05.05.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.11.99     Om Shanti     Madhuban


கீழ்ப்படிவாக இருப்பதே, தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கான இலகுவான முயற்சியாகும்.


இன்று, பாப்தாதா தனது புனித அன்னங்களின் ஒன்றுகூடலைப் பார்க்கிறார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் புனித அன்னம் ஆவீர்கள். உங்களின் மனதில் சதா ஞான இரத்தினங்களைக் கடைகிறீர்கள். வீணானவற்றின் கற்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, ஞான இரத்தினங்களைக் கடைவதே, ஒரு புனித அன்னத்தின் கடமையாகும். ஒவ்வோர் இரத்தினமும் மிகவும் பெறுமதி வாய்ந்தது! குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் ஞான இரத்தினங்களின் சுரங்கம் ஆகியுள்ளீர்கள். நீங்கள் சதா ஞான இரத்தினங்களால் நிரம்பியுள்ளீர்கள்.

இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரிலும் ஒரு விசேடமான கருத்தைச் சோதித்தார். அந்தக் கருத்து என்ன? ஞானத்தையும் யோகத்தையும் உங்களின் கிரகிப்பதற்கான இலகுவான வழிமுறை, பாபாவிற்கும் தாதாவிற்கும் கீழ்ப்படிவாக இருந்து செயல்படுவதாகும். நீங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிவாக இருக்க வேண்டும். ஆசிரியருக்குக் கீழ்ப்படிவாக இருக்க வேண்டும். சத்குருவிற்குக் கீழ்ப்படிவாக இருக்க வேண்டும். மூன்று ரூபங்களிலும் கீழ்ப்படிவாக இருத்தல் என்றால், இலகுவான முயற்சியாளர் ஆகுதல் என்று அர்த்தம். ஏனென்றால், பாபா மூன்று ரூபங்களிலும், குழந்தைகளான நீங்கள் அமிர்த வேளையில் இருந்து இரவுவரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான வழிகாட்டல்களைக் கொடுத்துள்ளார். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கேற்ப நீங்கள் தொடர்ந்து எல்லாவற்றையும் செய்வீர்களாக இருந்தால், நீங்கள் எதையும் சிரமமாகவோ அல்லது கஷ்டமாகவோ உணர மாட்டீர்கள். ஒவ்வொரு கணமும் உங்களின் எண்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் உங்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் எதையாவது செய்ய வேண்டுமா இல்லையா என்றுகூடச் சிந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் எதையாவது செய்ய வேண்டுமா இல்லையா என்றுகூட நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. ஏதாவதொன்று சரியா அல்லது பிழையா என்று சிந்திப்பதற்குக்கூட நீங்கள் முயற்சி செய்யவேண்டியதில்லை. இறைவனின் வழிகாட்டல்கள் எப்போதும் மேன்மையானவை. எனவே, இது வந்திருக்கும் குமார்களின் மிக நல்லதோர் ஒன்றுகூடல் ஆகும். நீங்கள் தந்தைக்குச் சொந்தமாகிய உடனேயே, நீங்கள் ஒவ்வொருவரும் தந்தைக்கு என்ன சத்தியத்தைச் செய்தீர்கள்? நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்தீர்களா? நீங்கள் தந்தைக்குச் சொந்தமாகியபோது செய்த முதல் சத்தியம் என்ன? ‘பாபா, இந்த உடல், மனம், பணம் - குமார்களிடம் அதிகளவு பணம் இல்லை, அப்படியிருந்தாலும் - என்னிடமுள்ள அனைத்தும் உங்களுடையதே.’ நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்தீர்களா? உங்களின் உடல், மனம், பணம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, ஒரேயொருவருடன் எல்லா உறவுமுறைகளையும் கொண்டிருப்பேன் எனச் சத்தியம் செய்தீர்களா? உங்களின் உடல், மனம், பணம் அனைத்தும் தந்தைக்கே சொந்தம் எனும்போது, உங்களுக்கென்று என்ன இருக்கிறது? உங்களுக்குச் சொந்தம் என்று ஏதாவது இருக்கிறதா? வேறு என்னதான் இருக்கிறது? நீங்கள் உங்களின் உடல், மனம், பணத்தைக் கொடுத்து, எல்லோருடனுமான உங்களின் உறவுமுறைகளையும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டீர்களா? இல்லறத்தவர்கள் இதைச் செய்துவிட்டீர்களா? