19.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, முழு உலகினதும் விரக்திக் கூக்குரலை முடித்து, வெற்றி முரசை கொட்டவே தந்தை வந்துள்ளார். இந்தப் பழைய உலகில் விரக்திக் கூக்குரல் உள்ளது. புதிய உலகில் வெற்றி முரசு கொட்டப்படுகிறது.

பாடல்:
எந்த இறை ஒழுக்கத்தை பின்பற்றுவதன் மூலம், செல்வந்தர்களால் செய்ய முடியாததால், ஏழைகளால் மாத்திரம் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெற முடிகின்றுது?

பதில்:
இறை ஒழுக்கமானது முழுமையான ஏழையாகுவதாகும், உங்களிடம் உள்ள அனைத்தையும் மறப்பதுமாகும். எனவே ஏழைக் குழந்தைகளால் அனைத்தையும் இலகுவாக மறந்துவிட முடிகிறது. எவ்வாறாயினும் தாங்கள் சுவர்க்கத்தில் வாழ்வதாக நம்பும் செல்வந்தர்களின் புத்தி எதனையும் மறப்பதில்லை. இதனாN;லயே தங்கள் செல்வம், சொத்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களை நினைவு செய்பவர்களால் உண்மையான யோகிகளாக முடியாது. அவர்களால் சுவர்க்கத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாது.

ஓம் சாந்தி.
நம்பிக்கைக்குரிய புத்தியுடைய இனிமையிலும் இனிமையான குழந்தைகள் முழு உலகிலுமுள்ள சண்டைசச்சரவை முடிக்கவே தந்தை வந்துள்ளார் என்பதை நன்றாக அறிந்திருப்பதுடன் அவர்கள் உறுதியான நம்பிக்கையையும் கொண்டுள்ளார்கள். தந்தை இச்சரீரத்தினுள் பிரவேசித்துள்ளார் என்பதைப் புத்திசாலிகளாகவும், விவேகிகளாகவும் உள்ள குழந்தைகள் அறிவார்கள். அவரின் பெயர் சிவபாபாவாகும். அவர் ஏன் வந்துள்ளார்? விரக்திக் கூக்குரலை முடித்து, வெற்றி முரசு கொட்டவே வந்திருக்கின்றார். மரண பூமியில் அதிகளவிலான சண்டை சச்சரவுகள் போன்றவை உள்ளன. அனைவரும் தங்களுடைய கர்மக்கணக்குகளைத் தீர்த்து, வீடு திரும்ப வேண்டும். அமரத்துவ பூமியில் சண்டை சச்சரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இ;ங்கே அதிகளவு குழப்பங்கள் உள்ளன. இங்கே பல நீதி மன்றங்களும், நீதிபதிகள் போன்றவர்களும் உள்ளனர். எங்கும் அதிகளவு வன்முறைகள் உள்ளன! பாருங்கள், வெளிநாடுகளிலும் அதிகளவு குழப்பங்கள் உள்ளன! முழு உலகிலும் அதிகளவு முரண்பாடுகள் உள்ளன. இதுவே பழைய, தமோபிரதான் உலகம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே எங்கும் குப்பையைத் தவிர வேறு எதுவும் இல்லை. எங்கும் காடுகளே உள்ளன. இவை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே எல்லையற்ற தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது மிகவும் புத்திசாலிகளாகவும், விவேகமானவர்களாகவும் ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்களும் தொடர்ந்து சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டால், நீங்கள் எவ்வாறு கடவுளின் உதவியாளர்கள் ஆக முடியும்? மிகவும் நன்றாக உதவி செய்யக்கூடிய குழந்தைகளே பாபாவிற்குத் தேவை. அவர் புத்திசாலிகளையும், விவேகிகளையும், எவருடனும் எவ்வித முரண்பாடுகளும் கொண்டிராதவர்களையுமே விரும்புகின்றார். இது ஒரு பழைய உலகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்கின்றீர்கள். எண்ணற்ற சமயங்கள் உள்ளன. இது விகாரம் நிறைந்த தமோபிரதான் உலகம் ஆகும். முழு உலகமும் தூய்மையற்றது. இந்தத் தூய்மையற்ற பழைய உலகில் சண்டையைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இவை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து, வெற்றி முழக்கத்தை ஏற்படுத்தவே தந்தை