30.04.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நாள்முழுவதும் நீங்கள் தந்தையை எவ்வளவு நேரம் நினைவு செய்தீர்கள் என்பதைப் பார்ப்பதற்கு உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வியாபாரிகள் என்பதால், நீங்கள் ஏதாவது தவறு செய்தீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள்.

பாடல்:
ஏகாந்தத்தில் இருக்கையில், எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வதற்கு, நீங்கள் எந்தவொரு முயற்சியைச் செய்ய வேண்டும்?

பதில்:
தொடர்ந்தும் உங்கள் முன்னால் தோன்றுகின்ற பிறவிபிறவியாக நீங்கள் செய்தனவற்றிலிருந்து உங்கள் புத்தியை அகற்றி, சதோபிரதான் ஆகுவதற்கு தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களுடைய புத்தியை எல்லாத் திசைகளிலிருந்தும் அகற்றி, அகநோக்குடையவராகி, தந்தையை நினைவு செய்யுங்கள். சேவைக்கான அத்தாட்சியை வழங்குங்கள், நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுவீர்கள்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆன்மீகத் தந்தை, எல்லையற்ற தந்தையாவார். ஆன்மீகக் குழந்தைகளும் எல்லையற்ற குழந்தைகளாவார்கள். தந்தை குழந்தைகள் அனைவருக்கும் சற்கதியை அருள வேண்டும். யாரின் மூலம்? அவர் குழந்தைகளாகிய உங்களின் மூலம் உலகிற்குச் சற்கதியை வழங்க வேண்டும். முழு உலகத்தினதும் குழந்தைகள் இங்கு வந்து கற்க மாட்டார்கள். இது உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் அதை முக்தியென்றோ அல்லது ஜீவன்முக்தியென்றோ அழைப்பினும், அனைவரும் முக்தியைப் பெறுகிறார்கள், அனைவரும் முக்திக்குச் சென்று, பின்னர் ஜீவன்முக்திக்குச் செல்ல வேண்டும். எனவே, அனைவரும் முக்திதாமத்தின் ஊடாக ஜீவன்முக்திக்குச் செல்கிறார்கள் எனக் கூறப்படுகின்றது. அனைவரும் தங்களுடைய பாகத்தை நடிப்பதற்கு ஒருவரின் பின் ஒருவராக கீழே வரவேண்டும். அதுவரை அவர்கள் முக்திதாமத்தில் தங்கியிருக்க வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குப் படைப்பவரைப் பற்றியும், படைப்பைப் பற்றியும் தெரியும். இந்த முழுப் படைப்பும் அநாதியானது. தந்தை ஒருவரே படைப்பவர் ஆவார். ஆத்மாக்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதை அறிந்துக் கொள்ளும் போதே நீங்கள் வந்து, இந்த யோகத்தைக் கற்கின்றீர்கள். இந்த யோகம் பாரதத்திற்கு மாத்திரமே ஆகும். தந்தை பாரதத்திலேயே வருகின்றார். அவர் பாரத மக்களுக்கு நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார். அவர் அவர்களைத் தூய்மையாக்கி, இவ்வுலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்ற ஞானத்தையும் அவர்களுக்குக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்களும் இதனை அறிவீர்கள். நினைவு கூரப்படுவதும், பூஜிக்கப்படுவதுமான உருத்திரரின் மாலையும் உள்ளது. பக்தர்களின் மாலையும் உள்ளது என நினைவு கூரப்படுகின்றது. அதி உயர்ந்த பக்தர்களின் மாலையும் உள்ளது. பக்தர்களின் மாலைக்குப் பின் ஞானமாலையும் இருக்கவேண்டும். ஞானமும், பக்தியும் உள்ளன. பக்தர்களின் மாலையும் உருத்திர மாலையும் உள்ளன. இது