01.06.25 காலை முரளி
ஓம் சாந்தி 21.10.2005 பாப்தாதா,
மதுபன்
சம்பூர்ணம் மற்றும் சம்பன்னம் ஆவதற்கான தேதியை முடிவு செய்து
சமயத்திற்கேற்றவாறு இப்போது எவரெடி ஆகுங்கள்
இன்று பாப்தாதா நாலாபுறம் உள்ள குழந்தைகளின் மூன்று ரூபங்களைப்
பார்த்துக் கொண்டிருக் கிறார். எப்படி பாபாவின் விசேஷமான மூன்று
சம்பந்தங்கள் நினைவிருக்கிறதோ, அது போல் குழந்தைகளின் மூன்று
ரூபங்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்.
உங்கள் மூன்று ரூபங்களையும் அறிவீர்கள் இல்லையா? இச்சமயம்
குழந்தைகள் அனைவரும் பிராமண ரூபத்தில் இருக்கிறீர்கள்.
பிராமணர்களின் கடைசி ஸ்டேஜ், பிராமணரில் இருந்து ஃபரிஸ்தா,
பிறகு ஃபரிஸ்தாவில் இருந்து தேவதை ஆகிறீர்கள். அனைத்திலும்
விசேஷமானது இப்போதைய பிராமண வாழ்க்கை ஆகும். பிராமண வாழ்க்கை
விலைமதிக்க முடியாததாகும். பிராமண வாழ்க்கையின் விசேஷத்தன்மை
தூய்மை ஆகும். தூய்மை தான் பிராமண வாழ்க்கையின் உண்மைத் தன்மை
ஆகும். தூய்மை தான் பிராமண வாழ்க்கையின் பர்சனாலிட்டி. தூய்மை
தான் சுகம் சாந்தியின் தாய். எவ்வளவு தூய்மை உள்ளதோ, அவ்வளவு
சுகம் மற்றும் சாந்தி வாழ்க்கை யில் இயற்கையாக மற்றும் இயல்பாக
இருக்கும். மேலும் தூய்மையான ஆத்மாக்களின் லட்சியம்
பிராமணரிலிருந்து தேவதை அல்ல, ஆனால் முதலில் ஃபரிஸ்தா ஆவதாகும்.
ஃபரிஸ்தாவில் இருந்து தேவதை. ஆக, பிராமணரில் இருந்து ஃபரிஸ்தா,
ஃபரிஸ்தா வில் இருந்து தேவதை - இந்த மூன்று ரூபங்களையும் பாபா
குழந்தைகள் அனைவரிடமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்கள்
அனைவருக்கும் உங்கள் மூன்று ரூபங்களும் முன்னால் வந்து விட்டனவா?
வந்து விட்டனவா? பிராமணராகவோ ஆகி விட்டீர்கள். இப்போது ஃபரிஸ்தா
ஆக வேண்டுமென்பது லட்சியம். இது தான் லட்சியம் இல்லையா? ஃபரிஸ்தா
ஆகத் தான் வேண்டும். சோதித்துப் பாருங்கள், ஃபரிஸ்தா நிலையின்
விசேஷத் தன்மைகள் வாழ்க்கையில் எந்த அளவு காணப்படுகின்றன? ஃபரிஸ்தா
என்றால் அவருக்குப் பழைய உலகம் மற்றும் பழைய சம்ஸ்காரங்களோடு
எந்த ஒரு தொடர்பும் கிடையாது. ஃபரிஸ்தா என்றால் பிரச்சினையின்
போது மட்டும் டபுள் லைட் என்பதில்லை. ஆனால் சதா மனம், சொல்,
சம்பந்தம்-தொடர்பில் டபுள் லைட், லேசான தன்மை. லேசான பொருள்
பிடித்திருக்கிறதா, அல்லது அதிக எடையுள்ள பொருள் நன்றாக உள்ளதா?
எது பிடித்திருக்கிறது? லேசான பொருள் பிடித்திருக்கிறது இல்லையா?
ஃபரிஸ்தா என்றால் அனைவருக்கும், கொஞ்சம் பேருக்கு மட்டுமில்லை,
அனைவருக்கும் அன்பானவராகவும், விலகியும் இருப்பவர். வெறுமனே
அன்பாக மட்டுமில்லை, எவ்வளவு அன்போ அவ்வளவு விலகிய நிலை. ஃபரிஸ்தாவின்
அடையாளம் - அவர் அனைவருக்கும் பிரியமானவராக இருப்பார்.
