22.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஒரேயொரு தந்தையையே ஆவார். தந்தையைப் போன்று வேறு எவராலும் தன்னலமற்ற சேவையைச் செய்ய முடியாது.

பாடல்:
புதிய உலகை ஸ்தாபி;ப்பதற்காக தந்தை எந்த முயற்சியைச் செய்ய வேண்டும்?

பதில்:
அவர் அஜாமிலைப் போன்ற பாவாத்மாக்களை, இலக்ஷ்மி நாராயணன் போன்று பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்கின்றார். தந்தை, குழந்தைகளாகிய உங்களைத் தேவர்களாக்குவதற்கு முயற்சி செய்கின்றார். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதிதாமத்துக்குத் திரும்பிச் செல்கின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து, தகுதி வாய்ந்தவர்களாகி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.

பாடல்:
இப்பாவ பூமியிலிருந்து எங்களை ஓய்வும், சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.…

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைச் செவிமடுத்தார்கள். இது பாவ உலகம் என்றும் புதிய உலகம் புண்ணிய உலகம் என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்கு பாவம் எதுவும் இல்லை. அது இராம இராச்சியமும் இது இராவண இராச்சியமும் ஆகும். இந்த இராவண இராச்சியத்தில் அனைவரும் தூய்மையற்றும், சந்தோஷமற்றும் உள்ளார்கள். இதனாலேயே அவர்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! வாருங்கள். வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! அனைத்து சமயத்தவர்களும் கூவியழைக்கின்றார்கள். ஓ தந்தையாகிய கடவுளே! வந்து எங்களை விடுவியுங்கள். எங்களுக்கு வழிகாட்டுங்கள். அதாவது தந்தை வரும் போது அவர் உலகிலுள்ள சகல சமயங்களின் ஆத்மாக்கள் அனைவரையும் தன்னுடன் அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்பது அதன் அர்த்தமாகும். இந்நேரத்தில் அனைவரும் இராவண இராச்சியத்தில் உள்ளார்கள். அவர் அனைத்து சமயத்தவர்களையும் மீண்டும் அமைதிதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அனைவரும் அழிக்கப்பட உள்ளனர். இங்கு தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை சந்தோஷதாமத்துக்குத் தகுதிவாய்ந்தவராக்குகின்றார். அவர் அனைவருக்கும் நன்மையளிக்கின்றார். இதனாலேயே அவர் சற்கதியை அருள்பவர் என்றும், அனைவருக்கும் நன்மைபயப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: இப்பொழுது நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். சகல சமயத்தைச் சேர்;ந்தவர்களும், நிர்வாணா உலகமான (சப்தத்திற்கு அப்பாற்பட்டது) மௌன தாமத்திற்குச் செல்ல வேண்டும். அங்கேயே ஆத்மாக்கள் அனைவரும் மௌனமாக உள்ளார்கள். படைப்பவராகிய எல்லையற்ற தந்தை வந்து அனைவருக்கும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் கொடுக்கிறார். எனவே ஒரே ஒரு தந்தையான கடவுளுக்கே புகழ் பாடப்பட வேண்டும். அனைவருக்கும் சேவை செய்ய வரும் அந்த ஒருவரையே நினைவு செய்ய வேண்டும். தந்தையே விளங்கப்படுத்துகின்றார்: நானே, தொலை தூரதாமத்தில் உள்ள பரந்தாம வாசியாவேன். ஆரம்பகாலத்தில் இருந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இப்போதில்லை. இதனாலேயே மக்கள் என்னைக் கூவி அழைக்கின்றார்கள். நான் வந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றேன். இந்து சமயம் என ஒன்று இல்லை. உண்மையில் இதுவே தேவ தர்மம் ஆகும். ஆனால் அவர்கள் தூய்மையற்றிருப்பதால், தங்களைத் தேவர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக இந்துக்கள் என்று அழைக்கின்றார்கள். இந்து தர்மத்தை எவருமே