18.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிமையான குழந்தைகளே, தந்தை அருள்பவர். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து எதனையும் கேட்க வேண்டியதில்லை. ~~இரப்பதைவிட இறப்பதே மேல்|| என்று கூறப்படுகின்றது.

பாடல்:
சதாகாலமும் எந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் கவலைகள் ஏதுமற்றவராகவும், எதைப் பற்றிய எண்ணங்கள் அற்றவராகவும் ஆக முடியும்?

பதில்:
கடந்தது எதுவாயினும், அது நல்லதோ கெட்டதோ, அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. முழுச் சக்கரமும் முடிவுக்கு வந்து அது திரும்பவும் நிகழும். நீங்கள் ஒவ்வொருவரும் செய்கின்ற முயற்சிக்கேற்ப ஓர் அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள். இந்த விழிப்புணர்வு உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் எதைப் பற்றிய கவலையோ, அல்லது எதைப் பற்றியும் சிந்திக்கவோ மாட்டீர்கள். தந்தையின் வழிகாட்டலாவது: குழந்தைகளே, கடந்ததைச் சிந்திக்காதீர்கள். பிழையான விடயங்களைச் செவிமடுக்கவோ அல்லது பேசவோ வேண்டாம். கடந்தது எதுவாயினும் அதனைப் பற்றி சிந்திக்கவோ அல்லது அதனை மீண்டும் செய்யவோ வேண்டாம்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கு அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தை அருள்பவரென அழைக்கப்படுகின்றார். அவர் தானாகவே அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். அவர் வந்து உங்களை உலகின் அதிபதிகளாக்குகிறார். நீங்கள் எவ்வாறு, அவ்வாறானவர்கள் ஆக வேண்டும் என்ற அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் தொடர்ந்தும் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அவர் அருள்பவர். அவர் தொடர்ந்தும் அனைத்தையும், தானாகவே கொடுக்கிறார். இரப்பதை விட இறப்பதே மேல். நீங்கள் எதனையும் கேட்க வேண்டியதில்லை. சில குழந்தைகள் தொடர்ந்தும் சக்திகள், ஆசீர்வாதங்கள், கருணை போன்றவற்றைக் கேட்கிறார்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் விழுந்து விழுந்து வணங்கி எப்பொழுதும் கேட்டதால், தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கினீர்கள். இப்பொழுது, எதனையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. தந்தை கூறுகிறார்: வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். முதலில் அவர் கூறுவது: கடந்ததை நினைக்காதீர்கள். நாடகத்தில் நடந்து முடிந்த அனைத்தும் கடந்ததே ஆகும். நீங்கள் அதனைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். அதனை மீண்டும் செய்யாதீர்கள். தந்தை ஒரு சில வார்த்;தைகளையே உங்களுக்குக் கூறுகிறார்: சதா என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களை அல்லது ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். அவற்றைப் பின்பற்றுவது குழந்தைகளாகிய உங்களது கடமையாகும். அவை அனைத்திலும் அதி மேன்மையான வழிகாட்டல்களாகும். ஒருவர் எவ்வளவு கேள்விகளையும் பதில்களைக் கொண்டிருந்தாலும், பாபா ஒரு சில வார்த்தைகளிலேயே விளங்கப்படுத்துவார். நானே தூய்மையாக்குபவர். தொடர்ந்தும் என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். அவ்வளவே. ஒருவரை நினைவு செய்யுங்கள் என்று யாராவது ஒருவருக்கு வழிகாட்டல்கள்; கொடுக்க வேண்டுமா? நீங்கள் உங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டுமே அல்லாது, கத்தவோ அல்லது கூச்சலிட்டு அழ வேண்டியதோ இல்லை! நீங்கள் எல்லையற்ற தந்தையை உள்ளார்த்தமாக நினைவு செய்ய வேண்டும். வேறெந்த வழிகாட்டலை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார்? 