03.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் நினைவில் எப்பொழுதும் நிலைத்திருந்து முகமலர்ச்சியுடன் இருங்கள். பழைய சரீரத்தின் விழிப்புணர்வைத் தொடர்ந்தும் துறந்திடுங்கள் ஏனெனில் யோக சக்தியால் நீங்கள் சூழலைத் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்ய வேண்டும்.

பாடல்:
ஒரு புலமைப்பரிசிலைக் கோருவதற்கும் இராச்சியத் திலகத்தைப் பெறுவதற்கும் எம்முயற்சி தேவையாகும்?

பதில்:
நினைவுயாத்திரையில் நிலைத்திருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யும்பொழுதே, இராச்சியத்திற்கானத் திலகத்தை நீங்கள் பெறுவீர்கள். உங்களை ஒருவருக்கொருவர் சகோதரர்களாகக் கருதுவதைப் பயிற்சி செய்யும் போது, பெயரினதும் வடிவத்தினதும் விழிப்புணர்வு அகற்றப்படும். ஒருபொழுதும் வீணான விடயங்களைச் செவிமடுக்க வேண்டாம். தந்தை கூறுகின்ற விடயங்களை மாத்திரம் செவிமடுங்கள். ஏனைய அனைத்து விடயங்களையிட்டும் உங்கள் செவிகளை மூடிக்கொள்ளுங்கள். முழுக் கவனத்தையும் கல்வியில் செலுத்துங்கள், ஏனெனில் அப்பொழுதே உங்களால் ஒரு புலமைப்பரிசிலைப் வெல்ல முடியும்.

ஓம் சாந்தி.
ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய இராச்சியத்தை நீங்கள் ஸ்தாபிக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் சேவை செய்யுமளவுக்கேற்பவே நீங்கள் உங்களுக்கு நன்மை செய்கிறீர்கள். இதில் குழப்பம் போன்றவற்றிற்கான கேள்வில்லை. நீங்கள் இப்பழைய உலகின் உணர்வைத் துறந்து அங்கு சென்றடைகின்றீர்கள். பாபாவை நினைவுசெய்வதால் நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் நினைவில் நிலைத்திருந்தால், சந்தோஷத்தைத் தவிர எதுவும் இருக்காது. தந்தையை மறப்பதால், நீங்கள் வாடுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் ஓர் ஆத்மா, ஆத்மாவாகிய எனது தந்தை, இவ்வாயினூடாகப் பேசுகின்றார். ஆத்மாவாகிய நான் இச்செவிகளினூடாகச் செவிமடுத்துக் கொண்டிருக்கின்றேன். அத்தகைய பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்யும் போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். இந்நினைவு யாத்திரை உங்களுக்கு அதிகளவு சக்தியைக் கொடுக்கின்றது. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுமளவிற்கு, அதிகளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்களுடைய பாவங்கள் அழிந்துவிடும். நீங்கள் இதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இறுதியில், மனத்தை ஒழுக்கமடையச் செய்கின்ற இந்த மந்திரம் பயனளிக்கும். நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய செய்தி: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்; இச்சரீரம் அழியக்கூடியதாகும். தந்தையின் கட்டளை: என்னை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்துள்ளீர்கள். அத்துடன், உங்களுக்கு ஞானமும் உள்ளது. ஏனெனில்; நீங்கள் படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்திருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சுயதரிதனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள். இங்கு அமர்ந்திருக்கும் பொழுது, நீங்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். இரவுபகலாக, நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள். இங்கு, நீங்கள் ஓர் உண்மையான வருமானத்தை ஈட்ட வருகின்றீர்கள். உங்களுடனேயே வரக்கூடிய ஒரு வருமானத்தை, வேறெங்கேயும் உங்களால் ஈட்ட முடியாது. இங்கு மதுவனத்தில் வியாபாரம் போன்ற வேறு எதுவும் உங்களுக்கு இல்லை. சூழல் மிகவும் சிறந்ததாகும். நீங்கள் யோகசக்தியால் சூழலையும் தூய்மையாக்குகின்றீர்கள். நீங்கள் அதிகளவு சேவையைச் செய்து கொண்டிருக்கின்றீர்கள். தத்தமக்குச் சேவை செய்பவர்களே பாரதத்திற்கும் சேவை செய்கின்றார்கள். பின்னர், இ;ப்பழைய உலகமும் எஞ்சியிருக்க மாட்டாது. நீங்களும் இங்கிருக்க மாட்டீர்கள். உலகம் தானாகவே புதியதாகும். