01-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்களுக்குள் ஆன்மீக சகோதரர்கள்; உங்களுக்குள் ஆன்மீக அன்பு இருக்க வேண்டும். ஆத்மாவின் அன்பு ஆத்மாவிடம் இருக்க வேண்டும். உடலின் மீது இருக்கக் கூடாது.

கேள்வி:
தந்தை தன்னுடைய வீட்டைப் பற்றி அதிசயமான விஷயம் என்ன கூறியிருக் கின்றார்?

பதில்:
எந்த ஆத்மாக்கள் என்னுடைய வீட்டிற்கு வருகிறார்களோ அவர்கள் அவரவர் களுடைய பிரிவில் அவர்களுடைய நம்பரில் பொருந்துகிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஆடுவது, அசைவது இல்லை. அங்கே அனைத்து தர்மத்தினுடைய ஆத்மாக்களும் எனக்கு அருகாமையில் இருக்கிறார்கள். அங்கிருந்து வரிசைக்கிரமத்தில் அவரவருடைய நேரத்தில் நடிப்பை நடிப்பதற்காக வருகிறார்கள். இந்த அதிசயமான ஞானம் இந்த நேரத்தில் கல்பத்தில் ஒரே முறைதான் உங்களுக்குக் கிடைக்கிறது. வேறு யாரும் இந்த ஞானத்தை கொடுக்க முடியாது.

ஓம் சாந்தி.
பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை புரிய வைக்கிறார். மேலும் தந்தை தன்னை ஆத்மாக்களின் தந்தை என நினைக் கின்றார் என குழந்தைகள் அறிகின்றீர் கள். தன்னை ஆத்மா என்று உணர வேண்டும் என யாரும் புரிய வைப்பதும் இல்லை, புரிந்து கொள்வதும் இல்லை. இந்த உலகம் மாறக்கூடியது. மாற்றக்கூடியவர் தந்தை தான் இங்கே எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். வீட்டிற்குச் செல்லும் போது முழு நாளும் தன்னுடைய தொழில் முதலியவைகளில் ஈடுபடுகின்றீர்கள். குழந்தைகளே! எங்கிருந்தாலும் நீங்கள் என்னை நினையுங்கள் என்பதே பாபாவின் ஸ்ரீமத். தனக்கு எந்த கணவர் கிடைப்பார் என மணமாகப் போகும் கன்னிகைக்குத் தெரியாது. ஆனால் சித்திரத்தைப் பார்த்ததும் அவருடைய நினைவு இருந்து கொண்டே இருக்கிறது. எங்கிருந்தாலும் ஒருவருக்கொருவர் (இருவரும்) நினைவு செய்கிறார்கள். இது உடல் மீதான அன்பு. இங்கு ஆன்மீக அன்பு. ஆன்மீக அன்பு யாருடன்? குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையுடன்; தந்தைக்கு குழந்தைகளுடன். குழந்தைகளாகிய உங்களுக் குள்ளும் மிகவும் ஆன்மீக அன்பு இருக்க வேண்டும். அதாவது ஆத்மாக்களுக்கு ஆத்மாக்களுடன் அன்பு இருக்க வேண்டும். இந்தப் படிப்பு கூட இப்போது தான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. உலகத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்றால் உங்களுக்குள் ஆன்மீக அன்பு இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு தந்தையின் குழந்தை கள் அல்லவா! இதற்குத்தான் ஆன்மீக அன்பு என்று கூறப்படுகிறது. நாடகத்தின் படி புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நேரடியாகப் புரியவைக்கின்றார். மேலும் தந்தை இங்கு வந்திருக்கின்றார் என குழந்தைகள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நம்மை மலர்களாக, தூய்மையாக பதீதத்தி லிருந்து பரிசுத்தமாக மாற்றி உடன் அழைத்துச் செல்வார். யாராவது கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்வார்கள் என்பது கிடையாது. அனைத்து