84 பிறவிச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள், ஏனெனில் நீங்கள் தேவர்கள் ஆக வேண்டும். அரைச் சக்கரமாக நீங்கள் தேவர்களின் புகழைச் செவிமடுத்தீர்கள். (ஒரு குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டது.) இப்பொழுது, சிறு குழந்தைகளை இங்கு எவருமே அழைத்து வர வேண்டாம் என்று நிலையங்கள் அனைத்திற்குமே வழிகாட்டல்கள்; கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தந்தையிடமிருந்து தமது ஆஸ்தியை பெற விரும்புபவர்கள், இ;ந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். இது ஆன்மீகத் தந்தையின் பல்கலைக் கழகம், ஆகவே சிறு குழந்தைகளுக்கான அவசியம் இங்கில்லை. குழந்தைகள் சேவையாளர்களாகவும்;, தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகும் போது அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காக அவர்களை இங்கே அழைத்து வரவேண்டியது ஓர் ஆசிரியரின் கடமையாகும். ஒருவர் பிரபல்யமானவராக இருந்தாலென்ன அல்லது ஒருவர் சாதாரணமானவராக இருந்தாலென்ன இது ஒரு பல்கலைக் கழகமாகும். சிறு குழந்தைகளை இங்கே அழைத்து வருபவர்கள் இது ஒரு பல்கலைக் கழகமென நினைப்பதில்லை. இது ஒரு பல்கலைக் கழகம், இங்கே கல்வி கற்பவர்கள் மிக நல்லவர்களாகவும் விவேகமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது பிரதான விடயமாகும். பலவீனமானவர்கள் இடையூறு செய்வார்கள், ஏனெனில் அவர்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்காததால், அவர்களது புத்தி அங்குமிங்கும் அலைகின்றது. அவர்கள் இழப்பை ஏற்படுத்துகின்றார்கள்;. அவர்களால் நினைவில் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் சிறு குழந்தைகளை இங்கு அழைத்து வந்தால், அது குழந்தைகளுக்கு இழப்பாகும். இது இறை தந்தையின் பல்கலைக் கழகம் என்பதும் நீங்கள் இங்கு மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதும் சிலருக்குத் தெரியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன், குழந்தைகளுடன் வசிக்கலாம். ஒரு வாரம் வேண்டியதில்லை, மூன்று, நான்கு நாட்கள் போதுமானது. இந்த ஞானம் மிகவும் இலகுவானது. நீங்கள் தந்தையை இனங்காண வேண்டும். எல்லையற்ற தந்தையை இனங்கண்டு கொள்வதனால் நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கோரிக் கொள்வீர்கள். எந்த ஆஸ்தி? எல்லையற்ற இராச்சியம் ஆகும். நூதனசாலை அல்லது கண்காட்சிகளில் சேவை இடம்பெறாது என்று நினைக்காதீர்கள். எண்ணிலடங்காப் பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். பிராமண குலமும், சூரிய வம்சமும், சந்திர வம்சமும் இங்கேயே ஸ்தாபிக்கப்படுகின்றன. ஆகவே, இது ஒரு மிகப் பெரிய பல்கலைக் கழகமாகும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்கள் புத்தி முற்றாக நிரம்பியிருக்க வேண்டும். எவ்வாறாயினும் தந்தை ஒரு சாதாரண சரீரத்திலேயே இருக்கிறார்;. அவர் சாதாரண வடிவிலேயே உங்களுக்குக் கற்பிப்பதனால் மக்கள் அதனை விரும்புவதில்லை. “இறை தந்தையின் பல்கலைக்கழகம் இவ்வாறே இருக்கும்!’ தந்தை கூறுகிறார்: நான் ஏழைகளின் பிரபு. நான் ஏழைகளுக்கு மட்டுமே கற்பிக்கின்றேன். செல்வந்தர்களுக்குக் கற்பதற்கான சக்தி; இல்லை. அவர்களது புத்தியில் மாளிகைகள் போன்றன மட்டுமே உள்ளன. செல்வந்தர்கள் ஏழைகளாகவும், ஏழைகள் செல்வந்தர்களாகவும் ஆகுகிறார்கள். அதுவே நியதியாகும். நீங்கள் ஒரு செல்வந்தருக்குத் தானம் செய்வீர்களா? இது அழியாத ஞான இரத்தினங்களைத் தானம் செய்வதாகும். செல்வந்தர்களால் தானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இது அவர்களது புத்தியிற்; பதியாது. அவர்கள் தமது சொந்த எல்லைக்குட்பட்ட படைப்புகளிலும், செல்வத்திலும், செழிப்பிலும் சிக்குண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவே சுவர்க்கமாகும். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களுக்கு இன்னொரு சுவர்க்கம் தேவையில்லை. ஒரு முக்கியஸ்தர் மரணிக்கும்போது அவர்கள் கூறுகிறார்கள்: அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். தாமே கூறுகிறார்கள், அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார், அவ்வாறாயின், அவர்கள் நரகத்திலிருக்கிறார்கள் என்பதே அர்த்தம் ஆகும். எவ்வாறாயினும், நரகம் என்றால் என்னவென்பதை அறியாதளவிற்கு அவர்கள் கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். இது உங்களுக்கான அத்தகையதொரு பெரிய பல்கலைக்கழகமாகும். தந்தை கூறுகிறார்: புத்தி பூட்டப்பட்டிருப்பவர்களுக்கு நான் வந்து கற்பிக்கின்றேன். தந்தை வந்தால் மட்டுமே அவரால் பூட்டைத் திறக்க முடியும். அவரே புத்தியின் பூட்டைத் திறப்பதற்கான வழிகாட்டல்களை கொடுக்கிறார்;. நீங்கள் தந்தையிடம் எதனையும் கேட்க வேண்டியதில்லை. நீங்கள் இதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவரே, நீங்கள் பக்தி மார்க்கத்தில் நினைவு செய்த அதி அன்பிற்கினிய பாபா ஆவார். நீங்கள் நினைவு செய்கின்ற ஒருவர் நிச்சயமாகவே ஒரு தருணத்தில்; உங்களிடம் வருவார். நீங்கள் அவரை நினைவு செய்கிறீர்கள் எனவே அது மீண்டும் இடம்பெறும். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே விளங்கப்படுத்துகிறார். பின்னர், வெளியிலுள்ளவர்களுக்கு பாபா எவ்வாறு வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர் என்ன கூறுகின்றார்? குழந்தைகளே, நீங்கள் அனைவரும் தூய்;மையற்றவர்கள். நான் வந்து உங்களைத் தூய்மையாக்குகின்றேன். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்களாகிவிட்டீர்கள். எனவே இப்போது தூய்மையாக்குகின்ற தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். இங்கே எதனையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அரைக் கல்பமாக கேட்டுக் கொண்டிருந்தீர்கள், இருந்த போதிலும் நீங்கள் எதனையும் பெறவில்லை. இப்போது, கேட்பதை நிறுத்துங்கள். நானாகவே அனைத்தையும் தொடர்ந்தும் உங்களுக்குக் கொடுப்பேன். தந்தைக்கு உரியவர்கள் ஆகுவதன் மூலம், நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். முதிர்ச்சியான குழந்தைகள் உடனடியாகவே தந்தையைப் புரிந்து கொள்கிறார்கள். தந்தையிடமிருந்து பெறுகின்ற ஆஸ்தி 21 தலைமுறைக்கான சுவர்க்க இராச்சியமாகும். நீங்கள் நரகவாசிகளாக இருக்கும் போது, தான தர்மங்களைச் செய்வதன் மூலம் தற்காலிக சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்களும் தர்மத்திற்காக ஒரு பகுதியை ஒதுக்குகிறார்கள். பொதுவாக வியாபாரிகளும் அதனைச் செய்கிறார்கள். எனவே வியாபாரிகள், நாங்கள் தந்தையுடன் வியாபாரம் செய்வதற்காகவே வந்திருக்கிறோம் எனக் கூறுகிறார்கள். குழந்தைகள் தந்தையுடன் வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் தங்களது தந்தையினது சொத்தைப் பயன்படுத்தியே, சரீரத்தை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு உணவளித்து, அதிலிருந்து தான தர்மங்ளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆலயங்கள், தர்ம சாலைகள் போன்றவற்றைக் கட்டினால் அவர்களது தந்தையின் பெயரிலேயே கட்டுகிறார்கள் ஏனெனில் அவர்கள் யாரிடமிருந்து அந்தச் சொத்தைப் பெற்றார்களோ அவர்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும். இதுவும் ஒரு ஒப்பந்தமே