29.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது மேலேறுவதற்கான, சத்தியமானவரின் உண்மையான சகவாசமாகும். இப்பொழுது நீங்கள் உண்மையான தந்தையின் சகவாசத்தில் இருக்கின்றீர்கள். எனவே, ஒருபொழுதும் பொய்யான சகவாசத்தை வைத்திருக்காதீர்கள்.

பாடல்:
எதன் அடிப்படையில் குழந்தைகளாகிய உங்களின் புத்தி எல்லையற்றதில் ஸ்திரமாக இருக்கின்றது?

பதில்:
உங்கள் புத்தியில் சுயதரிசனச் சக்கரம் தொடர்ந்தும் சுழலட்டும். நாடகத்தில் நிகழ்பவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டதாகும். அதில் ஒரு விநாடி வேறுபாடேனும் இருக்க முடியாது. உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும். இது உங்கள் புத்தியில் மிக நன்றாக இருக்கும் பொழுது, உங்களால் எல்லையற்றதில் ஸ்திரமாக இருக்க முடியும். எல்லையற்றதில் ஸ்திரமாக இருப்பதற்கு, விநாசம் இப்பொழுது இடம்பெறவுள்ளது, நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை அறிந்திருங்கள். நாங்கள் தூய்மையாகிய பின்னர் மாத்திரமே வீடு திரும்புவோம்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் விவேகம் அற்றவர்களுக்கே விளங்கப்படுத்துகின்றார். ஒரு பாடசாலையில், குழந்தைகள் புரிந்துகொள்ளாததனாலேயே ஆசிரியர் கற்பிக்கிறார். அக்குழந்தைகள் தங்களது கல்வியின் மூலம் புரிந்துகொள்கின்றார்கள், குழந்தைகளாகிய நீங்களும் உங்களது கல்வி மூலம் உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் ஒருபொழுதும் இதனை மறந்துவிடக்கூடாது. உங்களுக்குக் கற்பிப்பவர் பரமதந்தையாகிய ஆசிரியர், எனவே, நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் மேன்மையானவர்கள் ஆகவேண்டும். சூரிய வம்சமே அனைத்திலும் அதி மேன்மையானதாகும். சந்திர வம்சமும் மேன்மையானதேயாயினும், அவர்களே (சூரிய வம்சத்தவர்கள்) அனைவரிலும் அதி மேன்மையானவர்கள். நீங்கள் அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அத்தகையதொரு பாடசாலை 5000 வருடங்களுக்குப் பின்னரே திறக்கிறது. இது உண்மையிலேயே சத்தியமானவரின் சகவாசம் என்ற புரிந்துணர்வுடனேயே நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். சத்தியமானவரே அதிமேலானவர். நீங்கள் அவரது சகவாசத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அவர் இங்கமர்ந்திருந்து உங்களைச் சத்திய யுகத்தின் அதிமேன்மையான தேவர்களாக, அதாவது, அவர் உங்களை மலர்கள் ஆக்குகின்றார். நீங்கள் முட்களிலிருந்து மலர்கள் ஆகுகின்றீர்கள். சிலர் உடனடியாக இவ்வாறு ஆகுகின்றார்கள், சிலருக்கு இதற்குக் காலம் பிடிக்;கின்றது. இது சங்கமயுகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். இது அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆகுவதற்கான யுகம் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். எந்த அதி மேன்மையானவர்கள்? நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் அதிமேலான சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற, சத்தியயுகத்தின் சந்தோஷத்தைப் பெறுவதற்காகவே வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். எல்லைக்குட்பட்ட விடயங்கள் அனைத்தும் முடிவடைகிறது. எல்லைக்குட்பட்ட தந்தையர், எல்லைக்குட்பட்ட சகோதரர்கள், குழந்தைகள், தாய்வழி தந்தைவழி மாமன்மார், எல்லைக்குட்பட்ட சொத்துக்கள், அதாவது, எல்லைக்குட்பட்ட செல்வம் போன்ற நீங்கள் பெருமளவில் பற்று வைத்திருக்கின்ற அனைத்தும் அழிவடையவுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இவையனைத்தும் எல்லைக்குட்பட்ட சொத்துக்களாகும். இப்பொழுது நீங்கள் எல்லைற்றதற்குச் செல்லவேண்டும். நீங்கள் எல்லையற்ற