29-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே, இது மேலே ஏறுவதற்கான (உயர்வதற்கான) உண்மையிலும் உண்மையான சத்சங்கம் ஆகும், நீங்கள் இப்போது சத்தியமான பாபாவின் தொடர்பில் வந்துள்ளீர்கள். ஆகையால் பொய்யான தொடர்பில் ஒருபோதும் வரக்கூடாது.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் புத்தி எந்த ஆதாரத்தில் எப்போதும் எல்லைக்கப்பாற்பட்டு இருக்க முடியும்?

பதில்:
புத்தியில் சுயதரிசன சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நாடகத்தில் என்னவெல்லாம் நடக்கிறதோ, அவையனைத்தும் பதிவாகி உள்ளது. ஒரு வினாடி கூட வித்தியாசம் ஏற்பட முடியாது. உலகத்தின் வரலாறு புவியியல் மீண்டும் நடக்க வேண்டும். இந்த விசயம் புத்தியில் நல்ல விதமாக வந்து விட்டால், எல்லைக்கப்பாற்பட்டதில் இருக்க முடியும். எல்லைக்கப்பாற்பட்டதில் இருப்பதற்கு, "இப்போது வினாசம் ஆக வேண்டும், நாம் வீட்டுக்குத் திரும்ப வேண்டும், தூய்மையாகித் தான் நாம் வீட்டுக்கு செல்வோம்" என்பது கவனத்தில் இருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். யாருக்கு ஒன்றும் புரியவில்லையோ அவர்களுக்குப் புரிய வைக்கிறார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் படிப்பிக்கின்றார், ஏனெனில் குழந்தைகள் ஒன்றும் புரியாதவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் படிப்பின் மூலமாக புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் கூட படிப்பின் மூலமாக புரிந்து கொள்கின்றீர்கள். நமக்கு படிப்பிப்பவர் யார்? இதை ஒருபோதும் மறக்காதீர்கள்! படிப்பிக்கக்கூடிய டீச்சர் சுப்ரீம் தந்தை ஆவார். ஆகையால் அவருடைய வழிப்படி நடக்க வேண்டும், சிரேஷ்டமானவர் ஆக வேண்டும். சிறந்ததிலும் சிறந்தவர் சூரிய வம்சத்தினர் ஆவர். சந்திரவம்சத்தவர்கள் கூட சிறந்தவர்கள் தான். ஆனால் இந்த சூரியவம்சத்தவர்கள் சிறந்த திலும் சிறந்தவர்கள் ஆவர். நீங்கள் சிறந்ததிலும் சிறந்தவராக ஆவதற்காக இங்கே வந்துள்ளீர்கள். நாம் இப்படி ஆக வேண்டும் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடம் 5000 வருடங்களுக்குப் பிறகு தான் திறக்கிறது. இங்கே நீங்கள் இதை புரிந்து கொண்டு அமர்ந்திருக்கின்றீர்கள். இது முற்றிலும் சத்தியமான சங்கம் ஆகும். சத்திய மானவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார், அவரோடு உங்களுடைய தொடர்பு இருக்கிறது. அவர் அமர்ந்து சத்யுகத்தின் சிறந்ததிலும் சிறந்த தேவதைகளாக ஆக்குகின்றார். அதாவது மலராக ஆக்குகின்றார். நீங்கள் முள்ளிலிருந்து மலராக ஆகின்றீர்கள். சிலர் உடனே அப்படி ஆகிவிடுகின்றார்கள், சிலருக்கு மலராக ஆவதற்கு நேரம் பிடிக்கிறது. இது சங்கமயுகம் என்று குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். ஆனாலும் கூட