30-04-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! முழு நாளில் எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தேன்? எந்தத் தவறும் செய்யவில்லையல்லவா? என்ற தனது கணக்கை சோதனை செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் வியாபாரிகளாக இருக்கின்றீர்கள்.

கேள்வி:
எந்த ஒரு முயற்சியை அந்தர்முகி (உள்நோக்கு முகத்துடன்) ஆகி செய்கின்ற பொழுது அளவற்ற குஷியிருக்கும்?

பதில்:
பல பிறவிகளாக என்ன செய்தீர்களோ, எது முன்னால் வந்து கொண்டிருக்கின்றதோ, அவையனைத் திலிருந்தும் புத்தியோகத்தை நீக்கி சதோ பிரதானம் ஆவதற்காக தந்தையை நினைவு செய்வதற்கான முயற்சி செய்து கொண்டே இருங்கள். நாலாபுறத்திலிருந்தும் புத்தியை நீக்கி உள்முகமாகி தந்தையை நினைவு செய்யுங்கள். சேவையின் பலனை ஆதாரமாகக் கொடுக்கும் பொழுது அளவற்ற குஷியிருக்கும்.

ஓம் சாந்தி.
தந்தை வந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். ஆன்மீகத் தந்தை எல்லை யற்ற தந்தையாக இருக்கின்றார். ஆன்மீக குழந்தைகளும் எல்லையற்ற குழந்தைகளாக இருக்கின்றனர். தந்தை யானவர் அனைத்து குழந்தைகளுக்கும் சத்கதி அளிக்க வேண்டும். யார் மூலமாக? இந்தக் குழந்தை களின் மூலம் சத்கதி அளிக்க வேண்டும். முழு உலகிலும் உள்ள குழந்தைகள் இங்கு வந்து படிப்பது கிடையாது. பெயரே ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் என்று இருக்கின்றது. முக்தி என்பது அனைவருக்கும் ஏற்படவே செய்கின்றது. முக்தி என்றாலும் சரி, ஜீவன் முக்தி என்றாலும் சரிதான். முக்திக்குச் சென்று அனைவரும் பிறகு ஜீவன் முக்திக்கு வந்தே ஆக வேண்டும். ஆக அனைவரும் முக்திதாமத்தின் வழியாக ஜீவன் முக்திக்கு வருகின்றனர் என்று கூறலாம். ஒருவருக்குப் பின்னால் ஒருவராக நடிப்பு நடிப்பதற்கு வந்தே ஆக வேண்டும். அதுவரைக்கும் முக்தியில் இருக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் இப்பொழுது படைப்பவர் மற்றும் படைப்பை அறிந்து கொண்டீர்கள். இந்த அனைத்து படைப்புகளும் அழிவற்றதாகும். படைக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தையாவார். இங்கு இருக்கக் கூடிய அனைத்து ஆத்மாக்களும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆவர். குழந்தைகளுக்கு தெரிய வருகின்ற பொழுது தான் அவர்கள் வந்து யோகா கற்றுக் கொள்கின்றனர். இது பாரதத்திற்கான யோகா ஆகும். தந்தை வருவதும் பாரதத்தில் தான். பாரதவாசிகளுக்குத் தான் நினைவு யாத்திரையைக் கற்றுக் கொடுத்து பாவனமாக ஆக்குகின்றார். மேலும் இந்த சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுற்றுகின்றது? என்ற ஞானத்தையும் கொடுக்கின்றார். ருத்ர மாலையும் இருக்கின்றது, அதற்கு புகழும், மரியாதையும் இருக்கின்றது, நினைவும் செய்கின்றனர். பக்த மாலையும் இருக்கின்றது. உயர்ந்ததிலும் உயர்ந்தது பக்தர்களின் மாலையாகும். பக்த மாலைக்குப் பிறகு ஞான மாலை இருக்க வேண்டும். பக்தி மற்றும் ஞானம் இருக்கின்றதல்லவா! பக்த மாலையும் இருக்கின்றது எனில் ருத்ர மாலையும் இருக்கின்றது. பிறகு ருண்ட மாலை என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில் உயர்ந்ததிலும் உயர்ந்த மனித சிருஷ்டியில் இருக்கக் கூடியவர் விஷ்ணு, அவரை சூட்சும வதனத்தில் காண்பிக்கின்றனர். இவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார். இவரது மாலையும் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இறுதியில் இந்த மாலையும் தயாராகி விடும். அப்பொழுது தான் அந்த ருத்ர மாலை மற்றும் விஷ்ணுவின் வைஜெயந்தி மாலையும் உருவாகும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா, பிறகு உயர்ந்ததிலும் உயர்ந்தது விஷ்ணுவின் இராஜ்ஜியமாகும். அழகுக்காக பக்தியில் எவ்வளவு சித்திரங்களை உருவாக்கியிருக்கின்றனர்! ஆனால் ஞானம் எதுவும் கிடையாது. நீங்கள் என்ன சித்திரங்களை உருவாக்கினாலும் அதற்கான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். இல்லையெனில் சிவனையும் சங்கரையும் ஒன்றாக்கி விடுவார்கள்.

