08.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்தக் கண்களால் நீங்கள் பார்ப்பவை அனைத்தும் அழிய உள்ளதால்;, அவற்றின் மீது எல்லையற்ற ஆர்வமின்மை கொண்டிருங்கள். தந்தை உங்களுக்காகப் புதிய உலகைப் படைக்கிறார்.

பாடல்:
குழந்தைகளாகிய உங்கள் மௌனத்தில் அமிழ்ந்துள்ள முக்கியத்துவம் என்ன?

பதில்:
நீங்கள் மௌனத்தில் இருக்கும் போது, மௌன தாமத்தை நினைவு செய்கிறீர்கள். மௌனம் என்றால் மரணித்து வாழ்வது என்பது உங்களுக்குத் தெரியும். சற்குரு வடிவில் தந்தை எவ்வாறு மௌனத்தில் இருப்பதென்று இங்கு உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மௌமாக இருக்கும் போது, உங்கள் பாவங்களை எரிக்கின்றீர்கள். நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டுமென்ற ஞானம் உங்களுக்கு உள்ளது. ஏனைய ஆன்மீகக் கூட்டங்களில் மக்கள் மௌனத்தில் இருப்பார்களாயினும், அவர்களிடம் மௌன தாமத்தைப் பற்றிய அறிவு இருப்பதில்லை.

ஓம் சாந்தி.
சிவபாபா இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளோடு பேசுகிறார். கீதையில், ‘ஸ்ரீகிருஷ்ணர் பேசுகிறார்’ என்று எழுதப்பட்டுள்ளது. உண்மையில் சிவபாபாவே பேசுகின்றார். கிருஷ்ணரை பாபா என்று அழைக்க முடியாது. பாரத மக்களுக்கு இரு தந்தையர்கள் உள்ளார்கள் என்பது தெரியும்: லௌகீகத் தந்தையும் பரலோகத்தந்தையும். பரலோகத் தந்தையே பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். லௌகீகத் தந்தையொருவரை பரமாத்மா என்று அழைக்க முடியாது. இவற்றை உங்களுக்கு விளங்கப்படுத்துபவர் ஒரு பௌதீகத் தந்தையல்ல. பரலோகத் தந்தையே பரலோகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். முதன் முதலில் நீங்கள் மௌனதாமத்திற்கே செல்கின்றீர்கள். அதுவே நிர்வாணா என்று அழைக்கப்படுகின்ற முக்திதாமமும், சப்ததத்திற்கு அப்பாற்பட்ட தாமமும் ஆகும். இப்போது தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் மௌன தாமத்திற்குச் செல்ல வேண்டும். அந்த இடம் மாத்திரமே மௌன கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் போது நீங்கள் முதலில் மௌனத்தில் இருக்க வேண்டும். எந்தவொரு ஆன்மீகக் கூட்டத்திலும், முதலில் அவர்கள் மௌனத்தில் இருக்கிறார்களாயினும், அவர்களுக்கு மௌன தாமத்தைப் பற்றிய அறிவு இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் இந்தப் பழைய சரீரங்களை நீக்கி விட்டு, வீடு திரும்ப வேண்டுமென்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சரீரத்திலிருந்து எந்த நேரத்திலும் நீங்கிச் செல்லலாம் என்பதால் தந்தை உங்களுக்குக் கற்பிப்பவற்றை நீங்கள் மிக நன்றாகக் கற்க வேண்டும். அவர் சற்கதியை அருள்கின்ற பரம ஆசிரியரும் அத்துடன், குருவும் ஆவார். அவருடன் நீங்கள் யோகம் செய்ய வேண்டும். அவர் மூன்று வடிவான சேவையையும் செய்கிறார். எவராலுமே மூன்று வடிவான சேவையையும் செய்ய முடியாது. இந்தத் தந்தையொருவரே உங்களுக்கு மௌனத்தைக் கற்பிக்கின்றார். மரணித்து வாழ்வதென்பது மௌனம் என்று அழைக்கப்படுகிறது. இப்போது நாங்கள் மௌன தாமமான, வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள் தூய்மையடையாது, அவர்களில் ஒருவரேனும் வீடு திரும்ப முடியாது. எல்லோருமே வீடு திரும்ப வேண்டும் என்பதாலேயே, இறுதியில் பாவச் செயல்களுக்கானத் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடுகின்றது. அப்பொழுது அந்தஸ்த்தும் அழிந்து விடுகின்றது. வெகுமதியும் தண்டனையும் பெற