17.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தையே உங்களுக்கு இந்த அற்புதமான கல்வியைக் கற்பிக்கின்றார். உங்களுக்குத் தந்தையின் மீதோ அல்லது அவருடைய கற்பித்தல்களின் மீதோ எச் சந்தேகமும் இருக்கக் கூடாது. உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதே நீங்கள் கொண்டிருக்க வேண்டிய முதல் நம்பிக்கையாகும்.

பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் சதா நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு ஏன் ஸ்ரீமத்தைப் பெற்றுள்ளீர்கள்?

பதில்:
உங்களை விழ வைத்த எதிரியாகிய, மாயை இப்பொழுதும் உங்களைத் துரத்திக் கொண்டிருப்பதாலாகும். அவள் இப்பொழுது உங்களை விட்டு விட மாட்டாள் என்பதால் நீ;ங்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது. நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்ற போதிலும், நீங்கள் அரைக்கல்பமாக அவளுக்கு உரியவர்களாக இருந்தீர்கள், அவள் இலகுவில் உங்களை விட்டுவிட மாட்டாள். எனவே நீங்கள் நினைவு செய்ய மறந்தவுடன், மாயை உங்களைப் பாவச் செயல்களைச் செய்யச் செய்கின்றாள். ஆகவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அசுர கட்டளைகளைப் பின்பற்றக் கூடாது.

ஓம் சாந்தி.
இவ்வேளையில் குழந்தைகளும் பாபாவும் இருக்கின்றார்கள். பாபா குழந்தைகள் அனைவருக்கும் “ஓ குழந்தைகளே” என்று கூறுகின்றார். குழந்தைகள் அனைவரும் “ஓ பாபா!” என்று கூறுகின்றார்கள். பல குழந்தைகள் இருக்கின்றார்கள். இந்த ஞானம் ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரம் உரியது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒரேயொரு தந்தைக்குப் பல குழந்தைகள் இருக்கின்றார்கள். தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் முதலில், அவர் எங்களுடைய பாபாவும், பின்னர் ஆசிரியரும் பின்னர் குருவும் ஆவார். தந்தை எப்பொழுதும் தந்தையே ஆவார். எனவே, உங்களைத் தூய்மையாக்குவதற்காக, அவர் உங்களுக்கு நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார். இது ஓர் அற்புதமான கல்வி என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்துகொள்கின்றீர்கள். நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைத் தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. இதனாலேயே அவர் எல்லையற்ற தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இந்த நம்பிக்கையைக் குழந்தைகள் நிச்சயமாகக் கொண்டிருக்கின்றார்கள். இதில் சந்தேகம் என்கின்ற கேள்விக்கே இடமில்லை. எல்லையற்ற தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இந்த எல்லையற்ற கல்வியைக் கற்பிக்க முடியாது. உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்ல வருமாறு நீங்கள் பாபாவைக் கூவியழைத்தீர்கள், ஏனெனில் இவ்வுலகம் தூய்மையற்றதாகும். தந்தை உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு, நீங்கள் “பாபா, வந்து எங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்று கூறமாட்டீர்கள். அவர் ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எனவே, சரீர உணர்வு துண்டிக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்: அவர் எங்களுடைய தந்தை. தந்தையைத் தவிர வேறு எவராலும் அதிகளவு ஞானத்தை உண்மையாகக் கொடுக்க முடியாது என்கின்ற நம்பிக்கையை நீங்கள் குறைந்தபட்சம், கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில், புத்தியில் இந்நம்பிக்கை இருக்க வேண்டும். ஆத்மாவே புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார். ஆத்மா ஞானத்தைப் பெறுகின்றார்: “இவர் எங்களுடைய பாபா”. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உறுதியாக இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எதையும் கூறத் தேவையில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் ஒரு சரீரத்தை நீக்கி வேறொன்றை எடுக்கின்றோம். சம்ஸ்காரங்கள் அனைத்தும் ஆத்மாவில் உள்ளன. இப்பொழுது பாபா வந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்குக் கல்வி கற்பித்து, நாங்கள் இவ்வுலகத்திற்குத் திரும்பாதவாறு அத்தகைய செயல்களை எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப வருவார்கள் என்று அம்மக்கள் நம்புகின்றார்கள். நீங்கள் அதை நம்புவதில்லை. நீங்கள் இந்த அமரத்துவக் கதையைச் செவிமடுத்து அமரத்துவப் பூமிக்குச் செல்கின்றீர்கள். அமரத்துவப் பூமியே நீங்கள் எப்பொழுதும் அமரத்துவமாக இருக்கும் இடமாகும். சத்திய, திரேதா யுகங்களே அமரத்துவப் பூமிகள் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். தந்தையைத் தவிர எவராலும் உங்களுக்கு இக்கல்வியைக் கற்பிக்க முடியாது. தந்தை எங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார், ஏனைய ஆசிரியர்கள் அனைவரும் சாதாரண மனிதர்கள் ஆவார்கள். துன்பத்தை அகற்றுபவரான, தூய்மையாக்குபவரும் சந்தோஷத்தை அருள்பவரும் என்று அழைக்கின்ற தந்தையே, இப்பொழுது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கற்பிக்கின்றார். அவர் முன்னால் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருக்காது, உங்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்க முடியும்? தந்தை கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கவே இங்கு நான் வருகின்றேன். உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். உண்மையில் கடவுள் பேசுகின்றார் என்று கூறப்பட்டுள்ளதால், அவருக்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவையாகும். அவருக்கு ஒரு வாய் மாத்திரம் இருந்தால் போதாது, ஆனால் முழு சரீரமுமே தேவையாகும். அவரே கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் இச் சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். அவர் மிகவும் ஏழையோ அல்லது மிகவும் பணக்காரரோ அல்லர்; அவர் சாதாரணமானவர் ஆவார். அவர் எங்களுடைய பாபாவும் நாங்கள் ஆத்மாக்களும் என்கின்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அவர் ஆத்மாக்களாகிய எங்களின் பாபா ஆவார். அவர் உலகின் மனித ஆத்மாக்கள் அனைவரினதும் பாபா ஆவார். இதனாலேயே அவர் எல்லையற்ற பாபா என்று அழைக்கப்படுகின்றார். மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் எவருக்கும் அதைப் பற்றி எதுவும் தெரியாது. எக் காலத்திலிருந்து மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்கள் என்று எவரையாவது வினவுங்கள், அவர்கள் “தொன்று தொட்டு” என்று கூறுவார்கள். ஆனால், அப்படியிருந்தும், எப்பொழுதிலிருந்து? ஒரு திகதி