சூட்சுமவதனத்தில் அனைத்தும் சாட்சாத்காரத்திற்கான விசயமாகும் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். எலும்பு, சதைகள் அங்கு இருக்காது. சாட்சாத்காரம் செய்கின்றீர்கள். சம்பூர்ண பிரம்மாவும் (முழுமை அடைந்த) இருக்கின்றார். ஆனால் அவர் சம்பூர்ணமானவர், அவ்யக்த மானவர். இப்பொழுது வியக்தத்தில் (சாகாரத்தில்) இருக்கக் கூடிய பிரம்மா அவ்யக்தமாக ஆக வேண்டும். வியக்தத்தில் இருக்கக் கூடியவரே அவ்யக்தமாக ஆகின்றார், அதனையே பரிஸ்தா என்றும் கூறுகின்றோம். சூட்சுமவதனத்தில் அவரது சித்திரம் காண்பிக்கப் பட்டிருக்கிறது. சூட்சும வதனத்திற்கு செல்கின்றனர், பாபா சோமரசத்தைப் பருக வைத்தார் என்று கூறுகின்றனர். அங்கு மரங்கள் எல்லாம் இருக்காது. வைகுண்டத்தில் இருக்கும். வைகுண்டத்தி-ருந்து கொண்டு வந்து பருக வைக்கின்றார் என்பது கிடையாது. இவையனைத்தும் சூட்சுமவதனத்தில் சாட்சாத்காரத் திற்கான விசயங்களாகும். இப்பொழுது திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும் மற்றும் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். நான் ஆத்மா, அழிவற்றவனாக இருக்கின்றேன், இந்த சரீரம் அழியக் கூடியதாகும். ஆத்மாவின் ஞானமும் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கின்றது. ஆத்மா என்பது என்ன? என்பதைக் கூட அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அதில் 84 பிறவிகளின் நடிப்பு நிறைந்திருக்கின்றது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இந்த ஞானத்தை தந்தை மட்டுமே கொடுக்கின்றார். தனது ஞானத்தை யும் கொடுக்கின்றார். தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக்குகின்றார். நான் ஆத்மா, இப்பொழுது பரமாத்மாவிடம் தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி மட்டுமே செய்து கொண்டிருங்கள் போதும். பதீத பாவனரே, வாருங்கள் என்று சந்நியாசிகள் கூறுகின்றனர். சிலர் பிரம்ம தத்துவத்தையும் பதீத பாவன் (தூய்மை செய்பவர்) என்று கூறிவிடுகின்றனர். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு பக்தி எவ்வளவு காலம் நடைபெறுகின்றது? ஞானம் எவ்வளவு காலத்திற்கு நடைபெறுகின்றது? என்ற பக்திக்கான ஞானமும் கிடைக்கின்றது. இவ்வாறு தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். முன்பு எதையும் அறியாதவர்களாக இருந்தோம். மனிதர்களாக இருந்து அழுக்கான புத்தியுடையவர்களாக இருந்தோம். சத்யுகத்தில் முற்றிலும் தூய்மையான புத்தியுடையவர்களாக இருந்தோம். அவர்களிடத்தில் எவ்வளவு தெய்வீக குணங்கள் இருந்தன! குழந்தைகளாகிய நீங்களும் தெய்வீக குணங்களை கண்டிப்பாக தாரணை செய்ய வேண்டும். இவர்கள் தேவதை போன்று இருக்கின்றனர் என்று கூறுகின்றனர் அல்லவா! சாது, சந்நியாசி, மகாத்மாக்களை