குழந்தைகள் மட்டும் தான் தெரிந்திருக்கின்றார்கள். இது புருஷோத்தமர் ஆவதற்கான யுகமாகும் என்ற நிச்சயம் இருக்கிறது. எப்படிப்பட்ட புருஷோத்தமர்கள்? உயர்ந்த திலும் உயர்ந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்த மகாராஜா-மகாராணி ஆவர். அப்படி ஆவதற்காக நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள். நாம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிட மிருந்து, எல்லைக்கப்பாற்பட்ட சத்யுகத்தின் சுகத்தைப் பெற வந்திருக்கின்றோம் என்று புரிந்திருக் கின்றீர்கள். எல்லைக்குட்பட்ட அனைத்து விசயங்களுமே முடிந்து போய்விடுகிறது. எல்லைக்குட் பட்ட தந்தை, எல்லைக்குட்பட்ட சகோதரர், சித்தப்பா, பெரியப்பா, மாமா.........எல்லைக்குட்பட்ட மற்றும் மதிப்பற்ற ஆஸ்தி போன்றவற்றில் மிகுந்த மோகம் இருக்கிறது. இவையனைத்தும் முடிந்து போக வேண்டும். இந்த ஆஸ்தி அனைத்தும் எல்லைக்குட்பட்டது என்று பாபா புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் எல்லைக்கப்பாற்பட்டதில் செல்ல வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி பெறுவதற்கு நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள். மற்ற அனைத்தும் எல்லைக்குட்பட்ட பொருட்களாகும், சரீரம் கூட எல்லைக்குட்பட்டது ஆகும். நோய்வாய்படுகிறது, அழிந்து போய் விடுகிறது, அகால மரணம் ஏற்படுகிறது. இன்றைக்குப் பாருங்கள், என்னென்ன உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள்! அறிவியல் கூட அதிசயம் செய்து விடுகிறது. மாயையின் ஆடம்பரம் எவ்வளவு இருக்கிறது! அறிவியலாளர்கள் மிகுந்த தைரியம் கொண்டிருக்கிறார்கள். யாரிடம் அதிகமாக மாட மாளிகைகள் போன்றவை இருக்கின்றனவோ, அவர்கள் 'இப்போது நமக்கு சத்யுகம்' என புரிந்து கொள்கிறார்கள். சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருக்கும் என்று புரிந்து கொள்வதில்லை. அது புதிய உலகம் ஆகும். முற்றிலும் புரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று பாபா சொல்கிறார். நீங்கள் எவ்வளவு புத்திசாலி ஆகின்றீர்கள்! மேலே ஏறுகின்றீர்கள், பிறகு ஏணியில் கீழே இறங்கி வருகின்றீர்கள். சத்யுகத்தில் நீங்கள் புத்திசாலிகளாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து புரியாதவர்களாக ஆகிவிட்டீர்கள். பிறகு பாபா வந்து புத்திசாலி ஆக்குகின்றார். அதைத் தான் தங்கபுத்தி என்று சொல்கிறார்கள். நாம் தங்கபுத்தி உடையவர்கள், நன்கு புரிந்தவர்களாக இருந்தோம் என்று நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். பாடல் கூட இருக்கின்ற தல்லவா! பாபா நீங்கள் எப்படிப்பட்ட ஆஸ்தியை எங்களுக்கு கொடுக்கின்றீர்கள்! முழுமையாக பூமி, ஆகாயம் போன்றவற்றிற்கு நாங்கள் எஜமானர் ஆகி விடுகின்றோம். எங்களிடமிருந்து யாரும் இதை பறித்துவிட முடியாது. யாருடைய இடையூறு ஏற்பட முடியாது. பாபா மிக அதிகமாகவே கொடுக்கின்றார். இதை விட அதிகமாக யாரும் பையை நிரப்ப முடியாது. அரைகல்பமாக நினைவு செய்த பாபா கிடைத்திருக்கின்றார். அவரை துக்கத்தில் நினைவு செய்கிறார்கள் அல்லவா! எப்போது சுகம் கிடைத்து விடுகிறதோ, அப்போது நினைவு செய்வதற்கான அவசியம் இல்லை. துக்கத்தில் அனைவரும் நினைவு செய்கிறார்கள் - ஹே ராம்......