப் பதவியை நம்மிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. சிறிது கூட யாரும் தடையை ஏற்படுத்த முடியாது. எப்படி இருந்த நாம் எப்படி மாறுகிறோம். ஆகையால் இப்படிப்பட்ட தந்தையின் ஸ்ரீமத்படி அவசியம் நடக்க வேண்டும். உலகத்தில் எவ்வளவு நிந்தனைகள், சண்டைகள் போன்றவை உண்டாகின்றன. இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை 5000 வருடத்திற்கு முன்பு நடந்தது தான். சாஸ்திரத்தில் கூட இருக்கிறது. பக்திமார்க்கத்தின் சாஸ்திரங்கள் என்னென்ன இருக்கிறதோ மீண்டும் அவர்கள் பக்திமார்க்கத்தில் படிப்பார்கள் என குழந்தைகளுக்கு கூறப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் ஞானத்தின் மூலம் சுகதாமத்திற்கு செல்கிறீர்கள். அதற்காக முழு முயற்சி செய்ய வேண்டும். இப்போது எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு கல்ப கல்பமாக நடக்கும். எவ்வளவு நாம் உயர்ந்த பதவி அடைவோம் என தனக்குள் சோதிக்க வேண்டும். நாம் எவ்வளவு நன்றாகப் படிக்கின்றோமோ அவ்வளவு உயர்வோம் என ஒவ்வொரு மாணவரும் புரிந்து கொள்ள முடியும். இவர் நம்மைவிட புத்திசாலி நாமும் புத்திசாலியாக வேண்டும். வியாபாரிகளில் கூட நான் இவரை விட மேலே செல்ல வேண்டும், அதாவது புத்திசாலியாக வேண்டும் என முயற்சிப்பார்கள்; அல்பகால சுகத்திற் காக உழைக்கிறார்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நான் உங்களுடைய எவ்வளவு பெரிய (உயர்வான) தந்தையாக இருக்கிறேன் என பாபா கூறுகின்றார். சாகார தந்தையும் இருக்கிறார், நிராகாரரும் இருக்கிறார். இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள் இருவரும் சேர்ந்து கூறுகிறார்கள். இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள் எல்லையற்ற படிப்பை புரிந்து கொண்டீர்கள் வேறு யாரும் புரிந்து கொள்ள வில்லை முதல் விஷயம் நம்மை படிக்க வைப்பவர் யார்? பகவான். என்ன படிக்க வைக்கிறார்? இராஜயோகம். நீங்கள் இராஜரிஷி. அவர்கள் ஹடயோகிகள்; அவர்கள் கூட ரிஷிதான் ஆனால் எல்லைக்குட்பட்டவர்கள், நாங்கள் வீடு வாசலை துறந்து விட்டோம் என கூறுகின்றார்கள். இது என்ன நல்ல செயலா? நீங்கள் கூட விகாரத்திற்காக துன்புறுத்தப்படும் போது வீடு வாசலை விடுகிறீர்கள். அவர்களுக்கு என்ன துன்பம் உண்டாயிற்று? உங்களுக்கு அடி விழுந்தது. அப்பொழுது தான் நீங்கள் ஓடினீர்கள். ஒவ்வொருவரையும் கேளுங்கள் குமாரிகள், பெண்கள் எவ்வளவு அடி வாங்கினர் அப்போது வந்து விட்டனர். ஆரம்பத்தில் எவ்வளவு பேர் வந்தனர். இங்கே ஞான அமிர்தம் கிடைத்ததால், நாங்கள் ஞான அமிர்தத்தை அருந்த ஓம் ராதையிடம் சென்று கொண்டிருக்கிறோம் என கடிதம் பெற்றுக் கொண்டு வந்தனர். இந்த விகாரத்திற்காக சண்டை சச்சரவுகள், பூசல்கள் (குழப்பம்) ஆரம்பத்திலிருந்து நடந்து கொண்டே இருக்கிறது. அசுர உலகம் அழியும் போது தான் இவை முடிவுக்கு வரும். பிறகு அரைக் கல்பத்திற்கு நடக்காது.

