09.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதால் உங்கள் பற்றின் இழைகளை அனைத்து இடங்களிலிருந்தும் துண்டிக்கப்பட வேண்டும். பிராமண குலத்தின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் எப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.

பாடல்:
எக் குழந்தைகளைப் பார்ப்பதில் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைகிறார்? எக் குழந்தைகள் தந்தையின் கண்களில் அமிழ்ந்திருக்கிறார்கள்?

பதில்:
சந்தோஷத்தைக் கொடுப்பதற்கு மற்றவர்களைத் தூண்டுவதுடன், சேவையும் செய்யக்கூடிய குழந்தைகளைப் பார்ப்பதில் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைகிறார். தந்தையைப் பற்றியே பேசி, அவர் கூறுவனவற்றை மாத்திரமே கேட்பது என்ற விழிப்புணர்வைப் புத்தியில் கொண்ட குழந்தைகளே பாபாவின் கண்களில் அமிழ்ந்திருப்பார்கள். பாபா கூறுகிறார்: எனது சேவையைச் செய்யும் குழந்தைகளில் நான் அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறேன். அவ்வாறான குழந்தைகளை நான் நினைவு செய்கிறேன்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைளாகிய நீங்கள் தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவரே தந்தையும், ஆசிரியரின் வடிவில் உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒரேயொருவரும் ஆவார். அந்தத் தந்தையே தூய்மையாக்குபவரும், முக்தியை அருள்பவரும் ஆவார். அந்த ஒரேயொருவரே, உங்களைத் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்பவர். அவர் உங்களுக்கு மிகவும் இலகுவான பாதையையும் காட்டுகிறார். உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்களாக ஆக்குவதுடன், அவர் உங்களை வருந்தி உழைக்கவும் அனுமதிப்பதில்லை. நீங்கள் எங்கு சென்றாலும், நீங்கள் வெளி நாட்டிற்குச் சென்றாலும், நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் உங்களை இவ்வாறு கருதினாலும், நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்து, சரீர உணர்வைத் துறந்து ஆத்ம உணர்வுடையவராகுங்கள் என்று பாபா உங்களுக்குக் கூறுகிறார். நாங்கள் ஆத்மாக்கள். எங்கள் பாகங்களை நடிப்பதற்காக சரீரங்களை எடுக்கிறோம். ஒரு சரீரத்தில் எங்களது பாகத்தை நடித்தபின்னர், நாங்கள் அதனை விட்டு, இன்னொன்றை எடுக்கிறோம். சிலருக்கு 100 வருடங்கள் நடிக்கவேண்டிய பாகமுள்ளது, சிலருக்கு 80 வருடங்களுக்கான பாகமும், சிலருக்கு இரண்டு வருடங்களும், சிலருக்கு ஆறு மாதங்களுக்கான பாகமும் உள்ளன. சிலர் பிறந்தவுடனேயே மரணித்துவிடுகிறார்கள். சிலர் பிறப்பதற்கு முன்னர், கருப்பையிலேயே மரணித்;து விடுகிறார்கள். இங்கு மறு பிறவி எடுப்பதற்கும், சத்திய யுகத்தில் மறு பிறவி எடுப்பதற்குமிடையே பகலுக்கும், இரவுக்குமிடையேயான வித்தியாசம் உள்ளது. இங்கு கருப்பையினூடகவே பிறப்பு இடம்பெறுகிறது. அந்தக் கருப்பை சிறை என அழைக்கப்படுகிறது. சத்திய யுகத்தில் கருப்பை சிறையாக இருக்கமாட்டாது. அங்கு எந்தப் பாவச் செயல்களும் செய்யப்படுவதில்லை. அங்கு இராவண இராச்சியம் இருக்கமாட்டாது. தந்தை உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். எல்லையற்ற தந்தை