இப்படி பல விதமான வார்த்தைகள் சொல்கிறார்கள். சத்யுகத்தில் இப்படி எந்த வார்த்தைகளும் கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் இங்கே பாபாவுக்கு முன்னால் படிக்க வந்திருக்கின்றீர்கள். பாபாவினுடைய நேரடி வார்த்தை களைக் கேட்கின்றீர்கள். மறைமுகமான ஞானத்தை பாபா கொடுப்பதில்லை. ஞானம் நேரடியாகத் தான் கிடைக்கிறது. பாபாவுக்கு வரவேண்டியதாக இருக்கிறது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளிடம் வந்திருக்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். ஓ, பாப்தாதா! என்று என்னை அழைக்கின்றீர்கள். பாபா கூட 'ஓ குழந்தைகளே!' என்று அதற்கு பதிலளிக்கிறார். இப்போது என்னை நன்றாக நினைவு செய்யுங்கள், மறக்காதீர்கள். மாயையின் தடைகள் கூட நிறைய வரும். உங்களுடைய படிப்பை விடுத்து உங்களை தேக அபிமானத்தில் கொண்டு வரும், ஆகையால் எச்சரிக்கையுடன் இருங்கள். இது உண்மையிலும் உண்மையான மேலே ஏறுவதற்கான (உயர்வதற் கான) சத்சங்கம் ஆகும். மற்ற அனைத்து சத்சங்கங்களுமே கீழே இறங்குவதற்கானது ஆகும். சத்தியமானவருடைய தொடர்பு ஒருமுறை தான் ஏற்படுகிறது. பொய்யான தொடர்பு பிறவி பிறவிகளாக பல முறை ஏற்படுகிறது. இது உங்களுடைய கடைசிப் பிறவி என்று பாபா குழந்தை களுக்கு சொல்கின்றார். எங்கே கிடைக்காத பொருள் என்றுள்ளதோ அங்கே இப்போது செல்ல வேண்டும். அதற்காகத் தான் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். பாபா என்ன சொல்கின்றாரோ, அதை நீங்கள் இங்கே கேட்கின்றீர்கள். அங்கே அது எதுவும் தெரிவதில்லை. இப்போது நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? உங்களுடைய சுகதாமத்திற்குச் செல்கின்றீர்கள். சுகதாமம் உங்களுடையதாகத் தான் இருந்தது. நீங்கள் சுகதாமத்தில் இருந்தீர்கள், இப்போது துக்கதாமத்தில் இருக்கின்றீர்கள். பாபா மிக மிக எளிய வழியைச் சொல்லி இருக்கின்றார், அதையே நினைவு செய்யுங்கள். நம்முடைய வீடு சாந்திதாமம் ஆகும், அங்கே இருந்து நாம் சொர்க்கத்திற்கு செல்வோம். உங்களைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்திற்கு வருவதே இல்லை. ஆகையால் நினைவு கூட நீங்கள் தான் செய்வீர்கள். நாம் முதலில் சுகத்தில் செல்கின்றோம், பிறகு துக்கத்தில் வருகின்றோம். கலியுகத்தில் சுகதாமம் இருப்பதே இல்லை, சுகம் கிடைப்பதே இல்லை. ஆகையால் சன்னியாசிகள் கூட சுகம் காக்கையின் எச்சிலுக்கு சமமானது' என்று சொல்கின்றனர்.