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், இதைச் செய்துவிட்டீர்களா? நீங்கள் இதை உறுதியாகச் செய்துவிட்டீர்களா? உங்களின் மனமும் தந்தைக்குச் சொந்தமாக இருப்பதனால், அது உங்களுக்குச் சொந்தமானது இல்லைத்தானே? அல்லது, அது உங்களின் மனம், நீங்கள் அதை உங்களுடையது எனக் கருதுவதனால், நீங்கள் விரும்பியபடி அதைப் பயன்படுத்தலாம் என நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் உங்களின் மனதைத் தந்தையிடம் கொடுத்திருப்பதனால், நீங்கள் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? ‘எனக்கு மன உளைச்சலாக உள்ளது, எனது மனதில் வீணான எண்ணங்கள் ஏற்படுகின்றன, எனது மனம் குழம்பியுள்ளது.’ அது உங்களுடையதே இல்லாதபோது, அது உங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கும்போது, உங்களுக்கு இப்படி நம்பிக்கைப் பொறுப்பாகக் கொடுத்த எதையும் நீங்கள் பயன்படுத்துவது என்றால் அது நேர்மை இல்லைத்தானே? ‘நான் மற்றும் எனது’ என்பவையே மாயை பிரவேசிக்கக்கூடிய கதவுகள் ஆகும். உங்களின் உடலே உங்களுக்குச் சொந்தமில்லாதபோது, எப்படி உங்களுக்கு ‘நான்’ என்ற சரீர உணர்;வு இருக்க முடியும்? உங்களின் மனமே உங்களுக்குச் சொந்தமில்லாதபோது, எப்படி நீங்கள், ‘எனது! எனது!’ என்று சொல்ல முடியும்? மனம் தந்தைக்குச் சொந்தமானதா அல்லது உங்களுக்குச் சொந்தமானதா? அது தந்தைக்குச் சொந்தமானதா? அல்லது, அது தந்தைக்குச் சொந்தமானது என நீங்கள் சொல்வதாகவும், ஆனால் அது உங்களுடையது என்றும் நம்புகிறீர்களா? இல்லாவிட்டால், அது தந்தைக்குச் சொந்தமானது என நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் உண்மையில் அதை உங்களுக்குச் சொந்தமானது என்றே கருதுகிறீர்கள் என்பதே இதன் அர்த்தம். நீங்கள் செய்த முதல் சத்தியத்தை நினையுங்கள். அப்போது சரீர உணர்வின் ‘நான்’ அல்லது ‘எனது’ எவையும் இருக்காது. எனவே, தந்தையின் வழிகாட்டல்கள் என்னவென்றால், உங்களின் மனதை நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாக வைத்திருக்கிறீர்கள் எனக் கருதுங்கள். அத்துடன் உங்களின் சரீரத்தையும் நம்பிக்கைப் பொறுப்பாக வைத்திருப்பதாகக் கருதுங்கள். அதன்பின்னர் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டுமா? ‘நான் மற்றும் எனது’ - இந்த இரண்டு வார்த்தைகளினூடாகவே எந்தவொரு பலவீனமும் வருகிறது. ஆகவே, உடலும் உங்களுக்குச் சொந்தமானதல்ல, நான் என்ற சரீர உணர்வும் இல்லை. நீங்கள் கீழ்ப்படிவானவர்களாக இருப்பதனால், உங்களின் மனதில் தோன்றும் எண்ணங்களுக்குத் தந்தை என்ன அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளார்? ஆக்கபூர்வமான, உபகார எண்ணங்களைக் கொண்டிருங்கள். அவசியமற்ற எண்ணங்களை உருவாக்குங்கள் எனத் தந்தை உங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறாரா? இல்லை! உங்களின் மனமே உங்களுடையது இல்லாதபோது, அப்படியிருந்தும் உங்களுக்குள் வீணான எண்ணங்கள் ஏற்பட்டால், நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களை நடைமுறையில் போடுவதில்லை, அப்படித்தானே? இறைவனின் வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்கும் கீழ்ப்படிவான குழந்தையாக இருத்தல் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஏதாவதொன்று தந்தையின் வழிகாட்டல்களுக்கேற்ப இருக்கிறதா இல்லையா எனச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு தந்தை எப்போதும் இயல்பாகவே தனது கீழ்ப்படிவான குழந்தைகளேயே நினைவு செய்வார். இத்தகைய குழந்தைகள் இயல்பாகவே நேசிக்கப்படுவார்கள், அத்துடன் இயல்பாகவே தமது தந்தைக்கு நெருக்கமாக இருப்பார்கள். ஆகவே, நீங்கள் தந்தைக்கு நெருக்கமாகவும் கீழ்ப்படிவாகவும் இருக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். அமிர்த வேளையில் ஒரு வசனத்தை உங்களால் நினைவு செய்ய முடியும். ‘நான் யார்? நான் கீழ்ப்படிவானவனா?’ அல்லது, நீங்கள் சிலவேளைகளில் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறீர்களா, சிலவேளைகளில் அந்த வழிகாட்டல்களில் இருந்து அப்பால் சென்றுவிடுகிறீர்களா?

