27.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியான ஆரோக்கியம், செல்வம், சந்தோஷத்தைப் பெறவே வந்துள்ளீர்கள். கடவுளின் வழிக்காட்டல்களைப் பின்பற்றுவதனால் மாத்திரமே நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற முடியும்.

பாடல்:
பாவகரமான எண்ணங்களை வெற்றி கொள்வதற்குத் தந்தை, குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் காட்டும் வழிமுறை என்ன?

பதில்:
பாவகரமான எண்ணங்களை வெற்றி கொள்வதற்கு, உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதுடன், பிறரைச் சகோதரத்துவப் பார்வையுடன் பாருங்கள். நீங்கள் சரீரத்தைப் பார்க்கும் போது பாவகரமான எண்ணங்கள் வருகின்றன. ஆகையால், நெற்றியின் நடுவில் உள்ள சகோதர ஆத்மாவைப் பாருங்கள். நீங்கள் தூய்மை ஆக விரும்பினால் இப் பார்;வையை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். சதா தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலமே உங்கள் துரு அகற்றப்படுகிறது. பின்னர் சந்தோஷ பாதரசம் உயரும். அத்துடன் நீங்கள் பாவகரமான எண்ணங்களையும் வெற்றி கொள்வீர்கள்.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன், தனது சலிகிராம்களுடன் பேசுகின்றார். கடவுள் பேசுவதால், நிச்சயமாக அவர் ஒரு சரீரத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறே அவரால் பேசமுடியும். பேசுவதற்கு நிச்சயமாக ஒரு வாய் தேவையாகும். அதேபோன்று செவிமடுப்பதற்கும் செவிகள் தேவை. ஓர் ஆத்மாவுக்கு வாயும், காதுகளும் தேவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இராமரின் வழிகாட்டல்கள் என்றழைக்கப்படுகின்ற கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். ஏனையவர்கள் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள். கடவுளின் வழிகாட்டல்களும், அசுரவழிகாட்டல்களும் உள்ளன. கடவுளின் வழிகாட்டல்கள் அரைக்கல்பத்திற்குத் தொடர்கின்றன. தந்தை உங்களுக்கு கடவுளின் வழிகாட்டல்களைக் கொடுத்து உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். பின்னர் அதே வழிகாட்டல்களே சத்திய, திரேதா யுகங்களிலும் தொடர்கின்றன. அவர்கள் போகிகள் என்பதால் மிகக் குறைந்த பிறவிகளையே அவர்கள் எடுக்கின்றார்கள். துவாபர, கலியுகங்களில் இராவணனின் வழிகாட்டல்களே உள்ளன. அங்கு பல பிறவிகள் உள்ளன, அவர்கள் போகிகள் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுபவர்கள்) என்பதாலேயே அவர்களின் ஆயுட்காலம் குறுகியதாக உள்ளது. அவர்களின் சமுதாயம் மிகவும் பெரிதாக உள்ளதால், அவர்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். இராமரின் வழிகாட்டல்களைப் பின்பற்றியவர்களும், பின்னர் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களுடன் இணைந்து கொள்வதனால், முழு உலகமுமே இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களாக ஆகிவிடுகின்றனர். பின்னர் தந்தை வந்து அனைவருக்கும் இராமரின் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் கடவுளின் வழிகாட்டல்களான இராமரின் வழிகாட்டல்கள் உள்ளன. அது சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுவதனால், அரைக்கல்பத்திற்கு சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அது முடிவடையும் போது, அது இராவண இராச்சியமாகுகின்றது. அவை அசுர வழிகாட்டல் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது உங்களையே வினவுங்கள்: நான் அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றியதால் என்ன செய்தேன்? கடவுளின் வழிக்காட்டல்களைப் பின்பற்றும் போது என்ன செய்கின்றேன்? முன்னர் நரக