சொத்துக்களைப் பெறுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். ஏனைய அனைத்தும் எல்லைக்குட்பட்ட விடயங்கள். சரீரமும் எல்லைக்குட்பட்டதே. ஒருவர் நோய்வாய்ப்படும்பொழுது, மரணிக்கின்றார்; அகால மரணம் உள்ளது. இந்நாட்களில் மக்கள் தொடர்ந்தும் எவற்றையெல்லாம் கண்டுபிடிக்கின்றார்கள் எனப் பாருங்கள். விஞ்ஞானமும் அற்புதங்களைச் செய்துள்ளது. மாயையின் பகட்டு அதிகளவில் உள்ளது. விஞ்ஞானிகள் பெருமளவு தைரியத்தைக் கொண்டிருக்கின்றார்கள்; இதுவே தங்களுக்குச் சுவர்க்கம் எனப் பல கட்டடங்களையும், மாளிகைகளையும் கொண்டிருப்பவர்கள் நம்புகின்றார்கள். சத்தியயுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அது புதிய உலகமாகும். தந்தை கூறுகின்றார்: அவர்கள் முற்றிலும் விவேகமற்றவர்கள். நீங்கள் மிகவும் விவேகிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஏணியில் மேலேறி, பின்னர் கீழிறங்குகின்றீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் விவேகிகளாக இருந்தீர்கள். பின்னர், 84 பிறவிகளை எடுக்கையில் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை வந்து, உங்களைத் தெய்வீகப் புத்தியைக் கொண்டவர்கள் என அழைக்கப்படுகின்ற, விவேகிகள் ஆக்குகின்றார். தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்த நீங்கள் மிகவும் விவேகிகளாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கின்ற ஆஸ்தியின் மூலம் நாங்கள் ஆகாயம், பூமி முழுவதினதும் அதிபதிகள் ஆகுகின்றோம் என்பது நினைவுகூரப்படுகின்றது. எவராலுமே எங்களிடமிருந்து அவற்றை அபகரிக்க முடியாது. எவருமே அதில் தலையிட முடியாது. தந்தை உங்களுக்குப் பெருமளவு கொடுக்கின்றார். அரைக் கல்பமாக நீங்கள் நினைவு செய்துவந்த அத்தகைய தந்தையைச் சந்திக்கும்பொழுது, அவர் நிரப்புமளவிற்கு வேறு எவராலுமே உங்களது புத்தியை நிரப்ப முடியாது. மக்கள் துன்பத்தின் பொழுதே கடவுளை நினைவுசெய்கின்றார்கள். நீங்கள் சந்தோஷத்தில் இருக்கும் பொழுது, அவரை நினைவு செய்யவேண்டிய தேவையில்லை. அனைவரும் துன்பத்தில் கதறி அழுகின்றனர்: ஓ இராமா! இவ்வாறாக அவர்கள் சகலவிதமான வார்த்தைகளையும் கூறுகின்றனர். சத்தியயுகத்தில் அத்தகைய வார்த்தைகள் கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையுடன் நேரடியாகக் கற்;பதற்காக இங்கு வந்துள்ளீPர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து வாசகங்களை நேரடியாகக் கேட்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஞானத்தை மறைமுகமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் ஞானத்தை நேரடியாகவே பெறுகின்றீர்கள். தந்தை இங்கு வர வேண்டும். அவர் கூறுகின்றார்: நான் எனது இனிமையிலும் இனிமையான குழந்தைகளிடம் வந்துவிட்டேன். நீங்கள் என்னைக் கூவியழைக்கின்றீர்கள்: ஓ பாப்தாதா! தந்தையும் பதிலளிக்கின்றார்: ஓ குழந்தைகளே! இப்பொழுது என்னை மிக நன்றாக நினைவு செய்யுங்கள். என்னை மறந்துவிடாதீர்கள்! மாயையின் புயல்கள் பல வரும். அவள் நீங்கள்; கற்பதை நிறுத்தி, உங்களைச் சரீர உணர்வுடையவர்கள் ஆக்குவாள். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். இதுவே உங்களை மேலேறச் செய்கின்ற, சத்தியமானவரின் உண்மையான ஆன்மீகச் சகவாசமாகும். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்கள் கீழிறங்கச் செய்பவையாகும். ஒருமுறை மாத்திரமே நீங்கள் சத்தியமானவரின் சகவாசத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் பிறவிபிறவியாகப் பல தடவைகள் பொய்யான சகவாசத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இது உங்கள் இறுதிப் பிறவியாகும். இப்பொழுது நீங்கள் எதுவும் குறைவின்றி உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும், நீங்கள் அதற்காகவே முயற்சி செய்கின்றீர்கள். இந்நேரத்தில் பாபா கூறுவனவற்றை நீங்கள் செவிமடுக்கின்றீர்கள். அங்கே அது பற்றிய விழிப்புணர்வுகூட உங்களுக்கு இருக்கமாட்டாது. இப்பொழுது நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்? உங்கள் சந்தோஷ தாமத்துக்காகும். சந்தோஷ தாமம் உங்களுடையதாக இருந்தது. நீங்கள் சந்தோஷ தாமத்தில் இருந்தீர்கள், இப்பொழுது துன்ப பூமியில் இருக்கின்றீர்கள். பாபா உங்களுக்கு மிக இலகுவான பாதையைக் காட்டியுள்ளார். எனவே, அதனை நினைவு செய்யுங்கள். எங்களது வீடு அமைதி தாமமாகும். அங்கிருந்து நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வோம். உங்களைத் தவிர வேறு எவருமே சுவர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். எனவே, நீங்கள் மாத்திரமே அதனை நினைவு செய்வீர்கள். நாங்கள் முதலில் சந்தோஷத்துக்குள்ளும், பின்னர் துன்பத்துக்குள்ளும் செல்கின்றோம். கலியுகத்தில் சந்தோஷ தாமம் கிடையாது. இங்கு நீங்கள் எந்தச் சந்தோஷத்தையும் பெற முடியாது. இதனாலேயே சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது எனச் சந்நியாசிகள் கூறுகின்றனர். பாபா எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அவர் தூய்மையற்றிருக்கின்ற எங்களைத் தூய்மையாக்கி மீண்டும் அழைத்துச் செல்வார். நாங்கள் நினைவு யாத்திரை மூலம் தூய்மையாகுவோம். யாத்திரையொன்றில் பெருமளவு தளம்பல் உள்ளது. சிலர் நோய்வாய்ப்பட்டு வீடு திரும்புகின்றார்கள். இங்கும் அவ்வாறேயாகும். இந்த ஆன்மீக யாத்திரையில் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்களது இலக்கிற்கு அழைத்துச் செல்லும். நாங்கள் எங்களது அமைதிதாமத்திற்குச் செல்கின்றோம். அது மிக இலகுவானதாயினும், மாயை உங்களைப் பெருமளவில் மறந்துவிடச் செய்கின்றாள். உங்கள் யுத்தம் மாயையுடனேயே ஆகும். தந்தை அனைத்தையும் மிகவும் இலகுவானதாக்கி, நீங்கள் இப்பொழுது அமைதிதாமத்திற்குச் செல்கின்றீர்கள் என விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். நீங்கள் மூன்று அல்லது நான்கு பிரதான விடயங்களை உங்களது புத்தியில் வைத்திருக்க வேண்டும். விநாசம் நடைபெற வேண்டும். நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் திரும்பிச் சென்றோம். பின்னர், நாங்களே முதலாவதாகக் கீழிறங்குவோம். இராமர் சென்றார், இராவணனும் சென்றான் என்பது நினைவு கூரப்படுகின்றது. அனைவரும் மௌன தாமத்திற்குச் சென்றாக வேண்டும். நீங்கள் கல்வி கற்கும் அளவிற்கேற்பவே ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். உங்கள் இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. சிலர் காட்சிகள் காணவேண்டும் எனக் கேட்கின்றார்கள். இப்படம் (இலக்ஷ்மி, நாராயணன் படம்) காட்சியில்லாமல் வேறு என்ன? இதைவிட வேறு என்ன காட்சி உங்களுக்கு வேண்டும்? எல்லையற்ற தந்தையின் காட்சியா? வேறு எக்காட்சிகளாலும் எவ்விதப் பயனுமில்லை. மக்கள் பாபாவின் காட்சியொன்றைப் பெற விரும்புகின்றார்கள். பாபாவை விட இனிமையானது எதுவுமே கிடையாது. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்கள் காட்சியைக் கண்டு விட்டீர்களா? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் ஆத்மாக்கள், உங்கள் வீடு அமைதிதாமம் என்ற புரிந்துணர்வை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களது பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து கீழிறங்கி வருகின்றோம். நாடக நியதியின்படி, நாங்கள் முதலில் சத்திய யுகத்திற்குச் செல்கின்றோம். இதுவே இறுதியினதும், ஆரம்பத்தினதும் அதி மங்களகரமான சங்கமயுகமாகும். பிராமணர்கள் மாத்திரமே இந்த யுகத்தில் இருக்கின்றனர். வேறு எவருமில்லை. கலியுகத்தில் பல சமயங்களும், குலங்களும் உள்ளன. சத்தியயுகத்தில் ஒரேயொரு வம்சம் மாத்திரமே இருக்கும். இது இலகுவானது, இல்லையா? இந்நேரத்தில், நீங்கள் இறைகுடும்பமாகிய, சங்கமயுகத்துக்கு உரியவர்கள். நீங்கள் சத்தியயுகத்தவர்களும் அல்ல, கலியுகத்தவர்களும் அல்;ல. ஒவ்வொரு கல்பத்திலும் தந்தை வந்து இக்கல்வியைக் கற்பிக்கின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். எனவே, இவ்விடயங்கள் மாத்திரமே உங்களது புத்தியில் பிரவேசிக்க வேண்டும். அமைதிதாமமும், சந்தோஷதாமமும் இருக்கின்றன. இதுவோ துன்ப பூமியாகும். நீங்கள் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். அதாவது, நீங்கள் இத் துன்ப பூமியை உங்கள் புத்தியிலிருந்து அகற்றுகின்றீர்கள். அம்மக்கள் தங்கள் புத்தி மூலம் எதனையும் அகற்றுவதில்லை. அவர்கள் தங்களது வீட்டையும், குடும்பத்தையும் விட்டு நீங்கி, துறவறத்தை மேற்கொள்கின்றார்கள். உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் விட்டு நீங்குமாறு தந்தை ஒருபொழுதுமே உங்களுக்குக் கூறுவதில்லை. ஆம், நிச்சயமாக நீங்கள் பாரதத்திற்கும், அத்துடன் உங்களுக்கும் சேவை செய்ய வேண்டும். நீங்கள் வீட்டில் அம்ர்ந்திருக்கும் பொழுதும் சேவை செய்யலாம். நீங்கள் கற்பதற்காக நிச்சயமாக இங்கு வரவேண்டும். பின்னர் நீங்கள் புத்திசாலியாகுவதுடன், மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்க வேண்டும். இன்னமும் மிகச்சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது. பெருமளவு காலம் கடந்துவிட்டது, இன்னமும் சொற்ப காலமே எஞ்சியிருக்கின்றது என நினைவுகூரப்படுகின்றது. உலக மக்கள் முற்றிலும் இருளில் இருக்கின்றார்கள். இன்னமும் 40,000 வருடங்கள் எஞ்சியிருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது குறுகிய காலமே எஞ்சியிருக்கின்றது. நீங்கள் எல்லையற்றதில் உங்களை ஸ்திரப்படுத்த வேண்டும். முழு உலகிலும் நிகழ்கின்ற அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவையாகும். நாடகம் ஒரு பேனைப் போன்று நகர்ந்து செல்கின்றது. உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும். சத்தியயுகத்திற்குச் செல்லவிருப்பவர்கள் மாத்திரமே இங்கு வந்து கற்பார்கள். நீங்கள் பல தடவைகள் கற்றிருக்கின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களது சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அதிமேலான கடவுள் பாரதத்திற்கு வருகின்றார் என்பதனையும் நீங்கள் அறிவீர்கள். அவர் முன்னைய கல்பத்திலும் வந்தார். நீங்கள் கூறுவீர்கள்: அத்தகைய தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். அவர் கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் இந்த ஸ்தாபனையை மேற்கொள்வேன். நீங்களே விநாசத்தைப் பார்ப்பவர்கள். அனைத்தும் தொடர்ந்தும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். ஸ்தாபனை, விநாசம், பராமரிப்பு ஆகிய செயல்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதனை நீங்கள் அறிவீர்கள். பின்னர், நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். முன்னர் இதனை நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் தந்தையை அறிந்துகொள்வதன் மூலம், அவரிடமிருந்து அனைத்தையுமே அறிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் உலகின் வரலாற்றையும் புவியியலையும் மிகச்சரியாக