ஒவ்வோர் உறவுமுறையிலும் நீங்கள் ‘பாபா’ என்ற ஒரு வார்த்தையை நினைவு செய்தால், உங்களின் இதயத்தில் இருந்து ‘பாபா’ என்பது வெளிப்படும்போது, நீங்கள் நெருக்கத்தை உணர்வீர்கள் என பாப்தாதா எப்போதும் கூறுகிறார். ‘பாபா, பாபா!’ என ஒரு மந்திரம் போல் அதை மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள். அந்த மக்கள், ‘இராமா, இராமா’ எனச் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள், ‘பாபா, பாபா!’ எனச் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், உங்களின் இதயத்தில் இருந்து ‘பாபா’ என்று வெளிப்பட வேண்டும். நீங்கள் எதையும் செய்வதற்கு முன்னர், உங்களின் மனதிற்கும் உடலிற்கும் பணத்திற்கும் பாபாவின் வழிகாட்டல்கள் என்னவென்பதைச் சோதித்துப் பாருங்கள். குமார்களான உங்களிடம் சிறிதளவே பணம் இருந்தாலும், தந்தை உங்களுக்குக் கொடுத்த வழிகாட்டல்களுக்கேற்ப நீங்கள் அவற்றைப் பார்த்துக் கொள்கிறீர்களா? அல்லது, நீங்கள் அதை விரும்பியபடி செலவழிக்கிறீர்களா? குமார்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களின் பணத்தின் கணக்கை வைத்திருக்கும்படி வழிகாட்டல் கொடுக்கப்பட்டுள்ளது - உங்களின் பணத்தை எப்படி, எப்போது பயன்படுத்துவது, உங்களின் மனதையும் உங்களின் சரீரத்தையும் எப்படி, எப்போது பயன்படுத்துவது. இவை எல்லாவற்றின் கணக்கையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். தாதிகள் தாரணைக்கான வகுப்புக்களைக் கொடுக்கும்போது, உங்களின் பணத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் என்ன கணக்குகளை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் விளங்கப்படுத்துகிறார்கள். எப்படி உங்களின் கணக்குகளை வைத்திருப்பது என்றும், எப்படி உங்களின் பணத்தைப் பயன்படுத்துவது என்றும் குமார்களான உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு இது தெரியுமா? உங்களின் வெகுசிலர் மட்டுமே உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். அவர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. புதியவர்களும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் அவர்களுக்கு நிச்சயமாகச் சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் கவலையற்றவர்களாக ஆகமுடியும். அவர்கள் எந்தவிதச் சுமையையும் உணர மாட்டார்கள். உங்கள் எல்லோருக்கும் ஓர் இலட்சியம் இருக்க வேண்டும்: ஒரு குமார் என்றால் இலேசாக இருப்பவர், ஒளியாகவும் இலேசாகவும் (டபிள் லைற்) இருப்பவர் என்று அர்த்தம். குமார்களான உங்களின் இலட்சியம், முதல் இலக்கத்தவர் ஆகுவதாகும். உங்களுக்கு இந்த இலட்சியம் உள்ளதா? எவ்வாறாயினும், இந்த இலட்சியத்துடன்கூடவே, உங்களுக்கு அதற்குத் தேவையான தகைமைகளும் இருக்க வேண்டும். உங்களுக்கு மிக உயர்ந்த இலட்சியம் இருந்து, அதற்கான தகைமைகள் இல்லாவிட்டால், உங்களின் இலட்சியத்தை அடைவது கஷ்டமாக இருக்கும். ஆகவே, உங்களின் செயலைச் செய்வதற்கு முன்னர், உங்களின் புத்திகளில் தந்தையின் வழிகாட்டல்களை சதா வைத்திருங்கள்.

