25.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இச்சங்கம யுகமே கீதையின் அத்தியாயத்திற்கான காலமாகும். இந்த யுகத்திலே நீங்கள் முயற்சி செய்து, அதிமேன்மையான மனிதர்களாக, அதாவது, தேவர்களாக ஆக வேண்டும்.

பாடல்:
உங்களுடைய படகு அக்கரையை அடைவதற்கு, எந்தவொரு விடயத்தில் நீங்கள் எப்பொழுதும் கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
எப்பொழுதும் இறை சகவாசத்தில் நிலைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இதனூடாகவே உங்களுடைய படகு அக்கரைக்குச் செல்ல முடியும். நீங்கள் பிழையான சகவாசத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டு, சந்தேகங்களை வளர்த்துக் கொண்டால், உங்கள் படகு நச்சுக் கடலில் மூழ்கி விடும். தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்களையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் சற்றேனும் சந்தேகம் கொண்டிருக்கக்கூடாது. தந்தை குழந்தைகளான உங்களைத் தன்னைப் போல, ஞானம் நிறைந்தவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆக்குவதற்கே வந்துள்ளார். நீங்கள் தந்தையின் சகவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகின்றார். தந்தை 5000 வருடங்களுக்கு முன்னர் உங்களுக்கு விளங்கப்படுத்திய, அதே இராஜயோகத்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனை அறிவீர்கள். ஆனால், உலகிற்கு அது தெரியாது, எனவே நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும்: கீதையின் கடவுள் எப்பொழுது வந்தார்? ‘நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை அரசருக்கெல்லாம் அரசராக ஆக்குகின்றேன்’ என்று கடவுள் கூறுகின்றார். நீங்கள் மக்களிடம் வினவ வேண்டும்: அந்தக் கீதையின் அத்தியாயம் எப்பொழுது இடம்பெற்றது? இது எவருக்கும் தெரியாது. இப்பொழுது நீங்கள் இதனை நடைமுறையில் செவிமடுக்கின்றீர்கள். கீதையின் அத்தியாயம் கலியுக இறுதிக்கும், சத்திய யுக ஆரம்பத்திற்கும் இடையில் இருக்க வேண்டும். அவர் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார், எனவே அவர் நிச்சயமாகச் சங்கம யுகத்தில் வருவார். இதுவே நிச்சயமாக அதிமங்களகரமான சங்கம யுகம் ஆகும். மக்கள் லீப் மாதத்தை நினைவுசெய்தாலும், அந்த அப்பாவிகளுக்கு இது தெரியாது. தந்தை உங்களை அதியுயுர்ந்த மனிதர்களாக்குவதற்கு, அதாவது, மனிதர்களை மேன்மையான தேவர்கள் ஆக்குவதற்கு, வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மனிதர்கள் அனைவரிலும் இலக்ஷ்மியும் நாராயணனுமே அதிமேன்மையான தேவர்கள். இச்சங்கம யுகத்தில் அவர் மனிதர்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். நிச்சயமாகத் தேவர்கள் சத்திய யுகத்தில் இருக்கின்றார்கள். ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கின்றார்கள். நீங்கள் சங்கம யுகத்துப் பிராமணர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதை மிகவும் உறுதியாக நினைவுசெய்யுங்கள். பொதுவாக, மக்களுக்குத் தமது சொந்தக் குலத்தை மறக்க முடியாது, ஆனால் மாயை இதனையும் உங்களை மறக்கச் செய்கின்றாள். நாங்கள் பிராமணக் குலத்திற்கு உரியவர்கள், பின்னர் தேவ குலத்திற்கு உரியவர்கள் ஆவோம். நீங்கள் இதை நினைவுசெய்தால், மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். கடவுள் (பாபா) இப்பொழுது மீண்டும் ஒருமுறை கீதா