வேண்டியுள்ளது, ஏனெனில், நீங்கள் மாயையால் தோற்கடிக்கப்படுகிறீர்கள். நீங்கள் மாயை வெற்றி கொள்வதற்காக, உங்களுக்கு உதவுவதற்கே தந்தை வந்த போதிலும், நீங்கள் கவனயீனமாக இருப்பதால் நீங்கள் தந்தையை நினைவு செய்வதில்லை. இங்கே நீங்கள் தந்தையொருவரையே நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் அதிகளவு அலைந்து திரிகின்றார்கள். தாம் யாரை விழுந்து வணங்குகின்றோம் என்பது அவர்களுக்கே தெரியாது. தந்தை வந்தே அலைந்து திரிவதில் உங்களை விடுவிக்கின்றார். ஞானம் பகலென்றும் பக்தி இரவென்றும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இரவிலேயே மக்கள் தடுமாறித் திரிகின்றார்கள். ஞானம் பகல் வேளையாகும், அதாவது சத்திய, திரேதாயுகங்களாகும். ஆனால் பக்தி என்றால் இரவாகும், அதாவது துவாபர கலியுகங்களாகும். இவை அனைத்தும் நாடகத்தின் காலப்பகுதி ஆகும். அரைப்பகுதி பகலும் அரைப்பகுதி இரவும் ஆகும். அது பிரஜாபிதா பிரம்ம குமார், குமாரிகளின் இரவும் பகலுமாகும். இது எல்லையற்ற விடயமாகும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சங்கமயுகத்தில் வருகிறார். இதனாலேயே மக்கள் சிவனின் இரவான சிவராத்திரியைப் பற்றிப் பேசுகிறார்கள். சிவராத்திரியென்றால் என்னவென்று மக்களுக்கு புரிவதில்லை. உங்களைத் தவிர வேறு எவருக்குமே சிவராத்திரியின் முக்கியத்துவம் தெரியாது. ஏனெனில், இது இடைப்பட்ட காலமாகும். இரவு முடிந்து பகல் ஆரம்பமாகும் போது, அக்காலப்பகுதி பழைய உலகிற்கும் புதிய உலகிற்கும் இடைப்பட்ட அதிமங்களகரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை ஒவ்வொரு சக்கரத்தின் சங்கமயுகத்திலும் வருகிறார். அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருகிறார் என்றல்ல. அவர்களோ சத்திய, திரேதா யுகங்களின் சங்கம காலத்தையும், சங்கமயுகம் என்று அழைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அது தவறாகும். சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழியும். இதுவே யோக அக்கினி என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் அனைவரும் பிராமணர்கள், அவர்கள் தூய்மையாகுவதற்காக நீங்கள் அவர்களுக்கு யோகம் கற்பிக்கின்றீர்கள். அந்தப் பிராமணர்கள் ஏனையோரை காமச்சிதையில் அமர்த்துகிறார்கள். அந்தப் பிராமணர்களுக்கும் உங்களுக்கும் இடையில் இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. அவர்கள் பௌதீகப் படைப்புகள். நீங்களோ வாய்வழித் தோன்றல்கள். அனைத்தும் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்களிடம் வருகின்ற எவருக்கும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: எல்லையற்ற தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியையும் பெறுவீர்;கள். அப்பொழுது நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டுவதால் அதற்கேற்ப உயர்ந்த அந்தஸ்தையும் பெறுகின்றீர்கள். தூய்மையற்ற உங்களைத் தூய்மையாக்குவதற்காகத் தந்தை வருகிறார். அதனால், நீங்களும் இந்தச் சேவையைச் செய்ய வேண்டும். அனைவரும் தூய்மையற்றவர்களாவே உள்ளார்கள். அந்தக் குருமார்களினால் எவரையும் தூய்மையாக்க முடியாது. ‘தூய்மையாக்குபவர்’ என்பதே சிவபாபாவின் பெயராகும். நாடகத்திட்டத்திற்கேற்ப அனைவரும் முற்றிலும் தூய்மையற்றவர்களாகிய பின்னரே அவர் இங்கே வருகிறார். அப்பொழுதே தந்தை வருகிறார். அனைத்திற்கும் முதலில், குழந்தைகளாகிய உங்களுக்கு அல்பாவைப் பற்றி விளங்கப்படுத்தப்படுகிறது. என்னை நினைவு செய்யுங்கள். அவரே தூய்மையாக்குபவர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆன்மீகத் தந்தை தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். ‘ஓ கடவுளே!’ என்றோ அல்லது ‘ஓ பாபா!’ என்றோ அவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும், எவருக்கும் அவரைப் பற்றிய அறிமுகம் ஏதுமில்லை. சங்கமயுகத்துக்குரியவர்களாகிய நீங்களே இப்போது அந்த அறிமுகத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அவர்கள் நரகவாசிகளாகவே உள்ளார்கள். நீங்களோ நரகவாசிகளல்ல. ஆம், ஒருவர் தோற்கடிக்கப்படும் போது, அவர் முற்றாக வீழ்ந்து விடுவதுடன், அதுவரை சேமித்த அனைத்தையும் இழக்கின்றார். தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகுவதே பிரதானமான விடயமாகும். இது விகாரம் நிறைந்த உலகமாகும், அதுவோ, புதிய உலகமான விகாரமற்ற உலகமாகும். அதனையே தேவர்கள் ஆட்சிசெய்கின்றார்கள். அனைத்திற்கும் முதலில், தேவர்களே அதிகபட்ச பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். அதிலும், சூரிய வம்ச ஆத்மாக்களே முதலில் கீழே இறங்கி வருகிறார்கள். நீங்கள் 21 சந்ததிகளுக்கான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அது தூய்மையும் அமைதியும் சந்தோஷமும் நிறைந்த எல்லையற்ற ஆஸ்தியாகும். சத்தியயுகம் முழுமையான சந்தோஷம் நிறைந்த உலகம் என்று அழைக்கப்படுகிறது. திரேதாயுகம் சற்றுக்குறைந்தளவு சந்தோஷத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில், அங்கே இரு சுவர்க்கக்கலைகள் குறைவாகவே உள்ளன. அங்கே கலைகள் குறைவாகவே இருப்பதால், ஒளியும் குறைவாகவே உள்ளது. சந்திரனின் கலைகள் குறையும் போது, ஒளியும் குறைகிறது. இறுதியில், ஒரு பிறை வடிவே எஞ்சியுள்ளது. அது முற்றாக மறைவதில்லை. உங்களுக்கும் அதுவே நடக்கின்றது: நீங்கள் முற்றிலும் பூச்சியம் ஆகுவதில்லை. இதுவே ஒரு மூட்டை மாவினுள்ஒரு துளி உப்பு எனப்படுகின்றது. தந்தை இங்கிருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஆத்மாக்களினதும் பரமாத்மாவினதும் ஒன்றுகூடலாகும். இது புத்தியினால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். கடவுள் எப்போது வருகிறார்? பல ஆத்மாக்கள் இருக்கும் போது, அதாவது, பல மனிதர்கள் இருக்கும் போதே பரமாத்மா இந்த ஒன்றுகூடலுக்குள் வருகிறார். ஆத்மாக்களினதும் பரமாத்மாவினதும் ஒன்றுகூடல் ஏன் இடம்பெறுகிறது? ஏனையோர் அழுக்கடைவதற்காக ஒன்றுகூடுகின்றார்கள். இந்த நேரத்தில் நீ;ங்கள் தோட்டத்தின் அதிபதியினால் முட்களிலிருந்து மலர்களாக மாற்றப்படுகின்றீர்கள். எவ்வாறு அவ்வாறு ஆகுகிறீர்கள்? நினைவு சக்தியினால் ஆகும். தந்தை சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகிறார். தந்தை சர்வசக்திவானாக இருப்பதைப் போலவே, இராவணனும் எவ்விதத்திலும் குறைவடையாத, சர்வசக்தி சக்திவானாகவே உள்ளான். தந்தை கூறுகிறார்: மாயை மிகவும் பலம் வாய்ந்தவளும் சக்தி மிக்கவளும் ஆவாள். சிலர் கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களை நினைவு செய்கிறேன். ஆனால், மாயை என்னை உங்களை மறக்கச் செய்து விடுகிறாள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருக்கிறீர்கள். தந்தை வந்து உங்களை மாயையை வெற்றி கொள்ளச் செய்கிறார். அதன் பின் மாயை உங்களைத் தோற்கடித்து விடுகிறாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான யுத்தமொன்றைக் காட்டியிருக்கிறார்களாயினும், அது