உள்ளது! நாடகம் அநாதியானது, ஆனால் நாடகத்தில் இடம்பெறுகின்ற எச் செயலுக்கும் நேரமும் திகதியும் இருக்க வேண்டும். இது எவருக்கும் தெரியாது. சிவபாபா இங்கு வருகின்றார், ஆனால் மக்கள் சிவஜெயந்தியை அந்த அன்புடன் கொண்டாடுவதில்லை. அவர்கள் கண்ணீரையும் விடுமளவிற்கு, பெருமளவு அன்புடன் நேருவின் பிறந்தநாளைப் கொண்டாடுகின்றார்கள். சிவஜெயந்தியைப் பற்றி எவருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனுபவப்பட்டுள்ளீர்கள். எதையும் அறிந்திராத மக்கள் பலர் உள்ளார்கள். பல்வேறு மேளாக்கள் போன்றவை இடம்பெறுகின்றன. பாபா உங்களுக்கு அமர்நாத்தின் உதாரணத்தைப் பற்றிக் கூறியுள்ளதைப் போன்று, அங்கு செல்பவர்களால் உங்களுக்கு உண்மையில் அங்கு என்ன இருக்கின்றது என்று கூற முடியும். உண்மையில் அங்கு என்ன நடைபெறுகின்றது என்று அவர் சென்று பார்த்தார். அவர்கள் ஏனையோர்களிடமிருந்து கேட்டுள்ளதையே ஏனைய மக்கள் உங்களுக்குக் கூறுகின்றார்கள். அங்கு ஒரு பனிக்கட்டி இலிங்கம் உள்ளது என்று ஒருவர் கூறினார், அவர்கள், “அது உண்மை” என்று கூறுவார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எது சரி, எது பிழை என்பதில் அனுபவப்பட்டுள்ளீர்கள். இதுவரை நீங்கள் கேட்டு, கற்றுள்ளவையெல்லாம் அதர்மமானவையாகும். பாடப்பட்டுள்ளது: சரீரமும் பொய், மாயையும் பொய், உலகமும் பொய்…. இது பொய்யான உலகமும் அது சத்தியபூமியும் ஆகும். இப்பொழுது சத்திய, திரேதா, துவாபர யுகங்கள் கடந்துவிட்டன, இப்பொழுது கலியுகமே தொடர்கின்றது. இது மிகச் சொற்ப மக்களுக்கே தெரியும். நீங்கள் உங்களுடைய புத்திகளில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை ஞானம் அனைத்தையும் கொண்டுள்ளார். அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். அவர் கொண்டிருக்கின்ற ஞானம் அனைத்தையும் உங்களுக்கு இச்சரீரத்தினூடாகத் தந்து உங்களைத் தன்னைப் போன்று ஆக்கிக் கொண்டிருக்கின்றார். ஓர் ஆசிரியரும் ஏனையோர்களைத் தன்னைப் போன்று ஆக்குவார். எல்லையற்ற தந்தையும் உங்களைத் தன்னைப் போன்று ஆக்குவதற்கு முயற்சி செய்கின்றார். ஒரு லௌகீகத் தந்தை உங்களைத் தன்னைப் போன்று ஆக்க மாட்டார். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களைத் தன்னைப் போன்று ஆக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். வரிசைக்கிரமமானவர்கள் ஆனாலும்;, ஓர் ஆசிரியர் மாணவர்களைத் தன்னைப் போன்று ஆக்குவது போன்று, இத்தந்தையும் அதையே கூறுகின்றார். நீங்கள் வரிசைக்கிரமமாகவே இவ்வாறு ஆகுவீர்கள். நான் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பது அழியாத கல்வி ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் கற்பவையெல்லாம் வீண் போகமாட்டாது. நீங்கள் மேலும் முன்னேறுகையில், மக்கள் உங்களுக்குக் கூறுவார்கள்: நான் இந்த ஞானத்தை நான்கு வருடங்களுக்கு முன்னர் அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னர் கேட்டேன், நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். சிலர் பின்னர் என்னைப் பற்றிக்கொள்வார்கள். அவர் சுவாலை, எனவே பல விட்டில்பூச்சிகள் தங்களை அவருக்கு முற்றிலும் அர்ப்பணிக்கின்றார்கள், ஏனையோர்கள் சுற்றிவிட்டு, அப்பாற் செல்கின்றார்கள். ஆரம்பத்தில், சில விட்டில்பூச்சிகள் தங்களைச் சுவாலைக்கு