ஞானத்தைப் பேசுவதுடன், பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிப்பதையும் நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். நாங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றோம். தந்தை கூறியுள்ளார்: காமமே கொடிய எதிரியாகும். அதை வெற்றிகொள்வதால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். மக்கள் தூய்மையையிட்டு அதிகளவு விவாதம் செய்கின்றார்கள். மனிதர்களுக்கு விகாரம் ஒரு பொக்கிஷத்தைப் போன்றது. அந்த ஆஸ்தியை அவர்கள் தமது லௌகீகத் தந்தையிடமிருந்து பெற்றுள்ளார்கள். நீங்கள் ஒரு குழந்தை ஆகும்பொழுது, முதலில், அந்த ஆஸ்தியை உங்களுடைய தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். அவர்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களைப் பாழாக்குகின்றார்கள், ஆனால் எல்லையற்ற தந்தையோ கூறுகின்றார்: காமம் கொடிய எதிரி. ஆகவே, காமத்தை வெல்வதால், நீங்கள் நிச்சயமாக உலகையே வென்றவர்கள் ஆகுவீர்கள். தந்தை நிச்சயமாகச் சங்கம யுகத்தில் வந்திருப்பார். மகாபாரத யுத்தமும் இடம்பெறுகின்றது. நாங்களும் நிச்சயமாக இங்கே இருக்கின்றோம். அனைவரும் உடனடியாகவே காமத்தை வெல்கின்றார்கள் என்றில்லை; அனைத்துக்கும் காலம் எடுக்கின்றது. குழந்தைகள் எழுதுகின்ற பிரதான விடயம்: பாபா, நான் நச்சாற்றில் வீழ்ந்து விட்டேன். ஆகவே, நிச்சயமாகக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது, தந்தையின் கட்டளை: காமத்தை வெற்றி கொண்டால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகிய பின்னர் விகாரத்தில் ஈடுபடுகின்றீர்கள் என்பதல்ல. இலக்ஷ்மியும் நாராயணனுமே உலகை வென்றவர்கள். அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அனைவரும் தேவர்களை விகாரமற்றவர்கள் என அழைக்கின்றார்கள், நீங்கள் அதை இராம இராச்சியம் என்று அழைக்கின்றீர்கள். அது விகாரமற்ற உலகம், இதுவோ விகாரம் நிறைந்த உலகம், அதாவது, தூய்மையற்ற இல்லற ஆச்சிரமமாகும். நீங்கள் தூய இல்லற ஆச்சிரமத்திற்கு உரியவர்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். 84 பிறவிகளை எடுக்கையில், நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். 84 பிறவிகளின் கதை உள்ளது. நிச்சயமாகப் புதிய உலகம் விகாரமற்றதாக இருக்க வேண்டும். தூய்மைக் கடலாகிய கடவுள், ஸ்தாபனையை மேற்கொள்கின்றார், பின்னர் நிச்சயமாக, இராவண இராச்சியமும் வரவேண்டும். இராம இராச்சியம், இராவண இராச்சியம் என்பனவே பெயர்களாகும். இராவண இராச்சியம் என்றால் அசுர இராச்சியம் என்று அர்த்தமாகும். நீங்கள் இப்பொழுது அசுர இராச்சியத்தில் இருக்கின்றீPர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே அந்தத் தெய்வீக இராச்சியத்தின் அடையாளங்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் உலாச் செல்கின்றீர்கள். வைகறைப் பொழுது அதிகாலை என்று கூறப்படுகின்றது. அந்த நேரத்தில், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதால், நீங்கள் சற்று பின்னர் உலாச் (ஊர்தியில்) செல்கின்றீர்கள். காமமே கொடிய எதிரி என்பதை மக்கள் வந்து புரிந்துகொள்கின்ற வகையில் நிலையங்கள் இருக்கின்றபொழுது, கண்காட்சிகள் சிறப்பானவையாக இருக்கும். அதனை வெல்வதால், அவர்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் நிச்சயமாக இலக்ஷ்மி நாராயணனின் ‘திரான்ஸ்லைற்’ படங்களை வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் அதை மறக்கக்கூடாது. இந்தப் படத்துடன், ஏணியின் படத்தையும் வைத்திருங்கள். அவர்கள் இறைவிகளின் இரதங்களைக் (ஊர்திகள்) கொண்டிருப்பது போன்றே, நீங்கள் இந்தப் படங்களுடன் இரண்டு அல்லது மூன்று ஊர்திகளை எடுத்துச் சென்று அவற்றை அலங்கரிப்பதும் சிறந்ததாகும். நாளுக்கு நாள், படங்களின் வகைகள் அதிகரிக்கும். உங்களுடைய ஞானம் தொடர்ந்து வளரும். குழந்தைகளான உங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரி;க்கின்றது. செல்வந்தர்கள், ஏழைகள் அனைவருமே அதில் அடங்குகின்றார்கள். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் தொடர்ந்தும் நிறைகின்றது. அவருடைய பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புபவர்கள் அதற்காக, பலமடங்கு பிரதிபலனைப் பெறுகின்றார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்களே பல்கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். அதுவும் 21 பிறவிகளுக்கு ஆகும். பாபாவே கூறுகின்றார்: நீங்கள் 21 தலைமுறைகளுக்கு உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நானே நேரடியாக என்னுடைய உள்ளங்கையில் சுவர்க்கத்தைக் கொண்டு வந்து தருகின்றேன். உதாரணமாக, ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அவர் தனது தந்தையின் ஆஸ்தியைத் தனது உள்ளங்கையில் கொண்டிருக்கின்றார். அவருடைய தந்தை கூறுவார்: இந்த வீடும், அனைத்தும் உங்களுடையதே. எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார்: நீங்கள் எனக்குரியவர்கள்; ஆகும்பொழுது, மரணத்தை வென்றவர்கள் ஆகுவதால், 21 பிறவிகளுக்குச் சுவர்க்க இராச்சியம் உங்களுக்குரியதாகுகின்றது. இதனாலேயே தந்தை மகாமரணம் என அழைக்கப்படுகின்றார். மகாமரணம் எனப்படுபவர் கொலை செய்யும் ஒருவரல்ல. அவர் புகழப்படுகின்றார். கடவுள் எம தூதுவனை அனுப்பி, அவரை (மரணித்தவரை) எடுத்தார் என மக்கள் நினைக்கின்றார்கள். அது அவ்வாறல்ல. அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. தந்தை கூறுகின்றார்: நான் மரணத்திற்கெல்லாம் மரணம் ஆவேன். மலைகளில் வசிக்கின்ற மக்கள் மகாமரணத்தில் பெருமளவு நம்பிக்கை கொண்டுள்ளார்கள். மகாகாலனுக்கும் (மகாமரணம்) ஆலயம் உள்ளது. அவர்கள் அவ்வாறு கொடிகளைப் பறக்க விடுகின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது சரி என்பதை நீங்களும் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தையை நினைவுசெய்வதால், உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். ஆகவே, நீங்கள் இதனைப் பிரசுரிக்க வேண்டும். பல கும்பமேளாக்கள் போன்றவை உள்ளன. அவர்கள் கங்கையில் குளிப்பதை மிகவும் முக்கியமானதாகக் காட்டியுள்ளார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் 5000 வருடங்களுக்குப் பின்னர் இந்த ஞானாமிர்தத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். உண்மையில், அது அமிர்தம் என அழைக்கப்படுவதில்லை; இது ஒரு கல்வி. அப்பெயர்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. ‘அமிர்தம்’ என்ற பெயரைக் கேட்டு, மக்கள் படங்களில் நீரைக் காண்பித்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். நான் உங்களுக்குக் கற்பிக்கின்ற, இக்கல்வியினூடாக மாத்திரமே நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள், கடவுள் அது போன்று ஓர் அலங்கரிக்கப்பட்ட ரூபத்தைக் கொண்டிருக்க மாட்டார். தந்தை இவரில் பிரவேசித்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஆத்மாக்களுக்குக் கற்பித்து, அவர்களைத் தன்னைப் போன்று ஆக்குகின்றார். அவர் இலக்ஷ்மி நாராயணன் அல்ல அவர் உங்களை அவர்களைப் போன்று ஆக்குவார். ஆத்மாக்களாகிய நீங்கள் கற்கின்றீர்கள், அவர் உங்களைத் தன்னைப் போன்று ஞானம்நிறைந்தவர்களாக ஆக்குகின்றார். அவர் உங்களை இறைவர்களும், இறைவிகளுமாக ஆக்குகின்றார் என்பதல்ல. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தைக் காண்பித்துள்ளார்கள், ஆனால் அவரால் எவ்வாறு கற்பிக்க முடியும்? சத்திய யுகத்தில் தூய்மையற்றவர்கள் எவரும் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணர் சத்திய யுகத்தில் இருக்கின்றார். பின்னர் நீங்கள் அந்த ஸ்ரீ கிருஷ்ணரை மீண்டும் பார்க்க மாட்டீர்கள். இந்த நாடகத்தில், மறுபிறவியிலுள்ள அனைவரின் ரூபங்களும் தனித்துவமானவை. நாடகம் ஓர் அற்புதமாகும். எது ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதோ…. தந்தையும் கூறுகின்றார்: ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் தொடர்ந்தும் அதே ஆடைகளில் அதே முகச்சாயல்களுடன், அதேபோன்று கற்பீர்கள். அது மீண்டும் மீண்டும் இவ்வாறாகவே இடம்பெறுகின்றது. ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு சரீரத்தை நீக்கி, முன்னைய கல்பத்தில் எடுத்த அதே சரீரத்தையே எடுக்கின்றார். நாடகத்தில் எந்த வித்தியாசமும் இருக்க முடியாது. அவை எல்லைக்குட்பட்ட விடயங்கள், இதுவோ எல்லையற்ற விடயமாகும், இதனை எல்லையற்ற தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. இதைப் பற்றி எச்சந்தேகமும் இருக்க முடியாது. சிலர் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, பின்னர் அவர்கள் வைத்திருக்கின்ற, சகவாசத்தின் ஆதிக்கத்தினால் ஏதோவொரு சந்தேகத்தை வளர்க்கின்றார்கள். நீங்கள் தொடர்ந்தும் கடவுளின் சகவாசத்தைக் கொண்டிருந்தால், உங்களால் அக்கரையை அடைய முடியும். நீங்கள் இச்சகவாசத்தைக் கைவிடும்பொழுது, நச்சுக் கடலில் மூழ்குகின்றீர்கள். ஒருபுறம் பாற்கடலும், மறுபுறம் நச்சுக் கடலும் உள்ளன. “ஞானாமிர்தம்” என்ற பெயரும் உள்ளது. தந்தையே ஞானக் கடல். அவருடைய புகழ் உள்ளது. தந்தையின் புகழை இலக்ஷ்மி நாராயணனுக்குக் கொடுக்க முடியாது. தந்தையே தூய்மைக் கடல். அந்தத் தேவர்கள் சத்திய, திரேதா யுகங்களில் தூய்மையாக இருந்தாலும், அவர்கள் எக் காலமும் தூய்மையாக இருப்பதில்லை. அவர்கள் அரைக் கல்பத்தின் பி;ன்னர் வீழ்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் வந்து, அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன். நான் மாத்திரமே சற்கதியை அருள்பவர். நீங்கள் சற்கதிக்குள் செல்கின்றீர்கள், அங்கே இவ்விடயங்கள் இடம்பெற மாட்டாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தனிப்பட்ட முறையில் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவுடன் கற்று, ஆசிரியர்களாகவும் ஆகியுள்ளீர்கள். அவரே அதிபர். நீங்கள் அவரிடம் வருகின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் சிவபாபாவிடம் வந்துள்ளேன். ஓ, ஆனால் அவர் அசரீரியானவர். ஆம், அவர் இவரின் சரீரத்தில் வருகின்றார். இதனாலேயே நாங்கள் கூறுகின்றோம்: நாங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றோம். இந்த பாபா, அவருடைய (சிவபாபா) இரதம் ஆவார். அதனையே அவர் செலுத்துகின்றார். இவர் இரதமும், குதிரையும் என அழைக்கப்படுகின்றார். இதைப் பற்றி ஒரு கதை உண்டு; - தட்ச பிரஜாபிதா ஒரு யாகத்தை உருவாக்கினார். அவர்கள் ஒரு