அவ்வாறில்லை. இதுவே யுத்தமாகும். தந்தையை நினைவு செய்வதால் நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். மாயை தந்தையை நினைவு செய்வதற்குத் தடைகளை ஏற்படுத்துகின்றாளே அன்றி கல்வியில் அல்ல. தந்தையை நினைவுசெய்வதற்கே தடைகள் ஏற்படுகின்றன. மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கிறாள். சரீர உணர்வுடையவராகுவதால் நீங்கள் அறையப்படுகிறீர்கள். காமம் நிறைந்தவர்களையிட்டு மிகக்கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது இராவண இராச்சியமாகும். இங்கும், நீங்கள் தூய்மையாகுமாறே கூறப்படுகின்றீர்கள். எனினும் சிலர் தூய்மை ஆகுவதில்லை. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, விகாரத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் முகத்தை அழுக்காக்கிக் கொள்ளாதீர்கள். இருப்பினும் அவர்கள் எழுதுகின்றார்கள்: பாபா, மாயை என்னைத் தோற்கடித்து விட்டாள். என் முகத்தை நான் அழுக்காக்கிக் கொண்டேன். அவலட்சணமானவர்களும் அழகானவர்களும் இருக்கின்றார்கள், விகாரம் நிறைந்தவர்கள் அவலட்சணமானவர்களும் விகாரமற்றவர்கள் அழகானவர்களும் ஆவார்கள். இந்த உலகத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் ‘அழகானவர்களும் அவலட்சணமானவர்களும்’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கிருஷ்ணர் சியாம்-சுந்தர் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தை உங்களுக்கு இதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். அவரே சுவர்க்கத்தின் முதல் இலக்க இளவரசர் ஆவார். இவர் அழகானவரில் முதல் இலக்கத்தில் சித்தியடைகிறார். பின்னர் மறுபிறவிகள் எடுக்கும் போது, கீழ் இறங்கி, அவலட்சணம் ஆகுவதால், அவர் சியாம்-சுந்தரர் என்று அழைக்கப்படுகிறார். தந்தை இதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். சிவபாபா என்றென்றும் தூய்மையாகவே உள்ளார். அவர் வந்து குழந்தைகளாகிய உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். தூய்மையற்றவர்களே அவலட்சணமானவர்களாவர். தூய்மையானவர்கள் அழகானவர்களாவர்கள் ஆவார்கள். அங்கே இயற்கையான அழகு உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாகுவதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். அதனால், கடவுளின் வாசகங்களில், தாய்மார்கள் சுவர்க்க வாயிலைத் திறந்தார்கள் என்ற புகழ் காணப்படுகிறது. ஆகையாலேயே கூறப்படுகின்றது: வந்தே மாதரம்! நீங்கள் தாய்மார்களுக்கு வந்தனம் என்று கூறும் போது, தந்தை ஒருவரும் உள்ளார் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. தாய்மார்களின் புகழைத் தந்தை அதிகரிக்கிறார். முதலில் இலக்ஷ்மியும் பின்னர் நாராயணனும் ஆகும். இங்கே ‘திரு’ முதலாவதாகவும் ‘திருமதி’ அடுத்ததாகவுமே உள்ளது. நாடகத்தின் இரகசியம் இவ்வாறே உருவாக்கப்பட்டுள்ளது. படைப்பவராகிய தந்தை முதன்முதலில் தன்னைத் தானே அறிமுகம் செய்கிறார். ஒருவர் எல்லைக்குட்பட்ட பௌதீகத் தந்தையும் மற்றவர் எல்லையற்ற பரலோகத் தந்தையுமாவார். நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் அவரிடமிருந்து ஒரு எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எல்லைக்குட்பட்ட ஆஸ்தியொன்றைப் பெறும் போதும், நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கிறீர்கள். ‘பாபா, நீங்கள் வரும் பொழுது நாம் ஏனைய எல்லோரிடமிருந்தும் நம்மைத் துண்டித்துக் கொண்டு உங்களோடு