20.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் யோக சக்தியின் மூலம் இந்த உவர்நீர்க் கால்வாயைக் கடந்து வீடு திரும்ப வேண்டும். ஆகையால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நினைவு செய்யுங்கள். ஏழைகளாகிய நீங்கள் இப்பொழுது செல்வந்தர் ஆகுகின்றீர்கள் என்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள்.

பாடல்:
தெய்வீகக் குணங்கள் என்ற பாடத்தில் கவனம் செலுத்துகின்ற குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?

பதில்:
‘நான் செய்வதையே பிறரும் செய்வார்கள்’ என்பது அவர்களின் புத்தியில் எப்போதும்; இருக்கும். அவர்கள் எவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் பிழையான அல்லது தவறான வார்த்தைகளைப் பேச மாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் தமது எண்ணங்களினாலோ, வார்த்தைகளினாலோ, செயல்களினாலோ எவருக்கும் துன்பம் விளைவிக்க மாட்டார்கள். தந்தையைப் போன்று தாமும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இலக்கை ஒருவர் கொண்டிருக்கும் போதே அவர் தெய்வீகக் குணங்கள் என்ற பாடத்தில் கவனம் செலுத்துகின்றார்கள் என்று கூறப்படுகின்றது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரை என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். பக்தி மார்க்கத்திலும், அவர்கள் தேவர்களையும், சிவபாபாவையும் நினைவு செய்தபோதிலும், நினைவு செய்வதன் மூலமே அவர்களின் பாவங்கள் அழியும் என்பதை அவர்கள் அறியாதுள்ளார்கள். தந்தையே தூய்மையாக்குபவரும், அவரே உங்களுக்கு தூய்மையாகுவதற்கான வழியைக் காட்டுகின்றார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாவே தூய்மையாக வேண்டும். ஆத்மாவே தூய்மையற்றவரும் ஆகுகின்றார். தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வந்து, நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் அதனை வேறு எங்கும் கற்பிக்க முடியாது. நீங்கள் பல பௌதீக யாத்திரையில் சென்றுள்ளீர்கள். ஒரேயொரு தந்தையால் மாத்திரமே இந்த யாத்திரையைக் கற்பிக்க முடியும். மாயை அனைவரின் புத்தியையும் விவேகமற்றிருத்தல் (புரிந்து கொள்ளாதிருத்தல்) என்ற பூட்டினால் பூட்டி விட்டாள் என்று தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் மிகவும் விவேகமானவராகவும், செல்வந்தராகவும், தூய்மையானவராகவும் இருந்தீர்கள் என்பதைத் தந்தையி;டமிருந்து நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டுள்ளீர்கள். நாங்கள் முழு உலகிற்கும் அதிபதிகளாக இருந்தோம். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றோம். தந்தை எங்களுக்கு எல்லையற்ற மிகப் பெரிய இராச்சியத்தைக் கொடுக்கின்றார். ஒரு லௌகீகத் தந்தை உங்களுக்கு நூறு, ஆயிரம், அல்லது மில்லியனைக் கொடுக்கலாம். ஆனால் இங்கே இனிய எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கின்றார். ஆகையினாலேயே நீங்கள் இங்கே கற்பதற்காக வந்திருக்கின்றீர்கள். யாரிடமிருந்து? எல்லையற்ற பாபாவிடமிருந்து. ‘பாபா’ என்ற வார்த்தை ‘மம்மா’ என்ற வார்த்தையை விட இனிமையானதாகும். மம்மா உங்களைப் பராமரித்த போதிலும், தந்தை என்றால் தந்தையே, ஏனெனில் நீங்கள் அவரிடமிருந்தே எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சதா சந்தோஷமானவராகவும், சதா பாக்கியசாலியாகவும் அதாவது மணவாளனுடன் இருக்கின்ற பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். பாபா மீண்டும் எங்களை என்னவாக ஆக்குகின்றார்? இது புதியதொரு