மனிதர்கள் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் தெய்வீக புத்தியுடையவர்களாக கிடையாது. இரஜோ புத்தியுடையவர்களாக ஆகி விடுகின்றனர். இராஜா, இராணி, பிரஜைகள் உள்ளனர் அல்லவா! இராஜ்யம் எப்பொழுது மற்றும் எப்படி ஸ்தாபனை ஆகின்றது? என்பது உலகத் தினருக்குத் தெரியாது. இங்கு நீங்கள் அனைவரும் புது விசயங்களைக் கேட்கின்றீர்கள். ஆக மாலையின் இரகசியங்களையும் புரிய வைத்திருக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை. அவரது மாலை மேலே இருக்கின்றது. நிராகார ருத்ரனாக அவர் இருக்கின்றார், பிறகு சாகாரத்தில் லெட்சுமி நாராயணன், அவருக்கும் மாலை இருக்கின்றது. பிராமணர்களின் மாலை இப்பொழுது கிடையாது. கடைசியில் பிராமணர்களாகிய உங்களது மாலையும் உருவாகி விடும். இந்த விசயத்தில் அதிக கேள்வி, பதிலில் செல்ல வேண்டிய அவசியமில்லை. முக்கிய விசயம் தன்னை ஆத்மா என்று புரிந்து பரம்பிதா பரமாத்மாவை நினைவு செய்வதாகும். இந்த நம்பிக்கையை உறுதி செய்யுங்கள். பதீதமானவர்களை பாவனமாக ஆக்குவது தான் முக்கிய விசயமாகும். முழு உலகமும் பதீதமாக இருக்கின்றது. பிறகு பாவனமாக ஆக வேண்டும். மூலவதனத்திலும் அனைவரும் பாவனமாக இருக்கின்றனர் எனில் சுகதாமத்திலும் அனைவரும் பாவனமாக இருக்கின்றனர். நீங்கள் பாவனமாகி பாவன உலகிற்குச் செல்கின்றீர்கள். இப்பொழுது பாவன உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. இவையனைத்தும் நாடகத்தில் பதிவாகி யிருக்கின்றது.

எந்தத் தவறும் செய்யவில்லை தானே? என்று முழு நாளின் கணக்கைப் பாருங்கள் என்று தந்தை கூறுகின்றார். வியாபாரிகள் கணக்கு பார்க்கின்றனர். இங்கும் வருமானம் இருக்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் வியாபாரிகளாக இருக்கின்றீர்கள். பாபாவிடத்தில் வியாபாரம் செய்கின்றீர்கள். என்னிடத்தில் எத்தனை தெய்வீக குணங்கள் இருக்கின்றன? எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்கின்றேன்? எந்த அளவிற்கு நான் அசரீரியாக ஆகிக் கொண்டிருக்கின்றேன்? என்று சோதனை செய்யுங்கள். நான் அசரீரியாக வந்தேன் பிறகு அசரீரியாகிச் செல்ல வேண்டும். இது வரைக்கும் அனைவரும் வந்து கொண்டே இருக்கின்றனர். இடையில் ஒருவரும் திரும்பிச் செல்ல முடியாது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து செல்ல வேண்டும். உலகம் காலியாகாது. இராமர் சென்றாலும், இராவணன் சென்றாலும்....... என்று பாடியிருக்கின்றனர். ஆனால் இருவரும் இருக்கின்றனர். இராவண சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் சென்று விட்டால் பிறகு திரும்பி வரமாட்டார்கள். மற்றவர் அனைவரும் மீதி இருக்கின்றனர். இதைனையும் நாளடைவில் அனைவரும் காட்சியாகப் பார்ப்பார்கள். புது உலகம் எவ்வாறு ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது? கடைசியில் என்ன நடக்கும்? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பிறகு நமது தர்மம் மட்டுமே இருந்து விடும். சத்யுகத்தில் நீங்கள் இராஜ்ஜியம் செய்வீர்கள். கலியுகம் அழிந்து விடும். பிறகு சத்யுகம் வர வேண்டும். இப்பொழுது இராவண சம்பிரதாயம் மற்றும் இராம சம்பிரதாயம் இரண்டும் இருக் கின்றது. சங்கமயுகத்தில் தான் இவை அனைத்தும் ஏற்படுகின்றது. இப்பொழுது நீங்கள் இவை யனைத்தையும் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். மற்ற என்ன என்ன இரகசியங்கள் சொல்லப் படமால் இருக்கின்றதோ அதனையும் சிறிது சிறிதாக நாளடைவில் கூறுவேன். நாடகத்தில் எது பதிவாகியிருக்கின்றதோ அது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள். முன்கூட்டியே எதுவும் கூறமாட்டேன். இதுவும் நாடகத்தின் திட்டமாகும். இரகசியங்கள் வெளிப்படும். பாபா கூறிக் கொண்டே இருப்பார். உங்களது புத்தியில் இவையனைத்து விசயங் களின் அறிவு வளர்ந்து கொண்டே செல்கின்றது. நாடகத்தில் எப்படியெல்லாம் இருக்கிறதோ அவ்வாறு பாபாவின் முரளியும் நடந்து கொண்டிருக்கும். நாடகத்தில் அநேக இரகசியங்கள் நிறைந்திருக்கின்றது. ரிக்கார்டில் இருக்கும் முள்ளை எடுத்து நடுவே வைத்துவிட்டால் அது ரிப்பீட் ஆகும் என்பதெல்லாம் கிடையாது, பதிவாகியிருப்பதே மீண்டும் நடைபெறும். புது விசயம் கிடையாது. தந்தையிடத்தில் என்ன புது விசயங்கள் இருக்கின்றதோ அது மீண்டும் வெளிப்படும். நீங்கள் கேட்பீர்கள் மற்றும் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். மற்ற அனைத்தும் இரகசிய மானதாகும். இந்த இராஜ்ஜியம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக் கின்றது. முழு மாலையும் உருவாகிக் கொண்டிருக்கின்றது. தனித்தனியாகச் சென்று நீங்கள் இராஜ்ஜியத்தில் பிறப்பீர்கள். இராஜா, இராணி, பிரஜைகள் அனைவரும் தேவை. இவற்றையெல்லாம் புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். நடைமுறையில் என்ன நடக்க வேண்டுமோ அதனைப் பார்ப்பீர்கள். இங்கிருந்து செல்லக்கூடியவர்கள் நல்ல செல்வந்த வீட்டில் பிறப்பு எடுப்பார்கள். இப்பொழுதும் கூட உங்களுக்கு அங்கு அதிகமான கவனிப்பு செய்யப்படுகின்றது. இந்த நேரத்திலும் அனைவரிடத்தில் இரத்தின கிரீடங்கள் இருக்கின்றது. ஆனால் அவர்களிடத்தில் அந்த அளவிற்கு சக்தி கிடையாது. சக்தி உங்களிடம் இருக்கின்றது. நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் உயர்வானவர்களாக ஆகின்றீர்கள் எனில் நீங்கள் அங்கு சென்று தெய்வீகமான சரித்திரத்தைக் (ஒழுக்கம்) காண்பிப்பீர்கள். அசுர குழந்தை பிறந்தவுடனேயே அழுது கொண்டேயிருக்கும். அழுக்காகவும் இருக்கும். நீங்கள் மிகவும் நியமப்படி வளர்வீர்கள். அழுக்கு போன்ற விசயங்கள் இருக்காது. இன்றைய நாட்களில் குழந்தைகள் மிகவும் அழுக்காகி