யாரெல்லாம் பார்க்கிறார்களோ, யாரெல்லாம் சந்திக்கிறார்களோ,
யாரெல்லாம் சம்பந்தத்தில் வருகிறார்களோ, தொடர்பில் வருகிறார்களோ,
அவர்கள் அனுபவம் செய்வார்கள் - இவர் என்னுடையவர். அனுபவம்
செய்கிறார்கள் இல்லையா? அத்தகைய ஃபரிஸ்தா, அதாவது ஒவ்வொருவரும்
அனுபவம் செய்ய வேண்டும் - இவர் என்னுடையவர். நம்முடையவர் என்ற
அனுபவம் ஏற்பட வேண்டும். ஏனென்றால் லேசாக இருப்பார்கள் இல்லையா?
அப்போது லேசான தன்மை அனைவருக்கும் பிரிய மானவராக ஆக்கிவிடும்.
பிராமணப் பரிவாரம் முழுவதும் அனுபவம் செய்ய வேண்டும் - இவர்
என்னுடையவர். பாரமாக இருக்கக் கூடாது. ஏனென்றால் ஃபரிஸ்தா
என்பதன் அர்த்தமே டபுள் லைட். ஃபரிஸ்தா என்றால் சங்கல்பம்,
பேச்சு, கர்மம், சம்பந்தம், தொடர்பில் எல்லையற்ற நிலை இருக்க
வேண்டும். எல்லைக்குட்பட்டதில்லை. அனைவரும் நம்முடையவர் மற்றும்
நான் அனைவருக்கும் உரியவன். எங்கே அதிகமான நம்முடையவர் என்பது
உள்ளதோ, அங்கே லேசான தன்மை இருக்கும். சம்ஸ்காரத்திலும் லேசான
தன்மை. எனவே சோதித்துப் பாருங்கள் - எவ்வளவு சதவிகிதம் ஃபரிஸ்தா
நிலை வரை சென்று சேர்ந்திருக்கிறீர்கள்? சோதித்துப் பார்க்க
வருகிறதா? செக்கரும் ஆகி விட்டீர்கள், மேக்கரும் ஆகி
விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
பாப்தாதாவுக்கு இதே சுப ஆசை - இப்போது சமயத்தைப் பார்த்துக்
கொண்டு, தன்னை யார் மகாரதி எனப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ,
அவர்களின் ஸ்டேஜோ 95 சதவிகிதம் இருக்க வேண்டும். இருக்க
வேண்டும் இல்லையா? (98 சதவிகிதம் ஆகி விடுவோம் என்று யாரோ
சொன்னார்கள்) வாழ்த்துகள். வாயில் குலாப் ஜாமூன் -
சாப்பிடுங்கள். ஏனென்றால், பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்,
தெரிந்து கொண்டும் இருக்கிறீர்கள் - ஆகி விடத்தான் வேண்டும்.
ஆகி விடுவோம் என்று இல்லை, ஆகத் தான் வேண்டும். ஆகி விடுவோம்,
பார்க்கலாம் முயற்சி செய்கிறோம், இப்போது இந்த பாஷையை
மாற்றுங்கள். சங்கல்பம் என்னென்ன செய்கிறீர்களோ, சோதித்துப்
பாருங்கள் - எத்தனை சதவிகிதம் நிச்சயம் மற்றும் வெற்றி
பூர்வமாக உள்ளது? என்னென்ன சங்கல்பத்தில் வந்ததோ, என்னென்ன
பேச்சில் வந்ததோ, என்னென்ன சம்பந்தம்-தொடர்பில் நடந்ததோ, அப்படி
இல்லை. வி.ஐ.பி. யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களுக்குச்
செக்கிங் எவ்வளவு நடக்கிறது! தெரியும் இல்லையா? ஒவ்வொரு
பொருளும் முதலில் சோதிக்கப்படுகிறது, பிறகு தான் அடுத்த அடி
எடுத்து வைக்கிறார்கள். ஆக, இப்போது இரண்டு மணி, நான்கு
மணிக்குப் பிறகு செக்கிங் நடக்காது. முதலில் செக்கிங், பிறகு
அடி எடுத்து வைப்பார்கள். ஏனென்றால் இப்போதைய வி.வி.ஐ.பி.க்கள்
இருப்பது ஒரு பிறவிக்குத் தான். அதுவும் கொஞ்ச காலத்துக்குத்
தான். நீங்களோ சிருஷ்டி டிராமாவின் பிராமணரில் இருந்து ஃபரிஸ்தாவுக்கு
எத்தனை வி.வி. போட முடியுமோ அவ்வளவு போடலாம். பாருங்கள் நீங்கள்
உங்களுக்கு முன்னால் வி.வி.வி. போடடுக் கொண்டே செல்லுங்கள்.