இங்கமர்ந்;திருந்து, இந்தச் சரீரத்தின் மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்தச் சரீரத்தின் ஆத்மாவும் செவிமடுக்கிறார். தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லாத, ஒரேயொரு ஞானக் கடலான தந்தையே, இந்த ஞானத்தைப் பேசுகிறார். அவர் எப்பொழுதும் சிவா எனப்படுகிறார். அவர் மறு பிறப்பிற்கு அப்பாற்பட்டவர் போன்று, பல பெயர்கள், உருவங்கள் எடுப்பதற்கும் அப்பாற்பட்டவராவார். அவர் சதா, சிவன் என்று அறியப்படுகிறார். அவர் என்றும் சிவனே. அவருக்கு ஒரு பௌதீகப் பெயரில்லை. அவர் இவரது சரீரத்தினுள் புகுந்தாலும், இவருடைய சரீரத்தின் பெயரை, அவருக்கு உபயோகிப்பதில்லை. அவர்களுடைய துறவு எல்லைக்குட்பட்டது. உங்களுடைய துறவு எல்லையற்றதாகும். அவர்களும் தங்கள் பெயர்களை மாற்றுகிறார்கள். பாபாவும் உங்களுக்குப் பல அழகிய பெயர்களைச் சூட்டினார். நாடகத்திற்கேற்ப, அவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டவர்கள் பலர் இப்பொழுது இல்லை. ‘அவர்கள் எனக்குரியவர்கள் என்பதால், எப்போதும் இங்கே இருப்பார்கள், அவர்கள் என்னை விவாகரத்துச் செய்யமாட்டார்கள்’ என்று தந்தை நினைத்தார். இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்தார்கள். ஆகவே அவர்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டியதில் என்ன பயன்? சில சந்நியாசிகளும் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, மீண்டும் தங்களது பழைய பெயர்களை உபயோகிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். அவர்கள் துறவை மேற்கொண்டதால், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களை நினைக்கமாட்டார்கள் என்றில்லை. சிலர் தங்கள் நண்பர்கள். உறவினர்கள் அனைவரையும் நினைவு செய்வார்கள். அவர்கள், அவர்களின் பற்றில் சிக்கியுள்ளார்கள். அவர்களுடைய பற்றின் இழைகள் கட்டப்பட்டுள்ளது. சிலரினால் தங்கள் தொடர்புகளை மிகவிரைவாக துண்டிக்கக் கூடியதாகவுள்ளது. நிச்சயமாக அவை துண்டிக்கப்பட வேண்டும். நீங்கள், இப்பொழுது வீடு திரும்பவேண்டும் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தையே இங்கமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்துகிறார். இன்று காலை, பாபாவும் அதனையிட்டு உங்களுக்குக் கூறியிருந்தார். பாடலொன்று உள்ளது: “உங்களைப் பார்த்தவுடன், எனதுள்ளம் அதிகம் சந்தோஷப்படுகின்றது” ஏன்? ஏனெனில் குழந்தைகள் பாபாவின் கண்களில் அமிழ்ந்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் ஒளியானவர்கள். குழந்தைகளைப் பார்த்து, தந்தை மிகவும் மகிழ்;ச்சியடைகிறார். சில குழந்தைகள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் ஒரு நிலையத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள். பிராமணர்களாகிய பின்னர், சிலர் விகாரத்தில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் கீழ்ப்படிவற்றவர்கள். சேவை செய்யக்கூடிய குழந்தைகளைப் பார்த்து, இந்தத் தந்தையும் மகி;ழ்ச்சியடைகிறார். