ஓம் சாந்தி.
சிவபகவான் தம்முடைய சாலிகிராம்களுக்கு (குழந்தைகளுக்கு)
சொல்கிறார். சிவபகவான் வாக்கு என்றால் நிச்சயமாக சரீரம்
இருக்கும், அப்போது தான் பேச முடியும். பேசு வதற்காக வாய்
அவசியம் வேண்டும். ஆக, கேட்பவர்களுக்கும் காது அவசியம் வேண்டும்.
ஆத்மாவுக்குக் காதும் வாயும் வேண்டும். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அது
இராமரின் வழி எனப்படுகின்றது. மற்றவர்கள் இராவணனின் வழிப்படி
நடக்கின்றனர். ஈஸ்வரிய வழி மற்றும் அசுர வழி. ஈஸ்வரிய வழி
அரைக்கல்பம் நடைபெறுகின்றது. பாபா ஈஸ்வரிய வழியைக் கொடுத்து
உங்களை தேவதையாக ஆக்குகிறார். பிறகு சத்யுக-திரேதாயுகத்தில் அதே
வழிமுறை தான் நடைபெறும். அங்கே பிறவிகளும் குறைவு, ஏனெனில்
அங்கிருப்பவர்கள் யோகிகள். மற்றப்படி துவாபர-கலியுகத்தில்
இராவணனின் வழி. இங்கே பிறவிகளும் அதிகம், ஏனென்றால் போகி
மனிதர்கள். அதனால் ஆயுளும் குறைவு. அநேக சம்பிரதாயங்கள்
ஆகிவிடுகின்றன. மேலும் அதிகமான துக்கத்தில் உள்ளனர். இராமரின்
வழி (சிவபாபா) படி நடந்தவர்கள் பிறகு இராவண வழியில் ஒன்றி
விடுகின்றனர். ஆக, முழு உலகமுமே இராவணனின் வழிப்படி நடக்கிற
ஒன்றாக ஆகிவிடுகின்றது. பிறகு பாபா வந்து அனை வருக்கும் ராம்
வழி தருகின்றார். சத்யுகத்தில் இருப்பது ராமரின் வழி, ஈஸ்வரிய
வழி. அது சொர்க்கம் எனப்படுகின்றது. ஈஸ்வரிய வழி கிடைப்பதன்
மூலம் சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகிவிடுகின்றது -
அரைக்கல்பத்திற்கு. அது எப்போது முடிவடைகின்றதோ அப்போது இராவண
இராஜ்யமாக ஆகிவிடுகின்றது. அது அசுர வழி எனப்படுகின்றது.
இப்போது தன்னைத் தான் கேட்டுக் கொள்ளுங்கள் -- நாம் அசுர
வழியினால் என்ன செய்து கொண்டிருந்தோம்? ஈஸ்வரிய வழியினால் என்ன
செய்து கொண்டிருக்கிறோம்? முன்பு நரகவாசியாக இருந்தோம். பிறகு
சொர்க்க வாசி ஆகிறோம் - சிவாலயத்தில். சத்யுக-திரேதா சிவாலயம்
எனப்படுகின்றது. எந்தப் பெயரினால் ஸ்தாபனை ஆகிறதோ அதற்குப்
பிறகு பெயரும் கூட வைப்பார்கள். ஆக, அது சிவாலயம். அங்கே
தேவதைகள் வசிக்கின்றனர். படைப்பவராகிய பாபா தான் இவ்விஷயங்களை
உங்களுக்குச் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். எதைப்
படைக்கிறார், அதுவும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். முழு சிருஷ்டியும் இச்சமயம் அவரை
அழைக்கின்றது - ஹே, பதீத பாவனா (தூய்மையாக்குபவரே) மேலும் ஹே,
லிபரேட்டர் (விடுவிக்ககூடியவர்), இராவண இராஜ்யத்திலிருந்து
அல்லது துக்கத்திலிருந்து விடுவிப்பவரே என்று. இப்போது
உங்களுக்கு சுகத்தைப் பற்றித் தெரிந்திருப்பதால் இதை துக்கம்
எனப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இல்லை யென்றால் அநேகர் இதை
துக்கம் என்றே உணர்ந்து கொள்வதில்லை. எப்படி பாபா ஞானம்
நிறைந்தவராக இருக்கிறாரோ, மனித சிருஷ்டியின் விதை வடிவமாக
இருக்கிறாரோ அதுபோல் நீங்களும் ஞானம் நிறைந்தவராக ஆகிறீர்கள்.