ஆத்மாக்களும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் போல பறப்பார்கள். அவைகளுக்கு வழிகாட்டி (கைடு) இருக்கிறது. வழிகாட்டிகளுடன் இன்னும் வழிகாட்டிகள் உண்டு. அவை முன்னணியில் இருக்கும். அனைத்து கூட்டமும் ஒன்றாகச் சேர்ந்து செல்லும் போது மிகவும் சப்தமாக இருக்கும். சூரியனின் வெளிச்சத்தைக் கூட மறைக்கின்றது. அந்த அளவிற்கு பெரிய கூட்டமாக இருக்கும். ஆத்மாக்களாகிய உங்களின் கூட்டமும் எவ்வளவு பெரியதாக, எண்ண முடியாத அளவு இருக்கிறது! ஒருபோதும் எண்ண முடியாது. இங்கே மனிதர் களை எண்ண முடியவதில்லை. மக்கள் தொகை கணக்கெடுக்கிறார்கள். அதுவும் துல்லிய மாக எடுப்பதில்லை. எத்தனை ஆத்மாக்கள் இருக்கின்றார்கள் என்ற கணக்கை ஒருபோதும் எடுக்க முடியாது. தோராயமாக எத்தனை ஆத்மாக்கள் சத்யுகத்தில் இருப்பார் கள் என கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் பாரதம் மட்டும் தான் இருக்கிறது. நாம் உலகத்திற்கே அதிபதியாகிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. ஆத்மா சரீரத்தில் இருக்கும் போது ஜீவாத்மாவாக இருக்கிறது. இரண்டும் சேர்ந்து சுகம் மற்றும் துக்கத்தை அனுபவிக்கின்றன. ஆத்மா தான் பரமாத்மா, அது ஒரு போதும் துக்கத்தை அனுபவிக்காது, எதுவும் ஒட்டாது என பலபேர் நினைக்கின்றனர். நிறைய குழந்தைகள் இந்த விஷயத்தில் குழம்புகின்றனர். அதாவது நாம் தன்னை ஆத்மா என்று நிச்சயப்படுத்திக் கொள்கிறோம், ஆனால் தந்தையை எங்கே நினைப்பது? தந்தை பரந்தாமநிவாசி என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை தன்னுடைய அறிமுகத்தை கொடுத்திருக்கின்றார். எங்கே சென்றாலும், வந்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை பரந்தாமத்தில் வசிக்கிறார். உங்களுடைய ஆத்மா கூட அங்கே தான் வசிக்கிறது. பிறகு நடிப்பதற்காக இங்கே வருகிறது. இந்த ஞானம் கூட இப்போது கிடைத்திருக்கிறது.

நீங்கள் தேவதையாக இருக்கும் பொழுது இந்த தர்மத்தின் ஆத்மாக்கள் மேலே இருக்கிறது என உங்களுக்கு நினைவு இருக்காது. மேலிருந்து வந்து இங்கே சரீரத்தை ஏற்று நடிக்கின்றது. இந்த சிந்தனைகள் அங்கே தோன்றுவதில்லை. தந்தை கூட பரந்தாமத்தில் இருக்கின்றார். அங்கிருந்து வந்து சரீரத்தில் பிரவேசம் செய்கிறார் என்பது முதலில் தெரியாது. இப்பொழுது அவர் எந்த சரீரத்தில் பிரவேசம் செய்கிறார், அவர் தனது முகவரியையும் தெரிவிக்கிறார். நீங்கள் சிவதந்தை பரந்தாமம் என எழுதினாலும் கடிதம் பரந்தாமத்திற்குச் செல்லாது. ஆகையினால் சிவபாபா பிரம்மா என எழுதுகிறீர்கள். பிறகு இவ்விடத்தின் முகவரியை எழுதுகிறீர்கள். ஏனென்றால் தந்தை இங்கே தான் வருகின்றார். இந்த இரதத்தில் பிரவேசம் செய்கின்றார் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மேலே வசிக்கக்கூடியவர்கள். நீங்கள் சகோதரர்கள். இது ஆத்மா இந்தப் பெயர் இவருடையது என எப்போதும் புரிந்து கொள்ளுங்கள். ஆத்மாக்களை இங்கே பார்க்கின்றனர். ஆனால் மனிதர்கள் தேக அபிமானத்தில் வருகின்றார்கள். பாபா ஆத்ம அபிமானியாக