பின்னர் உருண்டாவின் மாலையென அழைக்கப்படும். ஏனெனில் மனித உலகில் விஷ்ணுவே அதி உயர்ந்தவர், ஆனால் அவர் சூட்சும உலகிலே காட்டப்பட்டுள்ளார். இவர் பிரஜாபிதா பிரம்மா, இவருடைய மாலையும் உள்ளது. இறுதியில் இந்த மாலையும் உருவாக்கப்படும். ஏனெனில் அப்போதுதான் அது உருத்திர மாலையாகவும் விஷ்ணுவின் வெற்றி மாலையுமாகுகின்றது. சிவபாபாவே அதி உயர்ந்தவர். அதன் பின்னர் அதி உயர்ந்த விஷ்ணுவின் இராச்சியமும் உள்ளது. அவர்கள் பக்தி மார்க்கத்தில் பல அழகான படங்களை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அவர்களிடம் எவ்வித ஞானமுமில்லை. நீங்கள் உருவாக்கியுள்ள படங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்துங்கள். இன்றேல் சிவனையும் சங்கரரையும் கலந்து விடுவார்கள். பாபா சூட்சும உலகில் அனைத்தும் காட்சிகளே என்று விளங்கப்படுத்தியுள்ளார். அங்கு சதையோ எலும்புகளோ இல்லை. அவர்களுக்குக் காட்சிகளே ஏற்படும். அங்கு சம்பூரண பிரம்மாவும் இருப்பார். ஆனால் அவர் முற்றிலும் அவ்யக்தமாகவே இருப்பார். இப்பொழுது பௌதிக பிரம்மா சூட்சுமமாக (அவ்யக்தாக) வேண்டும். பௌதிகமானவர் சூட்சுமமாக வேண்டும். பின்னர் அவர் தேவதை என அழைக்கப்படுகிறார். அவரின் படம் சூட்சும உலகில் காட்டப்பட்டது. உங்களில் சிலர் சூட்சும உலகிற்குச் சென்று, பின்னர் கூறுகிறீர்கள்: பாபா எங்களுக்கு சுபிராஸ் (மாம்பழச்சாறு) பருகக் கொடுத்தார். எனினும் அங்கு மரங்கள் போன்ற எதுவும் இல்லை. சுவர்க்கத்தில் மரங்கள் இருக்கின்றதாயினும் நீங்கள் பருகுவதற்காகப் பாபா அங்கு சென்று, பானத்தைக் கொண்டு வந்தார் என்றில்லை. சூட்சும உலகிலுள்ள அனைத்தும் காட்சிகளே. இப்பொழுது நீங்கள் மீண்டும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனவும், ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டுமெனவும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாவாகிய நான் அழிவற்றவன். ஆனால் இச்சரீரம் அழியக்கூடியது. குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மா பற்றிய ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். அம்மக்கள் ஆத்மா என்றால் என்ன என்பதையுமே அறியாதவர்களாக உள்ளனர். எவ்வாறு ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகமும் பதியப்பட்டுள்ளது என்பதையேனும் அவர்கள் அறியாதுள்ளனர். தந்தை மாத்திரமே இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்குத் தன்னுடைய ஞானத்தையும் கொடுத்து, உங்களைத் தமோபிரானிலிருந்து சதோபிரதான் ஆக்குகின்றார். அவ்வளவுதான். தொடர்ந்தும் இந்த முயற்சியைச் செய்யுங்கள்: நான் ஓர் ஆத்மா. நான் இப்பொழுது பரமாத்மாவான பரமதந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஒரேயொரு தந்தையையே தூய்மையாக்கும் சர்வசக்திவான் என்று அழைக்கிறார்கள். சந்நியாசிகள் கூவியழைக்கிறார்கள்: ஓ! தூய்மையாக்குபவரே, வாருங்கள்! சிலர் பிரம்ம தத்துவத்தை, தூய்மையாக்குபவரென அழைக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பக்தி பற்றிய அறிவைப்; பெறுகிறீர்கள்: பக்தி எவ்வளவு