விதைக்குள் மரத்தின் ஞானம் உள்ளது அல்லவா? ஆனால் அது ஜடம்.
சைதன்யமாக இருந்தால் சொல்லிவிடும். நீங்கள் சைதன்ய மரத்தினுடைய
வர்கள், அதனால் மரத்தைப் பற்றியும் அறிந்திருக்கிறீர்கள். பாபா,
மனித சிருஷ்டியின் விதை வடிவம், சத்-சித்-ஆனந்த சொரூபம்
எனப்படுகிறார். இந்த மரத்தின் உற்பத்தி மற்றும் பாலனை எப்படி
நடை பெறுகின்றது என்பதைப் பற்றி யாரும் அறிய மாட்டார்கள்.
புதிய மரம் உற்பத்தியாகிறது என்பதில்லை. இதையும் பாபா சொல்லிப்
புரிய வைத்துள்ளார், பழைய மரத்தின் மனிதர்கள் அழைக்கிறார்கள்
-- வந்து இராவணனிடமிருந்து விடுவியுங்கள் என்று. ஏனென்றால்
இச்சமயம் இராவண இராஜ்யம். மனிதர்கள் படைப்பவரைப் பற்றியோ
படைப்பைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை. பாபா தானே கூறுகின்றார்:
நான் ஒரே ஒரு தடவை மட்டுமே சொர்க்கத்தைப் படைக்கிறேன்.
சொர்க்கத்திற்குப் பிறகு நரகம் உருவாகின்றது. இராவணன் வந்த
பிறகு வாமமார்க்கத்தில் (உடல் உணர்வில்) போய் விடுகிறார்கள்.
சத்யுகத்தில் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தும்
இருக்கும். நீங்கள் இங்கே வந்திருப்பது பாபாவிடமிருந்து
ஆராக்கியம்- செல்வம்- மகிழ்ச்சியினுடைய ஆஸ்தியைப் பெறுவதற்காக.
ஏனெனில் சொர்க்கத்தில் ஒருபோதும் துக்கமே இருப்பதில்லை. உங்கள்
மனதில் உள்ளது, நாம் கல்ப-கல்பமாகப் புருஷோத்தம சங்கமயுகத்தில்
(மிக உயர்ந்த) முயற்சி செய்கின்றோம். பெயரே எவ்வளவு நன்றாக
உள்ளது! வேறு எந்த ஒரு யுகத்துக்கும் மிக உத்தமானது எனச்
சொல்வதில்லை. அந்த யுகங்களிலோ ஏணிப்படியில் இறங்கியே
வருகின்றனர். பாபாவை அழைக்கவும் செய்கின்றனர், சமர்ப்பணமும்
ஆகின்றனர். ஆனால் பாபா எப்போது வருவார் என்பது தெரியாது.
அழைக்கவோ செய்கின்றனர், ஓ காட்ஃபாதர்! விடுவியுங்கள், வழிகாட்டி
ஆகுங்கள் என்று. லிபரேட்டர் ஆவார் என்றால் நிச்சயமாக
வரவேண்டியிருக்கும். பிறகு வழிகாட்டியாகி அழைத்துச் செல்ல
வேண்டியிருக்கும். பாபா குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பின்
பார்க்கிறார் என்பதால் மிகுந்த குஷியடைகிறார். அவர்
எல்லைக்குட்பட்ட தந்தை. இவர் (சிவபாபா) எல்லைக் கப்பாற்பட்ட
தந்தை) பாபா படைப்பவர். படைத்து, பிறகு பாலனையும் செய்கிறார்.