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: இந்தக் குலத்தின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் ஒருவராக அவர் மாறியுள்ளார். அவர்கள் பிராமண குலத்தின் பெயரை அவதூறு செய்கிறார்கள். அவர் தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: எவரது பெயரிலோ அல்லது உருவத்திலோ அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். இதுவே ஒருவர் குலப் பெயருக்கு அரை இறுதி (செமி) அவமரியாதை ஏற்படுத்துபவராக இருத்தல் எனப்படுகிறது. பின்னர் அரை இறுதியிலிருந்து இறுதி ஆகிவிடுகிறது. அவர்கள் தாங்களே எழுதுவார்கள்: பாபா, நான் வீழ்ந்துவிட்டேன். நான் எனது முகத்தை அவலட்சணமாக்கிவிட்டேன். மாயை என்னை ஏமாற்றிவிட்டாள். மாயையின் பல புயல்கள் வரும். தந்தை கூறுகிறார்: காமம் என்ற வாளை உபயோகித்தல், ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிப்பது என்று பொருளாகும். இதனாலேயே அவர்களை ஒரு வாக்குறுதி கொடுக்கும்படி கேட்கப்படுகிறது. சிலர் இரத்தத்தினால் நீண்ட கடிதமும் எழுதியிருந்தார்கள். ஆனால், இன்று அவர்கள் இங்கு இல்லை. தந்தை கூறுகிறார்: ஓ மாயையே! நீ மிகவும் சக்தி வாய்ந்தவள்! தங்களுடைய சொந்த இரத்தத்தினால் தங்களுடைய வாக்குறுதியை எழுதிய குழந்தைகளையே நீ விழுங்கிவிட்டாய். தந்தை சக்தி வாய்ந்தவராக இருப்பதுபோன்று, மாயையும் சக்தி வாய்ந்தவள். தந்தையிடமிருந்து நீங்கள் அரைக் கல்பத்திற்கு சக்தியை ஆஸ்தியாகப் பெறுகிறீர்கள். பின்னர் மாயை அரைக் கல்பத்திற்கு உங்களை அந்தச் சக்தியை இழக்கச் செய்கிறாள். இது பாரதத்திற்குப் பொருந்தும். தேவ தர்மத்திற்கு உரியவர்களே செழிப்புடையவர்களாக இருந்து, கடனைத் தீர்க்க முடியாதவர்களாக மாறியுள்ளார்கள். இப்பொழுது நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆலயத்திற்குச் செல்லும்போது, நீங்கள் எவ்வாறு அந்தக் குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்று ஆச்சரியப்படுவீர்கள். இப்பொழுது நீங்கள் கற்கின்றீர்கள். இவருடைய ஆத்மாவும் பாபாவிடமிருந்து கற்கின்றார். முன்னர், நீங்கள் எல்லா இடங்களிலும் தலை வணங்குவது வழக்கம். இப்பொழுது உங்களிடம் ஞானமுள்ளது. ஒவ்வொருவரினதும் 84 பிறவிகளின் வாழ்க்கைச் சரிதையும் உங்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் தங்களது சொந்தப் பாகத்தை நடிக்கிறார்கள்.தந்தை கூறுகிறார்: குழந்தைகளே,எப்பொழுதும் முக மலர்ச்சியுடன் இருங்கள். பின்னர், நீங்கள் இங்கு முகமலர்ச்சியுடன் இருக்கும் சம்ஸ்காரத்தை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எல்லையற்ற தந்தை, இந்த ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். வேறு எவராலும் இதனை உங்களுக்குக் கொடுக்கமுடியாது. இலக்ஷ்மி நாராயணன் எங்கு சென்றார்கள் என எவருக்கும் தெரியாது. அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அங்கு திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: உங்கள் புத்தியினால் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் வேதங்கள், சமய நூல்கள் போன்றவற்றைக் கற்பது வழக்கம். இப்பொழுது நான் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன். இப்பொழுது தீர்மானித்துக் கொள்ளுங்கள்: பக்தி மார்க்கம் சரியா அல்லது நான் சரியா? தந்தை