காலத்திற்குத் தொடர்கிறது, ஞானம் எவ்வளவு காலத்திற்குத் தொடர்கிறது. தந்தை இங்கு அமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். முன்னர், நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. மனிதர்களாக இருந்த போதிலும் நீங்கள் சீரழிந்த புத்தியைக் கொண்டுள்ளவர் ஆகிவிட்டீர்கள். சத்தியயுகத்தில் அவர்கள் முற்றிலும் தூய்மையான புத்தியையே கொண்டிருந்தார்கள். அவர்கள் பல தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். அவர்கள் கூறுகிறார்கள்: இவர் தேவர் போன்றவர். மக்கள் சாதுக்கள், புனிதர்கள், மகாத்மாக்கள் ஆகியோரை நம்புகின்ற போதிலும் அவர்களில் எவரும் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் ரஜோகுனி புத்தியைக் கொண்டவர்களாகி விட்டார்கள். அரசன், அரசி, பிரஜைகளும் உள்ளனர். உலகத்தினருக்கு எப்பொழுது அல்லது எவ்வாறு இராச்சியம் உருவாக்கப்பட்டது என்று தெரியாது. இங்கு நீங்கள் செவிமடுக்கின்ற அனைத்து விடயங்களும் புதியதாகும். மாலையின் இரகசியங்களும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. தந்தையே அதி மேலானவர், அவருடைய மாலை மேலே உள்ளது. ருத்திரர் அசரீரியானவர். அதன் பின்னர், சரீர வடிவத்திலுள்ள, இலக்ஷ்மி நாராயணனின் மாலையும் உண்டு. இந்நேரத்தில் பிராமணர்களது மாலை உருவாக்கப்படுவதில்லை. பிராமணர்களாகிய உங்களது மாலை இறுதியிலேயே உருவாக்கப்படும். இவ்விடயங்களையிட்டு அதிக கேள்விகளையும் பதில்களையும் விஸ்தரிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, பரமாத்மாவான பரமதந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். இந்த உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதே பிரதான விடயமாகும். முழுஉலகமுமே தூய்மையற்று உள்ளது. பின்னர் இது தூய்மையாக வேண்டும். அசரீரி உலகில் அனைவரும் தூய்மையானவர்கள். சந்தோஷதாமத்திலும் அனைவரும் தூய்மையானவர்கள். நீங்கள் தூய்மையாகி, தூய உலகிற்குச் செல்கிறீர்கள். தூய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதே அதன் அர்த்தமாகும். இவை அனைத்தும் நாடகத்திலே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: முழுநாளுக்குரிய உங்கள் அட்டவணையைப் பாருங்கள். நான் ஏதேனும் தவறு செய்துள்ளேனா? வியாபாரிகள் தங்கள் கணக்குகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு வருமானமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் வியாபாரிகளே, நீங்கள் பாபாவுடன் வியாபாரம் செய்கிறீர்கள். நீங்கள் உங்களையே சோதிக்க வேண்டும். நான் எத்தனை தெய்வீகக் குணங்களைக் கொண்டுள்ளேன்? நான் தந்தையை எவ்வளவிற்கு நினைவு செய்தேன்? நான் எந்தளவிற்கு சரீரமற்றவன் ஆகின்றேன்? நாங்கள் சரீரமற்றவராகவே வந்தோம். சரீரமற்றவராகவே நாங்கள் திரும்ப வேண்டும். இன்றுவரை அனைவரும் தொடர்ந்தும் கீழிறங்கி வந்துள்ளனர். இடையில் எவருமே வீட்டிற்குத் திரும்பிச்செல்ல முடியாது. அனைவரும் ஒன்றாகவே திரும்பிச்செல்ல வேண்டும். உலகம் ஒருபோதும் வெறுமையாக இருப்பதில்லை. நினைவு கூரப்பட்டுள்ளது: “இராமரும் சென்றார். இராவணனும் சென்றான்.” ஆனால் இப்பொழுது