பிராமண வாழ்க்கையின் பிரதானமான பொக்கிஷங்கள், உங்களின் எண்ணங்களும் நேரமும் மூச்சுமே என பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். உங்களின் மூச்சு மிகவும் விலைமதிப்பற்றது. ஒரு மூச்சேனும் சாதாரணமானதாகவோ அல்லது வீணானதாகவோ போக அனுமதிக்காதீர்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் உங்களின் விசேடமான, இஷ்ட தெய்வத்தை நினையுங்கள் என மக்கள் சொல்வார்கள். உங்களின் மூச்சு வீணாகக்கூடாது. ஞானப் பொக்கிஷங்களும் சக்திகளின் பொக்கிஷங்களும் உள்ளன. ஆனால் நீங்கள் இந்தப் பிரதானமான பொக்கிஷங்களான காலம், எண்ணங்கள் மற்றும் மூச்சைப் பயனுள்ள முறையிலும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு ஏற்பவும் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் அவற்றில் எவற்றையும் வீணாக்கவில்லையே? நீங்கள் அவற்றை வீணாக்குவீர்களாக இருந்தால், உங்களால் எதையும் சேமிக்க முடியாது. உங்களின் சேமிப்புக்கணக்கு இப்போது சங்கமயுகத்தில் கட்டி எழுப்பப்படல் வேண்டும். நீங்கள் சத்திய மற்றும் திரேதா யுகங்களில் மேன்மையான அந்தஸ்தைப் பெற விரும்பினால், அல்லது, துவாபர மற்றும் கலியுகங்களில் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவராக இருக்கும் அந்தஸ்தைப் பெற விரும்பினால், அவை இரண்டுக்குமான உங்களின் கணக்கை இந்த வேளையில் நீங்கள் கட்டி எழுப்ப வேண்டும். இந்த சங்கமயுகத்தில் உங்களின் குறுகிய வாழ்க்கையில் உங்களின் நேரம், எண்ணங்கள், மூச்சு என்பவை எத்தனை விலைமதிப்பற்றவை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இதையிட்டுக் கவனயீனமாக இருக்காதீர்கள். உங்களின் நாட்களை வெறுமனே கழிக்காதீர்கள். ஏனென்றால், அது ஒரு நாள் கழிந்து சென்றது என்பதாக இருக்காது. ஆனால், நீங்கள் அதிகளவில் இழந்த ஒரு நாளாகவே கருதப்படும். எப்போதெல்லாம் உங்களுக்கு அவசியமற்ற எண்ணங்கள் ஏற்படுகிறதோ அல்லது எப்போதெல்லாம் நீங்கள் உங்களின் நேரத்தை வீணாக்குகிறீர்களோ, ஐந்து நிமிடங்கள்தானே வீணாகிப் போனது எனக் கருதாதீர்கள். ஆனால் நீங்கள் அந்த நிமிடங்களையும் சேமிக்க வேண்டும். இந்த நேரத்திற்கேற்ப, இயற்கை தனது பணியை மிக விரைவாகச் செய்கிறாள். அவள் தனது பாகத்தை ஏதாவதொரு முறையில் நடிப்பதைச் சதா காட்டிக் கொண்டே இருக்கிறாள். ஏதோவொரு இடத்தில் தனது பாகத்தை எப்படி நடிக்கிறாள் என்பதையும் காட்டுகிறாள். எவ்வாறாயினும், பிராமணக் குழந்தைகளான உங்களுக்கு, இயற்கையின் பிரபுக்களான உங்களுக்கு, பறக்கின்ற ஸ்திதி என்ற ஒரேயொரு நாடகமே உள்ளது. ஆகவே, இயற்கை தான் எப்படி நடிக்கிறாள் என்பதைக் காட்டினாலும், பிராமணர்களான நீங்களும் பறக்கின்ற ஸ்திதி என்ற உங்களின் பாகங்களை நடிக்கிறீர்கள்தானே?

