04.05.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை கூறுகின்ற அனைத்தும், உங்கள் இதயத்தில் பதிய வேண்டும். சூரிய வம்ச குலத்தில் உயர்ந்த அந்தஸ்தொன்றைப் பெறுவதற்காக இங்கே நீங்கள் வந்திருப்பதனால், நீங்கள் ஞானத்தையும் கிரகிக்க வேண்டும்.

பாடல்:
சதா புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு என்ன வழி?

பதில்:
வெப்பத்தில் மின்விசிறிகள் உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டுவது போல், நீங்களும் சதா தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும், அப்பொழுது நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். சுயதரிசனச் சக்கரதாரியாகுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று குழந்தைகள் கேட்கிறார்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, அதற்கு ஒரு விநாடியே எடுக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகச் சுயதரிசனச் சக்கரதாரிகளாக வேண்டும், ஏனெனில், இதன் மூலமே நீங்கள் பூகோளத்தை ஆள்பவர்கள் ஆகுவீர்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களே சூரிய வம்சத்தில் ஒருவர் ஆகுகிறார்கள்.

ஓம் சாந்தி.
மின்விசிறிகள் சுழன்ற வண்ணம் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டுகின்றன. நீங்களும் இங்கிருக்கும் பொழுது, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவீர்களாயின், மிகவும் புத்துணர்ச்சியூட்டப்பட்டவர்கள் ஆகுகிறீர்கள். சுயதரிசனச் சக்கரதாரியாக இருப்பது பற்றி ஒருவருக்குத் தெரியாதென்றால், அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையென்றால் பூகோள ஆட்சியாளர்கள் ஆகப் போவதில்லை. சுயதரிசனச் சக்கரதாரியாக இருக்கின்ற ஒருவருக்கு, தான் பூகோள ஆட்சியாளர் ஆகுவதற்காகவே, சுயதரிசனச் சக்கரதாரியாகி உள்ளோம் என்ற நம்பிக்கை இருக்கும். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைச் சக்கரத்துடன் காட்டுவதுடன், இலக்ஷ்மி, நாராயணின் இணைந்த வடிவத்திற்கும் இந்த அடையாளத்தைக் கொடுத்துள்ளார்கள். அவருடன் மாத்திரமே இந்த அடையாளத்தைக் காட்டுகிறார்கள். சுயதரிசனச் சக்கரத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அப்பொழுதே நீங்கள் பூகோளத்தை ஆள்பவர்கள் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவான ஒன்றாகும். ‘பாபா, சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்;?’ என்று குழந்தைகள் கேட்கிறார்கள். குழந்தைகளே, அதற்கு ஒரு விநாடியே போதுமானது. பின்னர் நீங்கள் விஷ்ணு வம்சத்தவர்களாகி விடுகிறீர்கள். தேவர்கள் விஷ்ணு வம்சத்துக்கு உரியவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். விஷ்ணு வம்சத்தவர்கள் ஆகுவதற்கு, முதலில், நீங்கள் சிவனின் வம்சத்தவர்களாக வேண்டும். பின்னர் பாபா இங்கிருந்து உங்களைச் சூரிய வம்சத்தில் ஒருவர் ஆக்குகிறார். வார்த்தைகள் மிகவும் இலகுவானவையாகும். புதிய உலகத்தில் நாங்கள் சூரிய வம்சத்தில் ஒருவர் ஆகுகிறோம். புதிய உலகத்தில் நாங்கள் பூகோளத்தை ஆள்பவர்களான, அதிபதிகளாகவும் ஆகுகிறோம். சுயதரிசனச் சக்கரதாரிகளாகவும் விஷ்ணு வம்சத்தவர்களாகவும் ஆகுவதற்கு ஒரு விநாடியே எடுக்கின்றது. சிவபாபாவே அவ்வாறு உங்களை ஆக்குபவர். சிவபாபா உங்களை விஷ்ணு வம்சத்தவர்கள் ஆக்குகிறார். வேறு எவராலும் உங்களை அவ்வாறு ஆக்க முடியாது. விஷ்ணு வம்சத்தவர்கள் இங்கு இல்லை, சத்தியயுகத்திலேயே இருக்கிறார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது விஷ்ணு வம்சத்தவர்கள் ஆகுவதற்குரிய யுகமாகும். சூரிய வம்சம் என்றும் அழைக்கப்படுகின்ற, விஷ்ணுவின் வம்சத்தவர்கள் ஆகுவதற்கே நீங்கள் இங்கே வருகிறீர்கள். ‘ஞானம் நிறைந்த சூரிய வம்சம்’ என்ற வார்த்தைகள் மிகவும் சிறப்பானவை. விஷ்ணுவே சத்தியயுகத்து அதிபதியாக இருந்தார். இலக்ஷ்மி, நாராயணன் இருவருமே அவருக்குள் அடங்குவர். குழந்தைகளாகிய நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதற்காகவோ அல்லது விஷ்ணு வம்சத்தவர்கள் ஆகுவதற்காகவோ இங்கே வந்துள்ளீர்கள். சத்தியயுக உலகமாகிய, புதிய உலகத்தில் விஷ்ணு வம்சத்தவர்கள் ஆகுவதில் பெருமளவு சந்தோஷம் இருக்கிறது. அதை விட உயர்ந்த அந்தஸ்து ஏதுமில்லை. இதில் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் என்று கண்காட்சிகளில் நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: இது மிகப் பெரியதொரு பல்கலைக்கழகம்;, இது ஆன்மீகப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. இலக்கும் இலட்சியமும் இந்தப் படத்தில் இருக்கின்றன. ஒரு விநாடியில் விளங்கப்படுத்தக்கூடிய வகையில் எதை எழுதுவதென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். உங்களால் மாத்திரமே இதை விளங்கப்படுத்த முடியும். அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: நிச்சயமாக நாங்கள் விஷ்ணு வம்சத்துத் தேவர்களாக இருந்தோம், அதாவது, நாங்கள் தேவ குலத்துக்கு உரியவர்களாக இருந்தோம். நாங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தோம். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, 5000 வருடங்களுக்கு முன்னர், நீங்களே பாரதத்தில் சூரிய வம்சத்துத் தேவர்களாக இருந்தீர்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் இது இப்பொழுது பிரவேசித்துள்ளது. சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, சத்தியயுகத்தில் நீங்களே சூரிய வம்சத்தவர்களாக இருந்தீர்கள். சூரிய வம்சத்து இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு சிவபாபா வந்துள்ளார். உண்மையில், பாரதம் சுவர்க்கமாக இருந்தது. பூஜிப்பவர்கள் இல்லாத பொழுது, அவர்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தார்கள். அங்கே பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்கள் இருக்கவில்லை. சமயநூல்களில் மாத்திரம் வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சம்பிரதாயங்களாகும். எல்லையற்ற தந்தை, சிவபாபா இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். அவரே ஞானக்கடலும், மனித உலக விருட்சத்தின் விதையுமாவார். அவர் விருட்சத்தின் பிரபு என்றும் வியாழப் பிரபு என்றும் அழைக்கப்படுகிறார். வியாழ சகுனமே அனைத்திலும் அதிமேலானதாகக் கருதப்படுகிறது. விருட்சத்தின் பிரபு உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள், பின்னர், பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். விகாரமற்றவர்களாக இருந்த தேவர்கள் எங்கே சென்று விட்டார்கள்? நிச்சயமாக, அவர்கள் மறுபிறவி எடுத்து, கீழிறங்கி வந்திருப்பார்கள். எனவே, ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் இதயத்திலா அல்லது கடதாசியிலா குறித்துக் கொள்ளப்பட வேண்டும்? இவற்றை விளங்கப்படுத்துபவர் யார்? சிவபாபா. அவரே சுவர்க்கத்தைப் படைக்கிறார். சிவபாபாவே குழந்தைகளாகிய உங்களுக்கு சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதை உங்களுக்குக் கொடுக்க முடியாது. லௌகீPகத் தந்தை சரீரதாரியாவார். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் பரலோகத் தந்தையை, ‘பாபா’ என நினைவு செய்கிறீர்கள். எனவே, பாபாவும் ‘ஓ குழந்தைகளே’ என்று பதிலளிக்கிறார். அதனால் அவர் எல்லையற்ற தந்தை ஆவார். குழந்தைகளாகிய நீங்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்த சூரிய வம்சத்துத் தேவர்களாக இருந்தீர்;கள். இப்பொழுது நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகியுள்ளீர்கள். இது இராவண இராச்சியம். மக்கள் வருடாவருடம் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். அவ்வாறிருந்தும் அவன் மரணிப்பதில்லை. அவர்கள் 12 மாதங்களின் பின்னர்; மீண்டும் இராவணனை எரிக்கிறார்கள். இது, தாம் இராவண சமுதாயத்துக்கு உரியவர்களே என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இராவணன், அதாவது, ஐந்து விகாரங்களின் இராச்சியம், சதா காலமும் இருக்கின்றது. சத்தியயுகத்தில் அனைவரும் மேன்மையானவர்களாக இருந்தார்கள். கலியுகம் இப்பொழுது பழைய, சீரழிந்த உலகமாக இருக்கிறது. இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. பிரஜாபிதா பிரம்மாவின் குலத்துக்குரியவர்களான நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது நீங்கள் சூத்திர குலத்துக்கு உரியவர்களல்ல. இந்நேரத்தில் இது அசுர இராச்சியமாக இருக்கிறது. தந்தை துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால், அந்தச் சந்தோஷம் இப்பொழுது எங்கே? அது சத்தியயுகத்தில் இருக்கிறது. துன்பம் எங்கே இருக்கிறது? கலியுகத்தில் இருக்கிறது. சிவபாபாவே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். அவரே உங்களுக்குச் சந்தோஷ ஆஸ்தியைக் கொடுக்கிறார். சத்தியயுகம் சந்தோஷ தாமம் என்று அழைக்கப்படுகிறது. அங்கே துன்பத்தைப் பற்றிய குறிப்பே இருக்காது. அங்கே உங்கள் ஆயுட்காலம் நீண்டதாக இருக்கிறது. அங்கே அழ வேண்டிய அவசியமே இருக்காது. நீங்கள் உரிய நேரம் வரும் பொழுது உங்கள் பழைய தோலை நீக்கி, இன்னொன்றைப் பெறுகிறீர்கள். உங்கள் சரீரம் இப்பொழுது பழையதாகி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஒரு குழந்தை ஆரம்பத்தில் சதோகுணியாக இருக்கிறார். அதனாலேயே, சிறு குழந்தைகள் பிரம்ம தத்துவத்தின் ஞானமுள்ளவர்களை விடவும் மேலானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் விகாரமான இல்லறத்தையே துறக்கிறார்கள் என்பதால், அவர்கள் விகாரங்கள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் சிறு குழந்தைகள் அவற்றைப் பற்றி எதுவுமே அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்நேரத்தில், உலகம் முழுவதும் சீரழிந்த இராச்சியமாகிய, இராவண இராச்சியமாகவே இருக்கிறது. சத்தியயுகத்தில்; மேன்மையான தேவர்களின் இராச்சியம் இருந்தது. இப்பொழுது அது இல்லை. பின்னர் வரலாறு மீண்டும் இடம்பெறும். உங்களை மேன்மையானவர் ஆக்குவது யார்? இங்கே ஒருவர் கூட மேன்மையானவராக இல்லை. இதற்கு மிகவும் சிறந்ததொரு புத்தி தேவைப்படுகிறது. இதுவே தெய்வீகப் புத்தி உடையவர் ஆகுவதற்குரிய யுகமாகும். தந்தை வந்து உங்களை, கற்புத்தி உடையவர்களிலிருந்து தெய்வீகப் புத்தியுடையவர்கள் ஆக்குகிறார். நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்லுமென்றும், தீய சகவாசம் மூழ்கடித்து விடுமென்றும் கூறப்படுகிறது. உண்மையான தந்தையொருவரைத் தவிர, உலகிலுள்ள சகவாசங்கள் அனைத்தும், தீய சகவாசமே ஆகும். தந்தை கூறுகிறார்: உங்களை முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆக்கிய பின்னர் நான் பிரிந்து செல்கிறேன். பின்னர், உங்களை முற்றிலும் விகாரமானவர்கள் ஆக்குபவர் யார்? எங்களுக்கு என்ன தெரியும் என அவர்கள் கூறுகிறார்கள். ஓ! ஆனால், உங்களை விகாரமற்றவர் ஆக்குவது யார்? அது நிச்சயமாகத் தந்தையாகவே இருக்க வேண்டும். உங்களை விகாரமானவர்கள் ஆக்குவது யார்? எவருக்கும் தெரியாது. தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மக்களுக்கு முற்றிலும் எதுவும் தெரியாது. இது இராவண இராச்சியம். ஒருவரது தந்தை மரணிக்கும் பொழுது, அவர் எங்கே சென்றார் என்று அவர்களை வினவுங்கள். அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என்றே அவர் பதிலளிப்பார். நல்லது, அவர் நரகவாசியாக இருந்தார், எனவே, நீங்களும் நரகவாசி என்பதே அதன் அர்த்தமாகும். இது விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது. எவருமே தங்களை ஒரு நரகவாசியென்று கருதுவதில்லை. நரகம் விலைமாதர் இல்லமென்றும், சுவர்க்கம் சிவாலயம் என்றும் அழைக்கப்படுகின்றன. 5000 வருடங்களுக்கு முன்னர் தேவர்களின் இராச்சியம் இருந்தது. நீங்கள் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியுமான உலக அதிபதிகளாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் மறுபிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது. நீங்களே அதிகபட்ச மறுபிறவிகள் எடுத்தவர்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்ட காலமாகப் பிரிந்திருந்தனர் என்று நினைவுகூரப்படுகிறது. நீங்களே முதலில் இங்கே வந்த, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தவர்கள் என்றும், பின்னர் 84 பிறவிகள் எடுக்கையில், தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள் என்றும் நீங்கள் இப்பொழுது நினைவுகூருகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையாக வேண்டும். “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என்று மக்கள் கூவி அழைக்கிறார்கள். எனவே, ஒரேயொரு பரம சத்குருவே வந்து அனைவரையும் தூய்மையாக்குகிறார் என்று அவர்கள் சான்றிதழ் வழங்குகிறார்கள். அவரே கூறுகிறார்: நான் இவருக்குள் இருந்து உங்களைத் தூய்மையாக்குகிறேன். எவ்வாறாயினும், 8.4 மில்லியன் உயிரினங்கள் இல்லை. 84 பிறவிகள் இருக்கின்றன. சத்திய யுகத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் பிரஜைகள் இருந்தார்கள், ஆனால், அவர்கள் இப்பொழுது இல்லை. அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களும் 84 பிறவிகள் எடுக்க வேண்டும். முதல் இலக்கத்தைப் பெறுபவர்களே, முழுமையான 84 பிறவிகளையும் எடுப்பவர்கள் என்பதால், அவர்கள் முதலில் செல்லவும் வேண்டும். தேவலோக வரலாறு மீண்டும் இடம்பெறுகிறது. சூரிய வம்ச, சந்திர வம்ச இராச்சியங்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும். தந்தை உங்களைத் தகுதி வாய்ந்தவர்களாக்குகிறார். உங்களைச் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற்றும் இப் பாடசாலைக்கு அல்லது பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். நன்றாக முயற்சி செய்பவர்கள் சித்தியடைவார்கள். முயற்சி செய்யாதவர்கள் பிரஜைகள் ஆகுவார்கள். அவர்களில் சிலர் மிகுந்த செல்வந்தர்களாகவும் சிலர் குறைந்தளவில் செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஸ்ரீஸ்ரீ சிவபாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் ஸ்ரீ இலக்ஷ்மி, நாராயணராகவோ அல்லது தேவராகவோ ஆகுகிறீர்கள். ஸ்ரீ என்றால் மேன்மையானது என்பதாகும். இந்த நேரத்தில் எவரையுமே நீங்கள் ஸ்ரீ என்று அழைக்க முடியாது. எவ்வாறாயினும், இங்கே எவரையுமே, ஸ்ரீ இன்னயின்னார்.. என்று அழைக்கிறார்கள். தேவர்களைத் தவிர வேறு எவரையுமே மேன்மையானவர்கள் என்று அழைக்க முடியாது. பாரதமே அனைத்திலும் அதிமேலானதாக இருந்தது, இப்பொழுது இராவண இராச்சியத்தில், பாரதத்தின் புகழை அழித்து விட்டார்கள். பாரதத்திற்குப் பெரும் புகழும் பெரும் அவதூறும் உள்ளது. பாரதம் மிகச் செல்வந்த நாடாக இருந்தது. அது இப்பொழுது, முற்றிலும் ஏழையாகி விட்டது. மக்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று அவர்களின் புகழைப் பாடி, ‘நான் தெய்வீகக் குணமற்றவன். என்னிடம் தெய்வீகக்குணம் ஏதுமில்லை’ என்று கூறுகிறார்கள். அவர்களின் விக்கிரகங்களின் முன்னால் இவ்வாறு கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (தேவர்கள்) கருணைகாட்ட முடியாதவர்கள், ஒரேயொருவரே கருணை காட்டுபவர். அவர் உங்களை மனிதர்களில்pருந்து தேவர்களாக மாற்றுகிறார். இப்பொழுது அவர் உங்கள் தந்தையும், ஆசிரியரும், சத்குருவுமாக இருக்கிறார். அவர் உத்தரவாதம் அளிக்கிறார்: என்னை நினைவு செய்வதால் உங்கள் பல பிறவிப் பாவங்கள் அழிக்கப்படும், நான் உங்களை என்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வேன். பின்னர் நீங்கள் புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். இது 5000 வருடங்களின் சக்கரமாகும். புதிய உலகம் இருந்தது, மீண்டும் நிச்சயமாகப் புதிய உலகம் வரும். உலகம் தூய்மையற்றதாகும் பொழுது, தந்தை வந்து அதனைத் தூய்மையாக்குவார். தந்தை கூறுகிறார்: இராவணன் உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகிறான். நான் உங்களைத் தூய்மையாக்குகிறேன். எவ்வாறாயினும், மக்கள் பொம்மைகளோடு விளையாடுவதைப் போலவே தொடர்ந்தும் வழிபாடு செய்கிறார்கள். ஏன் இராவணன் பத்துத் தலைகளுடன் காட்டப்படுகிறான் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் விஷ்ணுவை நான்கு கரங்களுடன் காட்டுகிறார்கள். ஆனால் அப்படியொரு மனிதர் இருக்க முடியாது. நான்கு கரங்கள் உடைய மனிதர் ஒருவர் இருந்தால், அவரது குழந்தைகளும் அவரைப் போன்றே இருப்பார்கள். இங்கே, அனைவருக்கும் இரண்டு கரங்களே இருக்கின்றன. அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் பக்தி மார்க்கத்தில் சமயநூல்களை உரைக்கிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு சிஷ்யர்கள் இருக்கிறார்கள். இது ஓர் அற்புதமே! தந்தையே ஞானத்தின் அதிகாரியாவார். மனிதர் எவருமே ஞானத்தின் அதிகாரியாக இருக்க முடியாது. நீங்கள் என்னை ஞானக்கடல் என்று அழைக்கிறீர்கள். சர்வசக்திவான் என்ற புகழ் தந்தைக்கே உரியதாகும். தந்தையை நீங்கள் நினைவு செய்யும் பொழுது, அவரிடமிருந்து சக்தியைப் பெற்று, அதன் மூலம் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். உங்களிடம் அளவற்ற சக்தி இருந்ததென்றும் நீங்கள் விகாரமற்றவர்களாக இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்களே உலகம் முழுவதையும் ஆட்சி புரிந்தீர்;கள், அதனால், நீங்கள் சர்வசக்திவான்கள் என்று அழைக்கப்படுவீர்கள், இல்லையா? இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் உலகம் முழுவதற்கும் அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் எங்கேயிருந்து சக்தியைப் பெற்றார்கள்? தந்தையிடமிருந்து