01-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தினமும் இரவு
தங்களுடைய கணக்கைப் பாருங்கள், டைரி (தினக் குறிப்பு புத்தகம்)
வைத்தீர்கள் என்றால் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பயம்
இருக்கும்.
கேள்வி:
கல்பத்தின் ஆரம்பத்தில்
வரக்கூடிய பாக்கியசாலி குழந்தைகளுக்கு பாபாவினுடைய எந்தவொரு
விசயம் உடனே தூண்டுதல் ஏற்படும்?
பதில்:
பாபா தினம்-தினம் நினைவிற்கான
யுக்திகள் என்ன சொல்கிறாரோ, அது பாக்கியசாலி குழந்தைகளுக்குத்
தான் டச் ஆகிக் கொண்டே இருக்கும். அதை அவர்கள் உடன் நடை
முறையில் கொண்டு வருவார்கள். பாபா கூறுகின்றார், குழந்தைகளே
கொஞ்ச நேரம் தனிமையில் தோட்டத் தில் சென்று அமருங்கள். பாபாவோடு
இனிமையிலும் இனிமையான விசயங்களைப் பேசுங்கள், தங்களுடைய சார்ட்
வைத்தீர்கள் என்றால் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஓம் சாந்தி.
இராணுவத்தை முதலில் எச்சரிக்கப்படுகிறது - அட்டென்ஷன். தங்களை
ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்கிறீர்களா?
என்று பாபாவும் குழந்தைகளைக் கேட்கின்றார். இந்த ஞானத்தை பாபா
இந்த சமயத்தில் தான் கொடுக்க முடியும் என்று குழந்தை களுக்குப்
புரிய வைக்கப்பட்டுள்ளது. பாபா தான் படிப்பிக்கின்றார்.
பகவானுடைய மகாவாக்கியம் அல்லவா - முக்கியமான விசயம் பகவான் யார்?
என்பதாகும் படிப்பிப்பது யார்? இந்த விசயம் முதலில் புரிந்து
கொள்ள மற்றும் நிச்சயம் செய்ய வேண்டியிருக்கிறது. பிறகு
அதீந்திரிய சுகத்திலும் இருக்க வேண்டும். நமக்கு எல்லையற்ற பாபா
கிடைத்திருக்கின்றார் என்ற குஷி ஆத்மாவிற்கு அதிகம் இருக்க
வேண்டும். பாபா கல்பத்தில் ஒரே ஒரு முறை தான் ஆஸ்தி
கொடுப்பதற்காக வந்து சந்திக்கின்றார். எந்த ஆஸ்தி? 5 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் போல உலக இராஜ்யத்தின் ஆஸ்தியைக்
கொடுக்கின்றார். பாபா வந்திருக்கின்றார் என்ற உறுதியான
நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் சகஜ இராஜ யோகத்தை கற்றுக்
கொடுக்கின்றார், கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சாதாரணமாக
குழந்தைகளுக்கு எதையும் கற்றுக் கொடுக்கப் படுவதில்லை. தானாகவே
வாயிலிருந்து தாய் தந்தை என்ற வார்த்தை வருகிறது ஏனென்றால்
வார்த்தைகளைக் கேட்கிறார்கள் அல்லவா. இவர் ஆன்மீக தந்தையாவார்.