நீங்கள் உங்கள் சித்திரத்தையோ பார்த்திருக்கிறீர்கள் இல்லையா?
பூஜிக்கப்படு கின்றது. அதைப் பார்த்திருக்கிறீர்கள் இல்லையா?
கோவிலைப் பார்த்திருக்கவில்லை என்றாலும் சித்திரங் களையோ
பார்த்திருக்கிறீர்கள். இப்போதும் கூட அவற்றுக்கு எவ்வளவு
மதிப்பு! எவ்வளவு பெரிய-பெரிய கோவில்கள் கட்டுகின்றனர்! உங்கள்
சித்திரங்களோ மூன்றடியில் வந்து விடு கின்றன. அப்படியானால்
உங்களுக்கு எவ்வளவு மதிப்பு! ஜட சித்திரங்களுக்கும் மதிப்பு
உள்ளது. மதிப்பு உள்ளது இல்லையா? உங்கள் சித்திரங்களை தரிசனம்
செய்வதற்காக எவ்வளவு பெரிய க்யூ நிற்கின்றது. மற்றும்
சைதன்யத்தில் எவ்வளவு வி.வி.ஐ.பி.க்கள் நீங்கள்! அதனால் அடி
எடுத்து வைப்பதற்கு முன் செக் பண்ணுங்கள். செய்த பிறகு செக்
பண்ணினால் அந்த அடியோ போய் விட்டது. அந்த அடி மீண்டும் உங்கள்
கையில் வராது. அஞ்ஞான காலத்திலும் கூட சொல் கின்றனர் -
யோசித்துப் புரிந்து கொண்டு காரியம் செய்யுங்கள். காரியம்
செய்த பிறகு யோசிக் காதீர்கள். முதலில் யோசியுங்கள், பிறகு
செய்யுங்கள். ஆக, தனது சுவமானத்தின் இருக்கையில் இருங்கள்.
எவ்வளவு பொசிஷனில் இருக்கிறீர்களோ, அவ்வளவு ஆப்பொசிஷன் (எதிர்ப்பு)
இருக்காது. எப்போது பொசிஷனில் இல்லாதிருக்கிறீர்களோ, அப்போது
தான் மாயாவின் ஆப்பொசிஷன் இருக்கும் ஆக, இப்போது பாப்தாதாவின்
கேள்வி - சம்பூர்ணமாக வேண்டும், சம்பன்னமாக வேண்டும் என்பது
தான் அனைவரின் லட்சியமாக உள்ளது. லட்சியம் உள்ளதா அல்லது
கொஞ்சம்-கொஞ்சம் ஆக வேண்டுமா? லட்சியம் உள்ளதா? அனைவருக்கும்
லட்சியம் உள்ளதென்றால் கை உயர்த்துங்கள். சம்பூர்ணம் ஆக
வேண்டுமா? நல்லது. எது வரை? நீங்கள் மக்களிடம் கேள்வி
கேட்கிறீர்கள் இல்லையா - உங்கள் லட்சியம் என்ன? ஆக, இன்று
பாப்தாதா விசேஷமாக டீச்சர்களிடம் கேட்கிறார். 30 வருடமாக
உள்ளவர்கள் இருக்கிறீர்கள் இல்லையா? அப்போது 30 வருடமாக
இருப்பவர்கள் நாளைய தினமே தங்களுக்குள் அமர்ந்து புரோகிராம்
தயார் செய்ய வேண்டும். மீட்டிங் நிறையவே நடத்துகிறீர்கள்.
