26.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் ஜீவனோபாயத்திற்கான செயல்களில்; ஈடுபட்டிருக்கும்பொழுது, எல்லையற்ற முறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துங்கள். இந்த எல்லையற்ற கல்வியை நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக மிகவும் நன்றாகக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களுக்கு முன்னேற்றமும் இருக்கும்.

பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் கற்கின்ற எல்லையற்ற கல்வியில் உள்ள அதி கடினமான பாடம் எது?

பதில்:
சகோதரத்துவப் பார்வையை உறுதியாக்கிக் கொள்வதே இக் கல்வியின் அதியுயர்வான பாடமாகும். உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தையினால் கொடுக்கப்பட்டுள்ள மூன்றாவது ஞானக் கண்ணால், தொடர்ந்தும் ஒருவரையொருவர் சகோதர ஆத்மாக்களாகப் பாருங்கள். உங்களுடைய கண்கள், உங்களைச் சிறிதளவேனும் ஏமாற்றக்கூடாது. உங்கள் புத்தியும், எவரது பெயரிலோ அல்லது வடிவத்திலோ சிறிதளவேனும் ஈர்க்கப்படக்கூடாது. எவ்விதமான விகாரமான எண்ணங்களும் சிறிதளவேனும் இல்லாதிருக்கட்டும். இதற்கு முயற்சி தேவை. இப்பாடத்தில் சித்தியடைபவர்களே உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து, எல்லையற்ற குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஒரு வகையில் அனைத்தும் எல்லைக்குட்பட்டவையாகவும், இன்னொரு வகையில் எல்லையற்றதாகவும் உள்ளன. நீங்கள் நீண்ட காலமாக எல்லைக்குட்பட்டதில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் எல்லையற்றதில் இருக்கிறீர்கள். உங்களுடைய கல்வியும் எல்லையற்றதாகும். இக் கல்வி எல்லையற்ற இராச்சியத்திற்கு உரியது. இதனை விடவும் மகத்தான கல்வி எதுவுமில்லை. யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார்? எல்லையற்ற தந்தையான கடவுள். நீங்கள், உங்களுடைய சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காக அனைத்தையும் செய்வதுடன், உங்கள் சுய முன்னேற்றத்திற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும். பலர் தொழில் செய்து கொண்டு, தங்கள் தனிப்பட்ட சுய முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்தும் கற்கின்றார்கள். அது எல்லைக்குட்பட்ட முன்னேற்றத்திற்காகவே ஆகும். ஆனால் இங்கே எல்லையற்ற தந்தை மூலமாக உங்களுக்கு எல்லையற்ற முன்னேற்றம் உள்ளது. தந்தை கூறுகிறார்: எல்லைக்குட்பட்ட வகையிலும், எல்லையற்ற வகையிலும் முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் ஓர் உண்மையான, எல்லையற்ற வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்று உங்களுடைய புத்தி இப்பொழுது புரிந்துகொள்கின்றது. இங்குள்ள அனைத்தும் மண்ணாகப் போகின்றன. நீங்கள் எல்லையற்ற வருமானத்தை ஈட்டிக் கொள்வதில் எந்தளவிற்கு உறுதியாக இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக எல்லைக்குட்பட்ட வருமானம் பற்றிய விடயங்களைத் தொடர்ந்தும் மறந்து விடுவீர்கள். விநாசம் இடம்பெறவுள்ளது என்பதை இப்பொழுது அனைவரும் புரிந்துகொள்வார்கள். விநாசம் நெருங்கும்பொழுது, மக்களும் கடவுளைத் தேட ஆரம்பிப்பார்கள். விநாசம் இடம்பெறும்பொழுது, ஸ்தாபனையை மேற்கொள்கின்ற ஒரேயொருவரும் நிச்சயமாக