வாசிகள் போன்றிருந்த நீங்கள், பின்பு சிவாலயத்தில் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். சத்திய திரேதா யுகங்கள் சிவாலயம் என்று அழைக்கப்படுகின்றது. யாருடைய பெயரில் ஒரு ஸ்தாபனை இடம்பெறுகின்றதோ, அவரின் பெயரே அவ்விடத்திற்கு இடப்படுகின்றது. எனவே தேவர்கள் வாழும் இடம் சிவாலயமாகும். இவ்விடயங்களைப் படைப்பவரான தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்;. அவர் என்ன படைக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். இந்நேரத்தில் முழுப் படைப்பும் அவரைக் கூவியழைக்கின்றார்கள்: ~~ஓ தூய்மையாக்குபவரே, ஓ விடுதலையளிப்பவரே, எங்களைத் துன்பத்திலிருந்தும், இராவண இராச்சியத்திலிருந்தும் விடுவிப்பவரே!||, இப்பொழுது உங்களுக்கு சந்தோஷத்தைப்பற்றி தெரியும் என்பதால், இது துன்பம் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள்;. இல்லாவிட்டால் இது துன்பம் என்று பலரும் கருத மாட்டார்கள். தந்தை ஞானம் நிறைந்தவராகவும், மனித உலகின் விதையாகவும் இருப்பதைப் போன்று, நீங்களும் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். விதைக்கு விருட்சத்தைப் பற்றிய அறிவுள்ளது. ஆனால் அது உயிரற்றது. அது உயிருடன் இருந்திருந்தால், அது உங்களுக்குக் கூறும். நீங்கள் உயிருள்ள விருட்சத்திற்கு உரியவர்கள் என்பதாலேயே நீங்கள் விருட்சத்தை அறிந்திருக்கின்றீர்கள். தந்தை மனித உலகின் விதையென்றும், சத்தியம் என்றும், உயிருள்ளவர் என்றும், பேரானந்த சொரூபம் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த விருட்சம் எவ்வாறு வளர்கின்றது என்பதும், பின்னர் அது எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது என்பதும் எவருக்கும் தெரியாது. ஒரு புதிய விருட்சம் வளர்கின்றது என்றில்லை. பழைய விருட்சத்திறிகுரிய மனிதர்களே கூவி அழைக்கிறார்கள்: வந்து இராவணனிடமிருந்து எங்களை விடுவியுங்கள், ஏனெனில் இந்நேரத்தில் இது இராவண இராச்சியமாகும். மக்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாது. தந்தை ஒருமுறை மாத்திரமே சுவர்க்கத்தைப் படைக்கிறார் என அவரே கூறுகின்றார். சுவர்க்கம் பின்னர் நரகமாகுகின்றது. இராவணன் வரும்போது மக்கள் பாவப்பாதையில் செல்கின்றனர். சத்தியயுகத்தில் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் அனைத்தும் இருந்தன. நீங்கள் இப்பொழுது உங்கள் ஆஸ்தியான ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் ஆகிய அனைத்தையும் தந்தையிடமிருந்து பெறவே இங்கு வந்துள்ளீர்கள், ஏனெனில் சுவர்க்கத்தில் எப்பொழுதும் எந்தத் துன்பமும் இருப்பதில்லை. ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே முயற்சி செய்கிறீர்கள் என்பது உங்கள் இதயத்தில் உள்ளது. அதன் பெயர் மிகவும் நல்லது. வேறு எந்த யுகத்தையும் அதிமேன்மையானது என அழைக்க முடியாது. அந்த யுகங்களில், நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் இருந்து கீழிறங்குகிறீர்கள். நீங்கள் தந்தையைக் கூவியழைத்ததுடன் உங்களை அவருக்கு அர்ப்பணித்தும் இருக்கிறீர்கள், எனினும் எப்பொழுது தந்தை வருவார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. மக்கள் கூவியழைக்கின்றனர்: ஓ கடவுளே, எங்களை விடுவியுங்கள், எங்கள் வழிகாட்டி ஆகுங்கள். அவர் முக்தியளிப்பவர் ஆகினால், அவர் நிச்சயமாக இங்குவர வேண்டும். அதன் பின்னர் வழிகாட்டியாகி எங்களை வீட்டிற்குத் திரும்பி அழைத்துச் செல்ல வேண்டும். தந்தை உங்களைப் பல நாட்களுக்குப் பின் காண்பதால் அவர் மிகவும் சந்தோஷமடைகின்றார். அவர் எல்லைக்குட்பட்ட