05.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள், உங்களால் அப்பாற் செல்ல இயலும். ஒரு கணப் பார்வையால் அப்பாற் செல்தல் என்றால், உலகின் அதிபதி ஆகுதல் என்பதாகும்.

பாடல்:
“சற்குருவாகிய சுவாமி ஒரு கணப் பார்வையால் ஆத்மாவை அப்பால் அழைத்துச் செல்கின்றார்” என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

பதில்:
ஓர் ஆத்மா தந்தையிடமிருந்து மூன்றாவது கண்ணைப் பெற்று, அக்கண் மூலம் தந்தையை இனங்கண்டுகொள்ளும் பொழுது, அவரால் அப்பாற் செல்ல முடியும், அதாவது, அவ்வாத்மா சற்கதியைப் பெறுகின்றார். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவராகி, உங்கள் கண்கள் என்னை மாத்திரம் பார்க்கட்டும், அதாவது, என்னை நினைவு செய்யுங்கள். ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, என்னுடன் மாத்திரம் உங்களை இணைப்பீர்களாயின், உங்களால் அப்பாற் செல்ல முடியும், அதாவது, நீங்கள் விரக்தியடைந்திருப்பதிலிருந்தும், ஏழையாக இருப்பதிலிருந்தும் செல்வந்தராக ஆகுவீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் யாரிடம் செல்கின்றார்கள்? ஆன்மீகத் தந்தையிடமாகும். நீங்கள் சிவபாபாவிடமே செல்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். சிவபாபாவே சகல ஆத்மாக்களினதும் தந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரே பரம ஆசிரியரும், பரம குருவும் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். பரம் என்றால் பரம்பொருள். நீங்கள் அந்த ஒரேயொருவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நீங்கள் கண்கள் மூலம் சந்திக்கின்றீர்கள். சற்குருவாகிய சுவாமி ஒரு கணப் பார்வையால் உங்களை அப்பால் அழைத்துச் சென்றதாக நினைவுகூரப்படுகின்றது. இதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். ஒரு கணப் பார்வையால் அப்பால் அழைத்துச் செல்லப்படுபவர் யார்? நிச்சயமாக முழு உலகமும் என்றே கூறப்படும். ஏனெனில், அவரே அனைவருக்கும் சற்கதி அளிப்பவர். அவரே இத்தூய்மையற்ற உலகிலிருந்து அனைவரையும் அப்பால் அழைத்துச் செல்பவர். நீங்கள் எப்பார்வையைப் பெறுகின்றீர்கள்? அது இக்கண்கள் மூலமாகவா? இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள், அதன் மூலம் ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை அந்த ஒரேயொருவரே என்பதனை அறிந்துகொள்கின்றீர்கள். தந்தை ஆத்மாக்களுக்கு ஆலோசனை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். தந்தை ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களே தூய்மையற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆகியுள்ளனர். இது உங்கள் 84வது பிறவி, இந்நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது; அது நிச்சயமாக முடிவடைய வேண்டும். ஒவ்வொரு கல்பத்திலும் பழைய உலகம் பின்னர் புதியதாகுகின்றது. புதியது பின்னர் பழையதாகுகின்றது. அது வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்கின்றது. புதிய உலகம் சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: முதலில் நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தீர்கள். பின்னர் மறுபிறவி எடுக்கையில், 84 பிறவிகளினூடாகச் சென்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தமோபிரதானாகிவிட்டீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்களாயின், உங்களால் அப்பால் செல்ல முடியும். தந்தை நேரடியாக உங்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். “என்னை” என்றால் யாரை? பரமாத்மாவாகிய பரமதந்தையை ஆகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள். ஆத்ம உணர்வுடையவராகி, உங்கள் கண்கள் என்னை மாத்திரம் பார்க்கட்டும். உங்களால் அப்பாற் செல்ல முடியும். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். இதில் எவ்விதச் சிரமமும் கிடையாது. ஆத்மாவே கற்று, தனது பாகத்தை நடிக்கின்றார். ஆத்மா மிகவும் சின்னஞ்சிறியவர். ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு கீழே வந்து, 84 பிறவிகளுக்கான உங்கள்; பாகங்களை நடிக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் மீண்டும் மீண்டும் அதனை நடிக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் 84 பிறவிகளுக்கான உங்கள் பாகங்களை நடிக்கும் பொழுது, இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆத்மாக்களிடம் இப்பொழுது பலம் கிடையாது. இப்பொழுது ஆத்மாக்கள் அப்பாற் செல்லக்கூடியதாக இருப்பதற்குப் பதிலாக, விரக்தியுற்ற நிலையிலுள்ளார்கள், அதாவது, ஏழைகளாக உள்ளனர். எனவே, எவ்வாறு அவர்களால் அப்பாற் செல்ல முடியும்? இவ்வார்த்தைகள் பக்தி மார்க்கத்திற்குரியவை. தந்தை அவற்றை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் வேதங்கள், சமயநூல்கள், உருவங்கள் போன்றவற்றையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப இப்படங்களை உருவாக்கியுள்ளீர்கள். அவர்கள் அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு உருவங்களை செய்துள்ளார்கள், அவர்களுக்குத் தொழில் கிடையாது. தந்தை இங்கு வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். கடவுள் பேசுவதால் அது அவரது ஞானமாகவே இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இன்னார் இத்தகைய ஆசிரியர் என்பதை மாணவர்கள் அறிவார்கள். இங்கு, எல்லையற்ற தந்தை ஒருமுறை மாத்திரமே வந்து, அத்தகைய அற்புதமான கல்வியை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அக்கல்விக்கும், இக்கல்விக்கும் மத்தியில் இரவுக்கும், பகலுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. அக்கல்வியைக் கற்கும்பொழுது, இரவாகுகின்றது. இக்கல்வி மூலம் நீங்கள் பகலுக்குள் செல்கின்றீர்கள். நீங்கள் பிறவிபிறவியாக அக்கல்விகளைக் கற்று வந்தீர்கள். இங்கு, தந்தை உங்களுக்குத் தெளிவாகக் கூறுகின்றார்: ஆத்மாக்கள் தூய்மையாகும் பொழுதே அவர்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியும். பெண்சிங்கத்தின் பாலை ஒரு தங்கப் பாத்திரத்திலேயே வைத்திருக்க முடியும் எனக் கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது தங்கப் பாத்திரங்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் மனிதர்களாகவே இருப்பீர்கள். எனினும், ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் தூய்மையாக வேண்டும். நீங்கள் 24 ‘கரட்’டாக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் 9 ‘கரட்’ ஆகிவிட்டீர்கள். ஏற்றப்பட்டிருந்த ஆத்மாவின் ஒளி இப்பொழுது அணைந்துவிட்டது. ஓளி ஏற்றப்பட்டுள்ளவர்களுக்கும், ஒளி அணைந்திருப்பவர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. எவ்வாறு ஒளியேற்றப்பட முடியும் என்பதையும், உங்களால் எவ்வாறு