இராமர் நேர்மையானவர். இராவணன் நேர்மையற்றவன். அனைத்தையுமிட்டு மக்கள் பொய் கூறுகிறார்கள். இது, இந்த ஞானத்தில் உள்ள விடயங்களைக் குறிப்பதாகும். முன்னர், நீங்கள் அனைவரும் போலியானவற்றைக் கூறிவந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தான, தர்மங்கள் போன்றவற்றை நீங்கள் செய்தபோதும், நீங்கள் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கினீர்கள். நீங்கள் ஏனைய ஆத்மாக்களுக்கே கொடுத்தீர்கள். பாவம் நிறைந்த ஆத்மாக்கள், ஏனைய பாவம் நிறைந்த ஆத்மாக்களுக்குக் கொடுப்பதனால், எவ்வாறு தூய, தர்மாத்மாக்களாக முடியும்? அங்கு, ஆத்மாக்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் இருக்க மாட்டாது. இங்கு, மக்கள் நூறாயிரக் கணக்கான ரூபாய்களை ஒருவரிடமிருந்து இன்னொருவர் கடனாகப் பெறுகிறார்கள். இந்த இராவண இராச்சியத்தில், மக்கள் ஒவ்வோர் அடியிலும், துன்பத்தையே அனுபவம் செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். உங்களது ஒவ்வோர் அடியிலும் பலகோடிகள் உள்ளது. தேவர்கள் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகினார்கள்? எவருக்கும் இது தெரியாது. நிச்சயமாக, சுவர்க்கம் இருந்தது. அதற்கான அறிகுறிகளும் உள்ளன. எவ்வாறாயினும், அவர்கள் அந்த இராச்சியத்தைப் பெறுவதற்கு, முன்னைய பிறவியில் என்ன செயல்களைச் செய்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அது புதிய உலகமாகும். ஆகவே அங்கு பயனற்ற எண்ணங்கள் இருக்கமாட்டாது. அது சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகிறது. அது 5000 ஆண்டுகளுக்கான கேள்வியாகும். தூய்மையாகும் சந்தோஷத்தை அனுபவம் செய்வதற்காகவே நீங்கள் கற்கின்றீர்கள். பல வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தந்தை மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். அமைதி தாமமே, ஆத்மாக்களாகிய உங்களது வசிப்பிடமாகும். அது இனிய வீடு என அழைக்கப்படுகிறது. மக்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது, தங்கள் இனிய வீட்டிற்குத் திரும்புவதாக அவர்கள் உணர்வார்கள். அமைதி தாமமே உங்கள் இனிய வீடாகும். தந்தை அமைதிக் கடல். தாமதித்து வரவேண்டிய பாகத்தை உடையவர்கள், நீண்ட காலத்திற்கு அமைதி தாமத்தில் இருப்பார்கள். பாபாவின் பாகம் மிகவும் குறகியதாகும். இந்த நாடகத்தில் நீங்கள் கதாநாயக, கதாநாயகி பாகங்களை நடிக்கவேண்டும். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். வேறு எவரும் இந்தப் போதையைக் கொண்டிருக்க முடியாது. வேறு எந்த ஆண் பெண் எவருமே தமது பாக்கியத்தில் சுவர்க்க சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் பெறுகிறீர்கள். இவ்வாறு கூறும் குழந்தைகளைப் பார்த்து, தந்தை மகிழ்ச்சியடைகிறார்: பாபா, நான் உங்களுடன் மாத்திரமே பேசுவேன். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்களைப் பார்த்து, நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களைத் துன்ப பூமியிலிருந்து, சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே, நான் 5000 ஆண்டுகளுக்குக் பின் வந்திருக்கிறேன். ஏனெனில் காமச்சிதையில் அமர்ந்ததினால், நீங்கள் முற்றாக எரிந்துவிட்டீர்கள். நான் இப்பொழுது அவர்களுடைய கல்லறைகளிலிருந்து அவர்களை வெளியே எடுக்கவேண்டும். இப்பொழுது அனைத்து ஆத்மாக்களும் இங்கு உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தூய்மையாக்கப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, சற்குரு ஒருவரை மாத்திரமே உங்கள் புத்தியில் வைத்திருங்கள். ஏனைய அனைவரையும் மறந்துவிடுங்கள். உங்களது தொடர்பை ஒரேயொருவருடன் மாத்திரமே கொண்டிருங்கள். நீங்கள் கூறுவதுண்டு:: நீங்கள் வந்ததும், நாங்கள் வேறு எவருக்கும் அன்றி உங்களுக்கு மாத்திரம் உரித்தானவர்களாக இருப்போம். உங்களுடைய அறிவுறுத்தல்களை மாத்திரமே நாங்கள் பின்பற்றி, மேன்மையானவர்கள் ஆகுவோம். மக்கள் பாடுகிறார்கள்: கடவுளே அதி மேலானவர். அவருடைய அறிவுறுத்தல்களே அனைத்திலும் மேன்மையானவையாகும். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குக் கொடுக்கும் ஞானம் பின்னர் மறைந்துவிடும். பக்தி மார்க்கத்திலுள்ள சமய நூல்கள் ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்கின்றன. இராவணனும் அன்றிலிருந்து எப்போதும் இருக்கிறான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களைக் கேளுங்கள்: எவ்வளவு காலமாக நீங்கள் இராவணனை எரிக்கிறீர்கள்? ஏன் அவனை எரிக்கிறீர்கள்? அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்களுக்கு இதன் அர்த்தம் புரியாததால், அவர்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இராவணனின் கொடும்பாவியை எரிக்கும் வைபவத்தை நிகழ்த்தும்போது அவர்கள் பல விருந்தினர்களை அழைக்கிறார்கள். இராவணனின் கொடும்பாவியை எப்போது தொடக்கம் உருவாக்குகிறார்கள் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. நாளுக்கு நாள் அவர்கள் கொடும்பாவியைப் பெரியதாகச் செய்கின்றார்கள். ஆரம்ப காலத்திலிருந்து அவ் வழக்கம் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் அது சாத்தியமில்லை. எவ்வளவு காலத்திற்கு அவர்கள் தொடர்ந்து இராவணனை எரிப்பார்கள்? ஒரு சொற்ப காலமே எஞ்சியுள்ளதென்பதையும், பின்னர் அவனது இராச்சியம் இருக்கமாட்டாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீPர்கள். தந்தை கூறுகிறார்: இந்த இராவணனே மிகப்பெரிய எதிரியாவான். நீங்கள் அவனை வெற்றி கொள்ளவேண்டும். மனிதர்களின் புத்தியில் வௌ;வேறு விடயங்கள் உள்ளன. இந்த நாடகத்தில், விநாடிக்கு விநாடி தொடர்ந்தவை அனைத்தும் முன்னரே நிச்சயிக்கப்பட்டவை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் நடித்த அனைத்துப் பாகங்களையும், எத்தனை மணித்தியாலங்கள், எத்தனை ஆண்டுகள், எத்தனை மாதங்கள் என்று நீங்கள் கணக்கிடலாம் இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். பாபா இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை கூறுகிறார்: நானே தூய்மையாக்குபவர். வந்து தூய்மையாக்கும்படி நீங்கள் என்னைக் கூவி அழைத்தீர்கள். அமைதி தாமமும், சந்தோஷ தாமமுமே தூய உலகங்களாகும். இப்பொழுது அனைவரும் தூய்மையற்றவர்கள். தொடர்ந்தும் கூறுங்கள்: பாபா, பாபா. நீங்கள் இதனை ஒருபோதும் மறக்காதீர்கள்;. அப்பொழுது