மறுபிறவி எடுத்துத் தான் ஆகவேண்டும். சிலருக்கு 10. சிலருக்கு
12 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அதெல்லாம் எல்லைக்குட்பட்ட சுகம்,
காக்கையின் எச்சத்திற்குச் சமமானது. தமோபிரதான் (கீழான நிலை)
ஆகிவிடுகின்றனர். தமோபிரதானில் சுகம் மிகவும் குறைவு. நீங்கள்
சதோபிரதானமாக (மிக உயர்ந்தவர்களாக) ஆகிறீர்கள் என்றால் மிகுந்த
சுகம் உள்ளது. சதோபிரதானம் ஆவதற்கான யுக்தியை பாபா வந்து
சொல்கிறார். பாபா சர்வ சக்திவான் எனப்படுகிறார். மனிதர்கள்
நினைக் கிறார்கள், கடவுள் சர்வ சக்திவான் என்றால் எதை
விரும்புகிறாரோ அதைச் செய்ய முடியும். இறந்தவரை உயிர் பிழைக்கச்
செய்ய முடியும். ஒரு முறை யாரோ எழுதினார்கள் -- நீங்கள் கடவுள்
என்றால் இறந்த ஈயை உயிர் தாருங்கள் செய்து காட்டுங்கள். இதுபோல்
ஏராளமான கேள்விகள் கேட்கின்றனர்.
உங்களுக்கு பாபா சக்தி கொடுக்கின்றார். அதன் மூலம் நீங்கள்
இராவணன் மீது வெற்றி கொள்கிறீர்கள். குரங்கில் இருந்து
கோயிலுக்குத் (பூஜிக்கத்தகுந்த) தகுதியானவர்களாக ஆகிவிடு
கிறீர்கள். அவர்கள் பிறகு என்னென்ன உருவாக்கி
விட்டிருக்கிறார்கள்! உண்மையில் நீங்களெல்லாம் சீதைகள்-பக்தைகள்.
உங்களை இராவணனிடமிருந்து விடுவித்திருக்கிறேன்.
இராவணனிடமிருந்து உங்களுக்கு ஒருபோதும் சுகம் கிடைக்காது.
இச்சமயம் அனைவரும் இராவணனின் சிறையில் உள்ளனர். இராமரின் சிறை
என்று சொல்ல மாட்டார்கள். இராமர் வருகிறார், இராவணனின் சிறையில்
இருந்து விடுவிப்பதற்காக. பத்து தலை உள்ள இராவணனைத் தயார்
செய்கின்றனர். அவனுக்கு இருபது புஜங்களைக் காட்டுகின்றனர். பாபா
சொல்லிப் புரிய வைத்திருக்கிறார், 5 விகாரங்கள் ஆண்களிடமும், 5
விகாரங்கள் பெண்களிடமும் உள்ளன அது இராவண இராஜ்யம் அல்லது 5
விகாரங்களாகிய மாயாவின் இராஜ்யம் எனப்படுகின்றது. இவரிடம்
நிறைய மாயா இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள். மாயாவின் நஷா
ஏறியிருக்கிறது என்பதில்லை. செல்வத்தை மாயா என்று சொல்ல
மாட்டார்கள். தனம் சம்பத்தி எனப்படுகின்றது. குழந்தைகளாகிய
உங்களுக்கு சம்பத்தி முதலியன நிறையவே கிடைக்கின்றது. நீங்கள்
எதையும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் இதுவோ
படிப்பு. படிப்பில் கேட்க வேண்டியுள்ளதா என்ன? ஆசிரியர் என்ன
கற்பிக்கிறாரோ அதை மாணவர்கள் படிப்பார்கள். ஒருவர் எவ்வளவு
படிக்கிறாரோ அவ்வளவு அடைவார். கேட்பதற்கான (வேண்டுதல்) விஷயம்
இல்லை. இதில் தூய்மை வேண்டும். ஒரு வார்த்தைக்கும் மதிப்பைப்
பாருங்கள், எவ்வளவு இருக்கிறது! பல லட்சம் மடங்கு! பாபாவை
அறிந்து கொள்ளுங்கள், நினைவு செய்யுங்கள். பாபா அறிமுகம்
கொடுத்திருக்கிறார் -- ஆத்மா எப்படி பிந்துவாக (புள்ளி வடிவாக)
உள்ளதோ அதுபோல் நான் கூட ஆத்மா, புள்ளி வடிவமாக இருக்கிறேன்.