ஸ்தாபிக்கவில்லை. கீதையே அனைத்து சமய நூல்களினதும் இரத்தினமாகும். அது கடவுளினால் பேசப்பட்டது. ஒரே ஒருவரே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். அவரே தந்தையாவார். ஸ்ரீ கிருஷ்ணரையும் இலக்ஷ்மி நாராயணனையும், இறை தந்தை என்றோ, தூய்மையாக்குபவர் என்றோ அழைக்க முடியாது. அவர்களோ அரசனும் அரசியுமாவார்கள். அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? தந்தையாவார். தந்தை அனைத்துக்கும் முதலில் புதிய உலகை உருவாக்குகின்றார், இவரே அதன் அதிபதி ஆகுகின்றார். அவர் எவ்விதம் அவ்வாறு ஆகினார்? இவை மனிதர்கள் எவருக்கும் தெரியாது. செல்வம் மிக்கவர்கள் பெரிய ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டுவார்கள். நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும்: அவர்கள் எவ்வாறு உலக இராச்சியத்தைப் பெற்றார்கள்? அவர்கள் எவ்வாறு அதிபதிகள் ஆகினார்கள்? எவராலும் அதை உங்களுக்குக் கூற முடியாது. அத்தகைய பலனைப் பெறுவதற்கு அவர்கள் என்ன செயல்களைப் புரிந்தார்கள். தந்தை இப்போது விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் உங்கள் சொந்த தர்மத்தையே மறந்து விட்டீர்கள். ஆதி சனாதன தேவ தேவிதா தர்மத்தை அறியாததால் அனைவரும் வேறு சமயங்களுக்கு மாற்றப்பட்டு விட்டனர். அவர்கள் இப்போது மீண்டும் தங்கள் சொந்தச் சமயங்களுக்குத் திரும்புகிறார்கள். ஆதி சனாதன தேவ தேவிதா உலக தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த தர்மத்திற்கு மீண்டும் திரும்பி வருவார்கள். கிறிஸ்தவ சமயத்திற்குரியவர்கள் மீண்டும் ஒருமுறை கிறீஸ்தவ சமயத்துக்குகே திரும்பிச் செல்வார்கள். ஆதிசனாதன தேவ தேவதா தர்மத்தின் விதை நாட்டப்பட்டுள்ளது. எந்தச் சமயத்துக்குரியவர்களோ அவர்கள் அச்சமயத்துக்கே திரும்பிச் செல்ல வேண்டும். இது மூன்று கிளைகளைக் கொண்ட விருட்சமாகும். பின்னர் அதிலிருந்து விரிவாக்கம் இடம் பெறும். இந்த ஞானத்தை உங்களுக்கு வேறு எவராலும் கொடுக்க முடியாது. தந்தை இப்போது கூறுகின்றார்: நீங்கள் உங்கள் சொந்த தர்மத்துக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும். சிலர் கூறுகின்றார்கள்: நான் சந்நியாச தர்மத்துக்குச் செல்லப் போகின்றேன். நான் இராமகிருஷ்ண பரமகம்சரைப் பின்பற்றுபவர். அவர்களது துறவறப்பாதையாகும். ஆனால் நீங்களோ இல்லறப் பாதைக்குரியவர்கள். இல்லறப்பாதைக்குரியவர்கள் எவ்வாறு துறவறப்பாதையைப் பின்பற்றுபவர்கள் ஆகுவார்கள்.? முதலில் இல்லறப் பாதையில் நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் இராவணனினால் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இவ்விடயங்களைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இல்லற ஆச்சிரமத்துக்குரியவர்கள். நீங்கள் பக்தி செய்யவேண்டியிருந்தது. தந்தை வந்து உங்கள் பக்தியின் பலனாக சற்கதியை கொடுக்கின்றார். இவ்வாறு கூறப்படுகின்றது: தர்மமே சக்தியாகும். தந்தையே தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்களே முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து அதிகளவு சக்தியைப் பெறுகிறீர்கள். ஒரே ஒரு சர்வசக்திவான் தந்தையே வந்து அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். வேறு எவராலும் ஜீவன்முக்தியைக் கொடுக்கவோ பெறவோ முடியாது. விரிவாக்கம் தொடர்ந்தும் இடம் பெறும். எவராலும் வீடு திரும்பிச் செல்ல முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் சகல சமயத்தவர்களுக்கும் சேவகனாவேன். நான் வந்து அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன். சத்தியயுகமே சற்;கதி எனக் குறிப்பிடப்படுகிறது. முக்தி அமைதிதாமத்தில் உள்ளது. எனவே அனைத்திலும் மகத்தானது எது? தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே நீங்கள் அனைவரும் சகோதரர்களே நீங்கள் அனைவரும் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நான் வந்து அனைவரையும் தமது சொந்தப் பிரிவுக்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றேன். ஆத்மாக்கள் தகுதிவாய்ந்தவர்களாகாவிட்டால் அவர்கள் தண்டனையைப் பெறவேண்டும். கர்மக்கணக்கு தீர்க்கப்படவேண்டும். பின்னரே அவர்களால் வீடு திரும்ப முடியும். அதுவே அமைதிதாமம், மற்றையது சந்தோஷதாமம் ஆகும். தந்தை கூறுகிறார்: நான் வந்து புதிய உலகை ஸ்தாபிக்கிறேன். அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நான் வந்து அஜாமீல்லைப் போன்று முற்றிலும் பாவிகளான ஆத்மாக்களை தேவர்களாக்குகின்றேன். நீங்கள் பாவப்பாதைக்குச் சென்ற காலம் முதல் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கியுள்ளீர்கள். இந்த 84 பிறவிகளின் ஏணி கீழிறங்குவதற்காகவேயாகும். சதோபிராதானிலிருந்து நீங்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளினூடாகச் செல்கிறீர்ககள். இப்பொழுது இது சங்கமயுகமாகும். தந்தை கூறுகின்றார்: நான் ஒரே ஒருமுறை மாத்திரம் வருகின்றேன். நான் ஆபிரஹாம், அல்லது புத்தரின் சரீரத்தில் பிரவேசிப்பதில்லை. நான் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே வருகிறேன். இப்பொழுது கூறப்பட்டுள்ளது: தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் என்னை மாத்திரம் பின்பற்ற வேண்டும். சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் யோக அக்கினியில் எரிந்துவிடும். இதுவே யோக அக்கினி என்பதாகும். நீங்களே உண்மையான பிராமணர்கள். காமச்சிதையிலிருந்;;;;;;து வெளியேறி நீங்கள் ஞானச்சிதையில் அமர்ந்திருக்கின்றீர்கள். இவை அனைத்தையும் ஒரே ஒரு தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். கிறீஸ்து, புத்தர் போன்ற அனைவரும் ஒருவரையே நினைவு செய்தார்கள். எனினும், அவரை எவருமே மிகச்சரியாக அறிந்துகொள்ளவில்லை. நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்கள் ஆகிவிட்டீர்கள். தந்;;;;தையிடமிருந்து இப்பொழுது நீங்கள் படைப்பவரையும், படைப்பையும் அறிந்து கொண்டீர்கள். ரிஷிகள், முனிவர்கள் ஆகிய அனைவரும் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) எனக்கூறுவது வழக்கம். சுவர்க்கம் என்பது சத்தியபூமியாகும். அங்கு துன்பம் என்பதே கிடையாது. இங்கு அதிகளவு துன்பம் இருப்பதுடன் ஆயுட்காலம் மிகக்குறுகியதாகவும் உள்ளது. தேவர்களின் ஆயுட்காலம் மிகவும் நீண்டதாக உள்ளது. அவர்கள் தூய யோகிகள். இங்கே தூய்மையற்ற போகிகள் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுபவர்கள்)உள்ளார்கள். நீங்கள் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கி வருகையில் உங்கள் ஆயுட்காலம் மேலும் குறுகியதாகிவிடுகிறது. அகால மரணங்களும் தொடர்ந்தும் இடம் பெறும். தந்தை உங்களை 21 பிறவிகளுக்கு ஒருபோதும் நோயுறாதவாறு ஆக்குகின்றார்.