13.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


ராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் 21 பிறவிகளுக்கு விழாக்கள் போன்றவற்றிற்குச் சென்று, உங்களைக் களிப்பூட்டிக் கொள்ளத் தேவையில்லாத வகையில் பாபா உங்கள் இதயத்தைக் களிப்பூட்டுகின்றார்.

பாடல்:
இப்பொழுது தந்தையின் உதவியாளர்கள் ஆகுகின்ற குழந்தைகள் எந்த உத்தரவாதத்தைக் கொண்டிருக்கின்றார்கள்?

பதில்:
ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராச்சிய ஸ்தாபனைக்கு உதவியாக இருக்கின்ற குழந்தைகள் என்றுமே மரணம் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைக் கொண்டிருக்கின்றார்கள். சத்தியயுக இராச்சியத்தில் அகால மரணம் என்பதே இல்லை. உதவியாளர் ஆகுகின்ற குழந்தைகள் தந்தையிடமிருந்து 21 சந்ததிக்கு அமரத்துவமானவர்கள் ஆகுதல் என்ற அத்தகைய பரிசைப் பெறுகிறார்கள்.

ஓம் சாந்தி.
ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ள உலகச் சக்கரத்திற்கு ஏற்ப, முன்னைய கல்பத்தில், கடவுள் சிவன் பேசியது போன்றே இப்பொழுதும் பேசுகின்றார். குழந்தைகள் இப்பொழுது தமது சொந்த அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டதுடன், தந்தையின் அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையையும், எல்லையற்ற உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிவீர்கள். சிலர் தத்தமது முயற்சிக் ஏற்ப இதனை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்வதால், அவர்களால் அவற்றைப் பிறருக்கு விளங்கப்படுத்த முடிகின்றது. சிலர் அரைவாசியையும் சிலர் அதிலும் குறைவாகவும் புரிந்து கொள்கின்றார்கள். ஒரு யுத்தத்தில், ஒருவர் சேனாதிபதியாகவும் (சீஃப் கொமாண்டர்;) சிலர் தலைவர்களாகவும் (கப்டன்கள்) வேறும் சிலர் வேறு தரத்திலும் உள்ளார்கள். இராச்சியம் என்ற மணிமாலையிலும், சிலர் செல்வந்தப் பிரஜைகளாகவும் ஏனையோர் ஏழைப் பிரஜைகளாகவும் ஆகுகின்றார்கள். அதுவும் வரிசைக்கிரமமானதே. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், மேன்மையான உலக இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதனை அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, நீங்கள் தந்தையிடம் இருந்து ஒரு பரிசைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இக்காலத்தில், அமைதிக்காக ஆலோசனை வழங்குகின்றவர்களும் பரிசைப் பெற்றுக் கொள்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்களும் பரிசைப் பெறுகிறீர்கள். அவர்களால் இந்தப் பரிசை பெற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் அனைத்தையுமே தற்காலிகமாகவே பெற்றுக் கொள்கின்றார்கள். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இது 21 பிறவிகளுக்கும் 21 சந்ததிகளுக்குமான உத்தரவாதமாகும். அங்கே சிறுவர்களாயினும் பெரியவர்களாயினும் எவருக்கும் மரணம் ஏற்படுவதில்லை. இது உங்கள் மனதிலோ அல்லது இதயத்திலோ இருக்கவில்லை என்பதையும் நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் சேவை செய்த இடத்திலும், அத்துடன்; உங்கள் ஞாபகார்த்தங்கள் உள்ள இடத்திலும் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தில்வாலா ஆலயம், அச்சல்கார், குரு சிக்கார்; போன்றன உள்ளன. நீங்கள் அதிமேலான சத்குருவைக் கண்டு