15.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்தச் சங்கமயுகம் அனைத்திலும் அதிமேன்மையானவர் ஆகுவதற்குரிய யுகமாகும். இந்த யுகத்திலேயே நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகி உலகையும் தூய்மையாக்க வேண்டும்.

பாடல்:
இறுதியில் வேதனை மிக்க காட்சிகளைப் பார்ப்பதற்காக எந்த அடிப்படையில் நீங்கள் பலத்தை விருத்தி செய்து கொள்ள வேண்டும்?

பதில்:
தொடர்ந்தும் சரீரத்தின் விழிப்புணர்வை அகற்றுங்கள். இறுதிக் காட்சிகள் மிகப் பயங்கரமானவையாக இருக்கும். குழந்தைகளாகிய உங்களைப் பலம் வாய்ந்தவர்களாக ஆக்குவதற்கு தந்தை உங்களுக்குச் சரீரமற்றவர்கள் ஆகுவதற்கான சமிக்ஞைகளைக் கொடுக்கிறார். தந்தை இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டு இருப்பதைப் போல், உங்களுக்கும் அதைக் கற்பிக்கிறார்: குழந்தைகளாகிய நீங்களும் உங்களைச் சரீரத்திலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதிக் கொள்ள வேண்டும். சரீரமற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இங்கே சரீரங்களுடன் இருக்கிறார்கள். தந்தையும் இப்பொழுது ஒரு சரீரத்துடன் இருக்கிறார். ஆவர் இந்தக் குதிரை இரதத்தைச் செலுத்தியவாறு குழந்தைகளாகிய உங்களுக்கு அவர் கற்பிப்பது என்ன? மரணித்து வாழ்வது எவ்வாறு என்பதை ஒரேயொரு தந்தைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தந்தையையின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அவரே ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் ஆவார். நீங்கள் ஞானத்தினால் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவராகுகிறீர்கள். அத்துடன் உலகையும் நீங்கள் தூய்மையாக்க வேண்டும். நாடகத்திட்டத்திற்கேற்ப, இந்த உலகம் அழிக்கப்பட உள்ளது. தந்தையை இனங்கண்டு, பிராமணர்கள் ஆகுகின்றவர்களே, பின்பு புதிய உலகை ஆட்சி செய்வார்கள். தூய்மையாகுவதற்கு நீங்கள் நிச்சயமாகப் பிராமணர்கள் ஆகவேண்டும். இந்தச் சங்கம யுகமே அதி மங்களகரமான யுகமாகும். அதாவது இதுவே அனைவரிலும் அதிமேன்மையான மனிதர்களாகுவதற்குரிய யுகமாகும். சாதுக்கள், புனிதர்கள்;, மகாத்மாக்கள், ஆலோசகர்கள், செல்வந்தர்கள், ஜனாதிபதி போன்றவர்களே அதிமேலானவர்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இது அவ்வாறல்ல. இது கலியுகத்துச் சீரழிந்த பழைய உலகம். தூய்மையற்ற உலகில் தூய்மையானவர் ஒருவரேனும் இல்லை. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தவர்களாக ஆகுகின்றீர்கள். அம்மக்கள் கங்கையையல்ல, நீரே தூய்மையாக்குபவர் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எங்கெல்லாம் நீரைக் கண்டாலும,; அதனைத் தூய்மையாக்குபவர் என்று கருதுகிறார்கள். அவர்களது புத்தியில் இது பதிந்திருக்கிறது. நீராடுவதற்காகச் சிலர் ஓரிடத்திற்கும், ஏனையோர் வேறு இடத்திற்கும் செல்கிறார்கள். எவ்வாறாயினும் நீரில் நீராடி எவரும் தூய்மையாகி விட முடியாது. நீரிலே நீராடுவதன் மூலம் அவர்கள் தூய்மையாகி விடுவார்களாயின், இந்நேரத்தில் உலகம் முழுவதுமே தூய்மையாக இருக்க வேண்டும். அம்மக்கள் அனைவரும் இப்பொழுது தூய உலகில் இருக்க வேண்டும். அந்தப் பழைய வழக்கம் தொடர்;கிறது. குப்பைகள் போன்ற அனைத்தும் கடலுக்குள்ளே நீரோட்டத்துடன் செல்கின்றன. எனவே, அது எவ்வாறு உங்களைத் தூய்மையாக்க முடியும்? ஆத்மாவே தூய்மையாக வேண்டும். இதற்கு, ஆத்மாக்களைத் தூய்மையாக்குகின்ற பரமதந்தை