தந்தையாவார். இவர் எல்லையற்ற தந்தையாவார். பாபா படைப்பவர். அவர் அதனைப் படைத்து, பின்னர் அவரே அதனைப் பராமரிக்கின்றார். நீங்கள் மறுபிறவி எடுக்க வேண்டும். சிலர் 10 குழந்தைகளையும் சிலர் 12 குழந்தைகளையும் கொண்டுள்ளார்கள். ஆனால் அவை அனைத்தும் காகத்தின் எச்சத்தைப் போன்று எல்லைக்குட்பட்ட சந்தோஷமே ஆகும். அவர்கள் தமோபிரதான் ஆகுகிறார்கள். தமோபிரதான் ஸ்திதியில் சிறிதளவு சந்தோஷமே உள்ளது. நீங்கள் சதோபிரதானாகும் போது அதிகளவு சந்தோஷம் இருக்கும். தந்தை வந்து சதோபிரதானாகும் வழிமுறையை உங்களுக்குக் கூறுகின்றார். தந்தையைச் சர்;வசக்திவான் என அழைக்கின்றார்கள். கடவுள் சர்வசக்திவான் என்றும், அவரால் விரும்பியவற்றையெல்லாம் செய்ய முடியும் என்றும,; மரணித்தவரை அவரால் உயிர்பெறச் செய்ய முடியும் என்றும், மக்கள் நினைக்கிறார்கள். ஒருவர் ஒருமுறை எழுதினார்: ~~நீங்கள் கடவுளாயின், இந்த ஈயை உயிர்பித்து, அதனை பறக்கச் செய்து காட்டுங்கள்|. அவர்கள் அத்தகைய பல வினாக்களை வினவுகிறார்கள். தந்தை உங்களுக்கு இராவணனை வெற்றி கொள்வதற்கான சக்தியைக் கொடுக்கின்றார். ஒரு குரங்கு போன்றிருந்த நீங்கள் ஓர் ஆலயத்தில் அமரத் தகுதிவாய்ந்தவராக ஆகுகின்றீர்கள். பின்னர் அவர்கள் அவ்வாறான கதைகளை உருவாக்கியுள்ளார்கள். உண்மையில், நீங்கள் அனைவரும், சீதைகள், பக்தர்கள்;. நீங்கள் அனைவரும் இராவணனிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் இராவணனிடமிருந்து ஒருபோதும் சந்தோஷத்தைப் பெறமாட்டீர்கள். இந்நேரத்தில் அனைவரும் இராவணனின் சிறையில் உள்ளார்கள். நீங்கள் இராமரின் சிறையில் இருக்கிறீர்கள் எனக் கூறப்படுவதில்லை. இராமர் வந்து உங்களை இராவணனின் சிறையில் இருந்து விடுவிக்கின்றார்;. அவர்கள் 10 தலைகளுடனான இராவணனை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் அவனை 20 கரங்களுடன் காட்டியுள்ளார்கள். அவை ஆண்களின் ஐந்து விகாரங்களும், பெண்களின் ஐந்து விகாரங்களும் எனத்; தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அது ஐந்து விகாரங்கள் என்ற வடிவத்தில் உள்ள இராவண இராச்சியம் அல்லது மாயையின் இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. ~~இவரிடம் அதிக மாயை (செல்வம்) உள்ளது|| என்றோ அல்லது ~~அவரிடம் மாயையின் போதை அதிகளவு உள்ளது|| என்றோ கூறப்படுவதில்லை. இல்லை. செல்வம் மாயை அல்ல. செல்வம், செழிப்பு எனப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் செழிப்புப் போன்றவற்றை அதிகளவில் பெறுகிறீர்கள். நீங்கள் எதனையும் கேட்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இது ஒரு கல்வியாகும். ஒரு கல்வியில் ஏதாவது கேட்க வேண்டிய தேவை உண்டா? ஆசிரியர் எதனைக் கற்பித்தாலும் அதனை மாணவன் கற்க வேண்டும். அதிகளவு கற்றால் நீங்கள் அதிகமாகப் பெறுவீர்கள். எதனையும் கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. இதற்குத் தூய்மையும் தேவைப்படுகிறது. ஒரு வார்த்தை என்றாலும் அதற்கு எவ்வளவு பெறுமதி உள்ளதெனப் பாருங்கள். பலமில்லியன்கள். தந்தையை இனங்கண்டு அவரை நினைவு செய்யுங்கள். தந்தை உங்களுக்கு இனங்காணுதலைக் கொடுத்துள்ளார்: எவ்வாறு ஓர் ஆத்மா ஒரு புள்ளியோ அதே போன்று நானும் ஒரு புள்ளியான, ஓர் ஆத்மாவே. அவர் என்றென்றும் தூய்மையானவர். அவரே அமைதிக்கடலும், ஞானக்கடலும், தூய்மைக்கடலும் ஆவார். ஒரேயொருவரின் புகழ் உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கெனச் சொந்தப் பதவி உள்ளது. கடவுள் ஒவ்வொரு சிறு துணிக்கைகளிலும் இருக்கிறார் என்றதொரு நாடகத்தை அவர்கள் காட்டியுள்ளார்கள். நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு இதைப் பற்றித் தெரியும். பாபா மகாவீர் குழந்தைகளுக்குக் கூறுகிறார்: நீங்கள் எங்கும் செல்லலாம். நீங்கள் அனைத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்க வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இராம இராச்சியத்தை ஸ்தாபித்து, இராவண இராச்சியத்தை முடித்து விடுகிறீர்கள். இதுவோ எல்லையற்ற விடயமாகும். அவர்கள் எல்லைக்குட்பட்ட கதைகளை உருவாக்கியுள்ளார்கள். நீங்களே சிவசக்தி சேனை. சிவனே சர்வசக்திவான். சிவசேனையாகிய நீங்கள் சிவனிடமிருந்து சக்தியை எடுக்கிறீர்கள். பின்னர் அம்மக்கள் சிவசேனை (அரசியல் கட்சி) என்ற பெயரைக் கொடுத்துள்ளார்கள். உங்கள் பெயர் என்னவாக இருக்கும்? நீங்கள் பிரஜாபிதா பிரம்மகுமாரர், குமாரிகள் எனப் பெயரிடப்பட்டுள்ளீர்கள். அனைவரும் சிவனின் குழந்தைகள். முழு உலகிலும் உள்ள ஆத்மாக்களும் அவருடைய குழந்தைகளே. நீங்கள் சிவனிடமிருந்து சக்தியைப் பெறுகிறீர்கள். சிவபாபா உங்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதன் மூலம் நீங்கள் முழு உலகையும் அரைக்கல்பத்திற்கு ஆட்சி புரியக்கூடியளவிற்கு அதிகளவு சக்தியைப் பெறுகிறிர்கள். உங்களடையது யோகசக்தி, ஆனால் அவர்களுடையதோ பௌதீக சக்தியாகும். பாரதத்தின் புராதன இராஜயோகம் நினைவு கூரப்படுகின்றது. பாரதத்தின் புராதன யோகத்தையே மக்கள் கற்க விரும்புகின்றார்கள். அதன் மூலமே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டது. கிறிஸ்துவிற்குப் பல வருடங்களுக்கு முன் சுவர்க்கம் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அது எவ்வாறு உருவாக்கப்பட்டது? யோகத்தின் மூலமாகும். நீங்கள் இல்லறப்பாதைக்குரிய சந்நியாசிகள். அம்மக்கள் வீட்டையும் குடும்பத்தையும் விட்டுப்பிரிந்து காடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். நாடகத்;திற்கேற்ப, ஒவ்வொருவரும் தமது சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார்கள். அத்தகையதொரு சின்னஞ்சிறிய ஆத்மா பெரியதொரு பாகத்தைக் கொண்டுள்ளார். இதனை இயற்கை என்றே கூற முடியும். தந்தை என்றென்றும் சக்தி வாய்ந்தவரும், சத்தியயுகத்தவரும் ஆவார். நீங்கள் இப்பொழுது அவரிடமிருந்தே சக்தியைப் பெறுகிறீர்கள். இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் ஆயிரம் சூரியன்களிலும் விட ஒளி மிக்கவர் என்றில்லை. கடவுளின் மீதுள்ள அவர்களின் பக்திபூர்வமான உணர்வுகள் எதுவோ, அந்த நோக்குடனேயே அவர்கள் அவரைப் பார்க்கின்றார்கள். அவர்களுடைய கண்கள் சிவந்து விடுகிறது. ~~அதனை நிறுத்துங்கள்! இதனை நான் மேலும் சகித்துக் கொள்ள முடியாது||. தந்தை கூறுகிறார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சம்ஸ்காரங்கள் ஆகும். இது நீங்கள் கற்க வேண்டிய ஞானமாகும். தந்தையும் ஓர் ஆசிரியரே. அவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் எங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான்; ஆகவேண்டும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: தீயதைச் செவிமடுக்காதீர்கள். இதைக் கூறியவர் யாரென்று மக்களுக்குத் தெரியாது. முன்னர் அவர்கள் குரங்குகளின் வடிவங்களைக் காட்டுவது வழக்கம். இப்பொழுது அவர்கள் தொடர்ந்தும் இது மனிதர்களின் ஒரு வடிவம் எனக் காட்டுகின்றார்கள். புத்திரி நளினியினால் ஆக்கப்பட்ட ஒரு புகைப்படம் பாபாவிடம் உள்ளது. மக்கள் பக்தியில் அதிகளவு போதை கொண்டிருந்தார்கள். அது பக்தியின் இராச்சியமாகும். இது இப்பொழுது ஞான இராச்சியம் ஆகுகின்றது. அதில் ஒரு வேறுபாடு உள்ளது. உண்மையில் ஞானத்தின் மூலம் பெருமளவு சந்தோஷம் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில் தொடர்ந்தும் நீங்கள் ஏணியில் கீழிறங்கி வருகிறீர்கள். முதலில் நாங்கள் சத்திய யுகத்திற்குச் சென்று பின்னர் ஒரு பேனைப் போன்று கீழிறங்கி வந்துள்ளோம். 