ஓர் அந்தஸ்தைக் கோர முடியும் என்பதையும் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். என்னை மிக நன்றாக நினைவு செய்பவர்களை நான் மிக நன்றாக நினைவு செய்வேன். ஒரேயொரு தந்தையே ஒரு கணப் பார்வையால் உங்களை அப்பால் அழைத்துச் செல்கின்ற சுவாமி என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவரது ஆத்மாவாலும் அப்பாற் செல்ல முடியும். நீங்கள் அனைவரும் விட்டிற்பூச்சிகள், அவர் சுவாலை என அழைக்கப்படுகின்றார். சில விட்டிற்பூச்சிகள் வெறுமனே வட்டமிடுவதற்காக வருகின்றன. ஏனையவை என்னை மிக நன்றாக இனங்கண்டு, மரணித்து வாழ்கின்றன. சில வட்டமடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன, பின்னர் சில சமயங்களில் மாத்திரம் திரும்பி வந்து, மீண்டும் சென்றுவிடுகின்றன. சங்கம யுகம் பற்றியே இவை அனைத்தும் நினைவுகூரப்படுகின்றன. இந்நேரத்தில் நிகழ்வனவற்றை வைத்தே சமயநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தந்தை ஒருமுறை மாத்திரமே வந்து, உங்களுக்கு உங்களது ஆஸ்தியைக் கொடுத்துச் செல்கிறார். எல்லையற்ற தந்தை நிச்சயமாக உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பார். “21 சந்ததிகளுக்கு” என்ற தொடர் நினைவுகூரப்படுகின்றது. சத்தியயுகத்தில் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பவர் யார்? படைப்பவராகிய கடவுள் தனது படைப்புக்களுக்கு அரைக் கல்பத்திற்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். அவரே தந்தையும், ஆசிரியரும், சுவாமியும், அத்துடன் சற்குருவும் ஆவார். நீங்கள் வேறு எவரையாவது சுவாமி என்றோ அல்லது சற்குரு என்றோ அழைக்கலாம், எனினும், ஒரேயொரு தந்தை மாத்திரமே சத்தியமானவர் ஆவார். தந்தை எப்பொழுதும் சத்தியம் என அழைக்கப்படுகின்றார். அவர் வந்து, என்ன சத்தியத்தைக் கொடுக்கின்றார்? அவர் பழைய உலகைச் சத்திய பூமி ஆக்குகின்றார். நாங்கள் சத்திய பூமிக்காக முயற்சி செய்கின்றோம். அது சத்திய பூமியாக இருந்தபொழுது, வேறெந்தத் தேசங்களும் இருக்கவில்லை. அவை அனைத்தும் பின்னரே தோன்றின. சத்திய பூமியைப் பற்றி எவருக்குமே தெரியாது. இப்பொழுது காணப்படுகின்ற தேசங்களைப் பற்றிய அனைத்தையும் அனைவரும் அறிவார்கள். தங்கள் சொந்த சமய ஸ்தாபகர்களை அவர்கள் அறிவார்கள், எனினும், சூரிய வம்சம், சந்திர வம்சம், சங்கமயுகத்துப் பிராமண குலம் போன்றவற்றை எவருமே அறியார்கள். மக்கள் பிரஜாபிதா பிரம்மாவை நம்புகின்றனர். பிராமணர்களாகிய தாங்களே பிரம்மாவின் குழந்தைகள் என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் பௌதீகப் படைப்புக்கள், நீங்களோ வாய்வழித்தோன்றல்கள் ஆவீர்கள். அவர்கள் தூய்மையற்றவர்கள், வாய்வழித் தோன்றல்களாகிய நீங்களோ தூய்மையானவர்கள். நீங்கள் வாய்வழித் தோன்றல்களாகி, பின்னர் இராவண இராச்சியமாகிய இந்த அழுக்கான உலகை விட்டுச் செல்கின்றீர்கள். இராவண இராச்சியம் அங்கே இருக்கமாட்டாது. நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்கின்றீர்கள். அது விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. உலகம் புதியதாகவும், பழையதாகவும் ஆகுகின்றது. அது எப்படி இவ்வாறு ஆகுகின்றது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இது வேறு எவரது புத்தியிலும் இல்லை. நூறாயிரக்கணக்கான வருடங்களாக உள்ள எதைப் பற்றியும் எவருக்கும் எதுவும் தெரியாது. இது குறுகிய காலத்திற்கான