வருகிறார். இவ்வுலகில் எவ்வளவு துன்பமும், அமைதியின்மையும் உள்ளது என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். இதனாலேயே அவர்கள் உலகில் அமைதியை வேண்டுகிறார்கள். எவ்வாறு எந்த மனிதராலும் முழு உலகிலும் அமைதியை ஏற்படுத்த முடியும்? அவர்கள் எல்லையற்ற தந்தையைக் கற்களிலும் கூழாங்கற்களிலும் இருப்பதாகக் காட்டியுள்ளார்கள். இதுவும் ஒரு நாடகமே. எனவே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இப்பொழுது விழிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருங்கள்! தந்தையின் உதவியாளர்கள்; ஆகுங்கள்! நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோரவேண்டும். – அதனைவிடக் குறைவானதை அல்ல. அதில் பெருமளவு சந்தோஷம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நாடகத்திற்கேற்ப, எல்லையற்ற தந்தை வந்து, உங்களைப் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாக ஆக்குகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் பாரதத்தை ஆட்சி செய்தார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. சுவர்க்கம் உலக அதிசயம் என்று அழைக்கப்படுகின்றது. திரேதா யுகத்தைக்கூட அவ்வாறு அழைக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய சுவர்க்கத்திற்குச் செல்ல முயற்சி செய்ய வேண்டும். அங்கு நீங்கள் ஆரம்பத்திலேயே செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல விரும்புகின்றீர்கள். நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணன் போன்றோ ஆக விரும்புகின்றீர்கள். இப் பழைய உலகில் அதிகளவு துன்பம் ஏற்பட உள்ளது. இரத்த ஆறு பாயும். இரத்த ஆற்றின் பின்னர் நெய்யாறு பாயும். அதுவே பாற்கடல் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அவர்கள் பாரிய குளம் ஒன்றைக் கட்டி, நல்ல நாளென தீர்மானித்து, அதனுள் பாலை ஊற்றி, அதில் நீராடுவதற்கு வருகின்றார்கள். அவர்கள் ஒரு சிவலிங்கத்தின் மீதும் பாலை ஊற்றுகின்றார்கள். சத்திய யுகத்தின் புகழில் ஒன்று, அங்கு நெய்யாறும், பாலாறும் பாயும் என்பதாகும். அவ்வாறு எதுவும் அங்கு இல்லை. ஓவ்வொரு 5000 வருடங்களும் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இந்நேரத்தில் நீங்கள் அடிமைகள். பின்னர் நீங்கள் சக்கரவர்த்திகள் ஆகுவீர்கள். தத்துவங்கள் அனைத்தும் உங்கள் அடிமைகளாகும். அங்கு ஒருபோதும் காலம் தவறி மழை பெய்யமாட்டாது. ஆறுகள் பெருக்கெடுக்க மாட்டாது. அங்கு அனர்த்தங்கள் எதுவும் இடம்பெற மாட்டாது. ஆனால் இங்கு எவ்வளவு அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன என்று பாருங்கள். அங்கே உண்மையான வைஷ்ணவர்களேயன்றி விகாரம் நிறைந்த வைஷ்ணவர்கள் இருப்பதில்லை. இங்கே ஒருவர் சைவ உணவை உண்பவராயின், அவரை வைஷ்ணவர் என்று அழைக்கின்றார்கள். ஆனால் அவ்வாறல்ல! அவர்கள் தொடர்ந்தும் விகாரத்தின் மூலம் ஒருவருக்கொருவர் பெருந்துன்பத்தை விளைவிக்கின்றார்கள். தந்தை மிகவும் நன்றாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். கிராமத்துச் சிறுவன் நினைவு கூரப்பட்டுள்ளான். கிருஷ்ணரை ஒரு கிராமத்துச் சிறுவனாகக் காட்ட முடியாது. அவர் வைகுந்தத்தின் அதிபதி. அத்தடன் அவர் 84 பிறவிகளை எடுக்கிறார். நீங்கள் எந்தளவு பக்தியில் தடுமாறித் திரிந்தீPர்கள் என்பதையும், வீணாக எவ்வளவு பணத்தைச் செலவழித்தீர்கள் என்பதையும் இந்நேரத்தில் நீங்கள் அறிவீர்கள். தந்தை வினவுகின்றார்: நான் உங்களுக்கு அதிகளவு பணத்தையும், இராச்சிய பாக்கியத்தையும் கொடுத்தேன். அவை யாவும் எங்கு சென்றன? நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்கினேன். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? தந்தைக்கு நாடகத்தைப் பற்றித் தெரியும். பழைய உலகம் பின்னர் புதிய உலகமாகவும், புதிய உலகம் பின்னர் பழைய உலகமாகவும் ஆகுகின்றது. இது ஒரு சக்கரமாகும். முன்னர் எவை நடந்தனவோ அவை மீண்டும் நடக்கும். தந்தை கூறுகின்றார்: இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. எனவே முயற்சி செய்து, எதிர்காலத்திற்காகச் சேமியுங்கள். பழைய உலகில் உள்ள அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றது. செல்வந்தர்கள் இந்த ஞானத்தை எடுக்கமாட்டார்கள். தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். இப்பொழுது ஏழையாக உள்ளவர்கள் அங்கே செல்வந்தர்கள்; ஆகுகின்றார்கள். செல்வந்தர்கள் அங்கே ஏழைகள் ஆகுகின்றார்கள். இப்பொழுது பல கோடீஸ்வரர்கள் உள்ளார்கள். சிலர் அங்கே செல்வார்கள். ஆனால் பின்னர் அவர்கள் ஏழைகள் ஆகுவார்கள். இப்போது அவர்கள் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாகக் கருதுகின்றார்கள். அவர்களால் அதனை அவர்களது புத்தியில் இருந்து அகற்ற முடியாதுள்ளது. இங்கு தந்தை கூறுகின்றார்: அனைத்தையும் மறந்து விடுங்கள். பிச்சைக்காரராக ஆகுங்கள். இப்போது கிலோகிராம், கிலோமீட்டர் என அவர்கள் கண்டுபிடித்துள்ளவற்றைப் பாருங்கள். அக்காலத்தில், ஆட்சியில் உள்ள அரசர் தனது மொழியிலேயே கட்டளைகளை இடுவார். அவர்கள் வெளிநாட்டில் செய்கின்றவற்றைச் செய்வார்கள். அவர்களுக்கென்று சொந்த அறிவு இருப்பதில்லை. அவர்கள் தமோபிரதானாக உள்ளார்கள். விநாசத்திற்கான பொருட்களைத் தயாரிப்பதற்கு அமெரிக்காவில் எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகின்றது என்று பாருங்கள். அவர்கள் விமானத்தில் இருந்து குண்டுகள் போன்றவற்றை வீசுகின்றார்கள். தீ மூழும். விநாசத்தை ஏற்படுத்தி, ஸ்தாபனையை மேற்கொள்வதற்குத் தந்தை வருகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்கள் மத்தியிலும் விளங்கப்படுத்துகின்றவர்கள் வரிசைக்கிரமமானவர்களே. அனைவருடைய புத்தியி;லும் ஒரேயளவான நம்பிக்கை இருப்பதில்லை. பாபா செய்தவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும். பழைய உலகில் உள்ள சொற்ப சதங்களைக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இந்நாட்களில் அவர்களிடம் நாணயத் தாள்கள் உள்ளன. அங்கே அவர்களிடம் தங்க நாணயங்கள் உள்ளன. அங்கு தங்கமாளிகைள் கட்டப்படுவதால், தங்க நாணயங்களுக்கு சொற்ப பெறுமதியே இருக்கும். அனைத்தும் இலவசம் போன்றிருக்கும். பூமி சதோபிரதானாகும். அது இப்பொழுது பழையதாகி விட்டது. அது சதோபிரதானான புதிய உலகமாகும். அது முற்றிலும் புதியதாகும். சூட்சும உலகிற்கு நீங்கள் சென்றால் மாம்பழச் சாறு போன்றவற்றை அருந்துவீர்கள். ஆனால் அங்கு மரங்கள் எதுவும் இல்லை. அசரீரி உலகிலும் மரங்கள் இருப்பதில்லை. நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்றால் அங்கு அனைத்தையும் பெறுவீர்கள். அனைத்திற்கும் நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். சூட்சும உலகில் மரங்கள் எதுவும் இருப்பதில்லை. மரங்கள் மண்ணில் வளர்கின்றனவேயன்றி வானத்தில் வளர்வதில்லை. ‘மகா