கொண்டீர்கள். அவரின் ஞாபகார்த்தமும் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சல்கார் என்பதன் அர்த்தத்தையும் (ஆட்ட அசைக்க முடியாதவரின் இல்லம்) நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அது இல்லத்திற்கான புகழாகும். நீங்கள் உங்கள் சொந்த முயற்சியினால் அதி மேலான அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அது உங்கள் அற்புதமான உயிரற்ற ஞாபகார்த்தமாகும். நீங்கள் இப்பொழுது உயிருள்ள வடிவத்தில் வந்து அமர்ந்திருக்கின்றீர்கள். இவை யாவும் முன்னைய கல்பத்தில் இடம் பெற்ற ஆன்மீகச் செயற்பாடுகளாகும். அதன் முழுமையான ஞாபகார்;த்தம் இங்குள்ளது. அது முதற்தரமான ஞாபகார்;த்தமாகும். ஒருவர் ஒரு முக்கிய பரீட்சையில் சித்தி எய்தும் பொழுது, அவரிடம் அதற்கான உள்ளார்ந்த சந்தோஷமும், பிரகாசமும் காணப்படுகின்றது. அவரின் தளபாடங்களும் அவர் ஆடை அணிகின்ற விதமும் மிகச். சிறப்பாக இருக்கும். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எவரும் தம்மை உங்களுடன் ஒப்பிட முடியாது. இதுவும் ஒரு பாடசாலையாகும். உங்களுக்கு கற்பிக்கின்றவர் யார் என்பதனையும் நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். கடவுள் பேசுகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் நினைவு செய்தவரையும், வழிபட்டவரையும் அறிந்திருக்கவில்லை. இந்த இரகசியங்கள் அனைத்தையும் தந்தையே வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனெனில், இவை யாவும் உங்கள் இறுதி ஸ்திதியின் ஞாபகார்த்தங்களாகும். முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. உங்கள் ஸ்திதி முழுமை அடையும் பொழுது, பின்னர் அதன் ஞாபகார்த்தம் பக்தி மார்க்கத்தில் உருவாக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு, இரக்ஷ பந்தன் பண்டிகை உள்ளது. நாங்கள் முழுமையான இராக்கியைக் கட்டி, எங்கள் இராச்சிய பாக்கியத்தை பெற்றுக் கொண்டதும் நாங்கள் அந்த விழாவைக் கொண்டாட மாட்டோம். மந்திரங்கள் அனைத்தினது அர்த்தங்களும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘ஓம்’ என்பதன் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஓம் என்பதன் அர்த்தம் நீளமானதோ அல்;லது சிக்கலானதோ அல்ல. ‘ஓம்’ என்றால் நான் ஆத்மா, இது எனது சரீரம் என்பதேயாகும். அறியாமைப் பாதையில் நீங்கள் சரீர உணர்;வில் இருப்பதால் உங்களை நீங்கள் சரீரம் எனக் கருதுகிறீர்கள். நாளுக்கு நாள் பக்தி மார்க்கம் மேலும் மேலும் சீரழிந்து வருகின்றது. அது தொடர்ந்து மேலும் தமோபிரதான் ஆகுகின்றது. அனைத்தும் முதலில் சதோபிரதானாகவே உள்ளது. நீங்கள் முதலில் ஒரேயொரு உண்மையான சிவபாபாவை நினைவு செய்த பொழுது பக்தியும் சதோபிரதானாக இருந்தது. அப்பொழுது உங்களில் வெகு சிலரே இருந்தீர்கள். நாளுக்கு நாள் விரிவு ஏற்படவே வேண்டும் வெளிநாட்டில், ஒரே நேரத்தில் பல குழந்தைகளைப் பெறுகின்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரியாகும். உலக சனத்தொகை பெருமளவு அதிகரித்துள்ளது. இப்பொழுது தூய்மையாகுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலக ஆரம்பம் மத்தி இறுதி பற்றி தந்தையின் மூலம் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். சத்தியயுகத்தில் பக்தியின் பெயரோ அதன் சுவடோ இருப்பதில்லை. இப்பொழுது அதிகளவு