விடயமாகும். தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: சமயங்களுக்கு மிகுந்த அவதூறு ஏற்படும்பொழுதே, அதுவும், குறிப்பாக பாரதத்தில் அது நிகழும்பொழுதே நான் வருகின்றேன். ஏனைய இடங்களில், அசரீரியான பரமாத்மா யார் என்பதைக்கூட எவரும் அறியார்கள். அவர்கள் பெரிய லிங்கத்தை உருவாக்கி, அங்கே வைத்துள்ளார்கள். ஆத்மாவின் பருமன் ஒருபொழுதும் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ ஆகுவதில்லை எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மா அழிவற்றவர், அதுபோன்றே, தந்தையும் அழிவற்றவர். அவரே பரமாத்மா ஆவார். ‘பரம்’ என்றால், அவர் என்றென்றும் தூய்மையாகவும், விகாரமற்றும் இருப்பவர் என்று பொருள். ஆத்மாக்களாகிய நீங்களும் விகாரமற்றவர்களாக இருந்தீர்கள். உலகமும் விகாரமற்றதாக இருந்தது. அது முற்றிலும் விகாரமற்ற, புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது. பின்னர், அது நிச்சயமாகப் பழையதாகுகின்றது. கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன் சூரிய வம்ச இராச்சியம் இரு கலைகளால் குறைவடைகின்றது, பின்னர் அது தொடர்ந்தும் பழையதாகுகின்றது. பின்னர் ஏனைய தேசங்கள் அனைத்தும் தோன்றுகின்றன. அவை துணைக்கதைகள் ஆகும். எவ்வாறாயினும், அவை கலந்து விட்டன. எது நடந்தாலும் அது நாடகத் திட்டத்திற்கேற்ப, மீண்டும் மீண்டும் நிகழும். பௌத்தர்களின் தலைவர் வந்தபொழுது, அவர் பலரைப் பௌத்த சமயத்திற்கு மாற்றினார். அவர் அவர்களது சமயத்தை மாற்றினார். இந்துக்கள் தாங்களாகவே தங்கள் சொந்தச் சமயத்தை மாற்றிக் கொண்டார்கள். ஏனெனில், அவர்களது செயல்கள் சீரழிந்தவையாகியதால், அவர்கள் தங்களது சமயத்தையும் சீரழித்துவிட்டார்கள்; அவர்கள் பாவப் பாதையில் சென்றார்கள். மக்கள் ஜெகநாதர் ஆலயத்திற்குச் செல்வார்கள். எனினும் அவர்களில் எவருமே அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்களே விகாரமுடையவர்களாக இருப்பதால், உருவங்களையும் விகாரமுள்ளவையாகச் சித்தரித்துள்ளார்கள். தேவர்களே பாவப்பாதைக்குச் சென்ற பொழுது, அவ்வாறு ஆகினார்கள் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவ்வுருவங்கள் அந்நேரத்திற்குரியவை. “தேவர்கள்” என்ற பெயர் மிகவும் சிறந்ததாகும். ‘இந்துஸ்தான்’ என்பதிலிருந்தே ‘இந்து’ என்ற பெயர் தோன்றியது. இதனாலேயே அவர்கள் தங்களை இந்துக்கள் என அழைக்கின்றனர். அது அத்தகையதொரு பெரிய தவறாகும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: அதர்மம் உச்சக்கட்டத்தில் இருக்கும்பொழுதே நான் வருகின்றேன்…. பாபா பாரதத்திற்கே வருகின்றார். அவர் இந்துஸ்தானுக்கு வருவதாகக் கூறவில்லை. இது பாரதமாகும். இந்துஸ்தான் அல்லது இந்து சமயம் என எதுவும் கிடையாது. இஸ்லாமியர்களே இதற்கு இந்துஸ்தான் எனப் பெயரிட்டனர். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதனை மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவும் ஞானமேயாகும். ஆவர்கள் மறுபிறவியெடுத்து, பாவப் பாதையில் செல்லும்பொழுது, சீரழிந்தவர்கள் ஆகினார்கள். பின்னர், மக்கள் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று கூறுகின்றனர்: நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள், ஆனால் நாங்களோ விகாரம் நிறைந்த பாவிகள். வேறெந்தத் தேசத்தவர்களில் எவரும் தாங்கள் சீரழிந்தவர்கள் எனவும், நற்குணங்கள் அற்றவர்கள் எனவும் கூறமாட்டார்கள். அவர்களில் எவராவது