ஒரிஸ்ஸாவில் வந்த சூறாவளியைப் பற்றி பாபாவிற்குத் தெரிவிக்கும் முகமாக ஒரு குழந்தை பாப்தாதாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆகவே, பாப்தாதா உங்களைக் கேட்கிறார்: இயற்கை தனது பாகத்தை எப்படி நடிக்கிறாள் என்பதை நீங்கள் கண்டீர்கள். இயற்கை தனது பாகத்தை எப்படி நடிக்கிறாள் என்பதை நீங்கள் வெறுமனே அவதானித்தீர்களா? அல்லது, பறக்கின்ற ஸ்திதி என்ற உங்களின் பாகத்தை நடிப்பதில் பிஸியாக இருந்தீர்களா? அல்லது, தொடர்ந்து செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்தீர்களா? நீங்கள் சகல செய்திகளையும் கேட்க வேண்டும். ஆனால், அந்தச் செய்திகளைக் கேட்பதற்கான ஆர்வத்தைக் காட்டுவதைப் போன்றே, உங்களின் பறக்கும் ஸ்திதியைப் பேணுவதிலும் ஆர்வம் உள்ளதா? சில குழந்தைகள் மறைமுகமான யோகிகள். அவர்கள் பாப்தாதாவிடமிருந்து அதிகளவு உதவியைப் பெற்றுள்ளார்கள். எவ்வாறாயினும், அசைக்க முடியாத சில குழந்தைகளும் இருக்கிறார்கள். பற்றற்ற பார்வையாளர்களாக, அவர்கள் அந்த வேளையில் சூழலைச் சாந்தமாக வைத்திருப்பதற்கு உதவினார்கள். அரசாங்கமும் அண்டை மாநிலங்களும் பௌதீகமான முறையில் உதவி வழங்கத் தயாராக இருந்ததைப் போல், பிராமணக் குழந்தைகளான நீங்களும் அமைதி மற்றும் சந்தோஷத்தின் ஒத்துழைப்பைக் கொடுக்கும் மேன்மையான இறை பணியைச் செய்யும் உங்களின் கடமையைச் செய்தீர்களா? அவர்களோ உடனடியாக, இந்த அரசாங்கம் இதைச் செய்தது, இன்னார் அதைச் செய்தார்கள் என அறிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல், பாப்தாதா கேட்கிறார்: பிராமணர்களான நீங்கள் உங்களின் கடமையைச் செய்தீர்களா? நீங்களும் விழிப்பாக இருக்க வேண்டும். பௌதீகமாக உதவி செய்வது அவசியமே. அதைச் செய்ய வேண்டாம் என பாப்தாதா உங்களுக்குச் சொல்லவில்லை. எனினும், பிராமண ஆத்மாக்களான உங்களின் விசேடமான பணி, வேறு எவரும் செய்ய முடியாத முறையில் ஒத்துழைப்பை வழங்குவதாகும். எனவே, இந்த முறையில் நீங்கள் விழிப்பாகவும் ஒத்துழைப்பவராகவும் இருந்தீர்களா? நீங்கள் இந்த முறையில் ஒத்துழைக்க வேண்டும்தானே? அல்லது, அவர்களுக்கு உடைகளும் உணவும் கிடைத்தால் போதுமா? அனைத்திற்கும் முதலில், அவர்களுக்கு அந்தச் சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதற்கான சக்தியும் மன அமைதியும் தேவை. ஆகவே, பௌதீக ஆதாரத்துடன்கூடவே, அவர்களுக்கு சூட்சுமமான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய தேவை உள்ளது. இதை பிராமணர்களான உங்களால் மட்டுமே கொடுக்க முடியும். வேறு எவராலும் இந்த ஒத்துழைப்பை வழங்க முடியாது. அது எதுவுமே இல்லை. அது ஓர் ஒத்திகை மட்டுமே. நிஜமான விடயம் இனிமேல்தான் வரவுள்ளது. என்ன வரவுள்ளதோ அதற்கான ஒத்திகையைத் தந்தையும் காலமும் உங்களுக்குத் தருகிறார்கள். ஆகவே, உங்களிடம் உள்ள சக்திகளையும் பொக்கிஷங்களையும் சரியான வேளையில் எப்படிப் பயன்படுத்துவது என உங்களுக்குத் தெரியுமா?