அர்ப்பணித்தார்கள். நாடகத்திட்டத்திற்கேற்ப, ஒரு பத்தி உருவாக்கப்பட வேண்டியிருந்தது. அது ஒவ்வொரு கல்பமும் அதேவழியில் நடைபெற்றுவருகின்றது. கடந்த காலத்தில் நடந்தவையெல்லாம் அதேபோன்று முன்னைய கல்பத்தில் நடைபெற்றன, அவை எதிர்காலத்திலும் நடைபெறும். எவ்வாறாயினும், நீங்கள் ஓர் ஆத்மா, தந்தை உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்கின்ற உறுதியான நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இந்நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்! மறக்காதீர்கள்! தனது தந்தையை ஒரு தந்தை என்று கருதாத எம் மனிதரும் இருக்க மாட்டார்கள். அவர் தனது தந்தையிடமிருந்து பிரிந்து விட்டாலும் கூட, அவர் தனது தந்தையிடமிருந்து பிரிந்து விட்டார் என்று அவர் இன்னமும் எண்ணுவார். அவர் எல்லையற்ற தந்தை ஆவார். நாங்கள் ஒருபொழுதும் அவரை விட்டு நீங்க மாட்டோம். நாங்கள் இறுதிவரை அவருடன் இருப்போம். தந்தை அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றார். அவர் ஒவ்வொரு 5000 வருடங்களும் வருகின்றார். சத்தியயுகத்தில் மிகச் சில மனிதர்களே இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஏனைய அனைவரும் சாந்திதாமத்தில் வசிக்கின்றார்கள். தந்தை மாத்திரம் இந்த ஞானத்தைப் பேசுகின்றார். இதை வேறு எவராலும் கூற முடியாது. இது எவருடைய புத்தியிலும் இருக்க முடியாது. அவர் ஆத்மாக்களாகிய உங்களுடைய தந்தை ஆவார். அவரே உயிருள்ள விதையாவார். அவர் என்ன ஞானத்தைத் தருவார்? உலக விருட்சத்தின் ஞானத்தையாகும். படைப்பவர் நிச்சயமாகப் படைப்பின் ஞானத்தைத் தருவார். எப்பொழுது அது சத்தியயுகமாக இருந்தது அல்லது அது எங்கே சென்றது என்பதை நீங்கள் அறிந்தீர்களா? நீங்கள் இப்பொழுது பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள், பாபா உங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றார். தொடர்ந்தும் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். அவர் ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் தந்தை. அவர் எங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். அவர் ஒரு லௌகீக ஆசிரியரல்லர். எங்களுக்குக் கற்பிக்கின்ற அசரீரியான சிவபாபா இச்சரீரத்தில் பிரசன்னமாகி உள்ளார். அசரீரியானவராக இருந்தாலும், அவர் ஞானக்கடல் ஆவார். அவருக்கு ஒரு ரூபம் இல்லை என்று மக்கள் கூறுகின்றார்கள். அவர்கள் புகழையும் பாடுகின்றார்கள்: ஞானக்கடல், சந்தோஷக்கடல், ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். நாடகத்திற்கேற்ப, அவர்கள் மிகத்தொலைவில் சென்றுவிட்டார்கள், ஆனால் தந்தை உங்களை மிகவும் அண்மையில் கொண்டுவருகின்றார். இது 5000 வருடங்களுக்கான ஒரு விடயமாகும். ஒவ்வொரு 5000 வருடங்களும் பாபா உங்களுக்குக் கற்பிக்க வருகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இந்த ஞானத்தை வேறு எவரிடமிருந்தும் பெற முடியாது. இந்த ஞானம் புதிய உலகிற்குரியதாகும். அவர்கள் தமோபிரதான் என்கின்ற காரணத்தால், எம்மனிதராலும் அதை உங்களுக்குத் தர முடியாது. அவர்களால் எவரையும் சதோபிரதான் ஆக்க முடியாது. அவர்கள் தொடர்ந்து தமோபிரதான் ஆகுகின்றார்கள். பாபா இவரில் பிரவேசித்து உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, கவனயீனமாக இருக்காதீர்கள். உங்களை