இப்போது குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை அனைவருக்கும் எல்லையற்ற ஆஸ்தி கொடுக்கிறார். எல்லைக்குட்பட்ட தந்தை எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கொடுக்கிறார். அதுவும் ஆண் குழந்தை களுக்குத் தான் ஆஸ்தி கிடைக்கிறது. இங்கே பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை இருவருமே ஆஸ்திக்கு உரிமையாளர்கள் என தந்தை கூறுகின்றார். அந்த லௌகீக தந்தையிடம் பாகுபாடு இருக்கிறது. ஆண் குழந்தையை மட்டுமே வாரிசாக்கு கிறார். மனைவியை அரைபாகதாரி என்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் பங்கு கொடுப்பதில்லை. பிள்ளைகள் தான் பார்த்துக்கொள் கின்றனர். தந்தைக்கு பிள்ளைகள் மீது பற்று இருக்கிறது. இந்த தந்தையோ முறைப்படி அனைத்து குழந்தைகளுக்கும் (ஆத்மாக்களுக்கும்) சொத்து கொடுக்கிறார். இங்கே ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற வேறுபாடு தெரிவதில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வளவு சுகத்தின் சொத்தை அடைகின்றீர்கள். இருப்பினும் முழுமையாகப் படிப்பதில்லை. படிப்பை விட்டுவிடுகிறார்கள். பாபா, இவர்கள், ரத்தத்தினால் எழுதிக்கொடுத்தனர், இப்போது வருவ தில்லை என குழந்தைகள் எழுதுகின்றனர். பாபா, நீங்கள் அன்பு காட்டுங்கள் அல்லது எட்டி உதையுங்கள், நாங்கள் உங்களை விடமாட்டோம் என ரத்தத்தால் எழுதுகின்றனர். ஆனால் பாலனை எடுத்திருந்தாலும் போய் விடுகின்றனர். இது அனைத்தும் நாடகம் என தந்தை புரிய வைக்கின்றார். சிலர் வியக்கும் வகையில் ஓடிவிடுவார்கள்; இங்கே அமர்ந்திருக்கும் பொழுது இப்படிப்பட்ட எல்லையற்ற தந்தையை எப்படி விடுவது என்ற நிச்சயம் இருக்கிறது. இது படிப்பும் ஆகும். அனைவரையும் கூடவே அழைத்துச் செல்வேன் என உத்திரவாதமும் கொடுக்கின்றார். சத்யுக ஆரம்பத்தில் இத்தனை மனிதர்கள் இல்லை, இப்போது சங்கமத்தில் அனைத்து மனிதர்களும் இருக்கின்றார்கள். சத்யுகத்தில் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். இத்தனை தர்மத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதற்கான முழு ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சரீரத்தை விட்டு விட்டு சாந்திதாமம் சென்று விடுகிறார்கள். கணக்கு வழக்கை முடித்து விட்டு எங்கிருந்து நடிப்பதற்காக வந்தார்களோ அங்கே சென்று விடுவார்கள். அதுவோ இரண்டு மணி நேர நாடகம். இதுவோ எலலையற்ற நாடகம். நாம் அந்த வீட்டில் வசிக்கக் கூடியவர்கள். மேலும் ஒரு தந்தையினுடைய குழந்தைகள் என நீங்கள் அறிவீர்கள். சப்தத் திலிருந்து விடுபட்டு வசிக்கக்கூடிய இடம் நிர்வாணதாமம். அங்கே சத்தம் எதுவும் இருக்காது. பிரம்மத்தில் கலந்து விடுகிறார்கள் என மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆத்மா அழிவற்றது, அதற்கு ஒரு போதும் அழிவு ஏற்பட முடியாது என பாபா கூறுகின்றார். எத்தனை ஜீவ ஆத்மாக்கள் இருக்கின்றார்கள். ஆத்மா அழியாதது, உடல் மூலமாக தன் பாகத்தை ஏற்று நடிக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் நாடகத்தில் நடிகர்கள். இருப்பதற்கான இடமே