தேவையாவார். தூய்மையானவர்கள் சத்தியயுகத்தில் இருக்கிறார்கள் என்றும் தூய்மையற்றவர்கள் கலியுகத்தில் இருக்கிறார்கள் என்றும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மை ஆகுவதற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். சூத்திர குலத்தவர்களாக இருந்த நீங்;கள் இப்பொழுது பிராமண குலத்தவர்கள் ஆகியிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். பிரஜாபிதா பிரம்மா மூலம் சிவபாபா உங்களை இவ்வாறு ஆக்குகிறார். நீங்களே உண்மையான வாய்வழித்தோன்றல்களாகிய பிராமணர்கள். ஆனால் அம்மக்;களோ, விகாரத்தின் மூலமாகப் பிறப்பெடுத்த பிராமணர்கள். அவரே மக்களின் தந்தை என்பதால் அனைவரும் மக்களே. பிரம்மா மக்களின் தந்தை ஆவார். அவரே முப் பாட்டன் ஆவார். நிச்சயமாக அவர் இருந்தார். எனவே அவர் எங்கே சென்றார்? அவர் மறுபிறவி எடுத்தார். பிரம்மாவும் மறுபிறவி எடுக்கிறார் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தாயும் தந்தையுமான பிரம்மாவும் சரஸ்வதியும், நாராயணனும் இலக்ஷ்மியுமான சக்கரவர்த்தியாகவும் சக்கரவர்த்தினியாகவும் ஆகுகிறார்கள். இவர்கள் விஷ்ணு என அழைக்கப்படுகின்றார்கள். பின்னர், 84 பிறவிகள் எடுத்ததும் அவர்கள் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆகுகிறார்கள். உங்களுக்கு இந்த இரகசியம் விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெகதாம்பாளே முழு உலகத்திற்கும் தாயென்று கூறப்படுகிறார். ஒவ்வொருவரது பௌதீகத் தாயும் அவரவர் வீட்டில் இருக்கிறார். ஆனால், ஜெகதாம்பாளைப் பற்றி எவருக்கும் தெரியாது. அவர்கள் மூட நம்பிக்கையோடு இதைக் கூறுகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு எவரையுமே தெரியாது. தாங்கள் வழிபடுகின்றவர்களின் தொழிலைப் பற்றியே அறியாதவர்களாக இருக்கிறார்கள். படைப்பவரே அதிமேலானவர் என்பதைக் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். இது ஒரு தலைகீழான மரம். இதன் விதையானவர் மேலேயே இருக்கிறார். உங்களைத் தூய்மையாக்குவதற்காகத் தந்தை மேலிருந்து கீழே வர வேண்டும் பாபா வந்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு இந்த விருட்சத்தின்; ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுத்து, எங்களைப் புதிய உலகை ஆட்சி செய்யும் அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆக்குகிறார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர உலகில் வேறு எவருக்குமே இந்த உலக இரகசியங்களைப் பற்றித் தெரியாது. தந்தை கூறுகிறார்: ஐயாயிரம் வருடங்களின் பின் நான் மீண்டும் வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறுவேன். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. எவருக்கேனும் நாடகத்தைப் படைப்பவரையும், அதன் இயக்குனரையும், பிரதான நடிகரையும் அதன் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரிந்திருக்காவிடின்;, அவர் விவேகமற்றவர் என்றே அழைக்கப்படுவார். தந்தை கூறுகிறார்: 5000 வருடங்களுக்கு முன்பும் நான் உங்களுக்கு விளங்கப்படுத்தினேன். இப்பொழுது உங்கள் சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதைப் போன்றே, முன்னரும் உங்களுக்குக் கொடுத்தேன். இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குவதைப் போன்றே உங்களைத் தூய்மையாக்கினேன். உங்களை ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். அவரே