ஆடம்பரம் உள்ளதுடன்; மக்கள் சென்று, தம்மைக் களிப்பூட்டிக் கொள்ளக்கூடிய வகையில் அதிகளவு விழாக்கள் போன்றனவும் உள்ளன. தந்தை இப்பொழுது வந்து உங்களைக் களிப்பூட்டுகின்றார். எனவே நீங்கள் இன்னும் 21 பிறவிகளுக்கு தொடர்ந்து களிப்பூட்டப்படுகின்றீர்கள். நீங்கள் என்றுமே களியாட்டங்கள் போன்றவற்றிக்குச் செல்லுகின்ற எண்ணத்தைக் கூட கொண்டிருக்க மாட்டீர்கள். மக்;கள் சந்தோஷத்திற்காக பல்வேறு இடங்களைத் தேடிச் செல்கின்றார்கள். நீங்கள் மலைகள் போன்றவற்றிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே மக்கள் எவ்வாறு மரணிக்கின்றார்கள் எனப் பாருங்கள்! மக்களுக்குச் சத்திய, கலியுகங்களைப் பற்றியோ அல்லது சுவர்க்கம் நரகம் பற்றியோ தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் முழு ஞானத்தையும் பெறுகின்றீர்கள். தந்தை தம்முடன் நீங்கள் இருக்க வேண்டும் எனக் கூறுவதில்லை நீங்கள் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவும் வேண்டும். முரண்பாடு ஏதாயினும் இருந்தாலே குழந்தைகள் பிரிந்து செல்கின்றார்கள். இருப்பினும், நீங்கள் தந்தையுடன் தங்கி விட முடியாது. அனைவரும் சதோபிரதானாகுவது முடியாது. சிலர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளையும் கொண்டிருக்கின்றார்கள். அனைவரும் சேர்;ந்து வாழ முடியும் என்றில்லை. ஓர் இராச்சியம் உருவாக்கப்படுகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ அந்தளவிற்கே இராச்சியத்தில் வரிசைக்கிரமமாக அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். பிரதான விடயம் தந்தையை நினைவு செய்வதே ஆகும். தந்தை தானே இங்கு அமர்ந்து அப்பியாசத்தைக் (னசடைட) கற்பிக்கின்றார். இது மயான அமைதி ஆகும். இங்கே நீங்கள் காண்;கின்ற அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருக்க வேண்டும். உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் நீங்கள் துறந்து விடல் வேண்டும். நீங்கள் எதனைப் பார்க்கிறீர்கள்? முதலில், நீங்கள் உங்கள் இல்லத்தைக் காண்கின்றீர்கள். இரண்டாவதாக நீங்கள் கற்கின்ற அளவிற்கு நீங்கள் பெறப்போகின்ற அந்தஸ்தையாகும். அந்த சத்தியயுக இராச்சியத்கை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்தியயுகம் உள்ள பொழுது, திரேதாயுகம் இருப்பதில்லை. திரேதா யுகம் உள்ள பொழுது துவாபரயுகம் இருப்பதில்லை. துவாபரயுகம் இருக்கும் பொழுது கலியுகம் இருப்பதில்லை. இப்பொழுது இது கலியுகமும் அத்துடன் சங்கமயுகமும் ஆகும். நீங்கள் பழைய உலகத்தில் அமர்ந்திருந்தாலும் உங்கள் புத்தி, நீங்கள் சங்கமயுகத்தினர்; என்பதனைப் புரிந்துகொள்கிறது. சங்கமயுகம் என அழைக்கப்படுவது எது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதி மங்களகரமான சங்கம வருடம், அதி மங்களகரமான மாதம், அதி மங்களகரமான தினம் அனைத்தும் அதி மங்களகரமான சங்கம யுகத்திலேயே உள்ளன. மிகவும் மேன்மையான மனிதர்கள் ஆகுகின்ற கணமும் இந்த அதி மங்கள்கரமான சங்கமயுகமே ஆகும். இது மிகவும் குறுகிய லீப் யுகமாகும். நீங்கள் குட்டிக்கரணம் அடிப்பதன் மூலம் சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். சாதுக்களும் ஏனையோரும் கூட எவ்வாறு யாத்திரை செல்லும் பொழுது குட்டிக்கரணம் அடிக்கின்றார்கள் என்பதனையும் பாபா பார்த்துள்ளார். அவர்கள் தமக்கு அதிகளவு