21.04.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    30.03.99     Om Shanti     Madhuban


உங்களின் தீவிர முயற்சிக்கான அன்பை எரிமலை போன்றதாக்கி, எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய அலையைப் பரப்புங்கள்.


இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் உள்ள மூன்று ரேகைகளைப் பார்த்தார். முதலாவது ரேகை, இறைவனின் பராமரிப்பெனும் உங்களின் பாக்கியம். நீங்கள் இந்த இறை பராமரிப்பைக் கல்பம் முழுவதிலும் ஒரேயொரு தடவை மட்டுமே பெறுகிறீர்கள். வேறெந்த வேளையிலும் அன்றி, சங்கமயுகத்தில் மட்டுமே இந்தப் பராமரிப்பானது இறைவனால் வழங்கப்படும். மிகச் சில குழந்தைகள் மட்டுமே இறைவனிடமிருந்து இந்தப் பராமரிப்பைப் பெறுகிறார்கள். உங்களின் பாக்கியத்தின் இரண்டாவது ரேகை, இறைவனின் கல்விக்கான ரேகையாகும். நீங்கள் பெற்றுள்ள இறைவனின் கல்வியென்ற இந்தப் பாக்கியம் மிகவும் மகத்தானது - இறைவனே உங்களின் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கிறார். மூன்றாவது பாக்கிய ரேகையானது, இறைவனிடமிருந்து நீங்கள் பெறுகின்ற பேறுகளின் ரேகையாகும். நீங்கள் எவ்வளவற்றைப் பெற்றுள்ளீர்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள். உங்களின் பேறுகளின் பட்டியல் எத்தனை நீண்டது என்பதை நீங்கள் எல்லோரும் நினைவு செய்கிறீர்கள். இந்த பாக்கியங்களின் மூன்று ரேகைகளும் ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பிரகாசித்தன. நீங்கள் இவற்றைப் பெற்றுள்ள பாக்கியசாலி ஆத்மாக்களாக உங்களைக் கருதுகிறீர்களா? பராமரிப்பு, படிப்பு, பேறுகள். இத்துடன்கூடவே, உங்களின் நம்பிக்கையின் அடிப்படையில், பாப்தாதா உங்களின் ஆன்மீகப் போதையையும் பார்க்கிறார். இறைவனின் குழந்தைகளான ஆத்மாக்களான உங்கள் எல்லோரிடமும் இத்தகைய ஆன்மீக போதை உள்ளது. நீங்களே இந்த முழு உலகிலும் உள்ள எல்லோரிலும் அத்துடன் கல்பம் முழுவதிலும் அதியுயர்ந்த, அதிமகத்துவமான, அதிபுனிதமானவர்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்தில், குழந்தைகளான நீங்களே அதிசெல்வந்தர்கள் என பாப்தாதா சொல்வதுண்டு. செய்தித்தாள்களிலும் மிகுந்த போதையுடன், ‘ஓம் மண்டலியே உலகிலேயே அதிகூடிய செல்வத்தைக் கொண்டது’ எனப் பிரசுரிக்கப்பட்டது. இதுவே இந்த ஸ்தாபனையின் ஆரம்பத்தில் உங்கள் எல்லோருடைய புகழாகும். யாராவது ஒருவர் ஒரு நாளில் பல கோடிகளுக்கு அதிபதி ஆகினாலும், யாருமே உங்களைப் போன்று செல்வந்தர்கள் ஆகமுடியாது. நீங்களே அதிசெல்வந்தர்கள். எல்லோரிலும் அதி செல்வந்தர்களாக ஆகுவதற்கான அடையாளம் என்ன? மிகச் சிறியதொரு விடயத்தையே செய்ய வேண்டும். மக்கள் செல்வந்தர்கள் ஆகுவதற்காக அதிகளவு முயற்சி செய்கிறார்கள். ஆனால், நீங்கள் சகல பொக்கிஷங்களிலும் மிக இலகுவாக நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள்! இதற்கான வழிமுறை என்னவென்று உங்களுக்குத் தெரியும்தானே? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சிறிய புள்ளியை வைப்பதே ஆகும். நீங்கள் ஒரு புள்ளியை வைத்ததும், அதிகளவில் சம்பாதிக்கிறீர்கள். இது எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒரு பூச்சியத்தைச் சேர்ப்பதைப் போன்றதாகும். ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு புள்ளியே. தந்தையும் ஒரு புள்ளியே. நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதும் ஒரு புள்ளியே. நீங்கள் ஓர் ஆத்மா, ஒரு புள்ளி என்பதை நினைத்தவுடனே, உங்களின் வருமானம் அதிகரிக்கிறது. லௌகீக உலகிலும், ஒரு பூச்சியத்தைச் சேர்த்தவுடன் அந்த இலக்கம் அதிகரிக்கிறது. ஒன்றின் பின்னால் ஒரு பூச்சியத்தைப் போட்டதும் என்ன நடக்கும்? அது பத்து ஆகுகிறது. நீங்கள் ஒரு பூச்சியம், இரண்டு பூச்சியங்கள், மூன்று பூச்சியங்கள், நான்கு பூச்சியங்களைச் சேர்க்கும்போது, அந்த இலக்கம் அதிகரிக்கிறது. உங்களின் வழிமுறை மிகவும் இலகுவானது! ஓர் ஆத்மா என்ற உணர்விற்கான புள்ளியை நீங்கள் போடுவதென்றால், உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேமித்தல் என்று அர்த்தம். அதன்பின்னர், தந்தை என்ற புள்ளியை இடும்போது (தந்தையை நினைத்தல்), நீங்கள் மேலதிகமாகப் பொக்கிஷத்தைச் சேமிப்பீர்கள். அதன்பின்னர், மற்றவர்களுடனான தொடர்பிலும் உறவுமுறையிலும் செயல்படும்போது, நாடகத்திற்கு முற்றுப்புள்ளி இடும்போது, நீங்கள் கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்போது, உங்களின் பொக்கிஷம் மேலும் அதிகரிக்கிறது. எனவே, நாள் முழுவதும் எத்தனை தடவைகள் நீங்கள் ஒரு புள்ளியை வைப்பீர்கள்? நீங்கள் ஒரு புள்ளியை வைக்கிறீர்கள்தானே? ஒரு புள்ளியை இடுவது மிகவும் இலகுவானது. அது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அந்தப் புள்ளி நழுவிப் போகிறதா?

