07.04.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    01.03.99     Om Shanti     Madhuban


உண்மையான ஹோலி என்றால் சம்பூரணமாகத் தூய்மை ஆகுவதும் சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பதும் ஆகும்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது அதிபுனிதமான, அதிமேலான குழந்தைகளைப் பார்த்தார். குழந்தைகளான உங்களை விட உயர்வான, அதிமேன்மையான ஆத்மாக்கள் யாராவது இந்த உலகில் இருக்கிறார்களா? நீங்கள் அதிமேலான தந்தையின் குழந்தைகள். கல்பம் முழுவதும் சுற்றி வந்து, உயர்ந்த அந்தஸ்தை உடைய எவரையாவது உங்களால் காண முடிகிறதா எனப் பாருங்கள். நீங்கள் ஆட்சியாளர்களாக இருந்தபோது, உங்களை விட மேலான இராச்சியத்தைக் கொண்ட எவராவது இருந்தார்களா? நீங்கள் பூஜிக்கப்பட்டு புகழப்பட்ட அளவிற்கு, அதேபோன்று சரியான முறையில் பூஜிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? நாடகத்தின் அற்புதமான இரகசியம் என்னவென்றால், மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், உங்களின் உயிர்வாழும் ரூபங்களில், ஞானத்தின் அடிப்படையில் இந்த வேளையில் உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபத்தை அறிவீர்கள். அத்துடன் உணர்ந்துள்ளீர்கள். ஒருபுறம், உயிர்வாழும் ஆத்மாக்களான நீங்கள் இருக்கிறீர்கள். மறுபுறம், உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபங்களின் உயிரற்ற ரூபங்கள் உள்ளன. உங்களால் உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபங்களைக் காண முடிகிறதல்லவா? உங்களால் அவற்றைக் காண முடிகிறதா? நீங்கள் உங்களின் உயிரற்ற பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபங்களிலும் உங்களின் உயிருள்ள ரூபங்களிலும் இருக்கிறீர்கள். இது அற்புதமானதொரு நாடகம் ஆகும்! உங்களின் இராச்சியத்தைப் பொறுத்தவரை, உங்களிடம் உள்ள இராச்சியம் கல்பம் முழுவதிலும் தடைகளில் இருந்து விடுபட்டதோர் இராச்சியம் ஆகும். ஆத்மாக்களான உங்களிடம் மட்டுமே இத்தகைய ஆட்ட, அசைக்க முடியாத இராச்சியம் உள்ளது. பலர் அரசர்கள் ஆகுகிறார்கள். ஆனால், உலகச் சக்கரவர்த்திகளான நீங்களும் உலகச் சக்கரவர்த்திகளின் அரச குடும்பங்களுமே எல்லாவற்றிலும் அதிமேன்மையானவை ஆகும். எனவே, நீங்களே இராச்சியத்திலும் அதிமேலானவர்கள். அத்துடன் நீங்களே உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபத்திலும் அதிமேலானவர்கள். இப்போது, சங்கமயுகத்தில், நீங்கள் இறைவனின் ஆஸ்தியைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். இறைவனுடன் சந்திப்பைக் கொண்டாடும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். அத்துடன் இறையன்பைப் பெறுகின்ற உரிமையையும் பெற்றுள்ளீர்கள். இறைவனின் குடும்பத்தில் ஓர் ஆத்மாவாக வேறு யாராவது ஆகுவார்களா? நீங்கள் மட்டுமே அப்படி ஆகுகிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்களா? அல்லது இன்னமும் அப்படி ஆகவேண்டியுள்ளதா? நீங்கள் இப்போது அப்படி ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்போது உங்களின் ஆஸ்தியைக் கோரி, சம்பூரணம் ஆகுகிறீர்கள். அத்துடன் தந்தையுடன் வீடு திரும்பப் போகின்றீர்கள். சங்கமயுகத்தின் சந்தோஷம், சங்கமயுகத்தின் பேறுகள், சங்கமயுகத்தின் காலம் என்பவை மிகவும் அழகானவை, அல்லவா? அவை மிகவும் அழகானவை. இந்தச் சங்கமயுகத்திற்கான நேரம், உங்களின் ஆட்சி செய்யும் நேரத்தை விட அழகானதல்லவா? இது அழகானதா அல்லது, நீங்கள் அங்கே விரைந்து செல்ல விரும்புகிறீர்களா? அப்படியென்றால், விநாசம் எப்போதும் இடம்பெறும் என நீங்கள் ஏன் பாபாவைக் கேட்கிறீர்கள்? விநாசம் எப்போது இடம்பெறும், என்ன நடக்கும், அந்த வேளையில் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் எங்கே இருந்தாலும், பாபாவின் நினைவில் இருப்பீர்களாயின், நீங்கள் தந்தையுடன் இருப்பீர்கள். தந்தையுடன் நீங்கள் உங்களின் பௌதீக ரூபத்திலோ அல்லது சூட்சும ரூபத்திலோ இருந்தாலும், உங்களுக்கு எதுவும் நடக்காது. சாகார் பாபாவின் நாட்களில் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்பட்டதுதானே? உங்களுக்கு