சிரமத்தைக் கொடுக்கின்றார்கள். இங்கே சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. இது யோகசக்திக்கான விடயமாகும். நினைவு யாத்திரை செல்வது குழந்தைகளாகிய உங்களுக்கு கடினமாக உள்ளதா? அதனைப் பற்றிக் கேட்கும்; பொழுது, நீங்கள் பயப்படக் கூடாது என்பதற்காக அது இலகு யோகம் என அழைக்கப்படுகின்றது. சிலர் கூறுகின்றார்கள்: பாபா, என்னால் யோகத்தில் நிலைத்திருக்க முடியவில்லை. அதனால் பாபா அதனை உங்களுக்கு இலகுவாக்குகின்றார். இது தந்தையை நினைவு செய்தலாகும். நீங்கள் எதனையும் நினைவு செய்ய முடியும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மா எனக் கருதுங்கள். நீங்கள் குழந்தைகள். இல்லையா? இவர் உங்கள் தந்தையும் உங்கள் அன்பிற்கினியவரும் ஆவார். காதலிகள்; அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். 'தந்தை" என்ற ஓரு வார்த்தை போதுமானதாகும்.. பக்தி மார்க்கத்தில் நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை நினைவு செய்தீர்கள். இருந்தும் நீங்கள் நிச்சயமாக 'ஓ கடவுளே! ஓ ஈஸ்வர்!" என்று கூறினீர்கள். யார் கடவுள் என்பதனை நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை பரமாத்மா ஆவார். இந்த சரீரத்தின் தந்தை ஒரு சரீரதாரியாவார். ஆத்மாக்களின் தந்தை சரீரமற்றவராவார். அவர் என்றுமே மறுபிறப்பெடுப்பதில்லை. ஏனைய அனைவரும் மறுபிறப்பெடுக்கின்றார்கள். ஆகையாலேயே நீங்கள் தந்தையை மாத்திரம் நினைவு செய்கின்றீர்கள். அவர் நிச்சயமாக ஏதோ ஒரு நேரத்தில் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கின்றார். அவர் துன்பத்தை அதற்றி, சந்தோஷத்தை அருள்கின்றவர் என அழைக்கப்படுகின்றார். ஆனால் மக்களுக்கு அவரின் பெயரோ, வடிவமோ, இடமோ, நேரமோ தெரியாது. மக்கள் இருக்கும் அளவிற்கு அபிப்பிராயங்களும் உள்ளன. எண்ணற்ற அபிப்பிராயங்கள் உள்ளன. தந்தை உங்களுக்கு அதிகளவு அன்புடன் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு அமைதியை அருள்கின்ற கடவுளாவார். நீங்கள் அவரிடமிருந்து அதிகளவு சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அவர் ஒரேயொரு கீதையை உரைத்துத் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். இல்லறப்பாதையும் இருக்க வேண்டும். சக்கரத்தின் காலப்பகுதி ஆயிரமாயிரம் ஆண்டுகள் என மக்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறாயின், எண்ணற்ற மனிதர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அத்தகைய ஒரு தவறைச் செய்துள்ளார்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். அதன்பின்னர் அது மறைந்து விடுகின்றது. வழிபாடு செய்யப்பட்ட விக்கிரகங்களும் உள்ளன. எவ்வாறாயினும், தாம் தேவதர்;மத்தைச் சேர்;ந்தவர்கள் என அவர்கள் கருதுவதில்லை. ஒருவர் எந்த விக்கிரகத்தை வழிபடுகின்றாரோ அவர் அந்தச் சமயத்தைச் சார்ந்தவராக உள்ளார். தாங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்;ந்தவர்கள் எனபதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அது அவர்களின் வம்சமாகும். தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையாகி, சதோபிரதான் ஆகவேண்டும். கங்கையில் நீராடுவதன் மூலம் இவ்வாறாகமுடியுமா? தந்தையே தூய்மையாக்குபவர் ஆவார். அவர் வந்து உங்களுக்குப் பாதையை காட்டும் பொழுதே, உங்களால் தூய்மையாக