குமார்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் சக்திகளைச் சேமித்துள்ளீர்களா? நீங்கள் அமைதியைச் சேமித்துள்ளீர்களா? நீங்கள் மிக நன்றாக உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். இப்போது, இதை நடைமுறையில் செய்து காட்டுங்கள். நீங்கள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும், எல்லாவற்றையும் கேட்க வேண்டும். அதேவேளை பற்றற்ற பார்வையாளர்களாக ஒத்துழைக்க வேண்டும். நிஜமான விடயம் நடக்கும் வேளையில், நீங்கள் பயமற்றவர்களாகவும் பற்றற்ற பார்வையாளர்களாகவும் இருந்து உங்களின் பாகங்களை நடிக்க வேண்டும். என்ன பாகங்கள்? அருள்பவரின் குழந்தைகளான நீங்கள், அருள்பவர்களாகி, ஆத்மாக்களுக்கு என்ன தேவையோ அவற்றைக் கொடுக்க வேண்டும். ஆகவே, நீங்களே மாஸ்ரர் அருள்பவர்கள், அப்படித்தானே? உங்களின் களஞ்சியத்தைச் சேமியுங்கள்! நீங்கள் சேமித்த களஞ்சியத்திற்கேற்பவே உங்களால் அருள்பவர்கள் ஆகமுடியும். நீங்கள் இறுதிவரை உங்களுக்காகவே தொடர்ந்து சேமித்துக் கொண்டிருப்பீர்கள் என்றால், உங்களால் அருள்பவர்கள் ஆகமுடியாது. நீங்கள் பல பிறவிகளில் அடைய வேண்டிய மேன்மையான அந்தஸ்தை உங்களால் அடைய முடியாதிருக்கும். ஆகவே, ஒரு விடயத்தின் களஞ்சியத்தை உங்களுடன் வைத்திருங்கள். உங்களின் நல்லாசிகளினதும் மேன்மையான உணர்வுகளினதும் பொக்கிஷக் களஞ்சியம் எப்போதும் நிரம்பியிருக்க வேண்டும். இரண்டாவதாக, எல்லோருக்கும் அவரவருக்குத் தேவையான விசேடமான சக்திகளை உங்களால் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இப்போது, காலத்திற்கேற்ப, உங்களின் எண்ணங்களையும் நேரத்தையும் உங்களின் முயற்சிகளில் ஈடுபடுத்துங்கள். அத்துடன்கூடவே, ஓர் அருள்பவராகி, உங்களின் ஒத்துழைப்பை உலகிற்குக் கொடுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களுக்காக என்ன முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அமிர்தவேளையில், உங்களை ஒரு கீழ்ப்படிவான குழந்தையாக நினையுங்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விழித்தெழுவது, எப்படித் தூங்குவது, எப்படி உண்பது, எப்படிக் கர்மயோகி ஆகுவது என்பதெல்லாம் உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தந்தைக்குக் கீழ்ப்படிவது என்றால், தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள், அவ்வளவுதான். உங்களின் சொந்த மனதின் கட்டளைகளையோ (மன்மத்) அல்லது மற்றவர்களின் கட்டளைகளையோ (பரமத்) பின்பற்றாதீர்கள். ஸ்ரீமத்துடன் எதையும் கலக்காதீர்கள். சிலவேளைகளில் நீங்கள் உங்களின் சொந்த மனதையோ அல்லது மற்றவர்களின் மனங்களையோ பின்பற்றும்போது, சிரமப்பட வேண்டியிருக்கும். அது இலகுவாக இருக்காது. ஏனென்றால், மன்மத்தும் பரமத்தும் உங்களைப் பறக்க அனுமதிக்காது. மன்மத்தையும் பரமத்தையும் பின்பற்றுபவர்கள், சுமை உடையவர்கள் ஆகுகிறார்கள். அந்தச் சுமைகள் நீங்கள் பறப்பதைத் தடுக்கின்றன. ஸ்ரீமத் உங்களை இலேசாகவும் ஒளியாகவும் ஆக்கும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுதல் என்றால், இலகுவாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற எவரையும் எந்தவொரு சூழ்நிலையும் கீழே கொண்டு வரமுடியாது. எனவே, எப்படி ஸ்ரீமத்தைப் பின்பற்றுவது என உங்களுக்குத் தெரியுமா?