அந்தக் கதை நினைவிருக்கிறதா? சூளையில் இருந்த பூனைக்குட்டிகளுக்கு என்ன நடந்தது? அவை பாதுகாப்பாக இருந்தன, அல்லவா? அல்லது, அவை எரிந்து போயினவா? அவை எல்லாம் பாதுகாப்பாகவே இருந்தன. எனவே, குழந்தைகளான நீங்கள் தந்தையுடன் இருக்கும்போது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். உங்களின் புத்திகள் வேறு எங்கேயாவது ஈடுபட்டிருந்தால், நீங்கள் அதனால் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் ஏதாவதொரு முறையால் பாதிக்கப்படுவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் தந்தையுடன் ஒன்றிணைந்திருக்கும்போது, உங்களால் ஒரு விநாடியேனும் தனித்திருக்க முடியாமல் போகும்போது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். சிலவேளைகளில், வேலை செய்யும்போது, நீங்கள் தனியே இருப்பது போன்று உணர்கிறீர்கள். ‘நான் என்ன செய்வது? நான் தனியே இருக்கிறேன்! நான் இவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது!’ எனக் கூச்சல் இடுகிறீர்கள். நீங்கள் களைப்படைகிறீர்கள். அப்படியென்றால், நீங்கள் ஏன் தந்தையை உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்ளக்கூடாது? இரண்டு கைகளைக் கொண்ட ஒருவரை நீங்கள் உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்ள விரும்புகிறீர்கள். ஆயிரம் கைகளைக் கொண்டவரை ஏன் உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்ளக்கூடாது? யார் உங்களுக்கு அதிகளவில் ஒத்துழைப்பைக் கொடுப்பவர் - ஆயிரம் கைகளைக் கொண்டவரா அல்லது இரண்டு கைகளைக் கொண்டவரா?

சங்கமயுகத்தின் பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் தனித்திருக்க முடியாது. நீங்கள் சேவை செய்வதிலும் கர்ம யோகா செய்வதிலும் மிகவம் மும்முரமாகுவதனால், பாபாவின் சகவாசத்தைப் பெற மறந்து விடுகிறீர்கள். அதனால் களைப்படைந்து விடுகிறீர்கள். பின்னர், களைப்படைந்ததும், நீங்கள் பாபாவை நினைத்து, ‘இப்போது நான் என்ன செய்வது?’ எனக் கேட்கிறீர்கள். களைப்படையாதீர்கள்! நீங்கள் விழித்தெழும்போது, எழுகின்றபோது, செயல்களைச் செய்யும்போது, சேவை செய்யும்போது, தூங்கச் செல்லும்போது, உங்களுக்குத் தனது சதா சகவாசத்தைத் தருவதற்காக பாப்தாதா வந்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் ஒத்துழைப்பைக் கொடுப்பதற்காகவே தந்தை பிரம்மா அவ்யக்த் ஆகினார். அவ்யக்த ரூபத்தின் ஒத்துழைப்பின் வேகமானது, பௌதீக ரூபத்தின் ஒத்துழைப்பை விட மிக வேகமானது. இதனாலேயே, தந்தை பிரம்மா தனது வசிப்பிடத்தை மாற்றினார். சிவத்தந்தையும் தந்தை பிரம்மாவும் தமது ஒத்துழைப்பை உங்களுக்குக் கொடுப்பதற்காக எப்போதும் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் பாபாவை நினைத்தவுடனேயே, அவரின் ஒத்துழைப்பை அனுபவம் செய்வீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எப்போதும் சேவை, சேவை, மேலும் சேவையை மட்டுமே நினைக்கிறீர்கள். நீங்கள் தந்தையை அவரை ஆக்கிவிட்டீர்கள். ஆகவே, தந்தை எல்லாவற்றையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களால் எல்லாவற்றையும் தனியே எந்தளவிற்குச் செய்ய முடிகிறது எனப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எவ்வாறாயினும், நீங்கள் இங்கேயே திரும்பி வரவேண்டும். எனவே, பாபாவின் சகவாசத்தை விட்டுச் செல்லாதீர்கள். பாபாவை உங்களின் உரிமையாகவும் உங்களின் அன்பெனும் சூட்சுமமான இழையாலும் கட்டி வைத்திருங்கள். இந்த இழை சிறிது தளர்வடைவதால், உங்களின் அன்பு குறைவடைகிறது. அதனால் உங்களின் உரிமைகளை நீங்கள் உங்களின் விழிப்புணர்வில் இருந்து அப்பால் வைத்துவிடுகிறீர்கள். இதை இனிமேலும் செய்யாதீர்கள்! சர்வசக்திவானே தனது சகவாசத்தை உங்களுக்கு அளிக்கிறார். கல்பத்தின் எஞ்சிய காலப்பகுதி முழுவதும் இத்தகையதொரு வாய்ப்பை நீங்கள் எப்போதாவது பெற்றீர்களா? நீங்கள் பெறவில்லைத்தானே? எனவே, நீங்கள் எந்தளவிற்கு எல்லாவற்றையும் தனித்தே செய்கிறீர்கள் என்பதை பாப்தாதா ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து தொடர்ந்து அவதானிக்கிறார்.