அங்கிருப்பார். உலகிற்கு எதுவும் தெரியாது. பிரஜாபிதா பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள், உங்களுடைய முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இந்தக் கல்வியைக் கற்கின்றீர்கள். சில மாணவர்கள் ஒரு விடுதியில் வசித்தவாறே, கல்வி கற்கின்றார்கள். எவ்வாறாயினும், இந்த விடுதி தனித்துவமானது. அவர்கள் அவ்வாறே இவ் விடுதிக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் வந்த சிலர் இன்னமும் இங்கிருக்கிறார்கள். அவர்கள் எதையும் பற்றிச் சிந்திக்காது வந்தார்கள். அவர்களில் பல்வேறு வகையானவர்கள் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றில்லை. உங்களுடன் சிறு குழந்தைகளையும் நீங்கள் அழைத்து வந்தீர்கள். நீங்கள் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டீர்கள். அவர்களிற் பலர் சென்று விட்டார்கள். பூந்தோட்டத்தில் இருக்கும் மலர்களையும், பறவைகளையும் பாருங்கள்! பறவைகள் தொடர்ந்தும் கீச்சிடுகின்றன. இந்த மனித உலகமும் இந் நேரத்தில் அவ்வாறே உள்ளது. எங்களிடம் எந்த நல்ல பண்புகளும் இருக்கவில்லை. நல்ல பண்புகளைக் கொண்டிருந்தவர்களின் புகழை நாங்கள் பாடுவது வழக்கம். நாங்கள் பாடுவதுண்டு: என்னிடம் நற்குணங்கள் எதுவும் இல்லை, என்னிடம் எந்த நற்குணங்களும் இல்லை. இங்கு வருகின்ற எந்தப் பிரபல்யமானவரும், தனக்குப் படைப்பவரான தந்தையையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி,; இறுதியையோ தெரியாது என்றே உணர்வார். ஆகவே, அவரால் என்ன பயன்;? நீங்களும் உபயோகமற்றே இருந்தீர்கள். அது தந்தையின் அற்புதம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார், அந்த இராச்சியத்தை எவராலும் எங்களிடமிருந்து அபகரிக்க முடியாது. எவராலும் எந்தத் தடையையும் ஏற்படுத்த முடியாது. நாங்கள் என்னவாக ஆகுகிறோம், நாங்கள் என்னவாக இருந்தோம்? ஆகவே நீங்கள் நிச்சயமாக ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உலகில் எவ்வளவுதான் அவதூறுகளும், குழப்பங்களும் இருந்தாலும், அவை எதுவும் புதியவையல்ல. அவை அனைத்தும் 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இடம்பெற்றன. அது சமயநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தின் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தில் மீண்டும்; வாசிக்கப்படும் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றீர்கள். அதற்கு நீங்கள் முழு முயற்;சி செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமான முயற்சியை ஒவ்வொரு கல்பத்திலும் செய்வீர்கள். நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் எந்தளவுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவேன்? எந்தளவிற்கு நன்றாக நீங்கள் கற்கின்றீர்களோ, அந்தளவிற்;கு உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடியும். “இவர் என்னிலும் பார்க்கத் திறமைசாலி. ஆகவே நானும் திறமைசாலி ஆக வேண்டும்”. வியாபாரிகளும் அவ்வாறே உள்ளனர். “நான் அவரிலும் பார்க்க மேலும் முன்னேற வேண்டும், அதாவது, அவரிலும் பார்க்க நான் திறமைசாலியாக வேண்டும்”. அவர்கள் தற்காலிக சந்தோஷத்திற்காக முயற்சி செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் உங்களுடைய அத்தகைய மகத்தான தந்தையாவேன். உங்களுக்குச் சரீரிதாரித் தந்தையும், அசரீரியான தந்தையும் உள்ளார்கள். இருவரும் இங்கு சேர்ந்து உள்ளனர். இருவரும் ஒன்றாகக் கூறுகிறார்கள்: இனிய குழந்தைகளே, இது ஓர் எல்லையற்ற கல்வி என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். வேறு எவருக்கும் இது தெரியாது. முதலாவது விடயம்: உங்களுக்குக் கற்பிப்பது யார்? கடவுள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார்? இராஜயோகம். நீங்கள் இராஜரிஷிகள். அவர்கள் ஹத்தயோகிகள். அவர்களும் ரிஷிகளே. ஆனால் அவர்கள் எல்லைக்குட்பட்டவர்கள். அவர்கள் “நாங்கள் எங்களுடைய வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து விட்டோம்” என்று கூறுகிறார்கள். அவர்கள் செய்தது நல்ல விடயமா? விகாரத்திற்காக நீங்கள் தொந்தரவு செய்யப்பட்டபொழுது, உங்களுடைய வீடுகளையும், குடும்பங்களையும் பிரிந்து வந்தீர்கள், ஆனால், அவர்கள் எவ்வாறு தொந்தரவு செய்யப்பட்டார்கள்? நீங்கள் துன்புறுத்தப்பட்டதால் ஓடினீர்கள். குமாரிகளும், தாய்மார்களும் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்று எங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள். இதனாலேயே அவர்கள்; இங்கு ஓடோடி வந்தார்கள். ஆரம்பத்தில் பலர் இங்கு வந்தார்கள். இங்கு ஞான அமிர்தம் கொடுக்கப்பட்டது, ஆகவே, அவர்கள் ஒரு கடிதத்துடன் இங்கு திரும்பி வந்தார்கள்: ஞான அமிர்தத்தைப் பருகுவதற்காக நாங்கள் “ஓம் இராதையிடம் செல்கின்றோம். விகாரத்திற்காகவே இந்தச் சண்டை சச்சரவுகள் உள்ளன, ஆரம்பத்திலிருந்தே, அவை தொடர்ந்துள்ளன. அசுர உலகம் முடிவுக்கு வரும்பொழுதே, இதுவும் முடிவுக்கு வரும். பின்னர் அது அரைக் கல்பத்திற்கு முடிவடையும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து, உங்கள் வெகுமதியைக் கோருகிறீர்கள். எல்லையற்ற தந்தை அனைவருக்கும் ஓர் எல்லையற்ற வெகுமதியைக் கொடுக்கிறார். ஓர் எல்லைக்குட்பட்ட தந்தை எல்லைக்குட்பட்ட வெகுமதியையே கொடுக்கிறாhர், அதிலும், புத்திரர்கள் மாத்திரமே ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். இங்கு தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒரு புத்திரனாகவோ அல்லது ஒரு புத்திரியாகவோ இருக்கலாம், உங்கள் இருவருக்கும் உரிமையுள்ளது. பௌதீகத் தந்தையர்கள் பாகுபாட்டைக் காட்டுவார்கள், ஏனெனில், புத்திரர்கள் மாத்திரமே வாரிசுகள் ஆக்கப்படுகின்றார்கள். ஒரு மனைவி அரைப் பங்காளி என்று கூறப்படுகிறார், ஆனால், அவருக்கு ஒரு பங்கு கூட கிடைப்பதில்லை. புத்திரர்கள் மாத்திரமே அனைத்தையும் கவனித்துக் கொள்கின்றார்கள். ஒரு தந்தைக்குத் தனது புத்திரர்களில் பற்று உள்ளது. நியதிப்;படி இந்தத் தந்தை குழந்தைகளாகிய (ஆத்மாக்கள்) உங்கள் அனைவருக்கும் ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார். இங்கு புத்திரர்களுக்கும் புத்திரிகளுக்குமிடையே பாகுபாடு கிடையாது. நீங்கள் அதிகளவு சந்தோஷம் என்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள், அவ்வாறிருந்தும், நீங்கள் முழுமையாகக் கற்பதில்லை. நீங்கள் உங்களுடைய கல்வியைக் கைவிட்டு விடுகிறீர்கள். புத்திரிகள் எழுதுகின்றார்கள்: பாபா, இன்னார்; இரத்தத்தால் எழுதினார்கள், ஆனால், அவர் இப்பொழுது வருவதில்லை. அவர்கள் இரத்தத்தாலும் எழுதுகின்றார்கள்: பாபா, நீங்கள் என்னை விரும்பினாலும், நிராகரித்தாலும், நான் ஒருபொழுதும் உங்களை விட்டுச் செல்ல மாட்டேன். எவ்வாறாயினும், அவர்கள் பராமரிப்பைப் பெற்று, பின்னர் சென்று விடுகின்றார்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: இவை அனைத்தும் நாடகத்தில் உள்ளது. ஞானத்தால் வியப்படைந்த சிலர் பின்னர் ஓடி விட்டார்கள். அவர்கள் இங்கு அமர்ந்திருக்குமபொழுது, அவர்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது: அவ்வாறான ஓர் எல்லையற்ற தந்தையை எப்படி நான் விட்டுச் செல்வேன்? இதுவும் ஒரு கல்வி, பாபா உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வதாக உத்தரவாதம் அளிக்கிறார். சத்திய யுக ஆரம்பத்தில், பல மனிதர்கள் இருக்கவில்லை. ஆனால், இப்பொழுது சங்கம யுகத்தில் அனைவரும் இங்கு இருக்கின்றார்கள். சத்திய யுகத்தில் மிகச் சிலரே இருப்பார்கள். வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் இங்கு இருக்க மாட்டார்கள். அதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் இப்பொழுது நடைபெறுகின்றன. நீங்கள் உங்கள் சரீரங்களை விட்டுப் பிரிந்து, அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்துக் கொண்டு, உங்கள் பாகங்களை நடிப்பதற்கு இங்கு வருவதற்கு முன்னர்; எங்கிருந்து வந்தீர்களோ, அங்கு திரும்பிச் செல்வீர்கள். அங்கு இரண்டு மணித்தியால நாடகங்கள் உள்ளன. ஆனால், இந்த நாடகம் எல்லையற்றது. நாங்கள் அந்த வீட்டில் வசிப்பவர்கள் என்பதும், நாங்கள் அனைவரும் ஒரே தந்தையரின் குழந்தைகள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நாங்கள் வாழுமிடம் சத்தத்திற்கு அப்பாற்பட்ட, நிர்வாணா தாமமாகும். அங்கு சத்தம் இருக்காது. மனிதர்கள் பிரம்ம தத்துவத்தில் அமிழ்ந்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் பாபா கூறுகிறார்: ஆத்மாக்கள் அழிவற்றவர்களுள், ஒருபொழுதும் அவர்களை அழிக்க முடியாது. இவர்கள் அனைவரும் உயிருள்ளவர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், அவர்கள் தங்களுடைய சரீரங்களின் மூலம் தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். ஆத்மாக்கள் அனைவரும் நாடகத்தின் நடிகர்கள். அவர்களின் வசிப்பிடம் பிரம்மாண்டம் எனும் வீடாகும். ஆத்மாக்கள் முட்டை வடிவத்தினராகக் காணப்படுகின்றார்கள். பிரம்மாண்டம் அவர்கள்;; வாழுமிடமாகும். அனைத்தும் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவர்கள் இப்பொழுது புரிந்துகொள்ளாது விட்டால், தொடர்ந்தும் இவ் விடயங்களைச் செவிமடுத்தார்களானால், சிலகாலம் சென்ற பின்னர், தாங்களாகப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் வருவதை நிறுத்தி விட்டால், அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாதிருக்கும். இப் பழைய உலகம் அழியப் போகின்றது என்பதையும், புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: நேற்று நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். பாடலும் உள்ளது: பாபா எங்கள் இராச்சியத்தை எங்களிடமிருந்து எவராலும் அபகரிக்க