06.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்திற்கு ஏற்ப நல்ல சேவை செய்கின்றவர்களே இராச்சியம் என்ற பரிசைப் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் உதவியாளர் ஆகியுள்ளீர்கள் என்பதால் நீங்கள் ஒரு மிகப்பெரிய பரிசைப் பெறுகின்றீர்கள்.

பாடல்:
தந்தையின் ஞான நடனம் எக் குழந்தைகளின் முன்னிலையில் மிகவும் நன்றாக இடம்பெறுகின்றது?

பதில்:
ஞானத்தின் மீது அதிகளவு ஆர்வம் உள்ளவர்களதும், யோகத்தின் மீது போதை கொண்டிருப்பவர்களின் முன்னிலையிலும் தந்தையின் ஞான நடனம் மிகவும் நன்றாக இடம்பெறுகின்றது. மாணவர்கள் வரிசைக்கிரமமானவர்கள். ஆனால் இது மிகவும் அற்புதமான பாடசாலையாகும். சிலருக்கு எந்த ஞானமும் இல்லை. அவர்களுக்கு அன்பும் நம்பிக்கையும் மாத்திரமே உள்ளது. அந்த அன்பினதும் நம்பிக்கையினதும் அடிப்படையிலேயே அவர்கள் ஆஸ்திக்கான உரிமையைக் கோரிக் கொள்கின்றார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே இந்த ஆன்மீக ஞானம் உள்ளது. எந்த மனிதர்களுக்கும் இந்த ஆன்மீக ஞானம் இல்லை. ஒரேயொருவர் மாத்திரமே உங்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார், அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். ஒவ்வொரு மனிதரும் தத்தமக்கென ஒரு சிறப்பியல்பைக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சட்டநிபுணர் ஒரு சட்டநிபுணராகவும், ஒரு வைத்தியர் ஒரு வைத்தியராகவும் உள்ளார். ஒவ்வொருவரது கடமையும் பாகமும் வெவ்வேறானதாகும். ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கென சொந்த அழியாத பாகத்தைப் பெற்றுள்ளார். ஓர் ஆத்மா சின்னஞ்சிறியவர். அது ஓர் அற்புதமே! அவர்கள் பாடுகின்றார்கள்: ~~ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கின்றது|| இச் சரீரம் அசரீரியான ஆத்மாவின் சிம்மாசனம் என்று நினைவுகூரப்படுகிறது. ஆத்மா மிகவும் சின்னஞ்சிறிய புள்ளி என்பதுடன், அவர் ஏனைய ஆத்மாக்கள் அனைவருடன் நடிக்கும் ஒரு நடிகனாவார். ஒரு பிறவியின் முகச்சாயல் ஏனைய பிறவிகளின் முகச்சாயலைப் போன்றிருக்க மாட்டாது. ஒரு பிறவிக்கான பாகம் மற்றைய பிறவிக்கான பாகத்தைப் போன்றிருக்க மாட்டாது. எவருக்கும் தான் முன்னைய பிறவியில் எவ்வாறு இருந்தார் என்பதோ அல்லது அடுத்த பிறவியில் எவ்வாறிருப்பார் என்பதோ தெரியாது. இந்தச் சங்கமயுகத்தில் தந்தையே இங்கமர்ந்திருந்து இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். காலையில், குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்கும் பொழுது, அணைந்திருந்த ஆத்மாவின் ஒளி ஏற்றப்படுகின்றது. ஆத்மாக்களில் அதிகளவு துருப் பிடித்திருப்பதால், தந்தை பொற்கொல்லரின் தொழிலையும் செய்கின்றார். அவர் கலப்படம் அடைந்துள்ள ஆத்மாக்களைத் தூய்மையாக்குகின்றார். கலப்படம் கலந்துள்ளது, இல்லையா? வெள்ளி, செம்பு, இரும்பு போன்றவை யுகங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஆகும். சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் நீங்கள் சதோபிரதானாக இருக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் சதோ, இரஜோ, தமோ நிலைகளைக் கடக்கின்றீர்கள். எந்த மனிதருமோ அல்லது குருவுமோ இவ்விடயங்களை விளங்கப்படுத்த மாட்டார்கள். ஒரேயொரு சற்குருவே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் சற்குருவின் அமரத்துவ சிம்மாசனத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். அந்தச் சற்குருவிற்கு ஒரு சிம்மாசனம் தேவையாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுக்கெனச் சிம்மாசனங்களைக் கொண்டிருப்பதைப் போன்றே, அவரும் ஒரு சிம்மாசனத்தைப் பெற வேண்டும். அவர் கூறுகின்றார்: நான் எந்தச் சிம்மாசனத்தைப் பெறுகின்றேன் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் ‘நேற்றி, நேற்றி’ (அதுவும் இல்லை, இதுவும் இல்லை, எங்களுக்குத் தெரியாது) என்று கூறிக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு முன்னர் எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். எதுவுமே புரியாதவர்கள் விவேகமற்றவர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். பாரதமக்கள், தாம் மிகவும் விவேகமுள்ளவர்களாக இருந்ததாக நம்புகின்றார்கள். இராச்சிய பாக்கியம் அவர்களுக்குரியதாகவே இருந்தது. அவர்கள் இப்பொழுது விவேகமற்றவர்கள் ஆகி விட்டார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சமயநூல்கள் போன்ற அனைத்தையும் கற்றிருந்தாலும், நீங்கள் இப்பொழுது அனைத்தையும் மறக்க வேண்டும். ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்தால் போதும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழலாம். சந்நியாசிகளைப் பின்பற்றுகின்றவர்களும் வீட்டிலேயே வாழ்கின்றார்கள். உண்மையாகப் பின்பற்றுபவர்களே அவர்களுடன் வாழ்கின்றார்கள். சிலர் ஓரிடத்திலும், சிலர் வேறிடத்திலும் வாழ்கின்றார்கள். தந்தை அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இதுவே ஞான நடனம் என்று அழைக்கப்படுகின்றது. யோகம் மௌனமாகும். ஆனால் ஞான நடனம் உள்ளது. நீங்கள் யோகத்தில் முற்றிலும் மௌனமாக அமர வேண்டும். அவர்கள் மரண அமைதியைப் பற்றிப் பேசுகின்றார்கள்: 3 நிமிடத்திற்கான மரண அமைதி. எவ்வாறாயினும், எவருக்கும் அதன் அர்த்தம் புரிவதில்லை. சந்நியாசிகள் அமைதியைத் தேடி காட்டிற்குச் செல்கின்றார்கள். ஆனால் அவர்களால் அங்கே அமைதியைப் பெற முடியாது. கழுத்து மாலையைக் கழுத்திலேயே அணிந்து கொண்டு அதைத் தேடிய ராணியைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அது அமைதியையே குறிக்கின்றது. இப்பொழுது தந்தை கொடுக்கின்ற உதாரணங்கள் பின்னர் பக்தி மார்க்கத்தில் தொடர்கின்றன. இந்நேரத்தில் தந்தை பழைய உலகை மாற்றி அதனைப் புதியதாக ஆக்குகின்றார். அவர் அதனைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்குகின்றார். அனைவரும் விகாரத்தின் மூலம் பிறப்பெடுப்பதால், இந்த உலகம் தமோபிரதானாகவும், தூய்மையற்றும் இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். தேவர்கள் விகாரத்தின் மூலம் பிறப்பதில்லை. அது முற்றிலும் விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் விகாரமற்ற உலகத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. நீங்கள் பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். பாபாவைப் பற்றி நீங்கள் ஒருபொழுதும் இவ்வாறு கூற மாட்டீர்கள். தந்தை ஒருபொழுதுமே பூஜிப்பவர் ஆகுவதில்லை. கடவுள் ஒவ்வொரு துணிக்கையிலும் இருக்கின்றார் என்று மக்கள் கூறுகின்றார்கள். ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: அவ்வாறு தர்மத்திற்கு அவதூறு ஏற்படும் பொழுதெல்லாம்… அவர்கள் அந்த வாசகங்களை, அவற்றின் அர்த்தம் புரியாது அவ்வாறு வாசிக்கின்றார்கள். சரீரம் மாத்திரமே தூய்மையற்றதாகுகின்றது என்றும், ஆத்மா தூய்மையற்றவர் ஆகுவதில்லை என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களே முதலில் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். ஆகையாலேயே சரீரங்கள் தூய்மையற்றதாகின்றன. தங்கத்தில் கலப்படம் கலக்கப்படுகின்றது, பின்னர் அதில் ஆபரணம் செய்யப்படும் போது அது அவ்வாறு ஆகின்றது. எவ்வாறாயினும், அவை அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா உள்ளார். ‘உயிருள்ளவர்’ என்ற கூற்றே உள்ளது, ‘உயிருள்ள பரமாத்மா’ என்று கூறப்படுவதில்லை. ‘மகாத்மா’ என்றே கூறப்படுகின்றது. ‘மகா பரமாத்மா’ என்று கூறப்படுவதில்லை. ஆத்மாவே வெவ்வேறு சரீரங்களை எடுத்துத் தனது பாகத்தை நடிக்கின்றார். எனவே, யோகம் என்றால் முழுமையான மௌனமாகும். இது ஞான நடனமாகும். ஆர்வம் உள்ளவர்களின் முன்னிலையிலேயே தந்தையின் ஞான நடனம் இடம்பெறுகின்றது. ஒவ்வொருவரும் எவ்வளவு ஞானத்தைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும், ஒவ்வொருவரும் யோகத்தின் போதையை எவ்வளவு கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் தந்தை அறிவார். ஓர் ஆசிரியர் இதனை அறிவார். மிகவும் நல்ல தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கும் குழந்தைகள் யார் என்பதும் தந்தைக்குத் தெரியும். நல்ல குழந்தைகளே எங்கும் அழைக்கப்படுகின்றார்கள். குழந்தைகள் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். பிரஜைகளும் அவர்களின் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே உருவாக்கப்படுகின்றார்கள். இது ஒரு பாட்சாலா (கல்விக்கூடம்) ஆகும். ஒரு பாட்சாலாவில் அனைவரும் வரிசைக்கிரமமாகவே அமர்கின்றார்கள். இன்னார் திறமைசாலி என்பதையும், இன்னார் நடுத்தரமானவர் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். இது ஒரு எல்லையற்ற வகுப்பறையாகும். இங்கே, நீங்கள் எவரையும் வரிசைக்கிரமமாக அமர்த்த முடியாது. பாபாவின் முன்னிலையில் ஒருவர் அமர்ந்திருந்தாலும் அவருக்கு எந்த ஞானமும் இல்லை என்பதையும், அவரிடம் அன்பான பக்தி உள்ளது என்பதும் பாபாவிற்குத் தெரியும். அவருக்கு ஞானமும் இல்லை, அவர் நினைவு செய்வதும் இல்லை. இவரே பாபா என்றும், இவரிடமிருந்தே ஆஸ்தியைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும் மாத்திரமே அவர் கொண்டிருக்கின்றார். அனைவரும் ஆஸ்தியைப் பெறவுள்ள பொழுதிலும், இராச்சியத்தில் அவர்களுக்குரிய அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே உள்ளது. மிகவும் நன்றாகச் சேவை செய்கின்றவர்கள் மிகவும் நல்லதொரு பரிசைப் பெறுகின்றார்கள். இங்கே, அவர்கள் அனைவருக்கும்; பரிசுகளைத் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆலோசனையைக் கொடுப்பவர்களும் அதிகளவு பிரயத்தனம் செய்பவர்களும் பரிசைப் பெறுகின்றார்கள். உலகில் எவ்வாறு உண்மையான அமைதி நிலவ முடியும் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: உலகில் எப்பொழுது அமைதி நிலவியது என்று அவர்களிடம் வினவுங்கள். நீங்கள் எப்பொழுதாவது அதனைப் பற்றிக் கேள்வியுற்றோ அல்லது பார்த்தோ இருக்கின்றீர்களா? எவ்வகையான அமைதி வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? அது எப்பொழுது இருந்தது? இவ்வினாக்களை நீங்கள் வினவலாம். ஏனெனில் பதில்கள் உங்களுக்குத் தெரியும். வினாக்களை வினவுபவர்களுக்குப் பதில் தெரியாதிருந்தால், அவர்களை எவ்வாறு நீங்கள் அழைப்பீர்கள்? பத்திரிகைகளின் மூலம் நீங்கள் அவர்களை வினவலாம்: நீங்கள் எத்தகைய அமைதியைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்? ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் வசிக்கும் இடத்திலேயே அமைதி உள்ளது. தந்தை கூறுகின்றார்: முதலில், அமைதி தாமத்தையும், இரண்டாவதாக, சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். உலகச் சக்கரத்தைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாததாலேயே, அவர்கள் பல பொய்கள் போன்றவற்றைக் கூறியுள்ளார்கள். நாங்கள் இரட்டைக் கிரீடம் சூடியவர்கள் ஆகுகின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் தேவர்களாக இருந்தோம். இப்பொழுது மனிதர்கள் ஆகியுள்ளோம். தேவர்கள் தேவர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் இருப்பதால் அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. குறைபாடுடையவர்கள் கூறுகின்றார்கள்: நான் தெய்வீகக் குணங்கள் அற்றவன். என்னிடம் எந்தத் தெய்வீகக் குணமும் இல்லை. அவர்கள் சமயநூல்களின் மூலம் கேட்ட விடயங்களைப் பற்றியே பாடுகின்றார்கள். கிளிகளுக்குப் பாடக் கற்றுக் கொடுத்தால் அவை பாடுவதைப் போன்று அவர்கள் புகழ் பாடுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, வந்து எங்கள் அனைவரையும் தூய்மையாக்குங்கள். உண்மையில், பிரம்மலோகத்தை ஓர் உலகம் என்று அழைக்க முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் அங்கே வசிக்கின்றீர்கள். உண்மையில், இவ் உலகத்தில் மாத்திரமே நீங்கள் உங்கள் பாகத்தை நடிக்கின்றீர்கள். அது மௌன உலகமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு எனது அறிமுகத்தைக் கொடுக்கி;ன்றேன். தனது சொந்தப் பிறவிகளைப் பற்றி அறியாதவரினுள்ளேயே நான் பிரவேசிக்கின்றேன். நீங்கள் இப்பொழுது இதனைச் செவிமடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். இது இராவண உலகமாகிய, பழைய தூய்மையற்ற உலகமாகும். தூய்மையில் முதலாவதாக இருந்தவரே, பின்னர் தூய்மையற்று, இறுதி இலக்கமுடையவர் ஆகியுள்ளார். நான் அவரை எனது இரதமாக்கி உள்ளேன். முதல் இலக்கத்தை உடையவர் இப்பொழுது இங்கு இறுதியாக (இறுதியில்) வந்துள்ளார். அவர் மீண்டும் ஒருமுறை முதலாமவர் ஆக வேண்டும். படங்களில் பிரம்மாவின் மூலம் நான் ஆதி சனாதன தேவ தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றேன் என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நான் தேவ தர்மத்திற்குள் வருவதாகக் குறிப்பிடப்படவில்லை. நான் பிரவேசித்து அமர்கின்ற அந்தச் சரீரத்திற்குரிய ஆத்மா பின்னர் நாராயணன் ஆகுகின்றார். வேறு எந்த விஷ்ணுவும் இல்லை. இலக்ஷ்மி நாராயணன் அல்லது இராதை கிருஷ்ணரின் ஜோடியே அதுவாகும். யார் விஷ்ணு என்பது எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு வேதங்களினதும், சமயநூல்களினதும், படங்கள் போன்றவற்றினதும் இரகசியங்களைக் கூறுகின்றேன். நான் பிரவேசிக்கின்றவரே பின்னர் இவ்வாறு ஆகுகின்றார். இது இல்லறப் பாதையாகும். இந்தப் பிரம்மாவும் சரஸ்வதியும் பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றார்கள். நான் இவரினுள் (பிரம்மா) பிரவேசித்து, பிராமணர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன். இந்தப் பிரம்மாவும் அதனைச் செவிமடுக்கின்றார். அவரே