ஆகவே, உங்களின் சந்தோஷத்தையும் சங்கமயுகத்தின் பாக்கியத்தையும் வெளிப்படுமாறு வைத்திருங்கள். நீங்கள் பிஸியாக இருப்பதனால், உங்களின் புத்திகள் வேறு எங்கேயாவது பிஸியாக இருக்கின்றன. அதனால் அதன் விழிப்புணர்வும் அமிழ்ந்து போகிறது. இதைக் கருத்தில் கொள்ளுங்கள்! நாள் முழுவதும் நீங்கள் தந்தையை நினைத்தீர்களா அல்லது அவரை மறந்திருந்தீர்களா என உங்களைக் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? இல்லை! நீங்கள் அவரை நினைத்தீர்கள் எனச் சொல்வது சரியே. எவ்வாறாயினும், அவரின் நினைவு வெளிப்பட்டிருந்ததா அல்லது அமிழ்ந்திருந்ததா? உங்களின் ஸ்திதி என்ன? உங்களின் ஸ்திதியானது, வெளிப்பட்டுள்ள விழிப்புணர்வா அல்லது அமிழ்ந்துள்ள விழிப்புணர்வா? இவை இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? எனவே, ஏன் உங்களின் விழிப்புணர்வு வெளிப்பட்ட விழிப்புணர்வாக இருக்கவில்லை? உங்களின் நினைவானது வெளிப்பட்ட நிலையில் இருக்கும்போது, நீங்கள் பெறுகின்ற போதை, சக்தி, ஒத்துழைப்பு மற்றும் வெற்றி மிகவும் மகத்தானதாக இருக்கும். உங்களால் பாபாவை மறக்க முடியாதிருக்கும். ஏனென்றால், அவருடனான உங்களின் உறவுமுறை இந்த ஒரு பிறவிக்கு உரியது மட்டுமல்ல. சிவத்தந்தை உங்களுடன் சத்தியயுகத்தில் இல்லாவிட்டாலும், உங்களிடம் அதே உறவுமுறை இருக்குமல்லவா? எனவே, உங்களால் தந்தையை மறக்க முடியாது என்பதே சரியானது. ஆமாம், சிலவேளைகளில் நீங்கள் ஏதாவது தடைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு பாபாவை மறந்து விடுவது உண்மையே. எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் இயல்பான ஸ்திதியில் இருக்கும்போது, நீங்கள் பாபாவை மறப்பதில்லை. ஆனால், உங்களின் நினைவானது அமிழ்ந்துவிடுகிறது. இதனாலேயே, நீங்கள் பாபாவின் சகவாசத்தை அமிழ்ந்த ரூபத்திலா அல்லது வெளிப்பட்ட ரூபத்திலா அனுபவம் செய்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்கு மீண்டும் மீண்டும் உங்களையே சோதித்துப் பாருங்கள் என பாப்தாதா உங்களுக்குச் சொல்கிறார். உங்களுக்கு பாபாவிடம் அன்பு உள்ளது. உங்களின் அன்பு துண்டிக்கப்படுமா? அதைத் துண்டிக்க முடியுமா? ஆமா அல்லது இல்லையா? அதைத் துண்டிக்க முடியாது, இல்லையா? எனவே, உங்களின் அன்பைத் துண்டிக்க முடியாதபோது, அந்த அன்பின் நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த நன்மையை எப்படிப் பெறுவது எனக் கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த அன்பே உங்களைத் தந்தைக்குச் சொந்தமாக்கியுள்ளது என்பதை பாப்தாதா பார்க்கிறார். இந்த அன்பே உங்களை மதுவனவாசிகள் ஆக்கியுள்ளது. உங்களின் சொந்த இடங்களில் உங்களின் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அங்கே நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் மதுவனத்திற்கு வருகிறீர்கள். கலியுகச் சூழ்நிலைகளால், பல குழந்தைகளுக்கு ஒரு ரிக்கெற் வாங்குவதே மிகவும் கஷ்டமாக இருப்பதை பாப்தாதா அறிவார், பார்க்கிறார். எவ்வாறாயினும், அவர்களின் அன்பே அவர்களை இங்கே வரச் செய்கிறது. அப்படித்தானே? பாபாவிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பினால் நீங்கள் இங்கே