நீங்கள் சிவபாபாவை நினைவு செய்வீர்கள். இவர் எங்கள் பாபா. முதலில் இந்த எல்லையற்ற பாபா இருக்கிறார். “பாபா” என்று கூறுவதனால், உங்கள் ஆஸ்தியின் சந்தோஷத்தை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள். “பகவான்” அல்லது “ஈஸ்வரர்” என்ற வார்த்தைகளை உபயோகிப்பதனால், உங்களுக்கு அவ்வாறான எண்ணங்கள் ஏற்படாது. எல்லையற்ற தந்தை, பிரம்மாவினூடாக விளங்கப்படுத்துகிறார் என்று அனைவருக்கும் கூறுங்கள். இது அவருடைய இரதமாகும். அவர் இவர் மூலம் கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களைத் தேவர்கள் ஆக்குகிறேன். முழு ஞானமும் இந்த பட்ஜில் அடங்கும். இறுதியில் நீங்கள் அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும். மாத்திரமே நினைவு செய்வீர்கள். நீங்கள் துன்ப பூமியை மறந்துவிடுவீர்கள். பின்னர் அனைவரும்;, வரிசைக்கிரமமாக, அவரவருக்குரிய நேரத்தில் வருவார்கள் என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் போன்று பலர் உள்ளனர். பல மொழிகள் உள்ளன. ஆரம்பத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது. இப்பொழுது பல சமயங்கள் தோன்றியுள்ளன. யுத்தங்கள் போன்ற பல இடம்பெறுகின்றன. அனைவரும் அநாதைகள் ஆகிவிட்டதனால், அவர்கள் சண்டையிடு;கிறார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நான் உங்களுக்குக் கொடுத்த இராச்சியத்தை எவராலும் உங்களிடமிருந்து அபகரிக்க முடியாது. தந்தை உங்களுக்கு சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கிறார். அதனை எவராலும் அபகரிக்க முடியாது. நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாகவும், ஸ்திரமானவர்களாகவும் இருக்கவேண்டும். மாயையின் புயல்கள் நிச்சயம் வரும். முன்னால் இருப்பவர் அனைத்தையும் முதலில் அனுபவம் செய்வார். நோய்கள் போன்றன அனைத்தும் எல்லா நேரத்திற்கும்; முடிவுக்கு வரவேண்டும். இதனாலேயே உங்களுடைய நோய்கள் போன்றன அதிகரிக்கும்போது, உங்கள் கர்மக் கணக்குகளை முடிப்பதற்கு நீங்கள் பயப்படக்கூடாது. இவை அனைத்தும் இறுதியில் வரும். அதன் பின்னர் அவை எதுவும் எஞ்சி இருக்கமாட்டாது. அவை அனைத்தும் இந் நேரத்தில் வெளிப்படும். மாயையினால் வயது முதிர்ந்தவர்களை மீண்டும் இளமையானவர்களாக ஆக்க முடியும். ஆண்கள் ஓய்வெடுக்கும்போது, அங்கு பெண்கள் இருக்கமாட்டார்கள். சந்நியாசிகளும் சென்று காட்டில் வாழ்வார்கள். அங்கும் பெண்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவர்கள் எவரையும் பாhக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய தானத்;தைப் பெற்றுக்கொண்டு, சென்றுவிடுவார்கள். முன்னர் அவர்கள் பெண்கள் இருக்கும் திசையைக்கூடப் பார்க்க மாட்டார்கள். தங்களுடைய புத்தி நிச்சயம் ஈர்க்கப்படும் என்று அவர்கள் நினைத்தார்கள். சகோதர, சகோதரி என்ற உறவு முறையிலும் புத்தி ஈர்க்கப்படுகிறது. இதனாலேயே பாபா கூறுகிறார்: சகோதரத்துவப் பார்வையைக் கொண்டிருங்கள். சரீரத்தின் பெயரையும் நினைக்காதீர்கள். இந்த இலக்கு அதிஉயர்ந்ததாகும். நீங்கள் அதிஉயர்ந்த உச்சிக்குச் செல்லவேண்டும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. அதற்கு அதிகளவு