மீட்டிங், சீட்டிங், மீட்டிங் சீட்டிங். ஆனால் இப்போது அந்த
மாதிரி மீட்டிங் நடத்துங்கள் - எது வரை சம்பன்னமாவோம்? மற்ற
எல்லா ஃபங்ஷன்களும் கொண்டாடுகிறீர்கள். தேதிகளை முடிவு
செய்கிறீர்கள். இன்ன புரோகிராம் இன்ன தேதி. இதற்குத் தேதி
கிடையாதா? எத்தனை வருடங்கள் வேண்டும் சொல்லுங்கள். ஏன்?
பாப்தாதா ஏன் சொல்கிறார்? ஏனென்றால் பாபாவிடம் இயற்கை கேட்கிறது
- எப்போது விநாசம் செய்வது? அப்போது பாப்தாதா என்ன பதில்
சொல்வது? பாப்தாதா குழந்தைகளிடம் கேட்கிறார் இல்லையா? எது வரை?
இன்றைய விசேஷ தலைப்பு - எது வரை? இரட்டை வெளிநாட்டினர்
அமர்ந்திருக் கிறார்கள் இல்லையா? அப்போது இரட்டை முயற்சி
நடைபெறும் இல்லையா? அற்புதம் செய்யுங் கள். வெளிநாட்டினர்
உதாரணமாகுங்கள் - பிராமணப் பரிவாரத்துக்கு முன், உலகத்துக்கு
முன் சம்பன்னம் மற்றும் சம்பூர்ணம். சர்வ சக்திகள், சர்வ
குணங்களால் சம்பன்னம், அதாவது சம்பூர்ணம். அனைத்தும் இருக்க
வேண்டும். மனம், சொல், சம்பந்தம் தொடர்பு நான்கிலும், நான்கில்
ஒன்றில் கூட பலவீனமாக இருந்து விட்டால் சம்பன்னம் எனச் சொல்ல
மாட்டார்கள். நான்கு விஷயங்கள் நினைவுள்ளது இல்லையா - மனம்,
சொல், சம்பந்தம்-தொடர்பில் கர்மமும் வந்து விட்டது, நான்கு
விஷயங்களிலும். மனம் சொல்லிலோ நாங்கள் சரியாக இருக்கிறோம்,
சம்பந்தம்-தொடர்பில் கொஞ்சம் உள்ளது என்று அந்த மாதிரி இல்லை.
சொன்னோம் இல்லையா - யாருக்கு முன்னால் சென்றாலும், யாருடைய
தொடர்பில் சென்றாலும் அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும் - இவர்
என்னுடையவர். எனது என்பதில் கௌரவம் உள்ளது இல்லையா? மற்றவர்கள்
மீது இவ்வளவு லேசான தன்மை இருப்பதில்லை. கொஞ்சம் பாரமாகி
விடுகிறது. ஆனால் தன் மீது லேசான தன்மை ஏற்படுகிறது. ஆக,
அனைத்தையும் விட லேசான தன்மை, வெறுமனே தனது மண்டலத்தில் லேசான
என்று அந்த மாதிரி இல்லை. தனது மண்டலத்தில் லேசான தன்மை, தனது
சென்டரில் மட்டும் லேசான தன்மை உள்ளது என்றால் உலக ராஜனாக
எப்படி ஆவீர்கள்? விஷ்வ கல்யாண்காரியாகவும் ஆக முடியாது, விஷ்வ
ராஜனாகவும் ஆக முடியாது. சிம்மாசனத் தில் அமர்ந்தால் தான் ராஜன்
என்பதில்லை. ராஜதானியில் ராஜ குடும்பத்தில் கூட ராஜ்யத்தின்
ராஜ அதிகாரம் உள்ளது. ஆக, என்ன செய்வீர்கள்? எது வரை
என்பதற்கான பதில் தருவீர்கள் இல்லையா? மீட்டிங் நடத்துவீர்களா?
மீட்டிங் நடத்தி முடிவு (ஃபைனல்) செய்யுங்கள். சரியா? நல்லது.
அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? செய்தே ஆக வேண்டும், ஆகித்
தான் தீர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? பாப்தாதா
ஊக்கம்-உற்சாகம் தருகிறார். மாயா பார்க்கிறது -
ஊக்கம்-உற்சாகத்தில் இருந்தால் ஏதேனும் இடைஞ்சல் செய்து
விடுகிறது. ஏனென்றால் அதற்கும் இப்போது கடைசிக் காலம் நெருங்கி
விட்டது இல்லையா? எனவே அதுவும் தன்னிடம் அஸ்திர-சஸ்திரங்கள்
என்னவெல்லாம் உள்ளனவோ, அவற்றைப் பயன் படுத்துகிறது. மற்றும்
அந்த மாதிரி பாலனை செய்கிறது -- இது மாயாவின் பாலனை என்று
புரிந்து கொள்ள முடிவதில்லை. மாயாவின வழியா. பாபாவின் வழியா,
அதில் கலப்படம் செய்து விடுகின்றது. ஃபரிஸ்தா நிலையில் அல்லது
புருஷார்த்தத்தில் என்ன தடை ஏற்படுகிறதோ, அதற்கு இரண்டு
வார்த்தைகள் தாம் உள்ளன - அவை பொதுவான வார்த்தைகள். கஷ்டமானதும்
இல்லை. மேலும் அனைவரும் அநேக தடவை பயன்படுத்தவும் செய்கின்றனர்.
அவை என்ன? நான் மற்றும் எனது. பாப்தாதா இதற்கு முன்பும்
சொல்லியிருக்கிறார் - மிகவும் சகஜமான விதி - இதில் நான் மற்றும்
எனது என்பதை மாற்றுவதற்கானது. நினைவுள்ளதா? பாருங்கள், எப்போது
நீங்கள் நான் என்ற சொல்லைச் சொல்கிறீர்கள் இல்லையா, அப்போது
முன்னால் வர வேண்டியது - நான் ஆத்மாவாகவே இருக்கிறேன். நான்
என்ற சொல்லைச் சொல்லுங்கள், முன்னால் ஆத்மா ரூபத்தைக் கொண்டு
வாருங்கள். நான் என்ற சொல்லைச் சும்மா அப்படியே சொல்லி
விடாதீர்கள், நான் ஆத்மா. இதை இயற்கையாக ஸ்மிருதியில் கொண்டு
வாருங்கள். நான் என்ற சொல்லுக்குப் பின்னால் ஆத்மாவை (உணர்வில்)
வையுங்கள். நான் ஆத்மா. எப்போது ஆத்மா என்ற சொல்லைச்
சொல்கிறீர்களோ, அப்போது முதலில் சொல்லுங்கள் - மேரா (என்னுடைய)
பாபா, என்னுடைய கைக்குட்டை, என்னுடைய சேலை என்னுடைய இன்னது.
ஆனால் முதலில் மேரா பாபா. என்னுடைய என்ற சொல்லைச் சொன்னதுமே
பாபா முன்னால் வந்து விட்டார். நான் என்ற சொல்லைச் சொன்னதும்
ஆத்மா முன்னால் வந்து விட்டது. இதை நேச்சர் மற்றும் நேச்சுரல்
ஆக்குங்கள். சுலபம் தானே அல்லது கஷ்டமா? நான் ஆத்மா என்பதை
அறிந்திருக்கவே செய்கிறீர்கள். அந்த நேரத்தில் மட்டும் ஏற்றுக்
கொள்வதில்லை. அறிந்து கொள்வது 100 சதவிகிதம், ஏற்றுக் கொள்வது
சதவிகிதத்தில் (குறைவாக) உள்ளது. எப்போது தேக உணர்வு
இயல்பானதாக ஆகி விட்டதோ, நினைவு செய்ய வேணடி உள்ளதா என்ன - நான்
சரீரம் என்று? அது இயல்பாக ஆகி விட்டது இல்லையா? ஆக, நான் என்ற
சொல் வாய்க்கு முன்பாக சங்கல்பத்தில் வருகிறது இல்லையா? எனவே
சங்கல்பத்திலும் கூட நான் என்ற சொல் வருமேயானால் உடனே ஆத்மா
சொரூபம் முன்னால் வர வேண்டும். இந்த அப்பியாசம் செய்வது சுலபம்
இல்லையா? நான் என்ற சொல்லை மட்டும் சொன்னால் போதாது, ஆத்மாவோடு
சேர்த்துச் சொல்ல வேண்டும். பக்கா ஆகி விடும். எப்படி
சரீரத்தின் பெயர் பக்காவாக உள்ளது இல்லையா? மற்றவர்களைக் கூட
யாராவது அழைத்தால் நீங்கள் இப்படி-இப்படிச் (திரும்பி
பார்ப்பீர்கள்) செய்வீர்கள். ஆக, நான் ஆத்மா. ஆத்மாவின் உலகம்
பாப்தாதா. ஆத்மாவின் சம்ஸ்காரம் பிராமணரிலிருந்து ஃபரிஸ்தா, ஃபரிஸ்தாவிலிருந்து
தேவதா. அப்போது என்ன செய்வீர்கள்? இந்த மனதின் டிரில்லைச்
செய்ய வேண்டும். இப்போது டாக்டர்களும் சொல்கிறார்கள் - டிரில்
செய்யுங்கள், டிரில் செய்யுங்கள், எக்ஸஸைஸ் செய்யுங்கள் என்று.