ஒரு புள்ளியைச் சேர்ப்பதன் மூலம் ஒரு வருமானத்தை எப்படி உங்களால் சேமிக்க முடியும் என பாப்தாதா கற்பித்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் ஒரு புள்ளி வைப்பது எப்படி என்று தெரியுமா? அது எப்படி என உங்களுக்குத் தெரியும் என்றால், ஒரு கையைத் தட்டுங்கள்! இது உறுதியாக உள்ளதுதானே? அல்லது, சிலவேளைகளில் அது நழுவிப் போகிறதா? சிலவேளைகளில் அது பிரயோகிக்கப்படுகிறதா? எல்லாவற்றிலும் மிக இலகுவான வழிமுறை, ஒரு புள்ளியைப் போடுவதேயாகும். ஒரு கண் தெரியாதவரால்கூட பென்சிலைப் பயன்படுத்தி ஒரு கடதாசியால் எழுத முடியும். அவராலும் ஒரு புள்ளியை இடமுடியும். எவ்வாறாயினும், நீங்கள் திரிநேத்ரி (மூன்று கண்களைக் கொண்டவர்கள்) ஆவீர்கள். ஆகவே, உங்களால் சதா இந்த மூன்று புள்ளிகளைப் பயன்படுத்த முடியும். ஒரு கேள்விக்குறி கோணலானது. அதை எழுதிப் பாருங்கள். அது கோணலாக இருக்கிறதுதானே? ஒரு புள்ளி வைப்பது மிகவும் இலகுவானது. இதனாலேயே, சமமானவர் ஆகுவதற்காக வெவ்வேறு வழிமுறைகளைக் குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதா கூறுகிறார். ஒரு புள்ளியை வைப்பதே அந்த வழிமுறையாகும். வேறெந்த வழிமுறையும் இல்லை. சரீரமற்றவர் ஆகுவதற்கும், ஒரு புள்ளியை வைப்பதே நீங்கள் பயன்படுத்தும் வழிமுறையாகும். நீங்கள் சரீரமற்றவர் ஆகும்போது, நீங்கள் கர்மாதீத் ஆகும்போது, நீங்கள் பயன்படுத்தும் வழிமுறை, ஒரு புள்ளியை வைப்பதேயாகும். இதனாலேயே, நீங்கள் அமிர்தவேளையில் பாப்தாதாவுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடும்போது, நீங்கள் இதயபூர்வமான சம்பாஷணை செய்யும்போது, அல்லது, உங்களின் பணியை நீங்கள் செய்யும்போது, உங்களின் நெற்றியில் மூன்று புள்ளிகள் என்ற திலகத்தை முதலில் இடுங்கள் என பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். உங்களின் நெற்றியில் பௌதீகமாக சிவப்பு நிறத்தில் மூன்று புள்ளிகளை வைக்க ஆரம்பிக்காதீர்கள். ஆனால், இந்த உணர்வின் திலகத்தை வையுங்கள். பின்னர் எந்தவொரு காரணத்தாலும் இந்தத் திலகம் ஒருபோதும் அழியாமல் இருப்பதைச் சோதித்துப் பாருங்கள். ஒருபோதும் அழிக்க முடியாதபடி இந்தத் திலகம் அழியாததா?