நம்மை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பாபா வந்திருக்கின்றார் என்று குழந்தைகள் புரிந்திருக் கின்றீர்கள். பாபா தூய்மையற்ற நம்மை தூய்மையாக்கி அழைத்துச் செல்வார். நினைவு யாத்திரை மூலம் நாம் தூய்மை ஆவோம். யாத்திரையில் நிறைய பேர் மேல்-கீழ் ஆகின்றார்கள். சிலர் நோய்வாய்பட்டு விடுகிறார்கள், பிறகு திரும்பி வந்து விடுகின்றார்கள். இது கூட அப்படித் தான். இது ஆன்மீக யாத்திரை ஆகும், கடைசியில் நம் புத்தியில் என்ன உள்ளதோ, அப்படியே நம் பதவி (அந்த் மதி சோகதி) ஆகிவிடும். நாம் நம்முடைய சாந்தி தாமத்திற்குச் சென்று கொண்டிருக் கின்றோம். இது மிகவும் சகஜமாகும். ஆனால் மாயை அதிகமாக மறக்கச் செய்கிறது. உங்களுடையது மாயையுடன் கூடிய யுத்தம் ஆகும். பாபா மிகவும் சகஜமாக்கிப் புரிய வைக்கிறார் - இப்போது நாம் சாந்திதாமம் செல்கின்றோம். பாபாவைத் தான் நினைவு செய்கின்றோம். தெய்வீக குணங்களை தாரணை செய்கின்றோம், தூய்மை ஆகின்றோம். 3-4 விசயங்கள் புத்தியில் வைக்க வேண்டிய முக்கியமான விசயங்களாகும் - வினாசம் ஆகத் தான் வேண்டும், 5000 வருடங்களுக்கு முன்பும் நாம் சென்றிருந்தோம், பிறகு நாம் தான் முதன் முதலில் வருவோம். பாடல் கூட இருக்கிறதல்லவா - இராமன் ஆண்டாலும் சரி, இராவணன் ஆண்டாலும் சரி............அனைவரும் சாந்தி தாமம் தான் செல்ல வேண்டும். நீங்கள் என்ன படிக்கின்றீர்களோ, அந்த படிப்பின் ஆதாரத்தில் பதவி அடைகின்றீர்கள். உங்களுடைய குறிக்கோள் முன்னால் இருக்கிறது. நாங்கள் சாட்சாத்காரம் (காட்சி) பார்க்கின்றோம் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த இலக்ஷ்மி நாராயணருடைய சித்திரம் சாட்சாத்காரம் ஆகவில்லை என்றால், பிறகு என்ன இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்த சாட்சாத்காரம் பார்க்க வேண்டும்? எல்லைக்கப்பாற்பட்ட தந்தை யினுடைய சாட்சாத்காரம் பார்க்க வேண்டுமா? மற்ற எந்த சாட்சாத்காரமும் வேலைக்கு உதவாது. பாபாவினுடைய சாட்சாத்காரத்தை விரும்புகின்றார்கள். பாபாவை விட இனிமையான வேறு எந்த பொருளும் கிடையாது. பாபா சொல்கின்றார் - குழந்தைகளே முதலில் தன்னுடைய சாட்சாத்காரம் பார்க்கின்றீர்களா? பாபாவின் சாட்சாத்காரம் பார்க்க வேண்டும் என்று ஆத்மா சொல்கிறது. ஆக தன்னுடைய சாட்சாத்காரம் பார்க்கின்றீர்களா? இதை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். நாம் ஆத்மா, நம்முடைய வீடு சாந்தி தாமம் என்று இப்போது புரிந்திருக்கிறது. அங்கே இருந்து ஆத்மாக்களாகிய நாம் நடிப்பை நடிப்பதற்காக வருகின்றோம். நாடகத்தினுடைய திட்டப்படி முதன் முதலில் சத்யுகத் தின் ஆரம்பத்தில் நாம் வருகின்றோம். ஆரம்பம் மற்றும் கடைசி இணையக்கூடிய இந்த நேரம், புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். இதில் பிராமணர்கள் மட்டும் தான் இருக்கின்றார்கள், வேறு யாரும் கிடையாது. கலியுகத்தில் நிறைய தர்மங்கள், குலங்கள் போன்றவை இருக்கின்றன. சத்யுகத்தில் ஒரே ஒரு வம்சம் தான் இருக்கும். இது எளிமையானது அல்லவா! இந்த நேரம் நீங்கள் சங்கமயுக ஈஸ்வரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருகின்றீர்கள். நீங்கள் சத்யுக வாசியும் கிடையாது, கலியுகவாசியும் கிடையாது. கல்ப கல்பமாக பாபா வந்து இந்தப் படிப்பை