ஆகும். இவை அனைத்தும் பௌதீகமான விடயங்கள். தந்தை இ;ப்போது கூறுகின்றார்: நீங்கள் கடந்த விடயங்களை நினைவு செய்யாதீர்கள். பிழையான விடயங்களைச் செவிமடுக்காதீர்கள். ஒருவர் பல்வேறுபட்ட கேள்விகளைக் கேட்டால் பின்னர் கூறுங்கள்: இவ்வாறான விபரங்களை அறிய வேண்டும் என்ற அவசியமில்லை. முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. நீங்கள் எவ்வளவுக்கு நினைவில் நிலைத்திருக்கிறீர்களோ, எவ்வளவுக்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறீர்களோ, அந்தளவுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இது ஒரு பல்கலைக் கழகம். இலக்கும் குறிக்கோளும் தெளிவாக உள்ளது. நீங்கள் அவ்வாறாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் எவருக்கும் எவ்விதமான துன்பத்தையும் விளைவிக்கக் கூடாது. நீங்கள், துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவரான தந்தையின் குழந்தைகள். அது உங்களது சேவையிலிருந்தே அறியப்படுகின்றது. பல புதியவர்களும் வருகிறார்கள். 10 தொடக்கம் 12 நாட்கள் இங்கிருப்பவர்கள், 25 தொடக்கம் 30 வருடங்கள் இருந்தவர்களை வி;;ட விரைவாக முன்னேறிச் செல்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிறரையும் தந்தைக்குச் சமமானவர்கள் ஆக்க வேண்டும். நீங்கள் பிராமணர்கள் ஆகாது எவ்வாறு தேவர்களாகுவீர்கள்? பிரம்மாவே முப்பாட்டனாராவார். மக்கள் இங்கிருந்து சென்றவர்களை நினைவு செய்கின்றார்கள். எனவே அவர்கள் திரும்பவும் இங்கு வருவார்கள். இங்கு நினைவுகூரப்படும் விழாக்கள் அனைத்தும்; கொண்டாடப்பட்டு, சென்று விட்டன, அவை மீண்டும் இடம்பெறும். தற்காலத்தில், இரக்ஷபந்தன் போன்ற அனைத்து விழாக்களும் இடம்பெறுகின்றன. தந்தை தொடர்ந்தும் அவை அனைத்தினதும் முக்கியத்துவத்தைப் பற்றி விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையினுடைய குழந்தைகள், எனவே நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். மக்கள் தூய்மையாக்குபவராகத் தந்தையை நினைவு செய்கிறார்கள் எனவே அவர் பாதையைக் காட்டுகிறார். ஒவ்வொரு சக்கரத்திலும் தங்களது ஆஸ்தியைக் கோரிக் கொண்டவர்கள் தொடர்ந்தும் இங்கு மிகச்சரியாக வந்து முயற்சிக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்தும் இதனை ஒரு பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கின்றீர்கள். நீங்கள் எவ்வளவிற்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள் என்பதையும் உங்களது நடத்தை எவ்வாறிருக்கின்றது என்பதையும் பற்றற்ற பார்வையாளரான பாபாவும் அவதானிக்கின்றார். நீங்கள் எத்தனை பேரை உங்களுக்கு சமமானவர்களாக்கியுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் எவ்வளவுக்கு நினைவில் நிலைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஓர் ஆசிரியர் அறிவார். முதலில் இது இறை தந்தையின் பல்கலைக் கழகம் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். ஒரு பல்கலைக் கழகம் என்பது ஞானத்திற்கானது. அது ஓர் எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகம், இதுவோ எல்லைக்கப்பாற்பட்ட பல்கலைக்கழகமாகும். தந்தை ஒருவரே சீரழிவிலிருந்து சற்கதியை அருளி, நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றார். தந்தையினது பார்வை அனைத்து ஆத்மாக்கள் மீதும் செல்கின்றது. அனைவரும் நன்மையளிக்கப்பட வேண்டும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பி அழைத்துச் செல்லப்பட வேண்டும். நீங்கள் மாத்திரமல்ல. அவர் உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரையும் நினைவு செய்கிறார். ஆனால் அவரது