குழந்தைகளான உங்கள் எல்லோரிடமும் உள்ள அன்பையும், எப்படி நீங்கள் எல்லோரும் மிகுந்த அன்புடன் இந்தச் சந்திப்பைக் கொண்டாடுவதற்காக ஓடோடி வந்துள்ளீர்கள் என்பதையும் பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் வந்து இந்த மண்டபத்தில் பாபாவைச் சந்திப்பதற்காக அமரும்போது, உங்களின் அன்பினால், முன்னால் அமர்வதற்காக நீங்கள் அதிகளவு முயற்சி செய்கிறீர்கள். அதனால் உங்களின் நித்திரை அல்லது தாகம் போன்றவற்றையும் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். பாப்தாதா எல்லாவற்றையும் பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள் என்பதையும் பார்க்கிறார். பாபா முழு நாடகத்தையும் பார்க்கிறார். உங்களின் அன்பின் காரணத்தினால், குழந்தைகளான உங்களிடம் பாப்தாதாவும் தன்னை அர்ப்பணிக்கிறார்;. அத்துடன் கூறுகிறார்: எப்படி நீங்கள் தந்தையை இந்த பௌதீக ரூபத்தில் சந்திப்பதற்காக ஓடோடி வந்தீர்களோ, அதேபோல், தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்காகவும் தீவிர முயற்சிகளைச் செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் இங்கே முதல் ஆசனங்களைப் பெறுவதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். எவ்வாறாயினும், எல்லோராலும் அவற்றைப் பெற முடியாது. இது பௌதீக உலகம். அதனால் இந்தப் பௌதீக உலகின் நியதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அந்த வேளையில், நீங்கள் எல்லோரும் முன்னால் அமர வேண்டும் என்றே பாப்தாதா நினைக்கிறார். ஆனால், அது சாத்தியமா? இது நடக்கிறது, ஆனால் எப்படி? பாப்தாதா பின்னால் அமர்ந்திருப்பவர்களையும் சதா தனது கண்களில் அமிழ்ந்திருப்பவர்களாகவே பார்க்கிறார். கண்களே அனைத்திலும் அண்மையில் உள்ளவை. ஆகவே, நீங்கள் பின்னால் அமர்ந்திருக்கவில்லை. ஆனால், பாப்தாதாவின் கண்களில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்களே கண்ணின் மணிகள் ஆவீர்கள். பின்னால் அமர்ந்திருக்கும் எல்லோரும் இதைக் கேட்டீர்களா? நீங்கள் வெகு தொலைவில் இருக்கவில்லை, ஆனால் நெருக்கமாக இருக்கிறீர்கள். பௌதீகமாக, நீங்கள் பின்னால் அமர்ந்திருக்கலாம். ஆனால், ஆத்மாக்களான நீங்கள் மிக அண்மையில் அமர்ந்திருக்கிறீர்கள். மிகவும் பின்னால் அமர்ந்திருப்பவர்களை பாப்தாதா பார்க்கிறார். முன்னால் அண்மையில் இருப்பவர்கள், பாபாவைத் தமது கண்களால் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். ஆனால் பின்னால் அமர்;ந்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இதனாலேயே, பாப்தாதா உங்களைத் தனது கண்களில் அமிழ்த்தி வைத்திருக்கிறார்.