கதையை எழுதியுள்ளார்கள், ஆனால் அது அவ்வாறானதல்ல. கடவுள் சிவன் பேசுகின்றார்: பாரதத்தில் தர்மத்தின் பெரும் அவதூறு உள்ளபொழுது நான் வருகின்றேன். அதர்மம் பெருமளவு உள்ளபொழுது கடவுள் வருகின்றார் என்று கீதையைக் கற்பவர்கள் கூறினாலும், அவர்கள் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. இது உங்களுடைய மிகவும் சிறிய விருட்சம், இது புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய விருட்சமாகும். பின்னர் அங்கும் இந்த அத்திவாரம் இருக்கும். அவர் இந்த எண்ணற்ற சமயங்கள் அனைத்திற்கும் மத்தியில் ஒரே ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் மரக்கன்றை நாட்டிக் கொண்டிருக்கின்றார். இதற்கு அதிகளவு முயற்சி தேவை. ஏனையோர் அதை ஒரு முயற்சியாகக் காண்பதில்லை. அவர்கள் தொடர்ந்தும் மேலிருந்து கீழே வருகின்றார்கள். இங்கு, சத்திய, திரேதா யுகங்களுக்குச் செல்ல இருப்பவர்களின் ஆத்மாக்களே, அமர்ந்து கற்கின்றார்கள். தந்தை இங்கமர்ந்து, தூய்மையற்றவர்களுக்கு, அவர்களைத் தூய்மையான தேவர்களாக்குவதற்குக் கற்பிக்கின்றார். இவரும் கீதையைப் பெருமளவு கற்பது வழக்கமாகும். அவர் ஆத்மாக்களை நினைவுசெய்து, அவர்களின் பாவங்கள் அழியுமாறு அவர்களுக்குத் திருஷ்டி கொடுப்பதைப் போன்று, பக்தி மார்க்கத்தில், அவர்கள் அமர்ந்து கீதையை படிக்கும்பொழுது, அவர்கள் கீதையின் முன்னிலையில் தண்ணீரை அமிர்தம் எனக் கருதி, வைக்கின்றார்கள். சரீரத்தை நீக்கிய ஆத்மாக்கள் ஈடேற்றப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகின்றார்கள். இதனாலேயே அவர்கள் சரீரத்தை நீக்கிய ஆத்மாக்களை நினைவுசெய்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் கீதைக்குப் பெருமளவு மரியாதை கொடுக்கின்றார்கள். ஓ! பாபா ஒரு பக்தராகவே இருந்தார், அவர் இராமாயணம் போன்றவை அனைத்தையும் கற்பது வழக்கமாகும். அவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார். அவை அனைத்தும் கடந்த காலமாகும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: கடந்த காலத்தை நினைவுசெய்ய வேண்டாம். உங்களுடைய புத்தியிலிருந்து அவை அனைத்தையும் அகற்றுங்கள். பாபா ஸ்தாபனையினதும், விநாசத்தினதும், இராச்சியத்தினதும் காட்சிகளை அருளினார், எனவே அது உறுதியாகியது. இவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளது என்பது எனக்குத் தெரியாது. இவை அனைத்தும் நடைபெறும் என்று பாபா புரிந்துகொண்டார். “அதற்கு நீண்டகாலம் எடுக்காது; நான் சென்று இன்ன இன்ன அரசர் ஆகுவேன்.” பாபா என்ன எண்ணுகின்றார் என்பது எனக்குத் தெரியாது. எவ்வாறு பாபா பிரவேசித்தார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மக்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்கள், ஆனால், மூவரிலும், கடவுள் எவருக்குள் பிரவேசிக்கின்றார் என்பதன் அர்;த்தம் எவருக்கும் தெரியாது. அம்மக்கள் விஷ்ணுவின் பெயரைக் குறிப்பிடுகின்றார்கள், ஆனால் அவர் ஒரு தேவர்; அவரால் எவ்வாறு உங்களுக்குக் கற்பிக்க முடியும்? பாபாவே கூறுகின்றார்: நான் இவரினுள் பிரவேசிக்கின்றேன். இதனாலேயே அவர்கள் ஸ்தாபனை பிரம்மாவினூடாக நடைபெறுவதைக் காண்பித்துள்ளார்கள். அது ஸ்தாபனைக்குரியதும், மற்றையது விநாசத்திற்குரியதும் ஆகும். இவ்விடயங்கள் பெருமளவில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். எப்பொழுது கடவுள் வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களுக்கு