விடயமல்ல. ஓர் அரசர் பகற்பொழுதில் செல்வந்தராகவும் இரவில் ஏழையாகவும் ஆகிவிடுகின்றார்; என்ற கதை நினைவு கூரப்பட்டுள்ளது. (தமது இராச்சியத்தின் நிலையை அறிவதற்காக, இரவில் அவர் ஓர் ஏழையைப் போன்று மாறு வேடம் பூண்டு வெளியில் செல்வாராம்). நீங்களும் பகலில் செல்வந்தராகவும், பின்னர் எல்லையற்ற இரவில் ஏழைகளாகவும் ஆகி விடுகின்றீர்கள். பாபா நாளாந்தம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நேற்று நீங்கள் செல்வந்த உலக அதிபதிகளாக இருந்தீர்கள், ஆனால் இன்று நீங்கள் யாசிப்பவர்கள் ஆகியுள்ளீர்கள். காலைப் பொழுது மீண்டும் ஒருமுறை வரவுள்ளதால், நீங்கள் செல்வந்தர் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானதாகும். குழந்தைகளாகிய நீங்கள் செல்வந்தராகுகின்றீர்கள் என்று அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே பிராமணர்களின் பகலும், பிராமணர்களின் இரவும் ஆகும். நீங்கள் இப்பொழுது பகலில் செல்வந்தராகிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாக அவ்வாறு ஆகுவீர்கள், எனினும் நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகவே அவ்வாறு ஆகுவீர்கள். தந்தை கூறுகின்றார்: இது உவர்நீர்க்கால்வாய் ஆகும், யோக சக்கியினால் நீங்கள் மாத்திரமே இதனைக் கடந்து செல்கின்றீர்கள். நீங்கள் செல்லவிருக்கும் இடத்தை நினைவு செய்ய வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பாபாவே எங்களை அழைத்துச் செல்வதற்காக இங்கு வந்துள்ளார். அவர் அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் தூய்மையானவராக இருந்தீர்கள், 84 பிறவிகள் எடுத்ததால், நீங்கள் தூய்மையற்றவர் ஆகியுள்ளீர்கள். எனவே நீங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையானவர் ஆக வேண்டும். தூய்மையாகுவதற்கு வேறு வழியேதும் இல்லை. தூய்மையாக்குபவர் வரும்போது, அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, நீங்கள் தூய்மையானவர் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த அந்தஸ்தை அடைவதனால் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சந்தோஷமாக இருப்பீர்கள். தந்தை உங்களுக்கு சந்தோஷ உலகிற்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார், ஆனால் இராவணனோ உங்களுக்கு துன்ப உலகிற்கான ஆஸ்தியையே கொடுக்கின்றான். இராவணன் உங்கள் பழைய எதிரி என்பதையும், அவன் உங்களை ஐந்து விகாரங்கள் என்ற சிறையில் சிறைப்படுத்தியுள்ளான் என்பதையும் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தந்தை வந்து உங்களை அதில் இருந்து விடுவிக்கின்றார். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்பவே நீங்கள் பிறருக்கு அவரின் அறிமுகத்தைக் கொடுப்பீர்கள். நினைவில் இல்லாதவர்கள் சரீர உணர்வைக் கொண்டிருப்பார்கள். அவர்களால் தந்தையை நினைவு செய்யவும் முடியாது, பிறருக்கு அவரின் அறிமுகத்தைக் கொடுக்கவும் முடியாது. ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து, எங்களின் வேறுபட்ட பாகங்களை நடிப்பதற்காகவே இங்கே வந்துள்ளோம். முழுப் பாகமும் எவ்வாறு நடிக்கப்படுகின்றது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. உறுதியான நம்பிக்கை உடையவர்கள் இங்கே வந்து, புத்துணர்ச்சி அடைகின்றார்கள். இது ஆசிரியருடனேயே இருந்து கற்கின்றதொரு கல்வி அல்ல. இல்லை. நீங்கள் வீட்டில் வாழ்ந்தவாறும் கற்கலாம். ஒரு வாரத்தில் இதனை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர் சிலரை ஆறு மாதங்களின் பின்னரும், சிலரை 12 மாதங்களின் பின்னரும் பிராமண ஆசிரியர்கள் இங்கே அழைத்து வருகின்றார்கள். பாபா கூறுகின்றார்: உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடனேயே நீங்கள் இங்கே ஓடோடி வருகின்றீர்கள். நீங்கள் விகாரத்தில் ஈடுபட மாட்டீர்கள் என்று இராக்கியையும் கட்டிக் கொள்ள வேண்டும். நான் சிவபாபாவிற்கு சத்தியம் செய்கின்றேன். சிவபாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாக விகாரமற்றவர் ஆக வேண்டும். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால் நீங்கள் ஈட்டிய அனைத்தையும் இழந்து விடுவதுடன், நூறு மடங்கு தண்டனையையும் பெற நேரிடும். நீங்கள் 63 பிறவிகளாக மூச்சுத்திணறிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது தூய்மையாகுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழியும். ஆத்மாக்கள் சகோதரர்கள் ஆவார்கள். நீங்கள் எவரின் பெயரிலும் வடிவத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஒருவர் நாளாந்தம் கற்காதிருந்தால், அவரை நீங்கள் உடனடியாக இங்கே அழைத்து வரக்கூடாது. ஒரேநாளிலும் அம்பினால் இலக்கைத் தாக்க முடியும் என்று பாபா கூறிய போதிலும், நீங்களும், உங்கள் சொந்தப் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். பிராமணர்களாகிய நீங்களே அதிமேன்மையானவர்கள். இது உங்கள் மிகவும் மேன்மையான குலமாகும். அங்கே, ஆன்மீக ஒன்றுகூடல் போன்றவை இடம்பெற மாட்டாது. சத்சங்கங்கள் (ஆன்மீக ஒன்றுகூடல்கள்) பக்தி மார்க்கத்திலேயே இடம்பெறுகின்றன. சத்திய சகவாசம் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படும் போதே நீங்கள் சத்திய சகவாசத்தைப் பெறுகின்றீர்கள். இது எவரின் புத்தியிலும் பதிவதில்லை, ஏனெனில் அவர்களின் புத்தி பூட்டப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது சத்தியயுகத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் சத்திய சகவாசத்தை அதி மங்களகரமான சங்கமயுகத்திலேயே பெறுகின்றீர்கள். அந்தக் குருமார்கள் சங்கமயுகத்திற்குரியவர்கள் அல்ல. பாபா வரும் போது, அவர் உங்களை ‘குழந்தாய், குழந்தாய்’ என்று அழைக்கின்றார். அந்தக் குருமார்களை நீங்கள் ‘பாபா’ என்று அழைப்பதில்லை. புத்தி ‘கோட்ரேஜ்’ பூட்டினால் இறுகப் பூட்டப்பட்டுள்ளது. பாபா வந்து பூட்டைத் திறக்கின்றார். மக்கள் வந்து தமது வாழ்வை வைரம் போன்று ஆக்குவதற்காக பாபா எத்தனை வழிகளை உருவாக்கியுள்ளார் என்று பாருங்கள். அவர் சஞ்சிகைகள், புத்தகங்கள் போன்றவற்றை அச்சடித்துள்ளார். பலரும் பயன் பெற்றால், நீங்கள் பலரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். நீங்கள் பிரஜைகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்யவேண்டும், அத்துடன் உங்களைப் பந்தனத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நிச்சயமாக உங்கள் ஜீவனோபாயத்திற்காகச் சேவை செய்ய வேண்டும். இறைசேவை காலையிலும் மாலையிலும் மாத்திரமே செய்யப்படுகின்றது. அந்த நேரத்தில் அனைவருக்கும் நேரம் உள்ளது. நீங்கள் வெளியில் எவருடன் வேலை செய்தாலும், இரு தந்தையரின் அறிமுகத்தை நீங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் வெவ்வேறான லௌகீகத் தந்தையைக் கொண்டிருந்தாலும், அனைவரின் பரலோகத் தந்தை ஒருவரேயாவார். அவரே பரமாத்மா ஆவார். பாபா கூறுகின்றார்: எனக்கும் ஒரு பாகம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எனது அறிமுகத்தை அறிந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு ஆத்மாக்களைப் பற்றியும் தெரியும். ஓர் ஆத்மாவைப் பற்றிக் கூறுகின்றார்கள்: நெற்றியின் நடுவே அற்புதமானதொரு நட்சத்திரம் மின்னுகின்றது. இதுவும் அமரத்துவமான