பாப்தாதா தொடர்ந்து புன்னகை செய்கிறார். ஏனென்றால், பிற்பகல் 2 மணி ஆகியதும், எல்லோரும் ஒரு வரிசையில் நிற்கத் தொடங்கிவிடுகிறார்கள். குழந்தைகளான நீங்கள் அங்கே நிற்பதனால் களைப்படைந்து இருப்பீர்கள் என்பதை பாப்தாதா உணர்கிறார். அதனால் பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் அன்பாக மசாஜ் செய்துவிடுகிறார். உங்கள் கால்களுக்கும் மசாஜ் செய்யப்படுகின்றது. நீங்கள் பாப்தாதாவின் மசாஜை உணர்ந்தீர்களா: அது மிகவும் அழகானதும் தனித்துவமானதும் ஆகும். எனவே, இன்று, எல்லோரும் இந்தப் பருவகாலத்தின் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்துவதற்காக எங்கும் இருந்து ஓடோடி வந்துள்ளார்கள். இது நல்லது. தந்தையுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்கான உங்களின் ஊக்கமும் உற்சாகமும் சதா உங்களை முன்னேறச் செய்கிறது. எவ்வாறாயினும், பாப்தாதா குழந்தைகளான உங்களை ஒரு விநாடியேனும் மறப்பதில்லை. ஒரேயொரு தந்தை மட்டுமே இருக்கிறார். ஆனால் பல குழந்தைகள் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், பாபா ஒரு விநாடியேனும் குழந்தைகளான உங்கள் எல்லோரையும் மறப்பதில்லை. ஏனென்றால், நீங்கள் எல்லோரும் நீண்ட காலம் தொலைந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள். உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் எப்படித் தந்தை உங்கள் எல்லோரையும் வெவ்வேறான, தொலைவில் உள்ள மூலை முடுக்குகளில் இருந்தும் கண்டுபிடித்துள்ளார் என்று பாருங்கள். உங்களால் தந்தையைக் கண்டுபிடித்திருக்க முடியுமா? நீங்கள் தொடர்ந்து அலைந்து தடுமாறித் திரிந்து கொண்டிருந்தீர்கள். ஆனால் உங்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எவ்வாறாயினும், தந்தையின் குழந்தைகளான உங்களைத் தந்தை வெவ்வேறு தேசங்கள், நாடுகள், பிராந்தியங்கள் போன்றவற்றில் இருந்து கண்டுபிடித்துள்ளார். தந்தை உங்களைத் தனக்குச் சொந்தம் ஆக்கியுள்ளார். ‘நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா எனக்குச் சொந்தமானவர்’ என்ற பாடலை நீங்கள் பாடுகிறீர்கள். பாபா உங்களின் ஜாதி, உங்களின் நாடு, உங்களின் நிறம் போன்ற எதையும் பார்க்கவில்லை. அவர் உங்கள் ஒவ்வொருவரின் நெற்றியிலும் உள்ள ஆன்மீக நிறத்தையே, ஒளிப்புள்ளியையே பார்த்தார். இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தந்தை உங்களின் ஜாதியையோ அல்லது நிறத்தையோ பார்த்தாரா? நீங்கள் கறுப்பா அல்லது வெள்ளையா, அழகா அல்லது அவலட்சணமா எனப் பார்த்தாரா? தந்தை எதையும் பார்க்கவில்லை. நீங்கள் அவருக்குச் சொந்தமானவர் என்பதை மட்டுமே அவர் பார்த்தார். எனவே, இது தந்தையின் அன்பா அல்லது உங்களின் அன்பா? இது யாருடைய அன்பு? (இருவரின் அன்பும்). பதில் அளிப்பதில் குழந்தைகள் கெட்டிக்காரர்கள். ‘பாபா, அன்பு, அன்பை ஈர்க்கும் என நீங்கள் சொல்கிறீர்கள். எனவே, அன்பு, அன்பை ஈர்ப்பதனாலேயே, உங்களுக்கும் அன்பு உள்ளது, எங்களுக்கும் அன்பு உள்ளது’ என அவர்கள் சொல்கிறார்கள். குழந்தைகளே, நீங்கள் மிகவும் புத்திசாலிகள். குழந்தைகளான உங்களிடம் அதிகளவு தைரியம், ஊக்கம் மற்றும் உற்சாகம் இருப்பதைக் காணும்போது தந்தையும் களிப்படைகிறார்.

பாப்தாதாவிடம் பல குழந்தைகளின் 15 நாட்களின் அட்டவணையின் பெறுபேறுகள் உள்ளன. எங்கும் உள்ள குழந்தைகளின் பெறுபேறுகளில் பாப்தாதா கண்ட ஒரு விடயம் என்னவென்றால், உங்களில் பெரும்பாலானோர் கவனம் செலுத்தியுள்ளீர்கள். உங்களில் எவருக்கும் அவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெற விருப்பமில்லை. ஆனால் நீங்கள் கவனம் செலுத்தியுள்ளீர்கள். தீவிர முயற்சியாளர் குழந்தைகள் தமது இதயபூர்வமாகச் செய்த சத்தியத்தைப் பேணும் தமது இலட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்தவண்ணம் முன்னேறிச் செல்கிறார்கள். இந்த முறையில் முன்னேறுவதன் மூலம், நீங்கள் உங்களின் இலக்கை அடைவீர்கள். இப்போதும் சிறுபான்மையினர், தமது கவனயீனத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் மிகக் குறைந்தளவு கவனத்தையே செலுத்துகிறார்கள். அவர்களின் விசேடமான சுலோகம் என்னவென்றால், ‘ஆமாம், நாம் அதைச் செய்வோம், நாம் அங்கே சென்றடைவோம்’ என்பதாகும். ஏதாவதொரு வேளையில் நீங்கள் அதை அடைவீர்கள் என நினைத்தால், அது கவனயீனமாகும். ‘நான் அந்த நிலையை அடைய வேண்டும்’ எனச் சொல்வதே தீவிர முயற்சியாகும். பாப்தாதா பல சத்தியங்களைக் கேட்கிறார். நீங்கள் மீண்டும் மீண்டும் பல அழகான சத்தியங்களைச் செய்கிறீர்கள். குழந்தைகளே, நீங்கள் மிகுந்த தைரியமாக நல்ல சத்தியங்களைச் செய்கிறீர்கள். அந்த வேளையில், நீங்கள் பாப்தாதாவிற்கும் தில்குஷ் தோளியை வழங்குகிறீர்கள். பாபா அதையும் விழுங்கிவிடுகிறார்! (நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறார்.) எவ்வாறாயினும், ஒரு சத்தியத்தைச் செய்வதென்றால், அதை நிறைவேற்றுவதற்கு உங்களின் முயற்சியில் இருந்து மகத்தான நன்மையை அனுபவம் செய்தல் என்று அர்த்தம். நீங்கள் நன்மையை அடையாவிட்டால், உங்களின் சத்தியம் பலம்வாய்ந்தது இல்லை. அதனால் நீங்கள் சத்தியங்களைச் செய்யலாம். ஏனென்றால், குறைந்தபட்சம் நீங்கள் பாபாவிற்கு தில்குஷ் தோளியைக் கொடுக்கிறீர்கள். எவ்வாறாயினும், அத்துடன்கூடவே, உங்களின் அன்பான முயற்சியை அக்கினியின் ரூபத்தில் ஆக்க வேண்டும். ஓர் எரிமலை போன்று ஆகுங்கள். காலத்திற்கேற்ப, உங்களின் மனதிலும், உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் இன்னமும் உள்ள கர்மக்கணக்குகள் எல்லாவற்றையும் உங்களின் அக்கினி ரூபத்தால் எரித்து விடுங்கள். இதுவே உங்களிடம் உள்ள அன்பு. பாப்தாதா இதற்கு உங்களுக்குத் தேர்ச்சி அடைவதற்கான மதிப்பெண்களை வழங்கிவிட்டார். உங்களிடம் இந்த அன்பு உள்ளது. ஆனால் உங்களின் அன்பானது இப்போது அக்கினி ரூபத்தை எடுக்க வேண்டும்.