எனவே இந்த எக்ஸஸைஸ் செய்யுங்கள். நான் ஆத்மா, என்னுடைய பாபா -
ஏனென்றால் சமயத்தின் வேகத்தையோ டிராமாவின் படி மெதுவாக ஆக்க
வேண்டி உள்ளது. படைப்பவர் தாம் தீவிரமாக வேண்டும், படைப்பு
அல்ல. ஆனால் இப்போதைய சமயத்தின் படி சமயம் வேகமாகச் சென்று
கொண்டுள்ளது. இயற்கை எவர்-ரெடியாக உள்ளது. கட்டளைக்காக மட்டும்
தான் காத்துக் கொண்டுள்ளது. டிராமாவில் உள்ள நேரத்தின் கணக்குப்
படி தான் கட்டளை இருக்கும் இல்லையா? ஸ்தாபனை செய்பவர்கள்
எவர்-ரெடியாக இல்லை என்றால் விநாசத்திற்குப் பின் பிரளயம்
ஏற்பட்டு விடுமா? பிரளயம் ஏற்பட வேண்டுமா? அல்லது
விநாசத்திற்குப் பிறகு ஸ்தாபனை ஏற்பட்டே ஆக வேண்டுமா? ஆக,
ஸ்தாபனைக்கு நிமித்தமாகி யிருப்பவர்கள் இப்போதைய சமயத்தின் படி
எவர்-ரெடியாக இருக்க வேண்டும். பாப்தாதா இதையே பார்க்க
விரும்புகிறார் - எப்படி பிரம்மா பாபா அர்ஜுன் ஆனார் இல்லையா?
முன்னுதாரணம் ஆனார் இல்லையா? அவ்வாறே பிரம்மா பாபாவைப்
பின்பற்றுபவர்களாக யார் ஆகப் போகிறீர்கள்? சுயத்தையும்
பாருங்கள், சமயத்தையும் பாருங்கள். பாப்தாதா இதற்கு முன்பும்
சொல்லியிருக்கிறார் - நிகழ்காலத்தில் பிராமணரில் இருந்து ஃபரிஸ்தா
ஆகக்கூடிய ஆத்மாக்கள் நீங்கள் அனைவரும் நிமித்த உணர்வு, பணிவு
உணர்வு, இந்த இரண்டு சொற்களையும் அடிக்கோடிட வேண்டும். இதில்
தேக உணர்வின் நான் என்பது முடிந்து போய் விடும். எனது என்பதும்
முடிந்து போய் விடும். நிமித்தமாக இருக்கிறேன் மற்றும் பணிவு
சுபாவம். எவ்வளவு பணிவாக இருக்கிறீர்களோ, அவ்வளவு மதிப்பு
கிடைக்கும். ஏனென்றால் யார் பணிவாக இருக்கிறார்களோ, அவர்கள்
அனைவருக்கும் பிரியமானவராக ஆகி விடுவார்கள். மேலும் எப்போது
பிரியமானவராக ஆகி விடு கிறார்களோ, மரியாதையும் தானாகவே
கிடைக்கும். ஆக, நிமித்தம் மற்றும் பணிவு உணர்வு மற்றும் பாவனை,
சுப பாவனை. பாவ் மற்றும் பாவனை என இரண்டு பொருள்கள் உள்ளன. ஆக,
நிமித்தம் மற்றும் பணிவுடன் கூடிய இயல்பு மற்றும் பாவனை
ஒவ்வொருவருக்காகவும் சுப பாவனை, சுப விருப்பம். ஒருவர்
எப்படிப்பட்டவராக இருந்தாலும், உங்களுடைய நிமித்த, பணிவு உணர்வு
மற்றும் சுப பாவனை வாயுமண்டலத்தை அந்த மாதிரி உருவாக்கும் -
அதனால் முன்னால் இருப்பவரும் வைப்ரேஷன் மூலம் மாறி விடுவார்.