சிம்மாசனமாகும். ஆத்மாக்கள் ஒருபோதும் மரணத்தை அனுபவம் செய்வதில்லை.. அவர்கள் சுத்தமாகிய பின்னர் அழுக்கடைகின்றார்கள். ஆத்மாவின் சிம்மாசனம் நெற்றியின் நடுவில் இருப்பதே சரியாகும். திலகத்தின் அடையாளமும் நெற்றியின் நடுவிலேயே இடப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: இராச்சிய திலகத்தை உங்களுக்குக் கொடுக்கும் வகையில், உங்களை நீங்கள் தகுதியானவர் ஆக்கிக் கொள்ள வேண்டும். இராச்சிய திலகத்தை நானே அனைவருக்கும்; கொடுக்கின்றேன் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அதனை நீங்களே உங்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகளவு சேவை செய்பவர்கள் யார் என்பதும் பாபாவிற்குத் தெரியும். சஞ்சிகையில் எழுதப்பட்டிருப்பவை மிகவும் நன்றாக உள்ளன. அத்துடன் நீங்கள் யோகம் செய்வதற்கும் முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் யோகத்தின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நாளுக்குநாள் நீங்கள் மிகவும் நல்ல இராஜயோகிகள் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் சரீரத்தை நீக்கி விட்டு, வீடு திரும்பவுள்ளீர்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. குழந்தைகள் சூட்சும உலகிற்குச் செல்கின்றார்கள். உங்களுக்கு அசரீரியான உலகையும் நன்றாகத் தெரியும். அது ஆத்மாக்களாகிய எங்களின்; வீடாகும். மக்கள் சாந்திதாமத்திற்குச் செல்வதற்கே பக்தி செய்கின்றார்கள். அவர்களுக்கு சந்தோஷதாமத்தைப் பற்றியும் தெரியாது. சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான கற்பித்தல்களை தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குக் கொடுக்க முடியாது. இது இல்லறப்பாதையாகும். இருவருமே முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். அவர்கள் பிழையான வழிகளைக் காட்டுகின்றார்கள். அதனால் எவராலும் வீடு திரும்ப முடியாது. தந்தை இறுதியில் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இது அவரின் கடமையாகும். சிலர் நன்றாகக் கற்று, தமது இராச்சியபாக்கியத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் ஏனைய அனைவரும் எவ்வாறு கற்பார்கள்? அவர்கள் வரிசைக்கிரமமாக இங்கு வருவதைப் போன்றே, வரிசைக்கிரமமாகவே திரும்பிச் செல்வார்கள். இவ்விடயங்களில் அதிகளவு நேரத்தை வீணாக்காதீர்கள். பாபாவை நினைவு செய்யவே நேரம் இல்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறாயின் இவ்விடயங்களில் நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டும்? எல்லையற்ற தந்தையே ஆசிரியரும் குருவும் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். எனவே வேறு எவரையும் நினைவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் முன்னைய கல்பத்திலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி தூய்மையாகினீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மீண்டும் மீண்டும் சுயதரிசன சக்கரத்தைத் தொடர்ந்தும் சுழற்றுங்கள். உங்களின் பெயர்: சுயதரிசன சக்கரதாரிகள். ஞானக்கடலிடமிருந்து உங்களை நீங்கள் நிரப்பிக் கொள்ள அதிக காலம் எடுப்பதில்லை. ஆனால் வெறுமையாகுவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது. (நீர்ச்சக்கரத்திலிருந்து வாளியில் நீர் நிரப்பப்பட்டு பின்னர் வெறுமையாக்கப்படுகின்றது என்ற உதாரணம் உள்ளது) நீங்களே இனிமையான நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டடெடுக்கப்பட்ட குழந்தைகள் என்பதால் நீங்கள் ஒரு கல்பத்தின் பின்னர் வந்து