இருவரும் இங்கேயே உள்ளார்கள். இராவணனின் சமுதாயம் செல்லும் போது அது மீண்டும் திரும்பி வருவதில்லை. எனினும் இவர்கள் இன்னமும் இங்கிருக்கிறரர்கள். மேலும் முன்னேறுகையில் அனைத்தைப் பற்றிய காட்சிகள் உங்களுக்குக் கிடைக்கும். எவ்வாறு புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது என்றும், இறுதியில் என்ன நிகழும் என்றும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதே எங்கள் தர்மமே நிலைத்திருக்கும். நீங்கள் சத்திய யுகத்தில் ஆட்சி புரிவீர்;கள். கலியுகம் முடிவடையும். சத்திய யுகம் வரவேண்டும். இப்பொழுது இராம சமுதாயமும் இராவண சமுதாயமும் ஆகிய இரண்டும் இங்கு உள்ளன. இவை அனைத்தும் சங்கம யுகத்தில் மாத்திரமே நிகழ்கின்;றன இப்பொழுது நீங்கள் இவை அனைத்தையும் அறிந்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் மேலும் முன்னேறுகையில் உங்களுக்கு எஞ்சியிருக்கின்ற இரகசியங்கள் அனைத்தையும் நான் உங்களுக்குப் படிப்படியாகக் கூறுவேன். நிச்சயிக்கப்பட்டுள்ள பதிவுகள் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படும். நீங்கள் தொடர்ந்தும் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு எதுவும் முன்கூட்டியே கூறப்பட மாட்டாது. இதுவும் நாடகத் திட்டப்படியே ஆகும். பதிவுநாடா தொடர்ந்தும் சுழல்கிறது. பாபா தொடர்ந்தும் பேசுகிறார்: இவ்விடயங்கள் பற்றிய புரிந்துணர்வு தொடர்ந்தும் உங்கள் புத்தியில் அதிகரிக்கிறது. பதிவுநாடா தொடர்ந்து பாடுவது போன்று பாபாவின் முரளியும் தொடரும். நாடகத்தின் இரகசியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலிப்பதிவு கருவியில்; (டேப் ரெக்கோடர்) ஒரு குறித்த பகுதிக்குச் சென்று, அதை இயக்கும் பொழுது மீண்டும் அதனைத் செவிமடுப்பது போன்றது அல்ல. இல்லை. அவ்வாறாயின் அவ்வாறு செய்வதும் மீண்டும் இடம்பெறும். இது புதிதல்ல. தந்தை கூறிய புதியவிடயங்கள் அனைத்துமே, மீண்டும் இடம்பெறும். நீங்கள் இதனைச் செவிமடுத்த பின்னர் அதனைத் தொடர்ந்தும் கூறுவீர்கள். ஏனைய அனைத்தும் மறைமுகமானவை. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. முழு மாலையும் உருவாக்கப்படுகிறது. நீங்கள் தனித்தனியாகச் சென்று இராச்சியத்தில் பிறப்பெடுப்பீர்கள். அரசன், அரசி, பிரஜைகள் அனைவரும் தேவையாகும். இவை அனைத்தையும் நீங்கள் புத்தியினாலேயே செய்ய வேண்டும். நடைமுறை ரீதியில் நிகழ உள்ள அனைத்தையும் நாங்கள் பார்ப்போம். இங்கிருந்து செல்பவர்கள் (மரணிக்கும் போது) சிறந்த செல்வந்தக் குடும்பத்தில் பிறப்பெடுப்பார்கள். இப்போதும் உங்களுக்கு அங்கே பெருமளவு விருந்தோம்பல் இருக்கும். இப்போதும் கூட அனைவரிடமும் இரத்தினங்கள் பதித்த பல பொருட்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர்களிடம் அதிகளவு சக்தி இல்லை. உங்களிடம் சக்தி உள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே அங்கு செல்லும் போது உங்கள் தெய்வீகக் குணங்களை நீங்கள் காட்டுவீர்கள். அசுரக் குழந்தைகள் பிறப்பில் இருந்தே