எனவே நீங்கள் அத்தகைய தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் மிக விவேகமானவர்களாக வேண்டும். நீங்கள் எத்துன்பத்தையும் அங்கு அனுபவம் செய்யாதவாறான சிறந்த ஆஸ்தியை பாபா உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் கூக்குரலிட்டு அழுவது அனைத்தும் முடிவடைந்துவிடும். நீங்கள் அனைவரும் நடிகர்களே. ஆத்மாக்கள் ஒரு சரீரத்தைவிட்டு நீங்கி வேறொன்றை எடுக்கின்றார். இதுவும் நாடகமே. பாபா உங்களுக்கு செயல், நடுநிலைச் செயல், பாவச்செயல் என்பவற்றின் தத்துவத்தை விளங்கப்;படுத்துகின்றார். “பிரம்மாவின் பகலும் இரவும்” நினைவுகூரப்படுகிறது. பிரம்மாவின் பகலும் இரவும் பிராமணர்களினது இரவும் பகலும் ஆகும். இப்பொழுது உங்களுடைய பகலும் வரவுள்ளது.அவர்கள் மகாசிவராத்திரியைப் பற்றிப் பேசுகிறார்கள். இப்பொழுது பக்தியின் இரவு முடிவடைந்து ஞானம் உதயமாகின்றது. இப்பொழுது இது சங்கமயுகமாகும். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் காரிருளில் அலைந்து திரிந்து, உங்கள் நெற்றியையும் தேய்த்து செல்வம் முழுவதையும் செலவழித்தும்விட்டீர்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நான் உங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். நீங்கள் சந்தோஷதாமவாசிகளாக இருந்தவர்கள். 84 பிறவிகளையும் எடுத்து வருகையில் நீங்கள் துன்பதாமத்திற்குள் வந்து இப்பொழுது மீண்டும் கூவியழைக்கிறீர்கள்: பாபா இப்பழைய உலகிற்கு வாருங்கள். இது உங்கள் உலகமல்ல. இப்பொழுது நீங்கள் யோக சக்தியினால் உங்கள் சொந்த உலகை ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இரட்டை அகிம்சாவாதிகள் ஆகவேண்டும். நீங்கள் காமவாளைப் பயன்படுத்தவோ அல்லது சண்டை சச்சரவுகளில் ஈடுபடவோ கூடாது. தந்தை கூறுகிறார்: நான் 5000 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்றேன். இச்சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டது, நூறாயிரம் வருடங்கள் அல்ல. இது நூறாயிரம் வருடங்களாக இருப்பின், இங்குள்ள சனத்தொகை மேலும் மிக அதிகமாகவே இருக்கவேண்டும். அவர்கள் தொடர்ந்தும் பொய்களையே கூறுகிறார்கள். இதனாலேயே தந்தை கூறுகிறார்:நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வருகிறேன். நாடகத்தில் எனக்கும் ஒரு பாகம் உண்டு. அவ்வாறு எனது பாகத்தில் இல்லையாயின் என்னால் எதுவும் செய்ய முடியாது. நாடகத்தின் பந்தனத்தில் நானும் கட்டுண்டுள்ளேன். நான் எனது மிகச்சரியான நேரத்தில் வருகிறேன். மன்மனாபவ! எனினும் எவருக்கும் அதன் அர்த்தம் தெரியாது. தந்தை கூறுகிறார்: சரீரசமயங்கள் அனைத்தையும் துறந்து என்னை மாத்திரம் நினைவு செய்தால் நீங்கள் அனைவரும் மீண்டும் தூய்மை ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள்.. இது உலக ஆன்மீகப் பல்கலைக்கழகமாகும். இதைப் போன்று வேறெந்தவொரு பல்கலைக்கழகமும் இல்லை. தந்தையாகிய கடவுள் இங்கு வந்து உலகம் முழுவதையும் மாற்றுகின்றார். அவர் நரகத்திலிருந்து சுவர்க்கமாக மாற்றுகின்றார். அதனைப் பின்னர் நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்:என்னை நினைவு செய்தால் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக மாறுவீர்கள். இது பாபா பிரவேசிக்கும் அதிர்ஷ்ட இரதமாகும். சிவனின் பிறப்பைப் பற்றி எவருக்கும் தெரியாது. அவர்கள் கடவுள் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் எனக்கூறுகிறார்கள். ஓ!பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கின்ற எதுவும் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள்: அது வானம். ஆகவே அதுவும் ஒரு பெயரே. அது வெற்றிடமாக இருந்தபோதிலும் அதுவே அதன் பெயராகும். நன்மைபயக்குபவர் என்பதே தந்தையின் பெயராகும். பின்னர் அவருக்கு பக்தி மார்க்கத்தில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டன. அவரை பபுல்நாத் (முட்களின் பிரபு) என்றும் அழைக்கிறார்கள். அவர் வந்து காமவாளிலிருந்து உங்களை விடுதலை செய்து தூய்மையாக்குகின்றார். தனிவழிப்பாதையில் உள்ளவர்கள் மாத்திரமே பிரம்ம தத்துவத்தைக் கடவுள் என நம்பி அதனை மாத்திரமே நினைவு செய்கிறார்கள். பிரம்ம தத்துவத்துடனோ அல்லது ஒளித்தத்துவத்துடனோ யோகத்தைக் கொண்டிருப்பவர்கள் தங்களைத் தாங்களே யோகிகள் என அழைக்கின்றனர். எனினும் அது பிரம்மானந்தம் என அழைக்கப்படுகின்ற ஒரு வசிப்பிடமாகும். அவர்கள் பிரம்மத்தை கடவுள் என்று கருதுகிறார்கள். அவர்கள் அதனுள் இரண்டறக் கலந்துவிடலாம் என நம்புகிறார்கள். அவர்கள் ஆத்மாவை அழியக்கூடியதாக்குகின்றார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே வந்து அனைவருக்கும் ஜீவன்முக்தியை அளிக்கின்றேன். இதனாலேயே சிவபாபாவின் பிறப்பு மாத்திரமே வைரத்தின் பெறுமதியுடையது என்றும் ஏனைய அனைவரினது பிறப்பும் சிப்பியின் பெறுமதியுடையது என்றும் கூறுகிறார்கள். சிவபாபா மாத்திரமே அனைவருக்கும் ஜீவன்முக்தியை வழங்குபவர், எனவே அவர் வைரம் போன்றவர். அவரே உங்களை சத்தியயுகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். தந்தையே வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பித்து அதன்மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். இந்த ஞானம் பின்னர் மறைந்துவிடும். படைப்பவரையும் படைப்பையும் பற்றிய ஞானத்தை இலக்ஷ்மி நாராயணன் கொண்டிருப்பதில்லை. குழந்தைகள் பாடலைச் செவிமடுத்தார்கள். அது கூறுகின்றது: எங்களை அமைதியும், சௌகரியமும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அது அமைதிதாமம் ஆகும், பின்னர் சந்தோஷதாமமும் உள்ளது. அங்கு அகால மரணம் இல்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களை சந்தோஷமும் சௌகரியமும் உள்ள உலகிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு
இப்பொழுது உங்கள் சூரிய, சந்திர வம்சங்கள் இரண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் அறிந்து கொள்ளும் அளவிற்கு வேறு எவரும் அறிந்து கொள்ளவும் முடியாது. நீங்கள் தூய்மையாகும் அளவிற்கு வேறு எவரும் தூய்மை ஆகுவதுமில்லை. தந்தை வந்து விட்டார் என அவர்கள் கேள்விப்படும் போது, அவர்கள் அவரை நினைவு செய்ய ஆரம்பிக்கிறார்கள். இவை அனைத்தையும் நீங்கள் மேலும் முன்னேறுகையில் காண்பீர்கள். நூறாயிரம் மில்லியன் கணக்கானோர் இதனைத் தொடர்ந்தும் புரிந்து கொள்வார்கள். அத்தகைய சூழ்நிலை இருக்கும். யுத்தத்தின் இறுதியில் அனைவரும் நம்பிக்கையற்றவராகி விடுவார்கள். அனைவரும் உணரத்தொடங்குவார்கள்;. உங்கள் ஒலியும் பரவும். சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஆனால் அனைவரினது மரணமும் தயாராகிவிடும். எனினும் மூச்சுத்திணறுவதற்குக் கூட நேரமில்லாத காலமாக இருக்கும். மேலும் முன்னேறுகையில் இங்குள்ள பலர் அனைத்தையும் பெருமளவில் புரிந்து கொள்வார்கள். நீங்கள் அனைவரும் (இப்போது இங்குள்ளவர்கள்) அந்நேரத்தில் இங்கிருப்பீர்கள் என்றில்லை. சிலர் மரணித்தும் இருப்பார்கள். முன்னைய சக்கரத்தில் (இந்நேரத்தில்) இங்கே இருந்தவர்களே, அப்போது இங்கிருப்பார்கள். அந்த நேரத்தில், நீங்கள் அனைவரும் ஒரே ஒரு தந்தையின் நினைவில் இருப்பீர்கள். கூச்சல்களும் குறைந்து விடும். அப்போது நீங்கள் தொடர்ந்தும் உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவு செய்வீர்கள். இவை அனைத்தையும் நீங்கள் பற்றற்ற பார்வையாளராகப் பார்ப்பீர்கள். தொடர்ந்தும் பல வேதனை கொடுக்கும் அனர்த்தங்களும் ஏற்படும். அனைவருக்கும் விநாசம் இப்பொழுது