முதலில் செவிமடுக்கின்றார். இதுவே பிரம்மபுத்திரா என்ற பெரிய நதியாகும். கடலினதும் பிரம்மபுத்திரா நதியினதும் மேலா (சந்திப்பு) இடம்பெறுகின்றது. கடலும் நதியும் சந்திக்கும் பொழுது பெரியதொரு மேலா இடம்பெறுகின்றது. நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். இவர் பின்னர் அவ்வாறு ஆகுகின்றார். அவ்வாறு (பிரம்மாவில் இருந்து விஷ்ணு) ஆகுவதற்கு ஒரு விநாடியே எடுக்கின்றது. அவருக்குக் காட்சி கிடைத்தவுடன் தான் அவ்வாறு ஆகுவேன் என்ற நம்பிக்கை அவருக்கு உடனேயே ஏற்படுகின்றது. நான் உலக அதிபதி ஆகப் போகின்றேன். எனவே, நான் ஏன் இந்த ‘கழுதைத்தனத்தை’ தொடர வேண்டும்? அவர் அனைத்தையும் கைவிட்டார். பாபா வந்துவிட்டார் என்பதையும், இந்த உலகம் முடிவடையப் போகின்றது என்பதையும் நீங்கள் முதன்முதலில் கேள்விப்பட்ட பொழுது, நீங்களும் விரைந்து ஓடி வந்தீர்கள். பாபா உங்களைக் கடத்திக் கொண்டு வரவில்லை. ஆம், ஓர் ‘பத்தி’ உருவாக்கப்பட வேண்டியிருந்தது. அவர்கள் கிருஷ்ணரே தங்களைக் கடத்தினார் என்று கூறுகின்றார்கள். நல்லது, கிருஷ்ணர் அவர்களைக் கடத்தியிருந்தால், அவர் அவர்களை அரசிகள் ஆக்கியுள்ளார். எனவே, நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் சக்கரவர்த்திகளும் சக்கரவர்த்தினிகளும் ஆகுகின்றீர்கள். இது நல்லது. அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பின்னர் கூறுகின்றீர்கள்: நீங்கள் அவதூறு செய்யப்படும் பொழுதே நீங்கள் காலாங்கிதார் (மயிலிறகு கிரீடம் அணிந்தவர்) ஆகுகிறீர்கள். சிவபாபாவே இகழப்படுகிறார். அவர்கள் அவரை அதிகளவு அவதூறு செய்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: ஆத்மாவாகிய நான், பரமாத்மா ஆவேன், பரமாத்மாவே ஆத்மா ஆவார். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: அது அவ்வாறில்லை. ஆத்மாவாகிய நான் இப்பொழுது இந்த நேரத்தில் பிராமணன் ஆவேன். பிராமண குலமே அதி மேன்மையான குலமாகும். அதனை ஒரு வம்சம் என்று அழைக்க முடியாது. ஓரு வம்சம் என்றால் அதற்கு ஓர் இராச்சியமும் இருக்கும். இது உங்கள் குலமாகும். இது மிகவும் இலகுவானதாகும். பிராமணர்களாகிய நாங்கள் தேவர்கள் ஆகவுள்ளோம். ஆகையாலேயே நாங்கள் கட்டாயமாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். தேவர்களுக்கு சிகரட், புகையிலை போன்றவை ஒருபொழுதும் பிரசாதமாகப் படைக்கப்படுவதில்லை. ஸ்ரீநாத்துவாரில் அவர்கள் மிகவும் ஊட்டச்சத்து மிக்க செழிப்பான உணவையே படைக்கின்றார்கள். அவர்கள் யாத்திரீகர்கள் வாங்கும் அளவிற்கு அதிகளவில் போக் தயாரித்து கடைகளில் விற்கின்றார்கள். மக்களுக்கு அதில் அதிகளவு அன்பும் பக்தியும் உள்ளது. அத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் நிகழ்வதில்லை. அங்கே எதனையும் பழுதடையச் செய்யும் ஈக்கள் போன்றவை எதுவும் இருப்பதில்லை. அங்கே அத்தகைய நோய்களும் இருப்பதில்லை. முக்கியஸ்தர்கள் அதிகளவு சுத்தத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அங்கே அத்தகைய விடயங்கள் இல்லை. அங்கே நோய் போன்றவை எதுவும் இருப்பதில்லை. துவாபர யுகத்தின் பின்னரே இந்த நோய்கள் வெளிப்படுகின்றன. தந்தை வந்து உங்களை என்றென்றும் ஆரோக்கியமானவர் ஆக்குகின்றார். நீங்கள் தந்தையை நினைவு செய்ய முயற்சிக்கின்றீர்கள். அதன் மூலம் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் நீண்ட