தொடர்ந்தும் அழுகின்றார்கள். அவர்கள் தீயவர்களாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் மேலும் அதிகளவு ஒழுக்கமான முறையில் பராமரிக்கப்படுவீர்கள். அங்கே அசுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பொழுது குழந்தைகள் அதிகளவு தீயவர்கள் ஆகுகின்றார்கள். அவ்வாறான விடயங்கள் சத்தியயுகத்தில் இருக்காது. எவ்வாறாயினும், அதுவே சுவர்க்கமாகும்! அங்கே நீங்கள் எவரையாவது ஊதுபத்தியைக் பற்ற வைக்கும்படி சொல்லும் அளவுக்கு, துர்நாற்றம் எதுவும் இருக்காது. பூந்தோட்டத்தில் மிகவும் நறுமணமுள்ள மலர்கள் இருக்கும். இங்குள்ள மலர்களில் அந்தளவு நறுமணம் இருப்பதில்லை. அங்கே அனைத்தும் 100வீதம் நறுமணமுள்ளதாக இருக்கும். இங்கு 1வீதம் நறுமணம் கூட இல்லை. அங்கே, மலர்கள்கூட முதற்தரமானதாக இருக்கும். இங்கே ஒருவர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், அவர் அந்தளவு செல்வந்தரல்ல. அங்கே பலவகையான பொருட்கள் இருக்கும். அங்கே பாத்திரங்கள் முதலானவை தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். அங்கே தங்கத்தைத் தவிர வேறெதுவுமில்லை, இங்கே அவை கற்களைப் போல் இருக்கின்றன. அங்கே மணலில் கூடத் தங்கம் இருக்கும். கட்டடங்கள் முதலானவை தங்கத்தால் செய்யுமளவுக்கு, அங்கே எவ்வளவு தங்கம் இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அங்குள்ள காலநிலை அதிகளவு வெப்பமானதாகவோ அல்லது அதிகளவு குளிரானதாகவோ இருக்காது. நீங்கள் மின்விசிறியைப் பயன்படுத்தும் அளவுக்கு, அங்கே வெப்பத்தால் அசௌகரியம் எதுவும் ஏற்படாது. அதன் பெயரே சுவர்க்கமாகும். அங்கே எல்லையற்ற சந்தோஷம் இருக்கும். உங்களைப் போல் பலமில்லியன் தடவைகள் பாக்கியசாலிகளாக எவரும் ஆகுவதில்லை. இலக்ஷ்மி நாராயணனின் புகழை மக்கள் அதிகளவு பாடுகிறார்கள். அவர்களை அவ்வாறு ஆக்கியவருக்கு அதிகளவு புகழ் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கலப்படமற்ற பக்தி இருக்கிறது. பின்னர் தேவர்களின் பக்தி ஆரம்பமாகுகின்றது. அது சடப்பொருட்களை பூஜித்தல் எனக் கூறப்படுகின்றது, ஏனெனில் அந்த சரீரங்கள் இப்போது உயிருடன் இல்லை. ஐந்து தத்துவங்களின் வழிபாடு உள்ளது. நீங்கள் அவ்வாறு சிவபாபாவைப் பற்றிக் கூறுவதில்லை. அவர்கள் பூஜிப்பதற்காக, தங்கத்தாலோ அல்லது வேறு பொருட்களாலோ உருவங்களைச் செய்கின்றார்கள். ஓர் ஆத்மா தங்கம் என அழைக்கப்படமாட்டார். ஆத்மா எதனால் உருவாக்கப்பட்டுள்ளார்? சிவனின் உருவம் எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளதென அவர்கள் உங்களுக்கு உடனடியாகக் கூறுவார்கள். ஆனால் ஆத்மாவோ அல்லது பரமாத்மாவோ எதனால் உருவாக்கப்பட்டுள்ளார் என்பதை எவராலும் கூற முடியாது. சத்திய யுகத்தில் ஐந்து தத்துவங்களும் கூட தூய்மையாக இருக்கின்றன. இங்கு அவை தூய்மையற்று இருக்கின்றன. எனவே, முயற்சி செய்கின்ற குழந்தைகள் அவ்வாறான எண்ணங்களைத் தொடர்ந்தும் கொண்டிருப்பார்கள். தந்தை கூறுகிறார்: அவ்வாறான விடயங்களையும் துறந்துவிடுங்கள். எதுவெல்லாம் இடம்பெற வேண்டுமோ அது இடம்பெறும். முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். எல்லாத் திசைகளிலிருந்தும் உங்கள் புத்தியை