சர்வசக்திவானும் தூய்மையாக்குபவரும் ஆவார். உங்கள் இறுதிக் கணங்களில் எதை நினைக்கிறீர்களோ அதற்கேற்பவே உங்கள் அடுத்த பிறவி அமையும் என்று நினைவுகூரப்படுகிறது. அதாவது, (8.4 மில்லியன் பிறவிகள் என்ற பக்தி நம்பிக்கைக்கேற்ப) அந்த வகையான உயிரினமாகவே நீங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பீர்கள் என்று கூறப்படுகிறது. இப்போது நீங்கள் இந்த நேரத்தில் பிறப்பெடுக்கிறீர்களாயினும், நாய், பூனை, கோழி, பறவைகள் போன்ற எந்த ஒரு வகை மிருகமாகவும் ஆக மாட்டீர்கள். எல்லையற்ற தந்தை இப்போது வந்துள்ளார். அவர் கூறுகிறார்: நானே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தை ஆவேன். நீங்கள் அனைவரும் காமச்சிதையில் அமர்ந்ததனால் அவலட்சணமாகி விட்டீர்கள். நீங்கள் ஞானச்சிதையில் அமர்த்தப்பட வேண்டும். இப்போது நீங்கள் ஞானச்சிதையில் அமர்ந்திருக்கிறீர்கள். ஞானச்சிதையில் அமர்ந்த பின், நீங்கள் விகாரத்தில் ஈடுபட முடியாது. தூய்மையாக இருப்பேன் என்று நீங்கள் சத்தியம் செய்கிறீர்கள். பாபா உங்களை அந்த ராக்கியை அணியும்படி செய்வதில்லை. அது பக்தி மார்க்கத்தில் தொடர்ந்துள்ள ஒரு வழமையாகும். உண்மையில், இது தற்காலத்தைப் பற்றிய விடயமாகும் தூய்மையாகாமல் தூய உலகின் அதிபதியாகுவது சாத்தியமில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இருந்தாலும், அதனை உறுதியாக்கிக் கொள்வதற்காகக் குழந்தைகளாகிய நீங்கள் சத்தியம் செய்விக்கப்படுகிறீர்கள். சிலர் இதை இரத்தத்தால் எழுதுகிறார்கள். இன்னும் சிலர் வேறு முறைகளில் எழுதுகிறார்கள். பாபா, நீங்கள் வந்து விட்டீர்கள். அதனால் நான் நிச்சயமாக உங்களிடமிருந்து எனது ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வேன். அசரீரியானவர் இங்கே சரீர வடிவில் வருகிறார். தந்தை பரந்தாமத்திலிருந்து கீழே வருவதைப் போன்று ஆத்மாக்களாகிய நீங்களும் கீழே வருகிறீர்கள். உங்கள் பாகத்தை நடிப்பதற்காக நீங்கள் மேலேயிருந்து கீழே வருகிறீர்கள். இது சந்தோஷமும் துன்பமும் கொண்ட நாடகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அரைச்சக்கர த்திற்குச் சந்தோஷமும், அரைச்சக்கரத்திற்குத் துன்பமும் இருக்கின்றன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களுக்கு முக்காற் பங்கிலும் பார்க்க அதிகளவு சந்தோஷம் கிடைக்கின்றது. ஆரைக்கல்பத்திறகுப் பின்னரும் நீங்கள் செல்வந்தராக இருந்தீர்கள். நீங்கள் மிகப்பெரிய ஆலயங்கள் போன்றவற்றையெல்லாம் கட்டினீர்கள். பிற்காலத்தில் பக்தி முற்றிலும் தமோபிரதானமாகும் போதே துன்பம் வருகிறது. ஆரம்பத்தில் நீங்கள் கலப்படமில்லாத பக்தர்களாக இருந்தீர்கள் என்று தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார். நீங்கள் அவர் ஒரே ஒருவரையே வழிபாடு செய்கின்றீர்கள். உங்களைத் தேவதேவியராக்கிச் சந்தோஷ பூமிக்கு அழைத்துச் சென்ற தந்தையொருவரையே நீங்கள் வழிபாடு செய்வீர்கள். அதன் பின், கலப்படமான பக்தி ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் ஒரேயொருவரை வழிபடும் வழிபாடே இருந்தது. அதன் பின், நீங்கள் தேவதேவியரை வழிபாடு செய்ய ஆரம்பித்தீர்கள். இப்போது நீங்கள் பஞ்சபூதங்களாலான சரீரங்களையும் வழிபாடு செய்கிறீர்கள். உயிருள்ளதையும் வழிபடுகிறீர்கள், உயிரற்றதையும் வழிபடுகிறீர்கள். மக்கள் பஞ்சபூதங்களாலான சரீரங்களைத் தேவதேவியரது விக்கிரகங்களை விடவும் உயர்ந்ததாகக் கருதுகிறார்கள். பிராமண புரோகிதர்களே