ஆத்மாவிற்கு உள்ளார்ந்த மறைமுகமான போதை இருக்கிறது. ஆத்மா தான்
படிக்க வேண்டும். பரமபிதா பரமாத்மா ஞானக்கடலே ஆவார். அவர்
ஒன்றும் படித்ததில்லை. அவரிடத்தில் ஞானம் இருக்கவே இருக்கிறது,
எதனுடைய ஞானம் இருக்கிறது? இதையும் உங்களுடைய ஆத்மா
புரிந்திருக்கிறது. பாபாவினிடத்தில் முழு உலகத்தின் முதல் இடை
கடைசியின் ஞானம் இருக்கிறது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனை மற்றும்
அனேக தர்மங்களின் வினாசம் எப்படி ஆகின்றது, போன்ற அனைத்தையும்
தெரிந்திருக்கின்றார் - ஆகை யினால் அவரை அனைத்தையும் அறிந்தவர்
என்று சொல்லி விடுகிறார்கள். அனைத்தையும் தெரிந்தவர் என்பதின்
அர்த்தம் என்ன? இதை யாரும் முற்றிலும் தெரிந்திருக்கவில்லை.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய
வைத்திருக்கின்றார், மனிதர்களாக இருந்து கொண்டு படைப்பினுடைய
முதல் இடை கால அளவு (வரலாறு) திரும்பவும் நடப்பது போன்றவற்றை
தெரிந்து கொள்ளவில்லை என்றால் என்னவென்று சொல்வது என்ற சுலோக
னையும் கண்டிப்பாக எழுதுங்கள். இந்த திரும்பவும் நடக்கும் என்ற
வார்த்தையும் மிகவும் அவசியமானதாகும். திருத்தங்கள் நடந்து
கொண்டே இருக்கிறது அல்லவா. கீதையின் பகவான் யார்..... இந்த
சித்திரம் மிகவும் நன்றாக இருக்கிறது. பரமபிதா பரமாத்மாவை
தெரிந்து கொள்ளாத காரணத்தினால் அனைத்துமே பகவானுடைய ரூபமே என்று
சொல்லி விட்டார்கள். முழு உலகத்திலும் இது தான் அனைத்திலும்
முதல் தவறாகும். சிறிய குழந்தையிடம் நீ யாருடைய குழந்தை என்று
கேட்டால், நான் இன்னாருடைய குழந்தை என்று சொல்லும். இன்னார்
யாருடைய குழந்தை? இன்னாருடைய குழந்தை என்று சொல்வார்கள். அவன்
என்னுடைய குழந்தை என்று சொல்லி விடுவார்கள். அதுபோல் இவர்களும்
கூட பகவானை தெரிந்திராத காரணத்தினால் நாங்கள் தான் பகவான் என்று
சொல்லி விடுகிறார்கள். இவ்வளவு பூஜை செய்கிறார்கள் இருந்தாலும்
புரிந்து கொள்வதில்லை. பிரம்மாவின் இரவு என்றால் பிரம்மா
மற்றும் பிராமணிகளுக்கும் இரவாகத் தான் இருக்கும் என்று
பாடப்பட்டுள்ளது. இவை யனைத்தும் தாரணை செய்ய வேண்டிய
விசயங்களாகும். இது யார் யோகத்தில் தந்தை நினைவில்
இருக்கிறார்களோ அவர்களுக்கே தாரணை ஆகும். நினைவைத் தான் பலம்
என்று சொல்லப்படுகிறது. ஞானம் வருமானத்திற்கான ஆதாரமாகும்.
நினைவின் மூலம் சக்தி கிடைக்கிறது அதன்மூலம் விகர்மங்கள்
வினாசம் ஆகிறது. நீங்கள் புத்தியின் யோகத்தை பாபாவோடு
ஈடுபடுத்த வேண்டும். இந்த ஞானத்தை பாபா இப்போது தான் கொடுக்
கின்றார், பிறகு எப்போதும் கிடைப்பதே இல்லை. பாபாவைத் தவிர வேறு
யாரும் கொடுக்க முடியாது. மற்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின்
சாஸ்திரங்கள், சடங்குகள். அவற்றை ஞானம் என்று சொல்ல முடியாது.
ஆன்மீக ஞானம் ஒரு பாபாவிடம் இருக்கிறது அதை அவர் பிராமணர்
களுக்குத் தான் கொடுக்கின்றார். வேறு யாரிடத்திலும் ஆன்மீக
ஞானம் இருப்பதில்லை. உலகத்தில் எவ்வளவு தர்மங்கள் மடங்கள்
இருக்கின்றன, எவ்வளவு வழிகள் இருக்கின்றன. குழந்தைகளுக்குப்
புரிய வைக்க எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது. எவ்வளவு புயல்
வருகிறது. எனது படகை கரை சேருங்கள் என்றும் பாடுகிறார்கள்.