தத்துவமான பிரம்மம்’ என்ற பெயர் இருந்த போதிலும், அது ஒரு வெற்றிடமாகும். அந்த நட்சத்திரங்கள் வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்று, சின்னஞ்சிறிய ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். நட்சத்திரங்கள் பெரிதாகத் தெரிகின்றன. பிரம்ம தத்துவத்தில் ஆத்மாக்கள் பெரிதாக இருப்பார்கள் என்றில்லை. இது உங்களுடைய புத்திகளினால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். நீங்கள் ஞானக் கடலைக் கடைய வேண்டும். எனவே ஆத்மாக்கள் மேலேயே உள்ளார்கள். அவர்கள் சின்னஞ்சிறிய புள்ளிகளே. நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களால் பிறரையும் அவற்றைக் கிரகிக்கச் செய்ய முடியும். ஓர் ஆசிரியருக்கு அனைத்தும் தெரியும் என்பதாலேயே அவர் பிறருக்குக் கற்பிக்கின்றார். இல்லாவிடின் அவர் ஏன் ஓர் ஆசிரியராக இருக்க வேண்டும்? எவ்வாறாயினும் இங்கு ஆசிரியர்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். குழந்தைகளாகிய உங்களால், வைகுந்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் வைகுந்தத்தைப் பார்க்கவில்லை என்றில்லை. அங்கு எவ்வாறு திருமணங்கள் இடம்பெறுகின்றன என்பதையும், அங்கு என்ன மொழியை பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் பல குழந்தைகள் காட்சிகளில் கண்டுள்ளார்கள். நீங்கள் அனைத்தையும் பார்த்துள்ளீர்கள். இறுதியிலும் கூட காட்சிகள் இருக்கும். ஆனால் அது யோகியுக்தாக உள்ளவர்களுக்கு மாத்திரமேயாகும். தங்களின் நண்பர்களையும் உறவினர்களையும், செல்வத்தையும் சொத்துக்களையும் மாத்திரம் தொடர்ந்து நினைவு செய்கின்றவர்கள் எதனைப் பார்ப்பார்கள்? உண்மையான யோகிகள் மாத்திரமே இறுதிவரை இருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதில் தந்தை சந்தோஷமடைவார். மலர்களைக் கொண்டே ஒரு பூந்தோட்டம் உருவாக்கப்படுகின்றது. 10 அல்லது 15 வருடங்கள் இங்கு இருந்தபின்னர் கூட பலர் இங்கிருந்து விலகிச் செல்கின்றார்கள். அவர்கள் அக் மலர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். மம்மாவிற்கும் பாபாவிற்கும் வழிகாட்டல்களைக் கொண்டு வந்ததுடன், நல்ல அப்பியாசங்களை நடத்தியவர்களுமான மிகச் சிறந்த புத்திரிகள் இப்பொழுது இங்கில்லை. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என்பது இப் புத்திரிகளுக்கும் தெரியும். பாப்தாதாவிற்கும் தெரியும். மாயையுடன் மறைமுகமான யுத்தம் இடம்பெறுகின்றது. மறைமுகமான புயல்கள் இடம்பெறுகின்றன. பாபா கூறுகின்றார்: மாயை உங்களுக்கு அதிகளவு தொல்லை தருவாள். இது வெற்றியும் தோல்வியும் என்ற நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். நீங்கள் ஆயுதங்களுடன் யுத்தம் செய்வதில்லை. பாரதத்தின் இந்தப் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது என்பதுடன், யோக சக்தியினாலேயே நீங்கள் அவ்வாறு ஆகுகின்றீர்கள். எவராலும் பௌதீக சக்தியினால் உலக இராச்சியத்தைப் பெற முடியாது. இந்த நாடகம் அற்புதமானதாகும். இரு பூனைகள் சண்டையிடும்போது, இடையில் வந்த மூன்றாவது வெண்ணெயை எடுத்த கதையும் உள்ளது. ஒரு விநாடியில் உலக ஆட்சியைக் கோருங்கள் என்று கூறப்படுகின்றது. புத்திரிகளுக்குக் காட்சிகள் கொடுக்கப்பட்டன. கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் உள்ளதாக அவர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் அவர்கள் கிருஷ்ணரின் வாயில் புது