பிரம்மாண்டம் அதுதான் வீடு. ஆத்மா முட்டை வடிவம் போல காணப்படுகிறது. அங்கே பிரம்மாண்டத்தில் அதற்கு வசிக்கக் கூடிய இடம் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். புரியவில்லை என்றால், கேட்டுக் கொண்டேயிருந்தீர்கள் எனில் இன்னும் போகப்போக தாங்களாகவே புரிந்துகொள்வீர்கள். படிப்பை விட்டு சென்று விட்டீர்களானால் பிறகு ஒன்றையுமே புரிந்துக் கொள்ள முடியாது. இந்த பழைய உலகம் முடியப்போகிறது, புது உலகம் ஆரம்பிக்கப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். நேற்று உலகத்திற்கு அதிபதியாக இருந்தீர்கள். இப்போது மீண்டும் உலகிற்கு அதிபதியாவதற்காக வந்துள்ளீர் என பாபா கூறுகின்றார். பாபா யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாத அளவிற்கு நம்மை அதிபதியாக்கு கின்றார் என்ற பாடல் கூட இருக்கிறதல்லவா? ஆகாயம், பூமி போன்றவைகள் மீதும் நமக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த உலகத்தில் என்னென்ன இருக்கிறது பாருங்கள் அனைவரும் சுயநலமுடையவர்களாக இருக்கின்றனர். அங்கே இது போன்று இல்லை இந்த பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு கொடுத்துவிட்டு போகிறேன். இவைகளை நன்றாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என லௌகீக தந்தை குழந்தைகளுக்கு கூறுவது போல உங்களுக்கு பணம், செல்வம் அனைத்தையும் கொடுக்கிறேன் என எல்லையற்ற தந்தை கூறுகின்றார். நீங்கள் பாவன (தூய்மையான) உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என என்னை அழைத்தீர்கள். ஆகவே நிச்சயம் தூய்மையாக மாற்றி விஷ்வத்திற்கு அதிபதியாக்குவேன். பாபா எவ்வளவு யுக்தியோடு புரியவைக்கிறார். இதனுடைய பெயரே சகஜ ஞானம் மற்றும் யோகம் வினாடியின் விஷயம் தான். வினாடியில் முக்தி ஜீவன் முக்தி. இப்போது நீங்கள் எவ்வளவு தொலைநோக்கு புத்தியுடையவர் களாகிவிட்டீர்கள். நாம் எல்லையற்ற தந்தை மூலமாக படித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற சிந்தனை இருந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் நமக்காக இராஜ்யம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அதில் நாம் ஏன் உயர்ந்த பதவி அடையக்கூடாது. குறைவாக ஏன் அடைய வேண்டும்? இராஜ்யம் ஸ்தாபனை ஆகின்றது. அதில் கூட பதவிகள் இருக்குமல்லவா? வேலைக் காரன், வேலைக்காரி நிறைய இருப்பார்கள். அவர்கள் கூட மிகவும் சுகத்தை அடைவார்கள். உடன் மாளிகைகளில் இருப்பார்கள். குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். எவ்வளவு சுகமாக இருப்பார்கள். பெயர் தான் வேலைக் காரன், வேலைக்காரி. இராஜா, இராணி என்ன சாப்பிடுகிறார்களோ அதையே வேலைக் காரர்களும் சாப்பிடு கிறார்கள். பிரஜைகளுக்கு கிடைப்பதில்லை. வேலைக்காரர்களுக்கும் கூட மிகவும் மரியாதை இருக்கிறது அதிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகிற்கும் அதிபதி ஆகிறீர்கள். வேலைக்காரர்களோ இங்கும் இராஜாக்களிடம் இருக்கிறார்கள். இளவரசர்களின் சபா கூடும் போது தங்களுக்குள் சந்திக்கிறார்கள் என்றால் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடங்கள் போன்ற