படிப்பிக்கின்றார் என்பதைக் கூட நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். இங்கே நீங்கள் அமர்ந்திருக்கும் போது இதே நினைவு தான் வர வேண்டும். சாந்திதாமம், சுகதாமம் மற்றும் இது துக்கதாமம் ஆகும். இந்த துக்கதாமத்தின் மீது வைராக்கியம் அல்லது சந்நியாசம் புத்தி மூலமாக செய்ய வேண்டும். அவர்கள் புத்தி மூலமாக எதையும் சந்நியாசம் செய்வதில்லை. அவர்கள் வீடு வாசலை விட்டு சந்நியாசம் செய்கின்றனர். வீடு வாசலை விடுங்கள் என்று ஒருபோதும் பாபா உங்களிடம் சொல்வதில்லை. பாரதத்துக்கு சேவை செய்ய வேண்டும் மற்றும் தனக்குச் சேவை செய்ய வேண்டும், இது மிகவும் முக்கியமானது ஆகும். சேவை வீட்டில் கூட செய்ய முடியும். படிப்பதற்கு கண்டிப்பாக இங்கே வர வேண்டும். பிறகு புத்திசாலி ஆகி மற்றவர்களையும் தனக்குச் சமமாக ஆக்க வேண்டும். நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. நிறைய காலம் கடந்து விட்டது, கொஞ்சம் மீதம் உள்ளது என்று பாடல் கூட இருக்கிறதல்லவா! உலகத்தின் மனிதர்களோ முற்றிலும் காரிருளில் இருக்கின்றனர். இன்னும் 40,000 வருடங்கள் உள்ளது என்று எண்ணிக்கொண்டிருக் கிறார்கள்.. குழந்தைகளே! இன்னும் சிறிது நேரம் தான் இருக்கிறது என்று உங்களுக்கு பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் எல்லைக்கப்பாற்பட்டதில் இருக்க வேண்டும். முழு உலகத்தில் என்ன வெல்லாம் நடக்கிறதோ, அனைத்தும் பதிவாகி இருக்கிறது. பேன் போல நாடகம் நடந்து கொண்டி ருக்கிறது. உலகத்தின் வரலாறு புவியியல் மீண்டும் நடக்க வேண்டும். யார் சத்யுகத்திற்கு செல்பவர்களோ, அவர்கள் தான் வந்து படிப்பார்கள். பலமுறை நீங்கள் படித்திருக்கின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்படி உங்களுடைய சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் வருவதே பாரதத்தில் தான் என்பதைக் கூட நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். கல்பத்திற்கு முன்பும் வந்திருந்தார். கல்ப கல்பமாக இப்படிப் பட்ட பாபா வருகின்றார் என்று நீங்கள் சொல்வீர்கள். நான் கல்ப கல்பமாக இப்படிப்பட்ட ஸ்தாபனை செய்வேன் என்று பாபா சொல்கின்றார். வினாசத்தைக் கூட நீங்கள் பார்க்கின்றீர்கள். உங்கள் புத்தியில் அனைத்தும் பதிந்து விடுகிறது. ஸ்தாபனை, வினாசம் மற்றும் பாலனையின் காரியம் எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்திருக் கின்றீர்கள், பிறகு மற்றவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதை முன்பு நீங்கள் தெரிந்திருக்கவில்லை. பாபாவைத் தெரிந்து கொண்டதன் மூலம், அவர் மூலமாக அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்கின்றீர்கள். உலகத்தின் வரலாறு புவியியலை நீங்கள் யதார்த்தமாகத் தெரிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் எப்படி தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானம் ஆகின்றார்கள் என்பதை பாபா உங்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தங்கபுத்தி உடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். சத்யுகத்தில் தங்கபுத்தி உடையவர்கள் தான் இருக்கின்றார்கள். இது புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். எப்போது நீங்கள் கல்புத்தியிலிருந்து தங்கபுத்தி உடையவர்களாக