02.05.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞான வானம்பாடிகளாகி, மற்றவர்களைத் தந்தைக்குச் சமனாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். எத்தனை பேரை உங்களுக்குச் சமனாக ஆக்கியுள்ளீர்கள் என்பதையும், உங்களது நினைவு அட்டவணை எவ்வாறு உள்ளது என்பதையும் சோதித்துப் பாருங்கள்.

பாடல்:
மனிதர்களால் கொடுக்க முடியாத எந்த வாக்குறுதியைக் கடவுள் தனது குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார்?

பதில்:
கடவுள் வாக்குறுதியளிக்கின்றார்: குழந்தைகளே, நான் நிச்சயமாக உங்களை எனது வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தூய்மையாகினால், முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுவீர்கள். அனைவரும் முக்தி அடைய வேண்டும். ஒருவர் விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் நான் அவரது கர்மக் கணக்குகளைப் பலவந்தமாகவேனும் தீர்த்;து, அவரைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். பாபா கூறுகின்றார்: நான் வரும்பொழுது, நீங்கள் அனைவரும் உங்களது ஓய்வு ஸ்திதிக்குச் செல்கின்றீர்கள். நான் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கின்றேன்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு கற்கின்றீர்கள் என்பதில் இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். புகழ்ச்சிக்குரியதாக நினைவுகூரப்படுகின்ற நற்குணங்கள் அனைத்தையும் நீங்கள் கிரகிக்க வேண்டும்: அனைத்து நற்குணங்களாலும் நிரம்பியவர்,கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள்…. உங்களில் இந் நற்குணங்கள் உள்ளனவா என உங்களைச் சோதித்துப் பாருங்கள். இவ்வாறு ஆகுபவர்களின் மீது குழந்தைகளாகிய உங்களது கவனம் ஈர்க்கப்படும். நீங்கள் கற்பதிலும், மற்றவர்களுக்குக் கற்பிப்பதிலுமே இவை அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தைக் கேட்டுப் பாருங்கள்: எத்தனை பேருக்கு நீங்கள் கற்பிக்கின்றீர்கள்? எவருமே இதுவரை சம்பூரணமான தேவர் ஆகவில்லை. சந்திரன் பூரணமாகும்பொழுது, அதிகளவு ஒளியைக் கொடுக்கின்றது. இங்கும் கூட, உங்கள் முயற்சிகளுக்கேற்ப, நீங்கள் வரிசைக்கிரமமாக இருப்பதைக் காண முடிகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள், ஆசிரியரும் புரிந்துகொள்கின்றார். ஒவ்வொருவரும் என்ன செய்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காக, அவரது பார்வை ஒவ்வொருவர் மீதும் செல்கின்றது. இவர் எனக்காக என்ன சேவை செய்கின்றார்? அவர் மலர்களைப் பார்க்கின்றார். அனைவரும் மலர்களே. இது ஒரு பூந்தோட்டமாகும். உங்களது சுய ஸ்திதியையும், சுய சந்தோஷத்தையும் நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே உங்கள் சொந்த மட்டத்தில் அதீந்திரிய சுகத்திற்குரிய வாழ்க்கையை உணர்ந்து கொள்கின்றீர்கள். முதலில், நீங்கள் தந்தையைப் பெருமளவில் நினைவுசெய்ய வேண்டும். அவரை நினைவுசெய்வதன் மூலமாகவே நீங்கள் பிரதிபலனைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகுவதற்குரிய மிக இலகுவான வழி நினைவு யாத்திரையே என்பது குழந்தைகளாகிய உங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது இதயத்தைக் கேட்டுப் பார்க்கலாம்: எனது நினைவு அட்டவணை நன்றாக இருக்கின்றதா? நான் மற்றவர்களை என்னைப் போல் ஆக்குகின்றேனா? நீங்கள் ஞான வானம்பாடிகள். சிலர் கிளிகளாகவும், சிலர் வேறு ஏதோவொன்றாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் ஒரு புறாவாக ஆகக்கூடாது. நீங்கள் ஒரு கிளியாக வேண்டும். உள்ளார்த்தமாக உங்களைக் கேட்டுக் கொள்வது மிக இலகுவானது: எந்தளவிற்கு நான் பாபாவை நினைவுசெய்கின்றேன்? எந்தளவிற்கு நான் அதீந்திரிய சுகத்தில் நிலைத்திருக்கின்றேன்? நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறவேண்டும். மனிதர்கள் மனிதர்கள்தான். அவர்கள் ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, அவர்கள் மனிதர்களே. இப்பொழுது நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, தேவர்கள் ஆகுகின்றீர்கள். உங்களைத் தவிர வேறு எவருமே தேவர்கள் ஆகப் போவதில்லை. நீங்கள் தேவ குலத்தவராக ஆகுவதற்காகவே இங்கு வருகின்றீர்கள். அங்கும் நீங்கள் தேவர் குலத்தவர்களே. அங்கு முரண்பாடு அல்லது பொறாமையின் ஓசை எதுவும் இருக்காது. அத்தகையதொரு தேவ குடும்பத்திற்கு உரியவராகுவதற்கு, நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஓர் ஒழுங்குமுறையில் கற்கவும் வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் கல்வியைத் தவறவிடக்கூடாது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் கூட உங்களது புத்தியில் சிவபாபாவின் நினைவு இருக்க வேண்டும். அதற்காக உங்களது வாயைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சிவபாபாவின் குழந்தை என்பதை அறிவீர்கள். பாபா எங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். இதற்கு மிகச் சிறந்த பயிற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் எங்கிருந்தாலும், தந்தையின் நினைவில் இருங்கள். தந்தை உங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். அது மிக இலகுவானது! மிக நன்றாகக் கிரகிக்க முடியாத பலர் உள்ளனர். சரி, அப்படியாயின் நினைவில் இருங்கள். இங்கு அமர்ந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் குழந்தைகள். அதுவும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. ஆம், நிச்சயமாக நீங்கள் அவ்வறாக வேண்டும். நீங்கள் நிச்சயமாக சிவபாபாவை நினைவுசெய்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் மற்றவர்களிடமிருந்து உங்களைத் துண்டித்து, ஒரேயொருவருடன் மாத்திரம் உங்களை இணைத்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் வேறு எவரையும் நினைவு செய்யவில்லை, எனினும் இறுதிவரைக்கும் நீங்கள் இங்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும். உள்ளே, சிவபாபாவின் நினைவு மாத்திரம் இருக்கட்டும். நீங்கள் சுற்றுலாவிற்கோ அல்லது பக்கக் காட்சிகள் பார்ப்பதற்கோ செல்லும்பொழுது, உங்களின் உள்ளே தந்தையொருவரின் நினைவு மாத்திரம் இருக்கட்டும். உங்களது வாயைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இந்தக் கல்வி மிக இலகுவானது. அவர் உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தன்னைப் போல் ஆக்குகின்றார். குழந்தைகளான நீங்கள் அத்தகையதோர் ஸ்திதியை அடைய வேண்டும். நீங்கள் எவ்வாறு சதோபிரதான் ஸ்திதியிலிருந்து இறங்கி வந்தீர்களோ, அதேவிதமாக மீண்டும் அந்த ஸ்திதிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இது விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவானது. நீங்கள் அனைத்து வீட்டுப் பணிகளையும் செய்யும்பொழுதும்;, நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் உங்களை ஒரு மலராக்க வேண்டும். உங்களுக்குள் எவ்விதக் குழப்பமும் இல்லை என்பதைச் சோதித்துப் பாருங்கள். சுயத்தைச் சோதிப்பதற்கு வைரத்தின் உதாரணம் மிகவும் சிறந்ததாகும். நீங்கள் ஒவ்வொருவருமே உருப்பெருக்கும் கண்ணாடிகள். எனவே, உங்களைச் சோதித்துப் பாருங்கள்: என்னிடம் சற்றேனும் சரீர உணர்வு உள்ளதா? இந்நேரத்தில் நீங்கள் அனைவரும் முயற்சியாளர்கள், அனால் உங்களது இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. நீங்கள் அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். பாபா கூறியுள்ளார்: பத்திரிகைகளில் அச்சிடுவதற்குச் சற்று செலவானாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அனைவரும் இச்செய்தியைப் பெறுவார்கள். அவர்களிடம் கூறுங்கள்: ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்களது பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் தூய்மையாகுவீர்கள். இப்பொழுது எவருமே தூய்மையாக இல்லை. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: தூய ஆத்மாக்கள் புதிய உலகிலேயே உள்ளனர். இப் பழைய உலகம் தூய்மையற்றது. இங்கே தூய்மையான எவருமில்லை. ஓர் ஆத்மா தூய்மையாகும்பொழுது, தனது பழைய சரீரத்தை நீக்கி விடுகின்றார்; அவர் அதனை நீக்கவே வேண்டும். தொடர்ச்சியாக நினைவில் இருப்பதனால் ஆத்மாக்களான நீங்கள் முற்றிலும் தூய்மையாகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவுரும் அமைதி தாமத்திலிருந்து முற்றிலும் தூய ஆத்மாவாக வந்து, ஒரு கருப்பை மாளிகையில் அமர்ந்தீர்கள். பின்னர் நாங்கள் இந்த நீண்ட பாகங்களை நடித்தோம். சக்கரம் இப்பொழுது முடிவடைகின்றது, ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களது வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள். அங்கிருந்து, நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். அங்கே, கருப்பை ஒரு மாளிகையாகும். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கே இன்னமம் முயற்சி செய்ய வேண்டும். இது ஒரு கல்வியாகும். இப்பொழுது, விலைமாதர் இல்லமான, இந்த நரகம் அழிக்கப்பட்டு, சிவாலயம் உருவாக்கப்படுகின்றது. அனைவரும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் இச்சரீரங்களை நீக்கி, புதிய உலகிற்குச் சென்று, இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுவீர்கள் என்பதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் பிரஜைகளாகவே ஆகுவீர்கள் என உங்களில் சிலர் நினைக்கின்றீர்கள். உங்களது புத்தியின் ரேகை மிகத் தெளிவாக இருக்க வேண்டும். வேறு எதுவுமன்றி, தந்தையின் நினைவு மாத்திரம் இருக்கட்டும். இதுவே தூய்மையான ஆண்டியாக இருத்தல் என அறியப்படுகின்றது. உங்களது சரீரம் கூட நினைவுசெய்யப்படக்கூடாது. அச்சரீரங்கள் அழுக்கான, பழைய சரீரங்களாகும். நீங்கள் இங்கு மரணித்து வாழ வேண்டும் என்பது உங்களது புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் எங்களது வீட்டை மறந்து விட்டோம். தந்தை இப்பொழுது எங்களுக்கு நினைவூட்டியுள்ளார்: இந்நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அனைவருமே ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றீர்கள். இந்நேரத்தில், உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் தங்களது ஓய்வு ஸ்திதியிலேயே உள்ளனர். நான் சகல ஆத்மாக்களையும் திரும்பவும் சத்தத்திற்கு அப்பாற் கொண்டு செல்வதற்காக வந்திருக்கின்றேன். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இது இளையவர்கள், முதியவர்களாகிய உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதி ஆகும். ஓய்வு ஸ்;;;;;;;திதி என்றால் என்ன என்பதனை நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் குருமாரை ஏற்று வந்தீர்கள். நீங்கள் அரைக் கல்பமாக லௌகீகக் குருமாரினால் முயற்சி செய்ய வைக்கப்பட்டீர்கள், ஆனாலும் அவர்களிடம் ஞானம் கிடையாது. தந்தையே இப்பொழுது கூறுகின்றார்: இப்பொழுது இது இளையவர்கள், முதியவர்களாகிய உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். அனைவரும் முக்தி பெற வேண்டும். இளையவர்கள், முதியவர்கள் அனைவரும் மரணிப்பார்கள். தந்தை அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இதனையிட்டு மிகவும் சந்தோஷப்பட வேண்டும். இங்கே, நீங்கள் துன்பத்தையே உணர்கின்றீர்கள், இதனாலேயே நீங்கள் உங்களது இனிய வீட்டை நினைவுசெய்கின்றீர்கள். நீங்கள் வீடு செல்ல விரும்புகின்றீர்கள், எனினும் உங்களிடம் அந்த விவேகம் கிடையாது. மக்கள் கூறுகின்றனர்: ஆத்மாக்களாகிய எங்களுக்கு இப்பொழுது அமைதி தேவை. தந்தை கூறுகின்றார்: எந்தளவு காலத்திற்கு