வருகிறீர்கள். ஆனால் அந்தச் சூழ்நிலைகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பிரபுவானவர் நேர்மையான இதயத்தையிட்டுக் களிப்படைகிறார். ஆனால், நீங்களும் ஏதாவதொரு இடத்தில் ஏதாவதொரு ரூபத்தில் பௌதீகமான ஒத்துழைப்பையும் பெறுகிறீர்கள். நீங்கள் இரட்டை வெளிநாட்டவர்களோ அல்லது பாரதத்தில் வசிப்பவர்களோ, யாராக இருந்தாலும் பாபாவின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பானது, சூழ்நிலைகளின் எந்தவிதமான தடைகளையும் தாண்டச் செய்கிறது. அப்படித்தானே? உங்களின் சொந்த நிலையங்களைப் பாருங்கள். இத்தகைய குழந்தைகளை உங்களால் காண முடியும். தம்மால் அடுத்த வருடம் வர முடியுமோ முடியாதோ என நினைத்தவண்ணமே அவர்கள் இங்கிருந்து செல்கிறார்கள். அடுத்த வருடம் தமக்கு வரமுடியுமோ இல்லையோ என அவர்கள் நினைத்தாலும், அவர்கள் இங்கே வருகிறார்கள். இதுவே அவர்களின் அன்பின் அத்தாட்சி ஆகும். அச்சா.

இன்று, நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்கள். நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்களா? ஹோலி கொண்டாடும் புனித அன்னங்களை பாப்தாதா பார்க்கிறார். ‘அதிபுனிதமானவர்கள்’ என்ற அதே பட்டம் உங்கள் எல்லோருக்கும் உள்ளது. துவாபர யுகத்தில் இருந்து, எந்தவொரு புண்ணியாத்மாவோ அல்லது மகாத்மாவோ ஏனையவர்களை அதிபுனிதமானவர்கள் ஆக்கவில்லை. அவர்கள் தாங்கள் புனிதமாகினார்கள். ஆனால் அவர்கள் தமது சீடர்களையோ அல்லது தமது சகபாடிகளையோ அதிபுனிதமானவர்கள் அல்லது தூய்மையானவர்கள் ஆக்கவில்லை. ஆனால், இங்கே தூய்மையே உங்களின் பிராமண வாழ்க்கையின் பிரதானமான அடிப்படை ஆகும். உங்களின் படிப்பு என்ன? உங்களின் சுலோகமே - தூய்மை ஆகுக, யோகி ஆகுக! என்பதேயாகும். உங்களிடம் இந்தச் சுலோகம் இருக்கிறதல்லவா? தூய்மையே உங்களின் மகத்துவம் ஆகும். தூய்மையே உங்களின் யோகி வாழ்க்கையின் அடிப்படையாகும். சிலவேளைகளில், குழந்தைகள் தொடர்ந்து முன்னேறும்போது, உங்களின் மனதில் ஏதாவது தூய்மையின்மையை அனுபவம் செய்தால், மற்றவர்களைப் பற்றிய வீணான அல்லது எதிர்மறையான எண்ணங்கள் உங்களுக்குள் ஏற்பட்டால், நீங்கள் எவ்வளவுதான் சக்திவாய்ந்த யோகம் செய்வதற்கு விரும்பினாலும், உங்களால் அதைச் செய்ய முடியாதிருக்கும். உங்களின் எண்ணங்களில் சிறிதளவு தூய்மையின்மையின் சுவடேனும் இருந்தாலும், எப்படி பகலும் இரவும் ஒன்றாக இருக்க முடியாதோ, அவ்வாறே, அந்தத் தூய்மையின்மையின் சுவட்டினால், உங்களால் தூய தந்தையை அவர் எத்தகையவரோ, அவர் என்ன செய்கிறாரோ அவ்வாறே நினைவு செய்ய முடியாதிருக்கும். இதனாலேயே, பாப்தாதா மீண்டும் மீண்டும் தற்சமயம் தூய்மையை நோக்கி உங்களின் கவனத்தை ஈர்க்கிறார். சிறிது காலத்திற்கு முன்னர், பாபா உங்களுக்குச் செயலில் உள்ள தூய்மையின்மையைப் பற்றி மட்டுமே சமிக்கை கொடுத்தார். எவ்வாறாயினும், இப்போது இறுதி முடிவிற்கான நேரம் நெருங்கி வருவதனால், உங்களின் எண்ணங்களில் உள்ள தூய்மையின்மையின் சிறிதளவு சுவடேனும் உங்களை ஏமாற்றிவிடும். ஆகவே, தூய்மை என்பது எல்லாவற்றிலும் சம்பூரணமாகத் தேவைப்படுகிறது - உங்களின் எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில், தொடர்புகளில் மற்றும் உறவுமுறைகளில். உங்களின் எண்ணங்கள் வெளியே தென்படாததால், உங்களின் மனம் இதில் பின்தங்கக்கூடாது. உங்களின் எண்ணங்கள் உங்களை ஏமாற்றிவிடும். பிராமண வாழ்க்கையின் அக ஆஸ்தியான சதா சந்தோஷத்தினதும் அமைதியினதும் சொரூபமாக இருத்தல், மனதில் திருப்தியுடன் இருத்தல் என்பவற்றை அனுபவம் செய்வதற்கு, உங்களின் மனதில் தூய்மை அவசியம். புற வசதிகளாலோ அல்லது சேவை செய்வதனாலோ உங்களைச் சந்தோஷப்படுத்துதல் என்றால் உங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.

தங்களை மிகவும் நல்லவர்கள் என்றும் சந்தோஷமாக இருக்கிறோம் எனக் கருதுவதன் அடிப்படையில் சிலவேளைகளில் குழந்தைகள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். அவர்கள் தொடர்ந்தும் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள். இதுவும் ஓர் ஆழமான இரகசியம் ஆகும். பாபா அருள்பவர். நீங்கள் அருள்பவரின் குழந்தைகள். சிலவேளைகளில், உங்களின் சேவை யுக்தியுக்தாக இருப்பதில்லை. அது கலப்படமாக உள்ளது. அவற்றில் சிலது, நினைவுடன் நிறைவேற்றப்படுகின்றன. சிலது, உங்களின் புற வசதிகளினதும் உங்களின் சந்தோஷத்தினதும் அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. அது உங்களின் இதயபூர்வமாகச் செய்யப்படுவதில்லை. ஆனால் புத்திபூர்வமாகச் செய்யப்படுகிறது. தந்தை அருள்பவராக இருப்பதனால், நீங்களும் உங்களின் சேவையின் நடைமுறைப் பலனைப் பெறுகிறீர்கள். நீங்கள் சந்தோஷம் அடைந்து, உங்களின் சேவை மிகவும் நன்றாக இருப்பதனால், நீங்கள் அதன் பலனைப் பெற்றீர்கள் என நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், அந்த சந்தோஷத்தை நீங்கள் எல்லா வேளையும் அனுபவம் செய்வதில்லை. உங்களின் மனதில் திருப்தியை அனுபவம் செய்ய முடிவதில்லை. உங்களின் ஸ்திதியும் சக்திவாய்ந்த முறையில் யோகியுக்தாக இருப்பதில்லை. இந்த அனுபவத்தை நீங்கள் பெறாமல் போகின்றீர்கள். நீங்கள் எதையும் பெறுவதில்லை என்பதல்ல. நீங்கள் நிச்சயமாக ஏதோவொன்றைப் பெறுகிறீர்கள். ஆனால் உங்களால் சேமிக்க முடியாமல் போகிறது. நீங்கள் எதைச் சம்பாதிக்கிறீர்களோ, அதை உண்டு முடித்துவிடுகிறீர்கள். இதனாலேயே நீங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மிக நன்றாகச் சேவை செய்கிறீர்கள். அதனால் அதற்கான மிக நல்ல பலனைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எல்லாவற்றையும் உண்டு முடித்துவிட்டால், எதைச் சேமிப்பீர்கள்? நீங்கள் மிக நல்ல சேவை செய்கிறீர்கள். நல்ல பலனையும் பெறுகிறீர்கள். ஆனால் நீங்கள் செய்யும் சேவைக்கான எந்தவொரு பலனையும் நீங்கள் சேமிப்பதில்லை. உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் தூய்மையைக் கொண்டிருப்பதே அந்தப் பலனைச் சேமிப்பதற்கான வழிமுறை ஆகும். தூய்மையே உங்களின் அத்திவாரம். சேவையிலும், தூய்மையே அத்திவாரம். அது சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். அதற்குள் எந்தவிதமான உள்நோக்கமும் இருக்கக்கூடாது. உங்களின் நோக்கங்களிலும் உணர்வுகளிலும் தூய்மையே இருக்க வேண்டும். ஹோலி என்றால் தூய்மை என்று அர்த்தம். அத்துடன் தூய்மையின்மை