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் ஞானம் முழுவதும் உள்ளது. நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த சேவையையே தொடர்ந்து நீங்கள் செய்வீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் ஏனைய பலரையும் உங்களுக்குச் சமமாக ஆக்குகின்;றீர்கள். இந்த ஞானத்தை நீங்கள் செவிமடுக்கும்பொழுது, புல்லரிப்பு ஏற்படும் அளவிற்கு நீங்கள் மிகவும் சந்தோஷமடைகின்றீர்கள்;. இந்த ஞானத்தை தாம் வேறு எவரிடமிருந்தும் முன்னர் ஒருபொழுதும் கேட்டதில்லை என்று மக்;கள் கூறுகின்றார்கள். அவர்கள் பிராமணர்களாகிய உங்களிடமிருந்து மாத்திரம் அதைக் கேட்கின்றார்கள். பக்திமார்க்கத்தில், முயற்சி தேவையில்லை, இங்கோ நீங்கள் பழைய உலகம் முழுவதையும் மறக்க வேண்டும். தந்தை மாத்திரமே உங்களை இந்த எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருப்பதற்குத் தூண்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகவே சந்தோஷமாக இருக்கின்றீர்கள்; அனைவரும் ஒரேயளவு சந்தோஷத்துடன் இருப்பதில்லை. ஞானமும் யோகமும் கூட ஓரே மாதிரியாக இருப்பதில்லை. ஏனைய மனிதர்கள் அனைவரும் சரீரதாரிகளிடம் செல்கின்றார்கள், ஆனால் இங்கு, தனக்கென ஒரு சரீரம் அற்ற ஒருவரிடமே நீங்கள் வருகின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் நினைவுசெய்வதற்காக அதிகளவு முயற்சி செய்யும் போது, நீங்கள் தொடர்ந்தும் அதிகளவு சதோபிரதான் ஆகுவீர்கள், உங்கள் சந்தோஷமும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. இது பரமாத்மாவிற்கான ஆத்மாக்களின் தூய அன்பு ஆகும். அவர் அசரீரியானவர் ஆவார். எந்தளவிற்கு உங்களிடமிருந்து அதிகளவு துரு அகற்றப்படுகின்றதோ, அந்தளவிற்கு கவர்ச்சி அதிகளவு அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் கொண்டிருக்கும் சுவர்க்கக் கலைகளைக் கொண்டு சோதிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது ஹத்தயோகம் அல்ல. நீங்கள் சௌகரியமாக அமர்ந்து தொடர்ந்து பாபாவை நினைவுசெய்ய முடியும். நீங்கள் படுத்திருந்தவாறும் அவரை நினைவுசெய்ய முடியும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், நீங்கள் சதோபிரதான் ஆகுவதுடன் உங்களுடைய பாவங்களும் அழிக்கப்படும். உங்கள் ஆசிரியரும், சற்குருவுமான எல்லையற்ற தந்தையை நீங்கள் அதிகளவு அன்புடன் நினைவுசெய்ய வேண்டும், இதற்கே மாயை தடைகளை ஏற்படுத்துகின்றாள். முகமலர்ச்சியாக இருந்தவாறே, பாபாவின் நினைவுடன் நீங்கள் உணவு உண்ணுகின்றீர்களா என்;பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். காதலர்கள் அன்பிற்கினியவரைக் கண்டுவிட்டதால், நிச்சயமாக அவர்கள் சந்தோஷமாகவே இருப்பார்கள். நினைவில் நிலைத்திருப்பதால், நீங்கள் தொடர்ந்தும் அதிகளவு சேமிக்கின்றீர்கள். இலக்கு மிகவும் உயர்ந்ததாகும். எவ்வாறாக இருந்த நீங்கள் எவ்வாறு ஆகுகின்றீர்கள் என்று பாருங்கள்! முன்னர், நீங்கள் விவேகமற்றவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மிகவும் விவேகிகளாக ஆகிவிட்டீர்கள். உங்களுடைய இலக்கும் இலட்சியமும் மிகவும் முதற்தரமானதாகும். நீங்கள் பாபாவை நினைவுசெய்யும் போது, அப்பழைய