உங்களுக்கு அது தேவை? நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு உங்களது பாகத்தை நடித்தாக வேண்டும். எவருமே இங்கு அமைதியாக இருக்க முடியாது. அரைக் கல்பமாக அந்தக் குருமார் போன்றோர் உங்களைப் பெருமளவு முயற்சி செய்ய வைத்தார்கள். முயற்சி செய்து, அலைந்து திரிந்ததன் மூலம் நீங்கள் மேலும் அதிகம் அமைதியற்றவர்களாகி விட்டீர்கள். அமைதி தாமத்தின் அதிபதி இப்பொழுது வந்து விட்டார், அவர் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்றார். மக்கள் நிர்வாணா தாமத்திற்குச் செல்வதற்காகவும், முக்தி அடைவதற்கும் பக்தி செய்கின்றனர். சந்தோஷ தாமத்திற்குச் செல்ல வேண்டும் என்பது எவரது இதயத்திலும் ஒருபொழுதும் புக மாட்டாது. ஏனைய அனைவரும் ஓய்வு ஸ்திதிக்குச் செல்வதற்காக முயற்சி செய்கின்றனர், நீங்களோ சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்காக முயற்சி செய்கின்றீர்கள். முதலில், நிச்சயமாகச் சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதி இருக்க வேண்டும் என்பதனை நீங்கள் அறிவீர்கள். கடவுள் குழந்தைகளாகிய உங்களுக்கு வாக்குறுதியும் அளிக்கின்றார்: நான் நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் எங்கள் வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். இதற்காகவே நீங்கள் அரைக் கல்பமாகப் பக்தி செய்து வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுவீர்கள். எவ்வாறாயினும் அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்லவே வேண்டும். ஒருவர் அங்கு செல்ல விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், நாடகத்திற்கேற்ப அனைவரும் நிச்சயமாக அங்கு செல்ல வேண்டும். நீங்கள் விரும்புகின்றீர்களோ, இல்லையோ நான் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்ல வந்துள்ளேன். நான் பலவந்தமாக உங்களது கர்மக் கணக்குகளைத் தீர்க்கச் செய்து, உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். நீங்கள் சத்திய யுகத்திற்குச் செல்வீர்கள், ஏனைய அனைவரும் சத்தத்திற்கு அப்பாற்பட்ட அமைதி தாமத்தில் இருப்பார்கள். பாபா எவரையுமே தவற விட மாட்;டார். நீங்கள் செல்ல விரும்பாது விட்டாலும், தண்டனையும், அடியும் கிடைக்கும், பின்னர் நான் உங்களை என்னுடன் அழைத்துச் செல்வேன். நாடகத்தில் அந்தப் பாகம் உள்ளது. எனவே, நீங்கள் உங்களது வருமானத்தைச் சம்பாதித்து விட்டுத் திரும்பிச் சென்றால், சிறந்ததோர் அந்தஸ்தையும் பெறுவீர்கள். இறுதியில் வருபவர்கள் எத்தகைய சந்தோஷத்தைப் பெறுவார்கள்? தந்தை அனைவரிடமும் கூறுகின்றார்: நீங்கள் நிச்சயமாகத் திரும்பிச் செல்ல வேண்டும். அனைத்துச் சரீரங்களும் எரிக்கப்படும், நான் சகல ஆத்மாக்களையும் திரும்பவும் அழைத்துச் செல்வேன். ஆத்மாக்களே என்னுடன் திரும்பிச் செல்ல வேண்டும். எனது வழிகாட்டல்களுக்கு ஏற்ப, நீங்கள் சகல தெய்வீகக் குணங்களாலும் நிறைந்து, 16 சுவர்க்கக் கலைகளும் நிரம்பியவர்கள் ஆகினால், சிறந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். உங்கள் அனைவருக்கும் மரணத்தைக் கொடுக்க வருமாறு என்னை நீங்கள் கூவியழைத்தீர்கள். இப்பொழுது இங்கு மரணம் நெருங்கி விட்;டது. எவருமே தவற விடப்பட மாட்டார்கள். அழுக்கான சரீரங்கள் நிலைத்திருக்க முடியாது. உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்லுமாறு நீங்கள் என்னை அழைத்தீர்கள். எனவே, தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, அசுத்தமான இவ்வுலகிலிருந்து நான் உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். உங்களது ஞாபகார்த்தமும் இங்கு உள்ளது: தில்வாலா ஆலயம் உள்ளது. அது உங்கள் இதயங்களை வென்றவரின் ஆலயமாகும். ஆதிதேவர் அங்கு அமர்ந்திருக்கின்றார், சிவபாபாவும் அங்கு இருக்கின்றார். பாப், தாதா இருவருமே அங்கு இருக்கின்றார்கள். பாபா இவரது சரீரத்தில் பிரசன்னமாகி இருக்கின்றார். நீங்கள் அங்கு செல்லும்பொழுது, ஆதிதேவரைப் பார்க்கின்றீர்கள். இங்கு அமர்ந்திருப்பது பாப்தாதா என்பதனை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இந்நேரத்தில் நீங்கள் நடிக்கின்ற பாகங்களின் ஞாபகார்த்தங்களும் இங்கேயே உள்ளன. யானைப் படையினரும், குதிரைப் படையினரும், காலாற் படையினரும் உள்ளனர். அது உயிரற்றது, இதுவோ உயிருள்ளது. மேலே வைகுந்தமும் உள்ளது. நீங்கள் அந்த மாதிரிகளைப் பார்த்த பின்பே இங்கு வருகின்றீர்கள். தில்வாலா ஆலயம் எத்தகையது என்பதனை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் அவ்வாலயம் ஒரேமாதிரியாகவே கட்டப்படுகின்றது, எனவே, நீங்கள் சென்று, அதனைப் பார்வையிட முடியும். இந்த மலைகள் போன்ற அனைத்தும் எவ்வாறு தகர்க்கப்பட்டு, பின்னர் மீண்டும் அதேபோன்று ஆகுகின்றன என்பதையிட்டுச் சிலர் குழப்பமடைகின்றனர். எவ்வாறு? நீங்கள் அத்தகைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது. சுவர்க்கம் கூட இப்பொழுது இல்லை, எனவே எவ்வாறு அது மீண்டும் வரும்? நீங்கள் முயற்சி செய்வதன் மூலமே அனைத்தும் உருவாக்கப்பட முடியும். இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். சிலர் குழப்பமடைந்து, கற்பதைக் கூட நிறுத்தி விடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இதில் குழப்பமடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு, நாங்களே எங்களுக்குரியவை அனைத்தையும் செய்வோம். அது சதோபிரதான் உலகமாக இருக்கும். நீங்கள் அவ்வுலகில் பழங்கள், மலர்கள் போன்றவற்றைப் பார்த்ததுடன், மாம்பழச் சாற்றையும் பருகி விட்டுத் திரும்பி வருகின்றீர்கள். அவை எதுவுமே சூட்சும உலகிலோ அல்லது அசரீரி உலகிலோ இருப்பதில்லை, அவை அனைத்தும் வைகுந்தத்திலேயே இருக்கின்றன. உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் தொடரும். இந்த உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். எவ்வாறாயினும், அது ஒருவரது பாக்கியத்தில் இல்லாது விட்டால், அவர் கூறுவார்: எவ்வாறு அவை அனைத்தும் சாத்தியம்? தற்பொழுது மிக அரிதாகவே காணப்படுகின்ற வைரங்களும், இரத்தினங்களும் எவ்வாறு அங்கே இருக்க முடியும்? எவ்வாறு நாங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவோம்? தந்தை கூறுகின்றார்: பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாகவும், பூஜிப்பவர்களாகவும் இருக்கின்ற இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. பிராமணர்களாகிய நாங்கள் பின்னர் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும் ஆகுவோம். இந்த உலகச் சக்கரத்தை அறிந்து கொள்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்யும் அரசர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள், இதனாலேயே நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் முன்னைய கல்பத்திலும் உங்களைச் சந்தித்தோம். எங்களது ஞாபகார்த்தமாக உள்ள ஆலயம் எங்களுக்கு முன்னால் உள்ளது. இதன் பின்னரே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படும். நீங்கள் வைத்திருக்கின்ற படங்கள் ஓர் அற்புதமாகும். மக்கள் வந்து, அதிகளவு ஆர்வத்துடன் அவற்றைப் பார்க்கின்றார்கள். முழு உலகிலும், எவருமே அத்தகைய படங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள்; அவர்களில் எவராலுமே அத்தகைய படங்களை உருவாக்கவோ, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கவோ முடியாது. எவராலும் உங்களைப் பிரதி செய்ய முடியாது. பொக்கிஷங்களாகிய இப்படங்கள் மூலமாக நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். உங்கள் ஒவ்வோர் அடியிலும் நீங்கள் பல மில்லியன்களைப் பெறுவதைப் புரிந்துகொள்கின்றீர்கள். அவை உங்களது கல்விக்கான