அச்சா, குமார்களான நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? விசேடமாக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். ஆகவே, உங்களுக்கு அந்த விருந்துபசாரம் கொடுக்கப்பட்டதா? நீங்கள் மிகவும் நேசிக்கப்படுபவர்கள்! எனவே, நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? நீங்கள் ஒரு பதில் கொடுப்பீர்களா அல்லது வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும், எல்லாவற்றையும் மறந்து விடுவீர்களா? இங்கே நீங்கள் இருக்கும்போது, இங்கிருக்கும் எல்லாவற்றையும் நினைப்பதாகவும், வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் அங்கிருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் நினைப்பதாகவும் இருக்கக்கூடாது. அப்படித்தானே? அது அப்படி இல்லையல்லவா? இங்கே நீங்கள் குதூகலமாக இருக்கிறீர்கள். மாயையின் எந்தவிதமான தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். மதுவனத்திலும் மாயையை அனுபவம் செய்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? மதுவனத்திலும் சிரமப்படுபவர்கள் யாராவது இருக்கிறீர்களா? நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். இது நல்லது. பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அரசாங்கத்தின் கவனம் இளைஞர் குழுவின் மீது திரும்பும் ஒரு காலம் வரும். எவ்வாறாயினும், நீங்கள் தடைகளை அழிப்பவர்கள் ஆகும்போதே அது நடக்கும். தடைகளை அழிப்பவர்கள் என்று யார் அழைக்கப்படுகிறார்கள்? இது உங்கள் எல்லோருடைய பெயரும்தானே? எந்தவொரு குமாரையும் எந்தவொரு தடையும் எதிர்ப்பதற்குத் தைரியம் இல்லாதிருக்கும்போது மட்டுமே, நீங்கள் தடைகளை அழிப்பவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். தடைகள் உங்களைத் தாக்கக்கூடாது. நீங்கள் அவற்றை அழித்து விட வேண்டும். தடைகளை அழிப்பவர்களாக இருப்பதற்கான தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது, வீட்டுக்குப் போனதும், ‘தாதி, அங்கு மிக நன்றாக இருந்தது, ஆனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை!’ என நீங்கள் எழுதுவீர்களா? நீங்கள் இப்படி எழுத மாட்டீர்கள்தானே? நல்ல செய்திகளை எழுதுங்கள். நீங்கள் ஓகே, மிகவும் நன்றாக இருக்கிறீர்கள், நீங்கள் தடைகளை அழிப்பவர்கள் என்று எழுதுங்கள். ஒரு வார்த்தை எழுதினால் போதும். நீண்ட கடிதம் எழுதாதீர்கள். ஓகே! என்று மட்டும் எழுதுங்கள்.

மதுவனத்தின் சிறப்பியல்பும் பாப்தாதாவை வந்தடைந்துள்ளது. அவர்கள் தமது அட்டவணைகளை அனுப்பியுள்ளார்கள். அவை பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. பாபாவின் வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படியும் கீழ்ப்படிவான குழந்தைகளாகவே பாப்தாதா சகல குழந்தைகளையும் கருதுகிறார். உங்களுக்கு ஒரு விசேடமான பணியைச் செய்யும்படி சொன்னதுமே, என்றும் தயார் நிலையில் இருந்த வண்ணம் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். ஆகவே, பாப்தாதா உங்களுக்கு விசேடமான பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் அட்டவணையைத் தெளிவாக எழுதியுள்ளீர்கள். (தாதியிடம் பேசுகிறார்) நீங்களும் அவர்களின் பெறுபேறுகளைப் பார்த்து, ஒரு வகுப்பு எடுக்க வேண்டும். அவர்கள் தமது ஸ்திதியை மிக நன்றாக எழுதியுள்ளார்கள். பாப்தாதா உங்கள் எல்லோரையும் பாராட்டுகிறார். நேர்மையான இதயத்தையிட்டு பிரபு மகிழ்ச்சி அடைகிறார். அச்சா.