உலகின் ஒருபுறத்தில், ஊழலும் வன்முறையும் உள்ளன. மறுபுறம், சக்திவாய்ந்த யோகம், அதாவது, எரிமலைபோன்ற தீவிரமான யோகம் அவசியம். உங்களின் இந்த எரிமலை போன்ற தீவிரமான அக்கினியானது, ஊழல் மற்றும் வன்முறையின் அக்கினியை முடித்து, ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஒத்துழைப்பைக் கொடுக்கும். ஒருபுறம், உங்களின் தீவிர அன்பு, அதாவது, உங்களின் சக்திவாய்ந்த யோகமும் நினைவும் அந்த நெருப்பை அணைக்கும். மறுபுறம், அது ஆத்மாக்களை இறைசெய்தியையும் குளிர்மையையும் அனுபவிக்கச் செய்யும். அது எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைத் தீவிரமாக்கும். ஒருபுறம், அது எல்லாவற்றையும் எரிக்கும். மறுபுறம், அது எல்லாவற்றையும் குளிர்விக்கும். அது எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய அலைகளைப் பரப்பும். குழந்தைகள் தாம் யோகம் செய்வதாகவும், பாபாவைத் தவிர வேறு யாரும் தமக்கில்லை என்றும் சொல்கிறார்கள். அது மிகவும் நல்லது. எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப, நீங்கள் இப்போது எரிமலை போன்று ஆகவேண்டும் என உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஞாபகார்த்தங்களில், சக்திகள், மகாசக்திகள் எல்லோரும் தமது கைகளில் ஆயுதங்களைத் தரித்தவாறே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் இப்போது அந்த மகாசக்திகளின் ரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் எல்லோருமே, அது பாண்டவர்களோ அல்லது சக்திகளோ, கடலில் இருந்து வெளிப்பட்டுள்ள ஞான நதிகள் ஆவீர்கள். நீங்கள் கடல் இல்லை. ஆனால் நதிகள். நீங்கள் ஞான கங்கைகள். எனவே, ஞான கங்கைகளான நீங்கள், உங்களின் ஞானத்தின் குளிர்மையால், இப்போது ஆத்மாக்களை அவர்களின் பாவங்களில் இருந்து விடுவிக்க வேண்டும். இப்போது பிராமணர்களான உங்களின் கடமை இதுவேயாகும்.