எல்லாவற்றையும் எரித்தல் என்றும் அர்த்தம். இதனாலேயே, ஹோலியின்போது, மக்கள் முதலில் எரிக்கிறார்கள். பின்னரே கொண்டாடுகிறார்கள். நீங்கள் தூய்மையாகி, உங்களின் சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பதைக் கொண்டாடுகிறீர்கள். ஹோலி என்றால் எரித்தல், அத்துடன் கொண்டாடுதல் என்று அர்த்தம். வெளியுலக மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இங்கே, நீங்கள் புண்ணியச் சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். அத்துடன் உங்களின் சம்ஸ்காரங்களையும் ஒத்திசைக்கிறீர்கள். எனவே, நீங்கள் இந்த முறையில் ஹோலியைக் கொண்டாடினீர்களா? அல்லது, நீங்கள் வெறுமனே நடனமாடி, பன்னீரைத் தெளித்தீர்களா? அது நல்லது. நீங்கள் விரும்பும் அளவிற்குக் கொண்டாடுங்கள். நீங்கள் விரும்பும் அளவிற்குப் பன்னீரைத் தெளிப்பதைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் நடனமும் ஆடலாம். ஆனால், சதா நடனம் ஆடுங்கள். வெறுமனே ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மட்டும் நடனம் ஆடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் நற்குணங்களின் அதிர்வலைகளைப் பரவச் செய்தல் என்றால் பன்னீரைத் தெளித்தல் ஆகும். எதை எரிக்க வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தொடர்ந்து இதை எரிக்கிறீர்கள். இப்போதும் அதை நீங்கள் எரிக்கிறீர்கள். ஒவ்வொரு வருடமும், உங்களுக்கு ஒரு திடசங்கற்பமான எண்ணம் உள்ளது எனச் சொல்லும் வகையில் நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் தைரியமாக இருப்பதைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். எனவே. உங்களின் தைரியத்திற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். தைரியமாக இருப்பதே முதல் அடியாகும். எவ்வாறாயினும், பாப்தாதாவின் தூய ஆசை என்ன? திகதியைப் பார்க்காதீர்கள். அது 2000 இலா 2001இலா அல்லது 2005 இலா நடக்கப் போகிறது என எண்ணாதீர்கள். ஓகே, நீங்கள் தயார் நிலையில் இல்லாமல் போகலாம். பாப்தாதா இதற்கு உங்களுக்கு அனுமதி வழங்குகிறார். ஆனால். அந்த சம்ஸ்காரங்கள் உங்களுக்கு நீண்ட காலப்பகுதிக்குத் தேவை என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்கள்தானே? நீங்கள் இதைப் பற்றிப் பேசும்போது, நீண்ட காலத்திற்கு நீங்கள் செய்யும் முயற்சியானது, நீங்கள் பெறுகின்ற இராச்சியமும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கச் செய்யும் எனக் கூறுகிறீர்கள். நீங்கள் செய்யும் திடசங்கற்பமான செயல்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கின்றனவா அல்லது அவை தற்காலிகமாக மட்டும் உள்ளனவா? எந்த நிரலில் நீங்கள் அவற்றைப் போடுவீர்கள்? அது தற்காலிகமான காலப்பகுதியிலேயே இருக்கும். எனவே, நீங்கள் அதை விரும்புவீர்களா? நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள்தானே? ஆகவே, நீண்ட காலம் என்பது எவ்வளவு காலம் எனக் கவலைப்படாதீர்கள். எந்தளவிற்கு நீண்டகாலத்திற்கு நீங்கள் இதைப் பயிற்சி செய்கிறீர்களோ, அந்தளவிற்கு இறுதியில் குறைவாகவே ஏமாற்றப்படுவீர்கள். நீங்கள் இதைப் பயிற்சி செய்யாவிட்டால், தற்போதைய சந்தோஷத்தையும் நீண்டகாலத்திற்குரிய மேன்மையான ஸ்திதியையும் இல்லாமல் செய்துவிடுவீர்கள். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு திகதிக்காகக் காத்திருந்தால், காத்திருப்பதை விடுத்து, செய்ய ஆரம்பியுங்கள். நீண்ட காலத்திற்காக உங்களைத் தயார் செய்யுங்கள். நீங்கள் திகதியைத் தயார் செய்ய வேண்டும். காலம் இப்போதும் தயார் நிலையிலேயே உள்ளது. நாளையும் அது தான் விரும்பியதைச் செய்யக்கூடும். எவ்வாறாயினும், காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நீங்கள் தயார் ஆகியவுடனேயே, காலத்தின் திரைகள் திறந்துகொள்ளும். காலம் இன்னமும் உங்களுக்காகக் காத்திருக்கிறது. இராச்சியத்தின் அதிபதிகளான நீங்கள் தயார்தானே? சிம்மாசனம் ஆளில்லாமல் போகாதுதானே? சிம்மாசனத்தில் தனியே அமர்ந்திருக்கும் உலகச்சக்கரவர்த்தி தனியாக இருந்து என்ன செய்வார்? அது சரியாகத் தோன்றுமா? அவருக்கு அவரின் அரச குடும்பமும் பிரஜைகளும் தேவை. இராச்சியத்தின் அதிபதியால் தான் மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க முடியாது. தனது அரசகுடும்பம் எங்கே என அவர் வியப்படைவார். இதனாலேயே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும், பழையவர்களோ அல்லது புதியவர்களோ, உங்களை பிரம்மாகுமார்கள் அல்லது பிரம்மாகுமாரிகள் என்று அழைப்பவர்கள், நீங்கள் மதுவனவாசிகளோ, பாரதவாசிகளோ அல்லது வெளிநாட்டவர்களோ, குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் இதை நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு தூய விருப்பத்தை பாப்தாதா கொண்டிருக்கிறார். அதன்மூலம், நீங்கள் உங்களின் இராச்சிய உரிமையைச் சிறிது காலத்திற்காக மட்டுமன்றி, நீண்ட காலத்திற்குப் பெறுவீர்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் ஒரு கையைத் தட்டலாம். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்களை பாப்தாதாவால் தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது போல் பார்க்க முடிகிறது. முன்னால் அமர்ந்திருப்பவர்கள், முன்னாலேயே இருக்கிறார்கள். கீழே தியான மண்டபத்தில் அமர்ந்திருப்பவர்கள், பாபாவின் தலைக்கிரீடம் ஆவார்கள். அவர்களும் கைதட்டுகிறார்கள். கீழே அமர்ந்திருப்பவர்கள், தமது தியாகத்தின் பாக்கியத்தைப் பெறுவார்கள். நீங்கள் பாபாவிற்கு முன்னால் தனிப்பட்ட முறையில் பாபாவிற்கு நேர் எதிரே இருக்கின்ற பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆனால். அவர்கள் தமது தியாகத்திற்கான பாக்கியத்தைச் சேமிக்கிறார்கள். அச்சா. பாப்தாதாவிடம் உள்ள இந்த ஒரு விருப்பம் உங்கள் எல்லோருக்கும் பிடித்திருக்கிறதா? எனவே, அடுத்த வருடம் பாபா எதைப் பார்ப்பார்? அடுத்த வருடமும் நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துவீர்கள் என்ற திடசங்கற்பமான எண்ணம் உங்களுக்குள் உள்ளது. நீங்கள் உங்களின் கையை உயர்த்தலாம், உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தலாம். ஆனால். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனமென்ற கையையும் உயர்த்த வேண்டும். எல்லா வேளைக்கும் உங்களின் திடசங்கற்பமான எண்ணம் என்ற கையை உயர்த்துங்கள்.