முடியாத அவ்வாறான உலக அதிபதிகளாக எங்களை ஆக்குகின்றார்.. ஆகாயத்துக்கும், பூமிக்குமான அனைத்து உரிமைகளும் எங்களிடம் உள்ளன. இந்த உலகில் என்ன உள்ளது என்று பாருங்கள்! அனைவரும் சுயநலமான சகபாடிகள். அங்கு அவ்வாறு இருக்க மாட்டாது. ஒரு பௌதீகத் தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் செல்வம், சொத்து அனைத்தையும் உங்களிடம் விட்டுச் செல்லப் போகின்றேன். நீங்கள் அவற்றை நன்றாககப் பராமரிக்க வேண்டும், அதேபோன்று, எல்லையற்ற தந்தையும் கூறுகிறார்: நான் உங்களுக்குச் செல்வம், சொத்து அனைத்தையும் கொடுக்கிறேன். உங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுமாறு நீங்கள் என்னைக் கூவி அழைத்தீர்கள், ஆகவே நான் நிச்சயமாக உங்களைத் தூய்மையாக்கி, உலக அதிபதிகள் ஆக்குவேன். தந்தை உங்களுக்கு மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்துகிறார். இது இலகு ஞானமும், யோகமும் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு விநாடிக்கான விடயம். நீங்கள் ஒரு விநாடியில் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அடைகிறீர்கள். இப்பொழுது நீங்கள் தொலைநோக்குப் புத்தியைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் கற்கின்றீர்கள் என்பதைத் தொடர்ந்தும் நினைக்க வேண்டும். நாங்கள் எங்களுக்காக ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். ஆகவே நாங்கள் ஏன் இதில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறக்கூடாது? ஏன் நாங்கள் குறைவான எதனையும் பெற வேண்டும்? ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது, அங்கு வெவ்வேறு மட்டங்களில் அந்தஸ்துக்கள் இருக்கும், இல்லையா? அங்கு பல பணிப்பெண்களும், வேலையாட்களும் இருப்பார்கள். அவர்களும் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள், அவர்கள் மாளிகைகளில் அரசர்களுடன் வாழ்வார்கள். அவர்கள் குழந்தைகள் போன்றவர்களைக் கவனிப்பார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் பணிப்பெண்களும். வேலைக்காரர்களும்; என்றே அழைக்கப்படுகின்றார்கள். அரசர்களும், அரசிகளும் உண்பனவற்றையே பணிப்பெண்களும், வேலைக்காரர்களும் உண்கின்றார்கள்; பிரஜைகள் அதனைப் பெற மாட்டார்கள். பணிப்பெண்களும், வேலைக்காரர்களும் அதிகளவு மதிப்பைப் பெறுவார்கள். ஆனால் அதுவும் வரிசைக்கிரமமே. குழந்தைகளான நீங்கள்; முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். இங்குள்ள அரசர்களுக்கும் பணிப்பெண்களும், வேலைக்காரர்களும் உள்ளனர். இளவரசர்களின் ஒன்றுகூடல் நடக்கும்பொழுது, அவர்கள் தங்களுடைய கிரீடங்கள் போன்ற முழுமையான அலங்காரங்களுடனேயே ஒருவரையொருவர் சந்திக்கின்றார்கள். அவர்களும் மிகவும் அழகிய ஒன்றுகூடல்களை வரிசைக்கிரமமாகவே கொண்டிருக்கின்றனர். அரசிகள் அந்த ஒன்றுகூடல்களில் அமர்ந்திருப்பதில்லை; அவர்கள்; திரைக்குப் பின்னால் இருப்பார்கள். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்களும் அவரை வாழ்க்கையை அருள்பவர், வாழ்க்கைத் தானத்தை வழங்குபவர் என்று அழைக்கிறீர்கள். அந்த ஒரேயொருவரே நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் சரீரங்களை விடுவதிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறார். அங்கு மரணிப்பதையிட்டு எவ்விதக் கவலையுமில்லை. இங்கு மக்கள் மிகவும் கவலைப்படுகின்றனர். ஏதாவது சிறிய விடயங்கள் ஏற்பட்டாலும், தாங்கள் மரணித்து விடக்கூடும் என்று நினைத்து, வைத்தியரை வரவழைக்கின்றனர். அங்கு பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் மரணத்தை வெற்றி கொள்கின்றீர்கள், ஆகவே நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குக் கற்பிக்கும் ஒருவரையே நினைவு செய்யுங்கள். இதுவும் நினைவு யாத்திரையாகும். நீங்கள் தந்தை, ஆசிரியர், சற்குருவை நினைவு செய்தாலும், அதுவும் நல்லதே. எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்களோ... நீங்கள் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையானவர்களாக வேண்டும். விகாரமான எண்ணங்கள் உங்கள் புத்தியில் பிரவேசிக்கவும் கூடாது. நீங்கள் அனைவரையும் உங்கள் சகோதரர்கள் என்று கருதும்பொழுது மாத்திரமே இது நடக்கும். அவர்கள் அனைவரையும் சகோதரர், சகோதரிகள் என்று கருதும்பொழுதும், அழுக்கான பார்வை இருக்கும். கண்களே, அதிகம் ஏமாற்றக்கூடியன. இதனாலேயே, தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண்ணைக் கொடுத்;துள்ளார். ஆகவே, உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, ஒருவரையொருவர் சகோதரர்களாகப் பாருங்கள். இது மூன்றாவது ஞானக் கண் என்று அழைக்கப்படுகின்றது. சகோதர, சகோதரிகள் என்ற பார்வை மூலமும் நீங்கள் nதோல்வி அடைவதால், வேறு வழிமறையொன்று கண்டுபிடிக்கப்பட வேண்டும்: உங்களைச் சகோதரர்களாகக் கருதுங்கள். இதற்குப் பெரும் முயற்;சி தேவை. வெவ்வேறு பாடங்கள் உள்ளன. சில பாடங்கள் மிகவும் கடினமானவை. இது ஒரு கல்வியாகும். எவரினதும் பெயரிலோ அல்லது வடிவத்திலோ நீங்கள் அகப்பட்டுக்கொள்ளாது இருப்பதே இதிலுள்ள அதியுயர்வான பாடம். பரீட்சை மிகவும் உயர்ந்தது; நீங்கள் உலக அதிபதிகளாகப் போகின்றீPர்கள். தந்தை விளங்கப்படுத்தும் முக்கிய விடயம்: உங்களைச் சகோதரர்களாகக் கருதுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், முன்னேறிச் செல்லும்பொழுது, பலர் நம்பிக்கைத் துரோகிகள் ஆகுகிறார்கள். இங்கும் அவ்வாறே. சிறந்த குழந்தைகளையும் கூட மாயை தனக்குச் சொந்தமானவர்கள் ஆக்குகின்றாள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: அவர்கள் என்னிலிருந்து பிரிந்து சென்று விடுகிறார்கள்; அவர்கள் என்னை விவாகரத்தும் செய்துவிடுகிறார்கள். குழந்தைகளும், அவர்களின் தந்தையுமே பிரிந்து விடுகின்றார்கள், கணவனும், மனைவியுமே விவாகரத்து செய்கின்றனர். தந்தை கூறுகிறார்: எனக்கு இரண்டும் கிடைக்கின்றன (பிரிதலும், விவாகரத்தும்). சிறந்த குழந்தைகளும் என்னை விவாகரத்துச் செய்து விட்டு, இராவணனுக்குச் சொந்தமானவர்கள் ஆகுகின்றார்கள். இது ஓர் அற்புதமான நாடகமாகும். மாயை என்னதான் செய்ய மாட்டாள்? தந்தை கூறுகிறார்: மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். பெரிய முதலை யானையை விழுங்கியதாக நினைவுகூரப்படுகிறது. உங்களிற் பலர் பெருமளவு தவறுகளைச் செய்கிறார்கள். நீங்கள் தந்தையை அவமரியாதைப்படுத்தும்பொழுது, மாயை உங்களைப் பச்சையாகவே உண்டு விடுகிறாள். மாயை