அகற்றி, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் எதைச் செவிமடுத்தாலும், அதைத் துறந்து, ஒரு விடயத்தை உறுதி ஆக்குங்கள்;: நான் சதோபிரதான் ஆகவேண்டும். சத்தியயுகத்தில் இடம்பெற்றவையெல்லாம், பின்னர், ஒவ்வொரு கல்பத்திலும் இடம்பெறும். அதில் எவ்வித வேறுபாடும் இருக்காது. தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். இதற்கு முயற்சி தேவை. முழுமையாக முயற்சி செய்யுங்கள். பல புயல்கள் வரும். பிறவிபிறவியாக நீங்கள் செய்தவையெல்லாம் உங்கள் முன் வரும். எனவே, உங்கள் புத்தியை எல்லாத் திசைகளிலிருந்தும் அகற்றி, அகநோக்குடையவராக இருந்து, என்னை நினைவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விழிப்புணர்வைக் கொண்டிருந்தாலும், அதுவும் உங்கள் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகவே உள்ளது. உங்களுடைய சேவையிலிருந்தும் ஒருவரால் கூறமுடியும். சேவை செய்கின்றவர், அந்தச் சேவையின் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார். நல்ல சேவை செய்கின்றவர்களின் மூலமே சேவையின் அத்தாட்சி பெறப்படுகின்றது. அவர்கள் இங்கே வழிகாட்டிகளாக வருகின்றனர். அப்போது, யார் மகாராத்திகள் என்பதும், யார் குதிரைப் படையினர் என்பதும், யார் காலாட் படையினர் என்பதும் விரைவாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சதோபிரதான் ஆகுவதற்கு, ஏனைய அனைத்தையும் துறந்து, எல்லாத் திசைகளிலிருந்தும் உங்கள் புத்தியை அகற்றி, சரீரமற்றவராக இருக்கின்ற பயிற்சியைச் செய்யுங்கள். அத்துடன் தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்.

2. நல்ல எண்ணங்களை உங்களுடைய புத்தியில் கொண்டுவாருங்கள். உங்களுடைய இராச்சியத்தில் (சுவர்க்கம்) என்ன இருக்கும் என்பதையிட்டுச் சிந்தித்து, அந்தளவுக்கு உங்களைத் தகுதிவாய்ந்தவராகவும், நன்னடத்தை உள்ளவராகவும் ஆக்குங்கள். இங்கிருக்கின்ற விடயங்கள் அனைத்திலிருந்தும் உங்கள் புத்தியை அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா நிறைவாகவும், சமமாகவும் இருந்து, சகல எல்லைக்கு உட்பட்ட ஆசைகளுக்கும் அப்பால் நிலைத்திருந்து, சேவையின் பலன்களை பெறுவீர்களாக.

சேவை செய்வது என்றால், பலன் தருவனவற்றை செய்வது என்று அர்த்தமாகும். எந்தவொரு சேவையாயினும் உங்களுக்கு அதிருப்தியளிக்குமாயின், அந்தச் சேவை, சேவையே அல்ல. நீங்கள் அந்தச் சேவையை நிறுத்திவிடலாம், ஆனால் உங்கள் திருப்தியை கைவிடாதீர்கள். பௌதீகத்தில், மனநிறைவாக இருப்பவர்கள், திருப்தியாக இருப்பதை போன்றே, மன நிறைவுடன் இருப்பவர்களும், திருப்தியாக இருப்பார்கள். திருப்தியானது மனநிறைவின் அடையாளமாகும். மனநிறைவாக இருக்கின்ற ஓர் ஆத்மா, பெயர், கௌரவம், விடிவு அல்லது வசதிகள் போன்ற எந்தவொரு ஆசைகளின், பசியாலும் இருக்க மாட்டார். அத்தகைய ஆத்மாக்கள் சதா எல்லைக்குட்பட்ட ஆசைகளுக்கு அப்பால் இருப்பதால், நிறைவாகவும் சமமாகவும் இருப்பார்கள்.

சுலோகம்:
நேர்மையான இதயத்;தி;னால் தன்னலமற்ற சேவையின் மூலம் முன்னேறிச் செல்வது என்றால் உங்கள் புண்ணிய கணக்கில் சேமித்துக் கொள்வதாகும்.