ஒவ்வொருவரின் நெற்றியிலும் சம்பூரண தூய்மையின் இரத்தினம் ஜொலிப்பதைப் பார்க்க பாப்தாதா விரும்புகிறார். உங்களின் கண்களில் தூய்மை ஜொலிப்பதைக் காண அவர் விரும்புகிறார். இரண்டு கண்ணின் மணிகளும் ஆன்மீக ஜொலிப்புடன் பிரகாசிப்பதை அவர் காண விரும்புகிறார். உங்களின் விலைமதிப்பற்ற வார்த்தைகளின் இனிமையையும் சிறப்பியல்பையும் அவர் கேட்க விரும்புகிறார். உங்களின் செயல்களில் சதா திருப்தியையும் பணிவையும் காண விரும்புகிறார். உங்களின் உணர்வுகளில் சதா நல்லாசிகள் இருக்க வேண்டும். உங்களின் நோக்கங்களில் சதா சகோதரத்துவ மனோபாவம் இருக்க வேண்டும். உங்களின் தலையின் மீது ஒரு தேவதையின் ஒளிக்கிரீடம் சதா புலப்பட வேண்டும். இதைப் பார்க்கக்கூடியதாக இருத்தல் என்றால் அதை அனுபவம் செய்தல் என்று அர்த்தம். பாப்தாதா உங்களை இத்தகைய அலங்கரிக்கப்பட்ட ரூபங்களாகக் காண விரும்புகிறார். இத்தகைய ரூபங்கள் மட்டுமே அதிமேன்மையான ஆத்மாக்களாகவும் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அந்த மக்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களை உருவாக்குவார்கள். ஆனால். நீங்கள் உங்களின் உயிர்வாழும் ரூபங்களில் இப்படி ஆகுவதைக் காணவே தந்தை விரும்புகிறார். அச்சா.

எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும், தந்தையுடன் சதா இருக்கும் நெருக்கமான, சதா சகபாடிகளுக்கும், நீண்ட காலத்திற்கு முயற்சி செய்து, சங்கமயுகத்தின் தமது உரிமைகளையும் நீண்ட காலத்திற்கான எதிர்கால இராச்சிய உரிமைகளையும் பெறுகின்றவர்களுக்கும், சதா தங்களை நற்குணங்களாலும் சக்திகளாலும் அலங்கரித்திருக்கும் விவேகி ஆத்மாக்களுக்கும், தந்தையின் நம்பிக்கைத் தீபங்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், சதா அதிபுனிதமான, அதிமேலான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், தந்தைக்குச் சமமாக இருக்கும் அதிகபட்சமான அன்பான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

வெகு தொலைவில் அமர்ந்திருந்தாலும் தங்களை பாப்தாதாவின் முன்னால் இருப்பதாக அனுபவம் செய்யும் இந்த நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் எல்லோருக்கும், பாப்தாதாவிடமிருந்து அதிக, அதிக, அதிக அன்பும் நினைவுகளும் உரித்தாகுக.

ஆசீர்வாதம்:
நீங்கள் காலத்தை உங்களின் ஆசிரியர் ஆக்குவதற்குப் பதிலாகத் தந்தையை உங்களின் ஆசிரியர் ஆக்கியிருக்கும் மாஸ்ரர் படைப்பவர் ஆகுவீர்களாக.

சில குழந்தைகளுக்குச் சேவை செய்யும் உற்சாகம் உள்ளது. ஆனால், அவர்கள் விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் இதையிட்டுக் கவனயீனமாக இருக்கிறார்கள். ‘அது நன்றாக உள்ளது, இது நடக்கிறது… அது நடக்கும்.. நேரம் வரும்போது எல்லாம் நன்றாக நடக்கும்.’ இந்த முறையில் சிந்திப்பதென்றால். காலத்தை உங்களின் ஆசிரியர் ஆக்கிக் கொள்வதாகும். அந்தக் குழந்தைகள் தந்தைக்கு உத்தரவாதம் வழங்க முயற்சி செய்கிறார்கள். ‘கவலைப்படாதீர்கள். காலம் வரும்போது எல்லாமே சரியாகிவிடும். நாம் அதைச் செய்வோம். நாம் முன்னேறுவோம்.’ எவ்வாறாயினும், நீங்கள் மாஸ்ரர் படைப்பாளிகள். காலம் உங்களின் படைப்பு. மாஸ்ரர் படைப்பாளிகளான நீங்கள், உங்களின் படைப்பை உங்களின் ஆசிரியர் ஆக்குவதென்பது பொருத்தமானதல்ல.

சுலோகம்:
உங்களினதும் ஏனைய எல்லோரினதும் மாற்றத்திற்கு ஒத்துழைப்பதே, தந்தையின் பராமரிப்பிற்கான பிரதிபலன் ஆகும்.