தேவ விக்கிரகங்களைத் தொடுகிறார்கள். உங்களுக்கு பல குருமார் போன்றோர் இருந்தார்கள். தந்தை இங்கிருந்து இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இவரும் கூறுகிறார்: நான் அனைத்தையும் செய்திருக்கிறேன். கண்கள், காதுகள், மூக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி, அனைத்து பௌதீகப் பகுதிகளையும் மடித்துச் செய்யும் பல்வேறு வகையான ஹத்தயோகத்தைச் செய்தேன். நாளடைவில், நான் அனைத்தையும் துறந்து விட வேண்டி ஏற்பட்டது. நான் இந்தத் தொழிலைச்; செய்வதா அல்லது அந்தத் தொழிலைச் செய்வதா? எனக்குச் சோம்பல் ஏற்பட்டு விடுவதுண்டு. அதன் பின் குழம்பிவிடுவேன். பலவகைப்பட்ட அந்தப் பிராணாயாமங்கள் (மூச்சுப்பயிற்சி) போன்ற அனைத்தையும் பழகிக் கொள்வதில் பல சிரமங்கள் இருக்கின்றன. அரைச்சக்கரத்திற்கு நீங்கள் பக்தி மார்க்கத்தில் இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு இது தெரியும். தந்தை உங்களுக்கு அனைத்தையும் மிகச்சரியாகக் கூறுகிறார். தொன்று தொட்ட காலத்திலிருந்து பக்தி தொடர்ந்திருக்கிறதென்று மக்கள் கூறுகிறார்கள். சத்தியயுகத்தில் எவ்வாறு பக்தி இருக்க முடியும்? மக்களுக்கு எதுவுமே புரிவதில்லை. மூடப் புத்தி கொண்டவர்களும் இருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் இதை நீங்கள் கூற மாட்டீர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு ஐயாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை வருகிறேன். தன் சொந்த பிறவிகளையே அறியாதவரது சரீரத்தையே நான் எடுக்கிறேன். முதன் முதலில் அழகாக இருந்த முதல் இலக்கத்திற்குரியவர் இப்போது அவலட்சணமாகிவிட்டார். ஆத்மா பல சரீரங்களை எடுக்கிறார். தந்தை கூறுகிறார்;:; நான் பிரவேசித்தவருக்குள் நான் இப்போது இருக்கிறேன். உங்களுக்கு எதைக் கற்பிப்பதற்காக? மரணித்து வாழ்வதையாகும். இந்த உலகத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் மரணிக்க வேண்டும். இப்போது நீ;ங்கள் தூய்மையாகி, அதன் பின் மரணித்து வாழ வேண்டும். உங்களைத் தூய்மையாக்குவதே என் பாகமாகும். ஓ தூய்மையாக்குபவரே என்று பாரத மக்களாகிய நீங்கள் கூவி அழைக்கிறீர்கள். ‘ஓ விடுதலை செய்பவரே! வந்து எங்களைத் துன்ப உலகிலிருந்து விடுதலை செய்யுங்கள்.’ என்று எவரும் அழைப்பதில்லை. அனைத்து மக்களும் முக்தி தாமத்திற்குச் செல்ல முயற்சி செய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது சந்தோஷ தாமத்திற்குச் செல்ல முயற்சி செய்;கிறீர்கள். இது இல்லற மார்க்கத்தைச் சேர்ந்ததேயாகும். இல்லற பாதையை சேர்ந்தவர்களாக இருந்த நீங்கள் தூய்மையாக இருந்தீர்;கள் என்றும் இப்போது தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள் என்றும் உங்களுக்குத் தெரியும். இல்லற பாதையைச் சேர்ந்தவர்கள் செய்வதை சந்நியாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்ய முடியாது. இல்லற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே யாகம், தபஸ்யா, தானம் போன்றவற்றைச் செய்கிறார்கள். உங்களுக்கு இப்போது அனைவரையும் தெரியும் என்று நீங்கள் உணர்கிறீர்கள். வீட்டில் நாங்கள் இருக்கும் போதே, சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பவர். நீங்கள் அன்புக்கண்ணீர் சொரிகின்றீர்கள். ஏனெனில், நீண்ட காலத்தின் பின் அவரை நீங்கள் சந்தித்துள்ளீPர்கள். ‘பாபா’ என்று கூறியதுமே உங்களுக்கு மயிர்க்கூச்செறிகிறது. ‘ஓ! குழந்தைகளாகிய எங்கள் அனைவருக்கும் சேவையாற்றுவதற்காக பாபா வந்திருக்கிறாரே. இந்தக் கல்வியின் மூலம் பாபா எங்களை அழகிய மலர்களாக்கி மீண்டும் அழைத்துச் செல்கிறார். குப்பைகூளங்கள் நிறைந்த இந்த அழுக்கான உலகத்திலிருந்து அவர் எங்களைத் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்வார்.’ பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள், ‘பாபா, நீங்கள் வரும் போது என்னை நான் உங்களிடமே அர்ப்பணிப்பேன். நான் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவனாகுவேன், வேறு யாருக்கும் அல்ல.’ என்று கூறினீர்கள். அது வரிசைக்கிரமமானது.. ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்தப்பாகம் உள்ளது. தந்தை உங்களுக்கு சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதால், உங்களிற்; சிலர் அவரைப் பெரிதும் நேசிக்கிறீர்கள். சத்தியயுகத்தில் அழுவது என்பதே இல்லை. இங்கேயோ மக்கள் பெருமளவில் அழுகிறார்கள். ஒருவர் சுவர்க்கத்திற்குப் சென்று விட்டார் என்றால் மற்றவர்கள் ஏன் அழ வேண்டும்? மேலும் பலமாக மேளம் கொட்டிக் கொண்டாட வேண்டும். அங்கே அவர்கள் தமது தமோபிரதான சரீரத்தை விட்டுச் சந்தோஷமாகச் செல்லும் போது மேளங்கள் கொட்டப்படும். இங்கே இந்த வழமை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது. இங்கே, நாம் வீடு திரும்ப வேண்டும் என்று கூறுவீர்கள். அங்கே, மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவற்றையெல்லாம் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ரீங்காரமிடும் வண்டு என்ற உதாரணம் உங்களைக் குறிக்கிறது. அழுக்கில் இருக்கும் பூச்சிகளுக்கு ஞானத்தை ரீங்காரமிடும் பிராமணர்கள் நீங்களே. தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: நீங்களும் அந்த சரீரத்தை நீக்க வேண்டும். நீங்கள் மரணித்து வாழ வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்களை ஒரு ஆத்மாவாகக் கருதிக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். உங்களை ஒரு ஆத்மாவாகக் கருதி, நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். உங்கள் சரீரத்தை மறந்து விடுங்கள். தந்தை மிகவும் இனிமையானவர். அவர் கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகளாக்குவதற்கு நான் வந்திருக்கிறேன். இப்போது சாந்தி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள்; அல்பாவும் பீற்றாவும். இது துன்ப தாமமாகும். சாந்தி தாமமே ஆத்மாக்களாகிய எங்கள் வீடாகும். எங்கள் பாகத்தை நாங்கள் நடித்து விட்டோம். இ;ப்போது நாங்கள் வீடு திரும்ப வேண்டும். அங்கே இந்த அவலட்சண சரீரம் இருக்கமாட்டாது. இந்தச் சரீரம் இப்போது முற்றிலும் உக்கி விட்டது. இப்போது தந்தை இங்கே நேரில் வந்திருந்து குழந்தைகளாகிய எங்களுக்குச் சமிக்ஞைகள் மூலம் கற்பிக்கிறார். நானும் ஓர் ஆத்மாவே, நீங்களும் ஆத்மாக்களே. நான் சரீரத்திலி;ருந்து விடுபட்டு, உங்களுக்கும் அதையே கற்றுக் கொடுக்கிறேன். உங்களை நீங்கள் சரீரத்திலிருந்து வேறுபட்டவராகக் கருத வேண்டும். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். இனிமேலும் நீங்கள் இங்கே இருக்கப் போவதில்லை. இப்போது விநாசம் இடம்பெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். பாரதத்தில் இரத்த ஆறு ஓடும். அதன் பிறகு, பாரதத்திலேயே பாலாறும்; ஓடும். இப்போது சர்வ மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக இங்கே இருக்கிறார்கள். அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, மரணித்துவிடுவார்கள். இறுதியில் இவ்வகையான மரணங்களே இடம்பெறும். பாகிஸ்தானில் என்ன நடந்தது? அக்காட்சிகள் (பிரிக்கப்பட்ட பொழுது) மிகப்; பயங்கரமாக இருந்தன. அவற்றைப் பார்ப்பவர்கள் மயக்கமடைந்து விடுவார்கள். பாபா இப்போது உங்களைப் பலசாலிகள் ஆக்குகின்றார். அவர் சரீர உணர்வையும் அகற்றுகிறார். சில குழந்தைகள் தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதில்லை என்பதையும், அவர்கள் மிகப் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதையும் அதனாலேயே சேவை விரிவடையாது இருக்கிறது என்பதையும் பாபா பார்த்திருக்கிறார். குழந்தைகள் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள்: பாபா நான் உங்களை நினைவு செய்ய மறந்து விடுகிறேன். என் புத்திக்கு யோகத்தில் நிலைத்திருக்க முடியவில்லை. பாபா கூறுகிறார்: ‘யோகம்’ என்ற வார்த்தையை மறந்துவிடுங்கள். உங்களுக்கு உலக ஆட்சியைக் கொடுக்கும் தந்தையை நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள்? ஆரம்பத்தில், பக்தி மாhர்க்கத்தில், புத்தி வேறெங்காவது அலைபாய்ந்தால், தம்மைத் தாமே கிள்ளிக் கொள்வார்கள். பாபா கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்கள். நீங்கள் தூய்மையானவர்களாகவும் பின்பு தூய்மையற்றவர்களாகவும் ஆகுகிறீர்கள். ஆத்மா அளவில் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகுகிறார் என்றில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடன் நீங்களே பேசுங்கள்: ஓ! பாபா எங்களுக்குச் சேவையாற்றுவதற்கு வந்துள்ளார். நாங்கள் வீட்டிலிருக்கும் போதே எங்களுக்கு அவர் கற்பிக்கிறார்! எங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்ற, எல்லையற்ற தந்தையை இப்போது நாங்கள் கண்டு விட்டோம். அன்புக் கண்ணீர் சிந்தும் வகையிலும், உங்களுக்கு புல்லரிக்கும் வகையிலும் அதிகளவு அன்புடன் ‘பாபா’ என்று கூறுங்கள்.

2. இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதால் அனைவரிடமிருந்தும் உங்கள் பற்றை அகற்றி, மரணித்து வாழ வேண்டும். அந்த சரீரத்தையும் மறந்து விடுங்கள். அதிலிருந்து பற்றற்று இருப்பதற்கு பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
பழைய விடயங்கள் அனைத்தையும் மற்றும் கடந்தகால மனோபாவத்தையும் முடித்து விடுவதன் மூலம் முழுமையான வெற்றியை ஈட்டுகின்ற ஒரு சுத்தமான ஆத்மா ஆகுவீர்கள்.

சேவை செய்யும் போது, வெற்றி ஈட்டுவதற்கான இலகுவான வழி, சுத்தமான புத்தியையும், சுத்தமான மனோபாவத்தையும் கொண்டிருப்பதுடன் சுத்தமான செயல்களை செய்வதும் ஆகும். சேவையில் நீங்கள் எப்பணியை ஆரம்பிக்கும் முன்னரும், உங்கள் புத்தியில் ஆத்மாக்கள் எவரதும்; கடந்தகால செயற்பாடுகளின் விழிப்புணர்வு எதுவும் இல்லாதிருப்பதை சோதித்துக் கொள்ளுங்கள். ஓர் ஆத்மாவை பழைய மனோபாவத்துடனோ அல்லது அதே பழைய பார்வையாலோ பார்த்தால், அதற்கேற்ப அந்த ஆத்மாவுடன் பேசினால் உங்களால் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாது. எனவே, அனைத்து விடயங்களையும், கடந்தகால மனோபாவங்களையும் முடித்து, சுத்தமான ஆத்மா ஆகுங்கள். அப்பொழுதே உங்களால் முழுமையான வெற்றியை ஈட்ட முடியும்.

சுலோகம்:
சுயமாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு வெற்றி மாலை அணிவிக்கப்படுகின்றது.