அவர் சதா தூய்மையாக இருப்பவர். சாந்தி, ஞானம், தூய்மையின்
கடலாக இருக்கிறார். ஒருவருக்குத் தான் மகிமை. அனைவருக்கும்
அவரவர் தகுதி என்பது இருக்கவே செய்கிறது. ஒவ்வோர் அணுவிலும்
பகவான் இருப்பதாக நாடகமும் உருவாக்கி யிருக்கிறார்கள்.
நாடகத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள். யார் மகாவீர்
குழந்தைகளாக உள்ளனரோ அவர்களுக்கு பாபா சொல்கிறார், நீங்கள்
எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள், சாட்சியாக இருந்து மட்டும்
பாருங்கள்.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இராம இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்து இராவண இராஜ்யத்தை முடித்து விடுகிறீர்கள். இது
எல்லையற்ற விஷயம். அவர்கள் எல்லைக்குட்பட்ட கதைகளை உருவாக்கி
யுள்ளனர். நீங்கள் சிவசக்தி சேனை. சிவன் சர்வ சக்திவான் அல்லவா?
சிவனிடமிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளும் சிவனுடைய சேனை
நீங்கள். அவர்களும் சிவசேனை என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ளனர்.
இப்போது உங்களுடைய பெயரை என்ன வென்று வைப்பது? உங்களுக்கோ பெயர்
- பிரஜாபிதா பிரம்மா குமார்-குமாரிகள் என வைக்கப் பட்டுள்ளது.
அனைவரும் சிவனுடைய குழந்தைகள். முழு உலகத்தின் ஆத்மாக்கள்
அனைவரும் அவருடைய குழந்தைகள். சிவனிடமிருந்து உங்களுக்கு சக்தி
கிடைக்கின்றது. சிவபாபா உங்களுக்கு ஞானம் கற்றுத் தருகின்றார்.
இதன் மூலம் உங்களுக்கு அவ்வளவு சக்தி கிடைக் கின்றது,
அரைக்கல்பத்திற்கு நீங்கள் முழு உலகத்தின் மீது இராஜ்யம்
செய்கிறீர்கள். இது உங்களுடைய யோக பலத்தின் சக்தி. அவர்களுடையது
புஜபலத்தின் சக்தி. பாரதத்தின் பழைய இராஜயோகம் மகிமைப் பாடப்
பட்டுள்ளது. பாரதத்தின் பழமையான யோகத்தைக் கற்றுக் கொள்ள
வேண்டுமென விரும்பவும் செய்கின்றனர். அதன் மூலம் சொர்க்கம்
ஸ்தாபனையாயிற்று சொல்கிறார்கள், கிறிஸ்து வருவதற்கு இத்தனை
ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கம் இருந்தது. அது எப்படி
உருவாயிற்று? யோகத்தின் மூலம். நீங்கள் இல்லற மார்க்கத்தின்
சந்நியாசிகள். அவர்கள் வீடுவாசலை விட்டு காட்டுக்குச் சென்று
விடுகின்றனர். டிராமாவின் படி ஒவ்வொரு வருக்கும் பாகம்
கிடைத்துள்ளது. இவ்வளவு மிகச்சிறிய புள்ளியில் எவ்வளவு பாகம்
அடங்கியுள்ளது! இதை இறைவன் செயல் என்று சொல்வார்கள். பாபாவோ சதா
சக்திவானாக, தங்க யுகத்தவராக உள்ளார். இப்போது நீங்கள்
அவரிடமிருந்து சக்தி பெறுகின்றீர்கள். இதுவும் டிராமா
உருவாக்கப் பட்டுள்ளது. ஆயிரம் சூரியன்களை விடத் தேஜோமயமானவர்
(பிரகாசமானவர்) என்பதில்லை. யாருக்கு என்ன பாவனை உள்ளதோ அந்த
பாவனையில் பார்க்கிறார்கள். கண்கள் மிக சிவப்பாக ஆகிவிடுகின்றன.