விழச் செய்த, உங்களுடைய எதிரிகள் இப்பொழுதும் உங்களைத் தொடர்கின்றார்கள். அவர்கள் உங்களை விட்டு விட மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருந்தாலும், நீங்கள் அரைக்கல்பமாக அவர்களுக்கு உரியவர்களாக இருந்தீர்கள், எனவே அவர்கள் உங்களை அவ்வளவு விரைவில் விட்டுவிட மாட்டார்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருந்து, நீங்கள் பாபாவை நினைவுசெய்யாது விடின், அவர்கள் உங்களை மேலும் பாவச்செயல்களைச் செய்ய வைப்பார்கள், பின்னர் நீங்கள் ஏதோ ஒரு வழியில் தொடர்ந்தும் அறையப்படுவீர்கள். மக்கள் இப்பொழுது தங்களை அறைகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் என்ன கூறுகின்றார்கள் என்று பாருங்கள்! சிவனும் சங்கரரும் ஒருவரே என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஒருவருடைய பணி என்ன, மற்றவருடைய பணி என்ன? பெருமளவு வித்தியாசம் உள்ளது! சிவன் அதிமேலான கடவுளும் சங்கரரோ ஒரு தேவரும் ஆவர். எனவே, சிவனும் சங்கரரும் இணைந்துள்ளார்கள் என்று எவ்வாறு அவர்களால் கூற முடியும்? இருவருடைய பாகங்களும் முற்றிலும் வேறானவை ஆகும். இங்கு, கூடப் பலர் இராதாகிருஷ்ணர், இலக்ஷ்மிநாராயணன், சிவசங்கர் போன்ற இரட்டைப் பெயர்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கு இரு பெயர்களை வைத்துள்ளார்கள். தந்தை இதுவரை விளங்கப்படுத்தியவையெல்லாம் மீண்டும் மீண்டும் நடைபெறும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், மிகச்சொற்ப நாட்களே எஞ்சியுள்ளன. தந்தை இங்கு வெறுமனே உட்கார்ந்திருக்க மாட்டார். குழந்தைகள் வரிசைக்கிரமமாகக் கற்று முற்றிலும் கர்மாதீத் ஆகுவார்கள். நாடகத்திற்கேற்ப, மாலையும் உருவாக்கப்படும். எந்த மாலை? ஆத்மாக்கள் அனைவரினதும் மாலை உருவாக்கப்பட்டுப் பின்னர் நீங்கள் அனைவரும் வீடு திரும்பிச் செல்வீர்கள். முதற்தரமான மாலை உங்களுடையதாகும். சிவபாபாவின் மாலை மிகவும் நீண்டதாகும். ஆத்மாக்கள் அவர்களுடைய பாகங்களை நடிப்பதற்கு வரிசைக்கிரமமாக அங்கிருந்து கீழே வருவார்கள். நீங்கள் அனைவரும் தொடர்ந்தும், “பாபா, பாபா” என்று கூறுகின்ற்Pர்கள். நீங்கள் அனைவரும் ஒரே மாலையின் மணிகள் ஆவீர்கள். அனைவருமே விஷ்ணுவின் மாலையின் ஒரு மணி என்று கூறப்பட மாட்டார்கள். தந்தை இங்கமர்ந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் நிச்சயமாகச் சூரிய வம்சத்தில் ஒருவராக வேண்டும். கடந்த காலத்தில் சூரிய வம்சத்தினராகவும் சந்திர வம்சத்தினராகவும் இருந்தவர்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். நீங்கள் இந்த அந்தஸ்தை உங்களுடைய கல்வியினூடாகப் பெறுகின்றீர்கள். தந்தையின் கற்பித்தல்களின்றி உங்களால் இந்த அந்தஸ்தைப் பெற முடியாது. விக்கிரகங்கள் உள்ளன, ஆனால் எவருடைய செயற்பாடும் அவனோ அல்லது அவளோ அவர்களைப் போன்று ஆகக்கூடியதாக இல்லை. நீங்கள் சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். கருட புராணத்தில் அவர்கள் அத்தகைய கதைகளை எழுதியுள்ளார்கள், அவற்றை மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த நச்சாறு ஆழ்நரகம் ஆகும். குறிப்பாகப் பாரதமே இவ்வாறு அழைக்கப்படுகின்றது. வியாழ சகுனங்களும் பாரதத்தின் மீதுள்ளன. விருட்சத்தின் பிரபுவே பாரத மக்களுக்குக் கற்பிக்கின்றார். எல்லையற்ற தந்தையே