ஆயுட்காலத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். அது நேற்று இடம்பெற்றவையேயாகும். நீங்கள் 150 வருடங்களுக்கான ஆயுட்காலத்தைக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது சராசரியாக 40, 45 வயதே ஆயுட்காலமாக உள்ளது. ஏனெனில் அவர்கள் யோகிகளாக வாழ்ந்தவர்கள். ஆனால் இவர்கள் போகிகள் ஆவார்கள் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுவர்கள்). நீங்கள் இராஜயோகிகளும் இராஜரிஷிகளும் ஆவீர்கள். ஆகையாலேயே நீங்கள் தூய்மையாக உள்ளீர்கள். எவ்வாறாயினும், இது அதி மங்களகரமான சங்கமயுகமாகும். இது சங்கம மாதமோ அல்லது வருடமோ அல்ல. தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் வருகின்றேன். தந்தை தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும், அவர் கூறுகின்றார்: ஒரு விடயத்தை என்றுமே மறந்து விடாதீர்கள். நீங்கள் தூய்மை ஆக விரும்பினால், என்னை நினைவு செய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்திடுங்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நான் ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் ஆக்க வர வேண்டும். அதன் மூலம், நீங்கள் தூய சரீரங்களைப் பெறுவீர்கள். இங்கே, மக்கள் விகாரத்தின் மூலம் பிறப்பெடுக்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் முழுமையாகத் தூய்மையாகும் பொழுது, உங்கள் பழைய சப்பாத்துக்களை நீக்கி, புதியவற்றைப் பெறுவீர்கள். உங்களையிட்டு நினைவுகூரப்படுகிறது: தாய்மாருக்கு வந்தனம். நீங்கள்; பூமியையும் தூய்மையாக்குகின்றீர்கள். தாய்மார்களாகிய நீங்களே சுவர்க்க வாசலைத் திறக்கின்றீர்கள். எவ்வாறாயினும், எவருக்கும் இது தெரியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாவின் ஒளியை ஏற்றுவதற்கு, அதிகாலை வேளையில் நினைவு யாத்திரையில் அமருங்கள். நினைவு செய்தலினால் மாத்திரமே துரு அகற்றப்படும். ஆத்மாவில் கலந்துள்ள கலப்படம் நினைவு செய்தலினால் அகற்றப்பட்டு, நீங்கள் உண்மையான தங்கமாக வேண்டும்.

2. தந்தையிடமிருந்து உயர்ந்த அந்தஸ்து என்ற பரிசைக் கோருவதற்கு, நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருப்பதுடன், ஞானம் நிறைந்தவர்களாகவும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும் ஆகுங்கள். சேவை செய்வதன் மூலம் இதனைச் செய்து காட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரு விக்கிரகமாகி, உங்கள் தூய்மையின் அலங்காரத்தை உங்கள் முகத்;திலும் உங்கள் நடத்தையிலும் காட்டுவீர்களாக.

பிராமண வாழ்க்கையின் அலங்காரம் தூய்மையாகும். அனைவரும் உங்கள் தூய்மையின் அலங்காரத்தை ஒவ்வொரு கணமும் உங்கள் முகத்;திலும் உங்கள் நடத்தையிலும் அனுபவம் செய்யட்டும்;. தூய்மையின் அலங்காரம் சதா உங்கள் திருஷ்டியில், முகத்தில், கரங்களில், பாதத்தில் தென்படட்டும். ஒவ்வொருவரும் கூறட்டும்: ~~இவரின் தோற்றத்தில் தூய்மை தெரிகின்றது||. உங்கள் கண்களில் தூய்மையின் பிரகாசமும், முகத்தில் தூய்மையின் புன்னகையும் இருக்கட்டும். அவர்கள் வேறு எதனையுமே பார்க்காதிருக்கட்டும். இதுவே தூய்மையின் அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்ட விக்கிரகமாக இருத்தல் எனப்படுகின்றது.

சுலோகம்:
வீணான உறவுமுறைகளும் தொடர்புகளும் உங்கள் கணக்கை வெறுமையாக்குகின்றன. ஆகையால் அனைத்து வீணானவற்றையும் முடித்;து விடுங்கள்.