அறிவீPர்கள். மக்கள் எவ்வாறு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றார்கள் என்பதனைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பின்னர், நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தெய்வீகப் புத்தியைக் கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். சத்தியயுகத்தில் தெய்வீகப் புத்தியைக் கொண்டவர்கள் மாத்திரமே உள்ளனர். இது அதி மங்களகரமான சங்கமயுகமாகும். இது நீங்கள் கல்லுப்புத்தியை உடையவர்களிலிருந்து தெய்வீகப் புத்தி உடையவர்களாகுகின்ற, கீதையின் அத்தியாயம் எனவும் அழைக்கப்படுகின்றது. வேறு எந்த மனிதருமன்றி, கடவுளே உங்களுக்குக் கீதையைப் பேசுகின்றார், ஆத்மாக்களாகிய நீங்கள் அதனைச் செவிமடுத்து, பின்னர் அதனை மற்றவர்களுக்கு உரைக்கின்றீர்கள். இது நீங்கள் உங்களது ஆன்மீகச் சகோதரர்களுக்கு எடுத்துரைக்கின்ற, ஆன்மீக ஞானம் என அழைக்கப்படுகின்றது. தொடர்ந்தும் விரிவாக்கம் உள்ளது. பாபா வந்து சூரிய, சந்திர வம்சங்களை ஸ்தாபிக்கின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். அவர் யார் மூலம் அவற்றை ஸ்தாபிக்கின்றார்? பிராமண குலத்தின் அலங்காரங்களாகிய, பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள் மூலம் ஆகும். தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். நீங்கள் உங்களது இதயங்களில் இதனைக் குறித்துக் கொள்ள வேண்டும். இது மிக இலகுவானது. இது துன்ப பூமியாகும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் உள்ளது. இது மிகவும் சிறிய விடயமும், அத்துடன் மிக இலகுவானதுமாகும். நீங்கள் கல்வியறிவு அற்றவராக இருந்தால் பரவாயில்லை. நீங்கள் இதனைக் கற்றவர்களிடம் செவிமடுக்க வேண்டும். சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். இப்பொழுது நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். தந்தை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குமாயின், நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள். உங்களின் உள்ளே ஓசையற்ற மந்திரம் தொடரட்டும். நான் சிவபாபாவிடமிருந்து எல்லையற்ற சந்தோஷம், மற்றும் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றேன். இதனாலேயே நீங்கள் நிச்சயமாக சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களது ஆஸ்தியைக் கோருகின்ற உரிமை உங்கள் அனைவருக்கும் இருக்கின்றது. எல்லைக்குட்பட்ட பிறப்புரிமையை நீங்கள் கொண்டிருப்பதைப் போன்றே இதுவும் ஓர் எல்லையற்ற பிறப்புரிமையாகும். நீங்கள் சிவபாபாவிடமிருந்து முழு உலக இராச்சியத்தையும் பெறுகின்றீர்கள். நீங்கள் சிறு குழந்தைகளுக்கும் இதனை விளங்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் தந்தையிடமிருந்து தனது பிறப்புரிமையைக் கோருகின்ற உரிமையைக் கொண்டிருக்கின்றார். நீங்கள் நிச்சயமாக ஒவ்வொரு கல்பத்திலும் அதனைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். முக்தி எனும் ஆஸ்தியைப் பெறுபவர்கள் நிச்சயமாக ஜீவன்முக்தியையும் பெறுவார்கள். அவர்களது முதல் பிறவி சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். இது உங்கள் 84வது பிறவியாகும். உங்கள் புத்தியில் இந்த ஞானம் முழுவதும் இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதனை மறந்துவிடாதீர்கள். சரீரதாரிகளால் ஒருபொழுதுமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அவர்களிடம் ஆன்மீக ஞானம் இல்லை. நீங்கள் உங்களைச் சகோதரர்களாகக் கருத வேண்டும் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. வேறெந்த மனிதர்களும் இக்கற்பித்தல்களைப் பெறுவதில்லை. அவர்கள் கீதையை உரைத்து, “கடவுள் பேசுகின்றார்: காமமே மாபெரும் எதிரி. அதனை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகையே வெற்றி கொள்கின்றீர்கள்” எனக் கூறினாலும் அவர்கள் அதனைப் புரிந்துகொள்வதில்லை. கடவுள் சத்தியமானவர். தேவர்களும் கடவுளிடமிருந்தே சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்கள். ஸ்ரீகிருஷ்ணர் எங்கிருந்து தனது அந்தஸ்தைக் கோரினார்? அவர்கள் எவ்வாறு இலக்ஷ்மி, நாராயணன் ஆகினார்கள்? அவர்கள் எத்தகைய செயல்களைச் செய்தார்கள்? எவராலும் இதனை உங்களுக்குக் கூறமுடியுமா? அசரீரியான தந்தையே பிரம்மா மூலம் அத்தகைய செயல்களை அவர்களுக்குக் கற்பித்தார் என்பதனை நீங்கள் மாத்திரமே இப்பொழுது அறிவீர்கள். இது உலகமாகும். நீங்கள் பிரஜாபிதா பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். உங்களிடம் ஆன்மீகத் தந்தை பற்றிய ஞானம் இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் கடவுளை அறிந்துவிட்டீர்கள் என்பதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். அசரீரியானவரே அதிமேலானவர். அவருக்கென ஒரு பௌதீகச் சரீரம் கிடையாது. நீங்கள் பார்க்கின்ற, ஏனைய அனைவரும் சரீரதாரிகளே. ஆலயங்களிலும், நீங்கள் சிவலிங்கத்தின் உருவத்தைப் பார்க்கின்றீர்கள். அது அவருக்குச் சரீரம் இல்லை என்பதனையே குறிக்கின்றது. அவர் பெயருக்கும், உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதல்ல. ஆம், ஏனைய சரீரதாரிகள் அனைவருக்கும் பெயரிடப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கு ஜாதகமும் உள்ளது. சிவபாபா அசரீரியானவர். அவருக்கென ஜாதகம் எதுவும் கிடையாது. கிருஷ்ணருடையது முதற்தரமானது. மக்கள் சிவனின் பிறந்ததினத்தையும் கொண்டாடுகின்றார்கள். சிவபாபா அசரீரியானவரும், நன்மையளிப்பவரும் ஆவார். தந்தை வருவதால், நிச்சயமாக அவர் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடு;ப்பார். அவரது பெயர் சிவன் என்பதாகும். அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார்: அவரே மூவருமாக உள்ளார். அவர் உங்களுக்கு மிக நன்றாகக் கற்பிக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியிலிருந்து இத் துன்ப பூமியை அகற்றி, உங்கள் விழிப்புணர்வில் அமைதிதாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் வைத்திருங்கள். நிச்சயமாக பாரதத்திற்கும், உங்களுக்கும் உண்மையான சேவை செய்யுங்கள். இந்த ஆன்மீக ஞானத்தை அனைவருக்கும் எடுத்துரையுங்கள்.

2. உங்கள் சத்தியயுகப் பிறப்புரிமையைக் கோருவதற்கு, ஒரேயொரு தந்தைமீது முழுமையான நம்பிக்கை கொண்டிருங்கள். ஓசையற்ற மந்திரத்தைத் தொடர்ந்தும் உள்ளே உச்சரியுங்கள். நிச்சயமாகத் தினமும் கல்வியைக் கற்றிடுங்கள்.

ஆசீர்வாதம்:
தந்தையுடன் அனைத்து உறவுமுறைகளை வைத்திருப்பதுடன், சகல பேறுகளின் சந்தோஷத்தையும் அனுபவம் செய்கின்றதோர்; மனநிறைவான ஆத்மா ஆகுவீர்களாக.

உண்மையான காதலர்களாக இருப்பவர்கள், ஒவ்வொரு சூழ்நிலையின் போதும், ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் சகல பேறுகளினாலும் சதா சந்தோஷமாக இருப்பார்கள். சில குழந்தைகள் அவரை (சிவபாபாவை) தமது தந்தையாகவும், தமது மணவாளனாகவும், தமது குழந்தையாகவும் அனுபவம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தாம் விரும்பியளவிற்கு, பேற்றினை அனுபவம் செய்வதில்லை. எனவே, அந்த அனுபவத்துடன், சகல உறவுமுறைகளின் பேறுகளையும் அவருடன் அனுபவம் செய்யுங்கள். அத்தகைய பேறுகளை கொண்டிருந்து, அதனை அனுபவம் செய்பவர்கள் சதா திருப்தியாக இருக்கிறார்கள். அவர்கள் எவ்வகையிலும் எதிலும் தமக்குக் குறை உள்ளது என உணர்வதில்லை. பேறுகள் எங்குள்ளதோ, அங்கே நிச்சயமாக மனநிறைவு இருக்கும்.

சுலோகம்:
ஓர் கருவியாகும் போது, சேவையின் வெற்றியில் உங்களுக்கு ஓர் பங்கு இருக்கும்.