06.04.24

இன்றைய சிந்தனைக்கு......

அகத்தாய்வு:  

நன்றாக சிந்திப்பது என்றால், தீர்வு காண்பது என்தாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பிரச்சனைகளை சந்திக்கும்போது, தீர்வு காண கடினமாக முயற்சிக்கின்றோம். தீர்வு சுலபமாக கிடைக்கவில்லை என்றால், கடினமாக சிந்திக்கும் போக்கு நம்மிடம் உள்ளது. நாம் எதிர்நோக்கும் பிரச்சனையில் நாம் மூழ்கியிருப்பதால், நம் சிந்தனையானது, அதனைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. சிந்தனை அதிகமாக இருக்கும்போது, நாம் தீர்வு காண்பது சாத்தியமல்ல.

செயல்முறை:

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, என்னுடைய சிந்தனையின் தரத்தை உயர்த்திக்கொள்வது முக்கியமானதாகும். அமைதியான எண்ணங்களை உருவாக்குவதன் மூலம், மனதை சாந்தமாக வைத்திருப்பது அவசியம். இதனை தெடர்ந்து, பிரச்சனைகள் என்னை பாதிப்பது நின்றுவிடுகிறது. என்னால், தெளிவாக சிந்திக்க முடிகின்றது. இது தீர்வைக் கொண்டுவருகிறது.