1250 வருடங்களில் நாங்கள் இரண்டு கலைகள் மாத்திரம் குறைந்தவர்களாக ஆகினோம். சந்திரனின் உதாரணமும் உள்ளது. சந்திர கிரகணம் உள்ளது. சுவர்க்க கலைகள் தொடர்ந்தும் குறைவடைகிறது. பின்னர் படிப்படியாக அவை அதிகரித்து 16 சுவர்க்கக்கலைகளும் நிறைந்தவராகுகின்றனர். அது ஒரு தற்காலிக விடயமாகும். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். இந்நேரத்தில், அனைவர் மீதும் ராகுவின் சகுனம் உள்ளது. வியாழ சகுனங்கள் மிகவும் உயர்ந்ததாகும். ராகுவின் சகுனங்களே மிகவும் தாழ்ந்தவையாகும். இவை உங்களை முற்றிலும் கடனாளியாக்கி விடுகிறது. நாங்கள் வியாழ சகுனத்தினால் மேலே ஏறுகின்றோம். அம்மக்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியாது. இப்பொழுது அனைவர் மீதும் ராகுவின் சகுனம் உள்ளது. இதனை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். வேறு எவருக்கும் தெரியாது. ராகுவின் சகுனமே உங்களை வளமற்றவர்கள் ஆக்குகின்றது. வியாழசகுனத்தினால் நீங்கள் செழிப்பானவராகுகிறீர்கள். பாரதம் மிகவும் செழிப்பாக இருந்தது. ஒரே ஒரு பாரதமே இருந்தது. சத்தியயுகத்தில் புகழ்ச்சிக்குரிய தூய இராச்சியமான இராம இராச்சியம் இருந்தது. தூய்மையற்ற இராச்சியத்தவர்கள் பாடுகிறார்கள்: நாங்கள் தெய்வீகக் குணங்கள் எதுவுமற்றவர்கள். எங்களிடம் எந்த தெய்வீகக்குணங்களும் இல்லை. அவர்கள் நிர்குன் (தெய்வீகக் குணங்கள் அற்றவர்கள்) என்று அழைக்கப்படும் ஒரு ஸ்தாபனத்தை ஸ்தாபித்துள்ளார்கள். உண்மையில் முழு உலகமுமே தெய்வீகக் குணங்கள் அற்ற ஒரு ஸ்தாபனமாகும். ஒன்று மாத்திரமே என்ற கேள்வி இல்லை. குழந்தைகளே எப்பொழுதும் மகாத்மாக்கள் எனக் கூறப்படுகிறார்கள். பின்னர் நீங்கள் அவர்களிடம் எந்தத் தெய்வீகக் குணங்களும் இல்லை எனக் கூறுகிறீர்கள். முழு உலகமுமே ராகுவின் சகுனத்தை அனுபவம் செய்கின்றது, ஏனெனில் அவர்களிடம் எந்தத் தெய்வீகக் குணங்களும் இல்லை. தந்தை இப்பொழுது கூறுகிறார்: ஒரு தானத்தைச் செய்தால், கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்பட்டுவிடும். அனைவரும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் உங்கள் சரீரம் உட்பட சகல சரீர சமயங்களையும் துறந்து விடவேண்டும். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இப்பொழுது நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில் தூய்மையில்லாமல் எவருமே வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. தந்தை இப்பொழுது உங்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான வழிமுறைகளைக் காட்டுகின்றார். எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள். சிலர் கூறுகிறார்கள்: பாபா நாங்கள் மறந்து விடுகின்றோம். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் தூய்மையாக்குகின்ற தந்தையை மறந்து விட்டால், எவ்வாறு உங்களால் தூய்மை ஆகமுடியும்? நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! மிருகங்களும் தங்கள் தந்தையை மறந்து விட்டதாக ஒருபோதும் கூறுவதில்லை. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? நானே உங்கள் எல்லையற்ற தந்தை. உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறவே நீங்கள் வந்துள்ளீர்கள். அசரீரியான தந்தை பௌதீக உலகிற்குள் வரும் போதே, அவரால் கற்பிக்க முடியும். தந்தை இப்பொழுது இவருக்குள் பிரவேசித்துள்ளார். இணைந்திருக்கின்ற நாங்களே பாப்தாதா ஆவோம். இரு ஆத்மாக்களும், இந்த நெற்றியின் நடுவில் இருக்கிறார்கள். ~~பாப்தாதா|| என்று நீங்கள் கூறும்போது, இரு ஆத்மாக்களும் நிச்சயமாக இருக்க வேண்டும். சிவபாபாவும் பிரம்மா ஆத்மாவும். நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மகுமார், குமாரிகளாகிவிட்டீர்கள். நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதால் நீங்கள் சகோதரர்கள் என அறிந்து கொண்டீர்கள். பின்னர் நீங்கள் பிரஜாபிதா பிரம்மா மூலம் சகோதர சகோதரிகள் ஆகுகிறீர்கள். இந்த நினைவு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். எனினும், சகோதர சகோதரிகளின் மத்தியிலும், பெயரினதும் வடிவத்தினதும் ஈர்ப்பு உள்ளது என்பதை பாபா பார்க்கின்றார். பலர் பாவகரமான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். இது ஏனெனில் நீங்கள் சரீரத்தையே பார்ப்பதனால், பாவகரமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, மற்றவர்களை சகோதரத்துவப் பார்வையுடன் பாருங்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. அவர்கள் சகோதரர்கள் என்றால், நிச்சயமாகத் தந்தையும் இருக்க வேண்டும். அனைவருக்கும் ஒரேயொரு தந்தையே உள்ளார். அனைவரும் தந்தையை நினைவு செய்கிறார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நீங்கள் சதோபிரதான் ஆக N;;;வண்டுமானால், சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் என்னை எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ அந்தளவிற்கே துரு அகற்றப்படுவதுடன் சந்தோஷ பாதரசமும் உயரும். அப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக் கிரமமாக அந்த ஈர்ப்பை நீங்கள் உணருவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கல்வியில் முழுக்கவனத்தையும் செலுத்தி உங்களையே நீங்கள் செழிப்பானவராக்குங்கள். எதனையும் கேட்காதீர்கள். ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதன் மூலமும், தூய்மையைக் கிரகிப்பதன் மூலமும் பல் கோடீஸ்வரர் ஆகுங்கள்.

2. ராகுவின் சகுனங்களிலிருந்து விடுபடுவதற்கு விகாரங்களைத் தானம் செய்யுங்கள். தீயதைச் செவிமடுக்காதீர்கள்...... ஏணியிலிருந்து கீழிறங்குவதற்கும், தெய்வீகக் குணங்கள் அற்றவராகுவதற்கும் காரணமாகவிருந்த விடயங்களை உங்கள் புத்தியிலிருந்து அகற்றி விடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பணிவானராக இருப்பதனால், மகத்துவமானவர் ஆகி, ~~நீங்கள் முதலில்|| என்ற மந்திரத்தினால் அனைவரிடமிருந்தும் மரியாதையை பெறுவீர்களாக.

நீங்கள் சதா ~~ஒவ்வொரு வழியிலும் பணிவாகவும் மகத்துவமானவர்களாகவும் இருப்பவர்கள்|| என்ற மந்திரத்தை நினைவுசெய்ய வேண்டும். ~~நீங்கள் முதலில்|| எனக் கூறுவதே, அனைவரிடமிருந்தும் மரியாதையை பெறுவதற்கான வழியாகும். ஆசீர்வாதம் என்ற வடிவத்தில், சதா இந்த மந்திரத்தை உங்களுடன் வைத்திருந்து மகத்துவமானவர் ஆகுங்கள். ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படுவதன் மூலம், உங்கள் இலக்கிற்கு உங்களால் பறக்க முடியும். உங்கள் ஆசீர்வாதங்களை பயன்படுத்தாத போது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியேற்படும். நீங்கள் தொடர்ந்தும் ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்பட்டு, உங்கள் ஆசீர்வாதங்களை, பணியில் பயன்படுத்தும் போது, சதா திருப்தியையும் வெற்றியையும் தொடர்ந்தும் அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
உங்கள் தோற்றத்தினால் சேவை செய்வதற்கு, உங்கள் புன்னகைத்த, களிப்பூட்டும், முதிர்ச்சியான வடிவம் வெளிப்படட்டும்.