போதும், என்னால் சகிக்க முடியவில்லை. பாபா சொல்கிறார் அதெல்லாம்
பக்தி மார்க்கத்தின் சம்ஸ்காரங்கள். இதுவோ ஞானமாகும் இதில்
படிக்க வேண்டும். தந்தை ஆசிரியராகவும் உள்ளார், படிப்பு
சொல்லித் தருகின்றார். நமக்குச் சொல்கிறார், நீங்கள்
தமோபிரதானிலிருந்து சதோபிர தானாக ஆகவேண்டும். பாபா சொல்லிப்
புரிய வைத்துள்ளார், தீயதைக் கேட்காதீர்கள்.... மனிதர்
களுக்குத் தெரியாது, இதை யார் சொன்னார்கள் என்று. முதலில்
குரங்கின் சித்திரத்தை உருவாக்கினார்கள். இப்போது
மனிதர்களுடையதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாபாவும்
நளினி சகோதரியின் சித்திரத்தை உருவாக்கியிருந்தார்.
மனிதர்களுக்கு பக்தியின் நஷா உள்ளது. பக்தியின் இராஜ்யம்
நடக்கிறதல்லவா! இப்போது ஞானத்தின் இராஜ்யம் உள்ளது. வித்தியாசம்
ஆகிவிடுகின்றது. குழந்தைகளுக்குத் தெரியும், நிச்சயமாக
ஞானத்தினால் மிகுந்த சுகம் உள்ளது. பிறகு பக்தியால் படியில்
கீழே இறங்குகின்றனர். நாம் முதலில் சத்யுகத்திற்கு செல்கிறோம்.
பிறகு சக்கரத்தில் பேன் போல கிழே இறங்குகின்றோம். 1250
ஆண்டுகளில் இரண்டு கலைகள் குறைந்து விடுகின்றன. சந்திரன் (தேய்
பிறை) போல என்று கூறுவார்கள். சந்திரனுக்கு கிரகணம்
பிடிக்கின்றது. கலைகள் குறையத் தொடங்குகின்றன. பிறகு கொஞ்சம்
கொஞ்சமாகக் கலைகள் அதிகரிக்கின்றன, 16 கலைகளாக ஆகிவிடுகின்றது.
அது அல்பகாலத்தின் விஷயம். இச்சமயம் அனைவர் மீதும் ராகுவின்
கிரகணம் பிடித்துள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தது பிரகஸ்பதியின்
தசா. தாழ்ந்ததிலும் தாழ்ந்தது ராகுவின் தசா. ஒரேயடியாக
அனைத்தையும் இழந்து ஏழையாகி விடுகின்றனர். பிரகஸ்பதி தசாவினால்
நாம் ஏறுகின்றோம். அவர்கள் எல்லையற்ற தந்தை பற்றி அறிய
மாட்டார்கள். இப்போது ராகுவின் தசாவோ அனைவர் மீதும் நிச்சயமாக
உள்ளது. இதை நீங்கள் அறிவீர்கள், வேறு யாருக்கும் தெரியாது.
ராகுவின் தசா தான் அனைத்தும் இழந்தவர்களாக ஆக்குகின்றது.
பிரகஸ்பதி தசா மூலம் செல்வந்தர் ஆகின்றனர். பாரதம் எவ்வளவு
செல்வம் மிகுந்த நாடாக இருந்தது! ஒரு பாரதம் மட்டுமே இருந்தது.
சத்யுகத்தில் இராம இராஜ்யம், தூய்மையான இராஜ்யமாக உள்ளது.