இருக்கின்றனர். சத்யுகத்தில் இப்படிப்பட்ட விசயங்கள் இருக்க முடியாது. சொர்க்கம் அல்லவா! அகர்பத்தியை ஏற்றுங்கள், துர்நாற்றம் எடுக்கின்றது என்று கூறுமளவிற்கு துர்நாற்றம் இருக்காது. தோட்டங்களில் மிகவும் நறுமணமுள்ள மலர்கள் இருக்கும். இங்கிருக்கக் கூடிய மலர்களில் அந்த அளவிற்கு நறுமணம் இருப்பது கிடையாது. அங்கு ஒவ்வொரு பொருளும் 100 சதவிகிதம் நறுமணம் உடையதாக இருக்கும். இங்கு 1 சதவிகிதம் கூட கிடையாது. அங்கு மலர்களும் கூட மிகவும் அழகானதாக இருக்கும். இங்கு எவ்வளவு தான் செல்வந்தர்களாக இருந்தாலும் அந்த அளவிற்கு இருக்காது. அங்கு ஒவ்வொரு பொருளும் மிகவும் நன்றாக இருக்கும். பாத்திரங்கள் போன்றவைகளும் தங்கமாக இருக்கும். இங்கு கற்கள் இருப்பது போன்று அங்கு தங்கமாகவே இருக்கும். மணலும் தங்கமாகவே இருக்கும். எவ்வளவு தங்கம் நிறைந்திருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அதன் மூலமாகக் கட்டிடங்கள் கட்டுவர். அங்கு குளிரும் இருக்காது, வெயிலும் இருக்காது, அப்படிப்பட்ட சீதோஷ்ண நிலையிருக்கும். அங்கு காற்றாடி போடும் அளவிற்கு வெயில் இருக்காது. அதன் பெயரே சொர்க்கம். அங்கு அளவற்ற சுகம் இருக்கும். உங்களைப் போன்று பத்மாபதம்பதி (கோடான கோடி) பாக்கியசாலிகளாக யாரும் ஆவது கிடையாது. இலட்சுமி நாராயணனுக்கு எவ்வளவு மகிமை பாடுகின்றனர்! அவர்களது சித்திரங்களை உருவாக்கி மகிமைகள் செய்கின்றனர். முதலில் கலப்படம் இல்லாத பக்தி இருக்கின்றது. பிறகு தேவதை களின் பக்தி ஆரம்பமாகி விடுகின்றது. அதனையும் பூத பூஜை என்று கூறுவோம். அந்த சரீரம் கிடையாது. 5 தத்துவங்களுக்கு பூஜை ஏற்படுகின்றது. சிவபாபாவை இவ்வாறு கூறுவது கிடையாது. பூஜை செய்வதற்காக ஏதாவது ஒரு பொருள் அல்லது தங்கம் போன்றவைகளினால் உருவாக்குகின்றனர். ஆத்மாவை தங்கம் என்று கூறுவது கிடையாது. ஆத்மா எந்த பொருளினால் உருவாக்கப்பட்டது? சிவனின் சித்திரம் எந்த பொருளினால் உருவாக்கப்பட்டது என்று கேட்டால் உடனே கூறிவிடுகின்றனர். ஆனால் ஆத்மா, பரமாத்மா எந்த பொருளினால் உருவாக்கப் பட்டது? என்பது யாரும் கூற முடியாது. சத்யுகத்தில் 5 தத்துவங்களும் தூய்மையானதாக இருக்கும். இங்கு அசுத்தமாக இருக்கின்றது. ஆக முயற்சி செய்யக் கூடிய குழந்தைகள் இப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பர். இப்படிப்பட்ட அனைத்து விசயங்களையும் விட்டு விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். நாலாபுறத்திலிருந்தும் புத்தியை நீக்கி என் ஒருவனை மட்டும் நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகும். எதுவெல்லாம் கேட்கின்றீர்களோ அவையனைத்தையும் விட்டு விட்டு நான் சதோ பிரதானமாக ஆக வேண்டும் என்ற ஒரு விசயத்தை மட்டும் உறுதி செய்யுகள். பிறகு சத்யுகத்தில் கல்ப கல்பத்திற்கு என்ன நடக்குமோ அதுவே