மட்டுமே எங்களை இணைத்துக் கொள்வோம். இவ்வாறு கூறுவது யார்? ஆத்மாக்கள் ஆகும். ஆத்மாவே இந்த பௌதீக உறுப்புகளால் தன் பாகத்தை நடிக்கிறார். ஒவ்வொரு ஆத்மாவும் மறுபிறவி எடுத்து, அவர் செய்த செயல்களுக்கேற்ப ஏழையாகவோ செல்வந்தராகவோ பிறக்கிறார். அது செயல்களிலேயே தங்கியிருக்கிறது. இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாகுகிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? உங்களுக்கு மட்டுமே இது தெரியும். உங்களால் மட்டுமே இதனை விளங்கப்படுத்த முடியும். தந்தை கூறுகிறார்: இந்தக் கண்களால் நீங்கள் பார்க்கும் அனைத்தின் மீதும் ஆர்வமின்மையைக் கொண்டிருங்கள். அவை அனைத்தும் முடிவடைய உள்ளன. புதிய வீடொன்று கட்டப்படும் போது பழைய வீட்டில் ஆர்வமின்மை தோன்றுகிறது. தமது பாபா தமக்காகப் புதிய வீட்டொன்றைக் கட்டியிருக்கிறார் என்று கூறி அவரின் குழந்தைகள் அங்கே சென்று தங்குவார்கள். இந்தப் பழைய வீடு தகர்க்கப்படும். இது எல்லையற்றதொரு விடயமாகும். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்க வந்திருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது ஒரு பழைய அழுக்கடைந்த உலகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது திரிமூர்த்தி சிவனுக்கு முன்னால் இருக்கிறீர்;கள். நீங்கள் வெற்றியடைகிறீர்கள். உண்மையில், இந்தத் திரிமூர்த்தி உங்கள் இலச்சனை ஆகும். உங்களது இந்தப் பிராமண குலமே எல்லாவற்றிலும் அதிமேன்மையான குலமாகும். இதுவே உச்சிக்குடுமி. இராச்சியமொன்று ஸ்தாபிக்கப்படுகிறது. பிராமணர்களாகிய உங்களுக்கே இந்த இலச்சனை பற்றித் தெரியும். சிவபாபா எங்களைத் தேவர்களாக்குவதற்காக பிரம்ம பாபா மூலம் எங்களுக்குக் கற்பிக்கிறார். அழிவு இடம்பெற வேண்டும். உலகம் தமோபிரதானமாகும் பொழுது, இயற்கை அனர்த்தங்களும் உதவி செய்யும். தங்கள் புத்திகளால் அவர்கள் எத்தனையோ விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கிறார்கள். வயிற்றிலிருந்து ஏவுகணைகள் தோன்றின என்பதல்ல. ஆனால், முழுக்குலத்தையுமே அழிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய விஞ்ஞானமே அவ்வாறு தோன்றியிருக்கிறது. சிவபாபாவே அதிமேலானவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. சிவபாபாவையும் தேவர்களையுமே வழிபட முடியும். பிராமணர்களை வழிபட முடியாது. ஏனெனில், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருந்தாலும், உங்கள் சரீரங்கள் தூய்மையானவை அல்ல. இதனாலேயே நீங்கள் பூஜிக்கத்தகுதியானவர்கள் ஆகமுடியாது. நீங்கள் புகழத்தகுதியானவர்கள். நீங்கள் தேவர்கள் ஆகும் போது, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள். தூய்மையான புதிய சரீரங்களையும் பெற்றுக் கொள்வீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் புகழப்படத் தக்கவர்கள். ‘வந்தே மாதரம்!’ என்று கூறப்படுகிறது. தாய்மார்களின் சேனை என்ன செய்தது? ஸ்ரீமத்தைப் பின்பற்றியதன் மூலம், தாய்மார்களே ஞானத்தைக் கொடுத்தார்கள். தாய்மார்களாகிய நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் அனைவருக்கும் ஞானத்தைக் கொடுக்கிறீர்கள். தாய்மார்களாகிய நீங்கள் அனைவருக்கும் ஞானாமிர்தத்தை கிரகிக்கக் கொடுக்கிறீர்கள். நீங்கள் மட்டுமே இதைச்சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள். புராணங்களில் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றையே அவர்கள் பிறருக்கு