குழந்தைகள் அநேகர் ஆன்மிக உரையாடல் செய்கிறார்கள் இல்லையா --
அப்போது சொல்கிறார்கள், நான் ஒரு மாதமாக சுப பாவனை வைத்தேன்,
அவர் மாறவே இல்லை. பிறகு களைத்துப் போகிறார்கள், மனச்சோர்வு
அடைந்து விடுகிறார்கள். இப்போது அந்த அப்பாவிகளின் உள்ளுணர்வு
அல்லது திருஷ்டி கல்லைப் போல் உள்ளது. அதில் கொஞ்சம் சமயமோ
ஆகும் இல்லையா? நல்லது, அவர் மாறவில்லை என வைத்துக் கொள்ளுங்கள்,
அப்போது நீங்கள் உங்களைச் சரியாக வைத்துக் கொள்ளலாம் இல்லையா?
நீங்கள் உங்கள் பொசிஷனில் (ஸ்திதியில்) இருங்களேன். நீங்கள் ஏன்
மனச்சோர் வடைகிறீர்கள்? நல்லது, அவர் மாறவில்லை என்றால் நான்
அவரோடு மாற மாட்டேன். நீங்கள் மனச்சோர் வடைந்து விட்டீர்கள்
என்றால் அவர் சக்திசாலி ஆகி விட்டார், அவர் உங்களை மாற்றி
விட்டார். நீங்கள் உங்கள் சுவமானத்தின் இருக்கையை விட்டு ஏன்
இறங்கி விடுகிறீர்கள்? வீண் எண்ணங்களும் எழக் கூடாது. ஏன்? ஏன்
எனக்கேட்டதும் வீண் எண்ணங்களின் வாசல் திறந்தது. அந்தத் திறந்த
வாசல் கதவை மூடுவது மிகவும் கஷ்டம். எனவே ஏன் என்று
யோசிக்காதீர்கள். இரக்கமுள்ளவராகி வைப்ரேஷன் கொடுத்துக் கொண்டே
இருங்கள். நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு இறங்கி ஏன்
மனச்சோர்வடைகிறீர்கள்? நினைவு வைத்தீர்கள் இல்லையா - பொசிஷனில்
இருந்து கீழே வராதீர்கள். பிறகு எதிர்ப்பு அதிகமாகி விடும்.
மனிதருக்கு மனிதர் எதிர்ப்பாகி விடும். சுபாவ-சம்ஸ்காரத்தில்
எதிர்ப்பாகி விடும். பாவம், அவர்களுக்குள் எதிர்ப்பாகி விடும்.
எனவே பொசிஷனில் இருங்கள். ஆக, நாளை என்ன செய்வீர்கள்?
நினைவுள்ளதா? பாப்தாதாவுக்கு அன்பு உள்ளது இல்லையா? அதனால்
அனைவரும் பிரம்மா பாபாவுக்கு சமமாக ஆக வேண்டும் என
எதிர்பார்க்கிறார். பாபாவுக்கு முன்னால் எதிர்ப்பு வரவில்லையா?
பிரம்மா பாபாவுக்கு முன்னால் எதிர்ப்பு வரவில்லையா,
மாயாவிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. ஆத்மாக்களின் எதிர்ப்பும்
வந்தது. ஆனால் பிரம்மா பாபா தமது பொசிஷனை விட்டாரா? விடவில்லை
அல்லவா? அதனால் தான் ஃபரிஸ்தா ஆனார் இல்லையா? ஆக, இப்போது தன்னை
ஃபரிஸ்தா எனப் புரிந்து கொண்டு செல்லுங்கள், நான் ஃபரிஸ்தா
ஆனால் ஒருவர் மற்றவரையும் கூட ஃபரிஸ்தா ரூபத்தில் பாருங்கள்,
அனைவரும் ஃபரிஸ்தாக்கள். எனக்குப் பழைய உலகத்தோடும் தொடர்பில்லை,
என் பழைய சம்ஸ்காரங்களுடனும் தொடர்பில்லை, இந்த பிராமணர்கள்
யாருடனும் தொடர்பில்லை. முடிந்தது. இவரும் ஃபரிஸ்தா, அவரும் ஃபரிஸ்தா
என்ற அதே பார்வையில் பாருங்கள். இந்த சங்கல்பத்தை
வாயுமண்டலத்தில் பரவச் செய்யுங்கள். நல்லது.