ஆகும். கடவுளே அதிமேலானவர். அவர் உங்களுக்கு அத்தகைய இலகுவான விளக்கத்தைக் கொடுக்கிறார். நீங்கள் இராச்சியத்தைப் பெற்றுக் கொள்ளும் 84 பிறவிச் சக்கரம் பற்றிப் புரிந்து கொள்வது இலகுவானதாகும், அதன்மூலம் நீங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். தூய்மையற்றவர்களால் உலக இராச்சியத்தைப் பெற முடியாது. தூய்மையற்றவர்கள் அவர்களுக்கு (தேவதேவியரின் விக்கிரகங்களுக்கு) முன் நின்று வணங்குகிறார்கள். தாங்கள் பக்தர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதால், தூய்மையாக இருந்தவர்களின் முன்னால் நின்று வணங்குகிறார்கள். பக்தி மார்க்கமும் அரைச்சக்கர காலத்திற்கு நீடிக்கின்றது. நீங்கள் இப்பொழுது கடவுளைக் கண்டு விட்டீர்கள். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். நான் உங்களுக்குப் பக்தியின் பலனைக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். கடவுள் நிச்சயமாக ஏதோ ஒரு வடிவில் வருவார் என்று மக்கள் பாடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் மாட்டு வண்டியில் வரப் போவதில்லை. அதிமேலானவராக இருந்து இப்பொழுது தன் 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துள்ளவரில் மாத்திரமே நான் பிரவேசிக்கிறேன். சத்தியயுகத்திலேயே மேன்மையான மனிதர்கள் இருக்கிறார்கள். கலியுகத்தில், மக்கள் சீரழிந்தவர்களாகவும் தமோபிரதானாகவும் இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகிறீர்கள். தந்தை வந்து உங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்குகிறார். இது ஒரு நாடகம். இதை நீங்கள் புரிந்து கொள்ளாது விட்டால், உங்களால் ஒருபொழுதும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையின் சகவாசத்தினால், உங்கள் புத்தியைத் தெய்வீகமாக்கிக் கொள்ளுங்கள். முற்றிலும் விகாரமற்றவராகுங்கள். தீய சகவாசத்திலிருந்து தொலைவில் இருங்கள்.

2. சுயதரிசனச் சக்கரதாரிகளாகிய நீங்கள் புதிய உலகின் அதிபதிகளாகவும் ஆட்சியாளர்களாகவும் ஆகுவீர்கள் என்ற சந்தோஷத்தை எப்பொழுதும் பேணுங்கள். சிவபாபா உங்களை ஞானம் நிறைந்த, சூரிய வம்சத்தவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளார். இதுவே உங்கள் இலக்காகும்.

ஆசீர்வாதம்:
தடைகளை களிப்பூட்டும் விளையாட்டாகக் கருதி, அவற்றை வெற்றி கொள்வதன் மூலம் தடைகளில் இருந்து விடுபட்ட, ஒரு வெற்றியாளர் ஆகுவீர்களாக.

தடைகள் வருவது நல்லதாகும், ஆனால் அவை உங்களை தோற்கடிக்காதிருக்கட்டும். தடைகள் உங்களை உறுதியானவர் ஆக்குவதற்கே வருகின்றது என்பதால், தடைகளை கண்டு பயப்படுவதற்குப் பதிலாக அவற்றை களிப்பூட்டும் விளையாட்டாகக் கருதுங்கள். இவற்றை வெற்றி கொண்டு, வெற்றியாளர் ஆகினாhல், நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டவர்களும், வெற்றியாளர்களும் என அழைக்கப்படுவீர்கள். சர்வசக்திவான் தந்தையின் சகவாசம் உங்களுக்கு இருப்பதால், எதனைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தந்தையின் நினைவிலும், சேவையிலும் மும்முரமாக இருந்தாலே நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டிருப்பீர்கள். உங்கள் புத்தி ஓய்வாக இருந்தாலே, தடைகள் அல்லது மாயை வருகின்றது, ஆனால் நீங்கள் மும்முரமாக இருந்தால், மாயையும் தடைகளும் ஒதுங்கிவிடும்.

சுலோகம்:
உங்கள் சந்தோஷக் கணக்கில் சேமிப்பதற்கு, மரியாதை கோட்பாடுகளுக்கு ஏற்ப, இதயபூர்வமாக அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள்.