இங்கமர்ந்து உங்களுக்கு எல்லையற்ற விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அங்கே சகுனங்கள் உள்ளன. ராகுவின் சகுனங்களும் உள்ளன, இதனாலேயே கூறப்பட்டுள்ளது: ஒரு தானத்தைச் செய்யுங்கள், சகுனங்கள் அகற்றப்படும். தந்தை கூறுகின்றார்: இக்கலியுக இறுதியில், அனைவரின் மீதும் ராகுவின் சகுனங்கள் இருக்கின்றன. இப்பொழுது, விருட்சத்தின் பிரபுவான நான், பாரதத்திற்கு வியாழ சகுனங்களைக் கொண்டு வருவதற்காக வந்துள்ளேன். சத்தியயுகத்தில் பாரதத்தின் மீது வியாழ சகுனங்களே இருந்தன. இப்பொழுது ராகுவின் சகுனங்களே உள்ளன. இது ஓர் எல்லையற்ற விடயமாகும். இவ்விடயங்கள் சமயநூல்கள் போன்றவை எவற்றிலும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஞானத்தின் சிறிதளவை ஏற்கனவே புரிந்துகொண்டவர்கள்; மாத்திரம் இச்சஞ்சிகைகள் போன்றவற்றைப் புரிந்துகொள்வார்கள். சஞ்சிகைகளை வாசித்த பின்னர், மேலும் புரிந்துகொள்வதற்கு அவர்கள் ஓடி வருவார்கள். ஏனையோர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். சிறிதளவைக் கற்றுவிட்டு, பின்னர் நீங்கியவர்கள், சிறிதளவு ஞானத்தைலம் அவர்கள் மீது ஊற்றப்பட்டதுமே விழித்தெழுவார்கள். ஞானமும் தைலம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை வந்து ஞானத் தைலத்தை ஏறக்குறைய அணைந்துவிட்ட தீபங்களில் ஊற்றிக் கொண்டிருக்கின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, மாயையின் புயல்கள் வரும், உங்களுடைய தீபங்களை அணைத்துவிடும். சில விட்டில்பூச்சிகள் சுவாலையில் மரணிக்கின்றன, சில சுற்றிவிட்டு, அப்பாற் செல்கின்றன. இப்பொழுது ஒரு நடைமுறைரீதியில் அதே விடயமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விட்டில்பூச்சிகள் அனைத்தும் வரிசைக்கிரமமானவை ஆகும். முதலில், நீங்கள் உங்களுடைய வீட்டை முற்றிலும் நீங்கி, இங்கு வந்து விட்டில்பூச்சிகள் ஆகினீர்கள். அது நீங்கள் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றுவிட்டதைப் போன்றிருந்தது. கடந்த காலத்தில் நடந்தவற்றையே, அதையே நீ;ங்கள் மீண்டும் செய்வீர்கள். சிலர் போய்விட்டாலும், அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள் என்று எண்ண வேண்டாம். அவர்கள் விட்டில்பூச்சிகள் ஆகிக், காதலர்கள் ஆகிய பின்னர் மாயை அவர்களைத் தோற்கடித்தாள், எனவே அவர்களுடைய அந்தஸ்து குறைக்கப்படும்; அது வரிசைக்கிரமமானதாகும். இது ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களிலுள்ள எவருடைய புத்தியிலும் இருக்க மாட்டாது. நாங்கள் எங்களுடைய முயற்சிகளுக்கேற்பவே புதிய உலகிற்காகத் தந்தையுடன் வரிசைக்கிரமமாகக் கற்றுக் கொண்டிருக்கி;ன்றோம் என்பது உங்களுடைய புத்திகளில் உள்ளது. நாங்கள் தனிப்பட்ட முறையில் எல்லையற்ற தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றோம். உங்களால் ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது என்பது உங்களுக்கும் தெரியும். அது சூட்சுமமான ஒன்றாகும். அதைத் தெய்வீகப் பார்வையுடன் மாத்திரமே பார்க்க முடியும். ஆத்மாவாகிய நானும், ஒரு சின்னஞ் சிறிய புள்ளி ஆவேன். எவ்வாறாயினும், சரீர உணர்வைத் துறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவது ஓர் உயர்ந்த கல்வியாகும். ஏனைய கல்விகளிற் கூட, மாணவர்கள் சிரமமான