எடுத்துரைக்கின்றார்கள். நீங்கள் தொடர்ந்தும் கூறுகிறீர்கள்: அது உண்மை, அது உண்மை. நீங்கள் இங்கேயிருந்து இந்த ஞானத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தால், அவர்கள் கூறுவார்கள்: இது சரி இது சரி (சத், சத்) அது உண்மை என இனியும் நீங்கள் கூற மாட்டீர்கள். அவர்கள் தொடர்ந்தும் ‘உண்மையே, உண்மையே’ என்று கூறுமளவுக்கு மக்களுக்குப் புத்தி கல்லாகி உள்ளது. ‘கற்புத்தியுடையவர்களும், தெய்வீகப் புத்தியுடையவர்களும் உள்ளார்கள்’ என்று கூறப்படுகிறது. தெய்வீக புத்தியுடையவராக இருப்பதென்றால், தெய்வீகப் பிரபுவாக இருப்பதாகும். நேபாளத்தில், தெய்வீகப் பிரபுவின் படமொன்றை வைத்திருக்கிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணுமே தெய்வீகதாமப் பிரபுக்கள் ஆவார்கள். இது அவர்களது வம்சமாகும். படைப்பவரதும் படைப்பினதும் இரகசியங்களைப் புரிந்து கொள்வதே பிரதானமானதாகும். ரிஷிக்களும் முனிவர்களும் ‘நெட்டி, நெட்டி’ (இதுவுமில்லை, அதுவுமில்லை) என்ற அவரைப் பற்றிக் கூறியுள்ளார்கள். இப்போது தந்தை மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்துள்ளீர்கள். அதாவது, இப்போது நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகியுள்ளீர்கள். மாயையான, இராவணன் உங்களை நாஸ்திகர்கள் ஆக்குகின்றான். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, வெகு நாட்களுக்கு முன்பு தொலைந்து போய், இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பிராமணர்களாகிய நீங்களே பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். உங்கள் குலமே அதிமேலானதாகும். நீங்கள் தூய்மையாகி மற்றவர்களையும் தூய்மையாக்க வேண்டும். தூய்மையாக்குபவராகிய தந்தையின் உதவியாளர் ஆகுங்கள்.

2. நினைவு செய்வதையிட்டு என்றுமே கவனயீனமாக இருக்காதீர்;கள். சரீர உணர்வினாலேயே தந்தையை நினைவு செய்வதில் மாயை தடைகளை உருவாக்குகிறாள். ஆகையால் அனைத்திற்கும் முதலில் சரீர உணர்வை துறந்து விடுங்கள். யோக சக்தியினால் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரியுங்கள்.

ஆசீர்வாதம்:
இல்லறத்தில் வாழ்ந்து, அதன் வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தும் போதும், எல்லையற்ற விருப்பமின்மையை கொண்டிருந்து, அன்பாகவும் ஒரு தாமரை மலர் போன்று பற்றற்றவராகவும் இருப்பீர்களாக.

உங்களுக்கு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன, எனவே நீங்கள் அதனை பெரிய இதயத்துடன் பயன்படுத்த வேண்டும். அந்த வசதிகள் நீங்கள் பயன்படுத்துவதற்கே உள்ளது, ஆனால் உங்கள் ஆன்மிக போதையை அமிழ்ந்து விட அனுமதிக்காதீர்கள். முழுமையான சமநிலை இருக்கட்டும். வசதிகள் தீங்கானவை அல்ல, அவை உங்கள் கர்மாவினதும் யோகத்தினதும் பலன்கள் ஆகும். எவ்வாறாயினும் இல்லறத்தில் வாழ்ந்து, அதன் வசதிகளை பயன்படுத்துகின்ற போது, ஒரு தாமரை மலர் போல் பற்றற்றவராகவும், தந்தை மீது அன்புடையவராகவும்; இருங்கள். அவற்றை பயன்படுத்தும் போது, அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகாதீர்கள். உங்கள் எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தை, வசதிகளில் அமிழ்ந்து விட அனுமதிக்காதீர்கள். அனைத்திற்கும் முதலில், இது உங்களில் இருந்து வெளிப்படட்டும், அதன் பின்னர் இந்தச் சூழலை உலகில் பரவச் செய்யுங்கள்.

சுலோகம்:
விரக்தியில் இருக்கின்ற ஒருவரை, அவரது ஆன்மிக மரியாதையில் நிலைத்திருக்கச் செய்வதே மிகச் சிறந்த சேவையாகும்.