அதற்கு மகிமை உள்ளது. தூய்மை இழந்த இராஜ்யத் திலுள்ளவர்கள்
பாடுகின்றனர், நிர்குணவானாகிய என்னிடம் எந்த ஒரு நற்குணமும்
இல்லை என்று. அந்த மாதிரி நிறுவனங்களும் உருவாகியுள்ளன -
நிர்குண ஸ்தாபனம். அட, இங்கே முழு உலகமுமே நிர்குண நிறுவனமாக
உள்ளது. ஒருவரின் விஷயமல்ல. குழந்தையை எப்போதுமே மகாத்மா
என்கிறார்கள். நீங்கள் பிறகு சொல்கிறீர்கள், எந்த ஒரு குணமும்
இல்லை என்று. இதுவோ முழு உலகமுமே குணமில்லாததாக உள்ள காரணத்தால்
ராகுவின் தசா பிடித்துள்ளது. இப்போது பாபா சொல்கிறார், தானம்
கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். இப்போது அனைவருமே சென்றாக
வேண்டும் இல்லையா? தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து தர்மங்
களையும் விட்டு விடுங்கள். தன்னை ஆத்மா என நிச்சயம் செய்யுங்கள்.
நீங்கள் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். தூய்மை இல்லாத
காரணத்தால் யாராலும் திரும்பிச் செல்ல முடியாது. இப்போது தூய்மை
ஆவதற்கான யுக்தி சொல்கிறார். எல்லையற்ற தந்தையை நினைவு
செய்யுங்கள். அநேகர் சொல்கின்றனர்- பாபா, நான் மறந்து போகிறேன்
என்று. பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, பதீதபாவனர் (தூய்மையாக்குபவரை)
பாபாவை மறந்து விட்டால் நீங்கள் எப்படிப் தூய்மையாவீர்கள்?
என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.
மிருகங்கள் கூட ஒருபோதும் இவ்வாறு சொல்லாது... நான் தந்தையை
மறந்து விடுகிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! நான்
உங்களுடைய எல்லையற்ற தந்தை, நீங்கள் வந்திருக்கிறீர்கள்
எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்காக. நிராகார் தந்தை சாகாரத்தில்
வந்துள்ளார். அப்போது தான் படிப்பு சொல்லித்தர முடியும்.
இப்போது பாபா இவருக்குள் (பிரம்மா) பிரவேசமாகி யிருக்கிறார்.
இவர் பாப்தாதா. இருவருடைய ஆத்மாக்களும் இந்தப் புருவ மத்தியில்
உள்ளன. நீங்கள் சொல்கிறீர்கள், பாப்தாதா. ஆக, நிச்சயமாக இரண்டு
ஆத்மாக்களுமே இருக்கும் -- சிவபாபா மற்றும் பிரம்மாவின் ஆத்மா.
நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார், குமாரி ஆகியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது என்றால் புரிந்து கொள்கிறீர்கள்,
நாம் சகோதர-சகோதரர் கள்.பிறகு பிரஜாபிதா பிரம்மா மூலம் நாம்
சகோதர-சகோதரி ஆகிறோம். இந்நினைவு பக்காவாக இருக்க வேண்டும்.
ஆனால் பாபா பார்க்கிறார் -- சகோதர-சகோதரி என்பதிலும் கூட
பெயர்-ரூபத்தின் கவர்ச்சி உள்ளது. அநேகருக்கு இதனால்
விகல்பங்கள் (தீய எண்ணங்கள்) வருகின்றன. இப்போது பாபா
சொல்கிறார். தன்னை ஆத்மா என உணர்ந்து சகோதர-சகோதரன் என்ற
திருஷ்டியில் பாருங்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள்.
சகோதரர்கள் இருந்தால் தந்தை அவசியம் வேண்டும். அனைவருக்கும் ஒரே
தந்தை. அனைவரும் தந்தையை நினைவு செய் கின்றனர். இப்போது பாபா
சொல்கிறார், சதோபிரதான் ஆகவேண்டுமானால் என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள். எவ்வளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு கறை
நீங்கிக் கொண்டே போகும். குஷி அதிகமாகும். மேலும்
வரிசைக்கிரமாக முயற்சியின் அனுசாரம் கவர்ச்சி என்பது ஏற்பட்டுக்
கொண்டேயிருக்கும்.. நல்லது.
இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல்
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.