ஆகின்றீர்களோ, அதை கீதையின் பாகம் என்று சொல்லப்படுகிறது. பகவான் அவரே கீதை ஞானத்தைச் சொல்கின்றார், மனிதர்கள் சொல்வதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் கேட்கின்றீர்கள் மற்றும் மற்றவர்களுக்குச் சொல்கின்றீர்கள். இதைத் தான் ஆன்மீக ஞானம் என்று சொல்லப்படுகிறது, இதை ஆன்மீக சகோதரர்களுக்குச் சொல்கின்றீர்கள். இது வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. பாபா வந்து சூரியவம்ச, சந்திர வம்ச குலத்தை ஸ்தாபனை செய்கின்றார் என்று நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். யார் மூலமாக? பிரம்மா வாய்வம்சாவளி பிராமண குல பூஷணர்கள் மூலமாக ஸ்தாபனை செய்கிறார். பாபா ஸ்ரீமத் கொடுக்கின்றார், இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஆகும். மனதில் குறித்துக் கொள்ள வேண்டும், இது மிகவும் சகஜமாகும். இது துக்கதாமமாக இருக்கிறது. இப்போது நமக்கு வீடு செல்ல வேண்டும். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகமாகும். இந்த விசயமோ மிகவும் சிறியது மற்றும் சகஜமானது ஆகும். நீங்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் எந்தக் கவலையும் இல்லை. யாருக்குப் படிக்கத் தெரியுமோ, அவர்களிடமிருந்து பிறகு கேளுங்கள். சிவபாபா அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார், இப்போது அவரிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும் பாபா மீது நிச்சயம் ஏற்படும் போது சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். உள்ளுக்குள் இடைவிடாது நினைவு இருந்து கொண்டே இருக்கும். சிவபாபாவிடமிருந்து எல்லையற்ற சுகம், சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் சிவபாபாவை கண்டிப்பாக நினைவு செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய அனைவருக்கும் உரிமை இருக் கிறது. எப்படி எல்லைக்குட்பட்ட பிறப்புரிமை கிடைக்கிறதோ, அதுபோல எல்லையற்ற பிறப்புரிமை ஆகும். சிவபாபாவிடமிருந்து உங்களுக்கு முழு உலக இராஜ்ஜியம் கிடைக்கிறது. சின்னசின்னக் குழந்தைகளுக்குக் கூட இதைப் புரிய வைக்க வேண்டும். பாபாவிடமிருந்து பிறப்புரிமையைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆத்மாவிற்கும் உரிமை இருக்கிறது. கல்ப கல்பமாக கண்டிப்பாக இதைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ஜீவன்முக்தியினுடைய ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். யாருக்கு முக்தியினுடைய ஆஸ்தி கிடைக்கிறதோ, அவர்களும் கண்டிப்பாக ஜீவன் முக்திக்கு வருவார்கள். முதல் பிறவி சுகம் நிறைந்ததாகத் தான் இருக்கும். இது உங்களின் 84வது பிறவி ஆகும். இந்த ஞானம் முழுமையாக உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை நமக்கு படிப்பிக்கின்றார் - இதை மறக்காதீர்கள். தேகதாரி ஒருபோதும் ஞானம் கொடுக்க முடியாது. அவர் களிடம் ஞானம் இருக்க முடியாது. உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது - சகோதர சகோதரன் எனப் புரிந்து கொள்ளுங்கள். எந்த மனிதருக்கும் இந்தப் படிப்பு கிடைப்பதில்லை. பகவானுடைய மகாவாக்கியம் - காமம் மகா எதிரி, இதன் மீது வெற்றி அடைவதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர் ஆகிவிடுவீர்கள் என்று கீதை