அனைவருடைய படகும் கரை சேர முடியாது. சில படகுகள் மூழ்கியும்
விடும், சில படகுகள் நின்று விடும். 2-3 ஆண்டுகள் ஆகி விடுகிறது,
நிறைய பேருடைய தகவலே தெரிவதே இல்லை. சிலபேர் பிரிந்து சென்று
விடு கிறார்கள். சிலர் அங்கேயே நின்று விடுகிறார்கள், இதில்
அதிக முயற்சி இருக்கிறது. செயற்கை யான யோக முறை எவ்வளவு
வந்திருக்கிறது. எத்தனை யோக ஆசிரமங்கள் இருக்கின்றன. எதுவும்
ஆன்மீக யோக ஆசிரமமாக இருக்க முடியாது. பாபா தான் வந்து
ஆத்மாக்களுக்கு ஆன்மீக யோகத்தை கற்றுக் கொடுக்கின்றார். இது
மிகவும் சகஜமான யோகம் என்று பாபா கூறுகின்றார். இதைப்போல்
சகஜமானது எதுவும் இல்லை. ஆத்மா தான் சரீரத்தில் வந்து நடிப்பை
நடிக்கிறது. அதிகபட்சம் 84 பிறவிகள், மற்றபடி குறைந்து கொண்டே
செல்லும். இந்த விசயங்கள் கூட குழந்தைகளாகிய உங்களில் சிலருடைய
புத்தியில் தான் இருக்கிறது. புத்தியில் மிகவும் கஷ்டப் பட்டு
தான் தாரணை ஆகிறது. எங்கே சென்றாலும் முதல்-முதலில் பாபாவின்
அறிமுகத்தைக் கொடுங்கள் என்று பாபா முதல் விசயமாக புரிய
வைக்கின்றார். பாபாவின் அறிமுகத்தை எப்படி கொடுப்பது, என்று
யுக்திகள் உருவாக்கப்படுகிறது. அது எப்போது நிச்சயமாகிறதோ
அப்போது பாபா சத்திய மானவர் என்பதை புரிந்து கொள்வார்கள். பாபா
கண்டிப்பாக சத்தியமான விசயங்களைத் தான் சொல்வார். இதில்
சந்தேகத்தை எழுப்பக் கூடாது. நினைவில் தான் உழைப்பாகும், இதில்
மாயை தடையை ஏற்படுத்துகிறது. அடிக்கடி நினைவை மறக்கச்
செய்துவிடுகிறது, ஆகையினால் பாபா கூறுகின்றார் - சார்ட்
எழுதுங்கள். எனவே பாபாவும் யார் எவ்வளவு நினைவு செய்கிறார்கள்
என்று பார்க்க முடியும். 25 சதவிகிதத்தினர் கூட சார்ட்
வைப்பதில்லை. நாங்கள் முழு நாளும் நினைவில் இருக்கிறோம் என்று
சிலர் கூறுகிறார்கள். இது மிகவும் கஷ்டம் என்று பாபா
கூறுகின்றார். முழு இரவும் பகலும் பாந்தேலிகள் (குடும்ப
கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள்) அடி வாங்குபவர்கள்
வேண்டுமானால் சிவபாபா இந்த சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து
எப்போது விடுபடுவோம் என்று நினைவில் இருக்கலாம். ஒருவேளை
யாராவது அதிகம் நினைவில் இருக்கிறார்கள் என்றால் சார்ட்
அனுப்பிவைக்கட்டும். தினமும் இரவு தங்களுடைய கணக்கை பாருங்கள்,
(டைரி) தினக்குறிப்பு வையுங்கள் என்று டைரக்ஷன் கிடைக்கிறது.
டைரி வைப்பதினால் நமக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயம்
இருக்கும். பாபா பார்த்தார் என்றால் என்ன சொல்வார் - இவ்வளவு
அன்பான பாபாவை இவ்வளவு நேரம் தான் நினைவு செய்கிறீர்களா! லௌகீக
தந்தையை, மனைவியை நீங்கள் நினைவு செய்கிறீர்கள், என்னை இவ்வளவு
கொஞ்சம் நேரம் தான் நினைவு செய்கிறீர்களா. சார்ட் எழுதினீர்கள்
என்றால் தானாகவே வெட்கம் வரும். இந்த நிலையில் நான் பதவி அடைய
முடியாது, ஆகையினால் தான் பாபா சார்டின் மீது அழுத்தம்
கொடுக்கின்றார். பாபா மற்றும் 84 பிறவிகளின் சக்கரத்தை நினைவு
செய்தீர்கள் என்றால் சக்கரவர்த்தி ராஜாவாக ஆகி விடுவீர்கள்.