இந்த வருடம் நீங்கள் என்ன சேவை செய்ய வேண்டும் எனக் குழந்தைகளான நீங்கள் எல்லோரும் கேட்கிறீர்கள். காலத்திற்கேற்ப, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் உங்களின் ஓய்வு நிலையில் இருக்கிறீர்கள். எனவே, இந்த நிலையில் இருப்பவர்கள் செய்வதைப் போன்றவையே நீங்கள் செய்ய வேண்டிய முதல் சேவை என பாப்தாதா உங்களுக்குக் கூறுகிறார். அவர்கள் தமது நேரத்தையும் எல்லாவற்றையும் தமது குழந்தைகளிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெறுவார்கள். ஆகவே, நீங்கள் எல்லோரும் உங்களின் நேரம் மற்றும் மேன்மையான எண்ணங்கள் என்ற பொக்கிஷங்களை மற்றவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். இப்போது உங்களுக்காகக் குறைந்தளவு நேரத்தையும் எண்ணங்களையும் பயன்படுத்துங்கள். ஒரு கருவியாகி, இவற்றை மற்றவர்களுக்காகப் பயன்படுத்துவதன் மூலம், உங்களால் அந்தச் சேவையின் நடைமுறைப் பழத்தை உண்ண முடியும். உங்களின் எண்ணங்களால் சேவை செய்யுங்கள், அத்துடன் உங்களின் வார்த்தைகளாலும் சேவை செய்யுங்கள். அனைத்திற்கும் முதலில், உங்களுடன் யார் தொடர்பில் அல்லது உறவுமுறையில் வருகிறார்களோ, அந்த ஆத்மாக்கள் பிராமணர்களோ இல்லையோ, நீங்கள் ஒரு மாஸ்ரர் அருள்பவராகி, அவர்களுக்கு ஏதாவதொன்றை வழங்குங்கள். பரோபகாரியாகி, அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். அமைதியைக் கொடுங்கள். ஆனந்தத்தின் அனுபவத்தைக் கொடுங்கள். அன்பின் அனுபவத்தைக் கொடுங்கள். நீங்கள் கொடுக்க வேண்டும். கொடுப்பதென்றால், இயல்பாகவே பெறுதல் என்று அர்த்தம். உங்களுடன் தொடர்பில் வருகின்ற எவரும் உங்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்லும்படியாக சுயநலமற்றவர் ஆகுங்கள். மாஸ்ரர் அருள்பவர்களான உங்களிடம் வந்தபின், அவர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது. பிரம்மாபாபா நடக்கும்போது அல்லது செயல்களைச் செய்யும்போது, யாராவது அவரின் முன்னால் வந்தால், அந்தக் குழந்தை எதையாவது அனுபவம் செய்யாமல் பாபாவிடம் இருந்து சென்றதில்லை என்பதை நீங்கள் கண்டீர்கள். எனவே, நீங்கள் எவரையாவது சந்திக்கும்போது, அவர்களுக்கு ஏதாவது கொடுத்தீர்களா அல்லது அவர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றார்களா எனச் சோதித்துப் பாருங்கள். பொக்கிஷங்களால் நிரம்பி வழிபவர்களால் எதையாவது கொடுக்காமல் இருக்க முடியாது. எவரும் உங்களிடமிருந்து எதையும் கேட்க முடியாத அளவிற்கு இத்தகைய எல்லையற்ற, சதா அருள்பவர்கள் ஆகுங்கள். அவர்கள் உங்களிடம் கேட்டாலும், ஓர் அருள்பவர் ஒருபோதும் தன்னிடம் கேட்கும்போது மட்டுமே கொடுப்பேன் என நினைக்க மாட்டார். ஓர் எல்லையற்ற, மகாதானி, மகா அருள்பவர் என்பவர் கேட்காமலேயே கொடுப்பவர் ஆவார். இந்த வருடம் நீங்கள் செய்ய வேண்டிய முதல் சேவையானது ஒரு மகா அருள்பவர் ஆகுவதாகும். நீங்கள் அருள்பவரான தந்தையிடமிருந்து பெற்றவற்றையே கொடுக்கின்றீர்கள். இன்னொரு பிராமணர் பிச்சைக்காரர் அல்ல. ஆனால் ஓர் ஒத்துழைக்கும் ஆத்மா ஆவார். பிராமணர்கள் ஒருவருக்கொருவர் தானம் செய்வதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கிறார்கள். இதுவே முதன்மையான சேவையாகும். இத்துடன்கூடவே, வெளிநாட்டில் உள்ள குழந்தைகளிடமிருந்தும் பாப்தாதா சில நல்ல செய்திகளைக் கேட்டார். உலகெங்கும் சத்தத்தைப் பரப்புவதற்காக மைக்குகளைக் கண்டுபிடிக்கும்படி பாபா உங்களுக்குக் கூறியிருந்தார். குழந்தைகள் எல்லோரும் இதை அடைவதில் ஒன்றுசேர்ந்து உழைத்துள்ளார்கள். ஒரு திட்டத்தைச் செய்யும்போது, அதை நடைமுறைப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், பாரதத்திலும், 13 பிராந்தியங்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் இத்தகைய ஒருவரை உருவாக்க வேண்டும் என பாப்தாதா கூறியுள்ளார். நீங்கள் அவர்களை மைக்குகள் என்று அழைத்தாலென்ன அல்லது வேறு ஏதாவது பெயரால் அழைத்தாலென்ன, குறைந்தபட்சம் இதற்குக் கருவி ஆகக்கூடிய ஒரு விசேடமான சேவையாளர் இருக்க வேண்டும். பெரிய பிராந்தியங்களில் இத்தகைய கருவிகளை நீங்கள் கண்டுபிடித்தால், வெவ்வேறு பிராந்தியங்களுக்கு அன்றி, பெரிய பிராந்தியங்களில் இருந்து வருகின்ற இத்தகைய ஆத்மாக்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்துங்கள். உங்களால் இத்தகையதொரு நிகழ்ச்சியை நடத்த முடியும் என்பதல்ல. நீங்கள் இத்தகையதொரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். பாப்தாதா வெளிநாட்டுக் குழந்தைகளைத் தனது இதயபூர்வமாக வாழ்த்தினார். இப்போது நீங்கள் நடைமுறைப்படுத்தப் போகின்ற திட்டங்களை பாப்தாதாவின் முன்னால் கொண்டு வந்ததற்காக உங்களை வார்த்தைகளால் பாராட்டுகிறார். உண்மையில், இதை பாரதத்தில் செய்வது இலகுவானது என்பதை பாப்தாதா அறிவார். ஆனால், இப்போது நீங்கள் தரமான ஆத்மாக்களுக்குச் சேவை செய்து, அவர்களை நெருக்கமான ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் ஆக்க வேண்டும். ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், இப்போது நீங்கள் அவர்களை ஒன்றுகூடலில் மேலும் நெருக்கமாகக் கொண்டுவர வேண்டும்.