உங்களை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளக்கூடியவள். அச்சா. குழந்தைகளாகிய உங்களுக்கு நான் எவ்வளவுதான் சொல்ல முடியும்? குழந்தைகளாகிய உங்களுடன் நான் எவ்வளவுதான் பேச முடியும்? முக்கிய விடயம் அல்பா ஆகும். இஸ்லாமியர்களும் கூறுகின்றார்கள்: காலையில் விழித்தெழுந்து, அல்லாவை நினைவுசெய்யுங்கள். அது நித்திரை கொள்வதற்கான நேரமல்ல. இந்த முறை மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன் வேறு எந்த வழியுமில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களில் அதிகளவு விசுவாசம் கொண்டுள்ளார். அவர் ஒருபொழுதும் உங்களை விட்டு நீங்க மாட்டார். அவர் உங்களைச் சீர்திருத்தி, உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வதற்கே வந்துள்ளார். நினைவு யாத்திரையில் செல்வதன் மூலம் மாத்திரமே, நீங்கள் சதோபிரதான் ஆககுவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் மறு பக்கத்திற்காகச் சேமிப்பீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எந்தவளவு தூரம் என்னை நினைவுசெய்கின்றீர்கள், எந்தளவு சேவை செய்கின்றீர்கள் என்ற உங்கள் கணக்கை வைத்திருங்கள். வியாபாரிகள் நஷ்டத்தைக் கண்டால், மிகவும் கவனமாக இருக்கின்றனர். நீங்கள் நஷ்டம் அடையக்கூடாது. பின்னர் அது கல்பம் கல்பமான இழப்பாக இருக்கும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாகுங்கள். உங்கள் புத்தியில் நீங்கள் விகாரமான எண்ணங்கள் எதனையும் கொண்டிருக்காதீர்கள். இதற்குப் பயிற்சி செய்யுங்கள்: ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். எவரினதும் பெயரிலோ அல்லது வடிவத்திலோ அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்.

2. தந்தை விசுவாசமானவராக இருந்து, குழந்தைகளாகிய உங்களைச் சீர்திருத்தி, தன்னுடன் உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். அத்தகையதொரு தந்தையை நீங்கள் என்றுமே விட்டுப் பிரியவோ அல்லது விவாகரத்துச் செய்யவோ கூடாது.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் இலகுயோகியாகி, சதா இலேசானவராக இருந்து, தந்தையின் கண்களில் அமிழ்ந்து விடுவீர்களாக.

சங்கம யுகத்தில் நீங்கள் பெறுகின்ற சந்தோஷச் சுரங்கத்தை வேறெந்த யுகத்திலும் பெற முடியாது. இந்நேரத்தில் குழந்தைகளுடனான தந்தையின் சந்திப்புக்களையும், ஆஸ்தியையும், ஆசீர்வாதங்களையும் கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஆஸ்தியையோ அல்லது இந்த ஆசீர்வாதங்களையோ பெறுவதில் கடின உழைப்பு எதுவும் இல்லை, இதனாலேயே உங்கள் தலைப்பானது: இலகுயோகி என்பதாகும். குழந்தைகளின் கடின உழைப்பைப் பார்க்கையில் பாப்தாதாவால் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் சுமைகள் அனைத்தையும் தந்தையிடம் கொடுத்து விட்டு, இலேசாகுங்கள். தந்தை உங்களைத் தனது கண்களில் அமர்த்தி, உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்லும் வகையில் மிகவும் இலேசானவர்கள் ஆகுங்கள். தந்தை மீதான உங்கள் அன்பின் அடையாளமானது நீங்கள் சதா இலேசாக இருப்பதும், தந்தையின் கண்களில் அமிழ்ந்திருப்பதும் ஆகும்.

சுலோகம்:
எதிர்மறையான சிந்தனைக்கான பாதையைத் தடை செய்யுங்கள், நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.