வற்றை அணிந்திருக்கிறார்கள். அதிலும் கூட வரிசைக்கிரமத்தில் பெரிய அழகான சபை இருக்கிறது. அதில் இராணிகள் அமர்வதில்லை. அவர்கள் திரைக்குப் பின்னால் இருக்கிறார்கள். இது அனைத்து விஷயங்களையும் பாபா தான் புரிய வைக்கிறார். அவரைத் தான் நீங்கள் உயிர் தானம் அளிக்கக்கூடிய பிராண தாதா என்கிறீர்கள். அடிக்கடி சரீரத்தை விடுவதிலிருந்து காப்பாற்று கிறார். அங்கே மரணத்தைப் பற்றிய கவலை இருப்பதில்லை. இங்கே எவ்வளவு கவலை இருக்கிறது. கொஞ்சம் ஏதாவது ஆகிவிட்டால் எங்கே இறந்து விடுவோமோ என்று மருத்துவரை அழைக்கிறார்கள்; அங்கே பயத்தின் விஷயம் இல்லை. நீங்கள் காலனை வெற்றி அடைகிறீர்கள் எனில் எவ்வளவு போதை இருக்க வேண்டும். படிக்க வைக்கக்கூடியவரை நினைத்தாலே நினைவு யாத்திரையாகி விடுகிறது. அப்பா, டீச்சர் சத்குருவை நினைத்தாலும் சரிதான். எவ்வளவு ஸ்ரீமத்படி நடக்கிறீர்களோ எண்ணம் - சொல் செயல் தூய்மையாகிறது. புத்தியில் விகார எண்ணங்கள் வரக்கூடாது. எப்பொழுது சகோதரன் - சகோதரன் என உணர்கின்றீர்களோ அப்போது அது நடக்கும். சகோதரன்-சகோதரி என்று உணர்வதால் கூட சீ சீ ஆகிவிடுகின்றனர். எல்லாவற்றையும் விட அதிகமாக ஏமாற்றுவது இந்த கண்கள் தான். ஆகையால் பாபா மூன்றாவது கண்கொடுத் திருக்கிறார். தன்னை ஆத்மா என்றுணர்ந்து சகோதரன் - சகோதரன் என்று பாருங்கள். இதற்குத் தான் ஞானத்தின் மூன்றாவது கண் என்று பெயர். சகோதரன் - சகோதரி தோல்வியடைவதால் மற்றொரு வழி கண்டுபிடிக்கப்படுகிறது. தன்னை சகோதரன் - சகோதரன் என உணருங்கள். மிகவும் கடின முயற்சி தான். பாடம் இருக்கிறது அல்லவா? சில மிகவும் கடினமான பாடமாக இருக்கும். இதில் கூட உயர்ந்த பாடம் நீங்கள் யாருடைய பெயர் உருவத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதாகும். மிகவும் பெரிய தேர்வாக இருக்கிறது. உலகிற்கு அதிபதியாக வேண்டும் முக்கியமான விஷயம் சகோதரன் - சகோதரன் என உணருங்கள் என பாபா கூறுகின்றார். ஆகவே குழந்தைகள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் போகப் போக சிலர் எவ்வளவு துரோகிகள் ஆகிவிடுகின்றனர். இங்கே கூட இது போன்று இருக்கிறார்கள். நல்ல நல்ல குழந்தைகளை மாயை தன்னுடையவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. அப்போது என்னை விவாகரத்து செய்துவிடுகின்றனர் என்று பாபா கூறுகின்றார். விவாகரத்து கொடுத்துவிடுகின்றனர். பிரிந்த குழந்தைகள் மற்ற தந்தையுடையவராகவும், விவாகரத்து செய்த மனைவிகள் மற்ற கணவருடையவராகிறார்கள். நமக்கு இருவரும் கிடைக்கின்றனர் என பாபா கூறுகின்றார். நல்ல நல்ல பெண் குழந்தைகள் கூட விவாகரத்து செய்து விட்டு (பாபாவிடமிருந்து விலகிப்போய்) இராவணனுடையவராகிறார்கள். அதிசயமான விளையாட்டாக இருக்கிறதல்லவா, மாயா எதைத்தான் செய்வதில்லை மாயை மிகவும் கடுமையானது என பாபா கூறுகின்றார். கஜேந்திர னையும் (யானை) முதலை விழுங்கியதாக கூறப்பட்டிருக்கிறது. மிகவும் தவறு செய்து விட்டு அமர்ந்திருக்கின்றனர். பாபாவை அவமரியாதை செய்யும் போது மாயை காயாகவே சாப்பிட்டுவிடுகிறது. மாயை சிலரை ஒரே அடியாக பிடித்துவிடுகிறது. நல்லது.