தங்களுக்குச் சமமாக மாற்றினீர்கள் என்றால் தான் பிரஜைகளின் மீது
இராஜ்யம் செய்வீர்கள். இது நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான
இராஜயோக மாகும். இது தான் குறிக் கோளாகும். எப்படி ஆத்மாவை
பார்க்க முடியாது, புரிந்து கொள்ளப்படுகிறதோ. அதுபோல்
இவருக்குள் ஆத்மா இருக்கிறது, இது கூட புரிந்து கொள்ளப்
படுகிறது. இந்த லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் கண்டிப்பாக
இருக்கும். இவர்கள் அனைவரை யும் விட அதிகம் முயற்சி
செய்திருக்கிறார்கள் ஆகையினால் தான் பட்டம் பதவியை அடைந்
திருக்கிறார்கள். கண்டிப்பாக இவர்களுடைய பிரஜைகள் அதிகம்
இருப்பார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை
அடைந்திருக்கிறார்கள், கண்டிப்பாக அதிகம் யோகத்தில்
ஈடுபட்டிருந்திருப் பார்கள் ஆகையினால் தான் மதிப்புடன் தேர்ச்சி
பெற்றிருக்கிறார்கள். நம்மால் ஏன் அதுபோல ஈடுபடமுடிவதில்லை?
என்ற காரணத்தையும் கண்டறிய வேண்டும். தொழில் போன்ற பிரச்சனை
களில் புத்தி அதிகம் சென்று விடுகிறது. அதிலிருந்து நேரத்தை
ஒதுக்கி இந்த பக்கம் அதிகம் கவனம் கொடுக்க வேண்டும். கொஞ்சம்
நேரம் ஒதுக்கி தோட்டத்தில் தனிமையில் அமர வேண்டும். பெண்கள்
செல்ல முடியாது. அவர்கள் வீட்டை பராமரிக்க வேண்டும். ஆண்களுக்கு
சகஜமாகும். கல்பத்தின் ஆரம்பத்தில் இருந்த பாக்கியசாலிகள் யாரோ
அவர்களுக்குத் தான் இது புரியும். படிப்பு மிகவும் நல்ல
படிப்பாகும். மற்றபடி ஒவ்வொரு வருடைய புத்தி அவரவருக்கு
இருக்கிறது. எப்படியாவது தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய
வேண்டும். பாபா வழிமுறை கள் அனைத்தையும் கூறுகின்றார்.
குழந்தைகள் தான் முயற்சி செய்ய வேண்டும். பாபா பொதுவாக வழி
சொல்வார். ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து யாராவது கேட்டாலும்
பாபா வழி சொல்ல முடியும். தீர்த்த யாத்திரைக்கு பெரிய-பெரிய
மலைகள் மீது செல்கிறார்கள் என்றால் வழிகாட்டிகள் எச்சரிக்கை
அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். மிகவும் கஷ்டப்பட்டு
செல்கிறார் கள். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா மிகவும் சகஜமான
யுக்திகளை கூறுகின்றார். தந்தையை நினைவு செய்ய வேண்டும். சரீர
உணர்வை அழிக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா
கூறுகின்றார். பாபா வந்து ஞானத்தை கொடுத்து விட்டு சென்று
விடுகின்றார். ஆத்மாவைப் போல் வேகமான ராக்கெட் வேறு எதுவும்
இருக்க முடியாது. விஞ்ஞானிகள் சந்திரன் போன்றவற்றிற்கு
செல்வதில் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறார்கள். இதுவும்
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இந்த அறிவியல் கலை கூட
வினாசத்தில் உதவி செய்கிறது. அது அறிவியல், உங்களுடையது
அமைதியாகும். தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு
செய்ய வேண்டும், இது தான் ஆழ்ந்த அமைதியாகும். நான் ஆத்மா
சரீரத்திலிருந்து தனிப்பட்டவன். இந்த சரீரம் பழைய செருப்பாகும்.
பாம்பு, ஆமையின் உதாரணம் கூட உங்களுக்கே ஆகும், நீங்கள் தான்
குளவியைப் போல் பூம்-பூம் என்று செய்து மனிதனிலிருந்து
தேவதைகளாக மாற்று கின்றீர்கள். விஷக்கடலிலிருந்து பாற்கடலுக்கு
அழைத்துச் செல்வது உங்களுடைய வேலை யாகும். சன்னியாசிகள் இந்த
யக்ஞம் தவம் போன்ற எதையும் செய்ய வேண்டியதில்லை. பக்தி மற்றும்
ஞானம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே ஆகும். அவர்கள்
சத்யுகத்திற்கு வர வேண்டியதே இல்லை. அவர்கள் இந்த விசயங்களைப்
பற்றி என்ன தெரிந்திருக்கிறார்கள். இந்த மார்க்கத்தைச்
சேர்ந்தவர்களுடைய விசயங்களும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது.
யார் முழுமையாக 84 பிறவி களை எடுத்திருக்கிறார்களோ அவர்கள் தான்
நாடகத்தின் படி வந்து கொண்டே இருப்பார்கள். இதிலும் கூட
வரிசைக்கிரமமாக வந்து கொண்டே இருப்பார்கள். மாயை மிகவும் பலம்
வாய்ந்த தாகும். கண்கள் மிகவும் குற்றமுடையதாக இருக்கிறது.
ஞானத் தின் மூன்றாவது கண் கிடைப் பதின் மூலம் பண்பட்டதாக ஆகிறது
பிறகு அரைக்கல்பம் ஒரு போதும் குற்றமுடையதாக ஆகாது. இது (கண்)
மிகவும் ஏமாற்றக் கூடியதாகும். நீங்கள் எந்தளவிற்கு பாபாவை
நினைவு செய்வீர்களோ அந்தளவிற்கு கர்மேந்திரியங்கள் குளிர்ச்சி
அடைந்து விடும். பிறகு 21 பிறவிகள் சஞ்சலப்படாது. அங்கே
கர்மேந்திரியங்கள் சஞ்சல மடைவ தில்லை. அனைத்து
கர்மேந்திரியங்களும் அமைதியாக சதோகுணமுடையதாக இருக்கிறது.
தேக-அபிமானத்திற்குப் பிறகு தான் அனைத்து அசுரதன்மை களும்
வருகின்றன. பாபா உங்களை ஆத்ம- அபிமானிகளாக்குகின்றார்.
அரைக்கல்பத்திற்கு உங்களுக்கு சொர்க்கம் கிடைத்து விடுகிறது.
யார் எந்தளவிற்கு முயற்சி செய்கிறார்களோ, அந்தளவிற்கு உயர்ந்த
பதவியை அடைவார்கள். ஆத்ம-அபிமானியாக ஆவதற்கு உழைக்க வேண்டும்,
பிறகு கர்மேந்திரியங்கள் ஏமாற்றாது. கடைசிவரை யுத்தம் நடந்து
கொண்டே இருக்கும். கர்மாதீத் நிலையை எப்போது அடைவீர்களோ அப்போது
அந்த சண்டையும் ஆரம்பமாகி விடும். நாளுக்கு நாள் குரல் ஓங்கி
ஒலித்துக் கொண்டே செல்லும், மரணத்திற்குப் பயப்படுவார்கள்.
இந்த ஞானம் அனைவருக்கும் என்று பாபா கூறுகின்றார்.
தந்தையினுடைய அறிமுகத்தை மட்டும் கொடுக்க வேண்டும் அவ்வளவு தான்.
நாம் ஆத்மாக்கள் சகோதர-சகோதரர்களாவோம். அனைவரும் ஒரு பாபாவை
நினைவு செய்கிறார்கள். இறை தந்தை என்று சொல்கிறார்கள். சிலபேர்
இயற்கையை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறைவன்
இருக்கின்றார் அல்லவா. அவரை முக்தி- ஜீவன்முக்திக்காக நினைவு
செய்கிறார்கள். மோட்சம் என்பது இல்லவே இல்லை. உலகத்தின் வரலாறு
புவியியல் திரும்பவும் நடக்க வேண்டும். சத்யுகம் இருந்த போது
ஒரு பாரதம் தான் இருந்தது என்று புத்தியும் கூறுகிறது.
மனிதர்கள் எதையும் தெரிந்திருக்க வில்லை. இந்த
லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது அல்லவா. இலட்சக்கணக்கான
ஆண்டுகளின் விசயமாக இருக்க முடியாது. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக
இருந்தால் எவ்வளவு அதிகமான மக்கள் தொகை இருக்க வேண்டும். பாபா
கூறுகின்றார், இப்போது கலியுகம் முடிந்து சத்யுகத்தின் ஸ்தாபனை
நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் கலியுகம் இன்னும் குழந்தை
என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இத்தனை ஆயிரம் ஆண்டுகள்
ஆயுள் என்று நினைக்கிறார்கள். இந்த கல்பமே 5 ஆயிரம் ஆண்டுகள்
தான் என்பதை குழந்தை களாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
பாரதத்தில் தான் இந்த ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. பாரதம்
தான் இப்போது சொர்க்கமாகிக் கொண்டிருக்கிறது. நாம் இப்போது
ஸ்ரீமத்படி இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்.