நடக்கும். அதில் மாற்றம் ஏற்பட முடியாது. மூல விசயம் என்னவெனில் தந்தையை நினைவு செய்வதாகும். இதில் தான் முயற்சி இருக்கின்றது. இதனை நிறைவேற்றுங்கள். புயல்கள் அதிகமாக வருகின்றன. பலபிறவிகளாக எதுவெல்லாம் செய்தீர்களோ அவைகள் அனைத்தும் எதிரில் வருகின்றன. ஆக அனைத்து தரப் பிலிருந்தும் புத்தியை நீக்கி என்னை நினைவு செய்யக் கூடிய முயற்சி செய்யுங்கள், அந்தர்முகி ஆகுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு வந்து விட்டது, அதுவும் வரிசைக்கிரமமான முயற்சியின் படி. சேவையின் மூலமாகவும் தெரிந்து விடுகின்றது. சேவை செய்பவர்களுக்கு சேவைக்கான குஷி இருக்கின்றது. யார் நன்றாக சேவை செய்கின்றார்களோ அவர்களுக்கு சேவையின் பலனும் கிடைக்கின்றது. வழிகாட்டியாக (ஞ்ன்ண்க்ங்) ஆகி வருகின்றனர். யார் மகாரதி? குதிரை வீரர் யார்? காலாட்படை யார்? என்பது உடனேயே தெரிந்து விடுகின்றது. நல்லது.

இனிமையிலும் இனிய தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மற்ற அனைத்து விசயங்களையும் விட்டு விட்டு, புத்தியை நாலாபுறங்களிலிருந்தும் விலக்கி விட்டு சதோ பிரதானம் (உயர்ந்த நிலை) ஆவதற்காக அசரீரியாகும் (உடலை மறக்கும் நிலை) பயிற்சி செய்ய வேண்டும். தெய்வீக குணங்களைத் தாரணை செய்ய வேண்டும்.

2) புத்தியில் நல்ல நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும். நமது ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) என்ன என்ன இருக்கும்? என்பதை சிந்தனை செய்து தன்னை அதற்கு தகுதியாக சரித்திரம் படைக்கக் கூடியவர்களாக வேண்டும். இங்கிருந்து புத்தியை நீக்கி விட வேண்டும்.

வரதானம்:
சேவை மூலமாக பலன் என்ற பழத்தை பெற்று அனைத்து எல்லைகளுக்குட்பட்ட விருப்பங்களிலிருந்து விடுபட்டு எப்பொழுதும் நிறைந்தவர்களாகவும், சம்மானவர்களாகவும் ஆவீர்களாக!

சேவையின் அர்த்தமே மேவா - பலன் தரக் கூடியது ஆகும். ஏதாவதொரு சேவை உங்களை அதிருப்தியாக ஆக்குகிறது என்றால், அந்த சேவை சேவையே கிடையாது. அப்பேர்ப்பட்ட சேவையை விட்டு விடுங்கள். ஆனால் திருப்தியை விடாதீர்கள். எப்படி சரீரத்தில் திருப்தி உடையவர்களாக இருப்பவர்கள் எப்பொழுதும் சந்தோˆமாக இருப்பார்கள், அதே போல மனதில் திருப்தி உடையவர்களும் சந்தோˆமாக இருப்பார்கள். சந்தோˆம் என்பது திருப்தியின் அடையாளம் ஆகும். திருப்தியுடைய ஆத்மா எந்தவொரு எல்லைக்குட்பட்ட ஆசை, மரியாதை, மதிப்பு, வசதிகள், சாதனங்கள் போன்றவற்றின் எதிர்ப்பார்ப்பை (பசி) வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து விருப்பங்களிலிருந்தும் அப்பாற்பட்டு எப்பொழுதும் (சம்பன்ன) நிறைந்தவராகவும் (சமானம்) சமமானவராகவும் இருப்பார்கள்.

சுலோகன்:
உண்மையான உள்ளத்துடன் சுயநலமற்ற சேவையில் முன்னேறுவது என்றாலே, புண்ணிய கணக்கு சேமிப்பு ஆவது ஆகும்