இப்போது ஒரு நிமிடம் அந்தமாதிரி சக்திசாலி சர்வ சக்திகள்
நிறைந்த கிரணங்களை உலகின் ஆத்மாக் களுக்குக் கொடுங்கள்.
நாலாபுறமும் உங்கள் சக்திகளின் வைப்ரேஷன்கள் உலகில் பரவட்டும்.
(டெட் சைலன்ஸ்) நல்லது.
நாலாபுறம் உள்ள பிராமண் ஸோ ஃபரிஸ்தா குழந்தைகளுக்கு, சதா சுய
தரிசனத்தின் மூலம் தன்னை சோதித்தறிந்து, தன்னை மாற்றிக் கொள்ளக்
கூடிய, பிரம்மா பாபாவைப் பின்பற்றக்கூடிய, கட்டளைப்படி நடக்கும்
குழந்தைகளுக்கு, சதா டபுள் லைட் ஆகி, சேவை மற்றும்
புருஷார்த்தம் செய்யக்கூடிய ஃபரிஸ்தா ஆத்மாக்களுக்கு, சதா
தங்கள் பொசிஷனின் இருக்கை மீது செட் ஆகி எதிர்ப்பை
முடித்துவிடக் கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் குழந்தைகளுக்கு,
சங்கமயுகத்தின் பிரத்தியட்ச பலனை அனுபவம் செய்யக்கூடிய,
பாபாவின் சமீப குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் நமஸ்தே!
ஆசீர்வாதம்:
பிரத்தியட்சதாவின் சமயத்தை சமீபத்தில் கொண்டுவரக் கூடிய சதா
சுப சிந்தனையாளர் மற்றும் சுய சிந்தனையாளர் ஆகுக.
சேவையில் வெற்றிக்கான ஆதாரம் சுப சிந்தனையாளர் உள்ளுணர்வு.
ஏனென்றால் உங்களது இந்த உள்ளுணர்வு ஆத்மாக்களின் கிரகிக்கும்
சக்தி மற்றும் அறிவுத்தேடலை அதிகரிக்கின்றது. இதனால் வாய்மொழி
சேவை சகஜமாக வெற்றியடைந்து விடுகிறது. மேலும் சுயத்திற்காக சுய
சிந்தனை செய்யக்கூடிய சுய சிந்தனை யாளர் ஆத்மா சதா மாயா ப்ரூஃப்,
எவருடைய பலவீனங்களையும் கிரகித்துக் கொள்வதன் மூலம் மனிதர்
மற்றும் வைபவங்களின் கவர்ச்சியிலிருந்து ப்ரூஃப் ஆகி விடுகிறது.
ஆக, எப்போது இந்த இரண்டு வரதானங் களையும் நடைமுறை வாழ்க்கையில்
கொண்டு வருகிறீர்களோ. அப்போது பிரத்தியட்சதாவின் சமயம் அருகில்
வந்து விடும்.
சுலோகன்:
தன்னுடைய சங்கல்பங்களையும் கூட அர்ப்பணம் செய்து
விடுவீர்களானால் அனைத்து பலவீனங்களும் தாமாகவே விலகிப் போய்
விடும்.
அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான
அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்
பரமாத்ம அன்பை அனுபவம் செய்வதற்காக உள்முக நோக்கு உள்ளவராகி
இந்த தேகத்திலிருந்து விலகிய ஆத்மிக ரூபத்தில்
நிலைத்திருப்பதற்கான அப்பியாசத்தை அதிகப் படுத்துங்கள். சதா
உள்முக நோக்கின் குகையில் இருப்பீர்களானால் பழைய உலகத்தின்
சூழ்நிலையில் இருந்து விடுபட்டுக் கொண்டே செல்வீர்கள்.
சூழ்நிலையின் பிரபாவத்தில் வர மாட்டீர்கள்.