26.04.24
இன்றைய சிந்தனைக்கு
அன்பு
அன்பினால் நிறைந்திருக்கும் ஒருவர், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்.
சிந்திக்க வேண்டிய கருத்து :
நாம் அனைவரிடமும் அன்பு நிறைந்தவராக இருக்கும்போது, எதிர்மறையானவற்றுக்கு இடமில்லை. இந்த சுயநலமற்ற அன்பு என்றால், நாம் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மட்டுமே கொண்டிருந்து, தொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்வோம்.
செயல்முறை:
இன்று, என் தொடர்பில் வரக்கூடிய அனைவரையும் பற்றி சிந்தித்தவாறு, இந்நாளை நான் தொடங்குவேன். அதன் பிறகு, அவர்கள் அனைவர் மீதும் அன்பு கொள்வதைப் பற்றி சிந்திப்பேன். இந்த எண்ணம், நாள் முழுதும் எனக்கு உதவி செய்யும். மற்றவர்களை அவர்கள் உள்ளது போல என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதையும் அவர்கள் மீது நல்லாசிகள் அதிகரிப்பதையும் காண்பேன்.