முடியும். மக்கள் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆத்மாவே புலனங்கங்களின் மூலம் கூவி அழைக்கின்றார்: ஓ தூய்மையாக்குகின்ற பாபாவே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். அனைவரும் தூய்மையற்றவர்களாக இருப்பதுடன் தொடர்ந்து காமச்சிதையில் எரிகின்றார்கள். அந்த வகையில் இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தந்தை வந்து அனைவரையும் தூய்மையாக்குகின்றார். சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார். சத்தியுகத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. ஏனைய அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். நீங்கள் இப்பொழுது இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இதனை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அதன் காலஎல்லையையும் நீங்கள் மாத்திரமே அறிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் அனைவரும் சூத்திரர்கள். நீங்களோ பிராமணர்கள். நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக இதனை அறிந்து கொள்கின்றீர்கள். ஒருவர் ஒரு தவறை செய்யும் பொழுது, அவரின் பதிவேட்டைச் சோதித்துப் பார்த்தால், அவர் சிறிதளவே கற்றிருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம். ஒருவரின் நடத்தைக்கான பதிவேடும் உள்ளது. இங்கும் ஒரு பதிவேடு இருக்க வேண்டும். இது எவரும் அறியாத ஒரு நினைவு யாத்திரையாகும். அனைத்திலும் மிகவும் பிரதானமான பாடம் நினைவு யாத்திரையாகும். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மா தனது வாயின் மூலம் கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தை விடுத்து, இன்னொன்றை எடுக்கின்றேன். இவை யாவற்றையும் பிரம்ம பாபா விளங்கப்படுத்துவதில்லை. ஞானக்கடலான பரமாத்;மா பரமதந்தையே இங்கு இந்த இரதத்தில் அமர்ந்திருந்து இவை யாவற்றையும் விளங்கப்படுத்துகின்றார். கௌமுக் (பசுவின் வாய்;) என அவர் அழைக்கப்படுகின்றார். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலும் ஓர் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஏணி உள்ளது போன்றே, அங்கும் படிகள் உள்ளன. அவற்றில் ஏறுவதில் நீங்கள் களைப்படைவதில்லை. நீங்கள் தந்தையுடன் கற்று, உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டிக் கொள்ளவே இங்கே வந்திருக்கின்றீர்கள். நீங்கள் வீடு திரும்பியதும் உலகியல் விடயங்களில் பலவற்றில்; ஈடுபட வேண்டியிருக்கும். உங்களால் எதனையும் அமைதியாக செவிமடுக்கக் கூட முடியாதிருக்கும். உங்கள் எண்ணங்கள் தொடர்ந்து விரைந்தோடும்: எவரும் என்னைப் பார்க்கக் கூடாது. நான் சீக்கிரமாக வீட்டிற்குச் திரும்பிச் செல்ல வேண்டும். இவ்வறாக அதிகளவு கரிசனைகள் உள்ளன. ஒரு விடுதியில் உங்களுக்கு இருக்கக்கூடிய கரிசனைகள் கூட உங்களுக்கு இங்கில்லை. இது கடவுளின் குடும்பமாகும். சகோதர்கள் அமைதி தாமத்தில் இருக்கின்றார்கள். இங்கே, சகோதர, சகோதரிகள் உள்ளனர். ஏனெனில், நீங்கள் உங்கள் பாகத்தை நடிக்க வேண்டும் என்பதால் சகோதர, சகோதரிகள் இருக்க வேண்டும். சத்தியயுகத்திலும் நீங்கள் சகோதர, சகோதரிகளாகவே உள்ளீர்கள். அது பிரிவினையற்ற இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. அங்கே, சண்டை சச்சரவு எதுவும் இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதற்கான