பாடங்களிற் சித்தியடைவதில்லை. இப்பாடம் மிகவும் இலகுவானது, ஆனால் சிலர் அதைச் சிரமமானதாக உணர்கின்றார்கள். சிவபாபா உங்களின் முன்னால் அமர்ந்திருக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்;கள். நீங்களும் அசரீரியான ஆத்மாக்களே, ஆனால் உங்களுக்கு ஒரு சரீரம் உள்ளது. எல்லையற்ற தந்தை மாத்திரம் இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். வேறு எவராலும் அவற்றைப் பேச முடியாது. நீங்கள் பின்னர் என்ன செய்வீர்கள்? அவருக்கு நன்றி கூறுவீர்களா? இல்லை. பாபா கூறுகின்றார்: இந்நாடகம் அநாதியாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். நான் புதிதாக எதையும் செய்து கொண்டிருக்கவில்லை. நான் உங்களுக்கு நாடகத்திற்கேற்ப, கற்பிக்கின்றேன். பக்திமார்க்கத்திலேயே ஒருவர் நன்றி கூறுகின்றார். தனது மாணவர்கள் நன்றாகக் கற்றால், தனது பெயர் போற்றப்படும் என்பதை ஓர் ஆசிரியர் உணர்கின்றார், பின்னர் மாணவர்களுக்கு நன்றிகள் கூறப்படுகின்றன. நன்றாகக் கற்பவர்களுக்கும் நன்றாகக் கற்பிப்பவர்களுக்கும் நன்றிகள் கூறப்படுகின்றன. மாணவர்கள் பின்னர் தங்களுடைய ஆசிரியருக்கு நன்றிகள் கூறுவார்கள். தந்தை கூறுகின்றார்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் வாழ்ந்து தொடர்ந்தும் அத்தகைய சேவையைச் செய்வீர்களாக. நீங்கள் இதை முன்னைய கல்பத்தில் செய்தீர்கள் அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவர் ஒரு லௌகீக ஆசிரியர் அல்ல என்ற போதையையும் நம்பிக்கையையும் எப்பொழுதும் கொண்டிருங்கள். ஞானக்கடலாகிய, அசரீரியான தந்தையே, ஆசிரியராகி உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். நாங்கள் இக்கல்வியினூடாக சதோபிரதான் ஆக வேண்டும்.

2. ஒவ்வொரு நாளும் ஆத்மாவாகிய விளக்கிற்கு ஞான எண்ணெய்யை ஊற்றுங்கள். எப்பொழுதும் ஞான எண்ணெயினால் ஏற்றப்பட்டிருங்கள். மாயையின் புயல்கள் கூட, உங்களைத் தளம்பல் அடையச் செய்யாத வகையில், எப்பொழுதும் ஞான எண்ணெயினால் ஏற்றப்பட்டிருங்கள். உண்மையான விட்டில்பூச்சிகளாகி, உங்களைச் சுவாலைக்கு அர்ப்பணியுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா ஒரேயொரு தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கின்ற, ஓர் ஒத்துழைக்கின்ற ஆத்மாவாக இருப்பதனால், ஓர் இலகுயோகி ஆத்மா ஆகுவீர்களாக.

தந்தையின் மீது ஆழமான அன்பு கொண்டிருக்கின்ற, அன்பான குழந்தைகள் தந்தையின் மேன்மையான பணியில் சதா ஒத்துழைப்பார்கள். அவர்கள் எந்தளவிற்கு ஒத்துழைக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்கள் இலகுயோகி ஆகுகிறார்கள். தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கின்ற ஒத்துழைக்கின்ற ஆத்மாக்களால் என்றுமே மாயைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. அவர்களின் ஒவ்வொரு எண்ணத்திலும்; பாபாவும் சேவையுமே இருக்கின்றது. ஆகையால், அவர்கள் உறங்கும் போதும், அவர்கள் மிக சௌகரியமாக உறங்குவார்கள், அத்துடன் அமைதியையும் சக்தியையும் பெறுவார்கள். அவர்களின் உறக்கம் வெறும் உறக்கமாக இருக்க மாட்டாது, ஆனால் மி;கப் பெரிய வருமானத்தை ஈட்டியதால், சந்தோஷத்துடன் படுத்திருப்பதை போன்றிருக்கும். அந்தளவிற்கு மாற்றம் இருக்கும்.

சுலோகம்:
அன்புக் கண்ணீர், இதயம் என்ற பாத்;திரத்தின் முத்துக்கள் ஆகுகின்றது.