என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
முதல்-முதல் வார்த்தையே இவை இரண்டும் தான் ஆகும். எதுவரை
பாபாவின் மீது நம்பிக்கை வரவில்லையோ அதுவரை கேள்வி கேட்டுக்
கொண்டே இருப்பார்கள். பிறகு எந்த விசயத்திற்காவது பதில்
கிடைக்கவில்லை என்றால் இவர்களுக்கு எதுவும் தெரியவில்லை ஆனால்
எங்களுக்கு பகவான் படிப்பிக்கின்றார் என்று சொல்கிறார்கள் என்று
நினைப்பார்கள் ஆகையினால் முதலில் ஒரு விசயத்தோடு நில்லுங்கள்.
முதலில் பாபாவின் மீது நம்பிக்கை ஏற்படுத்துங்கள், உண்மையில்
அனைத்து ஆத்மாக் களுக்கும் தந்தை ஒருவரே மேலும் அவர் தான்
படைப்பவராவார். எனவே கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் வருவார்.
பாபா கூறுகின்றார், நான் யுகம்-யுகமாக அல்ல, கல்பத்தின்
சங்கமயுகத்தில் தான் வருகின்றேன். நான் புதிய உலகத்தை
படைப்பவனாக இருக்கின்றேன். அப்படி எனும் போது நான் இடையில்
எப்படி வருவேன். நான் பழைய மற்றும் புதிய உலகத்திற்கு இடையே
வருகின்றேன். இதனை புருஷோத்தம சங்கமயுகம் என்று சொல்லப்படுகிறது.
நீங்களும் இங்கே தான் புருஷோத்தமர்களாக ஆகின்றீர்கள்.
லஷ்மி-நாராயணன் தான் அனைவரிலும் புருஷோத்தமர்களாவர். குறிக்கோள்
எவ்வளவு சகஜமானதாக இருக்கிறது. சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டி
ருக்கிறது என்று அனைவருக்கும் சொல்லுங் கள். புருஷோத்தம என்ற
வார்த்தையை கண்டிப்பாக போடுங்கள் என்று பாபா கூறியுள்ளார்
ஏனென்றால் இங்கே நீங்கள் கீழான நிலையிலிருந்து
புருஷோத்தமர்களாக ஆகின்றீர்கள். இப்படிப்பட்ட முக்கியமான
விசயங்களை மறக்கக் கூடாது. மேலும் (சகாப்தத்தின் ஆரம்பம்)
வருடங்களின் தேதியையும் கண்டிப்பாக எழுத வேண்டும். இங்கே
உங்களுடைய இராஜ்யம் முதலிலேயே ஆரம்பமாகி விடுகிறது,
மற்றவர்களுடைய இராஜ்யம் முதலில் இருப்பதில்லை. அவர்களுடையது
தர்ம ஸ்தாபகர்கள் வந்தால் தான் அவர்களுக்கு பின்னால்
அவர்களுடைய தர்மம் வளரும். கோடிக்கணக்கானவர்கள் ஆன பிறகு தான்
இராஜ்யம் நடக்கும். உங்களுடையது ஆரம்பத்திலேயே சத்யுகத்தில்
இராஜ்யம் இருக்கும். சத்யுகத்தில் இத்தனை இராஜ்யம் எங்கிருந்து
வந்தது என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. கலியுக கடைசி
யில் இவ்வளவு அதிக மான தர்மங்கள் இருக்கின்றன, பிறகு
சத்யுகத்தில் ஒரு தர்மம், ஒரு இராஜ்யம் எப்படி ஆனது? எவ்வளவு
வைர வைடூரியங்களினால் ஆன மாளிகைகள் இருக்கின்றன. பாரதம்
சொர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. 5 ஆயிரம்
ஆண்டுகளின் விசயமாகும். இலட்சக்கணக்கான ஆண்டுகளின் கணக்கு
எங்கிருந்து வந்தது. மனிதர் கள் எவ்வளவு குழம்பியுள்ளார்கள்.