எங்கும் உள்ள பாப்தாதாவின் கீழ்ப்படிவான குழந்தைகள் எல்லோருக்கும், சதா தடைகளை அழிப்பவர்களாக இருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும், இலகுவாகவும் எப்போதும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் சிரமப்படுவதில் இருந்து விடுபட்டிருப்பவர்களுக்கும் சதா மகிழ்ச்சியாகப் பறப்பவர்களுக்கும் மற்றவர்களையும் பறக்கச் செய்பவர்களுக்கும், சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி வழிபவர்களுக்கும் தந்தைக்கு நெருக்கமாகவும் சமமானவர்களாகவும் இருக்கும் குழந்தைகளுக்கும் மிகுந்த அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும். குறிப்பாகக் களைப்பற்ற மற்றும் என்றும் தயார் நிலையில் இருக்கும் குமார்களுக்கு, பறக்கும் ஸ்திதியில் பறப்பவர்களுக்கு, பாப்தாதாவின் விசேடமான அன்பும் நினைவுகளும்.

பாப்தாதா டயமண்ட் மண்டபத்தில் சுற்றிவந்து அங்கே அமர்ந்துள்ள சகோதர, சகோதரிகள் எல்லோருக்கும் திருஷ்டி கொடுத்தார்.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் அதிகளவு அன்பு வைத்திருக்கிறார். பாப்தாதா உங்களில் குறைந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என நினைக்காதீர்கள். நீங்கள் பாபாவை மறந்தாலும், பாபா ஒவ்வொரு குழந்தையின் மணிமாலைகளை சதா உருட்டுகிறார். ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பும் சதா பாப்தாதாவின் முன்னால் இருக்கின்றது. எந்தவொரு குழந்தையும் விசேடமானவர் இல்லை என்பது இல்லை. ஒவ்வொரு குழந்தையும் விசேடமானவர். தந்தை ஒருபோதும் ஒரு குழந்தையையேனும் மறப்பதில்லை. ஆகவே, நீங்கள் எல்லோரும் உங்களை ஒரு விசேடமான பணிக்குக் கருவிகளான விசேடமான ஆத்மாக்கள் எனக் கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேற வேண்டும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா ஆன்மீக ஸ்திதியில் இருந்தவண்ணம் மற்றவர்களை ஆத்மாக்களாகப் பார்க்கும் ஓர் ஆன்மீக ரோஜா ஆகுவீர்களாக.

ஆன்மீக ரோஜா என்பவர் சதா ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பவர் ஆவார். ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பவர்கள் எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும், அவர்கள் சரீரங்களை அன்றி, ஆத்மாக்களையே பார்ப்பார்கள். எனவே, சதா ஆன்மீக ஸ்திதியில் இருந்து மற்றவர்களையும் ஆத்மாக்களாகப் பாருங்கள். தந்தை எப்படி அதிமேலானவரோ, அப்படியே அவரின் பூந்தோட்டமும் அதிமேலானது. குழந்தைகளான நீங்கள் அந்தப் பூந்தோட்டத்தின் விசேடமான அலங்காரங்கள், ஆன்மீக ரோஜாக்கள் ஆவீர்கள். உங்களின் ஆன்மீக நறுமணம் ஆத்மாக்கள் பலருக்கு நன்மையை ஏற்படுத்தும்.

சுலோகம்:
ஏதாவதொரு ஒழுக்கமுறைக் கோட்பாடுகளை மீறுவதன் மூலம் நீங்கள் யாரையாவது களிப்பூட்டுவீர்களாயின், அது உங்களின் துன்பக் கணக்கில் சேமிக்கப்படும்.