இடம் பெறப் போகின்றதென்றும் உலகம் மாறப்போகின்றதென்றும் தெரிய வரும். குண்டுகள் வீசப்படும் போதே விநாசம் ஏற்படும் எனப் பகுத்தறிவு கூறுகிறது.. அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் கூறுகிறார்கள்: நீங்கள் குண்டுகளை வீசமாட்டீர்கள் என வாக்குறுதி அளியுங்கள். எனினும் அவையாவும் விநாசத்திற்காகவே கண்டு பிடிக்கப்பட்டவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமிக்கவர்களாக இருக்க வேண்டும். புதிய உலகம் உருவாக்கப்படுகின்றதென உங்களுக்குத் தெரியும். தந்தையே புதிய உலகை ஸ்தாபனை செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். அங்கு துன்பம் என்ற பேச்சே இருக்காது. அதுவே சுவர்க்கமாகும். நீங்கள் நம்பிக்கையைக் கொண்டிருப்பது போன்று, மேலும் நீங்கள் முன்னேறுகையில், வேறுபலரும் நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் ஓர் அனுபவத்தைப் பெற வேண்டியவர்கள் மேலும் முன்னேறுகையில் பல அனுபவங்களைப் பெறுவார்கள். இறுதியில் நீங்கள் நினைவு யாத்திரையில் அதிகளவு நிலைத்திருப்பீர்கள். இப்பொழுது இன்னமும் அதிகளவு நேரம் எஞ்சியிருக்கிறது. நீங்கள் முழு முயற்சி செய்யாவிட்டால் உங்கள் அந்தஸ்து குறைவடைந்து விடும். முயற்சி செய்வதனால் நீங்கள் நல்லதொரு அந்தஸ்தைப் பெறுவீர்கள். அந்நேரத்தில் உங்கள் ஸ்திதியும் சிறந்ததாக இருக்கும். நீங்கள் காட்சிகளையும் காண்பீர்கள். ஒவ்வொரு சக்கரத்திலும் இடம்பெற்றது போன்றே மீண்டும் விநாசம் இடம் பெறும், நம்பிக்கையையும் சக்கரத்தின் ஞானத்தையும் கொண்டிருப்பவர்கள் சந்தோஷத்துடன் இருப்பார்கள். நல்லது. ஆன்மீகக் குழந்தைகளுக்கு இரவு வணக்கம்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இரட்டை அகிம்சாவாதிகளாகி, யோக சக்தியினால் இந்த நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுங்கள். தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகுவதற்கான முயற்சியைச் செய்யுங்கள்.

2. ஒரேயொரு தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள். ஓர் உண்மையான பிராமணனாகி, யோக அக்கினியில் உங்கள் பாவங்களை எரித்து விடுங்கள். காமச் சிதையில் இருந்து அனைவரையும் அகற்றி, அவர்களை ஞானச் சிதையில் அமரச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
தன்னலமற்ற ஸ்திதியினாலும், பாவகரமான எண்ணங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டிருப்பதன் மூலமும் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் செய்கின்ற சேவையில் வெற்றி ஈட்டுவதற்கு, தன்னலமற்ற ஸ்திதியும் பாவகரமான எண்ணங்களிலிருந்து விடுபட்டிருப்பதுமே அடிப்படையாகும். இந்த ஸ்திதியை கொண்டிருப்பவர்கள் சேவை செய்யும் போது, திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள், அத்துடன் பிறரும் அவர்களையிட்டு திருப்தியாக இருக்கிறார்கள். சேவையின் ஒன்றுகூடலில், பல்வேறான சூழ்நிலைகள் உருவாகின்றன, பல்வேறு அபிப்பிராயங்களும் இருக்கும், ஆனால், இந்த வேற்றுமைகளினால் நீங்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை. ~~யார் சொல்வதை கேட்பது, யார் சொல்வதை கேட்காமல் விடுவது?|| என நினைக்காதீர்கள். தன்னலமற்றவராக இருந்து ஏனைய எண்ணங்களிலிருந்து விடுபட்டிருந்தவாறு ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது, வேறு எவரும் வீணான எண்ணங்களை கொண்டிருக்க மாட்டார்கள், அத்துடன் வெற்றி சொரூபம்; ஆகுவீர்கள்.

சுலோகம்:
இப்பொழுது, சக்காஷ் கொடுப்பதன் மூலம், புத்தி;களில் மாற்றத்தை ஏற்படுத்தும் சேவையை செய்ய ஆரம்பியுங்கள்.