குழந்தைகளுக்கே கற்பிக்கிறார். மக்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருவதைப் போன்றே அவர்கள் திரும்பிச் செல்வார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் வரிசைக் கிரமமாகவே கீழிறங்கி வருகிறார்கள். நீங்கள் எவ்வாறு புது உலகிற்குத் திரும்பிச் செல்வீர்கள் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கல்பத்தின் முன்னர் என்ன நடந்ததோ அதுவே மீண்டும் நடக்கும். நீங்கள் மீண்டும் எவ்வாறு புதிய உலகிற்குச் செல்வீர்கள் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. புது உலகிற்கு வரிசைக்கிரமமாகச் செல்பவர்களுக்கு மட்டுமே இது விளங்கப்படுத்;தப்படுகின்றது. தந்தையை அறிந்து கொள்வதன் மூலம், குழந்தைகளாகிய நீங்கள் உங்களது தர்மத்தையும் முழு விருட்சத்திலுமுள்ள ஏனைய சமயங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். இங்கு எதற்காகவும் நீங்கள் வேண்ட வேண்டிய அவசியமில்லை. ஆசீர்வாதங்களை கூட கேட்க வேண்டியதில்லை. சிலர் எழுதுகிறார்கள்: பாபா நான் என்ன செய்வது? கருணை காட்டுங்கள்! தந்தை எதுவும் செய்யமாட்டார். தந்தை வந்து உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார். நாடகத்தில் அனைவரையும் தூய்மையாக்க வேண்டியது எனது பாகமாகும். ஒவ்வொரு கல்பத்திலும்;, எவ்வாறு நான் நடிக்கிறேனோ அவ்வாறாகவே எனது பாகத்தையே நான் நடிக்கின்றேன். நல்லதோ, கெட்டதோ நடந்து முடிந்த அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டதே ஆகும். நீங்கள் எதைப்பற்றியும் வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. நாங்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வோம். இது ஒரு எல்லையற்ற நாடகமாகும். முழுச் சக்கரமும் முடிவுக்கு வந்து அது மீண்டும் இடம்பெறும். ஒருவர் எவ்வளவு முயற்சி செய்கிறாரோ அதற்கேற்ப ஒரு அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றார்;. எதனையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு செல்வத்தைக் கேட்டீர்கள். நீங்கள் அவை அனைத்தையும் உபயோகித்து விட்டீர்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்ந்தும் உங்களுடன் பேசுகின்றார்கள். அரைக்கல்பத்திற்கு பக்தி செய்வதாலும், சமயநூல்களைக் கற்பதாலும், அதிகளவு பணத்தைச் செலவழித்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் எதற்காகவும் செலவழிக்க வேண்டியதில்லை. தந்தை அருள்பவர். அவருக்கு எந்தத் தேவையும் இல்லை. அவர் உங்களுக்குக் கொடுக்கவே வந்துள்ளார். சிவபாபாவிற்கு நீங்கள் கொடுக்கிறீர்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்து அதிகளவு பெறுகிறீர்கள். நீங்கள் இங்கு பெறுவதற்காகவே வந்திருக்கிறீர்கள். ஏதாவதொன்றைப் பெறுவதற்காகவே மாணவர்கள், ஆசிரியர்களிடம் செல்கிறார்கள். லௌகீகத் தந்தை, ஆசிரியர், குருமார்கள் போன்றோரினால் நீங்கள் இழப்பையே சந்தித்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும் ஏனெனில், அப்போதே நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். சிவபாபா இரட்டிப்பு ஸ்ரீ ஸ்ரீ ஆவார். நீங்கள் ஒற்றை ஸ்ரீ ஆகுகிறீர்கள். கூறப்படுகின்றது: ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணன். ஸ்ரீ இலக்ஷ்மியும் ஸ்ரீ நாராயணனும் இரு வேறுபட்டவர்கள். விஷ்ணு ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கப்படுகிறார் ஏனெனில் அவர் இணைந்த ரூபமாவார். இருந்த போதிலும் அவர்கள் இருவரையும் அவ்வாறானவர்கள் ஆக்;கியவர் யார்? ஒரே ஒருவரே ஸ்ரீ ஸ்ரீ ஆவார். வேறெவரும் ஸ்ரீ ஸ்ரீ அல்ல. தற்காலத்தில் மக்கள் ஸ்ரீ இலக்ஷ்மி-நாராயணன், ஸ்ரீ சீதா-ராமன் எனத் தங்களுக்குப் பெயரிட்டுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தையும் கிரகித்துச் சந்தோஷமாக இருக்க வேண்டும். தற்காலத்தில் ஆன்மீக ஒன்று கூடல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும் அவர்களுக்கு ஆன்மீகம் என்பதன் அர்த்தம் புரிவதில்லை. ஒரேயொருவரைத் தவிர வேறெவராலும் ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியாது. தந்தையே அனைத்து ஆத்மாக்களினதும் தந்தையாவார். அவர் ஆன்மீகமானவர் என அழைக்கப்படுகிறார். தத்துவஞானமே, ஆன்மீகம் என அவர்கள் கூறுகின்றார்கள். இது ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் துன்புறுத்துகின்ற காடு என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தேவர்களது அதி மேலான வன்முறையற்ற தர்மம் நினைவு கூரப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். இங்கே வன்முறை இல்லை. கோபப்படுவதும் வன்முறையாகும். அது அரை வன்முறை என்றோ அல்லது ஏதோ ஒன்றென்றோ அழைக்கப்படலாம்;. இங்கே, நீங்கள் முற்றாக வன்முறையற்றவர்களாக வேண்டும். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் மூலம் எவ்வித தீய விடயங்களும் இடம்பெறக் கூடாது. பொலிஸ்; போன்ற தொழில் செய்பவர்கள் அங்கே மிகவும் சாதுரியமாக அனைத்தையும் செய்ய வேண்டும். இயன்ற வரை அனைத்தையும் அன்புடன் செய்யுங்கள். தந்தை தனது சொந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் அனைத்தையும் அன்புடன் செய்கிறார். இதற்கு அதிகளவு சாதுரியம் தேவைப்படுகின்றது. ஒருவருக்கு எவ்வாறு ஒன்றுக்கு நூறு மடங்கு தண்டனை கிடைக்கிறது என்பதை நீங்கள் மிகவும் அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாங்கள், துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரான தந்தையின் குழந்தைகள். எனவே, எவருக்கும் துன்பம் கொடுக்காதீர்கள். உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் உங்கள் முன்னிலையில் வைத்திருப்பதன் மூலம், தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். பிறரையும் உங்களைப் போன்றவர்களாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

2. நாடகத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அறிந்திருக்கின்ற அதேவேளை கடந்தது பற்றி எதனையும் சிந்திக்காதீர்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால் எவ்வித பாவச் செயல்களையும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், இரட்டை அஹிம்சாவாதிகள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
ஒரேயொரு தந்தையை உங்கள் சகபாடியாக்கிக் கொண்டு, அவரின் சகவாசத்தி;ல் நிலைத்திருப்பதால், முற்றாகத் தூயதோர் ஆத்மா ஆகுவீர்களாக.

தனது எண்ணங்களிலும், தனது கனவுகளிலும் பிரம்மச்சரியம் என்ற தூய்மையை கிரகித்தவரும், அத்துடன் ஒவ்வொரு அடியிலும் தந்தை பிரம்மாவின் கற்பித்தல்ளை பின்பற்றுபவருமே முற்றிலும் தூய்மையான ஆத்;மா ஆவார். சதா தந்தையை உங்களுடைய சகபாடியாக்கி, தந்தையின் சகவாசத்தில் நிலைத்திருப்பதே தூய்மை என்பதன் அர்த்தமாகும். ஒன்றுகூடலினதும், குடும்பத்;தின் அன்பான மரியாதை கோட்பாடுகளின் சகவாசத்திலும் நிலைத்திருப்பது வேறு விடயமாகும். நீங்கள் ஓர் ஒன்றுகூடலின் அன்பின் சகவாசத்தைக் கொண்டிருப்பதற்கு தந்தையே காரணமாவார். தந்தை இல்லாதிருந்தால், குடும்பம் எங்கிருந்து வரும்? தந்தையே விதை என்பதால், விதையை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது..

சுலோகம்:
ஒருவரில் ஈர்க்கப்பட்டவராக அல்லாது, இந்த ஞானத்தினால் பிறரை ஈர்க்கின்ற ஒருவராக