பாபாவைச் சந்தித்துள்ளீர்கள். இதில் உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். நாங்கள் 84 பிறவிகளின் பின்னர் மீண்டும் ஒருமுறை வந்து தந்தையை சந்தித்துள்ளோம். தந்தை கூறுகின்றார்: முதலில் பக்தி செய்தவர்களே, ஞானத்தை முதலில் பெறுவதற்கான தகுதியைப் பெறுகின்றார்கள். ஏனெனில் பக்திக்கு பலன் கிடைக்க வேண்டும். ஆகவே எப்பொழுதும் உங்கள் பலனைத் தொடர்ந்து நினைவு செய்யுங்கள். அதாவது உங்கள் ஆஸ்தியை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ‘பலன்’ என்ற வார்த்தை பக்திமார்க்கத்தைச் சேர்ந்ததாகும். ‘ஆஸ்தி’ என்று கூறுவதே சரியாகும். எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். வேறு வழியேதும் இல்லை. ‘பாரதத்தின் புராதன யோகம்’ மிகவும் பிரபல்யமானது. அவர்கள் தாம் பாரதத்தின் ஆதி யோகத்தைக் கற்கின்றோம் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் நாடகத்திற்கு ஏற்ப, அவர்கள் ஹத்த யோகிகள் ஆகுகின்றார்கள் என்று பாபா விளங்கப்படுத்துகின்றார், நீங்கள் இப்பொழது இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். ஏனெனில் இப்பொழுது இது சங்கமயுகமாகும். ஆனால் அவர்களின் தர்மம் வேறானதாகும். உண்மையில் அவர்கள் குருமாhர்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது. எவ்வாறாயினும் நாடகத்திற்கு ஏற்ப, அவர்களும் அதனை நிச்சயமாகச் செய்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தர்மம் நிறைந்தவர்கள் ஆக வேண்டும். தர்மத்திற்குச் சக்தி உண்டு. நான் உங்களை அந்தத் தேவர்கள் ஆக்குகின்றேன். அந்தத் தர்மம் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கும். என்னுடன் யோகம் செய்பவர்கள் என்னிடமிருந்து சக்தியைப் பெறுகின்றார்கள். தந்தையினால் ஸ்தாபிக்கப்படும் தர்மத்திற்கு அதிகளவு சக்தி உள்ளது. நீங்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இந்தத் தர்மத்தை தந்தை அதிகளவு புகழ்கின்றார், ஏனெனில், இதற்கு அதிகளவு சக்தி உள்ளது. பலரும் சர்வசக்திவானிடமிருந்து சக்தியைப் பெறுகின்றார்கள். உண்மையில், அனைவருமே, சக்தியைப் பெறுகின்றார்கள், ஆனால் வரிசைக்கிரமமாகவே பெறுகின்றார்கள். நீங்கள் பாபாவிடமிருந்து விரும்பியளவை எடுத்துக் கொள்ளலாம். எவ்வாறாயினும், தெய்வீகக் குணங்கள் என்ற பாடமும் உள்ளது. எவரையும் தொந்தரவு செய்யாதீர்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். இவர் எவருக்கும் எப்பொழுதுமே தீய அல்லது பிழையான வார்த்தைகளைக் கூறுவதில்லை. ஏனெனில் தான் செய்வதையே பிறரும் செய்வார்கள் என்பதை அவர் அறிந்துள்ளார். நீங்கள் அசுர குணத்திலிருந்து தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆக வேண்டும். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்பதைச் சோதித்துப் பாருங்கள். இன்னொருவருக்குத் துன்பம் விளைவிக்காத எவருமே இல்லை. நிச்சயமாக ஏதாவது ஒரு தவறிழைக்கப்படுகின்றது. இறுதியிலேயே உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் துன்பம் விளைவிக்காத ஸ்திதி இருக்கும். இப்பொழுது நாங்கள் முயற்சி செய்கின்ற ஸ்திதியில் இருக்கின்றோம். அனைத்தும் வரிசைக்கிரமமாக நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. அனைவரும் சந்தோஷத்திற்காகவே முயற்சி செய்கின்றார்கள். எவ்வாறாயினும். தந்தையைத் தவிர வேறு எவராலும் சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. சோமநாதர் ஆலயத்தில் பல வைரங்களும் இரத்தினங்களும் இருந்ததைப் பார்த்துள்ளனர். அவை யாவும் எங்கிருந்து