உலகைக் கண்டார்கள். நீங்கள் யோக சக்தியினால் இராச்சியம் என்ற வெண்ணெயைக் கோருகின்றீர்கள். அவர்கள் ஒர் இராச்சியத்திற்காக அதிகளவு யுத்தம் புரிகின்றார்கள், யுத்தத்தின்போது பலர் மரணிக்கின்றார்கள். இப்பழைய உலகின் கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த உலக விடயங்கள் எதுவுமே எஞ்சியிருக்க மாட்டாது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பெற்றிருக்கிறீர்கள். குழந்தைகளே, தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள். அவர்கள் குரங்குகளின் உருவத்தைச் செய்துள்ளார்கள். இக்காலத்தில் மனிதர்களிலும் அதே உருவங்களை செய்கிறார்கள். முன்னர் அவர்கள் சீனா போன்ற இடங்களிலிருந்து தந்தத்தினாலான பொருட்களை இறக்குமதி செய்தார்கள். அவர்கள் கண்ணாடி வளையல்களையும் அணிவார்கள். இங்கே அவர்கள் தமது மூக்கு, காதுகளைக் குத்தி அதில் நகைகள் அணிகின்றார்கள். சத்தியயுகத்தில் எவரது காதையும் மூக்கையும் குத்த வேண்டிய அவசியம் இல்லை. இங்கே, மாயை அனைவரது காதுகளையும் மூக்கையும் அறுத்தே விடுகின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சுத்தமாகவும் தூய்மையாகவும் ஆகுகின்றீர்கள். அங்கே இயற்கை அழகுள்ளது. நீங்கள் செயற்கையான எதனையும் அங்கே பயன்படுத்தத் தேவையில்லை. இங்கே சரீரம் தமோபிரதானான தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நோய்கள் போன்றன உள்ளன. இவ்விடயங்கள் எதுவும் அங்கில்லை. எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பித்து, சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக உங்களை மாற்றுகின்றார் என்பதால், அதாவது, அமரத்துவ பூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதால் ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். இதனாலேயே புகழ் உள்ளது.: நீங்கள் அதீந்திரிய சுகம் பற்றி அறிய விரும்பினால் கோபியரையும் கோபிகைகளையும் கேளுங்கள். பக்தர்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. உங்களிலும் வெகு சில குழந்தைகளே சந்தோஷத்தில் நிலைத்திப்பதுடன், தொடர்ந்து இவ்விடயங்களைக் கடைகின்றீர்கள். அப்பாவிகளே அதிகளவில் தாக்கப்படுகின்றார்கள். திரௌபதியின் ஞாபகார்த்தமும் இப்பொழுது நடைமுறையில் இடம்பெறுகின்றன. திரௌபதி ஏன் கூவி அழைத்தாள்? மக்களுக்கு அது தெரியாது. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் அனைவருமே திரௌபதிகள் ஆவீர்கள். பெண்கள் எப்பொழுதும் பெண்களாகவே பிறப்பார்கள் என்றில்லை, நீங்கள் அடுத்தடுத்து இருமுறை பெண்களாக இருக்க முடியும், ஆனால் அதற்கு மேல் அல்ல. தாய்மார்கள் கூவி அழைக்கின்றார்கள்: பாபா, என்னைக் காப்பாற்றுங்கள்! துச்சாதனன் என்னை விகாரத்திற்காகத் துன்புறுத்துகின்றான். ஆகையாலேயே இது விலைமாதர் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. சுவர்க்கம் சிவாலயம் (சிவனின் ஆலயம்) என்று அழைக்கப்படுகின்றது. இந்த விலைமாதர் இல்லம் இராவணனது ஸ்தாபனையும், சிவாலயம் சிவபாபாவின் ஸ்தாபனையும் ஆகும். அவர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை ஞானம் நிறைந்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். ‘ஞானம் நிறைந்தவர்’ என்றால் அதன் அர்த்தம் அனைவரது இதயத்திலும் என்ன உள்ளது என்பதை அறிந்திருத்தல் என்பதல்ல. அதனால் என்ன நன்மை உள்ளது? தந்தை கூறுகின்றார்: என்னைத் தவிர வேறு எவராலும் உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்க முடியாது. நான் மாத்திரமே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றேன். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக் கடல் ஆவார். பக்திக்கான வெகுமதி இதுவாகும். சத்திய யுகத்திலும் திரேதா யுகத்திலும் பக்தி இருப்பதில்லை. இந்தக் கல்வி மூலம் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஜனாதிபதிகள் போன்றோருக்கு எத்தனை ஆலோசகர்கள் உள்ளனர் என்று பாருங்கள். இப்போது அவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். சத்திய யுகத்தில் ஆலோசகர்களுக்கான அவசியம் இல்லை. தந்தை இப்பொழுது உங்களைத் திறமைசாலிகள் ஆக்குகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தார்கள் எனப் பாருங்கள். நீங்கள் தந்தையிடமிருந்து எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். மக்கள் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். சிவபாபா நிச்சயமாக பாரதத்திற்கு வந்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்கிய பின்னர் மீண்டும் திரும்பிச் செல்கின்றார். அது ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குரிய விடயமல்ல. அது நேற்று நடந்த விடயமேயாகும். நல்லது. இதனை விட மேலும் நான் என்ன விளங்கப்படுத்துவது? தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! உண்மையில் இக்கல்வி ஒரு சமிக்ஞை மட்டுமே. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் முழுமையான உதவியாளராக ஆகுவதற்கு, புத்திசாலியாகவும் விவேகமானவராகவும் ஆகுங்கள். உங்களுக்குள்ளே எவ்விதமான முரண்பாடுகளையும் கொண்டிருக்காதீர்கள்.

2. ஸ்தாபனையினதும் விநாசத்தினதும் பணிகளைக் காணும் வேளையில் உங்கள் புத்தியில் முழுமையான நம்பிக்கை இருக்கட்டும். அத்துடன் தந்தையைப் பின்பற்றுங்கள். ஒரு சில சதப் பெறுமதியேயுடைய பழைய உலக விடயங்களை உங்கள் புத்தியில் இருந்து அகற்றி, முழுமையான பிச்சைக்காரர் ஆகுங்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், செல்வம், சொத்து போன்ற அனைத்தையும் மறந்துவிடுங்கள்.

ஆசீர்வாதம்:
ஒரு ஒன்றுகூடலில் இருக்கின்ற வேளையில், அனைவரின் மீதும் அன்பாக இருப்பதுடன், உங்கள் புத்தியில் ஒரேயொரு தந்தையை ஆதாரமாகக் கொண்டிருப்பதால் ஒரு கர்மயோகி ஆகுவீர்களாக.

ஒரு ஒன்றுகூடலில் அன்பாக இருப்பதற்குப் பதிலாக சில குழந்தைகள், விலகியிருக்கிறார்கள். தாம் சிக்கிக் கொள்வோம் என அவர்கள் பயப்படுவதால், தாம் ஒதுங்கியிருப்பது நல்லது என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இது அவ்வாறில்லை. நீங்கள் 21 பிறவிகளுக்கு குடும்பத்திற்குள் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பயப்பட்டு, விலகியிருந்தால், அது கர்ம சந்நியாசிகளின் சம்ஸ்காரமாகும். நீங்கள் ஒரு கர்மயோகி ஆக வேண்டுமே அல்லாது ஒரு கர்ம சந்நியாசி (துறவி;) ஆகுவதல்ல. ஒன்றுகூடலில் இருங்கள், அனைவருடனும் அன்பாக இருங்கள், உங்கள் புத்தியில் வேறு எவரும் அல்லாது ஒரேயொரு தந்தையே ஆதாரமாக இருக்கட்டும். வேறு எந்த ஆத்மாவின் சகவாசமோ, தெய்வீகக் குணமோ அல்லது சிறப்பியல்போ உங்கள் புத்தியால் கவரப்படாதிருக்கட்டும். அப்போது நீங்கள் தூய்மையான கர்மயோகி ஆத்மா எனப்படுவீர்கள்.

சுலோகம்:
பாப்தாதாவின் இடது கரமாக அல்லாது, வலது கரமாக ஆகுங்கள்.