ஓர் இராஜ அந்தஸ்தைக் கொடுத்தார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் உஙகளுக்கு 84 பிறவிகளின் இரகசியங்களை விளங்கப்படுத்தியுள்ளார். யார் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் என்பதையும், யார் பூஜிப்பவர்கள் என்பதையும் பற்றியும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். முழு உலகமும் இப்பொழுது விரும்புகின்ற, இலக்ஷ்மி நாராயணனின் அமைதி இராச்சியம் உலகில் இருந்தது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சிய காலத்தில், ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், இப்பொழுது நாங்கள் இப்பணியை மேற்கொள்கின்றோம். நாங்கள் இதைப் பல தடவைகள் செய்துள்ளோம், அதைத் தொடர்ந்தும் செய்வோம். பல மில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினர் மாத்திரம் வெளிப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது தேவ தர்மத்திற்குரியவர்களை மாத்திரம் தொடுகின்றது. இது பாரதத்தை மாத்திரம் குறிக்கின்றது. இக்குலத்திற்குரியவர்கள் வெளிப்படுவதுடன், தொடர்ந்தும் வெளிப்படுவார்கள். நீங்கள் வெளிப்பட்டுள்ளதைப் போன்று, ஏனைய பிரஜைகளும் தொடர்ந்தும் உருவாக்கப்படுவார்கள். நன்றாகக் கற்பவர்கள் ஒரு சிறந்த அந்தஸ்தைக் கோருவார்கள். இந்த ஞானமும், யோகமுமே பிரதான விடயங்கள். யோகத்திற்கு இந்த ஞானமும் தேவைப்படுகின்றது. நீங்கள் சக்தி வீட்டுடனும் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். யோகத்தினூடாக உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். நீங்கள் திறமைச்சித்தியும் எய்துவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எபபோதோ தொலைந்து இபபோது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள விடயங்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் இதுவரை கற்றுள்ள அனைத்தையும் மறந்து விட்டு, ஒரேயொரு தந்தையை மாத்திரம் செவிமடுத்து, சதா உங்களுடைய பிராமணக் குலத்தை நினைவுசெய்ய வேண்டும்.

2. உங்கள் புத்தி முழு நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். எதைப் பற்றியும் சந்தேகங்களைக் கொண்டிருக்க வேண்டாம். ஒருபொழுதும் கடவுளின் சகவாசத்தையோ அலல்து இக் கல்வியைNh கைவிட வேண்டாம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீக அன்பிற்கினியவரால் கவரப்பட்டுள்ள, ஓர் ஆன்மீகக் காதலியாக ஆகுவதால், கடின உழைப்பிலிருந்து விடுபட்டிருப்பீர்களாக.

அன்பிற்கினியவர் தான் இழந்துள்ள தனது காதலிகளைப் பார்க்கையில் பூரிப்படைகின்றார். அவர்கள் இந்த ஆன்மீகக் கவர்ச்சியினால் கவரப்பட்டார்கள், அவர்கள் இப்பொழுது தங்களுடைய உண்மையான அன்பிற்கினியவரை அறிவார்கள்; அவர்கள் அவரை அடைந்துள்ளதுடன், தங்கள் உண்மையான இலக்கையும் அடைந்து விட்டார்கள். அத்தகைய அன்பான ஆத்மாக்கள் அன்பெனும் இந்த எல்லைக் கோட்டின் உள்ளே வரும்பொழுது, பலவிதமான கடின உழைப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றார்கள், ஏனெனில் ஞானக் கடலின் இங்குள்ள அன்பினதும் சக்தியினதும் அலைகள் அவர்களைச் சதாகாலத்திற்கும் சக்தியூட்டுகின்றன. காதலிகளாகிய உங்களுக்காகவும், தன்னைச் சந்திப்பதற்காகவும் அன்பிற்கினியவர் இந்த விசேடமான இடத்தை குறிப்பாகக் களிப்பூட்டுவதற்காக உருவாக்கியுள்ளார்.

சுலோகம்:
அகநோக்குடையவராக இருப்பதுடன், சிக்கனமானவராகவும், ஒரேயொருவருக்கு உரியவராகவும் இருங்கள்.