தோலை நீக்கிப் புதியதொன்றை எடுப்பீர்கள். நீங்கள் உங்களுடைய கர்மாதீத் நிலையை அடையும்பொழுது, நீங்கள் அத்தோலை நீக்குவீர்கள். நீங்கள் உங்களுடைய வீட்டை அண்மித்துள்ளதால், நீங்கள் அவ்வீட்டை நினைவுசெய்கின்றீர்கள். பாபாவின் ஞானம் மிகவும் இனிமையானதாகும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையை உணர வேண்டும். கடவுள் இந்த இரதத்தில் அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்! இது இப்பொழுது உங்கள் ஏற்றத்திற்கான ஸ்திதியாகும். ஏற்றத்திற்கான ஸ்திதியின் போது, அனைவருக்கும் நன்மை உள்ளது. நீங்கள் புதிதாக எதனையும் செவிமடுக்கவில்லை. இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் முன்னர் பல தடவைகள் செவிமடுத்திருக்கின்றீர்கள் என்பதுடன் நீங்கள் அதே விடயங்களையே மீண்டும் ஒருமுறை செவிமடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்விடயங்களைச் செவிமடுக்கும் பொழுது, உங்களுக்குள் சந்தோஷம் பொங்கி எழுகின்றது. நீங்களே மிகவும் பிரபல்யமான அறியப்படாத போர் வீரர்கள் ஆவீர்கள். நீங்கள் முழு உலகத்தையும் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள், இதனாலேயே தெய்வங்கள் அதிகளவு வழிபாடு செய்யப்படுகின்றார்கள். செய்பவர்களும், உங்களைச் செய்யத் தூண்டுபவர் அனைவருமே வழிபாடு செய்யப்படுகின்றார்கள். தேவதர்மத்தின் நாற்று ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவ்வழக்கம் இப்பொழுதே ஆரம்பமாகியுள்ளது. நீங்கள் திலகம் ஒன்றை உங்களுக்கு இடுகின்றீர்கள். நன்கு கற்பவர்கள் தங்களைத் தாங்களே ஒரு புலமைப்பரிசிலைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார்கள். நினைவுயாத்திரையில் நிலைத்திருப்பதற்குக் குழந்தைகள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். உங்களைச் சகோதரர்களாகக் கருதும் போது, பெயரினதும் வடிவத்தினதும் விழிப்புணர்வு அகற்றப்படும். இதற்கே முயற்சி தேவையாகும். நீங்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். ஒருபொழுதும் வீணான விடயங்களைச் செவிமடுக்க வேண்டாம். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களை மாத்திரம்; செவிமடுங்கள். வம்பளத்தலைச் செவிமடுக்க வேண்டாம். அவற்றிற்கு உங்களுடைய காதுகளை மூடுங்கள். தொடர்ந்தும் அனைவருக்கும் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்குமான பாதையைக் காட்டுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு பாதையை அனைவருக்கும் காட்டுகின்றீர்களோ அந்தளவிற்கு, உங்களுக்கு அதிகளவு நன்மை செய்கின்றீர்கள். நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். தந்தை அனைவரையும் அலங்கரித்து அவர்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். தந்தை எப்பொழுதும் குழந்தைகளின் உதவியாளராகவே உள்ளார். தந்தை தனது உதவியாளர்களாக ஆகுபவர்களைப் பெருமளவு அன்புடன் பார்க்கின்றார். ஏனைய பலருக்கும் பாதையைக் காட்டுபவர்களை பாபா அதிகளவு நினைவுசெய்கின்றார், அவர்களும் தந்தையின் நினைவின் ஈர்ப்பை உணர்கின்றார்கள். நினைவினூடாக உங்களுடைய துரு தொடர்ந்தும் அகற்றப்படும். தந்தையை நினைவுசெய்வது என்றால் வீட்டை நினைவுசெய்வது என்று அர்த்தமாகும். “பாபா, பாபா!” என்று எப்பொழுதும் தொடர்ந்து கூறுங்கள். இது பிராமணர்களின் ஆன்மீக யாத்திரை ஆகும். நீங்கள் பரமாத்மாவை நினைவுசெய்வதால், உங்களுடைய வீட்டை அடைவீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக ஆகுவதற்கு அதிகளவு முயற்சி செய்யும் போது, உங்களுடைய