இத்துடன்கூடவே, பிராமண ஆத்மாக்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு, மதுவனத்திலும் ஏனைய இடங்களிலும் தீவிர அன்பான சூழலை உருவாக்குவதற்கு, பத்திகளையும் உங்களுக்கு இடையே இதயபூர்வமான உரையாடல்களைச் செய்யும் ஒன்றுகூடல்களையும் நடத்துங்கள். ஒவ்வொருவருக்கும் எரிமலை போன்ற தீவிர அக்கினியின் அனுபவம் கொடுக்கப்பட்டு, முன்னேறச் செய்யப்பட வேண்டும். இந்தச் சேவை செய்வதில் நீங்கள் மும்முரமாக ஈடுபட்டால், நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய அற்ப விடயங்கள், உங்களை மனச்சோர்வு அடையச் செய்யும் அற்ப விடயங்கள் அனைத்தும் அன்பெனும் தீவிர அக்கினியின் அதியுயர்ந்த ஸ்திதியின் முன்னால் ஒரு பொம்மை விளையாட்டைப் போல் தென்படும். அப்போது நீங்கள் இலகுவாகவும் இயல்பாகவும் பாதுகாப்பாக இருப்பீர்கள். மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகளான நீங்கள் அற்ப விடயங்களுக்காகச் சிரமப்படுவதைப் பார்க்கும்போது, பாப்தாதா மிகவும் கருணைகொள்கிறார் என பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். உங்களின் அன்பு அக்கினி குறைவடையும்போதே, நீங்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, இப்போது சிரமப்படுவதில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். கவனயீனம் ஆகாதீர்கள். ஆனால், சிரமப்படுவதில் இருந்து விடுபடுங்கள். நீங்கள் சௌகரியமாக தூங்க வேண்டும் என்பதற்காக, நீங்கள் சிரமப்படக்கூடாது என நினைக்காதீர்கள். அன்பினால், உங்களின் சிரமங்களை முடித்துவிடுங்கள். கவனயீனமாக அல்ல. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா?

இப்போது, பாப்தாதா மீண்டும் வரவேண்டியுள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என நீங்கள் எல்லோரும் கேட்கிறீர்கள். பாப்தாதா வரப் போகிறாரா இல்லையா எனக் கேட்கிறீர்கள். பாப்தாதா ஒருபோதும் இல்லை எனச் சொல்லவில்லை. அவர் எப்போதும், ஹா ஜி, ஹா ஜி என்றே சொல்கிறார். குழந்தைகளான நீங்கள் ‘பிரபுவே’ என்று அழைத்தபோது, பாபா, ‘ஜீ ஹஸ_ர்’ (இதோ வந்துவிட்டேன்) என்றே கூறுகிறார். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டீர்களா? சிரமப்படுவதற்கு, அன்பினால் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். இப்போது, இந்த வருடத்தை சிரமப்படுவதில் இருந்து விடுபட்ட வருடமாகக் கொண்டாடுங்கள். அன்புடன் செய்யுங்கள். சோம்பேறித்தனத்துடன் அல்ல! இதை உறுதியாக நினைவு செய்யுங்கள்! சோம்பேறித்தனத்துடன் அல்ல!

இது ஓகேயா? உங்களின் கேள்விகள் அனைத்தும் முடிந்துவிட்டனவா? ஏதாவது எஞ்சியுள்ளதா? (பாபா தாதி ஜான்கியைப் பார்த்துக் கேட்கிறார்). ஏதாவது இன்னமும் எஞ்சியுள்ளதா? தாதிஜி புன்னகை செய்கிறார். அந்த விளையாட்டு இப்போது முடிவடைந்துவிட்டது. அந்த சத்திரசிகிச்சை எப்படிப்பட்டது? அது நாடகத்திற்குள் ஒரு விளையாட்டே. அந்த விளையாட்டும் மிக நன்றாக இருந்ததுதானே?