இவ்வாறு கூறுவதை நீங்கள் ஒருபொழுதும் கேட்டிருக்க மாட்டீர்கள். சீக்கியர்களும் கிரந்தத்தின் முன்னால் அமர்கின்றார்கள், எனினும் அவர்கள் ஒருபொழுதும், “நானக், நீங்கள் விகாரமற்றவர், நாங்கள் விகாரம் நிறைந்தவர்கள்” எனக் கூறுவதில்லை. நானக்கைப் பின்பற்றுபவர்கள் காப்பு ஒன்றை அணிகின்றார்கள். அது விகாரமற்றிருப்பதற்கான அடையாளமாகும். எவ்வாறாயினும், அவர்களால் விகாரமின்றி இருக்க முடியாது. இந்துக்கள் தூய்மையின் சின்னமாகப் புனித நூலொன்றை அணிந்திருப்பது போன்று, அவர்களும் பொய்யான அடையாளமொன்றை வைத்துள்ளார்கள். இன்றைய நாட்களில், அவர்கள் சமயத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. இந்நேரத்தில், பக்தி மார்க்கம் தொடர்கின்றது. இது பக்தியின் பிரிவு என அழைக்கப்படுகின்றது. ஞானத்தின் பிரிவு சத்தியயுகத்திலேயே இருக்கின்றது. சத்திய யுகத்துத் தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். கலியுகத்தில், முற்றிலும் விகாரமற்ற எவரும் இல்லை. தந்தை மாத்திரமே தூய இல்லறப் பாதையை ஸ்தாபிக்கின்றார். ஏனைய குருமார்கள் அனைவரும் துறவறப் பாதைக்கு உரியவர்கள். இல்லறப் பாதையின் விசை உறுதி வாய்ந்ததாகிவிட்டது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் கற்றுள்ள எவற்றின் மூலமாகவும் என்னை அடைய முடியாது. நான் வரும்பொழுது, ஒரு கணப் பார்வையால் அனைவரையும் அப்பால் அழைத்துச் செல்கின்றேன். சற்குருவாகிய சுவாமி ஒரு கணப் பார்வையால் அனைவரையும் அக்கரைக்கு அழைத்துச் சென்றதாக நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் ஏன் இங்கு வந்துள்ளீர்கள்? அப்பாற் செல்வதற்கும், உலக அதிபதி ஆகுவதற்குமாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்தால் அப்பால் செல்வீர்கள். இவ்வாறு செய்தால், இவ்வாறு ஆகுவீர்கள் என எவருமே கூறமாட்டார்கள். தந்தை மாத்திரமே கூறுகின்றார்: நீங்கள் இவ்வாறு ஆகவேண்டும். இலக்ஷ்மியும், நாராயணனும் எப்படி அவ்வாறு ஆகினார்கள்? எவருக்கும் அது தெரியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார். இவர் 84 பிறவிகளை எடுத்துத் தூய்மையற்றவர் ஆகிவிட்டார். நான் உங்களை இவ்வாறு ஆக்குவதற்கே இப்பொழுது வந்துள்ளேன். தந்தை தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்து, ஒரு கணப் பார்வையால் உங்களை அப்பால் அழைத்துச் செல்கின்றார். யாரைப் பற்றி நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? ஒரேயொரு சற்குருவைப் பற்றியாகும். அக்குருமார் பலர் இருக்கின்றனர், ஏழைத் தாய்மார் அப்பாவிகள். நீங்கள் அனைவரும் கள்ளங்கபடமற்ற பிரபுவின் குழந்தைகள். அவர்கள் சங்கரரையிட்டு, சங்கரர் தனது கண்ணைத் திறந்ததால் விநாசம் இடம்பெற்றதாகக் கூறுகின்றனர். அது ஒரு பாவமாகும். தந்தை அத்தகைய செயலுக்கான வழிகாட்டலை ஒருபொழுதுமே கொடுக்கமாட்டார். விநாசம் வேறு வழியாகவே இடம்பெறும். தந்தை அத்தகைய வழிகாட்டலைக் கொடுப்பதில்லை. இந்த விஞ்ஞானம் அனைத்தும் தொடர்ந்தும் கண்டுபிடிக்கப்படும். தாங்கள் தங்களுடைய சொந்தக் குலத்தை அழிப்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். அவர்களும் அதில் கட்டுப்பட்டுள்ளார்கள்; அவர்களால் அதை விட்டு விடமுடியாதுள்ளது. அவர்களது பெயர்கள் அதிகளவில் போற்றப்படுகின்றன. அவர்கள் சந்திரனுக்குச் செல்கின்றார்கள், எனினும் அதில் எந்த