மாற்றுகின்றார். நீங்கள் உங்களை ஆத்மா என உணருங்கள், மேலும் என்னை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். நான் இங்கே வருகின்ற பொழுது குழந்தைகளுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன் என பாபா இந்த நேரத்தில் புரிய வைக்கின்றார். பழைய உடலை எடுத்திருக்கின்றார். இதில் இந்த வாய் முக்கியமானது. கண்கள் கூட இருக்கின்றது. ஞானஅமிர்தம் வாயிலிருந்து தான் கிடைக்கின்றது. கௌமுக் (பசுவின் வாய்) என்கிறார்கள் அல்லவா! அதாவது தாயினுடைய இந்த வாய். பெரிய தாயின் மூலமாக உங்களைத் தத்தெடுக்கின்றார். யார்? சிவபாபா. அவர் இங்கே இருக் கிறார் அல்லவா! இந்த ஞானம் முழுவதும் புத்தியில் இருக்கவேண்டும். நான் உங்களை பிரஜா பிதா பிரம்மா மூலமாகத் தத்தெடுக்கின்றேன். ஆகையால் இவர் தாயாகி விட்டார். தாயும் தந்தையும் நீங்கள்தான் நாங்கள் உங்களுடைய குழந்தைகள்.. எனப் பாடப்பட்டு இருக்கிறது என்றால் அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கின்றார். அவரை தாய் என்று கூற முடியாது. அவர் தந்தையாக இருக்கிறார். தந்தையிடம் சொத்து கிடைக்கிறது. பிறகு தாய் வேண்டும். அவர் இங்கே வருகின்றார். இப்போது தந்தை மேலே வசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாமும் மேலே வசிக் கின்றோம். பிறகு நடிப்பதற்காக இங்கே வருகின்றோம். உலகத்தினருக்கு இந்த விஷயங் களைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் கல்லிலும் முள்ளிலும் பரமாத்மா இருக்கிறார் எனக் கூறுகின்றனர். பிறகு எண்ண முடியாதவராக ஆகிவிடுகிறார். இதற்குத்தான் ஆழமான இருள் என்று பெயர். ஞான சூரியன் வெளிப் பட்டதும் அறியாமை இருள் அழிந்து விடும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் இது இராவணனுடைய இராஜ்யம். ஆகையால் இருள் இருக்கிறது என்ற ஞானம் உங்களுக்கு இருக்கிறது. அங்கே இராவண இராஜ்யம் இல்லை. ஆகையால் எந்த விகாரமும் இல்லை. தேக அபிமானமும் இல்லை. அங்கே ஆத்ம அபிமானியாக இருக்கிறார்கள். இப்பொழுது சிறிய குழந்தையாக இருக்கிறோம், இப்பொழுது இளைஞனாக இருக்கின்றோம், இப்பொழுது வயதாகிவிட்டது என்ற ஞானம் ஆத்மாவிற்கு இருக்கிறது. ஆகையால் இப்பொழுது இந்த உடலை விட்டு மற்றொன்றை எடுக்க வேண்டும். அங்கே இன்னார் இறந்து விட்டார் எனக் கூறமாட்டர் கள். அது அமர லோகம். மகிழ்ச்சியுடன் ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக் கின்றனர். இப்பொழுது ஆயுள் முடிவடைகிறது. இதை விட்டு புதியதை எடுக்க வேண்டும். ஆகையால் சந்நியாசிகள் பாம்பினுடைய எடுத்துக்காட்டைக் கூறுகின்றனர். உண்மையில் எடுத்துக்காட்டு தந்தை கொடுத்ததாக இருக்கிறது. அதை பிறகு சந்நியாசிகள் எடுத்துக் கொள்கின்றனர். அப்பொழுது தந்தை கூறுகின்றார் நான் உங்களுக்கு கொடுக்கின்ற ஞான மானது மறைந்துவிடுகிறது. பாபா என்ற வார்த்தையும் இருக்கிறது, சித்திரமும் இருக்கிறது. ஆனால் மாவில் உப்பு இருப்பது போல. எப்படி பாம்பு பழைய தோலை விட்டு புதிய தோல் எடுக்கின்றதோ அது போல என பாபா அமர்ந்து பொருளைப் புரியவைக் கின்றார். அதற்கு ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் பிரவேசம் ஆகிறது என கூற மாட்டார்கள். தோலை மாற்றுவதற்கு ஒரு பாம்பினுடைய எடுத்துக்காட்டுதான் இருக்கிறது. அந்தத் தோலை அது பார்க்கவும் முடிகிறது. எப்படி உடையைக் கழற்று கிறோமோ அதுபோல தோலை விடுகிறது. பாம்பு உயிரோடும் இருக்கிறது. எப்பொழுதும் அமரராக இருக்கின்றது என்று சொல்ல முடியாது. இரண்டு, மூன்று தோலை மாற்றிவிட்டு பிறகு இறந்து விடும். அங்கே கூட நீங்கள் சரியான நேரத்தில் ஒரு உடலை விட்டு விட்டு, இன்னொரு உடலை எடுக்கின்றீர்கள். இப்பொழுது நாம் கர்ப்பத்தில் செல்ல வேண்டும் என அறிகிறீர்கள். அங்கே யோக பலத்தினுடைய விஷயம். யோக பலத்தினால் நீங்கள் பிறக்கிறீர்கள் ஆகையால் அமரர் என அழைக்கப்படுகிறீர்கள். இப்பொழுது நமக்கு வயதாகிவிட்டது. சரீரம் பழையதாகிவிட்டது என ஆத்மா கூறுகிறது. சாட்சாத்காரம் கிடைக்கிறது. இப்பொழுது நாம் சென்று சிறிய குழந்தையாக மாறுவோம். தானாகவே உடலை விட்டு ஆத்மா ஓடிச்சென்று சிறிய குழந்தைக்குள் பிரவேசம் ஆகிறது. அந்த கர்ப்பத்தை ஜெயில் என்று சொல்வதில்லை, மாளிகை எனப்படுகிறது. பாவம் எதுவுமே நடக்காததால் எதையும் அனுபவிக்க வேண்டியதில்லை. கர்ப்பமாளி கையில் ஓய்வுடன் இருக்கிறார்கள். துக்கத்தின் விஷயம் எதுவும் இல்லை. நோய் ஏற்படும் படி எந்த அழுக்கான பொருளையும் சாப்பிடுவதில்லை.

குழந்தைகளே! நீங்கள் நிர்வாணதாமத்திற்குப் போக வேண்டும். இந்த உலகம் மாறப் போகிறது என பாபா கூறுகின்றார். பழையதிலிருந்து மீண்டும் புதியதாகும். ஓவ்வொரு பொருளும் மாற வேண்டும். மரத்திலிருந்து விதை உருவாகின்றது. மீண்டும் விதையை நட்டால் எவ்வளவு பலன் கிடைக்கிறது! ஒரு விதையிலிருந்து எத்தனை தானியம் உருவாகிறது. சத்யுகத்தில் யோக பலத்தினால் ஒரே ஒரு குழந்தை மட்டும் பிறக்கிறது. இங்கே விகாரத்தினால் நான்கு ஐந்து குழந்தைகளைப் பெறுகிறார்கள். சத்யுகம் மற்றும் கலியுகத்திற்கிடையே மிகவும் வித்தியாசம் இருக்கிறது என்பதை பாபா தெரிவிக்கின்றார். புதிய உலகம் மீண்டும் பழையதாக எப்படி மாறுகிறது, அதில் ஆத்மா எப்படி 84 ஜன்மங்களை எடுக்கிறது என்பது கூட புரிய வைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஆத்மாவும் தனது நடிப்பை நடித்துவிட்டு மீண்டும் திரும்பிச் சென்று தனது இடத்தில் நிற்கிறது. இடத்தை மாற்றுவதில்லை. தன்னுடைய தர்மத்தில் தன்னுடைய இடத்தில் வரிசைக்கிரமத்தில் நிற்கும்;. பிறகு வரிசையாக கீழே வருகிறது. ஆகையால் மூலவதனத் தின்; சிறு சிறு மாடல்களை செய்து வைக்கின்றனர். அனைத்து தர்மத் தினருக்கும் அவரவர்களுக்கென பிரிவு இருக்கிறது. நீங்கள் கூட வரிசைக்கிரமத்தில் தேர்ச்சி அடை கிறீர்கள். அந்த மதிப்பெண்ணிற்கு ஏற்ப இடத்தைப் பெறுகிறீர்கள். பாபாவின் இந்த படிப்பு கல்பத்தில் ஒரு முறைதான் கிடைக்கிறது. ஆத்மாக்களாகிய உங்களுடைய குலம் எவ்வளவு சிறியதாக இருக்கிறது! உங்களுடையது இவ்வளவு பெரிய மரம் போல. குழந்தைகளாகிய நீங்கள் திவ்ய திருஷ்டியினால் பார்த்து, பின் இங்கே அமர்ந்து சித்திரங்களை உருவாக்கியிருக்கின்றீர்கள். ஆத்மா எவ்வளவு சிறியதாக இருக்கிறது. சரீரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் அங்கே சென்று அமரும். மிகவும் சிறிய இடத்தில் அருகாமையில் இருக்கிறது. மனிதர்களின் மரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! மனிதர்களுக்கு நடப்பதற்கு, சுற்றுவதற்கு, விளையாடு வதற்கு, படிப்பதற்கு, வேலை செய்வதற்கு இடம் வேண்டுமல்லவா! அனைத்தையும் செய்வதற்கு இடம் வேண்டும். நிராகார உலகத்தில் ஆத்மாக்களுக்கு சிறிய இடம் இருக்கும். ஆகையால் இந்த சித்திரங்களில் காட்டப் பட்டுள்ளது. ஏற்கனவே நிச்சயிக்கப் பட்டுள்ள நாடகம். சரீரத்தை விட்டு ஆத்மாக்கள் அங்கு செல்ல வேண்டும். நாம் அங்கே எவ்வாறு இருக்கிறோம். மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள், பிறகு எப்படி தனித்தனியாக வரிசைக்கிரமத்தில் பிரிகிறார்கள் என்பது குழந்தைகளுடைய புத்தியில் இருக்கிறது. இந்த அனைத்து விஷயங்களையும் கல்ப கல்பமாக உங்களுக்கு ஒரு தந்தை தான் வந்து சொல்கின்றார். மற்ற அனைத்தும் உலகியல் படிப்பு, அவற்றை ஆன்மீகப் படிப்பு என்று கூற முடியாது.

இப்பொழுது நாம் ஆத்மா என்பதை நீங்கள் அறிகிறீர்கள். நான் என்றால் ஆத்மா, என்னுடையது இந்த உடல், இது மனிதர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு எப்பொழுதும் தேக சம்பந்தம் தான் இருக்கிறது. சத்யுகத்தல் கூட தேக சம்பந்தம் இருக்கும். ஆனால் அங்கே நீங்கள் ஆத்ம அபிமானியாக இருக்கிறீர்கள். நாம் ஆத்மா இது நம்முடைய உடல் இப்பொழுது வயதாகிவிட்டது, ஆகையால் ஆத்மாவாகிய நாம் இந்த உடலைவிட்டு விட்டு இன்னொன்றை எடுக்க வேண்டும். இதில் குழப்பமடைவதற்கு எந்த விஷயமும் இல்லை என்பது தெரிகிறது. குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிடமிருந்து இராஜ்ஜியத்தை அடைய வேண்டும். நிச்சயமாக எல்லையற்ற தந்தை அல்லவா! மனிதர்கள் எதுவரை ஞானத்தை புரிந்து கொள்ளவில்லையோ அதுவரை பல கேள்விகள் கேட்கின்றார்கள். பிராமணர் களாகிய உங்களுக்கு ஞானம் இருக்கிறது. பிராமணர்களாகிய உங்களுக்கு உண்மையில் அஜ்மீரில் கோவில் இருக்கிறது. ஒரு பிரிவினர் புஷ்கரணி பிராமணன், இன்னொன்று சார்சித்த பிராமணன். அஜ்மீரில் பிரம்மாவின் கோவிலைப் பார்க்கச் செல்கின்றனர். பிரம்மா அமர்ந்திருக்கின்றார், தாடியை கொடுத்திருக்கின்றனர். அவரை மனித ரூபத்தில் காண்பிக்கின்றனர். பிராமணர்களாகிய நீங்களும் மனித ரூபத்தில் இருக்கின்றீர்கள். பிராமணர்களை தேவதை என்று சொல்ல முடியாது. உண்மையிலும் உண்மையான பிராமணர்கள் பிரம்மாவின் வாரிசு நீங்கள் தான். அவர்கள் யாரும் பிரம்மாவின் வாரிசு கிடையாது. பின்னால் வருபவர்களுக்கு இது தெரிவது கிடையாது. இது உங்களுடைய விராட ரூபம். இது புத்தியில் நினைவு இருக்க வேண்டும். இந்த முழு ஞானத்தையும் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நன்றாகப் புரியவைக்கலாம். நாம் ஆத்மாக்கள் பாபாவின் குழந்தைகள் இதை உண்மையில் புரிந்து கொண்டு உறுதியிலும் உறுதியான