(பாப்தாதா ஓர் அப்பியாசத்தைச் செய்வித்தார்.) நீங்கள் ஒரு விநாடியில் உங்களின் மனதையும் புத்தியையும் புள்ளி ரூபத்தில் ஒருமுகப்படுத்தி ஸ்திரப்படுத்தும் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். நீங்கள் நிறுத்து! என்று சொன்னதும், உங்களின் மனதும் புத்தியும் முழுமையாக நின்றுவிட வேண்டும். அத்துடன் எந்தவொரு வீணான சரீர உணர்விற்கும் அப்பால் செல்ல வேண்டும். நாள் முழுவதும் இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்துங்கள். நீங்கள் கட்டுப்படுத்துவதற்hக ஒரு கட்டளை இட்டும், அது நடப்பதற்கு இரண்டு நிமிடங்கள் அல்லது ஐந்து நிமிடங்கள் எடுப்பதாக இருக்கக்கூடாது. ஆகவே, அவ்வப்போது உங்களின் கட்டுப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து பயிற்சி செய்து, அது எப்படிச் செயல்படுகிறது எனப் பாருங்கள். ஒரு விநாடியில் உங்களின் மனதைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு ஒரு விநாடியா, ஒரு நிமிடமா அல்லது சில நிமிடங்களா எடுக்கின்றதெனத் தொடர்ந்து சோதியுங்கள். இப்போது, நீங்கள் எல்லோரும் உங்களின் அட்டவணையை மூன்று மாதங்களுக்கு மிகவும் உறுதியானது ஆக்க வேண்டும். நீங்கள் இந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முதலில், நீங்கள் உங்களுக்கே இந்தச் சான்றிதழைக் கொடுக்க வேண்டும். பின்னர், பாப்தாதா உங்களுக்கு இந்தச் சான்றிதழைக் கொடுப்பார். அச்சா.

இறைபராமரிப்பிற்கான உரிமையுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும், இறை கல்விக்கான உரிமையுள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், இறைவனால் வழங்கப்பட்ட பேறுகளால் நிறைந்திருக்கும் ஆத்மாக்களுக்கும் புள்ளி என்ற வழிமுறையைப் பயன்படுத்தும் தீவிர முயற்சியாளர் ஆத்மாக்களுக்கும் சதா சிரமப்படுவதில் இருந்து விடுபட்டு, அன்பிலே சதா திளைத்திருக்கும் குழந்தைகளுக்கும் தீவிரமான அன்புடைய விசேடமான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தூய மற்றும் சக்திவாய்ந்த எண்ணங்களின் சக்தியால் வீணான அதிர்வலைகள் அனைத்தையும் முடிக்கும் உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

எண்ணங்களால் ஓர் உலகை உருவாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. உங்களிடம் பலவீனமான அல்லது வீணான எண்ணங்கள் இருக்கும்போது, வீணான சூழலைக் கொண்டதோர் உலகம் உருவாக்கப்படுகிறது. உண்மையான சேவையாளர் என்பவர் தனது தூய, சக்திவாய்ந்த எண்ணங்களால் பழைய அதிர்வலைகள் அனைத்தையும் முடிப்பவர் ஆவார். விஞ்ஞானம் ஆயுதங்களை ஆயுதங்களால் அழிக்கிறது. அவர்கள் ஒரு விமானத்தை இன்னொரு விமானத்தால் அழிக்கிறார்கள். அதேபோல், உங்களின் தூய மற்றும் சக்திவாய்ந்த எண்ணங்களின் அதிர்வலைகள், எந்தவொரு வீணான சூழலையும் முடித்துவிடும். இப்போது இத்தகைய சேவையைச் செய்யுங்கள்.

சுலோகம்:
தடைகளின் எந்;தவொரு சூட்சுமமான, தங்க இழைகளில் இருந்தும் விடுபட்டு, முக்தி வருடத்தைக் கொண்டாடுங்கள்.

அறிவித்தல்: இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சர்வதேச உலகளாவிய தியான தினம். பிராமணக் குழந்தைகள் எல்லோரும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை தியானம் செய்வார்கள். உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, உங்களை ஒரு விசேடமான இஷ்ட தேவராகக் கருதி, உங்களின் பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யுங்கள். ஆத்மாக்களை ஒரு கணப் பார்வையால் அப்பால் எடுத்துச் செல்லும் சேவையைச் செய்யுங்கள். காட்சிகளை அருளும் ரூபம் ஆகுங்கள். அவர்களுக்கு ஒரு காட்சியை அருளி, அவர்களைச் சந்தோஷப்படுத்துங்கள்.