நன்மையும் கிடையாது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்கள் பார்வை தந்தை மீதே இருக்கட்டும். அதாவது, ஓ ஆத்மாவே, உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள், உங்களால் அப்பாற் செல்ல முடியும். பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்பவர்களை நான் நினைவு செய்கின்றேன். எனக்காகச் சேவை செய்பவர்களை நான் நினைவு செய்கின்றேன். எனவே அவர்கள் சக்தியைப் பெறுகின்றார்கள். நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். அப்பாற் செல்பவர்கள் அரசர்கள் ஆகுவார்கள். உங்கள் புத்தியை அனைவரிடமிருந்தும் துண்டித்து, உங்களை ஒரேயொருவருடன் இணைத்துக் கொள்ளுங்கள். அவர் அசரீரியானவர். ஆத்மாக்களாகிய நீங்களும் அசரீரியானவர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். நீங்களும் கூறுகின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே! யாருக்கு இவ்வாறு கூறுகின்றீர்கள்? பிரம்மா, விஷ்ணு அல்லது சங்கரரிற்கா? இல்லை. ஒரேயொருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் எப்பொழுதும் தூய்மையானவர். அவர் சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். தந்தையே உலகின் ஆரம்பம், மத்தி இறுதி பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கூறுகின்றார். அவர் சமயநூல்கள் போன்ற அனைத்தையும் அறிவார். சந்நியாசிகள் சமயநூல்களைக் கற்பதனால், ஒரு பட்டத்தைப் பெறுகின்றார்கள். தந்தையோ ஏற்கனவே ஒரு பட்டத்தைப் பெற்றுள்ளார். அவர் கற்பதனால் அதனைப் பெறப் போவதில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக ருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சுவாலையைச் சுற்றி வட்டமிடுபவர்களாக அன்றி, மரணித்து வாழ்கின்ற விட்டிற்பூச்சிகள் ஆகுங்கள், இறை கல்வியைக் கிரகிப்பதற்கு, உங்கள் புத்தியை முற்றிலும் தூய்மையானதாக்குங்கள்.

2. ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, ஒரேயொரு தந்தையின் சகவாசத்தில் இருங்கள். ஒரேயொருவரின் நினைவினால் அப்பாற் செல்லுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் இதயத்தில் புரிந்துணர்தலை கொண்டிருப்பதன் மூலம் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரிடமிருந்து ஆசீர்வாதங்களை பெறுகின்ற சுயமாற்றத்;தை ஏற்படுத்துபவர் ஆகுவீர்களாக.

உங்களை மாற்றுவதற்கு, உங்கள் இதயத்தில் இரண்டு விடயங்களி;ல் உண்மையான புரிந்துணர்தலை கொண்டிருங்கள். 1) உங்கள் பலவீனங்களை புரிந்துணர்ந்திருத்தல். 2. எதையாவது செய்வதற்கு ஒரு கருவியாகுபவரின் சூழ்நிலை மற்றும் அவரின் மனதின் ஆசைகள் மற்றும் உணர்வுகளையும் பற்றிய புரிந்துணர்வு. ஒரு பாதகமான சூழ்நிலை என்ற பரீட்சைத்தாளிற்கான காரணத்தை புரிந்து கொள்ளுங்கள், அந்த மேன்மையான புரிந்துணர்வு உங்களை சித்தி அடைய செய்யட்டும். உங்கள் சொந்த ஸ்திதி மேன்மையானது, பாதகமான சூழ்நிலை ஒரு பரீட்சைத்தாளாகும். இந்த புரிந்துணர்தல் உங்களை இலகுவாக மாற்றமடைய செய்கின்றது. அதனை நீங்கள் நேர்மையான இதயத்தினால் புரிந்துணர்ந்து கொண்டால் நீங்கள் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரிடமிருந்து ஆசீர்வாதங்களை பெறுவீர்கள்.

சுலோகம்:
எப்பொழுதும் ஆயத்தமாக இருந்து, ஒவ்வொரு சூழ்நிலையிலும் ~ஜீஹசூர் (ஆம் பிரபு) உள்ளேன் பிரபு|| எனக் கூறுபவரே ஒரு வாரிசு ஆவார்.