நிச்சயம் வைக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒரு பரமாத்மா என்பது உண்மையான விஷயம். அனைவரும் அவரை நினைக்கின்றார்கள். மனிதர்களின் வாயிலிருந்து ஓ! பகவானே! என்ற வார்த்தை நிச்சயம் வருகிறது. தந்தை வந்து புரிய வைக்கும் வரை பரமாத்மா யார் என்று யாரும் அறியவில்லை. உலகத்திற்கு அதிபதியாக இருந்த இலட்சுமி நாராயணனே அறியவில்லை என்றால் ரிஷி, முனிவர்கள் எவ்வாறு அறிவார்கள் என்பதை பாபா புரியவைத்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் பாபா மூலமாக அறிகிறீர்கள். நீங்கள் தான் ஆஸ்திகர்கள்; ஏனென்றால் நீங்கள் படைக்கக்கூடியவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடையை அறிந்துள்ளீர்கள். சிலர் நன்றாக அறிந்துள்ளீர்கள், உங்களில் சிலர் குறைவாக அறிந்திருக்கிறார்கள். பாபா நேரடியாகப் படிக்க வைக்கின்றார். பிறகு சிலர் நன்கு தாரணை செய்கிறார்கள், சிலர் குறைவாக தாரணை செய்கிறார்கள். படிப்பு முற்றிலும் எளிதாகவும் இருக்கிறது, உயர்ந்ததாகவும் இருக்கிறது. கடல் நீரை மையாக்கி எழுதினாலும் முடிவை அடைய முடியாத அளவிற்கு பாபாவிற்குள் ஞானம் இருக்கிறது. பாபா எளிதாக்கி புரியவைக்கின்றார். பாபாவைப் புரிந்து கொள்ள வேண்டும். சுயதரிசன சக்கரதாரியாக வேண்டும். அவ்வளவுதான். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சதா எளிதாக நினைவில் இருப்பதற்காக போகும் போதும், வரும் போதும் நாம் ஆத்மா, பரந்தாமநிவாசி ஆத்மா, இங்கே நடிப்பதற்காக வந்திருக்கின்றோம், பாபா கூட பரந்தாமத்தில் வசிக்கின்றார், அவர் இந்த பிரம்மாவின் உடலில் வந்திருக் கின்றார் என்று சிந்தனை செய்யுங்கள்.

2. ஆன்மீகத் தந்தையிடம் ஆத்மாவிற்கு அன்பு இருப்பது போல தங்களுக்குள் ஆன்மீக அன்பு இருக்க வேண்டும். ஆத்மாவிற்கு ஆத்மாவுடன் அன்பு இருக்க வேண்டும்; சரீரத்தின் மீது இருக்கக் கூடாது. ஆத்ம அபிமானி ஆவதற்காக முழுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
எல்லைக்குட்பட்ட விருப்பங்களில் இருந்து விடுபட்டு அனைத்து கேள்விகளில் இருந்தும் கடந்து இருக்கக் கூடிய எப்போதும் மகிழ்ச்சியானவர் ஆகுக.

எந்தக் குழந்தைகள் எல்லைக்குட்பட்ட விருப்பங்களில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்களோ, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியின் ஜொலிப்பு தென்படுகிறது. மகிழ்ச்சியானவர்கள் எந்த விசயத்திலும் கேள்வி எழுப்பக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் சதா சுயநலமற்றவர்களாக இருப்பார்கள் மற்றும் சதா அனை வரையும் குற்ற மற்றவர்களாக அனுபவம் செய்வார்கள், பிறர் மீது குற்றம் சுமத்த மாட்டார்கள். எப்பேற்பட்ட சூழ்நிலை வந்தாலும், கணக்கு வழக்கை முடிப்பதற்காக எந்த மாதிரியான ஆத்மா சந்திக்க வந்தாலும், சரீரத்தின் கர்ம வினைப்பயனை அனுபவிக்க ஏற்பட்டாலும் திருப்தியின் காரணத்தினால் அவர்கள் சதா மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

சுலோகன்:
வீணானவைகளின் சோதனைகளை கவனத்தோடு செய்யுங்கள், கவனக்குறைவாக அல்ல.