குழந்தைகளுக்கு எவ்வளவு சொல்லியிருக்கிறேன், எவ்வளவு சொல்வேன். முக்கியமான விஷயம் தந்தையைப் பற்றிதான். அதிகாலையில் எழுந்து தந்தையை நினையுங்கள் என முஸ்லிம்கள் கூட கூறுகிறார்கள். அந்த நேரம் தூங்கக்கூடியது இல்லை. இந்த வழியினால் தான் விகர்மம் வினாசம் ஆகின்றது. வேறு எந்த வழியும் இல்லை. பாபா குழந்தைகளிடம் எவ்வளவு உண்மையாக இருக்கிறார். ஒருபோதும் உங்களை விடுவ தில்லை. வந்திருப்பதே உங்களை திருத்தி உடன் அழைத்து செல்வதற்காகத்தான். நினைவு யாத்திரையினால் தான் நீங்கள் சதோபிரதானமாவீர்கள். அந்த பக்கம் சேமிப்பாகிக் கொண்டே போகும். எவ்வளவு நினைக் கிறீர்கள், எவ்வளவு சேவை செய்கிறீர்கள் என உங்களுடைய கணக்கை வையுங்கள் என பாபா கூறுகின்றார். வியாபாரிகள் நஷ்டத்தைப் பார்க்கும் போது மிகவும் கவனமாக இருக்கிறார்கள். நஷ்டம் ஏற்படக்கூடாது. கல்பகல்பத்திற்கும் நஷ்டமாகிவிடுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எண்ணம் - சொல் - செயல் தூய்மையாக வேண்டும். புத்தியில் விகார எண்ணம் வரக்கூடாது. இதற்காக ஆத்மா சகோதரன் - சகோதரன் என்ற பயிற்சி செய்ய வேண்டும். யாருடைய பெயர் உருவத்திலும் மாட்டிக் கொள்ளக்கூடாது.

2. பாபா கடமையுணர்வு கொண்டவராக இருப்பதால் குழந்தைகளை திருத்தி கூடவே அழைத்துச் செல்கிறார். இதுபோல் குழந்தைகளும் வாக்கை நிறைவேற்ற வேண்டும். ஒருபோதும் பிரிவதோ அல்லது விவாகரத்தோ (பாபாவை விட்டு விலகக்கூடாது) செய்யக்கூடாது.

வரதானம்:
சதா லேசானவர்களாகி தந்தையின் கண்களில் கலந்து விடக் கூடிய சகஜயோகி ஆகுக.

சங்கமயுகத்தில் கிடைக்கும் குஷியின் பொக்கிஷம் வேறு எந்த யுகத்திலும் அடைய முடியாது. இந்த நேரத்தில் தந்தை மற்றும் குழந்தையின் சந்திப்பு இருக்கிறது, ஆஸ்தி இருக்கிறது, வரதானம் இருக்கிறது. ஆஸ்தி மற்றும் வரதானம் இரண்டிலும் உழைப்பு இருக்காது. ஆகையால் உங்களது பட்டமே சகஜயோகி. பாப்தாதாவிற்கு குழந்தைகளின் உழைப்பை பார்க்க முடியவில்லை. குழந்தைகளே! உங்களது அனைத்து சுமைகளையும் தந்தையிடம் கொடுத்து சுயம் இலேசாகி விடுங்கள் என்று கூறுகின்றார். தந்தை தனது கண்களில் அமர்த்தி கூடவே அழைத்துச் செல்லும் அளவிற்கு இலேசாகி விடுங்கள். தந்தையிடம் அன்பு இருப்பதன் அடையாளம் - சதா இலேசாகி தந்தையின் கண்களில் கலந்து விடுவதாகும்.

சுலோகன்:
எதிர்மறையாக சிந்திக்கும் வழியை மூடி விட்டால் வெற்றி சொரூபம் ஆகி விடுவீர்கள்.