முழு ஞானத்தையும் பெற்றிருக்கிறீர்கள். உச்சளவு பக்தி செய்தவர்;களின் கணக்கைப் பற்றியும் தந்தை உங்களுக்கு கூறியுள்ளார். சிவனின் கலப்படமற்ற வழிபாட்டை நீங்களே ஆரம்பிக்கிறீர்கள். அதன்பின்னர் அது தொடர்ந்து விரிவடைகின்றது. அவை யாவும் பக்தியாகும். ஒரேயொரு ஞானமே உள்ளது. சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த பிரம்மாவிற்கு எதுவும் தெரியாது.. கொள்ளுப்பாட்டனாராக இருந்தவர், இந்த நேரத்தில் அவ்வாறாகுகின்றார். அத்துடன் அவர் பின்னர் அதிபதியாகுகின்றார். உங்களுக்கும் இது பொருந்தும். ஒரேயொருவர் மாத்திரம் அதிபதி ஆகமாட்டார். நீங்களும் முயற்சி செய்கின்றீர்கள். இது எல்லையற்ற பாடசாலையாகும். அதன் பல கிளைகளும் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் நிலையங்கள் இருக்கும். சிலர் கூறுகின்றார்கள்: நாங்கள் இப்படங்களை எங்கள் வீட்டில் வைத்திருக்கின்றோம். எங்கள் நண்பர்களும் உறவினர்;களும் வரும் பொழுது நாங்கள் அவர்களுக்கு படங்களைக் காட்டி விளங்கப்படுத்துவோம். இந்த விருட்சத்தின் இலைகளாக விளங்குபவர்கள் இங்கே வருவார்கள். அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் அனைத்தையும் செய்கின்றீர்கள். இந்தப் படங்களைக் காட்டி விளங்கப்படுத்துவது இலகுவாகும். நீங்கள் பல சமயநூல்களைக் கற்றுள்ளீர்கள். அவை யாவற்றையும் நீங்கள் இப்பொழுது மறக்க வேண்டும். தந்தையே இப்பொழுது எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஒருவரே உண்மையான ஞானத்தை உரைக்கின்றார். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1.மரண அமைதி என்ற அப்பியாசத்தைப் பயிற்சி செய்வதற்கு, இந்தக் கண்களால் காணக்கூடியவை அனைத்தையும் கண்டும் காணாதிருங்கள். உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்றி, உங்கள் வீட்டினதும் இராச்சியத்தினதும் விழிப்புணர்வில் இருங்கள்.

2. உங்கள் நடத்தைக்கான பதிவேட்டைக் கொண்டிருங்கள். கல்வியில் எந்தத் தவறையும் செய்யாதீர்கள். இந்தச் சங்கமயுகத்தில் நீங்கள் அதி மேன்மையான மனிதராகிப் பிறரையும் அவ்வாறாக்குங்கள்.

ஆசீர்வாதம்:
சகல பேறுகளும் நிறைந்திருப்பதன் மூலம் மகிழ்ச்சியும், முகமலர்ச்சியுமான மனநிலையில்; நிலைத்திருப்பீர்களாக.

ஒரு தேவ விக்கிரகத்தை வடிக்கும் போது, அவர்கள் எப்பொழுதும் புன்சிரிப்புடன் (முகமலர்ச்சியாக) சித்;தரிக்கின்றார்கள். இந்நேரத்தின் உங்களுடைய ஞாபகார்த்தமாகவே, நீங்கள் புன்னகையுடன் இருப்பதை விக்கிரகங்களில் சித்தரிக்கின்றார்கள். முகமலர்ச்சியுடன் இருப்பது என்றால், சதா சகல பேறுகளாலும் நிறைந்திருப்பதாகும். நிறைந்திருப்பவர்கள் மாத்திரமே முகமலர்ச்சியுடன் இருக்க முடியும். பேறுகளில் ஏதாவது குறைபாடு இருக்குமாயின், நீங்கள் முகமலர்ச்சியுடன் இருக்க மாட்டீர்கள். ஒருவர் எவ்வளவு முகமலர்ச்சியுடன் இருக்க முயற்சித்தாலும், வெளியில் அவர் சிரித்துக் கொண்டிருந்தாலும், ஆனால் இதயபூர்வமாக சிரிப்பதில்லை. ஆனால் நீங்கள் இதயபூர்வமாக சிரிக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் முகமலர்ச்சியாகவும் சகலபேறுகளாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

சுலோகம்:
சிறப்புச்சித்தி எய்துவதற்கு, உங்களுடைய ஒவ்வொரு பொக்கிஷக் கணக்கின் சேமிப்பும் நிறைந்திருக்கட்டும்.