ஞானம் சொல்கின்றார்கள், ஆனால் புரிந்து கொள்வ தில்லை. பகவானோ சத்தியமானவர் ஆவார். தேவதைகள் கூட பகவானிடமிருந்து சத்தியத்தை கற்கின்றனர். கிருஷ்ணர் கூட இந்தப் பதவியை எங்கிருந்து பெற்றார்? எங்கிருந்து இலக்ஷ்மி நாராயணர் ஆனார்? என்ன கர்மம் செய்தார்? யாரும் சொல்ல முடியுமா? நிராகார் தந்தை, பிரம்மா பாபா மூலமாக அவர்களுக்கு அப்படிப்பட்ட கர்மத்தை கற்றுக் கொடுத்தார் என்று இப்போது நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். இது படைப்பு அல்லவா! இப்போது நீங்கள் பிரஜா பிதா பிரம்மா குமார்-பிரம்மாகுமாரி ஆவீர்கள். உங்களிடம் ஆன்மீகத் தந்தையின் ஞானம் இருக்கிறது. நாம் பகவானைத் தெரிந்து கொண்டுவிட்டோம் என்று நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் நிராகாரமானவர் ஆவார், அவருக்கு சாகார ரூபம் கிடையாது. மற்ற எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவையனைத்தும் சாகார ரூபம் ஆகும். கோயில்களில் கூட லிங்கத்தைப் பார்க்கின்றீர்கள், அதாவது அவருக்கு சரீரம் கிடையாது. அவர் பெயர், ரூபத்திலிருந்து தனிப் பட்டவர் என்பது கிடையாது. ஆமாம், மற்ற அனைத்து தேகதாரிகளுக்கும் பெயர் இருக்கிறது, ஜாதகம் இருக்கிறது. சிவபாபாவோ நிராகாரமானவர் ஆவார், அவருக்கு ஜாதகம் கிடையாது. கிருஷ்ணர் நம்பர் ஒன் ஆவார். சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். பாபா நிராகாரமானவர், கல்யாணகாரி (நன்மை செய்பவர்) ஆவார். பாபா வருகின்றார் என்றால் கண்டிப்பாக ஆஸ்தி கொடுப்பார். அவருடைய பெயர் சிவன் ஆகும். அந்த தந்தை, டீச்சர், சத்குரு மூன்றும் ஒருவரே ஆவார். எவ்வளவு நன்றாகப் படிப்பிக்கின்றார்! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த துக்கதாமத்தை புத்தி மூலம் சந்நியாசம் செய்து சாந்தி தாமம் மற்றும் சுகதாமத்தின் நினைவில் இருக்க வேண்டும். பாரதத்திற்கு மற்றும் தனக்கு உண்மையான சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் ஆன்மீக ஞானம் சொல்ல வேண்டும்.

2. தன்னுடைய சத்யுகத்தின் பிறப்புரிமையை அடைவதற்கு ஒரு பாபா மீது முழுமையான நிச்சயம் வைக்க வேண்டும். உள்ளுக்குள் இடைவிடாது நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். படிப்பை தினமும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

வரதானம்:
அனைத்து சம்மந்தங்களின் அனுபவங்கள் கூடவே பிராப்திகளின் மகிழ்ச்சியை அனுபவம் செய்து திருப்தியான ஆத்மா ஆவீர்களாக !

யார் பாபாவிற்கு மிகவும் அன்பானவர்களோ (நாயகிகள்) அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு கர்மத்திலும், எப்போதுமே பிராப்தியின் மகிழ்ச்சியில் இருப்பார்கள். அவர் என்னுடைய அப்பா, நாயகன், குழந்தை என சிலக் குழந்தைகள் அனுபவம் செய்கின்றனர். ஆனால் எவ்வளவு பிராப்தி தேவைப்படுகின்றதோ அவ்வளவு இல்லை. எனவே அனுபவங்களின் கூடவே அனைத்து சம்மந்தங்களின் மூலமாக பிராப்திகளை அடைந்த உணர்வு ஏற்பட வேண்டும். பிராப்தி மற்றும் அனுபவம் செய்தவர்கள் தான் எப்போதும் திருப்தியாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என இருக்காது. எங்கு பிராப்தி உள்ளதோ.. அங்கு திருப்தி அவசிய மாக இருக்கும்.

சுலோகன்:
நீங்கள் கருவியாக மாறினால் சேவையில் வெற்றியின் பங்கு உங்களுக்கு கிடைக்கும்