படிகள் ஆகும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் யோகத்தைக் கொண்டிருந்து, கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகப் பல மில்லியன்களை நீங்கள் பெறுவீர்கள். மாயையும் உங்களிடம் முழு வலிமையுடன் வருவாள். இந்நேரத்திலேயே நீங்கள் சியாம்-சுந்தர் (அவலட்சணமானவரும், அழகானவரும்) ஆகுகின்றீர்கள். நீங்கள் சத்திய யுகத்தில் அழகானவர்களாகவும், சத்திய யுகத்தவர்களாகவும் இருந்தீர்கள், கலியுகத்தில் நீங்கள் அவலட்சணமானவர்களாகவும், கலியுகத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள். அனைத்திற்கும்; இதே நிலைமைதான். இங்கு பூமி கூட வரண்டதாக உள்ளது. அங்கு பூமி முதற்தரமானதாக இருக்கின்றது; அனைத்தும் அங்கு சதோபிரதானமானவை. நீங்கள் அத்தகையதோர் இராச்சியத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அவ்வாறு பல தடவைகள் ஆகியிருக்கின்றீர்கள். இருந்தபொழுதிலும், அத்தகைய இராச்சியத்தின் அதிபதிகளாகுவதற்கு நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்யாமல், எவ்வாறு ஒரு வெகுமதியைப் பெறுவீர்கள்? இதில் எவ்விதச் சிரமமும் கிடையாது. முரளிகள் இப்பொழுது அச்சிடப்படுகின்றன, எனினும், நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, அவை பல நூறாயிரக் கணக்கான அளவில் அச்சிடப்படும். குழந்தைகள் கூறுகின்றனர்: நான் என்னிடமுள்ள பணம் அனைத்தையும் யக்யாவிற்கே பயன்படுத்த விரும்புகின்றேன். அவற்றை வைத்திருந்து நான் என்னதான் செய்வேன்? நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது என்ன நிகழ்கின்றது எனப் பாருங்கள்! நீங்கள் விநாசத்திற்கான முன்னாயத்தங்களையும் காண்பீர்கள். ஒத்திகைகள் தொடர்ந்தும் இடம்பெறும். பின்னர் அமைதி நிலவும். குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. இது மிக இலகுவானது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அச் சரீரத்தையும் மறந்து, முற்றிலும் தூய்மையான ஆண்டி (பிச்சைக்காரர்) ஆகுங்கள். உங்கள் புத்தியின் ரேகையைத் தெளிவாக வைத்திருங்கள். நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது, நீங்கள் உங்களது இனிய வீட்டிற்குச் செல்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கட்டும்.

2. கல்வியில் ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு நாளும் மிக நன்றாகக் கற்றிடுங்கள். தேவ குலத்தவராகுவதற்கு முயற்சி செய்யுங்கள். எந்தளவிற்கு உங்களால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடிகின்றது என உங்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். அந்தச் சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்களா?

ஆசீர்வாதம்:
நீங்கள் புத்தியின் சகவாசத்திலும், கரத்தின் ஒத்துழைப்பின் மூலமும் மகிழ்ச்சியை அனுபவம் செய்கின்ற, ஒரு பாக்கியசாலி ஆத்மாவாக இருப்பீPர்களாக.

ஒத்துழைப்பின் அறிகுறி கரத்துடன் கரம் கோர்ப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தந்தையுடன் சதா ஒத்துழைப்பாக இருப்பது எனில். அவருடைய கரத்தில் உங்கள் கரத்தை வைப்பதாகும். உங்கள் புத்தி மூலம் சதா அவருடைய சகவாசத்தில் இருப்பது எனில், உங்கள் இதயத்தில் ஒரெயொருவருக்கான அன்பைக் கொண்டிருத்தல் என்று அர்த்தமாகும். நீங்கள் கடவுளின் பூந்தோட்டத்தில் அவருடன் கரம் கோர்த்தவாறே உலாவி வருகின்றீர்கள் என்ற விழிப்புணர்வைச் சதா கொண்டிருங்கள். அவ்வாறு செய்வதால், நீங்கள் சதா களிப்பூட்டப்பட்டும், சதா சந்தோஷமானவர்களாகவும், நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள். அத்தகைய பாக்கியசாலி ஆத்மாக்கள் சதா தொடர்ந்தும் மகிழ்ச்சியை அனுபவம் செய்கின்றார்கள்.

சுலோகம்:
உங்களுடைய ஆசீர்வாதக் கணக்கில் சேகரிப்பதற்கான வழியானது திருப்தியாக இருந்து, பிறரையும் திருப்பதியானவர்களாக ஆக்குவதாகும்.