முயற்சி தேவை. நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவோம். தந்தை கூறுகிறார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றி, அவ்வாறு ஆகுங்கள். மாயையின் புயல்கள் வரும். ஆனால் நீங்கள் உங்கள் பௌதீகப் புலன்களின் ஊடாக எந்தப் பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. எவ்வாறாயினும் மக்கள் கடனாளிகள் ஆகுவார்கள். நீங்கள் ஞானத்திற்குள் வந்ததனால் கடனாளிகள் ஆகினீர்கள் என்றில்லை. இவ் விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறும். தந்தை கூறுகிறார்: உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குவதற்காக நான் வருகிறேன். சில சமயங்களில் சிலர் நல்ல சேவை செய்து, இந்த ஞானத்தை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகிறார்கள். பின்னர் அவர்கள் கடனாளி ஆகுகின்றார்கள். எவ்வாறாயினும் மாயை மிகவும் சக்தி நிறைந்தவள.; மிகச் சிறந்தவர்களும் வீழ்வார்கள். தந்தை இங்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: என்னுடைய சேவையைச் செய்யும் குழந்தைகளையே நான் விரும்புகிறேன். அவர்கள் ஏனையவர்களை, சந்தோஷமாக்குகிறார்கள். ஆகவே நான் தொடர்ந்து அவ்வாறான குழந்தைகளை நினைவு செய்கிறேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எவரது பெயரிலோ அல்லது உருவத்திலோ சிக்குண்டு, குலத்தின்; பெயருக்கு அவதூறு ஏற்படுத்தாதீர்கள். மாயையினால் ஏமாற்றப்பட்டு, ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்காதீர்கள். உங்கள் ஆஸ்தியான சக்தியைத் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

2. இங்கு சதா முகமலர்ச்சியாக இருக்கும் சம்ஸ்காரத்தை மனதில் பதியச் செய்யுங்கள். பாவ ஆத்மாக்களுடன் எவ்விதத் தொடர்பையும் கொண்டிராதீர்கள். நோய்கள் போன்றவற்றைiயிட்டுப் பயப்படாதீர்கள். இப்பொழுதே உங்கள் அனைத்துக் கர்மக் கணக்குகளையும் தீர்த்துவிடுங்கள்.

ஆசீர்வாதம்:
அனைத்து வீணானவற்றிற்கும் முற்றுப்புள்ளி இடுவதற்கு, உங்கள் மனோசக்தியை பயன்படுத்துவதன் மூலம் சரீரமற்றவர் ஆகுவீர்களாக.

ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுவதற்கான அத்திவாரம் எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவத்தை கொண்டிருப்பதாகும். இந்த விருப்பமின்மையானது, இதில் நீங்கள் எதனை பயிரிட்டாலும், அதில் உடனடிப் பலாபலனைக் காணக்கூடிய அத்தகையதொரு வளமான நிலமாகும். எனவே, இப்பொழுது, அனைத்து வீணானவையும் முடிய வேண்டும் என்ற ஓர் எண்ணத்தைக் கொண்டிருக்கும் போது, ஒரு விநாடியில் அது முடிவடைந்து விடும் வகையில், அத்தகைய மனோசக்தியை கொண்டிருங்கள். நீங்கள் விரும்புகின்ற நேரத்தில், நீங்கள் எங்கிருக்க விரும்புகிறீர்களோ, நீங்கள் எந்தவொரு ஸ்திதியில் உங்களை நிலைத்திருக்கச் செய்ய விரும்புகிறீர்களோ ஒரு விநாடியில், அதில் உங்களை ஸ்திரமாக்கிக் கொள்ளுங்கள், சேவை உங்களை ஈர்க்காதிருக்கட்டும். ஒரு விநாடியில் முற்றுப் புள்ளி இட்டால், நீங்கள் இலகுவாக சரீரமற்றவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தந்தைக்குச் சமம் ஆக வேண்டுமாயின், பிழைத்து விட்டதை சரியானதாக ஆக்குபவர் ஆகுங்கள்.