அவர் களுக்கு யார் புரியவைப்பது. நாம் அசுர இராஜ்யத்தில்
இருக்கின்றோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்களா என்ன.
தேவதைகளுடைய மகிமை சர்வகுணங்களும் நிறைந்தவர்கள்..............,
தேவதைகளிடத்தில் 5 விகாரங்கள் இல்லை ஏனென்றால் ஆத்ம-அபிமானியாக
இருக்கிறார்கள், எனவே பாபா கூறுகின்றார் முக்கியமான விசயம்
நினைவினுடையதாகும். 84 பிறவிகளை எடுத்து-எடுத்து நீங்கள் தூய்மை
யற்றவர்களாக ஆகிவீட்டீர்கள், இப்போது மீண்டும் தூய்மையாக ஆக
வேண்டும். இது நாடகத்தின் சக்கரமாகும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஞானத்தின் மூலம் மூன்றாவது கண்ணைப் பெற்று ஏமாற்றக் கூடிய
தங்களுடைய கண்களை பண்பட்டதாக்க வேண்டும். நினைவின் மூலம்
கர்மேந்திரியங்கள் குளுமை யாகவும், சதோகுணமுடையதாகவும் ஆகும்,
ஆகையினால் இந்த முயற்சியையே செய்ய வேண்டும்.
2) தொழில் போன்றவற்றிலிருந்து நேரத்தை ஒதுக்கி தனிமையில் சென்று
நினைவில் அமர வேண்டும். நமக்கு ஏன் யோகம் சரியாக அமைவதில்லை
என்று காரணத்தைப் பார்க்க வேண்டும். தங்களுடைய சார்ட்டை
கண்டிப்பாக வைக்க வேண்டும்.
வரதானம்:
பொறுமை சக்தி மூலம் அவிநாசி மற்றும் இனிய பலன் பெறக்கூடிய,
அனைவரின் சிநேகி ஆகுக.
பொறுத்துக் கொள்வது என்பது சாவது ஆகாது. ஆனால் அனைவரின்
இதயங்களில் வாழ்வதாகும். எத்தகைய விரோதியாக இருந்தாலும்,
இராவணனைக் காட்டிலும் உக்கிரமாக இருந்தாலும், ஒரு தடவை இல்லை,
10 தடவை பொறுத்துக் கொள்ள நேர்ந்தாலும், பிறகும் கூட பொறுமை
சக்தியின் பலன் அழியாதது மற்றும் இனிமையானதாகும். வெறுமனே இந்த
பாவனை மட்டுமே வைக்காதீர் கள் - நான் இவ்வளவு பொறுத்துக்
கொண்டேன் என்றால் இவரும் ஏதாவது செய்யட்டும். அல்ப காலத்தின்
பலனுக்கான பாவனை வைக்காதீர்கள். இரக்க பாவனை வையுங்கள் - இதுவே
சேவை பாவனையாகும். சேவை பாவனை உள்ளவர்கள் அனைவரின்
பலவீனங்களையும் உள்ளடக்கிக் கொள்வார்கள். அவர்களை எதிர்கொள்ள
மாட்டார்கள்.
சுலோகன்:
எது நடந்து முடிந்ததோ, அதை மறந்து விடுங்கள். நடந்து முடிந்து
போன விஷயங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இனி வரும்
காலத்திற்காக சதா எச்சரிக்கையாக இருங்கள்.
அவ்யக்த சமிக்கை: தனக்காகவும் மற்றும் அனைவருக்காகவும் மனதின்
மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
எப்படி பாப்தாதாவுக்கு இரக்கம் வருகிறது, அது போல் குழந்தைகள்
நீங்களும் கூட மாஸ்டர் இரக்க மனம் உள்ளவராகித் தனது மனதின்
உள்ளுணர்வு மூலம் ஆத்மாக்களுக்கு பாபாவிடமிருந்து கிடைத்துள்ள
சக்திகளைக் கொடுங்கள். கொஞ்ச சமயத்தில் முழு உலகத்திற்கான
சேவையை முழுமை பெறச் செய்ய வேண்டும். தத்துவங்களோடு கூடவே
அனைவரையும் பாவனமாக்க வேண்டும் எனும் போது, மனதின் மூலம் தீவிர
வேகத்தில் சேவை செய்யுங்கள். யோகத்தின் சக்திகளைப் பிரயோகம் (பயன்படுத்துங்கள்)
செய்யுங்கள்.