பௌதீகப் புலன்கள் அதிகளவு கட்டுப்படுத்தப்படும். பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கு நினைவுசெய்தல் என்ற ஒரேயொரு வழிமுறை மாத்திரமே உள்ளது. நீங்களே பிராமண குலத்தின் அலங்காரங்களாகிய, சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றும் ஆன்மீக சுழற்சியாளர்கள். இதுவே உங்களுடைய மேலோன அதிமேன்மையான குலம் ஆகும். தந்தை உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பதால், பிராமண குலமே தேவர்களின் குலத்தை விடவும் மேன்மையான குலம் ஆகும், உலக இராச்சியம் என்ற உங்கள் ஆஸ்தியை பாபாவிடமிருந்து நீங்கள் பெறுவதற்காகவே நீங்கள் தந்தைக்கு உரியவர்களாகியுள்ளீர்கள். நீங்கள் “பாபா” என்று கூறும்பொழுது ஆஸ்தியின் நறுமணத்தைப் பெறுகின்ற்Pர்கள். சிவன் எப்பொழுதும் “பாபா” என்று அழைக்கப்படுகின்றார். சிவபாபாவே ஜீவன்முக்தியை அருள்பவர் ஆவார். வேறு எவராலும் ஜீவன்முக்தியை அருள முடியாது. ஒரேயொரு அசரீரியானவர் மாத்திரம் உண்மையான சற்குரு ஆவார், அவர் உங்களுக்கு அரைக் கல்பத்திற்கான இராச்சியத்தைக் கொடுத்த பின்னர் செல்கின்றார். நினைவுசெய்தலே பிரதான விடயமாகும். இறுதியில், உங்களுடைய சரீரம், செல்வம் அல்லது சொத்தைப் பற்றிய எவ்விழிப்புணர்வையும் நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. இல்லாவிட்டால், நீங்கள் மறுபிறவி எடுக்க நேரிடும். பக்திமார்க்கத்தில், அவர்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிக்கின்றார்கள். நீங்களும் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள், அதாவது, நீங்கள் இப்பொழுது தந்தைக்குரியவர்கள் ஆகியுள்ளீர்கள். பக்திமார்க்கத்தில், தங்களைக்; காசியில் அர்ப்பணிப்பதால், தமது பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், எவராலும் வீடு திரும்ப முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் மேலிருந்து கீழே வந்த பின்னரே, விநாசம் இடம்பெறும். தந்தை வீடு திரும்பிச் செல்வதுடன் நீங்களும் அவருடன் செல்வீர்கள். பாண்டவர்கள் மலைகளின் மீது உருகினார்கள் என்று மக்கள் கூறுகின்றார்கள். அது தற்கொலை செய்வதைப் போன்றிருக்கும். தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நான் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன். எச் சரீரதாரியாலும் உங்களுக்கு சற்கதியை அருள முடியாது. பக்திமார்க்கத்தில், நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்கினீர்கள். இப்பொழுது, இறுதியில், தந்தை வந்து உங்களை பலவந்தமாக மேலே அழைத்துச் செல்கின்றார். இதுவே “எல்லையற்ற சந்தோஷத்தை திடீரென வெல்லும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு” என்று அழைக்கப்படுகின்றது. அங்கு, அவர்கள் குதிரைப் பந்தயங்களை நடத்துகின்றார்கள், இங்கோ, இது ஆத்மாக்களின் ஓட்டப் பந்தயம் ஆகும். எவ்வாறாயினும், மாயையினாலேயே நீங்கள் விபத்துக்களுக்கு உள்ளாகுகின்றீர்கள் அல்லது தந்தையை நீங்கள் விவாகரத்துச் செய்கின்றீர்கள். மாயை உங்களுடைய புத்தியின் யோகத்தைத் துண்டிக்கின்றாள். ஒருவர் காமத்தால் தோற்கடிக்கப்படும்பொழுது, அவர் சம்பாதித்துள்ள வருமானம் அனைத்தும் இழக்கப்படுகின்றன. காமமே மிகப்பெரிய தீய ஆவி என்பதால், அதனை வெல்வதால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் உலகை வென்றவர்கள் ஆகினார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த இறுதிப் பிறவியில் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். அப்பொழுதே நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள். இல்லாதுவிடின், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். இதுவே மரணபூமியின் இறுதிப்பிறவி ஆகும். தந்தை மாத்திரமே உங்களுக்கு அமரத்துவப் பூமியின் 21 பிறவிகளினதும், மரணபூமியின் 63 பிறவிகளினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது உங்களுடைய இதயத்திடம் வினவ வேண்டும்: நான் இலக்ஷ்மி நாராயணனைப் போன்று ஆகுவதற்குத் தகுதியானவனா? நீங்கள் எந்தளவிற்குத் தாரணையைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு சந்தோஷமாக இருப்பீர்கள். எவ்வாறாயினும், அது உங்களுடைய பாக்கியத்தில் இல்லாதுவிடின், மாயை இதனை நிலைத்திருக்க அனுமதிக்க மாட்டாள். நாளுக்கு நாள், மதுவனத்தின் தாக்கம் தொடர்ந்தும் அதிகளவு அதிகரிக்கும். பிரதான பற்றரி இங்கேயே உள்ளது. தந்தை சேவை செய்யும் குழந்தைகளைப் அதிகளவு நேசிக்கின்றார். தந்தை சிறந்த, சேவைசெய்யும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு சேர்ச்லைட்டைக் கொடுக்கின்றார். அவர்களும் நிச்சயமாக பாபாவை நினைவுசெய்கின்றார்கள். பாபா, தாதா ஆகிய இருவரும் சேவை செய்யும் குழந்தைகளை நினைவுசெய்து அவர்களுக்கு ஒரு சேர்ச்லைட்டைக் கொடுக்கின்றார்கள். அவர் கூறுகின்றார்: நீங்கள் அன்பைக் கொடுக்கும்பொழுது, நீங்கள் அன்பைப் பெறுவீர்கள்…பாபாவை நினைவுசெய்யுங்கள், நீங்கள் நினைவிற்கான பிரதிபலனைப் பெறுவீர்கள். முழு உலகமும் ஒரு புறத்தில் உள்ளது, உண்மையான பிராமணர்களாகிய நீங்கள் மறுபுறத்தில் உள்ளீர்கள். நீங்களே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற, அதிமேலான தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். உங்களுடைய இத்தெய்வீகப் பிறவி ஒரு வைரத்தைப் போன்றதாகும். அவரே எங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாற்றுகின்றார். அரைக்கல்பத்திற்கு அவரை நினைவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லாத வகையில், அவர் உங்களுக்குப் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். பாபா கூறுகின்றார்: நான் உங்களுக்கு மிக மிக அதிகளவு செல்வத்தைக் கொடுத்தேன், ஆனால் அவற்றை நீங்கள் முற்றாக இழந்து விட்டீர்கள். நீங்கள் எனது ஆலயத்திற்காக அதிகளவு வைரங்களையும் இரத்தினங்களையும் பயன்படுத்தினீர்கள். இப்பொழுது வைரங்களின் பெறுமதி என்னவென்று பாருங்கள்! முன்னர், வைரம் வாங்கும்பொழுது, ஊக்கப்படுத்துவதற்காக சிறிதாக எதனையாவது பெறுவீர்கள், இப்பொழுதோ காய்கறிகள் வாங்கினாலுமே அவ்வாறு எதுவும் பெற முடியாது. நீங்கள் எவ்வாறு உங்களுடைய இராச்சியத்தைக் கோரினீர்கள் என்பதும் பின்னர் எவ்வாறு நீங்கள் அதை இழந்தீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அதைக் கோரிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஞானம் மிகவும் அற்புதமானதாகும். இது அரிதாக சிலரது புத்தியிலேயே நிலைத்துள்ளது. நீங்கள் ஓர் இராச்சியத்தைக் கோர விரும்பினால், நீங்கள் ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்ற வேண்டும். உங்களுடைய சொந்தக் கட்டளைகளினால் எப்பயனும் இல்லை. உயிர் வாழும்பொழுதே ஓய்வுபெறும் ஸ்திதிக்குள்; செல்வதற்கு, நீங்கள் அனைத்தையும் அவரிடம் (கடவுளிடம்) கொடுக்க வேண்டும். நீங்கள் அவரை உங்களுடைய வாரிசாக ஆக்க வேண்டும். பக்திமார்க்கத்திலும் தானமளிப்பதால், மக்கள் அவரைத் தங்களுடைய வாரிசு ஆக்குகின்றார்கள், ஆனால் அது தற்காலிகமாகும். இங்கு, நீங்கள் அவரைப் பிறவிபிறவியாக, உங்களுடைய வாரிசு ஆக்க வேண்டும். நினைவுகூரப்பட்டுள்ளது: தந்தையைப் பின்பற்றுங்கள். அவரைப் பின்பற்றுபவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றார்கள். எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள் ஆகுவதால், நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவீர்கள். சிவபாபா அருள்பவரும் இது அவருடைய பொக்கிஷக் களஞ்சியமும் ஆகும். கடவுளின் பெயரில் தானம்செய்பவர்கள் தங்களுடைய மறுபிறவியில் தற்காலிகச் சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள். அது நேரடியானது அல்ல, இதுவோ நேரடியானதாகும். சிவபாபா உங்களுக்கு 21 பிறவிகளுக்குக் கொடுக்கின்றார். சிவபாபாவுக்குக்குத் தாம் கொடுப்பதாகச் சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் அது அவரை அவமதிப்பது போன்றதாகும். நீங்கள் பெறுவதற்காகவே அவருக்குக் கொடுக்கின்றீர்கள். இது பாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் ஆகும். உங்களுடைய வேதனையும் துன்பமும் அகற்றப்படுகின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அமரத்துவப் பூமிக்காகவே கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். இது முட்காடாகும், பாபா உங்களைப் பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். தந்தை உங்களைப் பேரன்;புடன் அழகான மவர்கள் ஆக்குகின்றார். பாபா உங்களுக்குப் பேரன்புடன் விளங்கப்படுத்துகின்றார்: உங்களுக்கு நன்மை செய்ய நீங்கள் விரும்பினால், தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதுடன் எவருடைய குறைபாடுகளையும் பார்க்காதிருங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எல்லையற்ற தந்தையிடமிருந்து ஒரு சேர்ச்லைட்டைப் பெறுவதற்காக அவருடைய உதவியாளர்கள் ஆகுங்கள். பிரதான பற்றரியுடன் உங்கள் தொடர்பை இணைத்துக் கொள்ளுங்கள். எச்சூழலிலும் உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்.

2. ஓர் உண்மையான வருமானத்தை ஈட்டி, தந்தையின் உண்மையான சேவையைச் செய்வதற்கு ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள், ஏனெனில் நினைவுசெய்வதனால் சூழல் தூய்மையாக்கப்படுகின்றது, ஆத்மா சதோபிரதான் ஆகுகின்றார், நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தையும் அனுபவம் செய்கின்றீர்கள், அத்துடன் உங்களுடைய பௌதீகப் புலன்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஆசீர்வாதம்:
சுய மாற்றத்தினூடாக உலகமாற்றத்தின் பணியில், உங்கள் இதயம் விரும்புகின்ற வெற்றியை அடைவதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

உங்கள் சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றம் என்ற சேவையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஈடுபட்டுள்ளீர்கள். நாங்கள் நிச்சயமாக இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற இந்த ஆர்வமும் உற்சாகமும் உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. அத்துடன் மாற்றம் நிச்சயமாக நிகழும் என்ற நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். தைரியம் இருக்கும் இடத்தில் ஆர்வமும் உற்சாகமும் இருக்கும். சுயமாற்றத்;தின் ஊடாக மாத்திரமே உங்கள் இதயம் விரும்புகின்ற உலக மாற்றத்திற்கான பணியில் வெற்றி கிட்டும். எவ்வாறாயினும், உங்கள் மனோபாவம், அதிர்வலைகள், வார்த்தைகள், - மூன்றுமே ஒரே நேரத்தில் சக்திவாய்ந்ததாக இருந்தால் மாத்திரமே இந்த வெற்றியை நீங்கள் அடைய முடியும்.

சுலோகம்:
உங்கள் வார்த்தையில் அன்பும்; ஒழுக்கமும் இருந்தால் மாத்திரமே, உங்கள் வார்த்தைகளில் சக்தியை சேமிப்பீர்கள்.