வந்தன? அவர்கள் எவ்வாறு செல்வந்தர் ஆகினார்கள்? நாள் முழுவதும் இக் கல்வியைப் பற்றிய விடயங்களைக் கடைய வேண்டும். உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் போதும், நீங்கள் தாமரையைப் போன்று தூய்மையாக வாழ வேண்டும். நீங்கள் இந்த முயற்சியைச் செய்தீர்கள் என்பதாலேயே மாலை உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ந்தும் இது உருவாக்கப்படும். மாலை யாரின் ஞாபகார்த்தத்துடன் உருவாக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் மாலையின் மணிகளை உருட்டும் போது அதில் முற்றாகத் திளைத்திருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் என்ன நிகழ்கின்றது என்பதையும் ஞான மார்க்கத்தில் என்ன நிகழ்கின்றது என்பதையும் நீங்கள் மாத்திரமே அறிகின்றீர்கள். நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். முயற்சி செய்த பின்னர், முன்னைய கல்பத்தைப் போன்று, இறுதியில் அதன் பெறுபேறு அறிவிக்கப்படும். ஒவ்வொருவரும் தம்மையே தொடர்ந்து சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் இவ்வாறு ஆக வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். முயற்சி செய்வதற்கு உங்களுக்கு அவகாசம் உள்ளது. தந்தை நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக உங்களை வரவேற்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை வரவேற்பதை விட மேலும் அதிகமாக அவர் குழந்தைகளை வரவேற்கின்றார். உங்களை வரவேற்பதே தந்தையின் கடமையாகும். வரவேற்றல் என்றால் ஜீவன்முக்தியாகும். இதுவே அதிமேலான வரவேற்பு முறையாகும். தந்தை உங்கள் அனைவரையும் வரவேற்பதற்காகவே இங்கே வருகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆசீர்வாதங்களைப் பலரிடமிருந்தும் பெறுவதற்கு, நன்மை செய்பவராக ஆகுங்கள். உங்கள் ஜீவனோபாயத்திற்காக செயல்களைச் செய்தவாறு, பந்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வதுடன், காலையிலும் மாலையிலும் நிச்சயமாக இறைசேவை செய்யுங்கள்.

2. உங்கள் நேரத்தை ஏனைய விடயங்களில் வீணாக்காதீர்கள், ஆனால் தந்தையை நினைவு செய்து அவரிடமிருந்து சக்;தியை எடுத்துக்கொள்ளுங்கள். சத்திய சகவாசத்துடன் மாத்திரம் இருங்கள்;. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூலம் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்ற முயற்சியைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
தூய்மையின் ஆசீர்வாதத்தை உங்களின் ஆதி சம்ஸ்காரம் ஆக்குவதன் மூலம் உங்களின் வாழ்க்கையைத் தூய வாழ்க்கை ஆக்குவதற்கு முயற்சி செய்வதில் இருந்து விடுபடுவீர்களாக.

சில குழந்தைகள் தூய்மையைக் கடைப்பிடிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இது அவர்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையிடமிருந்து தமது பிறப்பின் ஆசீர்வாதத்தைப் பெறவில்லை என்பதை நிரூபிக்கிறது. ஆசீர்வாதத்தில் எந்தவிதமான முயற்சியும் தேவைப்படாது. ‘நீங்கள் தூய்மையானவராகவும் யோகியாகவும் ஆகுவீர்களாக’ என்ற முதல் ஆசீர்வாதத்தை ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பெற்றுள்ளார். எப்படி சம்ஸ்காரங்கள் பிறப்பில் இருந்தே மிகக் கடுமையாக இருக்கின்றனவோ, அதேபோல் தூய்மையும் பிராமணப் பிறப்பின் முதல் சம்ஸ்காரம் ஆகும். அது உங்களின் ஆதி சம்ஸ்காரம். இந்த விழிப்புணர்வுடன் ஒரு தூய வாழ்க்கையை உருவாக்குங்கள். முயற்சி செய்வதில் இருந்து விடுபடுங்கள்.

சுலோகம்:
சேவைக்காக நல்லாசிகளைக் கொண்டிருப்பவரே ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆவார்.